சைக்கிள் ரிப்பேரிங்


சைக்கிள் ரிப்பேரிங் ஷாப் பேரெல்லாம் கூட முடிவெடுத்தாச்சு ஆனா படிச்ச டிப்ளமோ படிப்புக்கு இது கொஞ்சம் கவுரதையா இல்லியேடான்னு நட்பு வட்டத்தில நாசூக்கா சொன்ன காரணத்திற்காக வாழ்க்கை பாதையினை தடம் மாத்திக்கிட்டேன்னு கூட சொல்லாம்! அத்தனை ஆர்வம் சைக்கிள் ஓட்டுறதுலயும் அது ரிப்பேர் சரி பண்ணித்தாரேன்ங்கற பேர்ல அக்குவேறு ஆணிவேறா கழட்டிப்போட்டு திரும்ப ஒண்ணு சேக்குறது!

வீல் கழட்ட ரெண்டு ஸ்பானரு டயர்லேர்ந்து ட்யூப்பை கழட்ட ரெண்டு லிவர், ஒரு பஞ்சர் ஒட்டுற ரெட் பேஸ்ட்டு அப்புறம் கொஞ்சமா தேவைப்படறது ஆனா மீட்டர்கணக்குல வாங்கி வைச்சிருக்கிற வால்ட்யூப், காத்தடிக்கிற பம்பு இதெல்லாம் இருந்தால் போதும் சைக்கிள் கடை வைச்சி பொழச்சிகிடலாம்ன்னு மனசுக்குள்ள ரொம்பகாலமா ஒரு நினைப்பு! ஒட்டத்தெரியாம பஞ்சர் ஒட்டி திரும்ப திரும்ப கடைப்பக்கம் வரவழைச்ச செல்வமும் கூட தொழில் சொல்லிக்காமிச்ச குருன்னும் சொல்லலாம்!

சனி ஞாயிறு ஆச்சுன்னா சைக்கிளுக்கும் ஹாலிடே மூட் வந்து பஞ்சராகியோ அல்லது செயின் கட் ஆகியோ போகும்போதும் சரி,சைக்கிளை தள்ளிக்கிட்டு சைக்கிள் ஷாப் போனா அங்கே செல்வம் சார் சைக்கிளே இல்லாத கடையில எதோ ஒரு இத்துபோன ட்யூப்க்கு பஞ்சர் பார்த்துகிட்டு வெயிட்டீஸ் விடறதும் திரும்ப வீட்டுக்கு வந்துட்டு போறமாதிரியான தற்கால சூழல்கள் அப்போ இல்லாத நேரக்கொடுமையும் காத்திருக்கவைச்சு கைத்தொழிலாக சைக்கிள் ரிப்பேரிங்க் கத்துகிடலாம்ன்னு நம்பிக்கையை கொண்டு வந்துச்சு!

அரைகுறையா கத்துகிட்ட நுட்பத்தை வைச்சு வூட்ல இருந்த நாலு சைக்கிள் மேல நம்பிகையும் வைச்சு வீட்லயே தொழில ஆரம்பிச்சு பஞ்சர் பாக்குறது உடைஞ்ச பெடலுக்கு கார்ட்டர் போல்ட் போட்டு அட்ஜஸ்ட் செஞ்சுடறது, செயின் வெட்டிப்போடுதல் அப்டி இப்டின்னு ஓவராயிலிங் வரைக்கும் டெவலப்பானதும், நாமளும் கூடிய சீக்கிரமே கடையை ஓபன் செஞ்சுடலாம்டான்னு நினைச்சுகிட்டிருந்தப்பவே,நம்ம சைக்கிள் கடை செல்வம் கடையை ஊத்தி மூடிட்டு கட்சியில போயி சேர்ந்து வீதி பிரதிநிதியானாதும் நமக்கு யாரோ பெரிய டார்ச் லைட் அடிச்சு ரூட் காமிக்கிறாங்கன்னு நினைப்பு ! எல்லாம் ஒகே ஆனா ஒரே ஒரு சிக்கல் அதுவும் குட்டியூண்டு! கழட்டின வீல்’ஐ திரும்ப மாட்டுறச்ச டென்ஷன் போல்ட் கரீக்டா பொருத்துறது- உலகமகா கஷ்டமான வேலைன்னு நினைக்க ஆரம்பிச்சு தொழில் மேல கொஞ்சமா நம்பிக்கை இழப்பினை ஏற்படுத்திடுச்சு. நாள பின்ன கஷ்டமர் உக்காந்திருக்கறச்ச இப்டியாச்சுன்னா காறியில்ல துப்புவான்னு கனவு வேற! சைக்கிள் கடை வைச்சவனெல்லாம் சாதிச்சதா ஹிஸ்டரியில்ல மூடிட்டு போகவேண்டியதுதான்னு ரைமிங்கா அட்வைசெல்லாம் பலமா இருந்துச்சு ! பிறகென்ன செய்றது அட்வைசு கேட்டு நடந்துதானே ஆகணும் !

நடந்தேன் !

நேத்து ஆபிஸ்ல ஒரு சின்ன கிட் காமிச்சு ஆபிஸ் பாய் சொல்றாரு சைக்கிள் ரிப்பேர் கிட்’டாம் பஞ்சர் பாக்குறதுக்கான அம்புட்டு சங்கதியும் இருக்காமாம் ஆனா சைக்கிளை கடைக்கு எடுத்துகிட்டு போயி செய்றதுதான் கஷ்டமாம்! புலம்பிக்கிட்டிருந்தாரு நான் என்னோட கதையெல்லாம் அவர்கிட்டயா சொல்லமுடியும் ! அதான் இங்கே புலம்பிட்டேன் #சாரி

டிஸ்கி:- எ.பிக்கள் பற்றிய தகவல்கள் வரவேற்கப்படுகின்றன

சீர்காழி கோவிந்தராஜன்

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்;
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை;
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன,
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே!

என்று கம்பீரமாக ஆரம்பமாகும் சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் ஏதோ ஈர்ப்பு இளம் வயதிலிருந்தே தொடங்கிவிட்டது!


Photo Sharing and Video Hosting at Photobucket

காலை 5.00 மணிக்கு ஆரம்பிக்கும் எங்கள் வீட்டு டேப் ரெக்காடரின் அபிராமி அந்தாதி, அந்த தெருவுக்கே பக்தி மணத்தை கமழச்செய்து கொண்டு செல்லும்! அந்த தெரிவில் சுமார் 50 வீடுகளுக்கு மேல் இருந்தாலும், ஒருவர் கூட வந்து இந்த விஷயத்தை குறையாகவோ அல்லது தொல்லையாகவோ கூறியது கிடையாது, என்பது ஆச்சர்யமான விஷயம்தான்!

இத்தனைக்கும் பாடல் போடுவதுதான் அப்பாவுக்கு வேலை,டேப் பாட ஆரம்பித்ததும்,தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு இவர் கிளம்பிவிடுவார் காளியாக்குடியை நோக்கி.!

அந்த நாள் தொடங்கி இன்று வரை அவ்வப்போது சீர்காழியின் குரலில் லயித்திருப்பது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகிவிட்டது!

எத்தனையோ பேர் வந்தாலும், எத்தனையோ சாமிபாடல்கள் பாடினனலும் இன்றும் கோவில்களில் சீர்காழியின் பழைய பக்தி பாடல்கள்தான் ஒலிக்கின்றன! (மார்கழியில் நீங்க செக் பண்ணி பார்த்துக்கலம்!)

லண்டனில் முருகன் கோவில் விழா கச்சேரியில் அவருக்கு அளித்த வரவேற்பு , அவர் பாடிய பாடல்கள், கண்ணதாசன் பிரத்யோகமாக எழுதிய,

உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த – தமிழன்
உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த
கலையில் சிறந்த இசைக்கலை நடத்த –
நானும் கடலைக் கடந்து வந்தேன் தமிழ் வளர்க்க...

கரகோஷத்தின் பின்ணணியில் இப்பாடலும், ஆங்கிலத்தில் முருகனை துதித்து பாடிய பாடலும், எப்போது கேட்டாலும் உள்ளத்தில் மகிழ்ச்சியை தூவிச்செல்லும்!

வருடந்தோறும் நடக்கும் தருமையாதீன குருபூஜை விழாவின் ஹைலைட்டான விஷயமே சீர்காழி கச்சேரிதான்!

சுற்றுவட்டாரத்திலிருந்து மதியமே வந்த மக்கள், தருமபுர வீதி ஒரங்களில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் போது,சாலையில் புழுதியை கிளப்பிக்கொண்டு வரும் அந்த வெள்ளை அம்பாசிடார்!

சீர்காழி வந்துட்டாரு....!

காரை துரத்திக்கொண்டு, அவரை காண ஒடும், மக்கள் இன்னும் என் கண் முன்னால நினைவுகளில் நிழலாடுகிறார்கள்..!

தெய்வத்தமிழ் மன்றத்தில் தொடங்கும்,6.00 மணிக்கு தொடங்கும் கச்சேரி, 10.00 மணியை தாண்டியும் சென்றுகொண்டிருக்கும்.

இடையில் நேயர் விருப்பம் போல சீட்டுக்களில் வரும் பாடல்களும் உடனடியாக சீர்காழியின் குரலில் ஒலிக்கத்தொடங்கிவிடும்!

சின்ன்ஞ்சிறு பெண்போலே. .
வாக்குதரும் நல்வாழ்வுதரும்
திருச்செந்தூரில் கடலோரத்தில் ...
மயிலாக நான் மாறவேண்டும்
லார்டு முருகா லண்டன் முருகா.!

போன்ற பாடல்கள் வருஷா வருஷம் பாடினாலும் இந்த பாடல்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இன்று அவர் வாரிசு சிவசிதம்பரம் பாடும்போது கூட...!


எத்தனையோ பாடகர்கள் பக்தி பாடல்கள் பாடிக்கொண்டிருந்தாலும், இவரின் குரலில் உள்ள ஈர்ப்பினை இது வரை எவரும் தரவில்லை என்பதற்கு இன்னும கோவில்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் இவரின் பாடல்களே சாட்சி!

நினைவு நாளில்..




மார்ச்-23 நினைவுநாள்

தண்ணீர் - மார்ச் - 22