Showing posts with label ஃபீலிங்க்ஸ். Show all posts
Showing posts with label ஃபீலிங்க்ஸ். Show all posts

சுட்டி சுட்டி ரோபோ !

சிட்டி சிட்டி ரோபோ - ஏ
சுட்டி சுட்டி ரோபோ
பட்டி தொட்டி எல்லாம் - நீ
சுட்டி சுட்டி ரோபோ


#தலைவர் தரிசனம் #எந்திரன் #தோஹா


இங்கீலிசு ஸ்கூலேய்!


கைகள் கைகளுக்குள் கைகள் வைச்ச கொலாஜ்;

குட்டீஸ்களின் போட்டோக்கள் அதை சுற்றிலும் அழகாய் கைவண்ணத்தில் பூக்கள்;

வித விதமான மேக்கப்களில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் டீச்சர்ஸ்;

மொத்தத்தில் ஸ்கூல், ஆபிஸ்ன்னு தொடங்கி எங்கெங்கு காணினும் கலர்களடா ரேஞ்சுலதான் பெயிண்டிங்க்ஸ் போட்டு சுவரை அலங்காரம் செஞ்சிருக்காங்க எல்லா பெயிண்டிங்க்ஸும் பசங்களோட டெரர் அட்டாக்தான்! - சரி அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு வாங்க!

இன்னிக்குன்னு பார்த்து நான்-யூனிபார்ம் டேவாம் (அப்புடி டேவெல்லாம் கொண்டாடுறாங்க - ஹம்ம்ம்ம்) டீ சர்ட்டு முக்கால் டவுசரு/ஜீன்ஸ் பேண்ட் போட்ட வாத்தியாருங்க யூனிஃபார்மெல்லாம் இல்லாம குட்டீஸ் எல்லாம் வித விதமான டிரெஸ் போட்டுக்கிட்டு குறுக்கும் நெடுக்குமாய் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்கற அந்த இடத்துல நாங்க போன வேலையெல்லாம் மறந்துட்டு ன்னு வாய் பொளக்க பார்த்துக்கிட்டு இருந்தோம்ன்னு தான் சொல்லணும்!

எல்லா டீச்சர்ஸும் ஒரு ரேஞ்சுக்கு ஓடிக்கிட்டும் வெளையாடிக்கிட்டும் பாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க! இண்டோர் ஸ்டேடியத்துல ரெண்டு குட்டீஸ் குப்புறப்படுத்துக்கிட்டு கன்னத்துல கை வைச்சுக்கிட்டும்,மத்த குட்டீஸ்ங்க ஒரு ஏழு - ஏழரை - எட்டு இருக்கும் டீச்சரை சுத்தி உக்கார்ந்துக்கிட்டு இண்ட்ரஸ்டா கதை கேட்டுக்கிட்டிருக்காங்க - ப்ளே செஷன் முடிஞ்சு ரெஸ்ட் டைம் கதை சொல்லியாம் அந்த வாத்தியாரு!(ஹம்ம்ம்)

சயின்ஸ் லேப்ல கன்னத்துல கை வைச்சுக்கிட்டு ஒரு செவப்பு அம்மிணி உக்காந்திருந்தாங்க கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் 7வது பசங்களாம் ஹாய் டீச்சர்ன்னு எண்ட்ரீ கொடுத்துக்கிட்டே வந்து என்னமோ ப்ரெண்ட்கிட்ட கிண்டல் அடிக்கிற மாதிரி அம்மிணி ஏன் சோகமா இருக்கீங்க ரேஞ்சுக்கு கொஸ்டீனு போட்டுக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் பெற ஒரே கலகல சத்தம்தான்! (ஹம்ம்ம்ம்)

ஒருவழியா வந்த வேலைகள் முடிஞ்சு வெளியில வந்து நின்னா, ஒரு டீச்சரு கழுத்தில நிறைய வளையத்தை மாட்டிக்கிட்டு ஒடிவராரு பின்னாடி பார்த்தா லைன் கட்டி குட்டீஸ்ங்க ஒடியாறாங்க! எல்லாம் தம்மாத்துண்டு - 3- 4அடிதான் இருக்கும் - ரயிலு ஓட்டிக்கிட்டு போறாராமாம்! (ஹம்ம்ம்ம்) - அதுல ரெண்டு மூணு குட்டீஸ்ங்க நம்ம புதிய வானம் எம்.ஜி.ஆரு ஸ்டைல்ல தாவி தாவி போனது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு!

இப்படியே நிறையா ஹம்ம்மிக்கிட்டே ஒரு 4 மணி நேரம் சுத்தி சுத்தி வந்ததுல ஒரு விசயம் மட்டும் - மனசுல நிறைஞ்சிருந்தது -குட்டீஸ்ங்க முகத்துல எந்தவிதமான டல் மூட் அல்லது அழுகையோ இல்லை என்பதுதான்! எஜுகேஷன் சிஸ்டம் என்னமோ பிரிட்டிஷ் சிஸ்டமாம்!

படிக்கிற காலத்துல டெய்லி எந்திரிச்சு முதல் நாள் செய்யாம விட்ட ஹோம் ஒர்க் செஞ்சுப்புட்டு ரொம்ப கடுப்போட ஸ்கூலுக்கு போகும்போது போற வழியில பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கையில பேக் எடுத்துக்கிட்டு ஆபிஸ் போற ஆபிசர் அண்ணன்களை பார்த்து நாமும் டப்புன்னு டாப் கியரை போட்டு ஒரே நாள்ல இப்படி ஆகிடமாட்டோமான்னு ஃபீலிங்க் வுட்ட கால நினைவுகளெல்லாம் மறந்து போய் மீண்டும் குழந்தைகளாகி ஸ்கூலுக்கு போகலாமான்னு ஏக்கம்தான் வந்துச்சு நின்னுச்சு!

பிராக்கெட் குறிப்பு - படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போகாம & படிக்காம இப்படி பிராக்கெட் போட்டு விட்ட பெருமூச்செல்லாம் போகட்டும் அந்த இறைவனுக்கே!

வெட்கி தலை குனிகிறேன்!


ஒவ்வொரு முறையும் நகர்வலப்பொழுதுகளில் கண்டிப்பாய் கண்ணில்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் யாரேனும்!

பேசும் தமிழில் நம்ம ஊருக்காரங்கன்னு உடன் அடையாளம் கண்டுக்கொள்ளவும் முடிகிறது!

ஆனால்... இதுவரையிலும் யாரிடமும் முன்போய் நின்று பேசியதில்லை :-(

பேசுவோமா...? என்று ஒரு முடிவெடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்த எத்தனிக்கும் அந்த சில கண் இமைக்கும் நொடிகள் இன்னும் பல பல கணக்குகளை போட்டு மனம் தடுக்கிறது வார்த்தைகள் வெளிப்படாமல் மறுத்து மறைகிறது!

பேசப்போவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும்போது மிக மகிழ்ச்சியடையும் மனம் சட்டென்று நெகடிவ் எண்ணங்களுக்கு தாவிவிடுகிறது.அது வரையிலும் மகிழ்ச்சியாக கணக்கிடப்பட்ட மெஜாரிட்டி இன்பங்கள் சில மைனாரிட்டி துன்பங்களில் வீழ்ந்துப்போகின்றது.

பேசுவோமா என்ற முடிவெடுத்த சில விநாடிகளிலேயே வந்து விழும் கேள்விகளில்

நாம் பேசினால் பதில் சொல்லுவார்களா..?

நம்மை விட்டு விலகி சென்றுவிட்டால் அவமானப்பட்டு போய்விடுவோமா?

இல்லை எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?

நாமே முன்வந்து பேசுவதை தவறாக எடுத்துக்கொண்டால் நினைத்துவிட்டால்...?

ஏன் இது போன்ற இரு வேறு மாறுபட்ட சூழலினை சில விநாடிகளில் முடிவுகள் தாறுமாறாய் வந்து விழுகின்றன?

பேசுவதால் பெறப்போகும் நன்மை தீமைகளை கணக்கிட்டு டக்கென்று முடிவுகளை கூறுமளவுக்கு நம் மனத்திற்கு அறிவுருத்தியிருப்பது நாமா? அல்லது நாம் சார்ந்திருக்கும் சமூகமா?


கடந்து விட்ட கணப்பொழுதுகளை நினைத்து பிறிதோர் சமயத்தில் மனம் வெட்கி, அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கிறது - பேசியிருக்கலாமோ...?