12 கேள்விகள் (வெட்டீஸ் வெர்ஷன்)

ஆச்சி தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஆயில்யன்கிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடலாம்ன்னு! நன்றி ஆச்சி!! இனி கேள்விகளுக்கு போகலாம் (ஆச்சி நீங்க போகலாம்!)

டொண்டொடொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

கானா பிரபா:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?

ஆயில்யன்:- நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது

கானா பிரபா:- நீங்க ஆபிஸ் போய்ட்டேன்னா அங்க என்ன பண்ணுவீங்க?

ஆயில்யன்:-சாட்டிங்க் ப்ளாக்கிங்க் அப்புறம் பேஸ் புக் ஆர்கெட் இன்னபிற எல்லாம் வேலை தவிர்த்து மத்த காரியங்கள்

கானா பிரபா:- நீங்க வீட்டுக்கு போய்ட்டா என்ன பண்ணுவீங்க?

ஆயில்யன்:-சோறு தின்னுட்டு மல்லாக்கடிச்சு படுத்துகிடப்பேன்

கானா பிரபா:- உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

ஆயில்யன்:-சோறு தயிரு அப்புறம் இட்டுலி....... தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது உவ்வ (வாந்தி ஸ்டைலில் முகத்தை நேராக்குகிறார் - நார்மலா கோணலா இருக்கும்!)

கானா பிரபா:-ஆபிஸ்க்கு என்ன எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

ஆயில்யன்:-ஐ-பாட்,எம்பி3 பிளேயர் அப்புறம் அப்புறம் திங்கிறதுக்கு மேரி & குட்டே பிஸ்கெட் (டீ கொடுக்கும்போது அதுல நனைச்சு நனைச்சு திங்கலாம்ல - மேரி பிஸ்கட்டுன்னா ரெண்டு ரெண்டா..)

கானா பிரபா:-ஆபிஸ்ல உங்களை என்ன சொல்லி வேலை செய்ய சொல்லுவாங்க?

ஆயில்யன்:-ப்ளீஸ் சார் இன்னிக்கு மட்டுமாச்சும் இதை செஞ்சு கொடுங்க சார்ன்னு - யோவ் நான் பிசின்னு சொல்லிக்கிட்டிருக்கேன்ல நோ சான்ஸ் ஈவன் எனக்கு இருக்கிற இந்த 24 அவர்ஸ் அப்படிங்கறதே ரொம்ப்ப கொஞ்சம் எத்தனை பிராஜெக்ட்ஸ் எத்தனை கிளையண்ட்ஸ் ஒரே குஷ்டமப்பா!

கானா பிரபா:-. நாம ஆன்லைன்ல இருந்தா என்ன பண்ணுவோம்

ஆயில்யன்:-சாட்ல உக்காந்துக்கிட்டு ஸ்டேட்டசு சண்டை போடுவோம்

கானா பிரபா:- நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?

ஆயில்யன்:- ஹைய்ய்ய இல்ல இல்ல! நீங்க சிவப்பு! ரெண்டாவது நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன்

கானா பிரபா:-. எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?

ஆயில்யன்:- ரொம்ப சிம்பிள் மல்லு படம் புரொபைல்ல மாத்துனா போதுமே டக்குன்னு வந்து ஹாய் சொல்லிட்டு சிரிப்பீங்களே…!

கானா பிரபா:-. நான் உங்களை என்ன சொல்லி கூப்பிடுவேன்..?

ஆயில்யன்:- பாஸ் வெட்டியாத்தானே இருக்கீங்க..?

கானா பிரபா:- ரேடியோவுல என்ன பார்க்க பிடிக்கும்?

ஆயில்யன்:- ஹய்யோ ஹய்யோ ரேடியோவுல என்ன கேக்க பிடிக்கும்ன்னு இருக்கணும் கேள்வி !(கேள்வி கேக்க கூட தெர்ல)

கானா பிரபா:- எந்த புக் பிடிக்கும்?

ஆயில்யன்:- ஏ,பி,சி,டி புக்கு மட்டும்தான் அதுலதான் 26 எழுத்து மட்டும் இருக்கும்

பகுதி பகுதியாத்தான் ஆயில்யன்கிட்டே கேட்டேன். ரெண்டு மூணு கேள்விகளுக்கு மேலே சார் சாட்டிங்குக்கு ஓடிபோய்டறாங்க... நம்ம தமிழன் கறுப்பி சென்ஷிகிட்டயும், தமிழ்பிரியன்கிட்டயும் இதே மாதிரி ஒரு இண்டர்வியூ எடுக்கணும்ம்னு கேட்டுக்கிறேன்!(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது இன்னும் வக்கணையா கூட இருக்கலாம்!!)

கோபிநாத் – பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!

பின்னூட்டங்களில் மட்டும் அதிகம் தென்படும் அன்பு தம்பி;

ஆடிக்கொருதரம் பதிவுகளோடு அசைந்து வரும் அன்பு தம்பிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

வாழ்க்கை பற்றி யாரிடமும் கேட்டுவிடலாம் ஆனால் அதற்கு தக்க பதில்களோ அல்லது மிக எளிமையான விளக்கங்களோ எல்லோராலும் தர இயலவே இயலாது;

ஆனால் கோபி சாதித்திருக்கிறார் ஏதோ ஒன்று அவரை சாதிக்கவைத்திருக்கிறது

என்னன்னு சொல்றேன் பார்த்துக்கோங்க!

இந்த படத்தை நல்ல பாருங்க என்ன புரியுது?

வாழ்க்கையோட முக்கியமான விஷயம் ஓண்ணுயிருக்கு





Just reminded of one thing... Two guys for a girl,one tearfully ruminating, and the other carefully tracking ... Despite all this, the girl is looking for better options

இது தான் வாழ்க புரியுதா...

-இதுதான் கோபிநாத்

இப்படி சிம்பிளோ சிம்பிளா சொல்லிட்டு திரும்பவும் எல்லாருக்கு புரிஞ்சுதான்னு செக் பண்ற தன்மை யாருக்குங்க வரும்...?

நீங்களே சொல்லுங்க!

நீங்களெல்லாம் ப்ளாக்கரா.....?


  • பிளாக் எழுதுறது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குதா?

  • நீங்கள் சொல்ல நினைக்கின்ற விசயத்தினை பொதுவில் தெளிவாக சொல்லிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்களா..?

  • எழுதுவதிலும் பேசுவதிலும் நீங்க சிறப்பாக செயல்படுவதாக நினைத்ததுண்டா?

  • எழுத்து திறமை தவிர்த்து வேறு என்ன சிறப்பு தகுதிகளை கொண்டிருக்கிறீர்கள்? அதை ப்ளாக்கில் வெளிப்படுத்த முயற்சிப்பதுண்டா...?

  • மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா?

  • இணைய நட்புகளின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களா?

  • சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை என்பது....?

டிஸ்கி :- பத்தாவது பொது தேர்வுக்கு முன்னாடி வர தமிழாசிரியர்கள் நடத்தும் தமிழ் தேர்வு கொஸ்டீன்ஸ் மாதிரி இதெல்லாம் ரொம்ப சீரியசா எடுத்துக்கவேண்டாம்.!

சூரியன் எப் எம் 93.5


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க! விளம்பர பலகைகளினை மாம்பலம்,கிண்டி & சைதை ரயில்வே ஸ்டேஷன்களில் (எனக்கு தெரிஞ்சது இம்புட்டுதான்ப்பா),பார்த்து நம்ம ஊருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய 2005ன் ஆரம்ப நாட்கள்.

வெளிநாடு வந்து சேர்ந்ததும் எல்லாமே மாறிப்போனது! தனிமை + இணையம் & வேலை என்ற ஒரு குறுகிய வட்டமிட்ட வாழ்க்கை வாழத்தொடங்கிய நாட்களில் ப்ளாக்குகள் மட்டுமின்றி இணையதள வானொலிகள்தான் அதிகம் மனதினை மட்டுப்படுத்திய அளவுக்கு வைத்திருக்கசெய்தது!

சில ரேடியோக்களின் ஆர்வம் இன்னும் பல பல தேடுதல்களை தொடங்கிவிட ஒரு டஜன் வானொலிகள் மீடியா ப்ளேயரினை ஆக்ரமித்துக்கொண்டது.

என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு ரேடியோ கேக்குறதுன்னா ஒரு சந்தோஷம்தானே என்று இன்னுமொரு தேடல் அப்படி தேடிக்கிட்டிருக்கும்போது,இன்னொரு பக்கம் வலைப்பதிவுலகில் டெர்ரர் கமெண்ட்களில் வலம் வந்துக்கொண்டிருந்த,ஹப்லாக்.காம் மூலம் சூரியன் எப்.எம் தொடர்பு கிடைக்கப்பெற்றது அன்று முதல் இரவு வேளைகள் “இனிய இரவுகளாகின” யாழ் சுதாகர் மற்றும் அறிவிப்பாளர்களின் குரலோடு,ஆனந்த கீதங்கள் கேட்டுக்கொண்டே தூங்காமல் இருந்த காலகட்டங்கள் !

அதிகம் அனுபவிக்கும் இன்பங்கள் அனைத்தும் சில காலமே என்பதுபோல வந்த சுவடே தெரியாத அளவுக்கு ஹப்லாக்.காம் மறைந்துவிட,அடுத்த தேடலில்,தினகரன்.காம்ன்னு ஒரு பக்கத்தில் இருந்த சூரியன் எப்.எம் லிங்க் கிடைக்கப்பெற்று மீண்டும் இனிய இரவுகள் தொடர்ந்தன.அதுவும் கொஞ்சம் காலம்தான்! என்ன ஆனதோ தெரியவில்லை டக்கென்று ஆஃப் செய்து தூக்கி சென்றுவிட்டார்கள் வானொலி பெட்டியினை!

அவ்வப்போது எங்காவது சூரியன் எப்.எம் லிங்க் ஏதேனும் தென்பட்டால்,ஆசையோடு ஓடோடிச்சென்று,அதன் செயல்படாதன்மை நொந்து மனம் வருந்தி திரும்பிய நாட்கள் நிறைய உண்டு! சமீபத்தில் பாடகி சின்மயி அவர்களின் பதிவிலிருந்து,இன்னுமொரு இணையத்தொடர்பு கிடைத்து ஓடோடி சென்று பார்த்தால் - கேட்டால் - வானொலி இயங்கிக்கொண்டிருந்தது சந்தோஷத்தில் ஒரு பெரிய ஹைய்ய்ய்ய்ய்ய்ய் கூட போட்டாச்சு :-) ஆனா பிறகுதான் தெரியவந்தது,தொடர் சேவையாக அல்லாமல் சில மணி நேரங்களுக்கு இயங்காது என்று அதுவும் குறிப்பாய் இரவு நேரங்களில்....!



பெரும் ஏமாற்றம் நேரும்போதுதான் நிறைய கேள்விகள் எழுகின்றன?
ஏன் முடியாது..?
ஏன் செய்யவில்லை..?
ஏன் செய்துகொண்டிருந்ததை நிப்பாட்டிவிட்டார்கள்..?
நம்மை போல எத்தனை பேர் இப்படி இருப்பவர்கள்..?
வேறு எதுவும் வழி இருக்கிறதா..?
வேறு யாராச்சும் அயலகத்தில் கேட்டு ரசிக்க தொழில்நுட்ப ரீதியாக எதேனும் வழி இருக்கா இப்படி பல பல ”ஏன்”கள்ஆமாம் பொதுவாவே கேட்ப்போம் இது ஒரு ரேடியோ அலைவரிசைதானே முன்பு இணையத்தில் ஒலிபரப்பிக்கொண்டிருந்தவர்கள்தானே பின்பு ஏன் நிப்பாட்டிவிட்டார்கள் ? இணையத்தில் விளம்பரங்களை வைத்து ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளலாம்தானே? அல்லது இலவசமாகவே வழங்கினாலும் கூட என்ன பெரியதாக இழந்துவிடப்போகிறார்கள் அத்தனை பெரிய சன் நெட் குழுமத்தினர்...?

மனசுல தோணுச்சு ’பிளாக்’கிட்டேன்/பினாத்திட்டேன்! யாராச்சும் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க மேட்டர் நல்லா புரிஞ்சவங்க கொஞ்சம் இது சம்பந்தமா எதாச்சும் செய்யலாம்ல !

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞரே...!

இன்று ஜுலை முதல் நாள் தன் பிறந்த நாளினை பெற்றோரின் நல் ஆசியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் எங்கள் மாவட்டத்து கவிஞருக்கு

இன்று போல் என்றும் இன்பமும்,இன்னும் பல இனிய நிகழ்வுகளும் எதிர் வரும் காலத்தில் வளமுடன் வந்து சேர, இறைவன் ஆசிகளோடு எம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!






எழுந்து வரும் வேகத்தை எரிச்சலாய் காட்டாமல்
எழுதும் இப்பேனா முனையால் எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன்


தேர்ந்தெடுத்த இவ்வழி தெளிவால் பிறந்த வழி
இவ்வழியின் மகத்துவத்தை தெரிவிக்க வார்த்தையில்லை

என் வழிதான் சிறந்ததென நிரூபிக்க இஷ்டமில்லை
எதிர்படும் நிகழ்வுகளின் தாக்கம் தாளவில்லை

இன்பமோ துன்பமோ நன்மையோ தீமையோ
இலாபமோ நஷ்டமோ வாழ்வோ தாழ்வோ
என் எல்லா உணர்வையும் மதிக்கும் என் உயிர்த்தோழி
என்னையே அறிந்து கொள்ள உதவும் ஓர் கண்ணாடி

ஆத்திரத்தை அறிவிக்கும் அழகிழந்த வார்த்தையெல்லாம்
கோர்க்க முனைகையிலே கும்பிட்டு பின் வாங்கும்
வார்த்தைகளின் வெளிப்பாடு உணர்ச்சிகளைத் தாக்காமல்
உள்ளார்ந்த அறிவின் உயரத்தைத் தொட்டு வரும்

மெல்ல, எழும் வார்த்தைகளை மெருகேற்ற முற்பட்டால்
ஆத்திரம் குறைந்து தானாய் அழகுணர்வு வந்துவிடும்
எழுதுகின்ற எனக்கோ இன்பத்தை அள்ளித்தரும்
என்னாலும் முடியுமென்ற எழுச்சியை வென்று தரும்

இத்தனையும் செய்கின்ற என் கவிதைத் தோழிக்காய்
இறைவா உன்னிடம் என் மன்றாட்டு
உலகம் உள்ளளவும் இந்த உயிர்ப்பிணைப்பை
என்றென்றும் உறுதியாக்கிக் காப்பாற்று !

- சுபஸ்ரீ ராகவன்

சூரியன் எப் எம் 93.5


கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க! விளம்பர பலகைகளினை மாம்பலம்,கிண்டி & சைதை ரயில்வே ஸ்டேஷன்களில் (எனக்கு தெரிஞ்சது இம்புட்டுதான்ப்பா),பார்த்து நம்ம ஊருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிய 2005ன் ஆரம்ப நாட்கள்.

வெளிநாடு வந்து சேர்ந்ததும் எல்லாமே மாறிப்போனது! தனிமை + இணையம் & வேலை என்ற ஒரு குறுகிய வட்டமிட்ட வாழ்க்கை வாழத்தொடங்கிய நாட்களில் ப்ளாக்குகள் மட்டுமின்றி இணையதள வானொலிகள்தான் அதிகம் மனதினை மட்டுப்படுத்திய அளவுக்கு வைத்திருக்கசெய்தது!

சில ரேடியோக்களின் ஆர்வம் இன்னும் பல பல தேடுதல்களை தொடங்கிவிட ஒரு டஜன் வானொலிகள் மீடியா ப்ளேயரினை ஆக்ரமித்துக்கொண்டது.

என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு ரேடியோ கேக்குறதுன்னா ஒரு சந்தோஷம்தானே என்று இன்னுமொரு தேடல் அப்படி தேடிக்கிட்டிருக்கும்போது,இன்னொரு பக்கம் வலைப்பதிவுலகில் டெர்ரர் கமெண்ட்களில் வலம் வந்துக்கொண்டிருந்த,ஹப்லாக்.காம் மூலம் சூரியன் எப்.எம் தொடர்பு கிடைக்கப்பெற்றது அன்று முதல் இரவு வேளைகள் “இனிய இரவுகளாகின” யாழ் சுதாகர் மற்றும் அறிவிப்பாளர்களின் குரலோடு,ஆனந்த கீதங்கள் கேட்டுக்கொண்டே தூங்காமல் இருந்த காலகட்டங்கள் !

அதிகம் அனுபவிக்கும் இன்பங்கள் அனைத்தும் சில காலமே என்பதுபோல வந்த சுவடே தெரியாத அளவுக்கு ஹப்லாக்.காம் மறைந்துவிட,அடுத்த தேடலில்,தினகரன்.காம்ன்னு ஒரு பக்கத்தில் இருந்த சூரியன் எப்.எம் லிங்க் கிடைக்கப்பெற்று மீண்டும் இனிய இரவுகள் தொடர்ந்தன.அதுவும் கொஞ்சம் காலம்தான்! என்ன ஆனதோ தெரியவில்லை டக்கென்று ஆஃப் செய்து தூக்கி சென்றுவிட்டார்கள் வானொலி பெட்டியினை!

அவ்வப்போது எங்காவது சூரியன் எப்.எம் லிங்க் ஏதேனும் தென்பட்டால்,ஆசையோடு ஓடோடிச்சென்று,அதன் செயல்படாதன்மை நொந்து மனம் வருந்தி திரும்பிய நாட்கள் நிறைய உண்டு! சமீபத்தில் பாடகி சின்மயி அவர்களின் பதிவிலிருந்து,இன்னுமொரு இணையத்தொடர்பு கிடைத்து ஓடோடி சென்று பார்த்தால் - கேட்டால் - வானொலி இயங்கிக்கொண்டிருந்தது சந்தோஷத்தில் ஒரு பெரிய ஹைய்ய்ய்ய்ய்ய்ய் கூட போட்டாச்சு :-) ஆனா பிறகுதான் தெரியவந்தது,தொடர் சேவையாக அல்லாமல் சில மணி நேரங்களுக்கு இயங்காது என்று அதுவும் குறிப்பாய் இரவு நேரங்களில்....!



பெரும் ஏமாற்றம் நேரும்போதுதான் நிறைய கேள்விகள் எழுகின்றன?
ஏன் முடியாது..?
ஏன் செய்யவில்லை..?
ஏன் செய்துகொண்டிருந்ததை நிப்பாட்டிவிட்டார்கள்..?
நம்மை போல எத்தனை பேர் இப்படி இருப்பவர்கள்..?
வேறு எதுவும் வழி இருக்கிறதா..?
வேறு யாராச்சும் அயலகத்தில் கேட்டு ரசிக்க தொழில்நுட்ப ரீதியாக எதேனும் வழி இருக்கா இப்படி பல பல ”ஏன்”கள்ஆமாம் பொதுவாவே கேட்ப்போம் இது ஒரு ரேடியோ அலைவரிசைதானே முன்பு இணையத்தில் ஒலிபரப்பிக்கொண்டிருந்தவர்கள்தானே பின்பு ஏன் நிப்பாட்டிவிட்டார்கள் ? இணையத்தில் விளம்பரங்களை வைத்து ஓரளவுக்கு சமாளித்துக்கொள்ளலாம்தானே? அல்லது இலவசமாகவே வழங்கினாலும் கூட என்ன பெரியதாக இழந்துவிடப்போகிறார்கள் அத்தனை பெரிய சன் நெட் குழுமத்தினர்...?

மனசுல தோணுச்சு ’பிளாக்’கிட்டேன்/பினாத்திட்டேன்! யாராச்சும் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க மேட்டர் நல்லா புரிஞ்சவங்க கொஞ்சம் இது சம்பந்தமா எதாச்சும் செய்யலாம்ல !