நீர் ஆதாரங்கள் இணைப்பின் அவசியம் - தமிழ்நாடு - தினமணி

நீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால், உலகம் முழுவதும் தண்ணீருக்காகப் பிரச்னைகளும், யுத்தங்களும்கூட நடக்கிற சூழல்கள் ஏற்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரைப் பங்கீடு செய்வதை பற்றி விவாதிக்க 1956-ம் ஆண்டு ஹெல்சிங்கில் பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில் நீர் பாய்ந்தோடும் இறுதி கட்டம் வரை உள்ள நாடுகளுக்கு பாயும் நீரில் உரிமை உண்டு என தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் 262-ன்படி நதி நீர் வாரியங்கள் அமைக்கலாம். ஏதாவது ஒரு மாநிலம் உச்ச நீதிமன்றம் அல்லது நதிநீர் தீர்ப்பாயங்கள் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நதிநீர் குறித்து நதிநீர் வாரியம் அமைத்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். ஆனால், இதுவரை அந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது.

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் வராததால் நெல் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,116 கி.கி. நெல் கிடைக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் நீர் வளங்கள் எல்லாம் இருந்தும் வெறும் 2,454 கி.கி. நெல்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழகத்தில் மனித ஆற்றல் அதிக அளவில் உள்ளது. கர்நாடகம் தண்ணீர் கொடுத்தால், தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். இது இந்திய நாட்டுக்குத்தானே நன்மையை கொடுக்கும் என்பதை கர்நாடகம் உணர மறுக்கிறது.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளம் பிரச்னை செய்கிறது. குமரி மாவட்டத்தின் நெய்யாற்றிலிருந்து தொடங்கி, வடக்கே கோவை மாவட்டத்தில் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழாவிலும் கேரளம் பிரச்னை செய்து வருகிறது. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கேரளத்திலிருந்து தமிழகத்துக்குத் திருப்பலாம் என பல பரிந்துரைகள் செய்தபோதும், அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் வலியுறுத்தப்பட்டும் கேரளத்தின் அலட்சியப் போக்கால் இத்திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

கேரளத்தில் நீர்வளம் சராசரியாக 3,050 மி.மீ. ஆகும். இது தமிழகத்தைவிட 3.2 மடங்கு அதிகம். அங்கு கிடைக்கும் உபரிநீரைத் தேக்கி வைக்கவும் அணைகள் இல்லை. கேரள ஆறுகளில் ஓடும் நீர் வளம் மொத்தம் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் 500 டி.எம்.சி. நீரை மட்டுமே கேரளம் பயன்படுத்துகிறது. 350 டி.எம்.சி.க்கு மேல் நீரைத் தேக்க வசதியும் இல்லை. சுமார் 2,000 டி.எம்.சி. நீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது.

இந்த 2,000 டி.எம்.சி.யில் வெறும் 200 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்குத் தருமாறு கேட்டும் தண்ணீர் இல்லையென்று அடித்துப் பேசுகிறது கேரளம். இதில் உள்ள நியாயத்தை எங்கே போய் சொல்ல? நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தமிழக எல்லைக்கே முரட்டுத்தனமாக வந்தவர்தான் இன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். வடதமிழகப் பகுதியில் பாய்ந்த பாலாறு, பொன்னை ஆறுகளில் ஆந்திராவால் பிரச்னைகள் எழுந்தது.

தமிழ்நாட்டில் உள்ள 33 ஆற்றுப்படுகைகளில் மொத்த நீர்வளம் 35,726.74 மி.க.மீட்டர். இதைக் கொண்டுதான் தமிழகம் தனது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சிக்கல்களுக்கு விடை காண்பதற்காகத்தான், தமிழக அரசு கங்கை காவிரி இணைப்பு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அதற்கு முன்னோடியாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிற வகையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் | 369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது என்பது வெளியில் தெரியாமல் நடக்கும் நதிநீர் புரட்சி.

தாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008-ல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாகச் செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகிறது.

இப்போது இப்பணிகள் 72 பகுதிகளாகப் பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்குப் பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கிறது. பாபநாசம் அணையில் தொடங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், திருவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

இதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்தப் பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும்.

இப்பகுதியில் அவ்வப்போது வறட்சி விவசாயமும் அங்குள்ள மக்களுக்குப் பெரிதாக கைகொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியும்.

அதுபோலவே, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கந்தக பூமியாக இன்றைக்கு இருக்கிறது. அந்த பூமியில் கருவேல மரங்கள்தான் அதிகம் உள்ளன. மானாவாரி பயிர்கள் அடிக்கடி பொய்த்து வருகிறது. அப்பகுதிக்கும் தாமிரபரணியிலிருந்து விவசாயத்துக்கு உபரி நீரை வழங்கக் கூடிய அளவில் திட்டங்கள் வேண்டும்.

ஏற்கெனவே அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு, இப்பகுதிக்குப் பயன்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது கேரளத்தின் பிடிவாதத்தால் கானல் நீராகவே இதுவரை இருக்கிறது. இதன் வடபகுதிகள் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்குப் பயன்படும் அழகர் அணைத் திட்டமும் நடைமுறைக்கு வரவேண்டும்.

நதிகள் இணைப்புப் பிரச்னையில் சுற்றுச்சுழல் பிரச்னை, நில ஆர்ஜிதம் போன்ற காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் முடிந்த அளவு தென்னிந்திய நதிகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்து, இறுதியில் வடஇந்திய நதியான கங்கையோடு இணைக்கத் திட்டமிடலாம். இத்திட்டத்தைச் செயல்படுத்த நீண்டகாலம் ஆனாலும், அதற்கான தொடக்கத்தில் மும்முரம் காட்டுவது அவசியமாகும்.

நதிநீர் இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகள் 1998-லிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இணைக்கப்பட வேண்டிய 30 நதிகளில் 15 நதிகள் தென்னிந்திய தீபகற்ப தக்காண பீடபூமியில் உள்ள தீபகற்ப நதிகளாகும். அதுபோல, வடபுலத்தில் இமாலய நதிகள் கிட்டத்தட்ட 15 வரை ஆகும். பேட்வா பன்சால் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், அப்பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 நதிகளை தேசிய சொத்து என்ற அறிவிப்பையும் இன்றைய மத்திய அரசு செய்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை காவிரி நீரைத் திருப்பி வைகை பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்னை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. இந்த பத்தியாளர் 1983-ல் நதிகள் தேசியமயம், நதிநீர் இணைப்பு, கேரள நதிகளைத் தமிழகத்தோடு இணைப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் நீதிபதிகள் எம். சீனிவாசன், ஏ.ஆர். இலட்சுமணன் ஆகியோரின் தீர்ப்பில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிடும் என மறுபுறம், உலக வங்கி கடந்த 12.3.2010 அன்று தெரிவித்தது. 2025-ல் நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில், 615 பாதைகள் நீரோட்டம் குறைந்துவிடும் என்றும், 108 பாதைகள் வற்றி விடும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி குறிப்பிடுகிறது. இது அபாயகரமான நிலையாகும்.

கடந்த 2001 காலகட்டத்திலிருந்து நிலத்தடி நீரைத் தோண்டித் தோண்டி பகாசுர நிறுவனங்கள் குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்வதால் நிலத்தடி நீருக்கும் ஆபத்து வந்துவிட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், அதை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் நதிநீர் இணைப்பு அவசியம்.

தமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகிறது. இதில் 30 சதவீதம் கடலுக்குச் செல்கிறது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும் வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதிநீர் இணைப்பு வலியுறுத்தப்படுகிறது.

எல்லாவர்க்கும் ஓணாஷம்ஸங்கள்!

நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்!

டிஸ்கி-1:- வெட்டியாத்தானே இருக்கோம்ன்னு நினைச்சப்போது - நினைச்சது!





நீ பேசிடும் போது பேசாமல்,
நான்
மௌனம் தந்திடுவேன்


ஒரு புராஜெக்ட் ரொம்ப தடுமாறி, தாறுமாறா போய்க்கிட்டிருக்கும்போது, ரெக்கவரி/அர்ஜெண்ட் மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வர்றவன் போறவனெல்லாம் கேட்கற கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல, சமாளிக்க தெரிஞ்சிருந்தாலும் கூட சும்மா கம்முன்னு அவங்க சொல்றத கேட்டுக்கிட்டு, கையில எதாச்சும் பேப்பரை வைச்சுக்கிட்டு கிறுக்கிகிட்டு இருக்கிறதுதான் ரொம்ப பெஸ்ட்!

தேவை/தேவையில்லாம நாம பதில் சொல்லப்போயி அதை அந்த பெரிய மனுசங்க - கேள்வி கேட்கறவங்க எப்பவுமே நம்மளை விட ஹையர் பொசிஷன் அல்லது கேள்வி கேட்குற பொசிசன்ல இருக்கறவங்கதானே! - காண்ட்ரவர்ஷியலா எடுத்துக்கிட்டு இன்னும் இம்சையை கொடுக்கத்தான் பார்ப்பாங்க! [அதான் டிரெண்ட்டே]

அந்த மாதிரி இக்கட்டான சமயத்துல, ஒரு பிரச்சனையை சமாளிக்கவேண்டி நாம ஏதோ சொல்லப்போக அது இன்னும் பல - ஒதுங்கி பதுங்கி, பழசாகிப்போன பிரச்சனைகளையெல்லாம் - சேர்த்து கொண்டு வந்து விட்டுட்டும்! மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஆரம்பத்துல இருந்த ஒரே ஒரு பிரச்சனைக்கு தீர்வுங்கற பேர்ல ரவுண்ட் கட்டி யார் என்ன சொன்னாலும் மெளனமா இருந்து, எல்லாரும் தொலைஞ்ச பிறகு நமக்கே நமக்கான பிரச்சனையை சால்வ் பண்ணுறதுல பிசியாயிடணும்! அதானே கரீக்ட்டு! [மேனேஜ்மெண்ட்ல ஃபீல்டுல நிக்கிறவங்க/உட்கார்ந்திருக்கிறவங்க/ஓடிக்கிட்டிருக்கிறவங்க இது பத்தி மேலதிக அட்வைசு தரலாமே!]

டிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு?!

பச்சை












பச்சை அப்படின்னு சொன்னாலே மனசு டக்குன்னு பச்சை பசேல் வயல்வெளி - மண் + ஆற்று நீரின் வாசம், நிறத்தோடு பச்சக்குன்னு வந்து ஒட்டிக்கிது ஆனால் அப்படி ஒரு போட்டோ இதுவரையிலும் எனக்கு அமையவே இல்லை - நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெல்மணிகள் பழுத்து மஞ்சள் நிறத்துடனே காட்சி தருகின்றன!

இந்த பச்சை போட்டோ இந்த மாச பிட் போட்டியோடு போய்விடாம நம்மால எதாச்சும் செய்யமுடியுமான்னு கொஞ்சமா யோசிச்சு பார்த்தேன் [கொஞ்சமாத்தாங்க! ரமதான் மாசமா அதான் டயமெல்லாம் இருக்கு!]

சொந்த ஊர் வீடு உறவுகளை விட்டு,பணி சூழல் காரணமாக பெரும்பாலும் எல்லோரும் வெளியூர்களில் வெளிநாடுகளிதான் இருக்கின்றனர் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக விடுமுறைக்கு செல்லும்போது நம்மால் இயன்ற அளவு நம் வீட்டுப்பகுதியில் மரம்,செடி அட்லீஸ்ட் நாலு விதையாவது தூவிட்டு வரலாமே! மரம் நடுவதை சில போட்டோக்களாக்கிகொண்டால் ஊர் நினைவு வரும்போது சொந்தபந்தங்கள் சூழந்திருக்கும் போட்டோக்கள், மனதினை மகிழ்ச்சிக்குட்படுத்தும் சேதிகள் சொல்லுமல்லவா?

டிஸ்கி:- எத்தனை தடவைடா இந்த புறாவை இங்கே நடக்கவிடுவன்னு டென்சனாகிறவங்களுக்கு - ஐயா மன்னிச்சுடுங்க! :)

அம்மா aka MY MOTHER



பாட்டி,அம்மா அக்கா பத்தி எப்பவுமே நினைக்கும்போதெல்லாம் கண்டிப்பா கண்கலங்கிட வைக்கும்! பாட்டி வீட்டிற்காக எல்லா சேவைகளும் செய்து முடித்து,பேரப்பிள்ளைகள் நல்லதொரு உத்தியோகத்தில் அமரும்வரை கூட இருந்துவிட்டு,ஏதோ நம்பிக்கையில் நல்லா இருப்பாங்கன்னு தன் காலம் முடிச்சு போயிட்டாங்க! அம்மாக்கிட்ட பேசுறது கூட, சாப்பாடுக்கு அல்லது எங்கயாச்சும் வெளியே போய்ட்டுவரேன் போன்ற தகவல் சொல்றதுதானே தவிர வேற அதிகம் நீட்டி முழக்கி பேசியது கிடையாது! சின்ன புள்ளையா இருக்கும்போதே,அக்கா கூட பெரும்பாலும் சண்டை போட்டுகிட்டு இருந்ததுதான் அதிகம்! வெளிநாடு வேலைன்னு வந்த பிறகு எப்பவுமே ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்தா உடனே அம்மாவுக்கு போன் செய்யணும்ன்னு தானே தோணுமே தவிர வேற 1ம் தோணாது! அதுவும் ஊரை விட்டு வரும்போது எதாச்சும் சண்டை போட்டு எல்லாரையும் கொஞ்சமா கோபப்படுத்திட்டு வரும்போது, ரூமுக்கு வந்து சேர்ந்ததுமே டக்குன்னு போன் செஞ்சுடவே அல்லது திரும்ப ஊருக்கு போயிடலாமோன்னு நினைப்புத்தான்! அது போல எப்பொழுதாவது கடைக்குபோகும்போது இங்கே தங்கள் பிள்ளைகளை பார்க்க ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா வயது ஆட்களை காண்கையில் பேச அல்லது காலில விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமோன்னுல்லாம் கூட தோணும்! என்னமோ தெரியல சரியா இன்னைக்குன்னு பார்த்து என் கண்ணில இந்த படம் வந்து பட, கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்து அழுது முழுதாய் பார்க்க மனமின்றி நிறுத்தியிருக்கிறேன்!

படம் பார்க்க நினைத்தால் சற்றே படுவேகத்தில் ஒரு டிரெயிலர் டைப்பில பார்த்துட்டு படம் ஆரம்பிச்சு முடிக்கிற பழக்கம் உண்டு! அதுல ஒரு இண்ட்ரஸ்ட் அப்படித்தான் MY MOTHERம்

ரொம்ப அழகான ஒரு குடும்பம் அந்த பெண் மட்டும் தன் குடும்பத்தினரை விட்டு தன் தாயினை சந்திக்க ஊருக்கு செல்வதாக தொடங்கி இளம்பிராயத்துக்கு ப்ளாஷ்பேக் ஆகிறது! குட்டி குழந்தையாக பள்ளி விட்டு வீடு வரும் பெண்ணுக்கு அம்மா கொண்டு வந்து தரும் தின்பண்டம் அதை அந்த குட்டி பெண் சாப்பிடும்போது அவளின் தம்பி வந்து பங்கு கேட்டு சாப்பிடுவதும் அப்போது அவனை குட்டிவிட்டு, திட்டும் அம்மாவின் நடவடிக்கையில், தன் பெண் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினை பிரதிபலிக்க வைக்கும் காட்சி! இதற்கு பின்னர் வரும் காட்சிகள் தொடரும்போதே எனக்கு என் அம்மா மட்டும் பாட்டியின் ஞாபகம் படர்ந்து விட்டது மனமெங்கும்! மேற்கொண்டு சில காட்சிகளுக்கு பிறகு என்னால் தொடர முடியா மனநிலை!

நான் பார்த்த டிரெயிலரினை விட்டு படத்தின் டிரெயிலரினை மீண்டும் ஒரு முறை பார்க்க தொடங்கினேன் தொடர்ந்த காட்சிகள் முடிவில் ஒரு ரயில் நிலையத்தில் அம்மா பெருங்குரலெடுத்து அழுதபடியே பிரியா விடை கொடுக்கும் காட்சி ,அழத்தொடங்கிய என் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் காட்சியாகி மறைந்துகொண்டிருக்கிறது!





படம் பாருங்கள் என்று சொல்வதை விட அந்த சூழலினை அனுபவியுங்கள்!

எங்கோ ஒரு மூலையில், அம்மாவினை பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற, பெண்கள் மட்டுமல்ல, ஆணகளும் கூட பார்த்தால், பிரிவின் வலி பெருகுவதை உணரமுடியும்!


டிஸ்கி:- வாழ்வியலின் பிரதிபலிப்புகளை சினிமாவாக, டிரெயிலரில்/டிரெயிலராக மட்டும் பார்த்து எழுத முற்பட்டது