வீட்ல சும்மா இருந்தா எப்படி? - தண்டச்சோறு


பொதுவாக அனைவரின் மனதிலும் ஏற்படும் எண்ணங்கள்,
பலர் நினைக்கும் ஒரு விஷயம்-வெளிப்படுத்த இயலாத-சிலர் வெளிப்படுத்தும்போது, அட நாம் என்ன நினைச்சோமோ, அப்படியே புட்டு, புட்டு வைக்கிறார்ன்னு ஒரு ஆச்சரியம் ஏற்படும்.

சில மனிதர்களிடம் மட்டுமே இத்தகைய திறமைகள் இருப்பதாகவே நான் நினைக்கிறேன் அப்படிப்பட்டவர்களுள் எனக்கு பிடித்தமானவர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தவார விகடன் "கேள்விக்குறி"யில் இவரின் எழுத்தை வாசித்து பாருங்களேன்

ஒரு வேலை - வாழ்க்கையை சிறப்பானதாக்கிக்கொள்ள- பெற எதிர்கொள்ளும் அனுபவங்களின் தொகுப்பு

//தவிர்க்க இயலாமல் அந்த வலியை ஒவ்வொரு-வரும் ஏதோவொரு வயதில் எதிர்கொள்கிறார்கள். கல்லூரி முடிக்கும் வரை வாழ்வு பற்றிய கனவுகளில் சிறகடிப்பவனின் கால்களை, திடீரென ஒரு முதலை கவ்வி தண்ணீருக்குள் இழுப்பது போன்று வாழ்வின் நெருக்கடிகள் இழுக்கத் துவங்குகின்றன.

சாப்பிடும் தட்டிலிருந்து முகம் பார்க்கும் கண்ணாடி, காபி டம்ளர் என்று ஒவ்வொன்றும் ‘ஏன் வீட்ல சும்மா இருக்கிற?’ என்று கேட்கிறது. தட்டில் போடப்படும் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிட முடியாமல் நாக்கு கசக்கிறது. யாராவது ஏதாவது பேசினால்கூட அது தன்னைப் பற்றித்தானோ?
என்ற எரிச்சல் வருகிறது. இதமாக இருந்த வீடு, திடீரெனப் பற்றி எரியும் காட்டைப் போல வெக்கை உமிழ்கிறது. கனவுகள் சிதறடிக்கப்படுவதில் இருந்துதான் நம்மில் பலரது வாழ்க்கையும் துவங்குகிறதா?

வாழ்வு எளிதானதில்லை என்று உணரச் செய்யும் இதுபோன்ற தருணங்கள், வேலை கிடைக்காதவர்களைக் காணும்போது மனதில் மெல்லிய நடுக்கத்தை உருவாக்குகிறது. அவர்களுக்கு உரிய வேலை கிடைக்கட்டும் என்று மனம் தானே பிரார்த்தனை செய்கிறது.
இவ்வளவு பெரிய உலகில் ஏதோவொரு வேலை இல்லாமல் போய்விட்டதா என்ற சந்தேகமும் கூடவே ஏற்படுகிறது. வேலையின் வழியாக மட்டுமே நம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறோம் என்பதுதான் இத்தனைக்கும் காரணமா?
வீட்டில் சும்மா இருப்பதற்கு உண்மையில் எந்த மனிதனும் விரும்புவதில்லை. ஆனால், சூழல் அவனை வெளியே செல்லமுடியாதபடி ஒடுக்கிவைத்திருக்கிறது. வாழ்வை எதிர்கொள்வதற்கான துணிச்சலை நம் கல்வி முறை கற்றுத் தருவதில்லை; மாறாக, அது கல்வியின் வழியாக பொற்காலம் உருவாகிவிடும் என்ற பொய்யான கற்பிதம் ஒன்றையே உருவாக்குகிறது. அது கலையும்போது வாழ்வை நேரடியாக எதிர்கொள்ளும் துணிச்சல் நம்மிடம் இல்லை.

நன்றி!
எஸ்.ராமகிருஷ்ணன் & விகடன்

என்ன கான்செப்ட்டோ..?!

முக்கிய நிகழ்வுகள் என்னன்னு பார்கக நான் எப்போது இங்க போய் ஒரு ரவுண்டு அடிக்கிறது வழக்கம்.
இன்னைக்கும் அப்படி போறப்பத்தான் எனக்கு அது கண்ணில பட்டது.
ஆஹா நமக்கும் வாய்ப்பு இருக்குடா பார்த்துடுவோமுனு(தமிழனாச்சே.!ஃப்ரீயா கிடைச்சா விடுவோமா?) கீபோர்டு மவுஸ்லாம் விரல்ல கட்டிக்கிட்டு மாஞ்சி மாஞ்சி டிரை பண்ணேன்,
கடைசியில ஒரு பைல்தாங்க வந்தது -இன்னும் கொஞ்ச நேரம் இருந்த பைல்ஸ்தான்- பார்த்தா பசங்க தியேட்டர் கூரைய பார்த்து பிலிம் எடுத்து ஒவர் பில்டப் கொடுத்துட்டாங்க!
சரி போன போறங்கன்னு விட்டுட்டு வலைத்தளத்தில மேயுறப்ப,
திடீரென்று ஒரு சந்தேகம் பொட்டுன்னு வந்து தட்டுனுதுங்க,
முதல் சேதி என்னான்ன?
Photo Sharing and Video Hosting at Photobucket
படத்த இங்கேல்லாம் போய் டவுன் பண்ணி பார்த்துட்டு அப்புறமா வந்து

ஈழத்தமிழர்களுக்கு உதவாத தென்திரைபடங்களை புறக்கணிங்க,அப்படின்னு இருக்கு.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி டவுன் பண்ணிய படத்தை திரும்ப பார்ககதிங்க ஏன்னா நம்ம சீரழிஞ்சிடுவோம்முனு சொல்லுது.
(டவுன் லோடுக்கு கொடுத்திருக்கிற லிங்க போய் சும்மா பார்த்துட்டு மட்டும் வாங்க சொல்றாங்களா?)
Photo Sharing and Video Hosting at Photobucket
இன்னும் கொஞ்சம் சேதிகளை பார்த்தா அய்யோ அம்மான்னு ஒரே புலம்பல் ( இந்த புலம்பல்களும்,சத்தங்களும், யுத்ததால் வாடும் தமிழர்களுக்காக அல்ல! தென்னிந்திய சினிமாவை பற்றித்தான்!?)

வலைப்பக்கங்களில் முக்கால்வாசி தென்னிந்திய சினிமா,தென்னிந்திய தொலைக்காட்டிகளை வைத்து,இணைக்கும்(வளர்க்கும்) இவர்களின் கான்செப்ட்டு என்னவோ..?

சரித்திரத்தில் சிவாஜி ரஜினி - மு.க






சந்திரமுகி 804-வது வெற்றி விழா

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் 804-வது நாள் வெற்றி விழா சாதனை திருவிழா என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்-சிவாஜி புரடக்ஷன்ஸ் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கினார். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.ஜி., பட அதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர் கே.பாலசந்தர், நடிகர் கமலஹாசன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

நடிகர் ரஜினிகாந்த், சந்திரமுகி பட டைரக்டர் பி.வாசு ஆகியோர் ஏற்புரையாற்றினார்கள்.

விழாவில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு விழாக் குழு சார்பில், முதல்-அமைச்சர் கருணாநிதி வீரவாள் பரிசு வழங்கி பேசியதாவது:-

"சந்திரமுகி''படத்தை-அது 800 நாட்களுக்கு மேல் ஓடியுங்கூட, இன்று தான் பார்த்தேன். இந்த விழாவிற்காகவே பார்த்தேன். புத்தக வெளி யீட்டு விழாவிற்கு என்னை அழைக்கும்போதெல்லாம், அந்தப் புத்தகத்தை முதல் நாள் இரவு வரை படித்து விட்டு, விழாவிற்குச் சென்று நான் குறிப்பு எடுத்தவைகளை அந்த விழா நிகழ்ச்சியிலே பேசுவது எனக்கு வாடிக்கை.

பல பேர் விழாவிற்கு ஒத்துக் கொள்வார்கள், எந்த விழா என்பதை மேடைக்குச் சென்று தெரிந்து கொள்வார்கள். நான் அப்படியல்ல, ஒரு புத்தக வெளியீட்டு விழா என்றால், அந்தப் புத்தகத்தை தொடக்கம் முதல் முடிவு வரை படித்து விட்டு அதிலே உள்ள நல்ல கருத்துக்களையும், அல்லது என்னுடைய உள்ளத்திற்கு ஒவ்வாத கருத்துக்களையும் மேடைகளிலே எடுத்துச் சொல்வது என்னுடைய வாடிக்கை.

அப்படி "சந்திரமுகி'' படத்தைப் பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பினேன் என்றாலும்கூட, இன்று தான் அதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்து, சந்திரமுகி படத்தை இதற்காகவே பார்த்து விட்டு வந்திருக்கிறேன்.

நம்பிக்கை வீண் போகவில்லை

ஏன் 800 நாட்கள் ஓடியுங்கூட, இந்தப் படத்தைப் பார்க்க சூப்பர் ஸ்டார் உங்களை அழைக்கவில்லையா அல்லது இயக்குனர் வாசு தான் உங்களை அழைக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். எனக்குக் கூட இன்னும் அவர்கள் அழைக்கவில்லையே என்ற தாபம் இருந்தது. ஆனாலுங்கூட, ஒரு நம்பிக்கை, இவர்கள் என்னைஅழைக்காமலா போய் விடுவார்கள்? அழைத்துத் தானே தீரவேண்டும்,

இந்தப் படம் என்ன ஒரு நாள், இரண்டு நாள் அல்லது ஒரு வாரம், இரண்டு வாரம் ஓடக் கூடியதா? 100 நாட்களை, 200 நாட்களை, 300 நாட்களை எல்லாம் கடக்கும், அதற்காக ஒரு விழா எடுக்கிற நேரத்தில் நம்மை அழைக்காமலா விழா நடத்திடப் போகிறார்கள், ஆகவே அழைப்பார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு தான் இருந்தேன். என்னுடைய நம்பிக்கை என்றைக்கும் வீண் போனதில்லை. இப்போதும் வீண் போகாமல் உங்களையெல்லாம் சந்தித்து என்னுடைய மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்கிற வாய்ப்பு எனக்கும், உங்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

804-வது நாள் விழா-இதற்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும் என்று இயக்குநர் வாசுவும், தம்பி இளையதிலகம் பிரபுவும் மற்றும் ராம்குமாரும், ராம.நாராயணனும் என்னைச் சந்தித்து கேட்ட போது, நான் 804 லேயே என்னுடைய வயது 84 ம் இருக்கிறது, அதாவது எட்டு, நான்கு என்ற எண்கள் இருக்கிறது, ஆகவே நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.

இந்தப் படத்தின் மூலமாக தமிழகத்தில் பல இளம் உள்ளங்களில், படமாகப் பொதிந்திருக்கின்ற யாரும் குறை சொல்ல முடியாத நிறை மனிதர், ரஜினிகாந்த்தைப்பற்றி தமிழகத்திலே மாத்திரமல்ல, அண்மையிலே கடந்த டிசம்பர் திங்கள் ஜப்பான் நாட்டிற்குச் சென்ற நம்முடைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கூட அங்கேயுள்ள நாடாளுமன்றத்தில் பேசும்போது-ரஜினிகாந்த்தைப் பற்றி அந்தக் கூட்டத்திலே அவர் பேசி, எங்கள் நாட்டு பெரிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் பெயர், ஜப்பான் நாட்டிலும் பரவியிருக்கின்றது, அவருடைய படம் இங்கே வெற்றிகரமாக ஓடுகிறது என்பதைக் கேள்விப்பட்டு நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் நாட்டிலே சொல்லியிருக்கிறார் என்றால், எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் அது, என்னைப் போன்றவர்கள் அதைக் கேட்டு எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்திருப்போம், மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சந்திரமுகி படத்தில் நடித்திருக்கின்றவர்கள் அத்தனை பேரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருப்பதும், எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இந்தப் படத்தின் மூலமாகப் பெரும் புகழ் எய்தியிருப்பதும் என்னைப் போன்றவர்களுக்கு மிக மிக ஆறுதல் அளிக்கக் கூடியதல்ல, மிக மிக இன்பம் அளிக்கக் கூடியது மாத்திர மல்ல, என்னைப் போன்றவர்களுக்கு எங்களுடைய இதய நாளங்களைத் தட்டி உங்களுக்கு ஒரு பெரிய நடிகர் மாத்திரமல்ல, தமிழகத்திலே ஒரு நல்ல உள்ளம் படைத்த மனிதரும் நண்பராகக் கிடைத்திருக்கிறார் என்ற செய்தியை எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றது.
வெற்றிக்கு காரணம்?

நான் ரஜினியை இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக அறிவேன். அவருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாக, விளம்பரமாக தெரியக் கூடிய தொடர்பு அல்ல. எப்பொழுதாவது தான் மின்னல் கீற்று போல அந்தத் தொடர்பு ஒளி விடும். ஆனால் எங்களுடைய இதயங்கள் நிச்சயமாக ஒன்று பட்டிருக்கக் கூடிய இதயங்கள்.

அந்த இதய உணர்வோடு நான் சொல்கிறேன், அவருடைய வெற்றிக்கு காரணம் எது என்றெல்லாம் எண்ணிப் பார்த்தேன். அவருடைய நடிப்பா? நடிப்பு மாத்திரமல்ல. அவருடைய கலை ஆர்வமா? அந்த ஆர்வம் மாத்திரமல்ல. அவருடைய உழைப்பா? அந்த உழைப்பு மாத்திரமல்ல. அவருடைய ஆற்றலா? அந்த ஆற்றல் மாத்திரமல்ல. வேறு எது அவருடைய வெற்றிக்குக் காரணம்? அவர் திரையுலகத்திலே மாத்திரமல்லாமல், தமிழ்நாட்டு மக்களுடைய உள்ளத்தில் எல்லாம், என்னைப் போன்றவர்களின் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றிருக்கிறார் என்றால், அதற்குக் காரணம்-எவ்வளவு மகத்தான வெற்றிகள் வந்தாலும், மலை போல வெற்றிகள் குவிந்தாலும், கடல் ஆழத்திற்கு வெற்றிகள் வந்து சேர்ந்தாலும், அவர் அடக்கமானவர்.

அந்த வெற்றிகள் எல்லாம் தனக்கு கிடைத்தது, தன்னால் தான் கிடைத்தது என்று எண்ணக் கூடியவர் அல்ல. எவர் ஒருவர் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் தான் தான் என்று எண்ணிக்கொள்கிறாரோ அவர் வீழ்வது நிச்சயம். யார் ஒருவர் வெற்றிக்கு எல்லாம் காரணம் எல்லோரும் என்று கருதுகிறாரோ, அவர் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கக் கூடியவர். அந்த இரண்டாவது இடத்திலே இருப்பவர் தான் நம்முடைய அன்பிற்குரிய ரஜினி காந்த். ஆகவே தான் அவர் வெற்றிக்கு மேல் வெற்றியை இன்று பெற்று வருகிறார். அந்த வெற்றிகளிலே ஒன்று தான் சந்திரமுகியினுடைய வெற்றி.




மூன்று சிவாஜிகள் உண்டு. ஒரு சிவாஜி, மராட்டிய மாவீரன். இன்னொரு சிவாஜி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்போது இந்த சிவாஜி, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி. இந்த மூன்று சிவாஜிகளும், சரித்திரத்திலே இடம் பெற்றப் பெயர்களாக இப்போது ஆகியிருக்கின்றன.

அப்படிப்பட்ட சிவாஜியை பார்க்கின்ற, ரசிக்கின்ற, அது கண்டு இன்பம் துய்க்கின்ற, மகிழ்ச்சிகொள்கின்ற மக்கள் இப்போது தமிழகத்திலே ஏராளம் இருக்கிறார்கள். இப்போது வெளி வந்திருக்கின்ற இந்தப் புதிய படம் கூட, வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேள்விப்பட்டு நான் மிக மகிழ்ச்சியடைந்தேன்.



தம்பி வாசு பேசும்போது, ஒவ்வொரு நாளும்-கலைஞரின் வீட்டு வழியாகத் தான் நான் சென்று கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டார். ஆனால் நானும் அந்த வழியிலே அவரைப் பார்த்ததில்லை, அவரும் என்னை வழியிலே பார்த்ததில்லை. அப்படிப்பட்ட கோபாலபுரத்தில் அவரும் வாழ்கிறார், நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு ஆச்சரியத்திற்குரியதல்ல. எனக்கு கோபாலபுரத்தில் அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அடுத்த வீட்டிலே உள்ளவர்களுக்கு என் வீடு எது என்று தெரியும். ஆனால் எனக்கு யார் வீடு என்று தெரியாது. ஏனென்றால் 1956-ம் ஆண்டு முதல் அங்கே நான் குடி வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இதுவரையிலே நான் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றே எனக்குத்தெரியாது. அப்படி பழகியிருக்கிறேன். அந்த அளவிற்கு நான் அடக்கத்தோடு வாழ விரும்பினேன், விரும்பி அந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன். "அடக்கம் அமரருள் உய்க்கும்'' என்றான் வள்ளுவன். அந்த அடக்கம் தான் நம்முடைய தம்பி ரஜினிகாந்த்தை இவ்வளவு பெரிய புகழ் ஏணியிலே ஏற்றி வைத்திருக்கிறது. ஆரம்பத்திலே சொன்னேன் இது, அதையே மீண்டும் வலியுறுத்தி அவர் வாழ்க வாழ்க, அவருடைய முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறுக என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

நன்றி!

தினத்தந்தி & தினமணி

நெசமாத்தான்...!

கேட்கவே அப்படியே கிறுகிறுக்குதே.!(கிளுகிளுப்பாவும் இருக்குங்க)

ஆமாங்க நம்ம போலீஸர வெடி ஸ்பெஷல் சிவகாசி ஜெயலட்சுமி ஒரு சூப்பர் கிளாமர் ரோல்ல(உண்மை கதை) அன்பாலயா பிரபாகரன் தயாரிக்கும் பழனியப்பா கல்லூரி படத்துல நடிக்கறாங்களாம்!
சிவகாசி ஜெயலட்சுமிசிவாஜி படம் மாதிரி முன்கூட்டியே போட்டோக்களை இண்டர்நெட்ல ரீலிஸ் பண்ணவும் பிளான் பண்ணியிருக்கறதா நம்ம பிரெண்டு ஒருத்தன் மெயிலிருக்கான்.அது வரைக்கும் சீ திஸ்...!
Photo Sharing and Video Hosting at Photobucket


Photo Sharing and Video Hosting at Photobucket

படிப்பது சுகமே..!

குழந்தைகளைப் போராடும் மனநிலையோடு நாம் வளர்க்க வேண்டும். மிகவும் பணிவோடு வளர்க்கப் படுகின்ற குழந்தைகளுக்குப் போராடத் தெரியாது. உண்மைக்காகவும் நியாயத்திற்காகவும் துணிச்சலுடன் போராடுகின்ற பக்குவம் அவர்களுக்கு வந்து விட்டால், அக்கிர மங்களும் அநீதிகளும் அராஜகங்களும் அடியோடு அழியும்.

நமக்குள் இருக்கும் சக்தி வெளிப்பட வேண்டுமென்றால் நம்மைப் போராடச் செய்கின்ற சூழல் நிலவ வேண்டும். சில நேரங்களில் நாமே சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். - வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்

சில வருடங்களுக்கு முன்பு நண்பன் ஒருவன் எனக்கு பிறந்த நாள் பரிசாக அளித்த படிப்பது சுகமே, பெற்று கொண்டபோது எனக்கு அதை பற்றி பெரிதாக ஆர்வம் கொள்ளவில்லை சில வாரங்கள் கழித்து ஒரு இனிய மாலை வேலையில் மொட்டைமாடியில் தனிமையில் அமர்ந்து படிக்க,எனக்குள் ஒரு புது வித அனுபவம் கல்வி வாழ்க்கையினை முக்கால் பகுதியை நிறைவு செய்த எனககு முன்பே கிடைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தான் முதலில் ஏற்பட்டது. பின்நாளில் பல்ருக்கு என்னால் படிப்பு சம்பந்தமாக ஏதேனும் கூற அது மிக உபயோகமாக இருந்தது.
அதற்கு பின்னர் வந்த நாட்களில் உள்ளொளி பயணம், ஏழாவது அறிவின் மூலம் வெ.இறையன்பு மிக பரிச்சயமானர். அதே காலகட்டத்தில் அரசியல் மாற்றத்தால் ஒய்வான பதவிக்கு தூக்கியடிக்கப்பட்ட போது எங்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம்தான், ஏனெனில கண்டிப்பாக அந்த நேரங்களில் ஏதேனும் படைப்புகள் வெளியாகும் என, நான் எதிர்பார்த்திருந்தேன் என் நம்பிக்கை வீண் போகத வகையில்,தினத்தந்தியின் சனி தோறும் வெளியாகும் இளைஞர் மலரில் ஆரம்பமானது, "ஒடும் நதியின் ஓசை" பலராலும் பாராட்டபெற்ற, ஒரு தன்னம்பிக்கை தொடராக அமைந்தது
வெ.இறையன்பு அவ்வப்போது டி.டியிலும் கருத்துரை வழங்கி கொண்டிருந்தார்.

தமிழக அரசின் சுற்றுலாத்துறையில் செயலராக பணியாற்றி வருகின்றார். முதலவருக்கு பிடித்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு.

சென்னை சங்கமம் விழாவினை சிறப்பாக அரங்கேற்றம் செய்ததில் இவரது பங்கு பாரட்டப்படவேண்டியது.

இப்படிப்பட்ட சுழலில் தமிழ்நாட்டு சுற்றுலா துறையினை மேம்படுத்தும் பொருட்டு இந்த மாதம் முதல் வாரத்தில் ம்லேசியா சென்றிருந்த வெ.இறையன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்ததாக செய்திகள் வெளியானது, கண்டு மனம் பதறினேன்.
தற்போது சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கினறன், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
மேலதிக செய்திகள் தெரிந்தவர்கள் சற்று பகிர்ந்துகொள்ளுங்களேன்.!

சுதந்திர இந்தியாவின் அறுபதாம் ஆண்டில்..!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல கட்டமாக நடைபெற்ற கட்சிகளின் ஆலேசனைகளுக்கு பிறகு, சில பெயர்களினை சுசில் குமார் ஷிணடே,சிவராஜ்பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் பரிந்துரைக்க அது இடதுகளின் பலத்த எதிர்ப்பினை பெற,என்னடா பண்ணலாமுனு கவலையாக இருக்க, நம்ம ஊரு சி.எம் போய் டெல்லியில இறங்கியதுமே மேட்டர் சூடுபிடிக்க ஆரம்பிச்சது இடதுகளின் ஜனாதிபதி தேர்வு சம்பந்தமான கருத்துகள் கதறல்களை -முக்கியமாக அப்துல் கலாம் போன்ற அரசியல் ஃபீல்டுல இல்லாத மேதைகள் வேண்டவே வேண்டாமாம்-செவிமடுத்த கலைஞர் அதை சிறப்பாக காங்கிரசிடம் கொண்டு போய் சேர்க்க, -கடைசியாக ஷெகாவத் குடும்பத்தை சார்ந்த ராஜஸ்த்தான் கவர்னர் ஜனாதிபதி பதவிக்கு முன்னிறுத்தப்படுகிறார்

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த முடிவால் எதிர் தரப்புக்கும் கொஞ்சம் நெருக்கடித்தான் அதுவுமில்லாம எதிர் தரப்பு போட்டியாளார் பைரோன் சிங் ஷெகவத்திற்கும் கொஞ்சம் கவலையளிக்கும் விஷயம்தான்

எது எப்படியோ சுதந்திர இந்தியாவின்அறுபதாம் ஆண்டில் ஒரு பெண் இந்திய ஜனாதிபதி போவது மகிழ்ச்சியான விஷயம் தான்

Photo Sharing and Video Hosting at Photobucket

சமூக சேவகர் வக்கீல் அப்படின்னு ஆரம்பிச்சு மகராஷ்டிராச.ம.உவாக அரசியல் வாழ்க்கையை தொடங்கி அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ராஜ்யசபாவரைக்கும் கொண்டு வந்து, ராஜ்யசபா சேர்மன் ஆகி அப்புறம் கவர்னராகி இப்ப ராஜஸ்த்தானில், கொஞ்ச நாளில் ராஷ்டிரபதிபவனில்
Photo Sharing and Video Hosting at Photobucket

சரி துணை ஜனாதிபதி யாருன்னு தெரியுமா வேற யாரு தமிழ்நாட்டு நம்பர் டூ இப்ப இந்தியாவிற்கே...!

Photo Sharing and Video Hosting at Photobucket

இதெல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் இந்த மூணாவது அணி பார்ட்டீங்க சத்தம் போடாம நம்ம முன்னாள் கவர்னர் பாத்திமாபீவியை முன்னிறுத்த போறாங்களாம் ( "ஜெ"வின் நன்றிகடனோ)

நாளை முதல் சிவாஜி...!


அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட,..!


அனைவரின் உள்ளங்களையும் ஆரவாரபடுத்தபோகும்,...!


அனைவருக்கும் மனதில் திருப்தியை அளிக்கப்போகும்...!


தமிழ் சினிமாவின் பிருமாண்ட படைப்பான சிவாஜி

பற்றிய மொக்கை பதிவுகளின் கவுண்ட் டவுன்

ஸ்டார்ட்...!

அன்புடன் வரவேற்கிறேன்...!






Photo Sharing and Video Hosting at Photobucket
பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..
லட்சியமாவது புடலங்காயாவது..
சுகமாக,சந்தொஷமாக,நிம்மதியாக வாழ்ந்து ..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்""
-ரஜினி