Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்!

டிஸ்கி:- @லேபிள்

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே

டெய்லி உன் முன் நின்று
கண் விழித்த நாட்கள் தான்
இத்தனை ஆண்டுகளாய்
தரித்திரமாய் இருக்கிறது

பார்வையாலே சில நிமிடம்
தலை சீவிக்கொண்டே சில நிமிடம்
பவுடர் போட்டப்படியே சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
முகத்தில் பேர்& லவ்லி அப்பிய
அழகோடு சில நிமிடம்

எது கருப்பு எது கலர்
எனக்கு எதுவுமே தோன்றவில்லை
அது இரவா அது பகலா
அதை பற்றி ஐ டோண்ட் கேர்

எப்பொழுது நின்றேன் எப்பொழுது சென்றேன்
ஒரு நாளும் புலப்படவில்லை
எப்பொழுதுமே நின்றேன்
இதுவரைக்கும் முடியவில்லை

தலை சீவினேன்
அழகு என்று ஜொள்ளினாய்
ஆடை அணிந்தேன்
சூப்பர் என்று சுட்டிக்காட்டினாய்

கண்ட கண்ட திருக்கோலம்
கண்டிப்பாக காண்பித்தாலும்
கடைசியிலே காணபித்த அழகு
கண்ணில் இன்னும் நிக்கிது!நிக்கிது

உன் முன்னே நான் நின்ற
ஒவ்வொரு மணித்துளியும்
எல்லா போட்டோக்களிலும்
ஜொலிக்கின்றது கண்ணாடியே


டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

(என்ன சத்தம்ன்னா அதான் கண்ணாடி உடைஞ்சுப்போச்சுல்ல இன்னும் என்ன வேடிக்கை வேண்டியிருக்குது)

கொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம்


ஒருத்தனுக்கு ஒரு லவ்வர்தான் இருக்கணும்!
நிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில
எழுந்து நிக்க வேண்டிய நேரத்தில
விழுந்துடுவ என்று நான் போட்ட மொக்கையை நம்பி
நீ
காலேஜ்லேயே விட்டு வந்த
நம்ம தெரு ஃபிகருடனான காதல்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்...!

[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]

டிஸ்கி:- இங்கு படிச்சதால் கிடைச்சது

எழு ஞாயிறு!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


இரண்டு அடியில் குறள் வெண்பா கொடுத்துச்சென்ற தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு நிகர் எவருமிலர்.


இரண்டு அடியினை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை நேரம் பேச முடியும் என்று உரைக்கும் இவரைப்போல எவரும் உளரோ...?


நீங்கள்...? தொடர்ந்து செல்லுங்கள் - குரலால் குறள் சொல்லுங்கள்

ஒவ்வொரு சொல்லிலும் துடிககுது புஜம்
நீங்கள் ஜெயிப்பது நிஜம் !

LOVE பண்ண...!

பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!

பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!

இங்க நாம லவ்வு டாபிக் மட்டும் எடுத்துப்போம்! அதுல முதலில் என்ன மாதிரியான ரிஸ்க்குகள் இருக்குன்னு கண்டுபிடிக்கணும்!

ஃபிகருக்கு அண்ணன் தம்பிகள் அல்லது சித்தப்பா பெரியப்பா யாராச்சும் இருக்காங்களா? இல்ல ஃபிகரு வீட்லயோ சும்மா ரெண்டு தடிமாடுகளை தீனி போட்டு வளக்கிறாங்களான்னும் கொஞ்சம் பேக் கிரவுண்டு பார்த்து வைச்சுக்கணும்! பார்ட்டீ எப்ப வெளியெ வருது எப்ப உள்ளே போகுதுன்னு டைமிங்க் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பயமக்களோட டைமிங்க தெரிஞ்சுவைச்சுக்கணும்!

(இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு ஒரு டைரக்கடரு! அது என்னமோ சுப்ரமணியபுரமோ காஞ்சிபுரமோ சரியா தெரியலை! சரி அதை விடுங்க!)

இப்ப நாம நமக்கு வரப்போற ரிஸ்குகளை பத்தி கொஞ்சம் மேட்டர் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல அதையெல்லாம் நம்ம ப்ரெண்ட்ஸ்களோடு ஒண்ணா சேர்ந்து உக்காந்து கலைச்சுப்போட்டு கிளாரிபிகேஷன் கேட்டுக்கிட்டு அவுங்கவுங்க அனுபவத்தையெல்லாம் நல்லா உன்னிப்பா கேட்டு தெரிஞ்சுக்கணும்!

இதுதான் ரொம்ப முக்கியம் நாளைக்கு உயிருக்கோ அல்லது உடம்புக்கோ ஆபத்துன்னா எப்படி கால்ல விழுந்து எஸ்ஸாகறதுங்கறதுலேர்ந்து கையில கட்டையை எடுத்துக்கிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு வீண் சண்டைக்கு போறது வரைக்கும் இங்கதான் தெரிஞ்சுக்க முடியும்!

நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! (மீ எஸ்கேப்பூ!)

இனி எல்லாம் சுகமேன்னு ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும்த்தான் இந்த ரிஸ்கு எல்லாம் ஆனா இங்க நான் சொன்ன கொஞ்ச கொஞ்சம் ரிஸ்குகள் எல்லாமே ஜாலியா யூத் ஸ்டைல்ல நல்லா மொரு மொருன்னு ரஸ்க் சாப்பிடற மாதிரியே இருக்கும்! ( மொத்து விழுந்தாலும் வாங்கிக்கிட்டு அப்படியே ஃபிகர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சா....! ரைட்டு .கே!)

இல்ல எனக்கு ரிஸ்க்கு எடுக்கவே பிடிக்காது! பயம் அல்லது அதை எடுக்காம நான் வாழ்ப்போறேன்னு சொன்னா சிங்கிள் லைன்ல ரிஸ்க் எடுக்காம வாழற வாழ்க்கையினை பத்தியும் சொல்லிடறேன்!

வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”

இரு கைகளை கொண்டு உழைத்து வாழ வேண்டும் அதுக்கு காரணமாக அமைவது நீங்க எடுக்கும் ரிஸ்க்குகள்தான் ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!




பத்தாவது முடிச்ச கையோட பாலிடெக்னிக்ல சேர்ந்த புதுசு முதன் முதலா பொம்பளை புள்ளைங்க கூட சேர்ந்து படிக்கற கிளாசுல உக்கார இடம் வேற கிடைச்சிருந்தாலும் மனசு மகிழ்ச்சியா இல்ல காரணம் அட்மிஷன் நான் நினைச்ச காலேஜ்ல கிடைக்கலன்னுதான்! [சரி அந்த கதையை இப்ப ரொம்ப விரிவா சொல்லமுடியாது!]

இப்ப டைட்டிலுக்கு வருவோம்! முதல் வருசம் முழுசா கணக்கு வாத்தியார்க்கிட்டயும், கெமிஸ்ட்ரி & டிராயிங்க் வாத்தியார்ங்ககிட்டயும் மல்லுகட்டி படிச்சு ஒரு வழியா ரெண்டாவது வருசம் ஒதுக்கப்பட்ட டிபார்மெண்ட்ல வந்து உக்காந்தாச்சு! முதல் வருசமாச்சும் ஒரளவுக்கு 60:40 விகிதத்தில பெண்களும் ஆண்களும் இருந்த வகுப்பு! ரெண்டாவது வருசம் எங்களோட பழமையான டிபார்மெண்ட்டுக்கு முதல் நாள் வந்த விகிதாச்சாரம் கூட அதே ரேஞ்சுதான் ஆனா ஒரு வாரத்துல பெரும் கும்பலே பொட்டி தட்டுற கிளாசுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாங்க எங்க கிளாஸ்ல : 24 பெ:5 ஆகிப்போச்சு!

ஒரு வழியா தட்டு தடுமாறி,கான்கீரிட் சும்மா அளந்து அளந்து கொட்டி,ஹைட்ராலிக்ஸ் லேப்ல சாக்கடை தண்ணீர்க்கு சகலமும் கண்டுபுடிச்சு இது நல்ல தண்ணி கிடையாது குடிக்கப்புடாதுன்னு நிறையா தெரிஞ்சுக்கிட்டு மூணாவது வருசம் வந்து சேர்ந்தோம்!

அந்த நேரத்துல டிபார்மெண்ட் ஹெட் ரிடையர்ட்மெண்ட் வந்து ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து பிரிவுபசார விழா செய்யுறதா ப்ளான் பண்ணி பயபுள்ளைங்க எவனாச்சும் அவர பத்தி நாலு வார்த்தை நல்லவிதமா பேசணும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க! எல்லாருக்கும் முன்னாடி பேசுறதுன்னா பசங்க பயங்கர டெரர் ஆகிட்டாங்க!அது மட்டுமில்ல அந்த பைவ் ஸ்டார்களில் ஒரு ஸ்டாரை கரீக்ட் செய்யவும் பயங்கர போட்டி வேற..! ஸோ எதாச்சும் செஞ்சு அசிங்கப்பட்டுக்ககூடாதுன்னு ஒரு நல்ல எண்ணமும் !

நான் மட்டும் தைரியமா, என்னோட ப்ரெண்ட்டுக்கிட்ட கவலைப்படாத நண்பா டோண்ட் ஓர்ரி நான் ஸ்கிரிப்ட் எழுதி தாரேன் நீ மேடைக்கு போற, நிக்கிற, சரசரன்னு பேப்பர்ல இருக்கிறதை படிச்சுட்டு வர்ற; டீல் .கேவான்னு கேட்டு .கே வாங்கிட்டேன்! அவனும் எதோ ஒரு நினைப்புல .கேவும் சொல்லிட்டான்!

சரி நாம என்ன எழுதறதுன்னு யோசிச்சு யோசிச்சு ம்ஹும் இது சரி வராது வழக்கமா அரசியல்வாதிங்க மாதிரி ஆரம்பிச்சுடவேண்டியதுதான்ன்னு இங்கு வீற்றிருக்கும் துறை தலைவரே,துறை ஆசிரியர்களே, மாணவ மாணவிகளேன்னு சொல்லி முடிச்சப்பிறகு என்னா சொல்றதுன்னு ரோலிங்க் ஆக ஆரம்பிச்சுடுச்சு!

ரிடையர்ட்மெண்ட் ஆகற வாத்தியார பத்தி எதாச்சும் சொல்லணும்ல? யோசிச்சா ஒண்ணும் வரமாட்டிக்கிது,அப்படியே வந்தாலும் அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது! யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு! நாலு வரிதான் நாலே வரிதான் டக்கரா சூட் ஆகிடுச்சு!(எந்த படம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்,
விண்ணை நீலம் பிரிந்தாலும்,
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் அப்படின்னு கொண்டு போய்ட்டு, நீங்க சொல்லிக்கொடுத்த படிப்பை மறக்க மாட்டோம், அப்புறம் காலேஜை மறக்கமாட்டோம், இப்படியே ஒரு கண்ட்ரோலே இல்லாம போய்க்கிட்டே இருக்க, ஒருவழியா பதட்டத்தை குறைச்சு,அத்தோட முடிச்சுகிட்டு,பேப்பரை நாலா மடிச்சு கையில வைச்சுக்கிட்டா தெரியாதுன்னு ஐடியாவும் கொடுத்தாச்சு!

பங்ஷன் அன்னிக்கு பயபுள்ள சொன்னமாதிரியே எல்லாமும் செஞ்சுடுச்சு,அதுமட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா நாலஞ்சு பிட்டை போட்டு பேசுனதுமில்லாம, ஒரு இடத்துல நிக்காம ,லெப்ட்ல ஒரு ரெண்டு அடி ரைட்டுல ஒரு ரெண்டு அடி பின்னாடி முன்னாடின்னு ஒரு வட்ட ஆட்டமே போட்டுட்டான்!அதை பார்த்த பைவ் ஸ்டார்ஸ் மட்டுமில்ல எல்லாருக்குமே ஒரு சந்தோஷ புன்னகை பூக்க....!

நண்பா நல்லா பேசுனேனாடா!

.கேடா நல்லா பேசுன, அதை விட நீ டான்ஸ் ஆடிக்கிட்டே பேசுனதுதான் கலக்கல்ன்னு பெருமையா சொல்ல..

ஆமாண்டா பைவ் ஸ்டார்ஸும் பாராட்டுனாங்க! தாங்க்ஸ்டா அந்த அஞ்சுல ஒண்ணு என்கிட்ட வந்து நல்லா பேசுனீங்க ஆனா ஆட்டத்தை கொறைங்கன்னு சொல்லிட்டு போனாங்கடா, நண்பா நான் இன்னியிலேர்ந்து அவங்களை லவ் பண்றேண்டா....!?

நீயுமாடா....?!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கிரியேடிவிட்டி

நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை ஒரு நிமிசம் உத்து பாக்கணும்!

- தீப்பொறி திருமுகம்

*******************************************************


ஜியாலஜி சப்ஜெக்ட்ல அசைன்மெண்ட் வைக்க சொன்னாங்க! ச்சும்மா சாதாரணமா காப்பி அடிச்சு கொண்டாந்து குப்பை மாதிரி போடவேண்டாம் எதாச்சும் கிரியேடிவா செஞ்சுட்டு வாங்கடா ராசாக்களேன்னு சொன்னாரு எங்க ஜியாலஜி லெக்சரர்!

முதன் முதலா கிரியேடிவ்வா செய்ய நினைச்சு செஞ்சது! - அப்ப டெக்னிகல் டிராயிங்க் வாத்தியாரை மனசுல நினைச்சுக்கிட்டு பென்சிலும் ஸ்கேலும் வைச்சுக்கிட்டு, பாஸ்ட் ஸ்ட்ரோக்ல ஃபாண்ட்ஸ் வரைஞ்சுட்டு கலர் அடிச்சு கலக்கலா கொடுத்தோமாக்கும்!


பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்!

டிஸ்கி:-
தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு! காப்பி அடிக்கிறது கூட ஒரே மாதிரியா இல்லாம பல வரிகளை பல இடங்களில் மாத்திப்போட்டு லெக்சரர் ஏமாத்துறதா நினைச்சு ஃபீல் பண்ணிய காலங்கள் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! :)

Fig 'o' Fig

டிஸ்கி:-

Fish 'o ' Fish!


படத்தில்
மல்லு ஃபிகர்களை பார்த்ததும், சிஸ்டத்தில் நாமும் ஃபிகர்களை வைத்துக்கொள்ளலாம் என்றார் பெரியபாண்டி!

பாமாவை
பார்த்தால், 'பாமாவை டெஸ்க்டாப்பில் வச்சுக்கலாம்', 'பாவணாவை வெளியே போகச்சொல்லு', 'மீரா நந்தனையும் டெஸ்க்டாப்பில் வைச்சுகலாமென்றுஎந்த ஃபிகரையாவது டெஸ்க்டாப்பில் வைக்கவேண்டுமென்ற மேனியாவந்துவிட்டிருக்கிறது!!

நானே
போட்டோஷாப்பில் மல்லு ஃபிகர்களை கொலோஜ் செய்து தாரேன் என்று அப்போதைக்கு அவரது கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக் கேட்டு நடக்கும் செல்லபிகராக இருக்க 21 வயதாக வேண்டும்,பெரியபாண்டி )

எப்படி கொலோஜ் செய்ய போகிறேனென்று சொன்னேன் வித விதமான பாமா போட்டோக்களை ஒரே தேர்வு செய்து, இன்னும் etc... etc,,, கொண்டு கொலோஜ் செய்ததில் பாமா டெஸ்க்டாப்பில் சிரித்துக்கொண்டிருக்கிறார்!



பெரியபாண்டிக்கு மிகவும் பிடித்த விசயமாய் - மல்லு பாட்டு கேட்டுக்கொண்டிருப்பது - எதேனும் சில மல்லு பாடல்களை லிங்க் எடுத்துக்கொடுத்துவிட்டால் நாம் ஒரு 2 மணி நேரம் ஃப்ரீ!!!! :)))

இன்னொரு கொலாஜ் அம்பிகா ராதா என தமிழகத்தின் அந்த கால நடிகைகள், இது பெரிய பாண்டியும் நிஜமா நல்லவனும் சேர்ந்து செய்தது

அடுத்த வருடத்திலாவது நிஜமா நல்லவன் பழைய நடிகைகளை ரசிப்பதை விட்டு லேட்டஸ்ட் டிரெண்டுக்கு வருவார் என்று நம்புகிறேன்! கொஞ்ச நேரத்துக்கு முன்டைப்பிய ஆச்சி பதிவிலிருந்து அப்படியே வெளியிடுகிறேன்

நிஜமா நல்லவன்!?



Mrs.நிஜமா நல்லவன்:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- நீங்க ஊருக்கு போயிருக்கும்போது

Mrs.நிஜமா நல்லவன்:-. நான் ஊருக்கு போய்ட்டேன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?

Mr.நிஜமா நல்லவன்:-ஆஃபீஸ்ல போய் தூங்கிட்டு வீட்ல வந்து முட்டை போண்டா செஞ்சு தின்னுக்கிட்டு ஆன்லைல ஒளிஞ்சிருந்து வெளையாடுவேன்!.

Mrs.நிஜமா நல்லவன்:-. நாம ஊருக்கு போனா அங்க நீங்க என்ன பண்ணுவீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- கேமரா எடுத்துக்கிட்டு தெருவுல சுத்தி,சுத்திக்கிட்டிருக்கிற மாடுங்கள போட்டோ எடுப்பேன்.

Mrs.நிஜமா நல்லவன்:- ஆபிஸ்க்கு என்ன சாப்பாடு எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

Mr.நிஜமா நல்லவன்:- எதுவுமே எடுத்துட்டு போக புடிக்காது! கேண்டீன்ல எவனாச்சும் வாங்கி தருவானுக

Mrs.நிஜமா நல்லவன்:-. உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

Mr.நிஜமா நல்லவன்:- சிக்கன் குருமா,அப்புறம் முட்டை போண்டா அப்புறம் அப்புறம் நான் செய்யுறது எல்லாம் புடிக்கும் நீங்க செய்யுறது எதுவுமே பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறார்!)

இதுக்கு பிறகும் அங்கே கொஸ்டீன் & ஆன்சர் நடக்கும்ம்னு நீங்க நினைச்சா........!

கடவுள் இருப்பது உண்மையெனில், எம் நட்பினை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்!


இத்தனைக்கும் நிஜமா நல்லவன் ஏர்போர்ட்ல அம்மிணியை அழைச்சுட்டு வரப்போன கெட்டப்பு பார்த்தா, உங்களுக்கே அனுதாப ஆறு பாஞ்சு ஓடும்.....



உலகம் முழுவதும் செய்மதி
இணையம் நமக்கொரு வெகுமதி
ஒரு மாதம் இல்லை திருமதி
இன்று வருவாள் முழுமதி இனி
இணையத்துக்கில்லை அனுமதி..
இனி கிச்சனே கதி !!!
- கறுப்பி - தமிழன்

Long, Long Ago....

நண்பனொருவன் வந்த பிறகு வாடா ஊர் சுத்தலாம் என்ற பிறகு” - இப்படி எனக்குக் கிடைத்த ப்ரெண்ட்தான் பாரதி

பசங்க அடிக்கடி கடைத்தெருவுக்கு போறாங்கன்னாலே வீட்ல ரொம்ப யோசிப்பாங்க! துணைக்கு யாராவது ஒரு ஆள்ன்னு தெரிஞ்சா கன்பார்மா ! அதுவும் எங்க வீட்ல சொல்லவே வேணாம். கற்பனை பண்ணி பயந்துக்கறதுலே அவங்களை அடிச்சுக்கவே முடியாது! யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!

அதுவும் இல்லாம இதுங்க கடைத்தெருவுக்கு போனா உருப்படாது (ஒன்ஸ் உருப்படாதுன்னு சொல்லிட்டாலே அவ்ளோதான்) அப்புறம் கடைத்தெருவுக்கு கும்பலா போறவங்க எல்லாருமே கெட்டவங்கன்னு ஒரு நினைப்பு!

காய்கறி வாங்க கண்டிப்பா பெரியகடைத்தெருதான் போகணும்...! நீ இங்கயே சின்னகடைத்தெருவுல வாங்கிட்டு வான்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பாரதியும் என் கூட வரான்மாம நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் காய்கறிகடைக்கு போகப்போறோம்ன்னு சொன்னா ஆமாம் உன்னையவிட அவன் இன்னும் பயங்கர ரவுடிப்பயன்னு பாக்கிறாப்பார்வையிலயே தெரிஞ்சுமே! இருந்தாலும் எப்படியோ பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு!

வழக்கமா கடைத்தெருவுக்கு ஊர்வலம்/நகர்வலம்/ஃபிகர்வலம் போறதுன்னா நாங்க தவறாம ஒண்ணு செய்வோம்! லெப்ட் டைரக்ஷன்னு ஆப்போசிட்டா நடந்து போறது,ஒண்ணுமே வாங்காம வெறும் நா* சந்தைக்கு போனமாதிரி சீமாட்டி ஜவுளிக்கடை உள்ளாற போயிட்டு வர்றது,ஹோட்டல் கண்ணுல பட்டா போய் எதாச்சும் தின்னு வயித்தை நிரப்புறது (அப்பக்கூட என் காசுதான்!) இப்படியே மணிக்கூண்டுல ஆரம்பிச்சு மயூரா ஹோட்டலை கடந்து லாகடத்துக்குள்ள நுழைஞ்சு ஞானாம்பிகை காலேஜுக்கு தூரத்திலேர்ந்தே ஒரு வணக்கம் வைச்சுட்டு திரும்ப குருஞானசம்பந்தர் ஸ்கூல் வழியா மணிக்கூண்டுல வந்து நின்னு சுத்தியுமுத்தியும்பார்த்துட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்கிறது! இன்னும் ஒண்ணு இருக்கு... கடைத்தெரு சுத்தறதுன்னு கிளம்பிட்டா அதுவும் ரெண்டு மூணு பேரோட கிளம்பிட்டா அந்த கடைப்பக்கம் போகாம வரமுடியுமா? அது வந்து கச்சேரி ரோடு, அண்ணா பகுத்தறிவுமன்றம் போஸ் ஆபிஸு - புரிஞ்சுருக்குமே - யெஸ் வைத்தாவுல வந்து கும்பலோட கும்பலா நின்னு டீ குடிக்கிறது!காசு காய்கறி வாங்க கொடுக்குற காசுதான் - டீ க்குடிக்க காசு வேணும்ன்னு கேட்டா எல்லாம் உனக்கு இங்க ஒரு வாட்டி குடிக்கிற காப்பியே போதும்ன்னு சொல்லிட்டா இப்படித்தான்! (ஹிஹி... யப்போவ் மன்னிச்சுக்கோப்பா) வெட்டியா இருந்து வேலை கிடைச்சப்பிறகு அர்ச்சனா அபிராமி அய்யப்பன்னு ஸ்விட்ச் ஆகி ஒன்லி டபுள் ஸ்ட்ராங்க் காபி நோ டீ பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டோம்!

.கே திரும்ப ரிடர்ன்!

எங்க போறோம்? ஊர் சுத்த போறோம்!

கொஞ்சநேரம் நல்லா உருப்பட்ட ப்ரெண்ட் கடையில உக்காந்திருப்போம் நார்மலா காலை 6.30 ஆரம்பிச்சு நைட்டு 9.30 மூடுவான் எங்கள பார்த்தா ஒன்-அவர் முன்னாடியே வந்துட்டானுங்கடான்னு (ஒரு பாசத்துலதான்ங்க) மூடிடுவான்! அதுக்கு அப்புறம் அவனையும் கூட்டிக்கிட்டு மணிக்கூண்டுலேர்ந்து சுந்தரம் தியேட்டர் வரைக்கும் தார் பாதையில கால் பாதத்தை பதிக்கிறதுதான்! பஸ் ஸ்டாண்ட் உள்ளாற நிறைய பஜ்ஜி கடைங்க இருக்கு...! அதுதான் ஊருக்கு வர்ற எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது!சுந்தரம் தியேட்டருக்கு எதிர்த்தாப்புல எம். சி. பி ஒரு டீக்கடை இருக்கும் அங்க டீயை தவிர போண்டா பஜ்ஜி வடை 5 ரூவாய்க்கே ஆறு ஏழு ஐட்டம் சூடாவும் ஆறியும் கிடைக்கும்! அதை உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே காசை வாங்கி கல்லாவுல போட உள்ளாற ஒருத்தரு முதலாளி வேசம் கட்டி உக்காந்திருப்பாரு!

நானும்
சரி, பாரதியும் & குரூப்பும் சரி வேலையெதுவும் கிடைக்கலைன்னா இது மாதிரி முதலாளி வேசம் கட்டிக்கிட்டு எங்கயாச்சும் குந்திடலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டோம்! (sitting in one place is very important) ஏன்னா அப்ப எவனுமே எங்களுக்கு வேலை கொடுக்கற அளவுக்கு நாங்க குவாலிபிகேஷனோட இல்ல!

எங்களோட குறிப்பா என்னோட வாஸ்து எப்படின்னா அஞ்சாவது முடிக்கறேன் அடுத்த வருசம் ஆறாவது கோ-எஜுகேஷன் சேருலாம்ன்னு நினைச்சா எதோ ரெக்கமண்டேஷன் வாங்கி நேஷனல் ஸ்கூல சேர்த்துவிட்டாங்க சரி அதுல இங்கீலிசு சப்ஜெக்ட் எடுக்கலாம்ன்னு பிரியப்பட்டா (ஹிஹிஹி அதுலதான் கோ-எஜுகேஷன்) உனக்கு தமிழ் மீடியமே ஆண்டவன் கருணைன்னு சொல்லி அனுப்புவாங்க! சரி பத்தாவது முடிச்சுட்டு எப்படியும் குருஞானசம்பந்தர் ஸ்கூல்ல சேர்ந்து நம்ம ஜமால் அண்ணாசி கணக்கா பெரிய ஆளாகிடலாம் (ஃபிகர் மத்தியில பிரபலமும் ஆகிடலாம்ன்னு) ஆனா பாருங்க விதி விளையாடி தடிப்பசங்க படிக்கிற பாலிடெக்னில போய் வுழுந்துட்டேன்!

இதே வாஸ்து பி. படிக்கிறப்பவும் வொர்க் அவுட் ஆகலைன்னா எப்படி?

பி. முடிசசதும் எக்சிக்யூட்டிவ் இன்ஜினியராகி PWD கொள்ளையடிக்கலாம்ன்னு கனவுல இல்ல இருந்தோம் இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட முதல்வரம்மா டென்ஷனாகி எல்லா வேலைக்கும் ஒரே ஆப்பு அடிச்சு வைக்க கொள்ளையடிக்கிற கனவு காணாமலே போச்சு!

பிரைவேட் கம்பெனிக்கு போகலாம்ன்னா ஆறுமாசத்துக்கு ஒசியில வந்துட்டு போங்கன்னுட்டாங்க அதனால நானும் பாரதியும் முதலாளி வேசம் கட்டிடலாம் சிட்டிங்க் இன் ஒன் பிளேசு தான் முக்கியம் எங்க உக்காந்தா என்னன்னு ஏவிசி காலேஜ் வாசல்ல கடையை போடற முடிவுக்கு வந்துட்ட்டோம்!

யேயெப்ப்பாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எம்மாம் பெரிய பதிவா போய்க்கிட்டேல்ல்ல இருக்கு! போதும் நீங்க ஆபிஸ்ல ரெஸ்ட் எடுங்க மிச்சத்தை அப்புறம் வந்து சொல்றேன்!

டிஸ்கி:-

1.இது சித்திரகூடத்து தயாரிப்பின் ரீமேக்


2.இதில்
வரும் பாரதி, ஜமால் என்ற பெயர்கள் என்ற பெயர்கள் சிங்கை வலைப்பதிவர்களை குறிப்பிடுவது அல்ல என்று தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்!

And, Now...


பெட்ரோலில்லாத தள்ளிக்கொண்டே ஓட்டும் எம் 80 ஒன்று, என்னிடம் இருந்தது. காலேஜ் விட்டு வந்ததும் அதை எடுத்து தள்ளிக்கொண்டே, தெருக்களில் சென்று ஃபிகர் பார்த்துகொண்டிருப்பேன்!

வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த எம்80யும் ஒருநாளில்...

அத்துடன் என் ஃபிகரும்....!


டிஸ்கி:- ஆச்சியின் பதிவு இங்கன இருக்கு!

ஞாயிறு கொண்டாட்டம் - லொள்ளு சபா

சனி ஞாயிறுகளில் முழுவது ஊர் சுற்றி திரிந்து ஞாயிறு மாலையில் வீடு தேடி கண்டுபிடித்து வந்து கண்ணயரும் போதுதான் கிளாஸ் வாத்தியார் ஃபிளாஷ் மாதிரி சடக்குன்னு வந்து சடக்குன்னு போவார்!

ஆஹா அடுத்த நாள் திங்ககிழமை காலையிலயே ஆரம்பிச்சுடுமே, ஆங்கில பாடம் - கதை சொல்லணுமேன்னு ஒரு அசரிரீ வந்து ஒலித்துச்செல்லும் - அதுக்குப்பிறகும் தூக்கம் வந்து தூங்கமுடியும்ன்னு நீங்க நினைக்கிறீங்களா....?

தூங்கவும் முடியாம படிக்கவும் தெரியாம மனசு அப்படியே கிடந்து அலைமோதிக்கிட்டு நிக்கும்! ஒரு வழியா சரி எப்படி இருந்தாலும் வகுப்புல பெஞ்சு மேல எந்திரிச்சு நிக்கவேண்டிய நிலைமைதான் வரும்ன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு சாஞ்சுடவேண்டியதுதான்!

எதிர்ப்பார்த்து பயந்த மாதிரியே வாத்தியார் கிளாஸ்க்குள்ள நுழைஞ்சு அட்டெண்டென்ஸ் எல்லாம் எடுத்துட்டு ஆரம்பிப்பாரு! ( மறந்திருப்பாரோன்னு ஒரு மெல்லிய சந்தோஷம் கிளம்பி அடங்கும் இந்த டைமிங்க்ல !)

வழக்கமா நல்ல படிக்கிற பயலுவோ முன்னாடி பெஞ்சுல குந்திக்கிட்டு டாண்டாண்ன்னு சொல்லிட்டு கமுக்கமா உக்காந்திடுவாங்க

ரெண்டு வரிசை தள்ளி இருக்குற பெஞ்சுலேர்ந்துதான் ஆரம்பிக்கும் வாத்தியாருக்கு ஹாப்பி மூட் எங்களுக்கு டார்ச்சர் & டெரரர் மூட் !

அது எப்படி இருக்கும்ங்கறதை ரொம்ப கிளியரா இந்த வீடியோவுல சொல்லியிருக்காங்க பாருங்க!



ரைக்டர் கேரக்டர்ல வாத்தியாரை நினைச்சுக்கோங்க!

கேரளம் விளிக்குனு...!

இவுங்க சரண்யா மோகன்


இவுங்க பாமா (இப்பத்தான் இண்ட்ரோ ஆகுறாங்க!)


இவுங்க அஞ்சலி
(இவுங்க கேரளா ஆனா ஆந்திராவுல பொறந்ததா ஒரு சேதி!)



இவுங்க ரூமா (கொஞ்சம் கொஞ்சம் கேரக்டர்ஸ்ல நடிச்சு இப்ப பிரபலமாகிட்டு வராங்க !)


இவுங்க நவ்யா நாயர் (நல்லாவே தெரிஞ்சுருக்கும்!)


கவிதைகள் பார்த்துட்டீங்க!

ஒரு மொக்கை கவுஜ படிச்சுட்டு போங்க...!


அன்போடு நான்;

அறிவோடு நீ;

அரிவாளோடு உன் அண்ணன்!


(காலேஜ் டெக்னிக்கல் டிராயிங்க் ரூம்ல யாரோ ஒரு கவுஜர் வரைந்த கவுஜ!)


டிஸ்கி:- கமெண்ட் பாக்ஸ் இந்த பதிவுக்கு மூடப்படுகிறது. வரும் நண்பர்கள் ஆஹா ஒஹோவென்று கூறுவதை கேட்குமளவுக்கு மனவலிமையினை எல்லாம் வல்ல இறைவன் அருளும் போது நிச்சயம் இதே போன்றதொரு பதிவில் உங்களுக்காய் திறந்திருக்கும்!

அன்புடன்,
ஆயில்யன்.

ஏலேலங்கடி - 10

சிரித்து இருங்கள்;

சிறப்பாய் இருங்கள்!

நகைக்கும் அழகில்;

நகை தேவைப்படா!


டிஸ்கி:- தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கும் போது பதிவுகளில் இருக்கும் படங்களினை உரிமையாளரின் அனுமதிக்கு பிறகுதான் பயன்படுத்த முடியுமெனில் இப்படியான பதிவுகளின் தாக்கம் அதிகரிக்க கூடும்!

அல்லது மாத மாத பிஐடி போட்டிகள் இனி வாரக்கணக்கில் வளப்படும்!

வாருங்கள் கம்யூனிஸ்ட்களை வழியனுப்பிவிட்டு, தமிழ் மக்களிடம் கேள்வி கேட்போம். - கலைஞர்

இதுவரை 14 முறை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் நேற்று திடீரென விலகிக்கொள்கிறோம், இனிமேல் கூட்டணி வேண்டாம் என்று அறிவித்துள்ளார். அவர்களது விலகிக்கொள்கிறோம் கடுதாசியை கீழே கொடுத்துள்ளேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

விலகிக்கொள்கிறோம்!

அந்த காலத்தில் எப்படியோ அறிமுகமானது தி.மு.க.! ஏதோ இருக்கின்ற ஆட்களை வைத்து கட்சி நடத்தி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எந்த பதவியும் பெற்றதில்லை. இனிமேலும் பெறுவதற்கான வாய்ப்புக்களும் எம்மிடம் எதுவும் இல்லை. எங்களின் கூட்டணியையும் மதித்து எங்களுக்கு ஓட்டுக்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக கூட்டணி போய்க்கொண்டிருக்கையிலேயே திடீர் என விலகுகிறேன் இணைகிறேன் என அறிவிப்பது. உடனே எனது அமைச்சர்கள் நலம் விரும்பிகள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்களும் எங்களை விட்டு போய்விட்டால் எப்படி என்பது போன்ற கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் கடைசி வரை கெஞ்சி கேட்டதால், எங்களுக்கு சொல்லிக்கொள்ளுமளவுக் எதிர் கூட்டணியில் சீட்கள் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் மீண்டும் பழைய கூட்டணியில் இணைகிறோம் என்பது. ஏன் இதெல்லாம்?

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், எங்க நலம் விரும்பிகள் நீங்க எல்லாம் தொடர்ந்து கூட்டணியில இருக்கணும்ன்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு.

நீங்க உண்மையிலேயே இனிமே கூட்டணிக்கு வரமாட்டோம்ன்னு நினைச்சா நீங்க இனிமே கட்சியை மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பேச மாட்டீங்க, போராட்டம் கிடையாதுன்னுத்தான் அர்த்தம். ஏன்னா நீங்க பேசுறது போராடறதுலதானே இருந்துதானே உங்கள் அரசியல் வளர்ந்து வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே வராதீங்க!

உங்களையெல்லாம் கூட்டணிக்கு வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்த நலம் விரும்பிகள் கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே கூட்டணி கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் கட்சி ஆபிஸ் அட்ரஸ் தர்றேன். தொடர்புல இருங்க.லைப்ரரிக்கு அடிக்கடி வந்துட்டுப்போங்க! ஆனா இனிமே நீங்க அரசியல் நடத்தவே வேண்டாம். நாடு ஒன்னும் நல்லாயிடாது! போங்க போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க தமிழ் மக்களுக்கு செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம். எங்கள் முகவரி: அண்ணா அறிவாலயம் தேனாம்பேட்டை சென்னை!

கூட்டணி வைக்க ஆதாயம் எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவங்களை எதுக்கு இத்தனை பேரு திரும்ப கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடனும் ?

தேர்தல் நடக்குது பலர் போட்டி போடறாங்க அதுல ஒருத்தரு நான் வாபஸ் வாங்கிக்கிறேன் என்னால இனி பிரச்சாரம் செய்யமுடியாது பிரச்சாரம் செய்றதுக்கு என் கையில காசு இல்ல உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஒரமா உக்காந்துக்கோங்கன்னு தானே சொல்ல முடியும்! இல்ல, இல்ல, நீங்க கட்டாயம் பிரச்சாரம் செய்துதான் ஆகணும் அதுக்கு கழகம் பணம் கொடுக்கும்ன்னு விரட்ட,மிரட்டவா முடியும்?

எனக்கு என்னமோ கம்யூனிஸ்ட்கள் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமேல் போட்டி போட சக்தி இல்லைன்னு சொல்லியிருக்காங்களோன்னுதான் தோணுது! எப்டியிருந்தாலும் தேர்தல்ல போட்டி போட முடியாதுன்னு சொல்றவங்களப்போய் நாம எதுக்குங்க மல்லு கட்டணும்? காரணமே தெளிவா சொல்லாத கம்யூனிஸ்ட்களுக்கிட்ட எதுக்கு போயி நாம கெஞ்சணும்?

நேற்று இரவு இந்த செய்தியினை படித்துவிட்டு நானும் தம்பி ஸ்டாலினும் வாக் உரையாடலில் பேசிக்கொண்டிருந்தோம்! இப்படி அவர்கள் அறிவிப்பதும் நாம் கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது இதை நாம் கட்டுபடுத்தி ஒரேடியாக அனுப்பிவிட ஏதாவது செய்தாகவேண்டும் என்று தம்பி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்!

இது கட்டாயம் நாளை தமிழ் மக்களின் ஆர்வத்தோடு பார்க்கும் வகையில் பேப்பர்களில் சூடான தலைப்புக்களில் இடம் பிடிக்கும் என்றும் தம்பி ஸ்டாலின்னுக்கு நான் கூறினேன்! அதே போல் இன்று தமிழ் பத்திரிக்கைகளின் முகப்பில் சூடான தலைப்பாகிவிட்டது! இப்படி காரணமில்லாமல் கூட்டணியில் இருந்து விலகிச்செல்வதும் இனி வரமாட்டோம் என்று சொன்னால் நம் கழகத்தில் யாரும் கெஞ்சகூடாது என்பதுதான் என்னுடைய இன்றைய உடன்பிறப்பே கடிதத்தின் முக்கியமான கருத்து!

தமிழ் மக்களுக்கு :

சூடான தலைப்புக்களின் வரும் பேப்பர்களினை எந்த அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

பேப்பர்களை வெறித்து நின்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை வைத்தா அல்லது விற்பனையாகாத பேப்பர்களின் எண்ணிக்கையினை வைத்தா?

ஏன் பெரும்பாலும் இரண்டு வரிகளில் மட்டுமே தலைப்புகள் சூடான வால் போஸ்டர்களில் இடம்பிடிக்கின்றது?

இப்படி சூடான தலைப்புக்களில் வரும் பேப்பர்களினை மட்டுமே நீங்கள் வாங்கிப்படித்துக்கொண்டிருந்தால், அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா?

இதை பற்றி ஏன் நீங்கள் சிந்திக்க மறுக்கிறீர்கள்?

டிஸ்கி:-1

இது சிங்கை, அண்ணன் ஜோசப்பின் இந்த பதிவினை போலவே அமைந்தது தற்செயல் அல்ல!

டிஸ்கி:-2

கொஞ்சம் சீரியசாக காமெடி பண்ணி எல்லாரையும் சிரிக்கவைக்கமுடியுமான்னு, ஒரு டென்ஷனான நேரத்தில் தீர்மானிச்சதால இந்த மொக்கைய படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேனாம் !

டிஸ்கி:-3

இந்த பதிவுதான் என் வலையுலக வரலாற்றில், நகைச்சுவை/நையாண்டி பிரிவில் நானாக வகைப்படுத்திய முதல் பதிவு!

நி.நல்லவன் - வாராயோ தோழா வாராயோ!

வாராயோ தோழா வாராயோ
புதுப்பதிவு எழுத வாராயோ
புதுப்பதிவின் பெயரில் மொக்கையை போட
மறுக்காமல் நீயும் வாராயோ..

கும்மிமேடை தன்னில் பதிவினை காணும்
திருநாளை காண வாராயோ! (வாராயோ )

தமிழ்மணத்தில் நேத்து ஹீட்டு
அதில் உன் பதிவுதானே ரொம்ப ஹிட்டு
சொல்லாம போக நினைக்காம
சோலோவா நின்னு துடிக்காதே

நாளைக்கும் பதிவு வருமா
அதில் கும்மி மேட்டரேதும் சேருமா?
கமெண்ட் மாடரேசன் தூக்காட்டி
கலாய்ப்பேன் நானும் மறுவாட்டி (வாராயோ...)

கும்மிக்கோலம் கொண்ட மகனே
புது கான பதிவு போடும் குயிலே
புது கவிக்கோலம் பூணும் கவியே
உன் குணக்கோலம் கண்ட இப்புவியே

நம் மொக்கை வாழ என்றும் பதிவிடு
நான் கும்மி ஆட என்றும் வழி கொடு!(வாராயோ...)

கும்மி அடிக்காத கையும் அடிக்காதோ
உன் மொக்கையான பதிவு கண்டு மகிழாதோ
மலராத பதிவுகள் மலரும்
முன்பு புரியாத கதைகள் விளங்கும்
மயங்காத கவிதை மயக்கும்
முன்பு புரியாத சில கவிதைகள் புரியும்

வாராயோ தோழா வாராயோ
புதுப்பதிவு எழுத வாராயோ
புதுப்பதிவின் பெயரில் மொக்கையை போட
மறுக்காமல் நீயும் வாராயோ..

ஆயில்யன்:- நி.நல்லவா..! நான் தமிழ்மண பதிவர் வட்டத்தையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன் எல்லாரும் கண்ணுலயும் நான் கண்ணீரைத்தான் எப்பவும் பார்க்கணும் அப்படியே வைச்சுக்குவியாப்பா!

நி.நல்லவன் :- அது என் கடமை நீ கவலைப்படாத தம்பி!

ஆயில்யன்:- நன்றி நல்லவா மிக்க நன்றி!

ஏ...!தமிழ்மணமே கும்மி மொக்கையோட நீ நீடூழி வாழணும்!



பாட்டு ரசிகர்களுக்காக பிரத்யோகமாய்....!

கத்தி தாவுது மனசு!

என்றைக்கு இந்த விசயம் இண்ட்ரோ ஆனதோ அன்றைக்கு ஆரம்பிச்சு இன்றைக்கு வரைக்கும் எத்தனையோ விதமான மாற்றங்கள் வந்தே விட்டது!

ஆனால் கூட பய புள்ளைங்களும் எதுவும் மாறுனதா தெரியல! நிறைய மாத்திக்கிட்டிருக்காங்க ஆனா மாறாமாட்டிக்கிறாங்க!

என்ன ஆளுங்க பாருங்க டெக்னாலஜிக்கு ஏத்த மாதிரி மாறுங்கடாப்ப்பான்னு சொன்னா டெக்னாலஜியை அவுங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டு வழக்கம்போல ரவுண்டு அடிச்சு வந்துக்கிட்டிருக்காங்க!

அப்படி என்னப்பா அந்த விசயம் அப்படின்னு டென்சன் ஆகாம பொறுமையா கேட்டுக்கிட்டிருக்கவங்களுக்கு செல்போன் மேட்டர் பத்தி சொல்றேன்!

ஆரம்பிச்ச அன்னிக்கு காதுல வைச்சு கத்த ஆரம்பிச்சாங்க இன்னும் கத்திக்கிட்டுத்தான் இருக்காங்க! சிக்னல் இல்லாட்டியும் சரி,செல்போன்ல சார்ஜ் இல்லாட்டியும் சரி என்னமோ இவுக செல்போன்ல இருக்கற மைக்கும் எதிர் சைடுல இருக்கறவரு போன்ல இருக்கற ஸ்பீக்கரும் வேலை செய்யவே செய்யாது அப்படிங்கற மாதிரி அப்படி ஒரு காட்டு கத்தல்!

டேயெப்பா அதுக்கு நீங்க செலபோன் இல்லாமலே பேசலாம்டான்னு எவ்ளோதான் கிண்டலடிச்சு பாருங்க! அசரமாட்டானுங்க அடுத்த நிமிசம் கால் வந்தா கத்த ஆரம்பிச்சிடுவானுங்க! இது அவுங்களுக்கு பழக்கமான விசயமாகிப்போய்ட்ட ஒண்ணு அதே நேரத்துல காதுக்கு காப்பு மாட்டி விட்ட மாதிரி செல்ப்போனை வைச்சு அழுத்திக்கிட்டு பேசுறதாலதான் அவுங்க கத்துறது அவுங்களுக்கே கேட்கலையாமாம்! அப்படி ஒரு ஆய்வு நடத்தி இருக்கானுங்க!

ஆமாங்க அது தான் நமக்கும் தெரியுமே விடுமுறைகளில் சனிக்கிழமை இரவுகளில், நிலாவே வராத நாளிலும் கூட, நிலா சோறு என்ன பெயரில் குண்டான் சோற்றை தயிர் விட்டு குழைத்து எடுத்துக்கொண்டு ஒரு கிண்ணத்தில் புளிக்குழம்பினையும் ஏந்திக்கொண்டு அப்படியே மொட்டை மாடிக்கு போய் உக்காந்துக்கிட்டு நல்ல இருட்டுல ( அதான் நிலா இல்லாத நிலா காலமாச்சே! ) கையில கொஞ்சம் தரையில கொஞ்சம் சாதம் குழம்பு வைச்சு கொட்டிக்கிட காலத்தினை நினைச்சா....!

ம்ம் நினைச்சுக்கிட்டே இருக்கலாம்ங்க!

எல்லா சோத்தையும் தின்னு முடிச்சதும் செரிக்கறதுக்காக வேண்டி, நல்ல சப்பணம் கொட்டி உக்காந்துக்கிட்டு இரண்டு கையையும் எடுத்து காதுல பொத்திக்கிட்டு...!

ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


இப்படியெல்லாம் சவுண்டு வுட்டா அப்ப தெரியும்! அண்ணன்காரன் அடிக்க வர்றதும், அதுக்கு தப்பி தாவி போறதும் பிறகு மாட்டி அடி உதை வாங்குறதும் இப்படியே ரகளை பண்ணிக்கிட்டிருந்தா தின்ன சோறு ஆட்டோமேடிக்கா செரிச்சிடும்ல!

டிஸ்கி:- பதிவுல ஆரம்பிக்கிற மேட்டரும் சரி முடிக்கிற மேட்டரும் சரி சம்பந்தமில்லாம இருக்கணும் ஆனா சம்பந்தமிருக்கணும்! அப்படின்னு டிங்க் பண்ணி எழுதுன மொக்கைதான் இது! - இது டேக் மாதிரி திரும்ப ஒரு ரவுண்டு வர வைக்க மறைமுக பேச்சு வார்த்தைகள் செஞ்சு ஒரு 3 பேரை சரிக்கட்டி வைச்சிருக்கேன்!

எனக்கு வேல்யூ கூடுது :-)

ரொம்ப சந்தோஷமா இருக்குங்க:-)

மாதங்கள் போனதே தெரியலை!? ஆனாலும் உள்ளுக்குள் என்னைக்கிடா நம்ம வேல்யூ அதிகமாகும் இங்கன்னு எப்பவுமே ஒரு ஆர்வம்தான், இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்துக்கிட்டே வருது!

இப்படியே போனா நல்லாத்தான் இருக்கும்! ஆனா பாருங்க இந்த மாதிரி போனா ஊர்ல கஷ்டமாப்போயிடும் சொல்றாங்க!

நான் என்னங்கப்பண்றது! இது என்ன நம்ம கண்ட்ரோல்லயா இருக்கு ?

எப்படின்னே தெரியல திடீருன்னு 1 அப்புறம் 2 சில சமயம் ஒரே நாள்ல் 3ன்னு எகிறுது !

இதெல்லாம் எதுக்காக நடக்குது எதை அடிப்படையா வைச்சு நடந்துக்கிட்டிருக்குன்னு ஒரு எளவும் புரியாட்டியும் கூட, இப்ப கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமாத்தான் இருக்கு!

ஒண்ணுமே புரியல! என்ன நடக்குது இங்கன்னு, கேட்கறவங்களுக்கு மறுபடியும் என் சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறேன்!


ஒரு ஸ்டெப் கீழ வாங்க!




இன்னிக்கு என்னோட மதிப்புல ஒரு ரியால் = 11.75 ரூபாய்கள்

இதே ஒரு ரியால் சில வாரங்களுக்கு முன்பு =10.81 ரூபாய்கள்

இதே போல துபாயிலும் இன்றைய மதிப்பில் ஒரு திர்ஹாம் = 11.48

இதே ஒரு திர்ஹாம் சில வாரங்களுக்கு முன்பு = 10.60



கடந்த இரு வாரங்களாக ரியாலின் மதிப்பிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது! (எது எப்படின்னாலும் நமக்கு நஷ்டம்தான் சொல்றாங்க அது எப்படின்னுத்தான் புரிய மாட்டிக்குது?)

கடந்த இரு வாரங்களாக ரூபாயின் மதிப்பு அதிகரித்திருக்கும் வேலையில் நிறையே பேர் வீட்டிற்கு சேர்த்து வைத்த பணங்களை டிரான்ஸ்பர் செய்து கொண்டிருக்கிறார்களாம்! ( சில பலே ஆளுங்க கடன் வாங்கி அனுப்பிவைக்கிறாங்கங்க!?)

இது சில காலமோ! சில வாரமோ! ஆனாலும், நாமும் சந்தோஷமா இருப்போம் மத்தவங்களையும் சந்தோஷமா இருக்க வைப்போம்!

தேன் கிண்ணத்தில் வரவே வராத பாடல் :-)





நன்றாக ரீமிக்ஸ் செய்தவருக்கு நன்றிகளுடன்....!

இரண்டு கோட்டுத்துண்டுகள்

இளைய தலைமுறை இன்புற்றிருக்கும் இனிய பருவத்தில் மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம் புதிதாய் இருக்கும் வயதில்,சீரியஸ்னஸ்ம் தெரியாத மொக்கையுமில்லாத காலகட்டத்தில்தான் ஒரு நண்பன் என்னிடம் கேட்டான்


டேய் ஒரு இரண்டு கோடுகள் போடுடா.....??

அப்படி நான் சொல்ற மாதிரி நீ கோடு போட்டின்னா.....

உனக்கு எவ்ளோ புரோட்டா வேணுமோ கேளு நான் அய்யப்பன் கடையில வாங்கிதர்றேன் ஒ.கே?

என்னாடா தானா வந்து மாட்டுறானேன்னு நானும் கொஞ்சம் கூட கிருத்துருவமா யோசிக்காமலே சடர்ர்னு ஒரு கோட்டை சயின்ஸ் நோட்ல போட்டு காட்டிட்டு வாடா புரோட்டா திங்க அய்யப்பன் ஹோட்டலுக்கு போகாலம்னு போகலாம்ன்னு சொல்ல?

அதுக்கு அவன் " நான் சொன்னது கோடு!

நீ போட்டது கோட்டு துண்டு அப்படின்னான்!

என்ன பயபுள்ள வித்தியாசமா பேசுதேன்னு லேசா ஒரு டவுட்டு! இப்ப நீ என்னாடா சொல்ல வர்றங்கறத்துக்கு,

நீ கோடு போட்டா போட்டுக்கிட்டேத்தான் போகணும் நிப்பாட்டினா அது கோட்டு துண்டுடாங்கறான்!


”இரண்டு”ங்கெட்டான் :-)


அப்படியே....! ஆச்சர்யமா போயிடுச்சு இவ்ளோ விசயங்கள் இருக்கா இதுலன்னு?!

ஓஹோ...! அதான் வ.வா. சங்கத்து ஆளுங்க ரொம்ப விவரமா போட்டிருக்காங்களோன்னு நினைச்சு அப்டியே பிரமிச்சு போயிட்டேன்ங்க!

நீங்க கூட இதப்பாத்தா அப்டியே ஷாஆஆக்காகி பிரமிச்சு மயங்கி......... போயிடுவீங்க! :-))

இதெல்லாம் நாம சாதாரணமா பிரயோகிக்கிற வார்த்தைகள்தானே!

எதாவது விட்டுப்போச்சுன்னா பின்னூட்டத்தில போட்டு தாக்குங்க! (சப்போஸ் ”இரண்டு”ல பரிசு கிடைச்சா மெயில் அனுப்புறேன் - பரிசு கிடைச்சுதுன்னு
ஒ.கே!)

இரண்டுங்கெட்டான் தனமா போச்சு!

இரண்டுங்கெட்டான் வயசாச்சு!

இரண்டுங்கெட்டான் நிலைமை ஆகிடுச்சு!

இரண்டுங்கெட்டான் நேரம் ஆயிடுச்சு!

இரண்டுங்கெட்டான் நாளகிடுச்சு

இரண்டுங்கெட்டான் ஊரால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் பேச்சால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் தலைமைகிட்ட மாட்டிக்கிட்டோம்!

இரண்டுங்கெட்டான் படமாடா அது!

இரண்டுங்கெட்டான் சேதி சொல்றான்!

இரண்டுங்கெட்டான் கலாச்சாரம் இது!

இரண்டுங்கெட்டான் மனசுப்பா உனக்கு!

இரண்டுங்கெட்டான் பொழப்பு பாக்குறேன்!

இரண்டுங்கெட்டான் சமூகம் இது!

இரண்டுங்கெட்டான் முறையால்ல இருக்கு

இரண்டுங்கெட்டான் முடிவாகிடுச்சு

இரண்டுங்கெட்டான் விஷயமாட்டம் இருக்கே!

இரண்டுங்கெட்டான் தீர்ப்பால்ல போயிடுச்சு!


இது இரண்டால் இந்த இரண்டுங்கெட்டான் வயசுக்காரனுக்கிட்டயிருந்து வந்த
இரண்டுங்கெட்டான் போஸ்ட்!

எதாச்சும் இரண்டு வார்த்தை சொல்லிட்டுப்போங்க!