நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!
வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!
காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுக்கிட்டு போறதுன்னாலே செம டெரரான ஒரு விசயம்! அதுவும் நம்ம இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம்! அதுவும் எனக்கு நடந்த அநியாயம், ஸ்கூல் வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்துக்கும் எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !
மத்த ஸ்கூல் யூனிபார்ம்லாம் பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியும் அதுவும் குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும் அந்த ஸ்கூல்ல கோ-எஜுகேஷன் வேற..! (ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல...? ஒரு வேளை எங்க நான் நிறைய இங்கீலிசு படிச்சு பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பயம் போல மை டாடிக்கு..?!)
சரி முதல்ல டவுசர்லேர்ந்து பேண்ட்க்கு டிரான்ஸ்பராகறதுக்கு என்ன வழின்னு டெரரர் பிளான் போட ஆரம்பிச்சேன்! போற வரப்ப கேர்ஸ் ஹைஸ்கூலு பசங்க(!?) எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமா? எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமான்னு ஏகப்பட்ட யோசனை ! ஒரு காரணமுமே சரியா சிக்கல!
யப்போவ்..! எனக்கு புதுசா ஒரு காக்கி பேண்ட்டும் கறுப்பு சட்டைதுணியும் எடுத்துக்கொடு போட்டுக்க வேணும் ?
அப்பா:- இப்ப எதுக்கு உனக்கு?
ம் பொறந்த நாளு வருதுல்ல !
அப்பா:- டேய் அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்குடா ?
அப்ப பொங்கல் வருதுல்ல அதுக்கு !
அப்பா:-சரி முடிவு பண்ணிட்டீல்ல எடுத்து தரேன் !
ஒரு வழியாய் சக்சஸ் பண்ணிய சந்தோஷத்தில் பிரதர் சைக்கிள் எடுத்துக்கிட்டு எஸ்ஸாகிவிட, - அட ஆமாங்க அண்ணனுக்கும் அப்பாவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைதான்! டாடிக்கு பிரதர் மேல ரொம்ப நம்பிக்கை பய நல்லா படிக்கறவன்னு! அப்படித்தான் அவரும் நடந்துக்கிட்டாரு - என்னைய மாதிரியா...?
யப்போவ் எனக்கும் ஒரு செட் சட்டை பேண்டு..? (அப்பா:- ம்ஹுக்கும் நீ படிச்சு கிழிக்கிற கிழிக்கு உனக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல் - இப்படித்தான் பதில் வந்திருக்கும்ன்னு நினைச்சீங்கன்னா குட்..! நீங்க நல்லாவே என்னிய புரிஞ்சு வைச்சிருக்கீங்கோ!)
சாயங்கால டூயுசன் முடிந்து வந்து பிரதர் சொன்ன பிளானை கேட்டு அதிர்ச்சி - பயபுள்ளை என்னியவிட பக்காவா பிளான் பண்ணி சக்சஸ் பண்ணியிருக்குன்னு ஒரு ஆச்சர்யம்கூட! அதே நேரத்துல நாமளும் வுடப்புடாது டிரைப்பண்ணனும்ன்னு ஒரு ஆர்வக்கோளாறு வேற...!
ஆனா நான் வைச்ச கோரிக்கை ஏற்கப்படல காரணம் - கருப்புக்கு கருப்பு மேட்சிங்க், சேராதுன்னு வெளக்கம் வேற!
இந்த படம் அந்த வருசம் நவம்பர் 91ல ரீலிஸ் ஆச்சு! அதுல தலைவரு வரும் சீன்ல ஒரு காஸ்ட்யூம் கருப்பு சட்டை, காக்கி பேண்ட் - முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு! அப்புறம் என்ன கிட்டதட்ட ஒரு நாலு மாசம் இந்த காஸ்ட்யூம்லதான் வலம் வந்தாரு !
2.உனக்கு...?
ப்ச் எனக்கு கருப்பு சட்டை கிடைக்கல பேண்ட்தான் கிடைச்சுது!
அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் கருப்புக்கு கருப்பு மேட்சிங் ஆகவே ஆகாதுண்ணு!
******************************************
இன்னும் சில சேதிகள் அப்ப நடந்து இன்னும் நினைப்புல இருக்குறது!
சட்டைக்கு பின் பக்கம் ஃபிளிட் வைச்சுக்கிற ஸ்டைலும் இண்ட்ரோ ஆச்சு! (தலைவரு திரும்பி நின்னு பேசும்போது கருப்பு சட்டை பின்பக்கம் கூட லேசா தெரியும் பாருங்க!)
அப்போதுதான் பனியன்களில் ( தமிழ்ல டி-ஷர்ட்!) நடிகர்களின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யும் பழக்கமும் அப்போதுதான் அறிமுகமானது! அப்படி ஒரு பனியன் எடுக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே! ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு! அதை இன்னொரு கொசுவர்த்தியில கண்டினியூ பண்ணுறேன்! இப்ப நீங்க எஸ்ஸாகிக்கலாம்!
1984ல் வெளியான, "அன்புள்ள ரஜினிகாந்த்"முதன் முதலில் நடிகரின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.
ஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை!
பெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் "அன்னை ஒர் ஆலயம்" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுன்னுகூட சொல்லலாம்)
இக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்! ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!
பாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.
லதா ரஜினிகாந்தின் குரலில் கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...!
கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை
சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை! அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை!
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா! ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா!
ஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே!
கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே!
கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை! கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை!
ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்.. ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்...
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வம! என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்!
கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை!
ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!
ராகதேவன் இளையராஜாவின் இனிய பிறந்த நாளில், வணங்கி அவர் இசையில் மகிழ்கிறோம்!
நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!
வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!
காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
நீண்ட காலமாக நீங்கள் என்னைச் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டீர்கள்; அதே போல நானும் உங்களைச் சந்திக்க ஆசைப்பட் டேன். இதுதான் நோக்கம். ஒருமுறை சச்சிதானந்த சுவாமிகள் தன்னுடைய சிஷ்யர்களிடம் "உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள்; அதற்கு நான் பதில் அளிக்கிறேன்' என்றார் அதுதான் இப்போது நடக்கிறது
முதலில் ராகவேந்திரரை வழிபட்டீர்கள்; அதன்பிறகு அருணாசலேஸ்வரர்; பிறகு பாபாஜி என்கிறீர்கள். அடிப்படையில் உங்களுக்கே தெளிவான பார்வை இல்லையா?
நமது பாடத்திட்டத்திலேயே கூட வரலாறு, புவியியல், கணிதம் என பல படிப்புகள் உள்ளன. அவை நமது அறிவை விருத்தி செய்கின்றன. அதுபோலத்தான் தேடல் நிறைந்த உள் ளம் நமது ஆன்ம ஞானத்தை விருத்தி செய்கி றது. தேடல் உள்ளவர்கள் பார்வையில் இது ஒன்றும் தவறு கிடையாது
உங்களைக் குழப்பவாதி என எழுதுவதையும் பேசுவதையும் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அதற்கு ஏன் நீங்கள் இடம்கொடுக்கிறீர்கள்?
பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்டால் எப்படி?...
சில நேரங்களில் நான் செய்வது கூட அப்படித் தான் இருக்கிறது. இது செய்தால் இது நடக்கும் என யூகித்துச் சொல்வதில்லை!
நான் நினைப்பது சரி எனும்போது பேசிவிடுகிறேன். அதை வேறு கோணத்தில் பார்ப்பவர்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. சில செய்திகளைப் படிக்கும் போது சிரிப்பாக இருக்கும். சில செய்திகள் சிந்திக்க வைக்கும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். என்னுடைய சுயநலத்துக்காக நான் யாரையும் குழப்பியதில்லை. மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து சில நேரத்தில் கெட்ட பெயர் எடுத்துள்ளேன். இப்போது அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். நானும் அமைதியாக இருக்கிறேன். எல்லாம் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வதுதான்
ஒகேனக்கல் விவகாரத்தில் வருத்தம்; மன்னிப்பு? எது உண்மை?
நான் முன்னால் போக வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் பின்னாலேயே போக வேண்டும் என்கிறீர்கள். விஷயம் முடிந்துவிட்டது. அதை விட்டுவிடுங்கள். அதிலேயே இருந்தால் எப்படி..? ஒகேனக்கல் பிரச்னை சினிமா சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால் கர்நாடகத்தைப் பொருத் தவரை எந்தப் பிரச்னை என்றாலும் அங்கு முதலில் தாக்குலுக்கு உள்ளாவது தியேட்டர்கள் தான். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகத்தான் அந்த மேடையில் அமர்ந்தேன். பலர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்கள். நானும் மனிதன்தானே!... பேசிவிட்டேன். ஒரு பிரச்னை ஆரம்பித்தால் உடனே முடியவேண்டும். இழுத்தடிக்கக் கூடாது. அதனால் பொது நலத்திற்காக, மற்றவர்கள் நலனுக்காக நான் வருத்தம் தெரிவித்தேன்!
நீண்ட காலமாக மன்றப் பணிகள் செய்து வரும் ரசிகர்களைப் பற்றி..?
"ரஜினி ரசிகர்கள்' என்பவர்களைப் பற்றி நான் பேச வேண்டிய அவசியம் கிடையாது நாட்டு மக்களுக்கே தெரியும். இதை மற்றவர்களிடம் கேளுங்கள்
ரசிகர்களுக்கென ஓர் அங்கீகாரம் கிடைக்குமா?
ரஜினி ரசிகர் என்றால் சமுதாயத்தில் ஓர் அங்கீகாரம் கிடைக்கும்படி நிச்சயம் செய்வேன் எதிர்காலத் திட்டம்; அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விகளுக்கு சிறிது மெüனம் காத்து ரஜினிகாந்த் பேசியதாவது:
மீண்டும் மீண்டும் நான் சொல்வது இதுதான்..முதலில் உங்கள் குடும்பத்தைக் கவனியுங்கள்; அடுத்து நான்... அடுத்ததுதான் அரசியல். நான் என் மனைவிக்கு நல்ல கணவனாக, என் குழந்தை களுக்கு நல்ல தகப்பனாக, தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடிகனாக என் கடமையைச் செய்து வருகி றேன். அதுபோல நீங்களும் முதலில் உங்கள் கட மையைச் சரியாகச் செய்துவிடுங்கள் அரசியலைப் பொருத்தவரை திறமை, புத்திசா லித்தனம், உழைப்பு இருந்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அதற்கேற்ற சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம் அமையவேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கியம். 1996-ம் ஆண்டு இருந்த நிலை வேறு. அன்று பதவிக்குரிய சூழ்நிலை இருந்தது.
நமக்கு ஒரு விஷயத்தில் திறமையும் அனுபவமும் இருக்கவேண்டும். தெரியாமல் ஒரு விஷயத்தில் இறங்கக்கூடாது. என் சிறு வயதில் பணக் கஷ் டத்தில் இருந்தபோதுகூட சினிமா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக முறைப்படி 2 ஆண்டுகள் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன். அதன்பிறகுதான் நடிக்க வந்தேன். தெரியாத ஒரு விஷயத்தைச் செய்ய மாட்டேன்.
அரசியலுக்கு வருமாறு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. பலவந்தமாக திருமணம் செய்து வைத்தால் அந்த வாழ்க்கை இனிமையாகவா இருக்கும்? இரண்டு தரப்பிலும் ஈடுபாடு இருக்க வேண்டும். ஒரு தரப்பில் மட்டும் வற்புறுத்தல் இருக்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை எல்லாமே ஆண்டவன்தான். அங்கிருந்து உத்தரவு வந்தால் நாளையே பல விஷயங்கள் நடக்கலாம்
ஆனால் அரசியலில் ஈடுபடுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. தற்போது பல இடங்களில் நிலைமை சரியில்லை. இங்கு மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் நிலைமை சரியில்லை. நாட்டில் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வாருங்கள்.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் புதைக்கப்படவில்லை அவர்கள் அங்கே விதைக்கப்படுகின்றனர். இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறீலங்காப் படையினர் ஆண்மையற்றவர்கள்.
ஈழத் தமிழர்கள் பேசும் தமிழ் மொழி இனிமையானது. அவர்கள் திட்டினாலு் கூட இனிமையாகவே இருக்கும். அவர்கள் சிறீலங்கா அரசின் யுத்த முன்னெடுப்புகளால் புலம்பெயர்ந்து உலகப் பந்து முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். சம உரிமைக்காகப் போராடும் அவர்கள் மீதான யுத்தத்தை சிறீலங்கா அரசு உடன் நிறுத்த வேண்டும்.
நான் சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகின்றேன். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொன்று குவித்து வருகிறீர்கள். ஆனால் அவர்களை உங்களால் அழிக்க முடியவில்லையே ஏன்? நீங்கள் ஆண்மையற்றவர்கள் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.
சாமானிய சனங்களின் வேதனை கலந்த அந்த மூச்சுக் காற்று பரவிக் கிடக்கும் எந்த நாடும் உருப்படாது. அவர்களின் சாபம் யாரையும் சும்மா விடாது. பெண்கள்இ குழந்தைகளின் உதிரம் அந்த மண்ணில் கொட்டுகிறது. உங்கள் பூமியில் தமிழர்களைக் கொன்று புதைக்கவில்லை. விதைக்கிறீர்கள். அந்த விதை உங்களை வாழ விடாது.
‘நான்' ‘எனது' என்ற அகங்காரத்தை விட்டால் உங்களுக்குத்தான் நல்லது. தங்கள் நாட்டை தமிழர்கள் அடைந்தே தீருவார்கள். பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்க வேண்டும். எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்
வாரந்திர வியாழன் பிரச்சனைகள் பனி விலகிய பாதையாக்கி தந்து மதியம் முதல் ஷோவுக்கு எல்லாம் ரூட்டும் கிளியராக்கி கொடுத்த என் நண்பர்களுக்கு முதல் நன்றி!
அட...! படமே நட்புக்கு நன்றி கூறும் நண்பர்களின் கதைதாங்க!
மெளனமாய் ரஜினியை அவரின் குணத்தினை விளம்பரமின்றி சொல்ல வந்த இன்னுமொரு படம்!
விளம்பரமே இல்லையே...? என்று நினைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு, இனி விளம்பரமே தேவைப்படாது!
அரசியலுக்கு வரேன்னு சொல்லமாட்டிக்கிறீங்க வர்லைன்னும் சொல்லமாட்டிக்கிறீங்க அப்புறம் என்ன ம** அதை பத்தி சொல்றீங்க? (இந்த கேள்வி அதிகம் தமிழ்பதிவுகளில் கூட உலாவியதும் உண்டு!) அந்த கேள்விக்கு, ரஜினியின் பதில் சும்மா ”நச்”ன்னு இருக்கு!
இளமையான ரஜினி !
கலக்கல் காமெடிகள் !
போற்றுதலுக்குரிய நட்பு!
ரஜினிக்காக அமைக்கப்படாத கதைக்களம் ஆனால், ரஜினிதான் படத்தின் நாடிதுடிப்பாய்..!
டிரெயிலர் வெளியாகிய போது பெரிய எதிர்பார்ப்புக்கள் இல்லையென்றாலும் கூட, ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு ஆக்ஷன் படம் என்று அவதானிக்க முடிந்திருந்தது!
ஆனால் மிகப்பெரியதொரு மெகா ஹிட் மேட்டராக மாறும் என்று அன்று எதிர்பார்க்கவில்லை!
எப்போது படத்தை பார்த்தாலும், முதல் தடவை பார்ப்பதை போன்றே,
பீட் குறையாத பாட்ஷா!
மற்றுமொரு பிரபலமான பஞ்ச்,
"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"
எல்லோராலும் பேசப்பட்ட,பேசப்படுகின்ற பஞ்ச் ஆக மாறிய வரிகள்!
இத்தனைக்கும் பலரது வீடுகளிலும் அன்றும் இன்றும் எப்போதுமே பேசப்படுக்கின்ற வரிகள்தான் இவை, பெரியவர்கள் சிறியவர்களிடம்,"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா நூறு வாட்டியா சொல்லணும்" என்று அறிவுரையாகவோ அல்லது அதட்டலாகவே பயன் படுத்தும் வார்த்தைதான்!
எனக்கு தெரிந்து, பழைய தஞ்சை மாவட்டத்தில்(காவிரி டெல்டா) பல இடங்களிலும், இன்னும் கூட பசங்களை கண்டிக்க இந்த வரிகளை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்! ( நல்லவேளை யாரும் காப்பிரைட் கேட்டு அன்று கோர்ட்டில் கேஸ் போடவில்லை :)))