இனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!



மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

சேவை என்று தெரியாமலே, அனைவரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை... இத்யாதி இருக்கின்றன. 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

ஒரு லாப- நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால், போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்... நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.

அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல், சத்தியத்தாலும், நியமத்தாலும் காக்க வேண்டும்.

உதவி செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியம். மான- அவமானத்தை பொருட்படுத்தாத குணமும் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிட வேண்டும்.

'வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா' என்று கேட்பீர்கள்.

உங்களுக்குச் சொல்கிறேன்; பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.

கண்ணதாசனிடமிருந்து,

அர்த்தமுள்ள இந்து மதத்தின் வழியாக...!

சின்னப்புள்ளதனமால்ல இருந்திருக்கேன்!


ஜீவ்ஸ் அண்ணாச்சி, கோட்டித்தனமா ஒரு பதிவு எழுதச்சொல்லி டேக் பண்ணிட்டு போயிட்டாங்க! கோட்டி தனமான்னா முதல்ல எப்படி எழுதறது என்னாத்தை எழுதறதுன்னே பிரியல! :-(

சரி எதாச்சும் சின்னபுள்ளதனமா செஞ்ச காரியத்தை சொல்லிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டேன்! (நீ பிளாக்குறதே அப்படித்தானே இருக்குன்னு பீல் பண்றவங்களுக்கு - சின்னபுள்ள எழுதுனா அப்படித்தான் இருக்கும்!)

கல்லூரி சென்ற பிறகு நட்பு வட்டம் கிர்ர்ர்னு எகிற ஆரம்பித்திருந்தது எனக்கு!

பல வகுப்புக்களுக்கும் சென்று பழகும் நண்பர்களை மிக பொறாமையுடன் பார்க்கும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த எண்ணிக்கையின் அருமை புரிந்திருக்கவில்லை என்னை பொறுத்தவரையில் நாம் நிறைய நட்புக்கள் பெற வேண்டி இருக்கும் போல என்ற எண்ணம்தான்!

கல்லூரி படிக்கும் காலங்களில் சின்ன சின்ன உரசல்கள் வந்தாலும் கூட டக்கென்று மறக்கடிக்கும் சூழலே இருந்து வந்ததால் எந்தவொரு நிகழ்வுமே பெரியதாக இழப்பினையோ அல்லது மனகுழப்பங்களையோ கொண்டிருக்கவில்லை !

பொதுவாகவே நாம் சொல்ல நினைக்கும் கருத்துக்கள் நட்புக்களை காயப்படுத்தாத வகையில்தான் இருக்கும் என்றாலும் கூட, அதை வெளிப்படுத்துதல் காலம் நேரம் சூழல் கண்டிப்பாக சிறிய நிகழ்வினை கூட அலட்சியமாக்கியும் விடக்கூடும் அல்லது நட்பில் உரசல்களை கொண்டு வந்து விட்டுவிடக்கூடலாம்!

எல்லா நட்புக்களிடமும் கூடிய மட்டும் தொடர்ச்சியான தொடர்பினை கொண்டிருந்த எனக்கு சில நேரங்களில் சில நட்புகளின் பழக்கங்களில் தொடர்பு கொள்ளும் பழக்கம் வெறுத்துப்போக செய்தது !

ஒரு கட்டத்தில் அடப்போடா...! நீயா வந்து பேசுறவரைக்கும் நான் உன்கிட்ட பேசமாட்டேன் என்ற வைராக்கியம் அவ்வப்போது வந்து மறைந்து க்கொண்டிருந்தது (ஆமாங்க கொஞ்ச நாள் இருக்கும் பிறகு சந்திக்க நேர்ந்தால் எல்லாம் மறந்து போகும்,திரும்ப வரும்!)

வேலை விசயமாக வெளியூரில் இருந்தாலும் கூட தொடர்புகளும் இது போன்ற பிரச்சனைகளும் வந்துக்கொண்டுத்தான் இருந்தன! ஒரு கட்டத்தில் சிலரிடம் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் பேசவே இல்லை (இப்ப நினைச்சா கூட அடேங்கப்பா ரொம்ப இஸ்ட்ராங்காத்தாண்டா இருந்திருக்க என்று நினைச்சு சிரிச்சுப்பேன்!)

வழக்கமான பிரச்சனைதான்! எப்பொழுதுமே ஒன்வே மாதிரி நான் மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டுமா அவர்களும் பரஸ்பரம் தொடர்பு கொள்ளட்ட்டுமே என்ற எண்ணம்தான்!

அந்த காலகட்டங்களில் நினைவுகள் வரும்போகும் நினைவுகளிலேயே எனக்காய் நிறைய உதவிகள் செய்திருந்த நட்புக்களுக்கு நன்றி சொன்னாலும் கூட ரியாலிட்டின்னு வரும்போது அடப்போடா..! நான் போன் பண்ணமாட்டேன் என்று மனம் அடம்பிடித்த சூழல்தான்!

ஆனாலும், சென்னை போன்ற சூழல் கண்டிப்பா நிறைய நினைவுகளையும் உறவுகளை நட்புக்களை பிரிந்திருக்கும் சூழலினை விளங்க வைக்க நிறைய சோதனைகளினை தரும் அது போன்றதொரு ஒரு உடல் நலக்குறைவு தருணத்தில்தான் எனக்கு சுற்றமும் நட்பும் தெளிவாக புரிந்தது!

உதவிக்கொரு ஆள் இல்லாத சூழலில் ஒவ்வொருவரினை பற்றியும் நினைவுகள் மாறி மாறி பயணிக்க,எடுத்த முடிவுதான் யார் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும் நாம இப்படித்தான் இருக்கணும்ன்னு ஒரு உறுதி எடுத்தாச்சு!

நம்மை தொடர்பு கொள்வதில் அவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம் சில நேரங்களில் மனமே கூட இல்லாமல் இருக்கலாம் அதை பற்றிய கவலை எல்லாம் நாம் எதற்கு எடுத்து நம் தோளில் சுமக்க வேண்டும்!

நாமே வலிய போய் நின்னாலும் கூட அவர்கள் வலிந்து ஒரு புன்சிரிப்பினை உதிர்ந்த்துதானே ஆகவேண்டும் அப்படின்னு முடிவா முடிவு பண்ணிட்டேன்!

கோபப்பட்டதும் அதனால் சில காலங்கள் பேசாமல் இருந்ததையும் நினைத்து நினைத்து சின்னபுள்ளதனமால்ல நடந்துக்கிட்ட்டோம்ம் நினைத்து எனக்குள் நானே கேவலப்பட்ட விசயத்தை எல்லாருக்க்கும் சொல்லிட்டேன்ப்பா!

வாழும் வாழ்வின் எண்ணிக்கை எவரும் அறியாத இவ்வுலகில் இருக்கும் நாட்களில், எல்லோரையும் திருப்தியாக வைக்க முடியாவிட்டாலும், நம் மனதுக்கு திருப்தியான செயல்கள் செய்வதில் உயர்வு தாழ்வு பார்க்காமல் வாழ்ந்து போகலாமே என்று நினைத்தது எண்ணம் - தொடர்கிறது....!

தாழ்ந்து போவது தவறில்லைத்தான்!
வீழ்ந்து போவதற்கு வாய்ப்பும் இல்லை!
இந்த ஸ்டைலிலேயே வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே....!

டிசம்பர் 26




மனதில் பதிந்த சோகத்தை

மறந்துவிட முடியாத நாளாக

இன்று டிசம்பர் 26

எதிர்காலம் நோக்கியது மட்டுமல்ல

என் பார்வை..!

என் சொந்தங்களை

கொன்ற காலனை

எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!

M.G.R




திரைப்படங்களில் நிழல் கதாநாயகனாய் வந்தவர்

பின்பு நிஜ கதாநாயகனாய் மாறினார்,

இன்று நினைவுகளில் நிரம்பி இருக்கிறார்!

நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்

அந்த

நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்!”

நினைத்தாலே உறைக்கும்!


டிஸ்கி:- படிச்சப்பிறகு நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு உக்காந்திருக்ககூடாது சட்டுப்புட்டுனு போய் காரியத்தை கச்சிதமா முடிச்சுட்டு வந்து கமெண்ட்ல ஆஹா நீங்க சொன்னதும் நிசம்தான்னு சொல்லிட்டு போகணும் ஒ.கேய்ய்!

எங்க ஊரு மக்களுக்கு நாளும் கிழமையும்ன்னா கண்டிப்பா காலையில வீட்ல இட்லிதான் போடுவாங்க திங்கிறதுக்கு!

நாளும் கிழமையும்ன்னா நல்ல நாட்கள், விசேஷ நாட்கள் மற்றப்படி கிருத்திகை,பெளர்ணமி அப்புறம் இன்ன பிற விரத நாட்கள் வெள்ளி ஞாயிறு இப்படியான நாட்கள்ன்னு வைச்சுக்கலாம்!

மத்த நாட்களில் எதாச்சும் டிபன் ஐட்டம்ன்னு சொல்ற தோசை,உப்புமா,பொங்கல் அல்லது வடக்கத்திய ஐட்டம்ங்கள் பூரி சப்பாத்தின்னு ஓடிக்கிட்டிருக்கும் ஆனா இந்த நாளும் கிழமையும்ன்னு சொன்னா ஒன்லி இட்லி ஐட்டம்தான் அதுக்கு சைடு கட்டி வைச்சு தட்டறதுக்கு சட்னி அல்லது சாம்பார் ஐட்டங்கள்!

இந்த சைடு ஐட்டங்கள் நார்மலா செய்யுறது,சில சமயங்கள் ட்யூ டூ அர்ஜென்சிக்கு (அம்மா பசிக்குதும்மா!) செய்யுற சைடு ஐட்டம்தான் நான் இங்க சொல்லி, நீங்க செஞ்சு திங்கப்போறது

சிவப்பு மிளகாய் பொடி - ஆக்சுவலா இப்படித்தான் நாங்க ஜொள்ளுவோம்! ஆனா இது துவையல் கேரக்டர்!

ரொம்ப சிம்பிளான செய்முறைதான் ஆனா திங்கிறப்பத்தான் சும்மா ஜிவ்வுன்னு காரம் தூக்கி கலக்கும் !

செய்யிறது எப்பிடின்னு நானே கூடச்சொல்லிடுவேனாக்கும்

நல்ல நாலு காஞ்ச மிளகாய் அப்புறம் கொஞ்சம் சின்ன வெங்காயம்,கொஞ்சம் உப்பு அம்புட்டுத்தேன்!

இந்த ஐட்டங்களை சேர்த்து,கொஞ்சமா தண்ணி தெளிச்சு விட்டு,அம்மியில வைச்சு விழுதாக அரைக்கணும்! ச்சும்மா வெண்ணெய் பதத்துக்கு அரைக்கணுமாக்கும்!

கடைசியா கொஞ்சம் கடுகு பொரிச்சு போடணும்!

அவ்ளோதான் புராடெக்ட் ரெடி!

இனி நல்லா சப்பணம் போட்டு உக்காந்துக்கிட்டு,சுடச்சுட இட்லியை டைரக்டா இட்லிபானையிலேர்ந்து அப்படியே தட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்ட்டு, அரைச்சு வைச்சா மிளகாய் பொடி/துவையலை ஒரங்கட்டி நடுவில குழிவிட்டு நல்லெண்ணை விட்டு கொஞ்சமா கலக்கி வைச்சுக்கிட்டு (ரொம்ப எண்ணெய் விட்டா நல்லா இருக்காதுப்பா!)
இட்லியை பிட்டு அதை சிவப்பு மிளகாய் பொடி/துவையல்ல தோய்த்து ச்சாப்ட்டா...!

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!எனக்கு இப்பவே சாப்பிடுணும் போல இருக்குங்க ஒரே அழுகை அழுகையா வருது!)

டெவல்ப்மெண்ட் ஸ்டடீஸ்க்கு :-

1.சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயும் ச்சூப்பரா இருக்கும்!.

2.இந்த ஐட்டங்களோட கொஞ்சம் பூண்டு சேர்த்து அரைச்சா அதுலயும் கொஞ்சம் டிபரெண்ட் டேஸ்ட் காமிக்கும்

3.சின்னவெங்காயத்துக்கு பதிலா பெரியவெங்காயமும் போடலாம் பட் பெரியவெங்காயத்தை கொஞ்ம் பொன்னிறமா வறுத்துப்போடா இன்னும் சூப்பரா இருக்கும்!


ரொம்ப உறைப்பாகிடுச்சுன்னா லைட்டா ஜீனி நாக்கில தொட்டுக்கோங்க!



ஒ.கேய்ய்ய்ய் !

அப்பத்தான் நினைத்தாலே இனிக்கும்!

we are all for QATAR





டிசம்பர் - 18 - கத்தார் நாட்டின் தேசிய நாள் இன்று

பெரும்பாலான நாடுகளின் மக்கள் வந்து வாழ்ந்து செல்லும் இடமாக

அரபு மண்ணின் கலாச்சார பண்பாட்டினை காத்து.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் போட்டி போட்டுக்கொண்டு வளரும்

குட்டி நாடாக

அச்சுறுத்தல்கள் ஏதுமின்றி அமைதியாக

பல்வேறு நாட்டு மக்களின் பாதுகாப்பிலும்

படு கவனமாய்....!

எதிரெதிர் நாட்டு மக்கள் இங்கு நட்பு பாராட்டுவதும்,

சண்டையிட்டுக்கொண்டிருக்கும் சகோதரர்கள் இங்கு சங்கடமின்றி பழக

பரவசமாகிறோம் இந்நாட்டின் வளர்ச்சி கண்டு

பக்கபலமாய் இருக்கிறோம் வளர்ச்சிக்காகவே என்று

எம்மினிய தேசமே உன் எழுச்சியில்

உண்டு எம் தேசத்தின் வளர்ச்சி...!

உண்டு உடுத்தி, உறவுகளை தவிர்த்து, தவித்து வாழுமெமக்கு

தினசரி வாழ்க்கை திகட்டாத ஒன்றாக

மனம் கலங்காத மங்களகரமான வாழ்க்கையாக்கி தந்த

இந்நாட்டின் தேசியத்தினத்தில்

இம்மண்ணின் மைந்தர்களை வாழ்த்துக்கிறோம்!

THE AHIMSA WAY - Embracing love


படித்ததும் மனத்தினை மிகவும் பாதித்தது!

அதை அப்படியே தமிழாக்கம் செய்ய மனம் துடித்தாலும், செய்தபோது சில பல எண்ணங்கள் வேண்டாம் செய்யாதே கேடாக்கிவிடுவாய் என்று உள்மனம் உணர்த்த தொடங்கிய கட்டத்திலேயே கட் செய்துவிட்டேன்

இங்க பேஸ்ட் செய்துவிட்டேன் படித்துப்பாருங்கள்!

சுனாமியில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் வாழ்க்கையும் கூட வருகிறது!

***********************************************

THE AHIMSA WAY Embracing love

Going beyond non-violence, ahimsa also involves connecting things and people with compassion and hope.

So far we have been looking at the concepts of ahimsa and himsa, in the context of our daily relationships. We need to remember that ahimsa values go further than just non-violence. We also need to think of ahimsa and practise it as an all embracing love, in which other qualities are also crystallised…compassion, justice, activism, hope, love for people and all of creation, and a vision that includes and connects everything and everyone with love and compassion.

Such an ahimsa mind does not come automatically or even easily to most of us, as we live at a time when only “I” and “Me” matter. “What’s in it for me?” “If I don’t benefit,” then, with a shrug of the shoulder, so much is thrown away — relationships, friends and jobs. We become selfish, insensitive, himsa people. We live too at a time when people around us don’t affirm ahimsa behaviour or values. Says one reader, “We are looked at as fools and laughed at and taken advantage of.” So is this all-embracing love only an ideal? Where today do we find examples of such ahimsa love that we can believe in and emulate?

When tragedy struck

I was at a camp in Sirgazhi, Tamil Nadu, where some of those affected by the tsunami are housed. There I met nine-year-old Murugeshwari. On the morning of December 26, 2004, she was on her way to buy tomatoes for her sister. Her mother was outside, cleaning fish. Sudddenly Murugeshwari heard a strange sound. She turned and saw the sea rushing towards her. Her first thought was to run and warn her sister and mother, but before that thought could turn into any kind of action she saw the sea swallow them both.

Today Murugeshwari is at a tsunami camp. Her bright eyes fill with tears as she tells me her story. She wipes them away with the hem of her skirt. Some children playing nearby see her wiping her eyes and come running over. They quickly surround her and two of them put their arms around her. “We are her friends, whenever she cries, we try and make her happy,” they said.

“How do you make her happy?” I asked them. “Some of us go and sleep with her in the night, so that she does not miss her mother and sister too much,” said one.

Another said, “We always hold her tight when we sleep.”

“I thought a present would make her happy. I asked my mother for some money to buy her a present. I bought her these,” said another girl pointing to a row of brilliant, green, glass bangles around Murugeshwari’s wrists. Yet another little girl said, “I gave her this,” pointing to a beautiful, black, red and gold bead necklace Murugeshwari was wearing.

“Where did you buy it?” I asked her.

“I didn’t buy it,” she said, “The sea swallowed my mother and my sisters also, so I don’t have anyone to ask money from. It was mine; it was round my neck when the tsunami came. I gave it to her,” she said.

The ahimsa love came so naturally to these children who had lost all that was important to them — their families, homes, and little possessions. While I was with them, I noticed that they were constantly looking out for those who needed some form of care — taking the older people to the bathroom, fetching water for women who were not their mothers, drying someone’s clothes in the sun, or just carrying someone’s baby on their hips as if it was their own brother or sister.

Contrasting behaviour

Contrast this with a story sent in by a reader. Two young women in an academic institution were applying for research grants. Although both were applying for different grants, there seemed to be some rivalry between them. Their boss told them to help each other with the grant applications and check on the last dates to make sure that they submitted them well on time. One of the girls was very competitive and did not want her colleague to get her grant, so she quietly sabotaged her application. We see this kind of himsa behaviour all around us — mean, selfish, hurtful, destructive.

Why does ahimsa behaviour not come easily to us who have so much? Is it because in our materialistic society we respect things more than people? Is our own personal selfishness, greed for material luxury, and desire to be the sole keepers of anything good, hindering us from being sensitive and caring? How do we turn our himsa behaviour around so that it becomes nurturing and powerful?

Forget the ego

At the tsunami camp, I learnt that ahimsa love had to be self- sacrificial to be real and truly meaningful. We need to put away the “I” of the ego, and look beyond at someone else’s well being. Two women were due for a promotion and were short- listed for it. One lady knew that she was qualified, had the right experience and had put in the required number of years in service. She knew too that if chosen, she would perform well. But after a while, she went to her boss and asked that the post be given to the other person. The reason? Her colleague had recently been through a series of personal tragedies and was desperately looking for something that would bring meaning to her life. The woman felt that the promotion would help her friend find stability and fulfilment at a time when so much in her life was painful.

Ahimsa people are powerful; It is in their hearts and minds to change himsa situations, and they do, not because they gain anything out of it, but because they believe in something much larger than themselves.


நன்றி :- உஷா ஜேசுதாசன்
இந்து நாளிதழ் - சண்டே ஸ்பெஷல்

ஐ லவ் லூசி!

நகைச்சுவைக்கென பிரத்யோகமாக வெளியாகிய நாடகங்கள் ஆரம்பகட்டங்களில் சிரிப்புக்களை வரவழைக்கும் சின்ன சின்ன யுக்திகளைனை கையாண்டு உண்மையாக சிரிக்க வைக்கும் செயல்களை செய்து வந்தன. காலங்கள் மாறின காட்சிகளும் கூட...!

சிரிப்பு வரவழைக்க முடியாத செயல்களை செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கறச்ச நாமளே நாலு பேரை தனியா சம்பந்தா சம்பந்தமில்லாம காட்சிகளில் சிரிக்க வைப்போம் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு மக்களும் அட இதுவும் காமெடி போலன்னு சிரிப்பாங்கன்னு ஒரு டெரரர் ஐடியா கண்டுபிடிச்சு அது இன்னிக்கு வரைக்கும் கண்டினியூ ஆகுது - நம்ம ஊர்ல!

இது போன்றே காட்சிகள் ஒளிப்பரப்பாகும்போது தனித்து சிரிப்பு சப்தங்கள் காட்சிகளுக்கேற்ப இணைக்கப்பட்டு பெரிதும் மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட முதல் நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்தான் ஐ லவ் லூசி!

குடும்பத்தில் தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தப்படும் நகைச்சுவைதான் ஐ லவ் லூசியின் தீம்!

1948ஆம் ஆண்டில் வானொலியில் ஒலிப்பரப்பாக தொடங்கிய இந்த நகைச்சுவைத்தொடர் பலத்த வரவேற்பினை பெற்றிருந்தாலும் மக்களிடையே ஒரு வித நம்பகத்தன்மை இன்றியே காணப்பட முதல் முதலாய் 1950 நேரடியாக களத்தில் இறங்கிய லூசி தம்பதியினரின் நகைச்சுவை தெறிக்கும் நாடகம் தொலைக்காட்சியில் தொடர்ந்து,6 ஆண்டுகள் வரை டாப் 3 நிகழ்ச்சிகளிலுக்குள்ளேயே இருந்தது!

டாப் 3 நிகழ்ச்சிகளில் மக்களால் ரசிக்கப்பட்ட இந்த நகைச்சுவை தொடர் அந்த வரிசையில் இருக்கும்போதே நிறுத்தப்பட்டதும் கூட வியப்பினை அளிக்கும் விசயமாக இருந்தது!

கொஞ்சமாய் இண்ட்ரோ கொடுத்தது போதும்ன்னு நினைக்கிறேன்! கொஞ்சமாய் நகைச்சுவை காட்சியினையும் பாருங்க!








டிஸ்கி:- இவையனைத்துமே கோமதி அம்மா கமெண்டாய் தெரிவித்த செய்தியின் அடிப்படையில் நான் தெரிந்துக்கொண்ட (நீங்களும் கூட இருக்கலாம்!?) நகைச்சுவை நடிகையும் - நகைச்சுவை ஒலி ஒளி நாடகம் தொடர்பான செய்திகள் !

மிஸ் வேர்ல்டு 2008 - ரஷ்யாவுக்கு போயிடுச்சுப்பா!





இன்று 13.12.2008 நடைப்பெற்று முடிந்த 2008 ஆம் ஆண்டிற்கான உலக அழகிபோட்டிகளில் பங்குபெற்ற பல நாடுகளின் அழகிகளிலிருந்து ரொம்ப பெஸ்டாக போன வருசம் மிஸ் ரஷ்யாவாக இருந்தவங்க இந்த வருசம் உலகம் பூராவும் பார்த்து ரசிக்கிற அழகியாகிட்டாங்க!

கடைசியா லிஸ்ட் அவுட் ஆன அஞ்சு பேரு!

Parvathy Omanakuttan, India

Gabrielle Walcott, Trinidad and Tobago

Brigite Santos, Angola

Ksenia Sukhinova, Russia

Tansey Coetzee, South Africa

நம்ம இந்தியாவிலேர்ந்து எங்க கனவு தேசத்துக்காரங்க ஒருத்தங்களும் போனாங்க பட் அவுங்க பர்ஸ்ட் ரன்னராகிட்டாங்க! :-(

Picasa - 3 - படு ஷோக்காகீதுப்பா!




  • நெறைய நெறைய விசயங்களை அப்டேட் பண்ணிக்கிறாங்கோ!

  • போட்டோ எல்லாத்தையும் அப்படியே வீடியோவாக்கி அதை யூ டூயுப்ல போட்டா உலகமே பார்க்குமாமாம்!

  • கம்ப்யூட்டரூ ஸ்கீரின் அப்படியே கேட்ச் புடிச்சு வைச்சிக்கிலாமாமாம்!

  • உங்க போட்டோவா இருந்துச்சுன்னா அதுல உங்க பேரை தண்ணியில எழுதி வைச்ச மாதிரி எழுதி வைச்சிக்கிட்டா என்னிய மாதிரி ஆளுங்க அதை சுட்டு நெட்டுல போட்ட்டா ஈசியா கண்டுபுடிச்சுடலாமாமா!

  • அட டக்குன்னு எல்லா போட்டோவும் ஜிவ்வுன்னு ஏறி நெட்டுக்குள்ள போயிடுதுப்பா அப்புறம் அதை ஊரு புல்லா அனுப்பலாம் !

  • கோலேஜ் சொல்லிக்கிற போட்டோ சேர்த்து வைச்சு வெளையாடற விளையாட்டுக்கு கொஞ்சம் ஆப்ஷன் அதிகப்படுத்தியிருக்காங்கோ!

  • அட எனக்கு கொஞ்சமா தெரிஞ்சு அன்னியமொழியை வைச்சுக்கிட்டு நான் கண்டுபுச்சது இம்புட்டுதான் நீங்க வேணும்னா போய் படிச்சுக்கோங்கப்பா புச்சிருந்தா இறக்கி வைச்சு வெளையாடுங்கப்பா!

வரவேற்பறை வந்த PIT


குழுப்பதிவாய் கூடிய கூட்டம்!

கூட்டிய கூட்டம் எண்ணிக்கையில்லாமல் தொடர்கிறது.

ஒவ்வொரு முறையும் இணைந்துக்கொள்ளும் இணையபதிவர்கள்

எழுத்துத்துறையில் மட்டுமின்றி நிழல்படக்கலையிலும் நிஜமாய் அசத்துக்கின்றனர்!

ஒவ்வொரு மாதமும் தேர்வாகும் படங்களும் சரி

தேர்வுக்கு வரும் படங்களும் சரி...!

கண்டிப்பாய் காண்பவர்களை ஈர்த்துக்கொண்டேதான் இருக்கிறது!

ஆம்!

பார்ப்பவர்களையும் கூட படமெடுக்க ஈர்த்துக்கொண்டுதான் இருக்கிறது!

எல்லாம் ஒருங்கே அரங்கேற அருமையாய் வழிநடத்திச்செல்லும் பிஐடிக்கு மற்றுமொரு பெருமை கொள்ளும் செய்தி

வரவேற்பறையில்



இணையம் தவிர்த்து, தனித்திருக்கும் இன்னும் பலரையும் இணைந்துக்கொள்ள வாய்ப்பாய்....!

வாழ்த்துகிறோம்!

விகடனையும்...!

விகடனின் வரவேற்பறையில் வீற்றிருக்கும் பிஐடி குழுமத்தினையும்....!

12-12-08


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!

காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
- ரஜினிகாந்த்

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

கடலை நினைவுகள்!

முன்னாடியே டிஸ்கி:-

டெரரர் பிளான் ரெடியான இடம் இங்க இருக்கு!

*************



கடலையிலிருந்து
சொத்தையை பிரித்து
மத்ததை சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
கடலையை
சரிப்பாதியாக

கடலையை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
வறுக்கின்ற மண்ணாய்
கடலைக்குள் சேர்ந்து
வெளியேற மறுக்கிறது
அந்த வறுபட்ட மண்

கடலையும்
திங்க நல்லதுதான்
தான் கருகி
வந்தால்
கருகிய
சுவையாய்
நாக்கில் ருசிக்கிறது

என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி

கடலோரம்
அழகாய்
உன் கடலையையும்
என் கடலையையும் சேர்த்து
சுவைத்தப்படியே
வாயினில் மெல்ல மெல்லக்கரைய

நம் ஒவ்வொரு கடலையும்
நெருப்பில் கருகிய
கடலைகளாய்,
ஒரு வினாடி
தீச்சுவாலைக்கு பின்
முழுவதும் கருகிவிட்டது
மொத்தக்கடலையும்!

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!

கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
மூச்சு திணறாமல்
மெதுவாக தண்ணீர் குடித்தப்படியே

ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....

ஞாயிறு கொண்டாட்டம் - லாரல் & ஹார்டி!

இன்றைய (நவீன!?) காலகட்டத்தில் நகைச்சுவை காட்சிகளினை காண்கையில் ஏற்றுக்கொள்ளமுடியாத வகையிலான காட்சிகளின் குவியல்களாலாகவே இருக்கிறது!

ஏதோ சிரிப்பு மட்டும் வெளிப்பட்டால் போதும் என்ற மனநிலையிலேயே காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியாகின்றன! நடிப்பவர்களுக்கோ அல்லது அதை காட்சிகளாக படமாக்குப்பவர்களுக்கோ காட்சிகளில் உள்ள அபத்தங்கள் கொஞ்சம் விளங்குவதில்லையா? அல்லது விளங்கினாலும் வேறு வழியே இல்லை, இந்த காட்சி எடுத்தால்தான் மக்களை சிரிக்க வைக்கமுடியும் என்று மொத்தமாய் முடிவு கட்டிக்கொண்டு களத்தில் இறங்குகிறார்களா என்று புரியவில்லை!

லாரல் & ஹார்டி இரட்டை நகைச்சுவை நாயகர்களின் திரைப்பட காட்சிகள் சில வருடங்களுக்கு முன்பு ராஜ் டிவியில் பொழுது போகாத தருணங்களில் (அவுங்களுக்கு!) ரசித்து பார்த்ததுண்டு!

அங்க அசைவுகளிலும்,ஒருவருக்கொருவர் செய்யும் அசட்டை செயல்களிலும்,பார்ப்பவர்கள் மனம் நிறைய சிரித்து மகிழ வாய்ப்புக்கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள்!

இந்த காட்சியினை இப்போதைக்கு கண்டு சிரியுங்கள்...!

அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா...!



எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..!

இதயத்தை கயிறு கட்டி கேரளா பக்கம் இழுத்தவள் இவளோ...!

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே..

அது என்னென்று அறியேனடி...?




கண்ணே உன்னை காட்டியதால்

எனக்கு கேரளா சிறந்ததடி!!!!!

டிஸ்கி -1:- கேரளத்து புது வரவு இந்த அம்மிணி பேருதான் ஆயில்யா!

டிஸ்கி -2:- டைட்டில பார்த்துட்டு, என்னது ஆயில்யன் அம்புட்டு அழகான்னு யாரும் டெரரா ஃபீல் பண்ணவேணாம்!- நாங்கெல்லாம் நார்மல் அழகு!

பளீஸ் வேணாம்..!


இது ரொம்ப சகஜமானதொரு அனைவராலும் அலட்சியமாக அட! இதனால என்ன பெருசா ஆகிடப்போகுதுன்னு மனோபாவத்தோடு செய்யப்படும் சமூக பணி!

சுத்தம் செய்யும் பணிதான் ஆனாலும் ஊர் சுத்தமாகிறது - உலகம் அசுத்தமாக்கப்படுகிறது!

குப்பைகளாகிவிட்ட இலை தழைகளை தீயிலிட்டு தயவு செய்து எரிக்காதீர்கள் என்று பல இடங்களிலிருந்து பலமுறை வேண்டுக்கோள்கள் விடுக்கப்பட்டும் கூட,மக்களிடம் பழக்கமாகிவிட்ட இந்த வழக்கத்தினை மாற்ற இயலவில்லை :-(

சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி வரைமுறைக்குட்பட்டு நடக்கும் அரசாங்க அலுவலகங்களில் கூட இதே முறையினைத்தான் பின்பற்றப்பட்டு வருகிறது! அலுவலக வளாகங்களில் வளர்ந்து நிற்கும் மரங்களின் இலைகள் வாரத்திற்கொருமுறை இவ்வாறு தீயிலிட்டு எரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது!

பெரும்பாலும் இப்படியாக அப்புறப்படுத்தும் பணிகள் அதிகாலை வேளைகளிலோ அல்லது இரவு நேரங்களிலோதான் நடைப்பெறும்!

இப்படி எரிக்கப்படும் போது வெளிப்படும் மிக நுண்ணிய தூசுகள் அந்த புகையாக வெளிப்பட்டு காற்றில் கலக்கிறது!

காற்றினை சுவாசிப்பவர்களின் சுவாசக்காற்றாக மாறுகின்றது பின் வெகு விரைவில் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகச்செய்கிறது!

சிறு பணியாக நாம் செய்தது பெரும் தவறாக வியாபித்து நம்மையே நோய் கொண்டு வதைக்கிறது!

நம்மால் முடிந்தவரை தடுப்போம்!

நம்மால் முடிந்தவரை தவிர்ப்போம்!

*எச்சரிக்கை* இப்படியும் நடக்கலாம்..!



எல்லையை மீறி செல்லவேண்டாம்

உடலும்..!

உணவும்..!



(வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் நான் சொல்றதை சொல்லிப்புட்டேன் பிறகு உங்க இஷ்டம்! அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம்!)

நன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி!

மனப்பூக்கள் மலரட்டும் - 1



இதயம் பரிபூரணத்தூய்மையுடன் திகழட்டும்!

முற்றிலும் நியாயத்தின் வழியில் நில்லுங்கள்!

(உலகால் ஒத்துக்கொள்ளப்பட்ட உங்களின் மனதில் சரி என நினைக்கின்ற, மற்றவர்களால் பாராட்டப்படாவிட்டாலும் கூட ஏற்றுக்கொள்கின்ற வழி முறைகளையே பின்பற்றுங்கள்! )

இறக்கும் வரைக்கும் இருக்கும் வாழ்க்கையில் தைரியமே பிரதானமாக இருக்கட்டும்!

பாவமாக தோன்றும் ஒரு விசயத்தை பற்றி நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்! அதிகமாக நினைக்கப்படும்போது தான், நம்மையறியாமலே நம் செயல்களில் அந்த பாவங்களின் பாதிப்புக்கள் இருக்கும்!



உண்மையாக ஒருவர் தூயவராக இருந்தால் தூய மனம் படைத்தவராக நினைத்துக்கொண்டிருந்தால் அவரிடம் உங்களால் தூய்மையின்மையினை காண இயலாது! உள்ளே நினைப்பதுதான் வெளியே தெரிகிறது,தெரிவிக்கிறது.

- சுவாமி விவேகானந்தர்!



டிஸ்கி :-நொம்ப டெரராய் பதிவுகள் எழுத தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அன்பு கூர்ந்து, அடியேனை அட்டாக் செய்து சொல்லவும்!

ஆத்தா நான் லூசாயிட்டேன்...!

உன் குரலை மட்டுமே கேட்க

வேண்டாமென என் இரு செவிகளிலும்

ரெண்டு ரோல் பஞ்சினை வைத்தேன் என்றதற்கு

என்ன சொல்கிறேன் என்று தெரியாமல்

தான் பேசிக்கொண்டிருந்ததை கேக்கவில்லையே

என்று என்னை டெரராய் அடித்தாயே!



நாம் சந்தித்த இடங்களில்

நீ இல்லாத நாட்களில்

நான் நன்றாக இருந்தேன்

நிம்மதியாக இருந்தேன் என்றதற்கு

என்னுடன் பேசாமல் நிம்மதியாக இருந்தாயா?

என்று என்னை டெரராய் அடித்தாயே!




பிறந்ததில் இருந்து

நீ இத்தனை அழகா

என்று நான் ச்சும்மா கேட்டதற்கு

கண்ணாடியில் எனை காணாததால்

வந்த அழகு இது என

தைரியமாய் சொன்னாயே!

பைத்தியமடி நீ எனக்கு!

பைத்தியமானேன் நான் எனக்குள்!



டிஸ்கி:- இங்க படிச்ச பாதிப்புத்தான் என்னிய மன்னிச்சுடுங்க நாணல் அக்கா :)