
நீ பேசிடும் போது பேசாமல்,
நான் மௌனம் தந்திடுவேன்
ஒரு புராஜெக்ட் ரொம்ப தடுமாறி, தாறுமாறா போய்க்கிட்டிருக்கும்போது, ரெக்கவரி/அர்ஜெண்ட் மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வர்றவன் போறவனெல்லாம் கேட்கற கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல, சமாளிக்க தெரிஞ்சிருந்தாலும் கூட சும்மா கம்முன்னு அவங்க சொல்றத கேட்டுக்கிட்டு, கையில எதாச்சும் பேப்பரை வைச்சுக்கிட்டு கிறுக்கிகிட்டு இருக்கிறதுதான் ரொம்ப பெஸ்ட்!
தேவை/தேவையில்லாம நாம பதில் சொல்லப்போயி அதை அந்த பெரிய மனுசங்க - கேள்வி கேட்கறவங்க எப்பவுமே நம்மளை விட ஹையர் பொசிஷன் அல்லது கேள்வி கேட்குற பொசிசன்ல இருக்கறவங்கதானே! - காண்ட்ரவர்ஷியலா எடுத்துக்கிட்டு இன்னும் இம்சையை கொடுக்கத்தான் பார்ப்பாங்க! [அதான் டிரெண்ட்டே]
அந்த மாதிரி இக்கட்டான சமயத்துல, ஒரு பிரச்சனையை சமாளிக்கவேண்டி நாம ஏதோ சொல்லப்போக அது இன்னும் பல - ஒதுங்கி பதுங்கி, பழசாகிப்போன பிரச்சனைகளையெல்லாம் - சேர்த்து கொண்டு வந்து விட்டுட்டும்! மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஆரம்பத்துல இருந்த ஒரே ஒரு பிரச்சனைக்கு தீர்வுங்கற பேர்ல ரவுண்ட் கட்டி யார் என்ன சொன்னாலும் மெளனமா இருந்து, எல்லாரும் தொலைஞ்ச பிறகு நமக்கே நமக்கான பிரச்சனையை சால்வ் பண்ணுறதுல பிசியாயிடணும்! அதானே கரீக்ட்டு! [மேனேஜ்மெண்ட்ல ஃபீல்டுல நிக்கிறவங்க/உட்கார்ந்திருக்கிறவங்க/ஓடிக்கிட்டிருக்கிறவங்க இது பத்தி மேலதிக அட்வைசு தரலாமே!]
டிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு?!














