உலகின் மூலை முடுக்குகளில்,
வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;
ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;
உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,
எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !
எல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்!

# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நன்றி, பகிர்தல், மயிலாடுதுறை, ஜாலி
# ஆயில்யன் 47 பேர் கமெண்டிட்டாங்க
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நன்றி
நன்றி சொல்லும் நேரம்!
நானாக நானிருந்த காலம் போய்,
வீணாகி போகாத காலமாக இந்த நாட்கள்;
வரலாற்று பெயராக மாற்ற வேண்டுமென்ற ஆவல்
ஆனால் வர வேண்டுமே! அதற்கேற்ற பொருள் - என் பதிவில்
நகர்ந்து விட்டது நாட்கள்!
தகர்ந்து விட்டது தமிழ்மணம் நட்சத்திர ஆசை!
நகரும் நாட்களுக்கு நன்றி சொல்ல நினைக்காத மனம்தான்
எல்லோருக்கும் உண்டு.!
நகராமல் இப்படியே இருந்துவிடட்டுமே, என்று!
நகராமலே இருந்தால், அதற்கு பெயர் நரகமாகிவிடக்கூடுமே...!
நகர்வு இருக்க வேண்டும்
நன்மை செய்யும் நகர்வாகவே..!
என் நகர்வு வரும் நட்சத்திரப்பயணிக்கு,
நலமாக அமையவேண்டும்!
நாளும் நல்லது சொல்வோம்
நாளும் நல்லது செய்வோம்
நாளும் நலமுடன் வாழ்வோம்!
நாளும் நல்லவராக வாழ்வோம்!
நலம் பல செய்வோம்! – எல்லோருக்கும்!
# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யன், என் உள்ளத்தில், நன்றி
மணிக்கூண்டு பார்க்கத பொண்ணும்;
வைத்தா கடை டீ குடிக்காத ஆணும்;
மயிலாடுதுறையில இருந்ததா சரித்திரமே இல்லைங்க!
அப்படியொரு பிரபலமான கடை!
இத்தனைக்கும் பத்து பேர் ஒண்ணா சேர்ந்து போனா அப்புறம் வர்றவங்க லைன் கட்டி ரோட்லதான் நிக்கணும்!
அந்த மாதிரியான இடம்தான் இருந்தாலும், டெயிலி வந்து போற கூட்டம் எண்ண முடியாது!
எனக்கு வைத்தா கடை அறிமுகமானது 1985களில் வெளியூருக்கு (வைத்தீஸ்வரன்கோவிலுக்குத்தாங்க!) போய் வரும்போதெல்லாம் சைக்கிள் ஸ்டாண்ட கணக்கு பண்ணி எங்க அப்ஸ் சுருக்கா இங்கயே காபி அல்லது டீ வாங்கி கொடுத்து அழைச்சிட்டு வருவாரு!
கொஞ்சம் வருசம் கழிச்சு நாமளே தனியா போக ஆரம்பிச்சாச்சு!
காலேஜ் பரீட்சைக்கு படிக்கறதுக்குன்னு லீவு போட்டு வெளிய எங்கயும் போகாம, வுட்ல உக்காந்து படிச்சு சாயங்காலம் 6.00 மணிக்கு வைத்தாவுக்கு போய் சூடா ஸ்ட்ராங் டீ சாப்பிட்டு வந்தா அப்புறம் போகும் டைம் 12.00 வரைக்கும்!
இந்த டெக்னிக் என் பிரதர்கிட்டயிருந்து நான் சுட்டது! அவன் படிக்கற டைம்ல திடீருன்னு பத்துமணிக்கு கதவு திறக்கிற சத்தம் கேக்கும் என்னாடா பண்றான்னு ஒருநாள் கேக்கறச்சா "சைக்கிள எடுத்துக்கிட்டு தடதடன்னு மிதிச்சிக்கிட்டு போன பாதிதூக்கம் போயிடும் அப்புறம் ஒரு டீ குடிச்சிட்டு திரும்பவந்தா விடிய விடிய படிக்கலாம்ன்னு, சென்னான்!
படிக்கற காலத்துல இப்படின்னா! கொஞ்ச காலம் ஊர்ல வேலை பார்க்கும்போது வைத்தா டீக்கடைக்கும் எனக்கும் இன்னும் கொஞ்சம் நெருக்கம் அதிகமாயி,காலையில ஒரு விசிட், பதினொரு மணிக்கு ஒரு விசிட் மதியத்தில எப்போதாவது சாய்ங்காலம் ஒரு விசிட்ன்னு ஆகிப்போச்சு! அதுவும் சும்மா தனியாயெல்லாம் போயி நின்னு குடிக்கறது கிடையாது! பிரெண்ட்ஸ் ஒவ்வொரு மூலையில இருப்பாங்க ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும் இரண்டரை ரூபா டீக்கு cost benefit ratio போட்டு பார்க்காமலேயே,பெட்ரோல் செலவுப்பண்ணிக்கிட்டு வருவாங்க!
டீக்கடையுடனான அனுபங்கள் தொடரும்....!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யன், நன்றி, நினைவுகளில்.., மயிலாடுதுறை
இது நாள் வரையில் நான் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டேன், நானா இப்படி செய்வது.? என்று எனக்கே என்னை பற்றி ரொம்ப பெருமையாகிடுச்சுங்க!
வந்த புதிதில், பல இடங்களில் நான் பலரால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறேன் என்பதனை என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் ஆனால் என்ன செயவது நான் வந்த வழி என்று என் விதியினைத்தான் நான் நொந்துகொள்வேன்.ஆனால் வெகு விரைவிலேயே நாம் இப்படி ஆவேன்! என்று நினைக்கவேயில்லை.
(என்னாடா இவன் இப்படி கிறுக்குறானே டென்ஷனாகதிங்க)
முதல் நன்றி! அறுசுவைக்கு!
அடுத்த நன்றி! முகமறியா, சமையல் செய்முறைகளினை, அளிக்கும் பெண்கள்.
ஒரு விதத்தில் எனக்கு இவர்கள் என் அம்மாவினை போன்றே தெரிகிறார்கள்! ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது.! (எனி அப்ஜெக்ஸன்?!)
அயல்நாடுகளில், பணிக்கு செல்லும் என்னை போன்றவர்கள் முதலில் பாதிக்கப்படுவது உணவு பிரச்சனையில்தான்! அதுவும் சைவ உணவு வகைகளினை மட்டும் எடுத்து உண்ட எனக்கு இது மிகப்பெரும் பிரச்சனையானது.
வெஜ் சாப்பாடு இருக்கான்னு கேட்டா,எரிக்கற மாதிரி பார்த்துட்டு,பூரிக்கு செஞ்சு மீந்த கிழங்கையும், கடலையயும் போட்டு ஒரு அப்பளத்த வைச்சு கொடுப்பாங்க! அதுவும், வெள்ளிகிழமையில எல்லா கடையிலயும் அசைவம்தான்!
இதனால பல வெள்ளி கிழமைகள் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன்..!
இங்கு கத்தாரில், பெரும்பாலன கடைகளில் நம்ம கேரளாக்காரங்க இருந்தாலும், சைவ உணவு வகைகள் என்பது இங்கு எளிதான விஷயமன்று! அதுவுமில்லாமல்,அசைவ உணவுகளை விட விலையும், அதிகம் அதனால் இங்கு பெரும்பாலனோர் வெகு சீக்கிரத்திலேயே அசைவத்திற்கு மாறிவிடுகின்றனர்!
கடைசியாக எடுத்தமுடிவுதான், எனக்கு நானே சமைக்கும் திட்டம்!
ஸ்டார்டிங் எப்போதும் எனக்கு நல்லா வரும், ஆனா ஃபினிஷிங்தான் சொதப்பும், ஆனாலும் மனச தளரவிடாம அந்த ஐட்டங்கள சுட, சுட, சாப்பிட்டு முடிச்சாத்தான் ஒரு திருப்தி.( ஆறி போன எவன் தின்பான்!)
இப்படி நான் இஷ்ட்டப்பட்டு சமைச்சு,கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டு வாழ பழகிகிட்டேன்!
ஒருநாள் கூகுளில் தமிழில் விளையாடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதுதான் இந்த அறுசுவை.
இப்போது எனக்கு இதுதான் சமையல் கலை கற்றுக்கொள்ளும் இடம்!
அடுப்பு பத்த வைக்குறதுக்கு முன்னாடி வெப்சைட் ஒபன் பண்ணிவைச்சுக்கிட்டாதான் எல்லாம் சரியா வரும்ங்கறது நான் கத்துக்கிட்ட முதல் பாடம்!
இந்த சைட்ட நான் பார்க்காத நாட்கள்னா, விரத நாட்கள்தான் என்பது இன்றைய நிலைமை..!
திக்கெட்டும் அறுசுவை மணம் பரப்பும் இவ்விணையம் புறப்படும் இடம் எங்கள் மாவட்ட தலைநகர் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!
# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க
நாள் 24.09.06
நேரத்திற்கு வரவில்லையென்றாலும் சீக்கிரத்திலேயே கொண்டு வந்து விட்டுச்சென்ற அந்த கால் டாக்ஸி டிரைவருக்கும்;
நான் கண் கலங்காமல் இருக்க, தங்களுக்குள்ளேயே கிண்டலடித்து சிரித்துக்கொண்டிருந்த என் உயிர் நண்பர்களுக்கும்
கண் கலங்கினாலும் தன்னைத்தானே தேற்றிக்கொண்ட என் தாய்க்கும்;
அந்த நாள் வரையில் கலங்கிய நிலையில் பார்த்திராத, எனக்காக
கண் கலங்கி நின்ற என் சகோதரனுக்கும்;
கண் கலங்க நின்றிருந்தவனின், சோகத்தை பார்வையால் பரிமாறிக்கொண்ட, வரிசையில் நின்றிருந்த, வேறொரு நாட்டுக்கு சென்ற அந்த சகோதரிக்கும்;
ஒரு ரூபாய் தந்து தொலைபேசியில் தொலைவில் நின்றிருந்த என் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள செய்த அந்த் சகோதரனுக்கும்;
முன்பின் முகம் பாராமல் தம் நாட்டிலிருந்து வ்ருகிறான் எனற காரணத்திற்காக எனக்காக வந்து காத்திருந்த எனது உயர் அதிகாரிக்கும்;
அந்த இரவிலும் என்னுடன் இருந்து எனது தங்குமிடத்தை த்யார் செய்து தந்த வங்கத்து நண்பனுக்கும்;
ரம்லான் மாதத்தில் தனக்கா இருந்த உணவினை, முதல் வேளை உணவாக எனக்கு கொடுத்த தமிழகத்து நண்பனுக்கும்;
தமிழ் நாட்டிலிருந்து வரப்போகிறான் ஒருவன் என்று கேள்விப்பட்ட நாள் முதலே என்னைக்காண ஆவலுடன் இருந்த,
வந்த நாளிலிருந்தே, எனக்கு உணவும் கொடுத்து,என் பிரித்துயரத்தை நீக்கி,என்னுடனே உண்டு உறவாடி வரும் தமிழ் ஈழத்து சகோதரர்களுக்கும்:
என் மனம் நிறைந்த,
நன்றி!
நன்றி!!
நன்றி!!!
நாள் ; 24.09.07
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: நன்றி