பயணத்தில் நான்...


நீண்ட நெடிய சாலை!

பாதை தெரிகிறது!

பயமும் தெரிகிறது!

தனி ஒருவனாக கடக்கப்போவதை நினைத்து!

யாருமில்லா இருபக்கங்களில்

யாரை நான் கூப்பிடுவேன்!

யாரை நான் கும்பிடுவேன்!

எங்கள் ஊர் அரசியல்வாதிகள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

யாருமே இல்லாத இடத்தில் போட்ட கும்பிடுக்காக

நான் அவர்களைப்பார்த்து எத்தனை முறை சிரித்திருப்பேன்..!

யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;

தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் வெல்வேன் என்று..!

எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,

இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!

பாதையே மலர்களால் வேண்டாம்!

பாதையில் வரும் மரங்களாவது,

என் மீது மலர்களை உதிருமா..?



(ஜீவ்ஸ் அண்ணாச்சி தானாகவே முன்வந்து மெருகேற்றி தந்த படம் - இணைய நட்புறவு இணைந்த நேரமும் கூட!)

டிஸ்கி:-கடந்த வருடத்தில் இதே நாளின் நட்சத்திர வாரத்து பதிவு மீள் பதிவாய்...!

6 சிக்மா!



சிக்ஸ் சிக்மா என்பது என்னவென்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்த ஒரு மானேஜ்மென்ட் தந்திரம். கடலை எண்ணெய்க்கு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது போல ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்.

எந்த ஆறு சிக்மா நிறுவனமும் தயாரிக்கும் பொருட்கள் 99.999 சதவிகிதம் கியாரண்டியாக நல்ல தரத்துடன் இருக்கும். சிக்மா என்ற சொல், புள்ளியியலில் வருகிறது. சராசரியிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வசிக்கிறோம் என்பதை அளக்கும் குறியீடு அது.

உதாரணமாக, நீங்கள் நட்டு போல்ட் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆறு சிக்மா சான்றிதழ் கேட்கிறீர்கள். அவர்கள் முதலில் அளப்பது, உற்பத்தியாகும் பொருட்களில் எவ்வளவு சதவிகிதம் குறைபாடு இருக்கிறது என்பதைத்தான். ஒரு மாதத்தில் பத்து லட்சம் போல்ட்டு தயாரித்தால், அதில் சுமார் மூன்றரை போல்ட்டுகளுக்கு மேல் தப்பு இருந்தால் சர்டிபிகேட் கிடைக்காது! (மூன்றரை போல்ட் என்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒரு கோடியில் முப்பது நான்கு பிழைகளுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்).

ஆறு சிக்மா வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஜி.இ., ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே சான்றிதழ் கிடைப்பதற்குள் தூக்குப் போட்டவன் மாதிரி நாக்குப் பிதுங்கிவிட்டது. அவர்களிடம் இல்லாத கம்ப்யூட்டரா, எம்.பி.ஏக்களா? இருந்தும் பிழைகளை நீக்கிக் கொள்வதற்கு முக்கியத் தேவை, கடமைக்கு வேலை செய்யாமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் ஊழியர்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள் மட்டும் கிடைத்தால், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஆறு சிக்மாவைச் சந்திக்கலாம். இதற்கு அருமையான உதாரணம், மும்பை நகரின் சாப்பாடுக் கூடைக்காரர்கள்.

புகழ் பெற்ற ஐ.ஐ.எம்.நிர்வாகவியல் பள்ளி. உச்சாணிக் கிளை எம்.பி.ஏக்களை உற்பத்தி செய்யும் நாற்றங்கால். அங்கே ஒரு நாள் மானேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர், கோட்டு சூட்டு போட்ட ஹார்வர்ட் பேராசிரியர் அல்ல; வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டி காந்தி குல்லாய் அணிந்த சர்வ சாதா கூலித் தொழிலாளி. தலை மேல் சாப்பாட்டுக் கூடைகளைச் சுமந்து சென்று வினியோகிக்கும் "டப்பாவாலா'. அவராவது, எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் போய் மானேஜ்மென்ட் சொல்லித் தருவதாவது? ஏனெனில் அன்று நடந்த பாடம், "தவறுகளே நடக்காமல் வேலை செய்வது எப்படி' என்பதாகும்.

மும்பைக்கு ஒரு முறை சென்று வந்த யாரும் இந்த டப்பாவாலாக்கள் என்பவர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. மும்பை நகரம், ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் இருபதாயிரம் பேர் என்ற ரேட்டில் மக்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட பேரீச்சம் பழம்போல் நெரிசலாக வசிக்கும் நகரம். இத்தனை பேரும் சேவல் கோழியுடன் சேர்ந்து எழுந்து ரயில் பிடித்து எங்கோ இருக்கும் அலுவலகம் போக வேண்டும். அத்தனை பேருக்கும் மதியம் சாப்பாடு வேண்டும். காண்டீனிலோ, கண்டகண்ட எண்ணெய். இங்கேதான் உதவிக்கு வருகிறது டப்பாவாலா சர்வீஸ். இவர்கள், புற நகர் பகுதியில் இருக்கும் உங்கள் வீட்டிலிருந்து காலை ஒன்பது மணி அளவில் டிபன் காரியரை எடுத்துக் கொண்டு போனால் சரியாக லஞ்ச் நேரத்துக்கு அலுவலகத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். மாலையில் காலி காரியர்கள் எதிர்த் திசையில் பயணம் செய்து கண்ணன் மேய்த்த ஆநிரைகள் போல் வீட்டுக்கு வந்து சேரும். ட்ரெயின், பஸ், சைக்கிள், மனிதக் கால் என்று சகலவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு சாப்பாட்டு மூட்டையும் சராசரியாக அறுபது கிலோ மீட்டர் பயணம் செய்கிறது; நாலு கை மாறுகிறது. இருந்தும் காரியர் மாறிவிடாமல், அவரவர் வீட்டுச் சாப்பாடு அவரவருக்குப் போய்ச் சேருவதுதான் ஆச்சரியம்.



டப்பாவாலாக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. டிபன் பாக்ஸ்களில் கோடு, புள்ளி, ஸ்வஸ்திக் என்று தங்களுக்கே உரிய எளிய குறியீடுகளைப் பயன்படுத்தி அதனதன் இலக்கைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏரியாவிலிருந்து சேகரித்த டப்பாக்கள் தபால் பிரிப்பு அலுவலகம் போன்ற ஒரு மரத்தடிக்கு வந்து நாலு திசைகளிலும் பிரித்து அனுப்பப்படுகிறது.

ஐயாயிரம் ஊழியர்கள் தினம்தினம் இரண்டு லட்சம் சாப்பாடுகளை டெலிவரி செய்கிறார்கள். மழையோ புயலோ வெயிலோ, க்வார்ட்ஸ் கடிகாரம் மாதிரி எல்லாம் சீராக, நேரம் தவறாமல் இயங்குகிறது. டெலிவரியில் தப்பு நடப்பது மிகமிகமிக அபூர்வம்!

இந்தத் தொழிலை மட்டும் நம்ம லட்ச ரூபாய் எம்.பி.ஏக்களிடம் விட்டிருந்தால், ஒவ்வொரு டிபன் காரியருக்கும் ஆர்.எஃப் பட்டி, கூடைக்குப் பார் கோட், சுமப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜி.பி.எஸ் என்று டெக்னாலஜியில் புகுந்து விளையாடி, வரிசை வரிசையாக டெல் கம்ப்யூட்டர்கள் வைத்துக்கொண்டு கண்காணித்து, கடைசியில் அல்போன்ஸ் வீட்டு மீன் குழம்பை அனந்தாச்சாரிக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிடுவார்கள்.

மாபெரும் மானேஜ்மென்ட் பள்ளிகளும் டப்பாவாலாக்களைப் பக்கத்தில் சென்று கவனித்து ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் என்னும் புகழ் பெற்ற பிசினஸ் இதழ் அவர்கள் ஆறு சிக்மா உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்று வியக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறது, பி.பி.சியில் டாக்குமென்டரி படம் காட்டுகிறார்கள். இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்தபோது டப்பாவாலாக்களைச் சந்தித்து அவர்களுடன் பெருமிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் இதைப் பின்பற்றி "அன்னதாதா' என்று சாப்பாட்டு கேரியர் சர்வீஸ் ஆரம்பிக்கிறார்கள்.

செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து. எகிப்திய பிரமிடின் நாலு பக்கங்களையும் இப்போது அளந்து பார்த்தால் தொண்ணூறு டிகிரிக்கு ஆச்சரியகரமாகக் கிட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு டிகிரியில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது! குவாலிட்டி கண்ட்ரோல் என்ற நவீன வார்த்தை உலகப் போரின்போது உருவானது. தொழிற்சாலை அசெம்பிளி லைன்களில் கார் முதல் குண்டூசி வரை பெரிய அளவில் அடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

ஊழியர்களை "வேகம், வேகம்' என்று துரத்தியதில் தரம் வீழ்ந்துவிட்டது; கஸ்டமர்கள் கதறினார்கள். எனவே, 1924-வாக்கில் புள்ளியியல் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு சோதனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. வால்டர் ஷேவார்ட் என்பவர் அன்றைக்கு எழுதிய புகழ்பெற்ற ஒரு பக்க டாக்குமென்ட்தான், பின்னால் வந்த அத்தனை ஜிலுஜிலு பவர் பாயின்ட்களுக்கும் முன்னோடி. சீக்கிரமே தரக் கட்டுப்பாடு என்பது தாரக மந்திரமாகி (தாரக என்றால் என்ன?), டி.க்யூ.எம், சி.எம்.எம், ஐ.எஸ்.ஓ, ஜப்பானில் கைஸன் என்று கிளைகிளையாகப் புறப்பட்டது. முழு நேர குவாலிட்டி டிப்பார்ட்மென்ட்கள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் நாற்காலியைத் தேய்க்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ஆறு சிக்மா, ஏழு சிக்மா என்றெல்லாம் அவர்கள் சீசனுக்கு சீசன் ஒரு புதிய மானேஜ்மென்ட் ஃபாஷன் ஏற்படுத்தி அப்பாவி முதலாளிமார் தலையில் மிளகாய் அரைத்தாலும், தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது.

டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! சார்லஸ் இளவரசர் வந்த அன்றைக்குக்கூட, ""எங்கள் வேலை பாதிக்கக் கூடாது; டியூட்டி நேரம் முடிந்த பிறகு வாங்க'' என்று சொல்லி அனுப்பினார்கள். கடந்த நூற்று இருபது வருடங்களாக நடப்பது டப்பாவாலா சர்வீஸ். இருந்தும் ஒரு முறை கூட ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்ததே இல்லை. வேலைக்கு வருபவர்களின் பின்னணியைத் தீர விசாரித்துவிட்டுத்தான் கிட்டேயே சேர்க்கிறார்கள். ரிட்டையர்மெண்ட் வயது என்று எதுவும் கிடையாது. அவரவர்கள் உடம்பில் தெம்பு உள்ள வரை வேலை செய்யலாம். அநாவசியமாக லீவு எடுத்தாலோ, காந்திக் குல்லாய் யூனிஃபார்ம் இல்லாமல் காணப்பட்டாலோ கடும் அபராதம் உண்டு! இந்தப் படிப்பில்லாத மக்களிடமிருந்து நமக்கு நிறையப் படிப்பினை இருக்கிறது.

நன்றி - தினமணி கதிர்

அரும்புகள் வாசிப்பு இயக்கம் - கோவை



நூலகங்கள்

காலத்தின் போக்கில் கடக்கும் விசயங்களை, சேகரிக்கும் செய்திகள், நூல்களை நாளை வரப்போகும் தலைமுறைக்கு நல்லதொரு வாழ்க்கை சூழலினை தரப்போகும் முக்கிய அம்சம்!

எத்தனையோ தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளில் அக்கறை கொண்டு தீர்வுகளை கண்டுகொண்டிருந்தாலும், இந்த பணி ஒரு வித்தியாசமான அதே சமயத்தில் மிகச்சரியானதொரு பணியாக,இவர்கள் முன்நின்று செய்யும் இந்த அடையாளம் - அரும்புகள் வாசிப்பு இயக்கம்

கோவை வாழ் எளிய மக்களின் பிள்ளைகள், சிறுவர் சிறுமியர்களின் புத்தகங்கள் மீதான ஆர்வம் - அடையாளம் அடையாளத்தால் தரப்பட்டிருக்கிறது!

ஆம்!

எதிர்காலத்தில் சமூகத்தில் நல்லதொரு அடையாளம் தரும் சிறந்த மனிதர்களினை உருவாக்கும் பணியாக....!

இவர்களின் சிறு கோரிக்கையாக இந்த தீப ஒளி திருநாளில் மலர்ந்திருப்பது உங்களால் முடிந்த உதவிகளை நூல்களாய் தாருங்கள் புத்தகங்களை கொடுத்து இளைய தலைமுறையின் அறிவு வளர்ச்சிக்கு உங்களாம் முடிந்தளவும் உதவுங்கள் என்பதுதான்!

இளைய தலைமுறைக்கு எம்மால் செய்யும் உதவிகள் சிறிதாக இருந்தாலும் கூட காலத்திற்கும் நிலைத்து நிற்கும் மாபெரும் நற்பணி!

வாய்ப்புக்கள் இருந்தால்,நீங்களும் கூட உதவலாமே?!

தீப ஒளி திருநாளில். அறிவு ஒளி ஏற்றி,மகிழ்ச்சியை, மகிழ்ச்சியாய் கொண்டாடுங்களேன்!

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டப்பொழுதில் காதில் விழுந்து மனதில் பதிந்திருந்தது! ( அனேகமாய் அப்பாவின் டேப்ரெக்காடர் வழி கேட்டிருக்கவேண்டும்!)

நினைவுகள் அளிக்கும் தொந்தரவான தருணங்களில்,சில வரிகள் மட்டும் மனம் சிந்தித்து வாய் வழி ஒலித்து தெறித்து விழும் பாடல்!

மிக நீண்ட நாட்கள் தேடலில் ஒரு வழியாய் கிடைத்து பிடித்துவிட்டேன்!

இன்று முதல் இனிய காலை வேளைகளின் தோழமையாய் மாறிவிட்ட இந்த பாடல்

எத்தனையோ செய்திகளை இணைய நட்புகளோடு பகிர்ந்துக்கொண்ட எனக்கு இதையும் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையோடு....!


பாடலை காண...




பாடல் வரிகளினை காண

நன்றி செல்லி

நன்றி ஜில்ஸ்!

எல்லாருக்க்கும் மனசுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்டே சரி ரிஷி மூலத்தை பாக்கலாம்ன்னு போனா அங்க நம்ம கே.ஆர்.எஸ் அண்ணாச்சி ஸ்டைலா படுத்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டிருக்காரு! அவுருக்கும் ஒருபெரிய்ய்ய்ய் தேங்கஸ்சு!

வைச்சுக்கவா உங்களை மட்டும் டெஸ்க்-டாப்புல...!



கடந்த ஆகஸ்ட் 2007 மாசத்துலேர்ந்து கிட்டதட்ட ஒரு 8 மாசமா இந்த படம்



அப்புறமாட்டிக்கு ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்ல கிடைச்ச இந்த போட்டோ



நடுவாப்புல கொஞ்சம் மாசம் தலைவரு ரிடர்ன்




பெறவு இவுங்க




இப்ப லேட்டஸ்டா இந்த படம்தான் இப்போதைக்கு (போதைக்கு!?) டெஸ்க்டாப்பினை அலங்கரிச்சுக்கிட்டிருக்கற படம்! (டெஸ்க்குடாப்புல இவுங்க அழகா இருக்காங்களா? இல்ல இவுங்க அழகா இருக்கறதால, டெஸ்க்டாப்பு அழகா இருக்கான்னு திடீர் திடீர்ன்னு கவுஜ எல்லாம் வருது! - ஆண்டவா என்னிக்கு அதெல்லாம் பதிவா வரப்போகுதோ?!!)


இனிய நண்பர் தமிழன் - ஏண்டா இவனை எழுத சொன்னோம்ன்னு பீல் பண்றீங்களா? நல்லாவே பீல் பண்ணுங்க! அந்த மிதிவண்டி இடைவெளியில நான் மொபைல் போன் டெஸ்க்டாப்பு படம் அப்புறமாட்டிக்கு ஆபிஸ்ல இருக்கற டெஸ்க் டாப்பு படம் எல்லாம் ரெடி பண்ணனும்!


சரி நாமளும் ஒரு நாலு முக்கியமான ஆளுங்களை கூப்பிட்டுட்டு போவோம்!

1.முத்துலெஷ்மியக்கா (அக்கா பிசியா இருந்தாலும் கூட,இதுக்கும் கொஞ்சம் டைம் பிசியா ஒதுக்கிக்கோங்க ஒ.கேய்!)

2.கப்பி (அண்ணாச்சி!இந்த தடவை மட்டும்
மி(எ)ஸ்ஸான அப்புறம் டீக்குளிக்கிறதுதான் ஒரே வழி!)

3.சந்தனமுல்லை (தங்கச்சி ஒரே பப்பு படமாத்தான் வைச்சிருக்கும்ன்னு ஒரு நினைப்பு!)

4.சுடர்மணி (கொஞ்சமா நல்லவராம் - இருக்கட்டும்!இருக்கட்டும்!)


டிஸ்கி:- எல்லாமே டைல்தானான்னு டென்ஷானக்குறவங்களுக்கு - ஒரே போட்டோவை எம்புட்டு நாளைக்குங்க பாக்குறது அதான் நிறைய்ய்ய்ய? (பயலுக்கு என்னமோ ஆகிப்போச்சுன்னு பீல் பண்ணாதீங்க! நாங்கெல்லாம் நொம்ப தெளிவாத்தான் இருக்கோம்!)

கண்ணதாசன் நினைவு நாளில்....

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!

நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்


கண்ணதாசன் நினைவு நாளில்....

சில பாடல் வரிகளுடன்..!

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி

>>>>>>>>>>>>>>>>>

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

>>>>>>>>>>>>>>>>>

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை

>>>>>>>>>>>>>>>>>

பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா..

>>>>>>>>>>>>>>>>>

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

>>>>>>>>>>>>>>>>>

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

>>>>>>>>>>>>>>>>>

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!

நானும் சினிமாவும் - இன்னொருவாட்டி!

சினிமா பத்தி எழுதணும்ன்னு நினைச்சாலே கொஞ்சம் யோசனையாத்தான் இருந்திச்சு! எம்புட்டு விசயம் இருக்கு எல்லாம் பிளாஷ் அடிச்சுட்டு அடிச்சுட்டு மறைந்துக்கொண்டே இருந்துச்சு! முதல்ல பார்த்த படம் இதுவோ அதுவோன்னு ஒரு கன்ப்யூசன்! எப்படியோ ஒரு மாதிரியா போட்டு ஒப்பேத்தியாச்சு! (இன்னும் கிடைக்கவேண்டிய இடத்திலேர்ந்து ரிப்ளை கிடைக்கல! - அட பிரதர் கிட்டேருந்துதான்! ஆனா கிடைச்ச சேதிப்படி நான் tag பண்ணிவிட்டவங்க கலக்கியிருக்காங்க!)

நேத்து பதிவு எழுதி முடிச்ச பிறகும் கூட யாரோ கூப்பிடற மாதிரி ஒரு நினைப்பு இன்னிக்கு பார்த்த மெயில் வல்லியம்மா கூப்பிடிருந்தாங்க எதிர்ப்பார்ப்பு வைச்சிருந்தா ஏமாத்தகூடாதுன்னு இன்னும் ஒரு வர்ஷன் போட்டாச்சுப்பா!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


எங்க ஊர் கொத்ததெரு மாரியம்மன் கோயில் திருவிழா ஸ்பெஷலா புரொஜெக்டர்ல்லாம் வைச்சு தெருவையே பிளாக் பண்ணி அதிகாலை வரைக்கும் முழிச்சியிருந்து படம் பார்த்துதான் நான் பப்ளிக்கா -பப்ளிக்கே- பார்த்த முதல் படம்:- அதுவும் கந்தன் கருணை! (அதுலயே நான் பாதி படத்துல மயங்கிட்டேன்!)

******************


அண்ணன் அக்கா,நானு அம்மா பாட்டி என்று எல்லோரும் போய் பார்த்த கடைசிப்படம்ன்னா அது அஞ்சலி தான்! அதுக்கு பிறகு ஏனோ எல்லாரும் சேர்ந்து போய் பார்க்கற அளவுக்கான சூழ்நிலைகள் அமையவே இல்லை! (கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு எல்லாம் பறந்துப்போச்சு ஸ்டைல்தான்!)

******************

ரொம்ப பயந்துக்கிட்டே போய் படம் பார்த்துட்டு திரும்ப வரும்போதும் பயந்துக்கிட்ட வந்ததுன்னு சொல்லணும்னா மை டியர் குட்டிசாத்தான் படம்தான்! - போகும் போது படத்தை பத்தின பயம்! திரும்ப படம் முடிஞ்சு வரும்போது பையில மறைச்சி வைச்சு கொண்டு வந்த கண்ணாடியை தியேட்டர்காரன் பறிச்சிடுவானோன்னு பயம் அம்புட்டுதான்!

******************

சொந்தக்கார பயமக்களோட படம் பார்க்க அடம்பிடிச்சு போனது சுந்தரகாண்டத்துக்கு ஆனா அதுக்கு டிக்கெட் கிடைக்காம ஒபன்ல கிடந்த ரிக்‌ஷாமாமா போனது தான் நான் முதலும் கடைசியுமாகி போன இரவு நேர இரண்டாம் ஆட்ட சினிமா!

******************

ரொம்ப ஆர்வப்பட்டு,(மணி,ரகுமான் & ஐஸ்வர்யா) அவஸ்திபட்டு, நேரம் போயி, வெய்யில்ல நின்னு வெளுத்துப்போயி (வெள்ளை கருப்பானா கருப்பு வெள்ளையாத்தானே ஆகும்!) பார்த்து ஆனாலும் மத்தவங்க மாதிரி பாதியிலே எழுந்து போகாம பார்த்த படம்ன்னா அது இருவர்தான்! - பாதி இண்டர்வெல்ல பின்னாடியும் சரி முன்னாடியும் சரி ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் தென்பட்டிருக்க வெளியில படம்முடிஞ்சு வரும்போது ஒரு 10 -15 பேர்தான் :-(

ஆனாலும் எனக்கு இப்பவும் பார்க்க பிடிக்கிது :-)

******************

பாலிடெக்னிக் கடைசி செமஸ்டர் கடைசி பரீட்சை முடிஞ்சு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நியாபகமா படம் பார்த்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிடலாம்டான்னு முடிவு பண்ண ஒ.கே பண்ணிட்டு மாரியப்பா தியேட்டருக்கு போனா காலேஜே அங்கதான் நிக்கிது (படம் - காதலுக்கு மரியாதை!) பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவல்,ஆனால் கூட்டம் ஒத்துவராது வேணும்னா இன்னொரு படத்துக்கு போவோ அதுவும் ஜூப்பரா இருக்குன்னு சொன்னாங்க என்று நான் சொன்னதை நம்பி வந்து,படத்தையும் பார்த்துவிட்டு இன்று வரை மறக்காமலே இருக்க வைத்த படம் - நாம் இருவர் நமக்கு இருவர் (போயும் போயும் இப்படி ஒரு படமாடா நமக்கு எண்ட்டூ கார்டு போடணும்ன்ன்னு நொம்பவே ஃபீல் பண்ணிட்டானுங்க நண்பர்கள்!)

******************

பயங்கரமா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஆனாலும் வேற வழியே இல்லாம வெறுப்பாய் தியேட்டருக்குள் சென்று 3 மணி நேரம் அமர்ந்திருந்து சில காட்சிகள் சில பாடல்கள் மட்டும் பார்த்து மற்ற நேரங்களில் கிடைத்த தீனிப்பண்டங்களை தின்றுகொண்டு வாரந்தாவிற்கும் தியேட்டருக்குள்ளும் நட(ன)மாடி இருந்துவிட்டு இப்பொழுது பாடல்கள் கேக்கும்போது பார்க்கவேண்டும் என்று நினைக்கவைக்கும் படம் - பாண்டி நாட்டு தங்கம்!

******************

கடைசியா ஆனா கலக்கல்ன்னு நான் நினைச்ச விசயம்:))


படையப்பா ரீலிசு!
பியர்லெஸ் தியேட்டர்ல பெரிய பெரிய சவுக்கை கட்டைகளையெல்லாம் கட்டி வழி அமைச்சு வைச்சிருக்காங்க!- ஏதோ பெரிய பார்ட்டீ மீட்டிங்க் மாதிரி! (அந்த காலகட்டத்தில இருந்த எங்க ஊரு சப்கலெக்டர் ஐடியா!) காலையில 8.30 மணிக்கு முதல் ஷோ! பேப்பர் வாங்க கடைக்கு வந்திட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருந்த எனக்கு ஒரு சின்ன ஆசை போய்த்தான் பார்ப்போமே! (அந்த டைம்ல அண்ணன் ஊர்ல கிடையாது!) சைக்கிள் எதிர்ல இருந்த லைப்ரயில பேப்பரோட தள்ளிவிட்டுட்டு ஓடினேன்! ஒடினேன் கவுண்டரின் முன் வரைக்கும் ஒடினேன்! ஒரு சிக்கலும் இல்ல! டிக்கெட் வாங்கியாச்சு கடும் ஆரவாரத்திற்கிடையில் படமும் பார்த்து திருப்தியாகியாச்ச்சு - அதிலிருந்து தொடர்கிறது ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ! :-)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்த பதிவு மூலமாவும் நான் ஒரு ஐந்து பேரை சினிமா பற்றி எழுத அழைக்கின்றேன்! கேள்விகள் பார்க்க இங்கு போய்ட்டு வரவும்!

மழை - ஸ்ரேயா

ஸ்கிரிப்பிளிங் ஸ்க்ரைப் - சங்கீத்

செல்லம் - ஸாவரியா

தயாமலர் - தினேஷ்

டிவிங்கிள் டிவிங்கிள் - சபரி

கலக்கிய கலைஞர்!


தமிழகத்தில் இன்று செவ்வாய்கிழமை,பிற்பகலில் நடைப்பெற்று முடிந்த ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் தலையீட்டு முயற்சிகளினை முடுக்கும் நடவடிக்கைகளில் தமிழகத்தின் நடவடிக்கைகள் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

இரு வார கால கெடு கொடுத்து தமிழ் பகுதிகளில் நடைப்பெற்றுவரும் சண்டைகளினை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு,

கொஞ்சமும் செவி சாய்க்காமல் தம் உதவிகளை மத்திய அரசு தொடருமெனில் தமிழக எம்.பிக்கள் தங்களின் பதவிகளினை ராஜினாமா செய்வார்கள் என்ற அதிரடி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது!

(எனக்கு தெரிந்து எந்த எம்.பிக்களும் அத்தனை சீக்கிரத்தில் தம் பதவிகளினை விட்டுக்கொடுத்து வந்ததாக ஞாபகமில்லை - காவிரி பிரச்சனையில் வாழப்பாடி ராமமூர்த்தியின் எம்.பி ராஜினாமா தவிர்த்து!)

மதிமுக அதிமுக தேமுதிக கட்சிகள் புறக்கணித்தது குறித்த நிருபரின் கேள்விக்கு கலைஞர் அளித்த பதிலாக “எதிர்கட்சிகளுக்கு எவர்மீதும் கோபம் இல்லை வெறுப்பு இல்லை என் மீதான கோபத்தின் காரணமாகவே புறக்கணித்திருக்கிறார்கள் என்றார்.!

சில எதிர்கட்சிகள் இக்கூட்டத்தினை புறக்கணித்தது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் பேசினர் டி.ஆரும் கூட பேசினார்! - இது கலைஞர் ஸ்டைல் :-)

(ஆமாம் எங்க ஊருக்காரரூ என்ன கட்சியெல்லாம் ஆரம்பிச்சிடாரா? - இத்தினி நாளா எனக்கு இது கூட தெரியலயே?)


பிபிசி தமிழோசை!

நானும் சினிமாவும்!

கடந்த 25 வருடகாலத்தில் சினிமா சமபந்தமாக எதையும் கலந்தாலோசித்ததே கிடையாது பிரதரிடம்! அப்படியே பேசியிருந்தாலும் ரஜினி படத்தினை பற்றியதாகவே இருக்கும் அதுவும் கூட ஒரு சில வரிகளும் சில மெளன புன்னகையும்தான்! (இன்றும் கூட அப்படியே அண்ணனின் ஜெராக்ஸ்த்தான்! - பதிவுகள் தவிர்த்து!)

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

இன்னும் கூட யோசித்து யோசித்து பார்த்தாலும் சரியாக ஞாபகத்து வரமறுக்கிறது! என்றாலும் இன்னும் கூட தெளிவாக நிற்பது அப்பாவுடன் மாலை நேரக்காட்சி நாயகன் கண்டு பின் மயூரா ஹோட்டலில் எனக்கே எனக்காய் ஒரு முழு நீள ரவா தேசை உண்டு வந்த நாள்தான்! (எனக்கும் கூட அதுதான் அப்பாவோடு நான் சேர்ந்து பார்த்த முதலும் கடைசியுமான படம்!)

இந்த கேள்விக்கு பிறகு எழுந்த சந்தேகங்களில் ஒரு வேளை இந்தபடமாக இருக்குமோ அல்லது வேற படமான்னு நிறைய படங்கள் பிளாஷ் ஆகி ஆகி மறைந்தன அவைப்பற்றியும் ஒரு சில வரிகள்

ரஜினி கமல் நடித்த படம் பெயர் ஞாபகத்து வரவில்லை என்றாலும் ரஜினி வில்லனாக ஒருவரை கிண்ற்ற்டியில் வைத்து கொலை செய்யும் காட்சி மட்டும் மனதில் பதிந்திருக்கிறது என்ன படம் பெயர் என்று தெரியவில்லை இன்னும் கூட...!

ஒரு முறை வைத்தீஸ்வரன் கோவில் சண்முகாவில் முதல்காட்சி அருணகிரிநாதர் பார்த்ததும் கூட அப்படியே மனதில் ஆழ பதிந்திருக்கிறது!

இவை தவிர அவ்வப்போது அப்பா வாங்கிவரும் திரைக்கதை வசன கேசட்களில் ஞாயிறுகளின் மத்தியத்தில் கேட்டு கேட்டு ஒரு கட்டத்தில் அலுத்துப்போன படம் வருசம் 16!
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சமீபத்தில் குசேலன்! மற்றைய நடிகர்களின் படங்களின் வரிசையில் சொல்லவேண்டுமானல் போன ஜனவரியில் நண்பர்களுடன் சேர்ந்து ஊரில் பார்த்தா பீமா!
(ஆனாலும் ஒவ்வொரு முறையும் டிக்கெட் கவுண்டரில் நிற்கும்போது,நமக்கு டிக்கெட் கிடைக்குமா என்று விரல் நுனியில் பல் வைத்து பரபரத்திருக்கும் தருணங்களை நினைக்கும்போது அப்ப்டி ஒரு அவஸ்தை தேவைதான என்று எண்ணம் வந்தாலும் - தியேட்டர்ல பாக்குறது ஒரு ஜாலிதாங்க!)

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கிலன்றி பார்த்த சினிமாங்கள் வரிசை கொஞ்சம் குறைவுதான்! ஆனாலும் ஒரு இனிய வியாழனில் விளம்பரங்களில் அசத்திக்கொண்டிருந்த குங்குப்பூ பாண்டாவின் படத்தினை பார்த்துமே டக்கென்று ஆன்லைனில் அலசி பார்ப்போம் என்று அலசியதில் கிடைத்த லைவ் சினிமா லிங்கும் அதை தொடர்ந்து 1மணி 20 நிமிட காலங்களும் பெரு மகிழ்ச்சி வரவழைத்தது! (பின்ன தியேட்டரில் அன்னிக்குத்தான் ரிலிசான படம் ஆச்சே!)

சென்ற வருட விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த போது முதன் முதலாய் பரிச்சயமான கலைஞர் டிவியில் ஒரு மதிய வேளையில் நான் பார்த்த சினிமா போர்ட்டர் ரங்கன் - சங்கிலி தொடர்களாய் ஒன்றுக்கொன்று தொடர்புடைய காட்சிகளாக சோக சம்பவங்கள் நீண்டு பிறகு தொடர்ச்சியாக எல்லாமே சுபமாக முடியும் அந்த படம் இன்னும் கூட நினைவுகளில் காட்சிகள் சுழல்கின்றன்!

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

அந்தளவுக்கு எனக்கு சினிமா ரசிப்புதிறமை இருக்குமோ என்று மிக நுட்பமாய் யோசிக்கிறேன் - இல்லை - அம்புட்டு பெரிய அளவுக்கு யோசிக்க வேணாம்ன்னு விட்டுடறேன்!

அடிக்கடி பார்த்து மகிழ்ந்த என்னை அசத்திய சினிமான்னு சொல்லணும்னா ஆண்பாவம்,பாட்ஷா & அன்புள்ள ரஜினிகாந்த்



உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பெரிய பெரிய சினிமா கலைஞர்களெல்லாம் தனித்தோ அல்லது பிரிந்தோ நிற்பது! (இதுவும் கூட அரசியல்தானே!) - இணைந்திருந்தால் சினிமா உலகம் நல்லதொரு வளர்ச்சி பெறும் என்பது என்னோட எண்ணம்!

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாரமலரில் ஆரம்பித்து குமுதத்தில் தொடர்ந்து,ஆனந்த விகடன் வந்து இப்பொழுது இணையம் ஏறி நிற்கிறேன்! அம்புட்டுதான்!(கிசு கிசுக்களை கண்டுபிடிப்பதில் மண்டை உடைத்துக்கொள்ளும் அளவுக்கு ரசிகனாக இருந்ததும் ஒரு காலகட்டம்!)

தமிழ் சினிமா இசை?

இன்றும் இரவு நேரங்களினை, இனிய நேரங்களாக மாற்றிக்கொண்டு தமிழ் உலகை தாலட்டி வரும் தேர்ந்தெடுத்த பாடல்கள்! சமீபத்தில் என்னோட பாஸ்(மலையாளி) என்னிடம்,தமிழ்பாடல்கள் தொகுப்பு தர முடியுமா? என நீண்டகால விருப்பம் என்று கேட்டதும் குறிப்பாய் இளையராஜா இசைத்தொகுப்பினை! அப்படியே கொஞ்சம் மிதப்பாகவே இருந்துச்சு!

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நெக்ஸ்ட்டூ (கேள்விக்கு பதில் தெரியலைன்னா நெக்ஸ்ட் சொல்லணும்)

தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப கவலையாத்தான் இருக்கு!

பிலிம் இன்ஸ்ட்டீயுட்லேர்ந்து இப்ப ஆளுங்க வர்ற மாதிரியே தெரியல :-(
எந்த துறையாக இருந்தாலும் அதுக்குன்னு சில பல அடிப்படைகள் வேணும் அதை தெரிஞ்சுக்கிட்டு வரணும்! அப்பத்தான் தொழில் பக்தி,துறையில் முழுமையான ஈடுபாட்டினை அளிக்க முடியும் அப்படிங்கறது என்னோட எண்ணம்!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சிரமமாகத்தான் இருக்கும் மீடியா உலகம்!

சென்னை பெரும் சேதாரத்திற்குள்ளாகலாம்!?

தமிழர்களுக்கு 1ம் ஆகாது! சினிமா அற்ற தொலைக்காட்சி தொடர்களில் ஆர்வம் மற்றும் அக்கம்பக்கத்தில் சண்டை சச்சரவுகள் போன்றவை அதிகரிக்கலாம் :-)


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....!

அப்பாடா எப்படியோ முடிச்சாச்சு!

அடுத்து நான் அழைக்கும் ஐவர்!
1.கானா பிரபா
2.முத்துலெஷ்மியக்கா!
3.சந்தனமுல்லையக்கா!
4.தமிழ்பிரியன்
5.யாத்ரீகன்

என்னை அழைத்த உடன்பிறப்பிற்கும், உடன் பிறவா சகோதரிக்கும் நன்றிகளுடன்....!

ஈழ மக்கள் தமிழ்நாட்டில்...?


சொந்த நாட்டில் ஏற்படும் போரினாலும், பிரச்னைகளாலும் மற்றொரு நாட்டுக்கு இடம்பெயரும் அகதிகள், இடம்பெயர்ந்த நாட்டிலும் அடைக்கலம் கிடைக்காவிட்டால், அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி தான்!

அப்படியொரு நிலைதான் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் உறவையும், உறைவிடத்தையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு அரசின் அதீத கட்டுப்பாட்டால் வாழ்க்கையே நரகமாக மாறியுள்ளது

இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் விளைவாக, இலங்கை தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினர். மூன்றில் ஒருபங்கு தமிழர்கள், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு வந்தனர் அவ்வாறு அகதிகளாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்களைத் தங்க வைக்க தமிழகத்தில் 117 முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களில் தற்போது ஒரு லட்சம் பேர் உள்ளனர்.

சொந்த நாட்டில் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் வந்த அகதிகளுக்கு, இங்கும் எந்த வாழ்க்கை உத்தரவாதமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது!

தங்களது இனம், மொழி, கலாசாரம் என பல ஒற்றுமைகளுடன் இருக்கும் தமிழகத்தை நம்பி வந்த இலங்கை மக்களுக்கு பெரும்பாலான இடங்களில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது

உயர் கல்வி படிக்க 2000-ம் வரை தமிழகத்தில் அகதிகளுக்கு மேல் ஒதுக்கீடு 5 சதம் இருந்தது. ஆனால், நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் விளைவாக, அந்த ஒதுக்கீடு பறிபோனது. கல்வி மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலுமே இந்தியாவில் உள்ள பிறநாட்டு அகதிகளைவிட, இலங்கை அகதிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளதாகவே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறை, முகாம்கள் மீதான கட்டுப்பாட்டையும், கண்காணிப்பையும் தேவைக்கு அதிகமாகவே அதிகப்படுத்தியுள்ளது. இதனால், அகதிகள் ஓரிடத்தில் நிலையாக வேலை செய்து, அன்றாட வாழ்க் கையை கழிக்கவே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

அதீத கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக அகதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் ஆவண நகல்களை வழங்க வேண்டும்; வேலை செய்யும் இடத்தின் முகவரியை தெரிவிக்க வேண்டும்; செல்போன் கண்காணிப்பு, வெளியூர் வேலைக்குச் செல்லக் கூடாது என பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் இலங்கை அகதிகள் மீது திணித்துள்ளனர்.

இலங்கையில் அந்த நாட்டு ராணுவம் செய்த வேலையை, இந்தியாவில் காவல் துறையினர் செய்கின்றனர். சோதனைகள் குறையவும் இல்லை, மாறவும் இல்லை. ஆள்களும், இடமும்தான் மாறி இருக்கிறது.

இலங்கை அகதிகள் காவல் துறையினரால் மிகவும் கண்காணிப்படுவதால், அவர்களுக்கு வேலை வழங்க தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. மேலும் சில நிறுவனங்கள் வெளிப்படையாகவே இலங்கை அகதிகளுக்கு வேலை கொடுப்பது இல்லை என அறிவிக்கின்றன.இந்தியாவில் குடியேறி உள்ளதுபோல கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அகதியாகச் சென்ற இலங்கை மக்களுக்கு, இவ்வளவு விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை
மேலும், இங்குள்ள அகதிகளைவிட, அங்குள்ள அகதிகள் பொருளாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் நன்றாகவே உள்ளனர். மேலும், அங்கு அவர்களுக்கு சமுதா யத்தில் அந்தஸ்தும் கொடுக்கப்படுகிறது.



இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக போட்டிபோட்டு குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள், உள்ளூரிலேயே அடிப்படைத் தேவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அடைக்கலம் தேடி வந்த இடத்தில் அடைக்கலம் கிடைக்காமல் வதைக்கப்படும் இலங்கைத் தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்பதே மக்களின் கேள்வி.

நன்றி - தினமணி

ஞாயிறு கொண்டாட்டம்!

போன நாட்களின் களைப்பினை போக்கி

வரும் நாட்களை உற்சாகத்தோடு நோக்கி..

இருக்கும் நாள் இந்த இனிய ஞாயிறு

கொண்டாடி மகிழும் நாளாகவே அமையவேண்டி..!

அதுக்குத்தான் இந்த கிளிப்பிங்க்ஸ்ஸ்ஸ்ஸ்.....!





டிஸ்கி:- இதுவரைக்கும் எங்களுக்குன்னு பதிவே போடலைன்னு வருத்தப்பட்ட என்னோட ப்ரெண்ட்ஸ் நிலா,பவன்,பப்பு,சபரி,ஆஷிஷ்,அம்ர்தவர்ஷினி,தீஷு,மஹதி,ம்ம்ம்ம் இன்னும் சில பேரு மறந்துப்போச்சு.....!

கடைசியில டாம் சிரிக்கிற மாதிரியே எதையாச்சும் நினைச்சு சிரிக்கணும் என்ன ஒ.கேவா?! :)

ஏலேலங்கடி - 12



நிலையற்றதே நிலையானதாக இருக்கும் இப்பூவுலகில்,

நட்புகளிடமும், உறவுகளிடம்

அன்பில் நிலைத்துக்கொள்ளுங்கள்!

அன்பாய் நினைத்துக்கொள்ளுங்கள்

சத்திய சோதனை!


1986 காந்தி ஜெயந்தி நாளின் விடுமுறையில் ஆடி களைத்து வந்த அண்ணனுக்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசாக வந்ததுதான் BSA சிவப்பு கலர் சின்ன சைக்கிள் -அப்பெல்லாம் தீபாவளி பொங்கல் அப்புறம் இது மாதிரி விசேஷ தினங்களுக்குத்தான் புதிய விசயங்கள் காணக்கிடைக்கும் கையில் கிடைக்கும்! (இப்பவெல்லாம் அந்த மாதிரி,நல்ல நாள் மகிழ்ச்சியான தருணங்கள் அப்படின்னு குறிப்பா செய்யமாட்டிக்கிறாங்க) - அன்றிலிருந்து அண்ணனுக்கு ஏக குஷி தினமும் பொறுப்பாக கடைத்தெருவிற்க்கு, வீட்டில் வேலையே கொடுக்காவிட்டாலும் கேட்டு வாங்கி செல்வது,சின்னகடைத்தெரு பேப்பர்கடையில் குமுதம் ஆனந்த விகடன் வாங்கி வருவது என்று பொறுப்புக்களை எல்லாம் தானாகவே எடுத்துக்கொண்டு ரொம்ப பிசியாக இருந்த நாட்கள்! வருடா வருடம் சைக்கிளுக்கு பிறந்த நாள் வேறு கொண்டாடி,பின்னர்,கொஞ்சம் கொஞ்சமாய் அண்ணன் சீனியராக மாறியதும், என் கைக்கு சைக்கிள் வந்து சேர அந்த நானும் அதே பணியினை தொடர, இப்பொழுது காட்சிப்பொருளாக முதல் மாடியில் தனி அறையில் தனித்து நிற்க அவ்வப்போது அப்பாவின் கண்ணில் பட்டு சைக்கிளுக்கும் அவருக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் சுவாரசியமாக இருக்கிறது. இங்கிருந்து கொண்டு நினைக்கையில்....!

>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்தியா முழுவதும் இன்று முதல் பொது இடங்களில் புகை பிடித்தல் தடைச்செய்யப்படுகின்றது! பொதுவாக பார்த்தால் ரொம்ப சாதாரணமான விசயமாக தெரிந்தாலும் (அட யாரு கடைபிடிக்கப்போறாங்கன்னு அலட்சியம்!?) ரொம்ப தேவையான ஒன்று!

பொது இடங்களில் பிடிக்க முடியாதவர்கள் இனி வீட்டில் குடிக்க முயற்சிப்பார்கள் அப்படிப்பட்டவர்கள் கொஞ்ச நாட்களிலேயே வீட்டு சூழல் பிள்ளைகள் என பல காரணங்களால் விட்டுவிடக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு இந்த பாயிண்ட்ஸ் இங்கே...

1.புகை பழக்கம் நிறுத்துவதன் மூலம் பெரிய சாதனை செய்த அளவுக்கு எண்ணங்கள் வலுப்படும்! (எம்புட்டு நாளா விட்டு விடணும்ன்னு இருந்தேன் சாதிச்சிட்டேம்ப்பான்னு!)
2.கொஞ்சம் காசு சேமிக்க முடியும்!
3.ஒரு சிகரெட் குடிக்காம விட்டீங்கன்னா உங்களோட லைப்ல 5 நிமிசம் கூடுதாம்ங்க! (ஏட்டிக்கு போட்டியா எதாச்சும் கணக்கு போட்டுட்டு வந்து காட்டாப்பிடாது ஆமாம் சொல்லிப்புட்டேன்!)
4.நிம்மதியா மூச்சு (பெருமூச்சு!?) விடலாம்!
5.அட நீங்களும் வருங்கால தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கலாம்ங்க!.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது என்னோட சத்திய சோதனை!
ஒரு வழியா கொஞ்ச காலத்தை அயலரபு நாட்டில் ஓட்டியாச்சு - நல்லபடியாவும் போய்க்கிட்டிருக்கு! ஏதாச்சும் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் வழி இருக்கான்னு பார்த்தா நிறைய ஃபீல்டுல டெவல்ப்பும் ஆகிக்கிட்டே இருக்கேன்!(அதாங்க ஜிடாக்கு,டிவிட்டரு அப்புறம் விதவிதமா மொக்கை பதிவுகள் இப்படியாக...!- ரொம்ப பெருமையா இருக்கு!)

பட்...! நாம படிச்ச ஃபீல்டுல என்னத்தை சாதிச்சோம்ன்னு ஒரு ரெண்டு மணி நேரம் மல்லாக்கப்படுத்து விட்டத்தை பாத்து யோசிச்சதுல 1ம் பெருசா இல்லடா ராசான்னு தேவமொழியில வந்த சேதியை நல்லா கிரகிச்சுக்கிட்டேன்! ஒரு மண்டலம் விரதம் இருந்து ஒம் மந்திரத்தை, அலுவலக வேலை நேரம் தவிர்த்து (சில சமயம் அலுவலகத்திலும் கூட) மற்ற நேரங்களில் ஓதி வந்தால் எதாச்சும் கொஞ்சமாவது தேறும்ன்னு மெசேஜ் ரீசிவ் பண்ணிக்கிட்டேன்! என்னோட சோதனையை நான் இன்னியிலேர்ந்து ஆரம்பிக்கிறேன்! நல்லதா கெட்டதான்னு ஒரு கை பார்த்துட்டு வந்துடறேன்!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

காந்தி பிறந்த நாள் எதாச்சும் செஞ்சே ஆகணும்ன்னு ரொம்ப முட்டி மோதியதுல ஒரு விட்ஜெட் பாக்ஸ் புடிச்சு போட்டுக்கேன்! பிளாக்கு பக்கம் அப்பப்பா வர்றவங்க கொஞ்சம் கொஞ்சமா அந்த பொட்டியிலேர்ந்து எடுத்து எல்லாருக்கும் நிறைய கொடுத்து செல்வு பண்ணுங்க!

மாற்றம் என்று ஒன்றினை நீங்கள் நினைத்தால், அதை உங்களிடமிருந்தே ஆரம்பியுங்கள்! (நானும் ஆரம்பிச்சிட்டேன்! பார்ப்போம்!)

ஆரு கேட்டா பவர் சாமி!

தன் கண்ணை கண்ணாடி கொண்டு மூடிக்கொண்டாலும்,

உலகமே வெளிச்சமாய் இருப்பதாய்,

நினைக்கும் எங்கள் பவர்!

இவர்!



ஆரு கேட்டா பவர் சாமி!

பதிவு என்ற சொல்லே இனி வேண்டாம்!?

நான் பார்த்த பதிவுகளுக்கு ஒரு நன்றி!
அதை சேர்த்த தமிழ்மணத்துக்கும் நன்றி!
அயராத பதிவர்கள் சொல்லும் கும்மி கும்மி!
அருமையான பதிவர்கள் சொல்லும் கும்மி கும்மி!

பதிவு என்ற சொல்லே இனி வேண்டாம்!?
பிளாக் என்பதே இனி போதும்....!
இனிமேலும் பிளாக்கு பண்ண தேவையில்லை
இதுபோல பிளாக்கு எங்கும் இல்லையில்லை!

தமிழே வா............