Long, Long Ago....

நண்பனொருவன் வந்த பிறகு வாடா ஊர் சுத்தலாம் என்ற பிறகு” - இப்படி எனக்குக் கிடைத்த ப்ரெண்ட்தான் பாரதி

பசங்க அடிக்கடி கடைத்தெருவுக்கு போறாங்கன்னாலே வீட்ல ரொம்ப யோசிப்பாங்க! துணைக்கு யாராவது ஒரு ஆள்ன்னு தெரிஞ்சா கன்பார்மா ! அதுவும் எங்க வீட்ல சொல்லவே வேணாம். கற்பனை பண்ணி பயந்துக்கறதுலே அவங்களை அடிச்சுக்கவே முடியாது! யாராச்சும் கடத்திட்டு போய் (என்னையத்தான்ங்க) கண்ணை கட்டி, வேஷ்டி சட்டையை கட்டி கல்யாணம் செஞ்சுக்கிடுவாங்களோ ரேஞ்சுல பயப்படுவாங்க!

அதுவும் இல்லாம இதுங்க கடைத்தெருவுக்கு போனா உருப்படாது (ஒன்ஸ் உருப்படாதுன்னு சொல்லிட்டாலே அவ்ளோதான்) அப்புறம் கடைத்தெருவுக்கு கும்பலா போறவங்க எல்லாருமே கெட்டவங்கன்னு ஒரு நினைப்பு!

காய்கறி வாங்க கண்டிப்பா பெரியகடைத்தெருதான் போகணும்...! நீ இங்கயே சின்னகடைத்தெருவுல வாங்கிட்டு வான்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பாரதியும் என் கூட வரான்மாம நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் காய்கறிகடைக்கு போகப்போறோம்ன்னு சொன்னா ஆமாம் உன்னையவிட அவன் இன்னும் பயங்கர ரவுடிப்பயன்னு பாக்கிறாப்பார்வையிலயே தெரிஞ்சுமே! இருந்தாலும் எப்படியோ பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு!

வழக்கமா கடைத்தெருவுக்கு ஊர்வலம்/நகர்வலம்/ஃபிகர்வலம் போறதுன்னா நாங்க தவறாம ஒண்ணு செய்வோம்! லெப்ட் டைரக்ஷன்னு ஆப்போசிட்டா நடந்து போறது,ஒண்ணுமே வாங்காம வெறும் நா* சந்தைக்கு போனமாதிரி சீமாட்டி ஜவுளிக்கடை உள்ளாற போயிட்டு வர்றது,ஹோட்டல் கண்ணுல பட்டா போய் எதாச்சும் தின்னு வயித்தை நிரப்புறது (அப்பக்கூட என் காசுதான்!) இப்படியே மணிக்கூண்டுல ஆரம்பிச்சு மயூரா ஹோட்டலை கடந்து லாகடத்துக்குள்ள நுழைஞ்சு ஞானாம்பிகை காலேஜுக்கு தூரத்திலேர்ந்தே ஒரு வணக்கம் வைச்சுட்டு திரும்ப குருஞானசம்பந்தர் ஸ்கூல் வழியா மணிக்கூண்டுல வந்து நின்னு சுத்தியுமுத்தியும்பார்த்துட்டு பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்கிறது! இன்னும் ஒண்ணு இருக்கு... கடைத்தெரு சுத்தறதுன்னு கிளம்பிட்டா அதுவும் ரெண்டு மூணு பேரோட கிளம்பிட்டா அந்த கடைப்பக்கம் போகாம வரமுடியுமா? அது வந்து கச்சேரி ரோடு, அண்ணா பகுத்தறிவுமன்றம் போஸ் ஆபிஸு - புரிஞ்சுருக்குமே - யெஸ் வைத்தாவுல வந்து கும்பலோட கும்பலா நின்னு டீ குடிக்கிறது!காசு காய்கறி வாங்க கொடுக்குற காசுதான் - டீ க்குடிக்க காசு வேணும்ன்னு கேட்டா எல்லாம் உனக்கு இங்க ஒரு வாட்டி குடிக்கிற காப்பியே போதும்ன்னு சொல்லிட்டா இப்படித்தான்! (ஹிஹி... யப்போவ் மன்னிச்சுக்கோப்பா) வெட்டியா இருந்து வேலை கிடைச்சப்பிறகு அர்ச்சனா அபிராமி அய்யப்பன்னு ஸ்விட்ச் ஆகி ஒன்லி டபுள் ஸ்ட்ராங்க் காபி நோ டீ பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டோம்!

.கே திரும்ப ரிடர்ன்!

எங்க போறோம்? ஊர் சுத்த போறோம்!

கொஞ்சநேரம் நல்லா உருப்பட்ட ப்ரெண்ட் கடையில உக்காந்திருப்போம் நார்மலா காலை 6.30 ஆரம்பிச்சு நைட்டு 9.30 மூடுவான் எங்கள பார்த்தா ஒன்-அவர் முன்னாடியே வந்துட்டானுங்கடான்னு (ஒரு பாசத்துலதான்ங்க) மூடிடுவான்! அதுக்கு அப்புறம் அவனையும் கூட்டிக்கிட்டு மணிக்கூண்டுலேர்ந்து சுந்தரம் தியேட்டர் வரைக்கும் தார் பாதையில கால் பாதத்தை பதிக்கிறதுதான்! பஸ் ஸ்டாண்ட் உள்ளாற நிறைய பஜ்ஜி கடைங்க இருக்கு...! அதுதான் ஊருக்கு வர்ற எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது!சுந்தரம் தியேட்டருக்கு எதிர்த்தாப்புல எம். சி. பி ஒரு டீக்கடை இருக்கும் அங்க டீயை தவிர போண்டா பஜ்ஜி வடை 5 ரூவாய்க்கே ஆறு ஏழு ஐட்டம் சூடாவும் ஆறியும் கிடைக்கும்! அதை உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டே காசை வாங்கி கல்லாவுல போட உள்ளாற ஒருத்தரு முதலாளி வேசம் கட்டி உக்காந்திருப்பாரு!

நானும்
சரி, பாரதியும் & குரூப்பும் சரி வேலையெதுவும் கிடைக்கலைன்னா இது மாதிரி முதலாளி வேசம் கட்டிக்கிட்டு எங்கயாச்சும் குந்திடலாம்ன்னு மனசை தேத்திக்கிட்டோம்! (sitting in one place is very important) ஏன்னா அப்ப எவனுமே எங்களுக்கு வேலை கொடுக்கற அளவுக்கு நாங்க குவாலிபிகேஷனோட இல்ல!

எங்களோட குறிப்பா என்னோட வாஸ்து எப்படின்னா அஞ்சாவது முடிக்கறேன் அடுத்த வருசம் ஆறாவது கோ-எஜுகேஷன் சேருலாம்ன்னு நினைச்சா எதோ ரெக்கமண்டேஷன் வாங்கி நேஷனல் ஸ்கூல சேர்த்துவிட்டாங்க சரி அதுல இங்கீலிசு சப்ஜெக்ட் எடுக்கலாம்ன்னு பிரியப்பட்டா (ஹிஹிஹி அதுலதான் கோ-எஜுகேஷன்) உனக்கு தமிழ் மீடியமே ஆண்டவன் கருணைன்னு சொல்லி அனுப்புவாங்க! சரி பத்தாவது முடிச்சுட்டு எப்படியும் குருஞானசம்பந்தர் ஸ்கூல்ல சேர்ந்து நம்ம ஜமால் அண்ணாசி கணக்கா பெரிய ஆளாகிடலாம் (ஃபிகர் மத்தியில பிரபலமும் ஆகிடலாம்ன்னு) ஆனா பாருங்க விதி விளையாடி தடிப்பசங்க படிக்கிற பாலிடெக்னில போய் வுழுந்துட்டேன்!

இதே வாஸ்து பி. படிக்கிறப்பவும் வொர்க் அவுட் ஆகலைன்னா எப்படி?

பி. முடிசசதும் எக்சிக்யூட்டிவ் இன்ஜினியராகி PWD கொள்ளையடிக்கலாம்ன்னு கனவுல இல்ல இருந்தோம் இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட முதல்வரம்மா டென்ஷனாகி எல்லா வேலைக்கும் ஒரே ஆப்பு அடிச்சு வைக்க கொள்ளையடிக்கிற கனவு காணாமலே போச்சு!

பிரைவேட் கம்பெனிக்கு போகலாம்ன்னா ஆறுமாசத்துக்கு ஒசியில வந்துட்டு போங்கன்னுட்டாங்க அதனால நானும் பாரதியும் முதலாளி வேசம் கட்டிடலாம் சிட்டிங்க் இன் ஒன் பிளேசு தான் முக்கியம் எங்க உக்காந்தா என்னன்னு ஏவிசி காலேஜ் வாசல்ல கடையை போடற முடிவுக்கு வந்துட்ட்டோம்!

யேயெப்ப்பாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எம்மாம் பெரிய பதிவா போய்க்கிட்டேல்ல்ல இருக்கு! போதும் நீங்க ஆபிஸ்ல ரெஸ்ட் எடுங்க மிச்சத்தை அப்புறம் வந்து சொல்றேன்!

டிஸ்கி:-

1.இது சித்திரகூடத்து தயாரிப்பின் ரீமேக்


2.இதில்
வரும் பாரதி, ஜமால் என்ற பெயர்கள் என்ற பெயர்கள் சிங்கை வலைப்பதிவர்களை குறிப்பிடுவது அல்ல என்று தவறாக நினைத்துக்கொள்ளவேண்டாம்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - என் வானம் அமுதா


தன் கவிதைகள்
தன்னுடைய கவிதைகளின் கவிதைகள் என
கவிதை மேகங்கள் சூழ்ந்திருக்கும்
என் வானம் அமுதா” அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

இயற்கையின் தொடர்பில் என் வானத்தில் இருந்து ஒரு அழகிய கவிதை...!

மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!
கா கா என்றே கரைந்திடும் காகம் !!
பக் பக் என்றே அழைத்திடும் மாடப்புறா!!
கண்ணே மணியே காண்பாய் இவற்றை
கவளச் சோற்றினை வாயில் வாங்குவாய்!!!

பரபரவென்ற நகர வாழ்வில்..

கீச் கீச் என்றே அரிசி கொத்தும்
சிட்டுக்குருவி காண்பதில்லை
கீ கீ என்றே பழங்கள் தின்ன
பறக்கும் கிளிக்கூட்டம் தெரிவதில்லை

மருண்ட பார்வையுடன் கழுத்தை சாய்த்து
அழகாய் மைனா பார்ப்பதில்லை
குப்பை கிளறி குஞ்சுகளுடன்
கோழியும் சேவலும் உலவுவதில்லை

கோடை வெயிலுக்கு இதமாகக்
கூவும் கருங்குயிலும் கேட்பதில்லை
உயரே வானில் வட்டமிடும்
பருந்தும் இப்பொழுது பறப்பதில்லை

தோகையுள்ள காகம் போல் இருக்கும்
செம்போத்தைக் கண்டால் கூறும்
"சிவ சிவ" இப்பொழுது கூறுவதில்லை

கழுத்தில் வெண்மை தெரிய
வட்டமிடும் கருடனைக் கண்டு
"கிருஷ்ண கிருஷ்ண" என்றும் சொல்வதில்லை

பொதி சுமந்தும் உதைத்தும் கத்தும்
கழுதைகள் கண்ணில் படுவதில்லை
ஐந்தாறு குட்டிகளுடன் சாக்கடையில் புரளும்
கரும்பன்றிக் கூட்டம் தென்படுவதில்லை

நீர் விடுத்து பாலருந்தும் அன்னம்
கதைகளில் மட்டும் நான் கேட்டது போல்
நான் உணவுண்ண அம்மா காட்டிய
உயிரினங்களைப் பற்றி உனக்கு உரைக்கிறேன்!!!

உன் காலம் வரும் பொழுதேனும்
பூமியின் பசுமை காத்து...
மீண்டு வரட்டும் உயிரினங்கள்!!
அதுவரை காகமும் புறாவும் கண்டு
உணவு கொள்வாய் கண்மணியே!!!

டிஸ்கி:- இந்த வீக் எண்ட் பர்த்டே டீரிட்ல ஆச்சி தானே செஞ்சா சாக்லேட் என் சார்பா அமுதா அக்காவுக்கு கொடுப்பாங்களே....!

B.E - குரூப் ஸ்டடி & ரிசல்ட்


பாலிடெக்னிக் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோதெல்லாம் அப்படி ஒரு ஈர்ப்பு இந்த ரிசல்ட் டே அன்னிக்கு கொஞ்சூண்டு கூட இருந்ததில்ல! கிடைக்காத சப்ஜெக்ட் புடிக்காத பாடங்கள் அப்படின்னு ஒரு மாதிரி வாழ்க்கை வெறுத்து போன சிறுவனாக திரிந்துகொண்டிருந்த காலகட்டம்! மாப்ளே நாளைக்கு ரிசல்ட் வருதுடா அப்படின்னு நண்பன் எவனாச்சும் பீதியோட சொன்னா ஏண்டா இன்னிக்கே கொடுத்து தொலைக்கலாம்ல அப்படின்னு ஒரு கரிசனமான கேள்வி அவனை கண்டிப்பாக டென்ஷனாக்கி திட்ட வைக்கும்!

அப்பொழுது வரும் சமாதான வரிகளில் நாம எழுதுனதை வைச்சே நாம தெரிஞ்சுகலாம்டா பாஸா ஃபெயிலான்னு அப்படின்னு...! ராசா நீ சொல்றதெல்லாம் ஸ்கூலோட நிப்பாட்டிக்கோ இது காலேஜ் லெவல் எவனாச்சும் லெக்சரர்கிட்ட வம்பு வளர்த்திருந்த அப்புறம் வாழ்க்கையையே இந்த காலேஜ்ல ஓட்டவேண்டியதுதாண்டி அப்படின்னு பதில் கொடுத்து போய்க்கிட்டே இருப்பானுங்க!

பேச்சிலர் ஆப் இன் ஜினியரிங்க்கு அதுவும் பெருங்கும்பலோட வந்தப்போதுதான் லைட்டா ஒரு பயம் வந்துச்சு ஆஹா மேட்டர் பெயிலாச்சுன்னா கும்பல்ல செப்ரேட் காமிக்கமுடியாதே அப்படி இப்படின்னு ஏகப்பட்ட மனக்குழப்பங்கள் வந்து செல்லும்!

இதுல மாசம் மாசம் அசைன்மெண்ட் டெஸ்ட் இன்னபிற அட்டெண்டன்ஸ் சங்கதிகளுக்கு கட்டுப்பட்டு காலேஜ்ல கூத்துக்கட்டணும்னா நொம்ப்பவே கஷ்டம்! இதெல்லாம் இல்லாம எக்ஸாமுக்கு முந்தாகாட்டி ஒரு பத்து நாள் விடுற (எக்ஸாம்க்கு இதுலயாச்சும் படிச்சு பொழைச்சுங்கோங்கடாங்க்ற ரேஞ்சுல) லீவுல பயமக்க குரூப் ஸ்டடி வைக்கும்! அதுல ஜாயிண்ட் அடிக்கிறதா இல்ல தனியா டெண்ட் அடிச்சு படிக்கிற்தான்னு ஒரு பெரும் குழப்பம் ஓடும்! குரூப் ஸ்டடின்னா எல்லாரும் ஒரே சப்ஜெக்ட் வைச்சு படிக்கிறதுன்னு நினைச்சிக்கிட்டிருந்தா இந்த குரூப் ஸ்டடி கண்டிப்பா ஒரு பெரிய அளவில கலவரத்தை உண்டாக்கும் ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு சப்ஜெக்ட் அதுல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு பீலிங்கா கேள்விகள் பிறக்கும்! அதை கேட்டாலே பாதி பெயிலாகிட்ட உணர்வு வந்து மனசுல ஜம்முன்னு குந்திக்கிடும்!

மீதி இருக்கிற மனசும் மொத்தமா பெயிலாகிவிடாம இருக்க வேண்டி குரூப் ஸ்டடிக்கு டாட்டா சொல்லிட்டு தனிக்குடித்தனம் வந்து ஒரு வழியா ஒப்பேத்தி எக்ஸாம் அன்னிக்கு கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை செண்டிமெண்ட்ஸ்களையும் கடைப்பிடித்து பேப்பர் நிரப்பி முன்பே முடித்துவிட்டு கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டி சாய்ஸ் கொஸ்டீன் என்ற பெயரில் எக்ஸ்ட்ரா பில்ட்-அப் கொடுத்து,வழக்காமாய் கன்னாபின்னாவென்று முடிச்சுட்டு பிணைத்த பேப்பரினை கொடுத்து வெளியே வருகையில் வயிற்றில் அமிலம் கரைக்க காத்திருக்கும் கூட்டத்திடமிருந்து எஸ்ஸாகி எல்லா பரீட்சைகளையும் முடித்து எக்ஸ்ட்ரா லீவு என் ஜாய் செய்து விட்டு வந்து காத்திருக்கும் நாளில் ரிசல்ட் அட்மின் பில்டிங்கில் போட்டிருக்கும் ரிசல்டினை இன்று வரை நேரில் சென்று பார்த்தது கிடையாது முன்பே வந்து கையிலே பஸ் டிக்கெட் பின்புறத்திலோ அல்லது ஏதேனும் ஒரு குப்பையில் கிடக்கும்பேப்பரில் கிறுக்கி எடுத்து வந்திருக்கும் எண்களில் 51ன்னை காண அலைமோதும் கண்களுக்கு அழகாய் தரிசனம் தந்தது ஏனோ
கடவுளின் கிருபை என்றே இப்பொழுதும் நினைக்க தோன்றுகிறது !

டிஸ்கி:- அவ்வப்போது ப்ளாக் பக்கம் வந்து என்னமோ செஞ்சுக்கிட்டிருக்கான் 1ம்புரியல என்று வெறுத்து செல்லும் என் இனிய கல்லூரி நண்பர்களுக்காக இந்த பதிவு !

And, Now...


பெட்ரோலில்லாத தள்ளிக்கொண்டே ஓட்டும் எம் 80 ஒன்று, என்னிடம் இருந்தது. காலேஜ் விட்டு வந்ததும் அதை எடுத்து தள்ளிக்கொண்டே, தெருக்களில் சென்று ஃபிகர் பார்த்துகொண்டிருப்பேன்!

வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த எம்80யும் ஒருநாளில்...

அத்துடன் என் ஃபிகரும்....!


டிஸ்கி:- ஆச்சியின் பதிவு இங்கன இருக்கு!

ஞாயிறு கொண்டாட்டம் - லொள்ளு சபா

சனி ஞாயிறுகளில் முழுவது ஊர் சுற்றி திரிந்து ஞாயிறு மாலையில் வீடு தேடி கண்டுபிடித்து வந்து கண்ணயரும் போதுதான் கிளாஸ் வாத்தியார் ஃபிளாஷ் மாதிரி சடக்குன்னு வந்து சடக்குன்னு போவார்!

ஆஹா அடுத்த நாள் திங்ககிழமை காலையிலயே ஆரம்பிச்சுடுமே, ஆங்கில பாடம் - கதை சொல்லணுமேன்னு ஒரு அசரிரீ வந்து ஒலித்துச்செல்லும் - அதுக்குப்பிறகும் தூக்கம் வந்து தூங்கமுடியும்ன்னு நீங்க நினைக்கிறீங்களா....?

தூங்கவும் முடியாம படிக்கவும் தெரியாம மனசு அப்படியே கிடந்து அலைமோதிக்கிட்டு நிக்கும்! ஒரு வழியா சரி எப்படி இருந்தாலும் வகுப்புல பெஞ்சு மேல எந்திரிச்சு நிக்கவேண்டிய நிலைமைதான் வரும்ன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டு சாஞ்சுடவேண்டியதுதான்!

எதிர்ப்பார்த்து பயந்த மாதிரியே வாத்தியார் கிளாஸ்க்குள்ள நுழைஞ்சு அட்டெண்டென்ஸ் எல்லாம் எடுத்துட்டு ஆரம்பிப்பாரு! ( மறந்திருப்பாரோன்னு ஒரு மெல்லிய சந்தோஷம் கிளம்பி அடங்கும் இந்த டைமிங்க்ல !)

வழக்கமா நல்ல படிக்கிற பயலுவோ முன்னாடி பெஞ்சுல குந்திக்கிட்டு டாண்டாண்ன்னு சொல்லிட்டு கமுக்கமா உக்காந்திடுவாங்க

ரெண்டு வரிசை தள்ளி இருக்குற பெஞ்சுலேர்ந்துதான் ஆரம்பிக்கும் வாத்தியாருக்கு ஹாப்பி மூட் எங்களுக்கு டார்ச்சர் & டெரரர் மூட் !

அது எப்படி இருக்கும்ங்கறதை ரொம்ப கிளியரா இந்த வீடியோவுல சொல்லியிருக்காங்க பாருங்க!



ரைக்டர் கேரக்டர்ல வாத்தியாரை நினைச்சுக்கோங்க!

எனக்கே எனக்கா....?!

தட்டில் வந்து
உட்கார்ந்துகொண்ட சோறு
பாத்திரத்தில் புதிதாய்
சேர்ந்துகொண்ட சாம்பார்
கிண்ணத்தில் நிரம்பி நிற்கும்
பொறியல்
சைடு கட்டி வைக்கப்பட்ட
ஊறுகாய் என எனக்கு
தின்ன கிடைக்கும்
இவைத்தவிர,
ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!

- ஆச்சி

முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

டிஸ்கி:- ஸ்ரீமதி தங்கச்சியம்மா எழுதிய அழகான கவிதை இங்க இருக்கு!

மன்னிப்பு!

மன்னிப்பு - தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை!

பட வசனத்திற்கு வேண்டுமானல் கொஞ்சம் டெரராக இருக்கலாம்! ஆனால் நிஜவாழ்க்கைக்கு நிச்சயம் இதை போன்றதொரு அருமையான மனத்திண்மை அல்லது மனிததன்மை இருந்தால் நீங்களும் உயர்ந்த மனிதர்கள்தான்!

சிலர் ரொம்ப பெருமையாக கூறிக்கொள்வார்கள் நான் என் சொந்தக்காரனோட பேசி பல வருசங்களாகுதுன்னு! - அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?!- சிலருக்கு ஏனோ அது போன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம். நாம் நினைக்கின்ற அல்லது நாம் அடைய முயல்கின்ற எதோ ஒன்றினை மற்றவர்கள் தடுத்துக்கொண்டாலோ, அல்லது வேற வகையில் அதை பெற முடியாதபடி செய்தாலோ நமது கோபங்கள் அவர்களை சென்று அடைகின்றன மிதமிஞ்சிய கோபத்தின் வெளிப்பாடே இப்படியான நிராகரித்தல் நிகழ்வுகள்.

சில இடங்களில் நீங்களே நேரில் கண்டிருக்க கூடும் அண்ணன் தம்பிகள் அருகருகே வீடுகள் இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமல்,தம் குடும்பத்தினரையும் கூட பழக விடாமல் ஒரு வீணாய்ப்போன வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்!

தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,
கேவலப்படுத்திட்டாங்க என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் நிராகரித்தலின் வெளிப்பாடாய்,பார்க்கின்ற ஒவ்வொருவரிடமும் புலம்பி தீர்க்கவேண்டிய வரிகளாய் வந்து விழும்! இந்த வார்த்தைகளை பயன்படுத்திறவங்களை வைச்சுக்கிட்டே நாம ஓரளவுக்கு அம்மனிதர்களை பற்றி நிறை தெரிந்துக்கொள்ளலாம் - அனுதாபம் தேடி அலைபவர்கள் என்று!

மன்னிப்பு - இந்த பிராசஸ்க்கு நீங்க பயன்படுத்த வேண்டிய விசயம்ன்னு எதுவும் பிரத்யோகமா இல்லைங்க வழக்கமான அஸ்திரம்தான் ஜஸ்ட் ஒரு புன்சிரிப்பு அல்லது நெகிழ்வான அல்லது நார்மலான மனநிலையோடு சம்பந்தப்பட்ட மனிதரை அணுகினாலே போதும்!( டேய் உன்னைய மன்னிச்சுட்டேண்டா போடா போடா..! அப்படின்னு அப்ரோச்சுன்னீங்கன்னா அடிதடி கொலை வெட்டுல்ல கொண்டாந்துவுட்டுடப்போகுது சாமியோவ்வ்!)



அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)

(இங்கால வந்து காதல் போன்ற இன்ன பிற விசயங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தமுடியுமான்னு எந்த கொஸ்டீன்ஸும் எழுப்பக்கூடாது!)

நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே கோபம் கொண்ட பலரும் பாதி விசயங்களை மறந்துடுவாங்க! அட இதுக்கு பிறகு எழுதற மேட்டரை நான் மறந்துட்டேன் இதுவ்ரைக்கும் எழுதன விசயத்தை நீங்க மறக்காதீங்கப்பா!

சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!