மகாத்மா - காந்தி !



இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர்.மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.
-மகாத்மா காந்தி

மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!

photo from independent

சுட்டி சுட்டி ரோபோ !

சிட்டி சிட்டி ரோபோ - ஏ
சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ
சுட்டி சுட்டி ரோபோ


#தலைவர் தரிசனம் #எந்திரன் #தோஹா


பிட்- பெட்’ பிராணிகள் :)











எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

எத்தனை ஆண்டுகளானாலும் நாம் கற்ற கல்வியும் (ஆரம்பக்கல்வி முதல் மேல்படிப்பு வரையிலான) கற்பித்த ஆசிரியர்களும் எப்பொழுதுமே நினைவுக்கு வந்து செல்பவர்களாகவும், திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை கொண்டு வருபவர்களாகவுமே இருந்து வருகின்றனர்!




எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

நீர் ஆதாரங்கள் இணைப்பின் அவசியம் - தமிழ்நாடு - தினமணி

நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால், உலகம் முழுவதும் தண்ணீருக்காகப் பிரச்னைகளும், யுத்தங்களும்கூட நடக்கிற சூழல்கள் ஏற்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரைப் பங்கீடு செய்வதை பற்றி விவாதிக்க 1956-ம் ஆண்டு ஹெல்சிங்கில் பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில் நீர் பாய்ந்தோடும் இறுதி கட்டம் வரை உள்ள நாடுகளுக்கு பாயும் நீரில் உரிமை உண்டு என தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் 262-ன்படி நதி நீர் வாரியங்கள் அமைக்கலாம். ஏதாவது ஒரு மாநிலம் உச்ச நீதிமன்றம் அல்லது நதிநீர் தீர்ப்பாயங்கள் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நதிநீர் குறித்து நதிநீர் வாரியம் அமைத்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். ஆனால், இதுவரை அந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் வராததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,116 கி.கி. நெல் கிடைக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் நீர் வளங்கள் எல்லாம் இருந்தும் வெறும் 2,454 கி.கி. நெல்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழகத்தில் மனித ஆற்றல் அதிக அளவில் உள்ளது. கர்நாடகம் தண்ணீர் கொடுத்தால், தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். இது இந்திய நாட்டுக்குத்தானே நன்மையை கொடுக்கும் என்பதை கர்நாடகம் உணர மறுக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளம் பிரச்னை செய்கிறது. குமரி மாவட்டத்தின் நெய்யாற்றிலிருந்து தொடங்கி, வடக்கே கோவை மாவட்டத்தில் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழாவிலும் கேரளம் பிரச்னை செய்து வருகிறது. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கேரளத்திலிருந்து தமிழகத்துக்குத் திருப்பலாம் என பல பரிந்துரைகள் செய்தபோதும், அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் வலியுறுத்தப்பட்டும் கேரளத்தின் அலட்சியப் போக்கால் இத்திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

கேரளத்தில் நீர்வளம் சராசரியாக 3,050 மி.மீ. ஆகும். இது தமிழகத்தைவிட 3.2 மடங்கு அதிகம். அங்கு கிடைக்கும் உபரிநீரைத் தேக்கி வைக்கவும் அணைகள் இல்லை. கேரள ஆறுகளில் ஓடும் நீர் வளம் மொத்தம் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் 500 டி.எம்.சி. நீரை மட்டுமே கேரளம் பயன்படுத்துகிறது. 350 டி.எம்.சி.க்கு மேல் நீரைத் தேக்க வசதியும் இல்லை. சுமார் 2,000 டி.எம்.சி. நீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது.

இந்த 2,000 டி.எம்.சி.யில் வெறும் 200 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்குத் தருமாறு கேட்டும் தண்ணீர் இல்லையென்று அடித்துப் பேசுகிறது கேரளம். இதில் உள்ள நியாயத்தை எங்கே போய் சொல்ல? நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தமிழக எல்லைக்கே முரட்டுத்தனமாக வந்தவர்தான் இன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். வடதமிழகப் பகுதியில் பாய்ந்த பாலாறு, பொன்னை ஆறுகளில் ஆந்திராவால் பிரச்னைகள் எழுந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 33 ஆற்றுப்படுகைகளில் மொத்த நீர்வளம் 35,726.74 மி.க.மீட்டர். இதைக் கொண்டுதான் தமிழகம் தனது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சிக்கல்களுக்கு விடை காண்பதற்காகத்தான், தமிழக அரசு கங்கை காவிரி இணைப்பு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதற்கு முன்னோடியாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிற வகையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் | 369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது என்பது வெளியில் தெரியாமல் நடக்கும் நதிநீர் புரட்சி.

தாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008-ல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாகச் செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகிறது.

இப்போது இப்பணிகள் 72 பகுதிகளாகப் பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்குப் பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கிறது. பாபநாசம் அணையில் தொடங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், திருவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

இதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்தப் பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும்.

இப்பகுதியில் அவ்வப்போது வறட்சி விவசாயமும் அங்குள்ள மக்களுக்குப் பெரிதாக கைகொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியும்.

அதுபோலவே, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கந்தக பூமியாக இன்றைக்கு இருக்கிறது. அந்த பூமியில் கருவேல மரங்கள்தான் அதிகம் உள்ளன. மானாவாரி பயிர்கள் அடிக்கடி பொய்த்து வருகிறது. அப்பகுதிக்கும் தாமிரபரணியிலிருந்து விவசாயத்துக்கு உபரி நீரை வழங்கக் கூடிய அளவில் திட்டங்கள் வேண்டும்.

ஏற்கெனவே அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு, இப்பகுதிக்குப் பயன்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது கேரளத்தின் பிடிவாதத்தால் கானல் நீராகவே இதுவரை இருக்கிறது. இதன் வடபகுதிகள் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்குப் பயன்படும் அழகர் அணைத் திட்டமும் நடைமுறைக்கு வரவேண்டும்.

நதிகள் இணைப்புப் பிரச்னையில் சுற்றுச்சுழல் பிரச்னை, நில ஆர்ஜிதம் போன்ற காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் முடிந்த அளவு தென்னிந்திய நதிகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்து, இறுதியில் வடஇந்திய நதியான கங்கையோடு இணைக்கத் திட்டமிடலாம். இத்திட்டத்தைச் செயல்படுத்த நீண்டகாலம் ஆனாலும், அதற்கான தொடக்கத்தில் மும்முரம் காட்டுவது அவசியமாகும்.

நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகள் 1998-லிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இணைக்கப்பட வேண்டிய 30 நதிகளில் 15 நதிகள் தென்னிந்திய தீபகற்ப தக்காண பீடபூமியில் உள்ள தீபகற்ப நதிகளாகும். அதுபோல, வடபுலத்தில் இமாலய நதிகள் கிட்டத்தட்ட 15 வரை ஆகும். பேட்வா பன்சால் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், அப்பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 நதிகளை தேசிய சொத்து என்ற அறிவிப்பையும் இன்றைய மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை காவிரி நீரைத் திருப்பி வைகை பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்னை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. இந்த பத்தியாளர் 1983-ல் நதிகள் தேசியமயம், நதிநீர் இணைப்பு, கேரள நதிகளைத் தமிழகத்தோடு இணைப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் நீதிபதிகள் எம். சீனிவாசன், ஏ.ஆர். இலட்சுமணன் ஆகியோரின் தீர்ப்பில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிடும் என மறுபுறம், உலக வங்கி கடந்த 12.3.2010 அன்று தெரிவித்தது. 2025-ல் நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில், 615 பாதைகள் நீரோட்டம் குறைந்துவிடும் என்றும், 108 பாதைகள் வற்றி விடும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி குறிப்பிடுகிறது. இது அபாயகரமான நிலையாகும்.

கடந்த 2001 காலகட்டத்திலிருந்து நிலத்தடி நீரைத் தோண்டித் தோண்டி பகாசுர நிறுவனங்கள் குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்வதால் நிலத்தடி நீருக்கும் ஆபத்து வந்துவிட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், அதை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் நதிநீர் இணைப்பு அவசியம்.

தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகிறது. இதில் 30 சதவீதம் கடலுக்குச் செல்கிறது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும் வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதிநீர் இணைப்பு வலியுறுத்தப்படுகிறது.

எல்லாவர்க்கும் ஓணாஷம்ஸங்கள்!

நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்!

டிஸ்கி-1:- வெட்டியாத்தானே இருக்கோம்ன்னு நினைச்சப்போது - நினைச்சது!





நீ பேசிடும் போது பேசாமல்,
நான்
மௌனம் தந்திடுவேன்


ஒரு புராஜெக்ட் ரொம்ப தடுமாறி, தாறுமாறா போய்க்கிட்டிருக்கும்போது, ரெக்கவரி/அர்ஜெண்ட் மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வர்றவன் போறவனெல்லாம் கேட்கற கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல, சமாளிக்க தெரிஞ்சிருந்தாலும் கூட சும்மா கம்முன்னு அவங்க சொல்றத கேட்டுக்கிட்டு, கையில எதாச்சும் பேப்பரை வைச்சுக்கிட்டு கிறுக்கிகிட்டு இருக்கிறதுதான் ரொம்ப பெஸ்ட்!

தேவை/தேவையில்லாம நாம பதில் சொல்லப்போயி அதை அந்த பெரிய மனுசங்க - கேள்வி கேட்கறவங்க எப்பவுமே நம்மளை விட ஹையர் பொசிஷன் அல்லது கேள்வி கேட்குற பொசிசன்ல இருக்கறவங்கதானே! - காண்ட்ரவர்ஷியலா எடுத்துக்கிட்டு இன்னும் இம்சையை கொடுக்கத்தான் பார்ப்பாங்க! [அதான் டிரெண்ட்டே]

அந்த மாதிரி இக்கட்டான சமயத்துல, ஒரு பிரச்சனையை சமாளிக்கவேண்டி நாம ஏதோ சொல்லப்போக அது இன்னும் பல - ஒதுங்கி பதுங்கி, பழசாகிப்போன பிரச்சனைகளையெல்லாம் - சேர்த்து கொண்டு வந்து விட்டுட்டும்! மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஆரம்பத்துல இருந்த ஒரே ஒரு பிரச்சனைக்கு தீர்வுங்கற பேர்ல ரவுண்ட் கட்டி யார் என்ன சொன்னாலும் மெளனமா இருந்து, எல்லாரும் தொலைஞ்ச பிறகு நமக்கே நமக்கான பிரச்சனையை சால்வ் பண்ணுறதுல பிசியாயிடணும்! அதானே கரீக்ட்டு! [மேனேஜ்மெண்ட்ல ஃபீல்டுல நிக்கிறவங்க/உட்கார்ந்திருக்கிறவங்க/ஓடிக்கிட்டிருக்கிறவங்க இது பத்தி மேலதிக அட்வைசு தரலாமே!]

டிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு?!

பச்சை












பச்சை அப்படின்னு சொன்னாலே மனசு டக்குன்னு பச்சை பசேல் வயல்வெளி - மண் + ஆற்று நீரின் வாசம், நிறத்தோடு பச்சக்குன்னு வந்து ஒட்டிக்கிது ஆனால் அப்படி ஒரு போட்டோ இதுவரையிலும் எனக்கு அமையவே இல்லை - நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெல்மணிகள் பழுத்து மஞ்சள் நிறத்துடனே காட்சி தருகின்றன!

இந்த பச்சை போட்டோ இந்த மாச பிட் போட்டியோடு போய்விடாம நம்மால எதாச்சும் செய்யமுடியுமான்னு கொஞ்சமா யோசிச்சு பார்த்தேன் [கொஞ்சமாத்தாங்க! ரமதான் மாசமா அதான் டயமெல்லாம் இருக்கு!]

சொந்த ஊர் வீடு உறவுகளை விட்டு,பணி சூழல் காரணமாக பெரும்பாலும் எல்லோரும் வெளியூர்களில் வெளிநாடுகளிதான் இருக்கின்றனர் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக விடுமுறைக்கு செல்லும்போது நம்மால் இயன்ற அளவு நம் வீட்டுப்பகுதியில் மரம்,செடி அட்லீஸ்ட் நாலு விதையாவது தூவிட்டு வரலாமே! மரம் நடுவதை சில போட்டோக்களாக்கிகொண்டால் ஊர் நினைவு வரும்போது சொந்தபந்தங்கள் சூழந்திருக்கும் போட்டோக்கள், மனதினை மகிழ்ச்சிக்குட்படுத்தும் சேதிகள் சொல்லுமல்லவா?

டிஸ்கி:- எத்தனை தடவைடா இந்த புறாவை இங்கே நடக்கவிடுவன்னு டென்சனாகிறவங்களுக்கு - ஐயா மன்னிச்சுடுங்க! :)

அம்மா aka MY MOTHER



பாட்டி,அம்மா அக்கா பத்தி எப்பவுமே நினைக்கும்போதெல்லாம் கண்டிப்பா கண்கலங்கிட வைக்கும்! பாட்டி வீட்டிற்காக எல்லா சேவைகளும் செய்து முடித்து,பேரப்பிள்ளைகள் நல்லதொரு உத்தியோகத்தில் அமரும்வரை கூட இருந்துவிட்டு,ஏதோ நம்பிக்கையில் நல்லா இருப்பாங்கன்னு தன் காலம் முடிச்சு போயிட்டாங்க! அம்மாக்கிட்ட பேசுறது கூட, சாப்பாடுக்கு அல்லது எங்கயாச்சும் வெளியே போய்ட்டுவரேன் போன்ற தகவல் சொல்றதுதானே தவிர வேற அதிகம் நீட்டி முழக்கி பேசியது கிடையாது! சின்ன புள்ளையா இருக்கும்போதே,அக்கா கூட பெரும்பாலும் சண்டை போட்டுகிட்டு இருந்ததுதான் அதிகம்! வெளிநாடு வேலைன்னு வந்த பிறகு எப்பவுமே ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்தா உடனே அம்மாவுக்கு போன் செய்யணும்ன்னு தானே தோணுமே தவிர வேற 1ம் தோணாது! அதுவும் ஊரை விட்டு வரும்போது எதாச்சும் சண்டை போட்டு எல்லாரையும் கொஞ்சமா கோபப்படுத்திட்டு வரும்போது, ரூமுக்கு வந்து சேர்ந்ததுமே டக்குன்னு போன் செஞ்சுடவே அல்லது திரும்ப ஊருக்கு போயிடலாமோன்னு நினைப்புத்தான்! அது போல எப்பொழுதாவது கடைக்குபோகும்போது இங்கே தங்கள் பிள்ளைகளை பார்க்க ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா வயது ஆட்களை காண்கையில் பேச அல்லது காலில விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமோன்னுல்லாம் கூட தோணும்! என்னமோ தெரியல சரியா இன்னைக்குன்னு பார்த்து என் கண்ணில இந்த படம் வந்து பட, கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்து அழுது முழுதாய் பார்க்க மனமின்றி நிறுத்தியிருக்கிறேன்!

படம் பார்க்க நினைத்தால் சற்றே படுவேகத்தில் ஒரு டிரெயிலர் டைப்பில பார்த்துட்டு படம் ஆரம்பிச்சு முடிக்கிற பழக்கம் உண்டு! அதுல ஒரு இண்ட்ரஸ்ட் அப்படித்தான் MY MOTHERம்

ரொம்ப அழகான ஒரு குடும்பம் அந்த பெண் மட்டும் தன் குடும்பத்தினரை விட்டு தன் தாயினை சந்திக்க ஊருக்கு செல்வதாக தொடங்கி இளம்பிராயத்துக்கு ப்ளாஷ்பேக் ஆகிறது! குட்டி குழந்தையாக பள்ளி விட்டு வீடு வரும் பெண்ணுக்கு அம்மா கொண்டு வந்து தரும் தின்பண்டம் அதை அந்த குட்டி பெண் சாப்பிடும்போது அவளின் தம்பி வந்து பங்கு கேட்டு சாப்பிடுவதும் அப்போது அவனை குட்டிவிட்டு, திட்டும் அம்மாவின் நடவடிக்கையில், தன் பெண் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினை பிரதிபலிக்க வைக்கும் காட்சி! இதற்கு பின்னர் வரும் காட்சிகள் தொடரும்போதே எனக்கு என் அம்மா மட்டும் பாட்டியின் ஞாபகம் படர்ந்து விட்டது மனமெங்கும்! மேற்கொண்டு சில காட்சிகளுக்கு பிறகு என்னால் தொடர முடியா மனநிலை!

நான் பார்த்த டிரெயிலரினை விட்டு படத்தின் டிரெயிலரினை மீண்டும் ஒரு முறை பார்க்க தொடங்கினேன் தொடர்ந்த காட்சிகள் முடிவில் ஒரு ரயில் நிலையத்தில் அம்மா பெருங்குரலெடுத்து அழுதபடியே பிரியா விடை கொடுக்கும் காட்சி ,அழத்தொடங்கிய என் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் காட்சியாகி மறைந்துகொண்டிருக்கிறது!





படம் பாருங்கள் என்று சொல்வதை விட அந்த சூழலினை அனுபவியுங்கள்!

எங்கோ ஒரு மூலையில், அம்மாவினை பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற, பெண்கள் மட்டுமல்ல, ஆணகளும் கூட பார்த்தால், பிரிவின் வலி பெருகுவதை உணரமுடியும்!


டிஸ்கி:- வாழ்வியலின் பிரதிபலிப்புகளை சினிமாவாக, டிரெயிலரில்/டிரெயிலராக மட்டும் பார்த்து எழுத முற்பட்டது

படிப்பு - திசை மாறும் பயணம்


ஐந்து வருடங்களுக்கு முன்பு ------------------------------------------> [ரவுண்டு ரவுண்டா சுத்தவெல்லாம் முடியாது இப்பிடித்தான்] கடைசி பரீட்சை முடிந்ததுமே கவலைப்பட்டது சிதம்பரம் கோவிலுக்கு போய் மங்களம் பாடுவதா அல்லது புத்தூர் ஜெயராமனுக்கு போய் தின்று கும்மாளம் போடுவதா என்று! அந்த கவலையிலேயே 3மணி நேர பரீட்சை எல்லோருக்கும் 2 மணி நேரத்தில் நிர்பந்தமாக முடிக்கப்பட்டு கட்டுகடங்கா காளையின் வேகத்தில் சூபர்வைசரின் அட்வைசை அலேக்காக காற்றில் தள்ளிவிட்டு திமிறிக்கொண்டு, வெளியே வந்த தருணங்கள்! மெஜாரிட்டியினரின் முடிவின் படி மங்களமே பாடப்பட்டது! [செண்டிமெண்ட் செண்டிமெண்ட்]

சரி இந்த கதை இப்ப எதுக்குன்னு நீங்க கேட்க மாட்டீங்க [ வந்து தொலைஞ்சுட்டோம் பிறகு என்ன கேள்வின்னு] இப்ப திடீருன்னு புத்தகத்தை எடுத்து வைச்சுக்கிட்டு உக்கார்ந்து படிக்க ஆரம்பிக்கலாமேன்னு ஒரு அழகிய மதிய பொழுதினில் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்த போது உதித்தது ! குதித்தோடி எழுந்து, தேடோ தேடுவென தேடி, கிடைத்தது ஒரு சிறிய டைரியில் ”சிவில் இன்ஜினியரிங்” என்று மட்டும் எழுதி அட்டவணைப்படுத்தியிருந்த பாடங்களின் தலைப்புக்கள் மட்டுமே! சரி முடிவு எடுத்தாஊக்குவிக்கற மாதிரி நடந்துக்கிடணும்பின்வாங்குற மாதிரி நடவடிக்கை கூடாதுன்னு, நண்பரிடமிருந்து பெற்ற புத்தகத்தினை எடுத்து வைச்சு தொடங்கியாச்சு!

ரொம்ப பக்கம் இருக்கிற தலையாணை டைப்பு புத்தகம் ஆரம்பிச்சதுமே அவ்வப்போது சந்தேகங்கள் எழுவதும், அடங்குவதும் என மாறுபட்ட மனநிலையில் - இங்கதான் ரிஸ்க் நிறைய எடுக்கிறோமோன்னு லைட்டா தோணுச்சு - நாம டெக்னிகலா படிச்சு டெவலப்பாகறதை விட, வேற அன்னிய மொழிகளின் மீதும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே என்று!

டெக்னிகல்
விசயங்களை சொல்வதற்கு அன்னியமொழி சற்று தெரிந்துகொள்வதில் தவறில்லைத்தானே [!?] அதுவும் ஒன்றுமே தெரியாமல் காட்சி பரப்பும் [சீன் போடுதலின் தமிழாக்கம்ங்க] கண்ணியவான்கள் நிறைந்த அலுவலக சூழலில் முயற்சிப்போம் என்று கொஞ்சமாய் அதற்கான விபரங்களையும் திரட்டி அதுவும் பாடத்திட்டத்துடன் இணைந்துகொண்டது தினமும் மதிய பொழுதினில் மல்லாந்து கிடப்பதை விட சொல்லில் ஆழந்து சிறந்து விளங்கிட வேண்டும் என்ற ஆர்வம் உந்துதலாக தள்ளிக்கொண்டு வந்தது - ரெண்டு நாள்தாங்க ரெண்டே நாள்தான்!

எங்கோ ஒரு தேசத்திற்கு வந்து யாருக்காகவோ நாம் அன்னிய மொழியினை கற்று சிறப்பு பெயர் பெறுவதை விட நாம் ஏன் நம்முடையை மொழியில் உள்ள சிறப்பானவைகளை ஊன்றி படிக்ககூடாது அப்படின்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கும்போதே பிங்கியது ஒரு பிரபலம் - உங்களுக்கு ஒளவையார் எழுதிய அகவல் தெரியுமா?

என்னது தெரியுமாவா? னிட்டர் பண்ணி வைச்சிருக்கேனாக்கும் சொல்லட்டுமா? என்று கேட்க தொடங்கிய அடுத்தகணமே மனசிலாயி!

அடடே! அதான் நிறைய இருக்குல்ல படிக்கிறதுக்கு !

என்னங்க பாதியில நிக்கிதேன்னு பாக்குறீங்களா

இப்ப நான் இங்கே நின்னுக்கிட்டிருக்கேங்க-------> மதுரை திட்டம்

ஆலயங்கள் - ஜுலை 2010 PITக்கு



மஸ்கட்ல இருக்கிற பெரிய சுல்தான் குப்பூஸ் மசூதி



இது திருநள்ளாறு - ஊருக்கு போறச்ச ஓவ்வொரு வாட்டியும் எனக்கு சனி புடிச்சிருக்கு ஒரு விசிட் போய்ட்டுவான்னு சொல்லுவாங்க எனக்கென்னமோ ஒவ்வொரு வாட்டியும் போறப்பத்தான் பயபுள்ளை நல்லா ஜம்முன்னு என்னைய பிரெண்டு புடிச்சிக்கிடறாரோன்னு எனக்கு நொம்ப நாளா ஒரு ஃபீலிங்கு



நந்தி @ கோவில் மதிலில் சிட்டிங் & வாட்சிங்



இது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வலம் வருகின்றபோது எடுத்த ஒரு கோபுரத்தின் பகுதி - கோணல்மாணலா எடுத்தாலாச்சும் சரியா வருதான்னு பார்த்தேன் ம்ஹும் வர்ல![ஜீவ்ஸ்ண்ணாச்சி மன்னிப்பாராக]



இதுவும் மதுரை :)


ஜுலை -2010 போட்டிக்கு அம்புட்டுத்தேன்!

கவியரசரின் பிறந்த நாளில்..!

Photo  Sharing and Video Hosting at Photobucket


உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதே சரியாக இருக்கக் கூடும் என்று சொல்லி விடுங்கள்.

உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.

வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள் ளுங்கள்.

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.

- கவியரசு கண்ணதாசன்
கவியரசரின் பிறந்த நாளில் -
ஜூன் 24 1927

அன்புள்ள அப்பாவுக்கு..!

எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை!

- யாத்ரீகன்



தொடர்புடைய பதிவு - அன்புள்ள அப்பாவுக்கு..!

ராவணன்


கொளுத்தியெடுக்கும் வெய்யில் காலத்தில் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் பல பத்து முறைகள் எழுந்தடங்கினாலும் பார்த்துடலாம்ன்னு நட்பு கை கொடுக்க ராவணனின் திரைக்களம் -தியேட்டருக்குத்தாங்க - புகுந்தோம்!

ப்ளாக்யெல்லாம் வைச்சுருக்கோம்ல அப்படின்னு ஒரு நினைப்பு வந்துச்சு அதான்...!

*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


Ø செய்திகளில் பேசப்பட்டது போலவே ராமாயணம் கதையின் கருவே ராவணன் – குரங்கு சேஷ்டை செய்யும் கார்த்திக் விபீஷணனாக மாறும் தம்பி கண்டிப்பாக நம்பவைத்துவிடுகிறது - ஹீரோவின் கேரக்டரினை விட வில்லன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் டைட்டில் வைச்சுருக்காங்கன்னு யோசிக்கவைச்சு பதிலும் சொல்லியிருக்காங்க! என்ன அதுக்குள்ள இண்டர்மிஷனா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு விறுவிறுப்பு

Ø சந்தோஷ் சிவனின் ஒளி ஓவியங்கள் - ஒரு டப்பா எஸ்.எல்.ஆர் கேமராவினை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டிருக்கும் எனக்கெல்லாம் வியப்பினை தரவைக்கும்விதமான காட்சியமைப்புக்கள் ! ஒரு காட்சியில் ஐஸின் ஐஸ் ஹப்ப்படியோ சொக்கவைக்கிறது! கேரளத்தில் அவுட்டோர் லொக்கேஷன் செண்டிமெண்ட் மணி ரத்னத்திற்கு உண்டு என்பதை நிரூபிக்கும் அதிராம்பள்ளி!

Ø உசுரே போகுதே பாடல் ஒளி/ஒலிக்கதொடங்கும் காட்சிகளில் சற்றே மனதுக்கு நெருடலாய் ஆரம்பித்தாலும், மொத்தமாய் படம் முடியும் பொழுதினில் சாரி டூ திருவள்ளுவர் & அபிஷேக் பச்சன் ”பிறன் மனை பாராமை பேராண்மை ரூல்ஸெல்லாம் ஏத்துக்க முடியாம, ஐஸ்வர்யா ராய் பச்சனை மனதிலேற்றி அமர்த்திவிட்டது!



Ø பெருத்த பிரபு வீராவுக்கு அண்ணன் + அட்வைசராக கால்ஷீட் பிரச்சனையோ அல்லது காலதாமதமோ கண்டினியூட்டி சில இடங்களில் பிரபுவுக்கு தடுமாற்றம்

Ø மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் பார்க்க நினைத்துக்கொண்டிருக்கின்ற கேரக்டர் ரஞ்சிதா - ச்சே எக்ஸ்பெக்டேஷனெல்லாம் கிர்ர்ர்ர்ர்

Ø கந்தசாமி எஃபெக்ட் சவுண்ட் கொடுக்கும் மேனரிஷம் எப்படி மணி ரத்னம் அனுமதித்தார் - நிஜமாகவே விரும்பியிருப்பாரோ - ஆச்சர்யம்தான்!

Ø கட்டுமஸ்தான விக்ரம் கந்தசாமியில் விழுந்தவரை கண்டிப்பாக கரை சேர்க்கும்! ஹிந்தியில் ஐஸ்வர்யாவின் கணவராக நடிப்பதையும் பார்த்துவிடும் ஆவல் உண்டாகியிருக்கிறது!

Ø மிக எளிய உரையாடலினை வெளிப்படுத்தும் வசனங்களே! மனைவியினை சந்தேகப்படும் கணவனின் செயல் சாதுர்யமாக கையாளப்படுவதும்,கோபம் விட்டுபோகாமல் இருக்கவும், தீயவர்களிடத்தில் இரக்கம்/அன்பினை வெளிப்படுத்தாமல் இருக்கவும், இறைவனிடம் வேண்டும் கதாநாயகி வசனங்கள் - சுஹாசினி - மணி ரத்னம் கொடுத்து வைத்தவர் ரொம்ப அதிகம் பேசமாட்டாங்க போல அவுரு தங்கமணியும்..!

Ø கோடு போட்ட,கள்வரே கள்வரே,கடா கடா காட்சியமைப்புக்களிலும் தூள்! ரொம்ப சிலாகித்து பேசப்பட்ட உசுரே உசுரே கொஞ்சம் நிமிடங்களில், மயங்கி கிடக்கும் ஐஸ்வர்யாவினை மனதில் இருத்திவிட்டு செல்கிறது!

Ø ஹிஸ்டரியின் ஒன் லைன் தீம் வைத்துக்கொண்டு கரெக்டர்களையும் ஒத்துவருவதுபோலவே உருவாக்கிவிட்டு, அரசியல் இன்ன பிற ஹிஸ்டோரிக்கல் பிரச்சனைகள் எதுவுமின்றி வில்லனை ஹீரோவாக்கும் விசயத்தில் மணி ரத்னம் ஜெயித்திருக்கிறார்


*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*

கடைசியா தோணுச்சு:- ஒரே நேரத்தில ராவணன் ஹிந்தி தமிழ்ல ரீலிசானா மல்லு சேட்டன்மார் ஹிந்திக்குத்தான் போறாங்க செம்மொழி மாநாட்டுல சொல்லி இதுக்கு எதுனா தடை போடணும்

டிஸ்கி டெரரிசம் :- இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று அப்படின்னு பாடுன தேவன் மேல டெரர் கோபம் வர்ற அளவுக்கு உங்களை ஒரு பெண் சஞ்சலப்படுத்தினால் நீங்களும் ராவணனே!

உதயமாகும்...!

இயற்கையினை ரசித்தபடியே இயல்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு கண்டிப்பாக சுதந்திரமான மனநிலையோ அல்லது தற்காலிகமானதொரு தோற்றம் கொண்ட சுதந்திரத்தினையோ ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமாகிறது.



விடுமுறை பொழுதுகள் முன்பெல்லாம், வெளிப்புறங்களுக்கு சென்று சுற்றி களைத்து வந்த காலமெல்லாம் போய், தற்போது உடை களையாமல் உறக்கம் கொள்ளும் பொழுதுகளாகியேவிட்டன !

அஸ்தமித்தலில் இருக்கும் அழகினை விட, ஆரம்பித்தலில் இருக்கும் அழகினை ரசிப்பதே அனைவருக்குமான ஆவலாக/ஆசையாக இருக்ககூடும் !



மிக விருப்பமாய்,உள்ளம் மகிழும் உணர்வோடு விவரிக்ககூடிய விசயங்கள் அதிகாலை சூரிய உதயத்தில்...

மெல்ல எட்டிப்பார்க்கும் அந்த அதிகாலை சூரியன் கண்ட பறவைகள் கூட்டம் கூட்டமாய் கீழிருந்து மேல் நோக்கிபறக்க எத்தனிக்கும் அந்த காட்சி - வாழ்த்து அட்டைகளில் வர்ணங்களின் வசத்தில் அடைப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் - உயிர்ப்புடன் காண முடியும்

எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்பதை கண்டிப்பாய் உணர்த்தும் பழமொழிகளோ ஞானிகளின் பொன்மொழிகளோ படித்து படித்து அலுத்துப்போன தருணங்கள் நம்மால் இயலாது என்று முடிவு கண்ட தருணங்கள் ஞாபகத்துக்கு வருகிறது! எந்த எதிர்பார்ப்பினை தேடி, சூரியன் மென் தாக்குதல் தொடுக்கும் செங்கதிர்களினூடாக பறந்துகொண்டிருக்கின்றன அந்த பறவைகள்!?

ஒ.கே

டிஸ்கி:- இல்லை என்பதே காரணமானது எல்லாவற்றிற்கும்....



.கே என்றால் விட்டு விடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: .கே.

இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்; பிரச்சினை அதுவல்ல. .கே என்பதுதான் பிரச்சினை.

நீங்கள் கடந்த காலத்தில் எனக்குச் செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப் போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில்.கேதான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு எத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்றால் என்னிடம் கேளுங்கள்.

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை .கே என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். .கே என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் தான்.

யோசித்துப் பாருங்கள் நீங்கள் யார், நான் யார் என்று. நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா? மூன்றாவது உலக நாடுகள் இது வரை பட்டது போதாதா? நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா? உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.

.கே என்று சொல்வதால் நான் உங்களை விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு போவதை விட .கே என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், குடி போதையிலாவது. குடித்திருக்கும்போது நீங்கள் எல்லாரும் மனிதருள் மாணிக்கங்கள் என்று எனக்குத் தெரியும். .கே. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் நான்.

உங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு .கே என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். .கே என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தி .கே என்றும் அர்த்தமாகும்.

நான் என்ன சொன்னேன்? ‘.கேஎன்றுதானே சொன்னேன்? .கே என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு .கே என்ற பதிலே அதிகம். அவர்களிடம் .கே என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்குசுயத்தின் எச்சங்கள்என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.

ப்ளீஸ்! நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போலலாஜிக் இடிக்கிறதுஎன்பதற்கு பதில்தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதுஎன்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான். ஆனால் இதே போலொரு சூழ்நிலையில் நீங்கள் என்னிடம்.கேஎன்று சொன்னால் புரிந்துகொள்வேன். என்னவோ நீங்கள்தான் என்னிடம் கையேந்தி நிற்பது போல் நடந்துகொள்ள மாட்டேன்.

கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது முதலில் நான் உங்களுக்கு சொன்னதுதான்: .கே. நான் சொல்வது புரிகிறதா? புரியவில்லை என்றால் அது என் பிரச்னை .கே. .கே என்று நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஒரு விஷயத்தைப் பல தடவை சொன்னால் புரிந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். புரிந்துகொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும். தெளிவுக்கும் வரம்புகள் உண்டு. நான் திரும்பத் திரும்ப சொல்லக் காரணம், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் உங்களுக்கு ஒரு சொல் போதவில்லை அதனால்தான் இவ்வளவும்.

வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லுங்கள். நீங்கள் நான் பார்த்துப் பல வருடங்களான நண்பராக இருந்து உங்கள் குடும்பத்தினரில் யாராவது நடுவில் இறந்துவிட்டிருந்தால் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேனே! நண்பர்கள் எதற்கு இருக்கிறார்கள், சொல்லுங்கள். இடையில் யாருக்காவது திருமணம் ஆகிவிட்டதா? என் வாழ்த்துக்கள். அதே நாளில் என் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம், அதனால்தான் வர முடியவில்லை.

பார்த்தீர்களா, என்னைத் தவிர உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்? என்பால் உள்ள அன்பினாலா? என்பால் உள்ள அன்பைக் காட்ட உங்களுக்கு இதுதானா சமயம்? அதான் .கேன்னு சொல்லிட்டேனே

நன்றி - ரைட்டர் பேயோன்

வாழ்த்துக்கள் கானா பிரபா!




நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

முதியோர் வதம்!

தினமணி கருத்துக்களத்தில் வெளிவந்த முதியோர்வதம் கட்டுரையிலிருந்து சில வரிகள்...

இசைபட வாழ்ந்த நாட்களை அசைபோட்டபடி கால வெள்ளத்தில் துடுப்பில்லாத ஓடமாகப் பயணிக்கிறது முதுமை வாழ்க்கை.




முதியவர்களின் கம்பீரம் காக்கும் சுய உழைப்பு சில்லறை வியாபாரங்களும் கால வெள்ளத்தில் கரைந்துபோயின. ரயில் பயணங்கள் சில பரிதாபங்களையும் பரிகாசங்களையும் படம் பிடித்துக் காட்டும். உரிமம் பெறாமல் வேர்க்கடலை, சுண்டல், கொய்யாப்பழம், டீ, காபி, பானங்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் இரயில் பெட்டிகளில் தென்படுவது பயணிகளுக்கு ஒரு சாதாரண காட்சி. வெளியில் தெரியாத வேதனைகள் ஏராளம். சில்லறை வியாபாரிகளில் பெரும்பாலோர் முதியவர், மூதாட்டிகள். சுயமரியாதையை இழக்க மனமில்லாமல் இரயில் பயணத்தில் சில்லறை வியாபாரம் செய்து குறைந்த வருமானத்தைக் கொண்டு நிமிர்ந்து வாழும் உழைப்பின் சிறு தேவதைகள் அவர்கள்.

திருநெல்வேலி ரயில் பயணிகளுக்கு மிகவும் அறிமுகமான இட்லி வியாபாரியை எளிதில் மறக்க முடியாது. வயது எண்பத்தி ஐந்தைத் தொடும். கூன் பின்னுக்கு இழுக்கும். இரணியா வீக்கம் முன்னுக்குத் தள்ளும். கரணம் தப்பினால் மரணம். உயிர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கி கூவிகூவி அவர் இட்லி வியாபாரம் செய்வது கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

விவசாயத்துறை, தொழிலாளர்கள், வாலிபப் பருவத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பின் வாயிலாகத் தங்களைத் தியாகம் செய்கிறார்கள். முதுமை அவர்களை முடக்கிப்போடும்போது குடும்பத்திற்குப் பராமரிக்கிறார்கள். குலை நடுங்கி துயரத்தில் குமைகிறார்கள். காந்தியும், புத்தரும் காருண்ய இயேசுவும் வள்ளலாரும் புனிதமாய் மதிக்கப்படும் இந்தியத் திருநாட்டில் ஏழை முதியவர்களிடமும் கருணை காட்ட வேண்டும்

முழுமையான கட்டுரை வாசித்தலுக்கு


நன்றி - தினமணி

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்







உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

புறா!

ஏறக்குறைய நாற்பதுக்கும் அதிகமான புறாக்களின் கூட்டத்தினுள் பார்வையினை செலுத்தியபடி மெளனமாய் அமர்ந்திருக்கின்றேன்!



வார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு!

வார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை!

எல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு! பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்!

கூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது! நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது! முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது!

சற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ?

ஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது!



கூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்!

ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்!

சென்ஷி - காதலன்

காதல் என்பது அனுபவம்;

காதலித்தல் சுகானுபவம்;

காதலிக்கப்படுதல் பேரனுபவம்

காதல்...நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.

காதல்....நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.

காதல்...அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.

காதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலை ஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.

காதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.

காதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.

காதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.

காதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.

காதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி

காதல்... நினைவுகளின் சங்கமம்

காதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி

காதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.

காதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.

காதல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.

காதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.

காதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.

காதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.

இடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.

சென்ஷி - காதலன்

*********************************************************************************



இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி...!

பணியிடத்தில்...




பணியிடத்தில் பாதுகாப்பினை உணருங்கள்;

மற்றவர்களிடத்தில் பாதுகாப்பு பற்றி உணர்த்துங்கள்!


ஏப்ரல் - 28 -பணியிட பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் [workplace safety day]

மயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு!

இன்று 23/04/2010 மாலை 6.30 மணிக்கு அகல ரயில்பாதையில் ரயில் வண்டியின் பயணம் தொடங்கியது! கிட்டதட்ட 3 வருடங்களை கடந்த மீட்டர்கேஜ் - பிராட்கேஜ் இருப்புப்பாதை அகலமாக்குதல் திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றம் பெற்றிருக்கிறது!

மயிலாடுதுறை மக்களுக்கும் சுற்றியுள்ள ஊர்களை சார்ந்திருப்போருக்கும் மேலும் கும்பகோணம் தஞ்சாவூர் மக்களுக்கும் தற்போதைய சூழலில் [ அணைக்கரை பாலம் வலுவிழந்த நிலையில் பேருந்துகள் கிட்டதட்ட 50 கி.மீ சுற்றி சென்றுகொண்டிருக்கிறது] நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது இன்று!

திட்டம் சிறப்பாக[!?] நிறைவேற்றம் பெற பங்கு பெற்ற மத்திய & மாநில அரசு ஊழியர்களுக்கும்,பணிகளை சிறப்பாக செய்து முடித்த தனியார் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மயிலாடுதுறை மக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !


நிதர்சனம்!

விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை.அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை.இரண்டுக்கும் நடுவில் மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி அதனுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்!
-எஸ்.ராமகிருஷ்ணன்

நன்றி - தினமணி

Phantom HD Gold


டிஸ்கி
:- நாலு பேருக்கு நாலு விசயம் போய் சேரணும்னா இந்த மாதிரி பதிவு போடறதுல தப்பேயில்ல!

எந்தவொரு முக்கியமான அதாவது தமிழ்ல சொல்லணும்ன்னா இம்பார்டெண்ட் டெசிசன்ஸ் எடுக்கறச்ச எல்லாருமே கொஞ்சம் சைலண்ட் கீப் அப் செஞ்சு ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கிதான் செய்வாங்க! அதாங்க ஸ்லோமோஷன். சினிமாவுலே நாம கத்துக்கிட்டோமா அல்லது நம்மகிட்டர்ந்து சினிமா சுட்டுக்கிச்சான்னு தெரியாது - இந்த ஸ்லோ மோஷன் எஃபெக்ட்க்கு அடிமையாகதா ஹீரோக்களே கிடையாதுன்னு சொல்ற அளவுக்கு ஒவ்வொரு கோணத்திலயும் ஸ்லோமோஷன்ல நடிச்சு தீர்த்துட்டாங்க!

இப்படிப்பட்ட ஸ்லோ மோஷன் நடிகர்களுக்காக புது புது தொழில் நுட்பத்துடன் அதிகமான ஹை டெபனஷன் (HD) டிஜிட்டல் கேமராக்கள் மார்கெட்டில் க்யூ கட்டி நிற்க தொடங்கிவிட்டது அதுவும் தற்போதைய லேட்டஸ்ட் phantom HD Gold Camera - High Speed இதுல என்ன அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி



சாதாரணமாக ஸ்லோமோஷன் காட்சிகள் நிமிடத்திற்கு 24 ப்ரேம்ஸ் சுட்டுத்தள்ளும் கேமரா வகைகளிலிருந்து தரப்படுகின்றன ஆனால் இந்த புதிய phantom HD Gold நிமிடத்திற்கு 1500 ப்ரேம்ங்களை சுட்டு தள்ளும் அதே நேரத்தில் படத்தில் கிளாரிட்டிக்கும் 100% உத்தரவாதம் !

சாம்பிள்


தமிழ் திரைப்பட உலகை பொறுத்த வரையில் அனேகமாக எந்திரனிலும் மற்றும் இயக்குனர் அருண்வைத்யநாதனின் எதிர்மறையிலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு!

இனி வருங்காலங்களில் இந்த உயர்தர தொழில்நுட்ப கேமராக்களை வைச்சு பாடா படுத்தி எடுக்க தமிழ் திரையுலகம் ரெடியா நிக்கிது !
இனி குளோஷப் - ஷாட்ல ஹீரோவோட கண்ணுல இருக்கிற நரம்புகளில் ரத்தம் கொப்புளிக்கிறதுலேர்ந்து கண் இமைகள் துடிப்பது உதடுகள் துடிப்பது வரைக்கும் கண்டிப்பா காட்ட டிரை பண்ணுவாங்க!

யெப்பாடியோவ்வ் நினைச்சு பார்த்தாலே டெரர் காமிக்கிது!

சிட்டுக்குருவிகள்


நமது வாழ்வுமுறை, கட்டட அமைப்புகளின் மாறுதலால் நம்மைச் சார்ந்து நம் வீடுகளில் நம்முடன் வாழ்ந்து வந்த சிட்டுக் குருவி இனங்கள் காணாமல் போய்விட்டன.

சங்க காலம் முதல் பாரதியார் பாடல்கள் வரை போற்றிப் புகழ்ந்த சிட்டுக் குருவிகள், இன்று நம்மைவிட்டு எட்டாத இடத்துக்குப் போய்விட்டன.

சிறுவயதில் மூத்த குடிமக்கள் வாழ்ந்த பழைய வீடுகளின் மூலை முடுக்கு சுவரின் பொந்துகளில் கூடுகட்டி கீச்...கீச்... என்று சத்தமிட்டபடி அங்கும் இங்கும் வீட்டுக்குள்ளேயே பறந்து செல்லும் சிறிய குருவிகள் இன்று எங்கே போய்விட்டன?

சுற்றுச்சூழல் மாறுதல்களால் நம் எதிர்கா லச் சந்ததியினருக்கு பல இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சிட்டுக் குருவி இனமும் ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வில்லாமல் பல விஷயங்களால் நாம் கண்டுகொள்ளாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் நமது கட்டட அமைப்புதான். வீடுகளில் உத்தரங்கள், காற்று துவாரங்கள், ஓட்டு வீடுகளில் ஓடுகளுக்கிடையே உள்ள சந்துகள் சிட்டுக் குருவிகளின் வாழ்விடமாக இருந்தன.

தானியங்களைப் புடைக்கப் பயன்படுத்திய முறங்களில் இருந்து விழும் குறுநொய், வீட்டு முற்றங்களில் பாத்திரங்களைக் கழுவும் போது அவற்றில் எஞ்சியிருக்கும் சோற்றுப் பருக்கைகளைச் சாப்பிட்டு குருவிகள் உயிர் வாழ்ந்து வந்தன.

உடலுக்கு வலிமை தரும் அந்த தானியங்களைச் சாப்பிடுவது குறைந்து பீசா, பர்கர், ஃபாஸ்ட் புட் கலாசாரத்துக்கு நாம் மாறிவிட்டோம்.

கல், குறுநொய் நீக்கப்பட்ட கம்ப்யூட்டர் அரிசி, கோதுமை என்றாகிவிட்டது. வீட்டுச் சமையல் அறைகளில் இருந்து சோற்றுப் பருக்கைகள் "சிங்க்' மூலம் நேராக பாதாள சாக்கடைக்குப் போய்விடுவதால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு என்பதே கனவாகிவிட் டது.

உணவு, வாழ்விடம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் நகரப் பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இவை குடிபெயர்ந்து விட்டன. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய இக்குருவிகள் ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கப்படும். ஆண்டு முழுவதும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். 3 முதல் 5 முட்டைகள் வரை இடும்.

சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டத் தெரியாது. வீடுகளில் உள்ள சந்து, பொந்துகளில் அருகம்புல், வைக்கோல், குப்பைகளில் உள்ள நார்க்கழிவுகள், பஞ்சு போன்றவற்றை திணித்து அவற்றில் முட்டையிடும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும். முருங்கை, கருவேலமரம், அவரைக் கொடி, பூசணிக்கொடியில் உள்ள புழுக்கள் மட்டுமே சிறிய குஞ்சுகளுக்கு உணவு. புழுக்கள் உருவாகும் செடிகள் நகரத்தில் இல்லாமல் போய்விட்டன.

சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ்சுகள் பொறித்தவுடன் போதிய இடவசதி இருக்காது என்பதற்காக குஞ்சு களை கூட்டில் தனியாக விட்டுவிட்டு ஆண், பெண் குருவி மட்டும் வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையான மரங்களில் அமர்ந்து இரவுப் பொழுதைக் கழிக்கும்.

நன்றி - தினமணி

நன்றி - தினமலரில் இன்று 20.03.2010 வெளியான செய்தி

சிட்டுகுருவிகள் விஷயத்தில் நம் நடவடிக்கைகள் எல்லாமுமே மாறி விட்டன! தெருக்களில் விளையாட்டின் போது அல்லது விளையாட்டே சிட்டுகுருவி காண்பது என்றிருந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன! நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தீமைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது! தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் மறைவுகள் இருக்கும்போது தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றனவோ....???

சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்!

டிஸ்கி:- @லேபிள்

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே

டெய்லி உன் முன் நின்று
கண் விழித்த நாட்கள் தான்
இத்தனை ஆண்டுகளாய்
தரித்திரமாய் இருக்கிறது

பார்வையாலே சில நிமிடம்
தலை சீவிக்கொண்டே சில நிமிடம்
பவுடர் போட்டப்படியே சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
முகத்தில் பேர்& லவ்லி அப்பிய
அழகோடு சில நிமிடம்

எது கருப்பு எது கலர்
எனக்கு எதுவுமே தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி ஐ டோண்ட் கேர்

எப்பொழுது நின்றேன் எப்பொழுது சென்றேன்
ஒரு நாளும் புலப்படவில்லை
எப்பொழுதுமே நின்றேன்
இதுவரைக்கும் முடியவில்லை

தலை சீவினேன்
அழகு என்று ஜொள்ளினாய்
ஆடை அணிந்தேன்
சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்

கண்ட கண்ட திருக்கோலம்
கண்டிப்பாக காண்பித்தாலும்
கடைசியிலே காணபித்த அழகு
கண்ணில் இன்னும் நிக்கிது!நிக்கிது

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே


டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது)

இழுபடும் கேள்விகள்!

டிஸ்கி - வழக்கம்போல ரொம்ப நாள் முன்னாடி போஸ்டிட்டு உதவிய ஆச்சிக்கு நன்றிகள்

ஊரை சுத்த கிளம்புகையில் எங்கிருந்தாவது வந்து சேரும் வேலைகள்

ஜீனி,அரிசி,காய்கறி அல்லது பேப்பர் வாங்கிட்டு வா!

இப்பொழுதும் எதாவது ஒன்று வந்து கொண்டுதான் இருக்கிறது
அது எப்பொழுதுமே டார்ச்சராகவே இருக்கிறது

ஏன் நீ மத்தவங்க மாதிரி சாயந்தரத்துல காலேஜ் புக்கை எடுத்துவைச்சு படிக்கமாட்டிக்கிற?

யோசித்து சொல்வதற்குமுன்..

மத்தவங்களெல்லாம் கரீக்டா காலேஜ் போகும்போது நீ மட்டும் ஏன்...?

சொல்வதற்கு நிறைய இருந்தாலும்,
எதை முதலில் சொல்வது;

ஹேய்...! டேய் அந்த பையனை பாரு பர்ஸ்ட் ரேங்க் எடுத்து விப்ரோல வேலையும் கெடைச்சுடுச்சாம்!

நேற்றுக்காலையில் என்னிடம் எழுப்பப்பட்ட கேள்வி இப்படியாக இருந்தது;

தம்பி நீ உருப்புட்டுடுவியாடா?

பதின்மம்

பதின்மம் - கடந்துபோனவற்றை நினைத்து பின்பு கவலை கொள்ளவைக்கும் பல நிகழ்வுகள் நடக்கும் பருவம்



குறிப்பாக இவைகள்தான் எனது பதின்ம வயது நினைவுகளின் பெரும் பக்கங்களை நிறைத்திருக்க முடியும் என்ற தீர்க்கமான முடிவோடு எழுத ஆரம்பிக்கின்றேன் ஒவ்வொரு விசயங்களை பற்றியும் கூறும்போது வெவ்வேறு சம்பவங்களின் குறுக்கீடுகளோ அல்லது இடைச்சொருகள்களோடே செய்யவேண்டிய நிர்பந்தங்களோ மட்டுமே அதிகம் இருக்கிறது!

படிப்பு - 1-முதல் 5 வரையிலான பள்ளி நிகழ்வுகள் மிக சுலபமாகவே சென்றுவிட்டதாகவே தோன்றுகிறது இப்பொழுது நினைக்கையில் அண்ணன் மற்றும் அக்காவுக்கும் அம்மாவிற்கும் துணையாக சென்ற காலத்தினை தொடர்ந்து நானும் பள்ளி சென்று வந்திருக்கிறேன் என்பது 6 ம் வகுப்பு எண்ட்ரன்ஸ் தேர்வு எனும் டெரரிசத்தில் புரிபட்டது!என்னமோ கேட்க நான் என்னமோ எழுதி வைக்க தென்னை தன் வரலாறு கூறுதலில் ஏனோ சறுக்கு ஏற்பட்டுவிட்டது போல அதை பரீட்சை முடிந்து வெளியே வந்து என்னவொல்லாம் எழுதினேன் என்று பெரிதாக சொல்லி வைக்க வீட்டின் உறவுகளுக்கு மத்தியிலும் கேலிகளுக்கு ஆளானதுதான் ஞாபகத்துக்கு வருகிறது - வடிவேலு ஸ்டைலில் நான் எதுக்குடா லாயக்கில்லாம போயிட்டேன் - ரேஞ்சுல நான் அப்படி என்னாடா தப்பு செஞ்சேன்னு கொஞ்ச நாள் சொல்லிக்கிட்டு திரிஞ்சேனாக்கும்.

பத்தாவது வரைக்கும் படிப்பு போனது என்னவோ கொத்ததெருவுக்கும் சின்னகடைத்தெருவுக்கும் சுத்தின காலமாத்தான் தெரிஞ்சுது அடுத்த கட்டம் பலவித கனவுகளோட பயணித்த பாலிடெக்னிக் படிப்புதான் - டெய்லி படிக்கணும் முடிஞ்ச அளவுக்கு பர்ஸ்ட் மார்க் எடுக்க முயற்சிக்கணும் கூட்டத்தில தனியா ஜொலிக்கணும்ன்னு டெரர் கனவுகளோட போயி வந்தாச்சு! -அவ்ளோதான் போயிட்டு வந்தாச்சு - கனவுகள் கனவுகளாகவே நின்னுடுச்சு! - அதுவும் கடந்து போகும்

விளையாட்டு - ஸ்போர்ட் டே என்ற ஒரு நிகழ்வு ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் நடந்துக்கொண்டிருக்கிறது,முன்பிருந்த சூழலுக்கும் தற்போதைய சூழலுக்கும் ஓப்பிட்டு பார்க்கும்போது,பங்கேற்க போன காலம் கடந்து பார்த்துவரச்சென்ற காலமும் கடந்து இன்று அன்று ஒரு நாள் விடுமுறையில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் நிலை! பங்கேற்கும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்றும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில் அமிழ்ந்திருக்கிறது

காதல் - ப்ரெண்ட்ஸ் சர்கிள் ஆளாளுக்கு லவ்ஸ்ல உழன்றுக்கிட்டிருந்தாங்க - ஹம்ம்ம் அதுதான் நல்ல டைம்ன்னு யாரு ஐடியா கொடுத்தாங்களோ!- எனக்கு அந்த பக்கம் மனசளவில இருந்த இண்டரஸ்டுக்கு சைடு கொடுத்து கிளப்பிவிடக்கூடிய அளவுக்கு தைரியம் இல்லாம ஏகப்பட்ட விசயங்களை நினைச்சு குழப்பிக்கிட்டு கிடந்தது ஈடுபடும் ஆர்வம் அதிகம் இருந்திருந்தாலும் அதற்கான முயற்சிகள் ஏதுமின்றி போனது இன்று இதுவும் ஒரு குறையாகவே நினைவடுக்குகளில்..!

இந்த பதின்ம வயதில் சட்டுன்னு தான் முடிவுகளை எடுக்க தோணும் ஆனா கொஞ்சம் பொறுமையாத்தான் எடுக்க முயற்சிக்கணும்! பொறுமை எடுக்கறதுங்கிறதே கொஞ்சம் ஆலோசனைகள் நிறைய யோசனைகள் கொண்டதாக அமையும் அப்ப ஒரளவுக்கு நல்லதாகவே முடிவுகள் ஏற்படும் அப்படிங்கறது என்னோட நம்பிக்கை ! (அட்வைஸ்! அட்வைஸ்!!)

ஊர் சுற்றல் - விண்ணை தொட விரும்பும் வயதில் ஊர் சுற்றுதல் என்பது தவிர்க்கமுடியாத நிகழ்வு போதுமான அளவு ஊரையும் சுற்றுவட்டாரங்களையும் சுற்றி வந்ததன் விளைவு இப்பொழுதும் கூட ஏதேனும் ஒரு தெருவினை/ஊரினை கடக்கும்போது நினைவுகள் மீளப்படுகிறது!

நண்பர்கள் - நட்பு ஒருவனாய் தொடங்கியதா அல்லது குழுவாக கிடைத்ததா என்று நினைத்துப்பார்க்க தொடங்கிய நாள் முதல் வீண் கோபத்தில் சண்டையிட்டு முறைத்துக்கொண்டு சென்றதும் மீண்டும் நட்பு பாராட்டியதும் இன்றும் நினைவில் கொண்டு வெட்கச்சிரிப்பு வெளிப்படுத்த தயங்குவதே இல்லை !

இவர்களின் பதின்மம் எப்படி சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்திருக்கும் என்று சில வேளைகளில் கற்பனை செய்து பார்த்ததுண்டு - அவர்களும் வந்து சொல்லட்டும் சரிபார்த்துக்கொள்வோம் :)

சென்ஷி

தமிழ்பிரியன்

கறுப்பி தமிழன்

நிஜமா நல்லவன்


டிஸ்கி:-

பதின்ம பருவத்து நிகழ்வுகள்/நினைவுகள் கன்னாபின்னான்னு இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணமாய் இங்கு :)

பொங்கல் - பானையில் பொங்குவோம்!


ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!

பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!

எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!

இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!

நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!

வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?

சிந்திப்போம்!

பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!

வரும் தமிழர் திருநாளில்...!

2010ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...!

வெட்கம்!


பார்க்கும் விழிகள் ஏற்படுத்துகின்ற கேலித்தனம் நிறைந்த கருத்துக்களால் நாம் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணம் ஏற்படுகையில் நமக்கு ஒரே வெக்கம் வெக்கமா வரும்!

வெட்கமும் தயக்கமும் ஒரே மாதிரியாக தோன்றினாலும், பிறரிடத்தில் உண்டாகும் பயம் கலந்த மரியாதை அல்லது அந்த ரீதியிலான ஏதோ ஒன்றில் தனித்து நிற்கிறது - தயக்கம்!

சமூகத்தில் பல நிலைகளிலும் காணும் காட்சியாக பெற்றோர்கள் பீற்றிக்கொள்ளும் பிள்ளைகளையும் - ச்சே அவன்/அவள் வீட்டை விட்டு வெளியே வரவே அவ்ளோ வெட்கப்படுவாங்க என்ற பெருமிதமோ - அல்லது ஒரு மனிதன் இருக்கிறான் என்ற சுவடே தெரியாத அளவுக்கு அக்கம்பக்கத்து வீடுகளில் வெட்கம் நிரம்பி வழிய வாழ்க்கை நடத்தும் மனிதர்களை சமூகத்தில் நிறையவே நீங்கள் காண முடியும்!

சரி வெட்கம் நல்லதா கெட்டதா என்று எழும் கேள்விக்கு பல சூழல்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது .கே நல்லதுதான் என்றே தோன்றும் சில விசயங்களில் ஆஹா அப்படி ஆகப்பிடாதே ரொம்ப தப்பு என்றும் சொல்லவைக்கும்!

யாரோ வெட்கப்படாமல் செய்த ஆராய்ச்சியில் - படிக்கும் காலத்தில் ரொம்பவே வெட்கப்பட்டுக்கொண்டு இருக்கும் பிள்ளைகள் படிப்பில் கெட்டியாக இருக்கிறார்களாம்! மற்றவர்களோடு அதிக நேரம் செலவிட தேவையின்றி படிப்பினில் கவனம் செலுத்துவதினால் இப்படியான திறன் மேம்படுத்தப்படுகின்றதாம்!

சரி
இப்படியே படிச்சு பெரிய லெவல்ல மார்க்கெல்லாம் எடுத்துட்டு வேலைக்குன்னு வர்றப்ப இந்த வெட்க நிலை வேதனையளிக்கும் விசயமாக கூட பணி புரிவர்களிடத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தின் தொடர்பு நிலையில் உள்ள யாரிடமும் எளிதில் தொடர்பு கொள்ளமுடியாதபடி செய்துவிட அந்த கட்டத்தில் வெட்கம் ரொம்ப தப்பும்மா என்று உணர்வு எழும்புகிறது!

மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால் கொஞ்ச காலம் வெட்கம் இருந்துவிட்டு போகட்டும் தொடரவிடவேண்டாம் என்ற சிந்தனையே பெஸ்ட் என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.

பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம்! இல்லையெனில் அவர்கள் வாழ்க்கை பயணத்தில் இழக்கும் விசயங்கள் நிறையவே இருக்கக்கூடும்!

சரி சிம்பிளான வழிமுறைகள் கடைப்பிடிச்சு இந்த வெட்கத்தை தொலைச்சு கட்டமுடியுமான்னா - முடியும்! சில சின்ன சின்ன வழிமுறைகளில் அதை ஒரளவுக்கு குறைக்கமுடியும்!

நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் - அப்பிடின்னா என்னான்னு சொல்றதுக்கு இப்ப எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?