கடகம்

டிஸ்கி:- பதிவெழுத வந்த கதையை பத்தி சொல்லுங்கன்னு சிநேகிதி கூப்பிட்டாங்க அப்புறமா தம்பியண்ணே கோபி கூப்பிட்டாங்க ஆனாலும் நேரம் காலம் ரொம்ப மோசமா போயிட்ட காரணத்தினால[இப்பவெல்லாம் ஆபிஸ்ல வேலை எல்லாம் செய்ய சொல்லி ரொம்ப கொடுமை பண்றாங்க!] ரொம்ப லேட்டாத்தான் எதோ எழுதிட்டேன்!

************************************************************************



நிறைய பேருக்கு ரொம்ப நாளாவே ஆசை இவனெல்லாம் எப்படி எழுத வந்தான்னு தெரிஞ்சுக்கிடணும்னு சரி நாமளே சொல்லாட்டி ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் வரவழைக்கிற இன்னும் பல தொடர்களை போட்டு தாக்கிடப்போறாங்களோன்னு முந்திக்கிட்டாச்சு!

2003 சகோதரர் மூலம் அறிமுகமான தமிழ் இணைய உலகம் நெட் செண்டர்களில் மாதத்துக்கு ஒரு முறை செல்லும்போது பார்க்கும் விசயமாகத்தான் இருந்துச்சு பிறகு சும்மா வெளையாட்டுக்கு ஒரு ப்ளாக் ரிஜிஸ்டர் பண்ணி வைச்சதோட சரி! அதுக்கு பிறகு வெளிநாட்டு பயணம் அப்புறம் வெட்டியா இருந்த காலகட்டத்திலதான் மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்!

டிராக் பேக் செஞ்சு எப்படி நுழைஞ்சோம்ன்னு சொல்றதுக்கு பதில் நுழைஞ்ச பிறகு மனசில இருந்த விசயங்களை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு போறேனுங்க!
எப்படியோ ஒரு வழியா பேரெல்லாம் செலக்ட்டி ப்ளாக்கு ஒபன் செஞ்சு அதுக்கு தோரணமெல்லாம் கட்டி தொங்கவிட்டப்பிறகுதான் ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை!

டெய்லி பேப்பர் படிக்கிறதை வைச்சு எதாச்சும் எழுதலாம்ன்னு ஒரு ஐடியா வர்ற அது கொஞ்ச நாள் ஓடிக்கிட்டிருந்துச்சு பிறகு என்ன எழுதலாம் எழுதலாம்ன்னு நினைப்பே ரொம்ப டெரர் காமிச்சுக்கிட்டிருந்துச்சு சரி கொஞ்ச நாள் படிப்போம்ன்னு கம்முன்னு படிக்க ஆரம்பிச்சா,அட இதெல்லாம் இவுங்க எழுதும்போது நாம எழுதறதுல தப்பே இல்லன்னு நினைப்பு வந்து குந்திக்கிச்சு - அதுக்குத்தான் எழுதறதுக்கு மேட்டர் இல்லைன்னா மத்தவங்களை படிக்க ஆரம்பிங்க உங்களுக்குள்ளயே ஒரு நம்பிக்கை ஸ்ட்ராங்காயிடும்ன்னு எல்லாரும் அட்வைஸ் சொல்றாங்க - பள்ளிகூடத்து நினைப்பு ஊர் நினைப்பு அப்படின்னு ஏகப்பட்ட கொசுவர்த்தி சுத்துறது ரொம்ப ஜாலியா இருக்கும்!

சாதாரணமாவே யாரையாச்சும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்றதை ஒரு மாசம் ஃபாலோ பண்ணுனீங்கன்னா ஏகப்பட்ட காமெடி பதிவுகளை எழுதிடலாம் அந்தளவுக்கு நல்ல கான்பிடெண்ட் கொடுப்பாங்க நம்ம ஆளுங்க! ஒவ்வொரு நாளும் சொல்ற ஒவ்வொரு வாசகமும் இன்னொரு நாள் அலேக்கா பல்டி அடிச்சு ஆடுவாங்க! அதை பாக்குற நமக்கு பீறிட்டு வர்ற கோபத்தை அப்படியே கொண்டாந்து ப்ளாக்ல கொட்டலாம்.அப்படித்தான் நானும் செய்ய நினைச்சேன் ஆனா செய்யல!

கலவர பூமியில வேடிக்கை மட்டும் பார்ப்போம்ன்னு ஒன்லி வாட்சிங்க்! - மாசத்துக்கு ஒரு நாளாச்சும் போஸ்ட் கண்டிப்பா வெறித்தனமா வரும் அதை படிச்சு நம்ம ஆசையை தணிச்சுக்கிடலாம்! [அவுட் ஆப் சிலபஸ் போயிட்டேன் சாரி]

ப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன்! எதாச்சும் எழுதி என்னாடா இப்படி கேவலமா இருக்கேன்னு சொன்னா அட இது என்னோட டைரின்னு சொல்லி எஸ்ஸாகிடலாம்ன்னு ஒரு திட்டத்தோடதான்...!

ஆரம்ப கட்டத்தில பொழுது போகாத சூழலில் வேறு வழியே இல்லாத நிலையில் ப்ளாக் படிக்க துவங்கியதும் விடுமுறை நாட்களில் முழு இரவும் பதிவுகளை படித்து ஊர் ஞாபகங்களை மனசுக்குள் ரெப்ரஷ் செய்துகொண்டதும் தான் வழக்கமாய் அமைந்திருந்தது!

நாமும் எதேனும் கிறுக்க தொடங்கலாம் என்று ஆரம்பித்து எந்தவொரு எல்லைகோடும் வரைந்துகொள்ளாமல் நினைப்பதை எல்லாம் எழுதிட - தொடர்ந்துகொண்டிருக்கிறேன்! துறை சார்ந்த பதிவுகளினை எழுத வேண்டும் என்ற நெடு நாள் ஆசை இன்னமும் மனசுக்குள்ள போட்டு பூட்டி வைச்சிருக்கேன் என்னிக்க்கு வாய்ப்புக்கிடைக்கிறதோ தெரியாது அப்பொழுது இருக்கு அட்டாக்கு!

இந்த சில காலங்களில் பதிவுலகில் நான் பெற்ற நட்புக்கள் - ஹாய் சொல்வதிலிருந்து, ஏதேனும் இக்கட்டான சூழலில் தரும் அட்வைஸ்கள் வரை- என் மீதான அக்கறையினை நினைத்து மனம் மகிழ்ந்துபோகின்றேன்.நட்புகளின் எண்ணிக்கை கூடவும்,இருக்கும் நட்புக்கள் இனி வரும் காலங்களிலும் கூட வரவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!

ஞாபகங்கள் தாலாட்டும்!

ஏலேலங்கடி - 16

கடவுள் இல்லைன்னு யார் சொன்னா? இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்!

மனு நீதி நாள்..?

ஒவ்வொரு திங்கள்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், மாதம்தோறும் ஒரு நாளில் ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் தனித்தனியே கிராமங்களுக்குச் சென்று மனுநீதி நாள் முகாம்களையும் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றனர்.


எத்தனை முகாம்கள், எத்தனை வேறு பெயர்களில் நடத்தினாலும் கூட்டம் கூடுவதற்கு, மனுக்கள் குவிவதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும். முதலாவது காரணம்- மக்களின் குறைகளை நம்மால் கேட்கத்தான் முடிகிறதே தவிர, தீர்க்க முடியவில்லை என்பது.

இரண்டாவது காரணம்- மக்களும் தங்களின் அடக்க முடியாத ஆசைகளுடன் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று முட்டி மோதுகின்றனர்.

பொதுமக்கள் தரப்பில் கேட்டால் முதல் காரணத்தை வழிமொழிவார்கள். அதிகாரிகள் தரப்பில் கேட்டால் இரண்டாவது காரணத்தை வழிமொழிவார்கள்.

இந்தக் காரணங்களில் வழியில் ஆய்வு செய்தால், எது சரி என்பதற்கான விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு சில அதிர்ச்சிகரமான உண்மைகள் நமக்குப் புலப்படும். முன்பைவிடவும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதையும்விட முக்கியமானது, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை என்பதுதான்.

பணிச்சுமை அதிகரிக்க அதிகரிக்க, மறைமுகமாக ஒரு வழியில் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்கும்ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி' வளர்ந்து விடுகிறது.

இதனாலேயே, ஒரு முறை போடப்படும் எந்தச் சாலையும், கட்டப்படும் சாக்கடையும், கட்டடங்களும் பல ஆண்டுகளுக்கும் பலன் தருபவையாக நீடித்து நிலைப்பதில்லை. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் வருவது தவிர்க்க முடியாததுதான்.


இதனாலேயே உடனடித் தீர்வு என்பதெல்லாம், ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே. இதுதான் வெளியே செய்தியாகப் பிரபலமாக்கப்படுகிறது.


நுட்பமான பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் செய்யாமல், குறை தீர்க்கும் கூட்டங்களை இன்னும் வெவ்வேறு வடிவங்களில் நடத்துவது, வண்ணமயமாக நடத்துவது எதுவும் நிரந்தரத் தீர்வைத் தந்துவிடாது.

ஏனென்றால், இவ்வாறாக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் 40 சத மனுக்கள் நிராகரிக்கப்படுபவை. எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள். எப்படித் தீர்வு கிட்டும்?

நன்றி - தினமணி

மேலும் வாசிக்க...

தீபாவளி

தீபாவளி பற்றிய என் கேள்விகளுக்கு பதிலளியுங்களேன் என்று நானானி அம்மா கூப்பிட்டிருந்தாங்க உடனே டக்குன்னு ஒடியாந்தாச்சு!

1) உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

சிறு குறிப்பு வரைக அப்படின்னு கொஸ்டீன் பேப்பர்ல பார்த்தாலே ஆஹா சிக்கிடுச்சுடா நம்ம கொஸ்டீனு ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அப்படின்னு பக்கம் பக்கமா பரீட்சை எழுதின காலம் சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு வந்து உக்கார்ந்துச்சு! (அதுவும் வரலாறு பரீட்சைன்னா அட்டகாசம் தான்!) என்னைப்பத்தி சிறுகுறிப்பா சொல்லணும்னா மயிலாடுதுறையில் வளர்ந்துகொண்டே படித்துக்கொண்டே ஊர் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருவழியா தோஹா வந்து சேர்ந்து சரியா 2 1/2 வருடம் முடிஞ்சுப்போச்சு! இணையம்,நட்புக்கள் & உறவுகள் தொடர்பில் போய்க்கிட்டிருக்கு வாழ்க்கை

2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம் ?

வீட்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்த தருணங்கள் தான் ஞாபகத்துக்கு வருது ! இப்ப குடும்பத்துல உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபொழுதில் ஒன்றாய் இணைந்து கொண்டாட விருப்பமாய் இருக்கிறது பணிச்சூழல் தடுக்கிறது!

3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?

தோஹா - கத்தாரில் இருக்கிறேன்!

4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள் ?

என்ன பெருசா இந்த நாட்ல/ஊர்ல போய் தீபாவளி கொண்டாடிடமுடியும்! சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது.! உறவுகளை பிரிந்து வந்திருந்தாலும் கூட இருக்கும் இடத்திலும் விழாக்காலத்தின் இனிய தருணங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையினை ஊட்டுகிறார்கள் இங்கு தீபாவளி கொண்டாடும் நட்புகள்!



5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
எப்பொழுதும் வாங்கி தைப்பதுதான் பழக்கம்! அதுவும் சிறுவயதில் ஒரு மாதத்திற்கு முன்பே டைலர் வீட்டிற்கு வந்து அளவெடுத்து சென்று விட்டு திரும்ப தைத்த துணிகளை கொண்டு வந்து தரும்போது - அதன் வாசம் பிடித்தப்படியே - வாங்கி வைத்துக்கொண்டு தீபாவளி கனவுகளில் மூழ்கிய நாட்கள் இப்பொழுது கொசுவர்த்தியாகிறது !

இந்த முறை ஊரிலிருந்து வரும்போதே தைத்துக்கொண்டுவந்து போட்டும் கொண்டாகிவிட்டது !

6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?

1ம்மில்ல!

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

இந்த முறை வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு உடன் வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொண்டதோடு முடிவுற்றது - அரட்டைகளிலும் மின்னஞ்சல்களிலும் - வேலை பளு காரணமாக சிறப்பாய் 1ம் செய்ய இயலவில்லை (அட! நம்புங்கப்பா பிசியோ பிசி!)

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?

ஊரிலிருந்து காலத்தில் 10 மணி வரையிலும் வெடிகள் வெடித்துவிட்டு,டிவியில் வந்து உக்கார்ந்துவிடுவேன்.- வெளியில் சுற்றுவது கிடையாது - தெருவில் வெடியை வைச்சுட்டு வீட்டுக்குள்ளே சென்று ஒளிந்துக்கொள்ளும் தைரியசாலிகள் மீது நம்பிக்கை வைத்து வெளியில் சுற்றுவது கிடையாது !

அதிக நிகழ்ச்சிகளை போட்டிப்போட்டுக்கொண்டு வழங்கும் டிவிக்களால் கண்டிப்பாக விசேஷ நாளின் மகிழ்ச்சி சற்று குறைந்துதான் போகிறது!

9) இந்தஇனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள் ? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?

உதவி செய்வேன்!

10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் லைத்தங்கள் ?

கயல்விழி முத்துலெஷ்மி - கண்டிப்பாக தீபாவளி சம்பந்தமாக சிறுமுயற்சி எதேனும் செய்திருப்பார்கள் அது தொடர்பில் பதிவு வரும் அதான் நான் முந்திக்கிட்டேன்

சந்தனமுல்லை - பப்புவோட இளம்பிராயத்தில் நொம்பத்தான் தலையை விட்டு டிஸ்டர்ப்பு செஞ்சாலும், என்னாமா நோட் பண்றாங்க...!( ஒரு டிரெயிலர் கூட கொடுக்கலாம் அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு - பப்பு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டு முடித்ததும் ஆச்சி சூப்பரா இருக்கு நீங்க செய்யாம இருந்ததாலதானே? - அவ்வ்வ்வ்வ்வ் )

ராமலக்ஷ்மி இவுங்ககிட்ட தீபாவளி பத்தி கேக்கலைன்னா எப்பூடி [கட்டாயம் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள் பத்தி, போட்டோக்களோட எதிர்பார்க்கிறேன் அக்கா.]

நிஜமா நல்லவன் - தீபாவளி கொண்டாடியது பத்தி சொல்றதை விட சின்ன வயசு கொசுவர்த்தி சுத்திவிடறதுக்குன்னே கூப்பிடறேன்!

எழு ஞாயிறு!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


இரண்டு அடியில் குறள் வெண்பா கொடுத்துச்சென்ற தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு நிகர் எவருமிலர்.


இரண்டு அடியினை மட்டுமே வைத்துக்கொண்டு இத்தனை நேரம் பேச முடியும் என்று உரைக்கும் இவரைப்போல எவரும் உளரோ...?


நீங்கள்...? தொடர்ந்து செல்லுங்கள் - குரலால் குறள் சொல்லுங்கள்

ஒவ்வொரு சொல்லிலும் துடிககுது புஜம்
நீங்கள் ஜெயிப்பது நிஜம் !

கண்ணதாசன் !

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!

நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்

தருமபுரம் ப.சுவாமிநாதன்


தமிழிசைத் தேவாரப்பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும் கலைமாமணி தருமபுரம் . சுவா மி நாதன் ( 86) வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காலமானார் சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள குன்றத்தூர் தச்சர் தெருவில் வசித்து வந்த அவருக்கு 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வாழ்க்கை கு றி ப் பு : நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத் தி ல் 29- 5- 1923- ம் ஆண்டு, மு. பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற .சுவாமிநாதன், தனது 12- வது வயதி ல் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார்.

அங்கு 24- வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப்பணி புரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார்.

ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக்கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார்.

1968- ல் தருமபுர ஆதீன தேவாரப்பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப்பாடும் திருமுறைப்பணிகளில் ஈடுபட்டார். 100க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் இவர் பாடிய 11 திருமுறைகளும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கட்டி இருக்கும் கோவில்களி லும், தமிழர்களின் இல்லங்களிலும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நன்றி - தினமணி

சைவ தமிழ் உலகெங்கும் ஓங்கி ஒலிக்க காரணமாய் அமைந்த, தேவாரபாடல்களில் மீண்டும் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்திழுத்த தருமபுரம் .சுவாமிநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

தருமபுரம் ப.சுவாமிநாதன் பாடிய பாடல்களை கேட்க..

கை கழுவியாச்சா...?


சாப்பிடப்போறதுக்கு முன்னாடி கை கழுவணுமா அட வேண்டாம் போப்பா..! என்ற மனத்தோடு இருந்த இளம் பிராயத்து நினைவுகள் இன்றும் எப்பொழுதாவது தலைதூக்குவதுண்டு. பரபரப்பான மனநிலையோ அல்லது பதட்டமான மனநிலையிலோ சாப்பிடும் சூழல் இருக்கும்போது இப்படித்தான் தோன்றும்! ஆமாம் என்ன கெட்டுப்போனதை தொட்டுட்டோம் போய் கை கழுவிட்டு வந்து சாப்பிடறதுக்க்...? அப்படின்னு மனசு சமாதானமாகிவிடும்.

முன்னாடி எல்லாம் சாப்பாட்டு தட்டை கழுவிட்டு வந்து சாப்பிடற வைபோகத்துல தட்டோட சேர்ந்து நம்ம கை அழுக்கும் போயிருச்சுன்னு மனசுக்குள்ள காம்ப்ரமைஸ் கோட்டை கட்டி வைச்சிருந்தேன் கை கழுவிட்டு சாப்பிடுங்க அப்படின்னு ரொம்ப தடவை சொன்னப்பிறகுதான் சரி நாமளும் கொஞ்சம் இந்த பழக்கத்தை ஃபாலோ பண்ணுவோம் அப்படின்னு சொல்லி கொஞ்சம் வருசமா நடைமுறைப்படுத்திக்கிட்டு வாரேன்!

நண்பர்களுடனான விருந்து வைபோகங்களில் கிண்டலாய் உபயோகிக்கும் வார்த்தைத்தான் அட என்னடா கை கழுவுறேன் கால் கழுவுறேன்னு எவண்டா கண்டுபுடிச்சான்னு சில பல சிரிப்பொலிகள் கிளம்ப காரணமாகியிருந்த கமெண்ட் மட்டுமே!

கை கழுவாம சாப்பிட்டா சகல நோய்களும் வந்து வாழ்ந்துட்டு போற அளவுக்கு உடம்பு படுவீக்காகிடுமாம்! மட்டும்மில்லாம உடலுக்கு ஒவ்வாத பொருட்களின் வெளியேற்றம் அதிகம் நடத்தும் வாந்தி பேதி போன்ற சம்பவமும் உண்டேய்!

இன்று 15 அக்டோபர் 2010 உலக முழுவதும் கை கழுவுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும், தீமைகள் தடுக்கப்படுவது பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்த குறிப்பாக இளம் வயதினரிடம் இது போன்ற விசயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் உலக நாடுகளுக்கான சுகாதார அமைப்பு பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டிருக்கிறது!

உங்களால் இயன்ற வரையில் உங்களுக்கு தெரிந்த அறிந்த சுற்றுவட்டார நட்புக்கள் உறவுகளிடமும் இந்த விசயத்தை சொல்லுங்க எல்லாம் ஒரு வெளம்பரம்தானே!


டெல்பின் டாக்டரம்மாவின் பார்வையில்...

வாங்க வாங்க.. கையை நனைச்சுட்டு போங்களேன்......

வெண் மேகக்கூட்டங்கள்!

கங்கையின் கரைகளில் சுற்றி அலைந்த நாட்களில் ஒரு வார்த்தை கூட பேசாமல்,பாறையின் மீது அமர்ந்தப்படியே ஆகாசத்தை பார்த்தபடியிருக்கும் துறவிகளை நான் கண்டிருக்கிறேன் பறந்து செல்லும் பறவையை பார்ப்பது போல மேகங்கள் கடந்துபோவதை துறவிகள் ஆனந்தத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் சில நேரங்களில் தங்களது பாறைகளிலிருந்து எழுந்து நின்று எதையோ கை கொட்டி ரசிப்பார்கள்.ஆனால் என்ன காண்கிறார்கள் என்று எவருக்கும் தெரியாது!
- எஸ்.ராமகிருஷ்ணன்



மேகமூட்டம் சூழ்ந்த நீல நிற வானத்தினை அமர்ந்தப்படியோ அல்லது படுத்த நிலையில் பார்ப்பது என்பது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு நிகழ்வுதான்!

வெண்மேககூட்டங்கள் அலைந்து, திரியாமல் செல்லும் அழகும் ஒரு வேறு வெண்மேகங்களுக்கு இடையில் தோன்றும் வெற்றிடத்து நீலமும்,வெண்மேகத்தில் ஓரங்களில் வெளிப்படும் உருவங்கள் குறித்தான உவமைகளும் எண்ணங்களும் எப்பொழுதுமே சுவாரஸ்யமானதாகவே அமைந்திருக்கின்றது! மொட்டை மாடியில் கான்கீரிட் உறுத்தும் வெற்று தரையில் படுத்தபடியே பல மணித்துளிகள் வானத்தை நோக்கி நோட்டம்மிட்டப்படியே அமர்ந்திருக்கும் அந்த தனிமை!

எப்பொழுதும் எதேனும் பயணத்திற்கு ஆயத்தமாகும் நாளில் முன் தினத்தில் இது போன்ற தனிமையினை தேடுவது பல வருடங்களாக பழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்! இங்கு இன்று பார்க்கும் இதே வான மேககூட்டங்களை நாளை இன்னுமொரு இடத்திலிருந்து பார்க்கப்போகின்றோம் என்ற எண்ணம் கட்டாயம் இன்பத்தினையும்/துன்பத்தினையும் மாறி மாறி தந்து கொண்டேதான் இருக்கின்றன!

வானத்தினை பார்த்தப்படியே -பற்றியப்படியே- தற்காலிகமாய் அனுபவித்த இனிய நாட்களை மனதிற்குள் தொகுத்துக்கொள்வது அந்த நேரத்தின் பணியாக இருக்கும்! தொகுத்த நினைவுகளை பிறிதொரு இடத்தில் பிறிதொரு நேரத்தில் பிரித்து பார்த்து மகிழ்ந்திருக்கும் அதே மனம்! ஒவ்வொரு முறையும் இது போன்ற நிகழ்ச்சிகள்தான் தொடர்கின்றன!

மேகமூட்டங்களை ரசிப்பது மட்டுமல்ல,விவசாய நிலங்களின் பச்சை நிறம் பரவலாக பார்வையில் படும்படியாக வரப்புக்களில் அமர்ந்தபடியும்,ஆற்றின் கொள்ளளவுக்கு சற்றே குறைவாக செல்லும் நீரேட்டத்தினை நின்றபடியோ அல்லது அமர்ந்த நிலையிலோ உன்னிப்பாக கவனிப்பதுவும் என எல்லாமே வாழ்க்கையின் பயணத்தில் நம்மை வழி மறித்து செல்லும் இனிய அனுபவங்களே - ரசித்திருங்கள் - சாதாரணமாய் வாழ்வதை விட ரசித்து வாழ்வதிலேயே வாழ்க்கையின் அத்தனை அடிப்படைகளும் நிறைவு பெறுகின்றன !

ப்ளான்




எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதிச்சு 40X60 சதுர அடியில மனை வாங்கிப்போட்டாச்சு எப்படியாவது வீட்டை கட்டிப்புட்டோம்முன்னா வயசான காலத்துல சொந்த வூட்ல ஹாய்யா காலை நீட்டிப்போட்டுக்கிட்டு உக்கார்ந்து தின்னலாம் - இதுதான் எந்தவொரு மனிதனுக்கும் கனவு ஆசை இலட்சியம் இன்னபிற எதிர்காலம் சம்பந்தப்பட்ட எல்லா வார்த்தைகளுமே...!

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு இடம் வாங்குவது அத்தனை பெரிய கஷ்டமான காரியமாக யாருக்கும் தோன்றவில்லை ஆனால் வீடு கட்டுவது என்பது பெரிய மலைப்புக்குரிய விசயமாக இருந்தது உண்மை! வீடு கட்ட லோன் வாங்க அலைவதும், லோன் கிடைப்பது என்பதும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தக்கூடிய சமாச்சாரங்கள்! இப்பொழுது நிலைமை தலைகீழ்!

லோன் கொடுக்க போட்டிப்போட்டுக்கொண்டு முன்வரும் கடன் நிறுவனங்கள் ஏராளம் ஆனால் நிலத்தின் மதிப்பு துரத்திக்கொண்டு போனாலும் பிடிக்க இயலாத உச்சிக்கு சென்று கொண்டே இருக்கிறது - நின்றபாடில்லை! சரி இந்த கடன் கவலை நிலம் இதெல்லாம் எப்படியோ சமாளிச்சு வந்தாச்சு அடுத்த கட்டம் என்ன வீடு கட்டி குடி போக ஆயத்தமாக வேண்டியதுதான்! பாதி உழைப்பில் நிலம் வாங்கினால் மீதி உழைப்பில் வீடு கட்ட முடியும் என்ற சூழ்நிலைதான் தற்போது! அதற்காக வாடகை வீட்டிலேயே குடியிருந்து காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைத்தால் அதுவும் மிக சுலபமான காரியமன்று!

முன்பெல்லாம் வாடகை வீட்டில் நீண்ட வருடங்கள் குடியிருந்து, வீட்டு ஓனரின் குடும்ப நண்பராக மாறியிருந்த காலமெல்லாம் போயே போய்விட்டது! வாடகை குடியிருப்பில் இப்பொழுதெல்லாம் சில வருடங்கள் மட்டுமே காலம் தள்ளமுடியும் என்ற நிலைதான்!

சரி டைட்டில் ப்ளான்னு இருக்கு ஆனா என்னமோ சொல்லிக்கிட்டிருக்கேன்னு நீங்க நினைச்சா - உண்மைதான்! சம்பந்தமில்லாம இருந்தாலும் வீடு கட்டப்போறதுக்குன்னு ஒவ்வொரு மனிதனும் முதலில் ப்ளான் பண்ணுவது கடன் & நிலம் பெறுதல் அதை சரியாக ப்ளான் செய்து விட்டால் அதற்கு பிறகு வரும் நிகழ்வுகள் கஷ்டப்படுத்தாமல் இருக்ககூடும்! குறைந்த விலைக்கு கிடைக்கிறதே என்று வெகு தொலைவுக்கு சென்று விடாமல்,அதே சமயத்தில் நிலம் வாங்கி வீடு கட்டும் பணத்தின் அளவுக்கு நிலம் மட்டுமே வாங்கிட முடிவு எடுக்காமல் சற்று மார்கெட் நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்பதும் மிக அவசியம்! நல்லா கவனிங்க!

ஏலேலங்கடி - 15



எந்தவொரு விசயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணுனா இப்படித்தான்...!

ப்ளான் பண்ணி பண்ணனும் !

டீசண்ட் ஒர்க்!


படிச்சு முடிக்கிற இடத்துல மட்டுமில்ல அதுக்கு பிறகு வருகின்ற முக்கியமான கட்டங்களில் எல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்!


டீசண்ட் ஒரு வேலை கிடைச்சா போதும்?

டீசண்டான ஒர்க் பண்ற பையன் கிடைச்சா போதும்? இன்னும் பலவிதமான டீசண்ட் கோட்பாடுகள் இருக்கு !

இதுல மிக முக்கியமான பெரும் ஆதரவோட இருக்கிற விசயம் டீசண்ட் ஒர்க் - இதை எந்த ஸ்கேல் வைச்சு அளந்து சொல்லியிருக்காங்கன்னுல்லாம் தெரியாது! டீசண்டான வேலை என்பதே, நாம் எதிர்பார்க்கின்ற அதிகபட்ச தேவைகளாகவே இதுவரையிலும் இருந்துவருகின்றது -அதற்கேற்ற வகையில் நிறுவனங்களோ அல்லது அரசோ தலையாட்டுவதும் அரிது!

ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு விதமான ஸ்கேல் கொண்டு ஃபிக்ஸ் பண்ணிக்கிறதுதான் டீசண்ட் ஒர்க் ரூல்!

மாசா மாசம் சம்பளம் கரீக்டா வரணும்,வருசத்துக்கு போனஸ் கரீக்டா வரணும் லீவு நாள் ரொம்ப குறைச்சலா இருக்ககூடாது அதிகமா வேலை செய்ய சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது என்பது ஒரு விதமான ஸ்கேல்!

எந்தவிதமான தொல்லையும் இருக்ககூடாது நாம நம்மளுக்குன்னு கொடுத்த வேலையை செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு நினைக்கறது இன்னொரு டைப்!

இப்படி ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொருவிதமான ஃபீலிங்க்ஸ் உண்டு - டீசண்ட் ஒர்க் அப்படிங்கற விசயத்தில ஆனா பொதுவாகவே நல்லதொரு தன்னார்வத்துடன் மகிழ்ச்சியாக செய்யப்படும் எந்த பணியுமே நல்ல பணிதான்!

உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மை குறைக்கப்படும் இந்நேரத்தில் தனிமனிதனுக்கு தகுதிக்குரிய வேலை அடிப்படை வசதிகள் மற்றும் சமூகத்தில் எல்லாருக்கும் உரிய இணையான அந்தஸ்தினை பெறுகிறார்களா என்று கண்காணித்திடவும், குறைகளினை நிறைவேற்றிடும் முயற்சிகளினை மேற்கொள்ளவும்,வேலை வாய்ப்புக்களில் பெண்களின் உரிமையினை நிலைநாட்டவும், உலக நாடுகளில் இயங்கிவருகின்ற தொழிலாளர் சங்கங்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 07 - WORLD DECENT WORK DAY

சரி நாம பாக்குற பணி டீசண்டானதுதானா அப்படின்னு எதாச்சும் நெருடல் வருதா? வரக்கூடாது ஏன்னா மனிதர்களால் செய்யக்கூடிய எல்லா பணிகளுமே கண்ணியமானதுதான் டீசண்டானதுதான் - அதை நேசிக்கும்போது!

டீசண்ட் ஒர்க் அப்படின்னு நாம எந்த எல்லைக்கோடும் (செட்) பண்ணிக்கிடவேண்டாம்! பொதுவாக நாம செய்யகூடிய பணிகளில், கீழ்கண்ட விசயங்களில் ஈடுபாடு காட்டினாலே போதும் அந்த பணி கண்டிப்பாக மிகுந்த மனநிறைவினை தரும் பணியாகவே இருக்கும்!

-வரையறுத்துக்கொண்ட உரிமைகள் எந்த நெருக்கடியிலும் விட்டுக்கொடுக்காத தன்மை (நமக்கென இருக்கும் ரெஸ்பான்ஸபிலிட்டியை விட்டுக்கொடுக்காதிருத்தல்)

-கட்டளையிடாமலே தம் கட்டுக்குள் எந்த ஒரு பணியினையும் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் (ஆர்டர் போட்டாத்தான் நான் என்னோட ஒர்க் செய்வேன்னு நினைக்காதிருத்தல்)

-தொடர்கின்ற அல்லது செய்துக்கொண்டிருக்கின்ற பணியினை தன்னார்வத்துடன், மேம்படுத்திக்கொள்ள முயலும் தன்மை (நம்ம பணியினை இன்னும் எப்படியெல்லாம் ஃபைன் ட்யூன் பண்ணி செய்யமுடியும் அப்படிங்கற ஆர்வம்)


டிஸ்கி:-அடைப்புக்குறிகளில் நம்ம தமிழ்ல எழுதியிருக்கேன் கஷ்டமா இருந்தா சொல்லுங்க !

மாற்றங்கள் - 1

ரேஷன் கடைகளில் இருப்பு அளவினை ஏழை எளியோரும் அறிந்துக்கொள்ள ஏதுவாக, இருப்பு விபரங்களினை SMS மூலம் அறிந்துக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும்!



PDS என்று டைப் செய்து, அத்துடன் மாவட்டத்திற்குரிய பிரத்யோக எண்ணினையும் மற்றும் ரேஷன் கடை எண்ணினையும் சேர்த்து அனுப்பினால் தகவல் கிடைக்கும் ! கிடைக்கும் !! கிடைக்கும் !!!

வாழ்த்து அட்டை!


பொங்கல்,தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற இன்னபிற விசேஷங்கள் வருகிறதென்று தெரிந்தால் ஒரு மாதத்திற்கு முன்பே ரொம்ப ஜாலி + இண்ட்ரஸ்ட் ரெண்டும் கலந்து கட்டி அடிக்கும் !குட்டி பையனை இருக்கும்போது கடையில கார்டு வாங்கி வாழ்த்துக்கள் எழுதி அனுப்புற பழக்க இருந்துச்சு பிறகு இப்ப சுட்டி பையன் ஆனாப்பிறகு எதையாச்சும் கிரியேடிவ்வா செஞ்சு வாழ்த்து சொல்லணும்ன்னு மனசு கிடந்து துடியாய் துடிக்கும்! அதுவும் போட்டோஷாப் இன்னும் பல கிறுக்கு வேலைகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்ட பிறகு நிறைய நிறைய டெஸ்ட் செஞ்சு பார்க்க தோணிடும்!

கூகுள்ல அலைஞ்சு திரிஞ்சு சூப்பரா ஒரு போட்டோவை சுட்டு அதுல என்னோட (இல்லாட்டி மல்லு ஃபிகர்) போட்டோவை போட்டு பேக்கிரவுண்ட் எல்லாம் சூப்பரா செட் பண்ணி கீழ அழகாய் வாழ்த்துக்கள்ன்னு டைப் செஞ்சுட்டு அதை அப்படியே ஒரு பத்து பதினைஞ்சு ப்ரெண்ட்ஸ்க்கு அனுப்பிச்சு வைச்சுட்டா ஹப்பாடான்னு ஒரு திருப்தி வரும்! அதுக்கு ரிப்ளை வருதோ அல்லது அந்த வாழ்த்து or போட்டோ யாரையாச்சும் ஈர்க்குதா அப்படின்னு எல்லாம் கவலைப்பட்டதே கிடையாது!- (ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பிச்சதுக்கு ஒரு நண்பர் அதெல்லாம் நம்ம கலாச்சரம் இல்லைன்னு போட்டு கும்மிட்டாங்க!)

இயல்பாவே வாழ்த்து அட்டைகள் மேல ஒரு பிரியம் இருக்கறவங்களாலதான் தொடர்ந்து இது மாதிரி வாழ்த்து அட்டைகள் செஞ்சு அல்லது வாங்கி அனுப்பிச்சிக்கிட்டே இருக்கமுடியும்! இதை செய்யறதால என்ன பெருசா சாதிச்சுட்டோம் பதில் ஒருத்தங்க கூட போடமாட்டேங்கறாங்களேன்னு சில சமயம் தனக்கு தானே கேள்விகள் ரைஸ் ஆனாலும்,வெகு சீக்கிரத்துலயே அதை மறக்க வைக்கிற மாதிரி அடுத்து வர்ற விசேஷ நாளுக்கு என்ன செய்யலாம்ன்னுதான் யோசிக்க தோணும்! - லைஃப்ல இதெல்லாம் சாதா’ரண’மப்பான்னு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க :)

போட்டோஷாப்ல ரெடி பண்றது ஒரு ஸ்டைல்ன்னா இன்னும் சில பேர் ஓவியங்கள் வரையறது,படங்களில் சின்ன சின்ன மணிகளை கொண்டு ரொம்ப பொறுமையாக ஒட்டி அனுப்புவாங்க! -சூப்பரா இருக்கும் - முன்பெல்லாம் இப்படி வரும் ஓவியங்களை நிறைய பேர் ஆர்வத்தோட ஃப்ரேம் செஞ்சு,யாரு கொடுத்தான்னு பேர் எல்லாம் எழுதி வீட்ல மாட்டி வைச்சுப்பாங்க! இப்ப அதெல்லாம் ரொம்ப கம்மியாகிடுச்சு !

சரி இப்ப எதுக்கு இந்த பீலிங்க்ஸ் அப்படின்னு நீங்க கேக்கமாட்டீங்க இருந்தாலும் சொல்லவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கே! (பின்னே எண்ட்கார்டு போடணும்ல!) இன்னிக்கு உலகம் பூரா வாழ்த்து அட்டைகள் கிரியேடிவா தாங்களாகவே தயாரிப்பவர்களை உற்சாகப்படுத்தணும்ன்னு உலக நாடுகள் சபை சார்பாக WORLD CARD MAKING DAY கொண்டாடுறாங்க அதான்!

வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் ஆர்வம் நிறைய இருக்கறவங்க ந்த பக்கம்போனீங்கன்னா - ஏகப்பட்ட வித விதமான டிசைன் கார்டுகள் செய்யுறதுக்கு மாடல்கள் கொடுத்து - சோறு போட்டு குழம்பும் ஊத்துறாங்க! டிரை பண்ணி பாருங்க!

மகாத்மா!



இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர்.மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.
-மகாத்மா காந்தி

மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!

photo from independent

LOVE பண்ண...!

பெரிய பெரிய விஷயங்கள் நாம் செய்யணும்னா அதுல வர்ற பெரிய சிறிய ரிஸ்குகளை நாம எதிர்த்து நின்னாலே போதும் பாதி கிணறு தாண்டினா மாதிரிதான்!

பெரும்பாலும் யாருக்கும் வருத்தப்படாம ஊரைச்சுற்றி திரியற கைப்பிள்ளைகளுக்குத்தான் நிறைய ரிஸ்க் மேனேஜ்மெண்ட் டெக்னிக்ஸ் தெரிஞ்சுக்கணும்! அப்பத்தான் சேதாரமே இல்லாம சிங்கிளா சிங்கம் மாதிரி சிலுப்பிக்கிட்டு திரியலாம்!

இங்க நாம லவ்வு டாபிக் மட்டும் எடுத்துப்போம்! அதுல முதலில் என்ன மாதிரியான ரிஸ்க்குகள் இருக்குன்னு கண்டுபிடிக்கணும்!

ஃபிகருக்கு அண்ணன் தம்பிகள் அல்லது சித்தப்பா பெரியப்பா யாராச்சும் இருக்காங்களா? இல்ல ஃபிகரு வீட்லயோ சும்மா ரெண்டு தடிமாடுகளை தீனி போட்டு வளக்கிறாங்களான்னும் கொஞ்சம் பேக் கிரவுண்டு பார்த்து வைச்சுக்கணும்! பார்ட்டீ எப்ப வெளியெ வருது எப்ப உள்ளே போகுதுன்னு டைமிங்க் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி இந்த மாதிரி பயமக்களோட டைமிங்க தெரிஞ்சுவைச்சுக்கணும்!

(இந்த டெக்னிக் பத்தி நான் விலாவாரியா ஒரு இடத்தில உளற போய்த்தான் இதை பெரிய மேட்டரா டெவலப் பண்ணி ஒரு தெத்துப்பல்லு பிகரா புடிச்சு போட்டு படம் எடுத்துட்டாரு ஒரு டைரக்கடரு! அது என்னமோ சுப்ரமணியபுரமோ காஞ்சிபுரமோ சரியா தெரியலை! சரி அதை விடுங்க!)

இப்ப நாம நமக்கு வரப்போற ரிஸ்குகளை பத்தி கொஞ்சம் மேட்டர் தெரிஞ்சு வைச்சிருப்போம்ல அதையெல்லாம் நம்ம ப்ரெண்ட்ஸ்களோடு ஒண்ணா சேர்ந்து உக்காந்து கலைச்சுப்போட்டு கிளாரிபிகேஷன் கேட்டுக்கிட்டு அவுங்கவுங்க அனுபவத்தையெல்லாம் நல்லா உன்னிப்பா கேட்டு தெரிஞ்சுக்கணும்!

இதுதான் ரொம்ப முக்கியம் நாளைக்கு உயிருக்கோ அல்லது உடம்புக்கோ ஆபத்துன்னா எப்படி கால்ல விழுந்து எஸ்ஸாகறதுங்கறதுலேர்ந்து கையில கட்டையை எடுத்துக்கிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு வீண் சண்டைக்கு போறது வரைக்கும் இங்கதான் தெரிஞ்சுக்க முடியும்!

நமக்கு வரப்போற ரிஸ்க்கு பத்தி நாம கொஞ்சம் விவரமா தெரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் நம்மளால நம்ம ஃபிகருக்கு ஏற்படப்போற ரிஸ்க்குகள் என்னான்னும் நாம பிளான் பண்ணிக்கணும்! அது பத்தி அவ்ளோவா ஐடியா இல்லாததால அவுங்கவுங்க ஐடியாவுக்கே இதை பண்ணி பார்த்துடுங்க! (மீ எஸ்கேப்பூ!)

இனி எல்லாம் சுகமேன்னு ஒரு ஸ்டேஜ் வர வரைக்கும்த்தான் இந்த ரிஸ்கு எல்லாம் ஆனா இங்க நான் சொன்ன கொஞ்ச கொஞ்சம் ரிஸ்குகள் எல்லாமே ஜாலியா யூத் ஸ்டைல்ல நல்லா மொரு மொருன்னு ரஸ்க் சாப்பிடற மாதிரியே இருக்கும்! ( மொத்து விழுந்தாலும் வாங்கிக்கிட்டு அப்படியே ஃபிகர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சா....! ரைட்டு .கே!)

இல்ல எனக்கு ரிஸ்க்கு எடுக்கவே பிடிக்காது! பயம் அல்லது அதை எடுக்காம நான் வாழ்ப்போறேன்னு சொன்னா சிங்கிள் லைன்ல ரிஸ்க் எடுக்காம வாழற வாழ்க்கையினை பத்தியும் சொல்லிடறேன்!

வாழ்க்கை என்பதே வாழ் + கை என்ற இரண்டு எழுத்துக்களையும் இணைத்த ஒன்றுதான் அதில் இணைக்கும் சொல்தான் ரிஸ்க் என்ற சொல்லின் கடைசி ”க்”

இரு கைகளை கொண்டு உழைத்து வாழ வேண்டும் அதுக்கு காரணமாக அமைவது நீங்க எடுக்கும் ரிஸ்க்குகள்தான் ! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!