Showing posts with label ஜாலி. Show all posts
Showing posts with label ஜாலி. Show all posts

மயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு!

இன்று 23/04/2010 மாலை 6.30 மணிக்கு அகல ரயில்பாதையில் ரயில் வண்டியின் பயணம் தொடங்கியது! கிட்டதட்ட 3 வருடங்களை கடந்த மீட்டர்கேஜ் - பிராட்கேஜ் இருப்புப்பாதை அகலமாக்குதல் திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றம் பெற்றிருக்கிறது!

மயிலாடுதுறை மக்களுக்கும் சுற்றியுள்ள ஊர்களை சார்ந்திருப்போருக்கும் மேலும் கும்பகோணம் தஞ்சாவூர் மக்களுக்கும் தற்போதைய சூழலில் [ அணைக்கரை பாலம் வலுவிழந்த நிலையில் பேருந்துகள் கிட்டதட்ட 50 கி.மீ சுற்றி சென்றுகொண்டிருக்கிறது] நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது இன்று!

திட்டம் சிறப்பாக[!?] நிறைவேற்றம் பெற பங்கு பெற்ற மத்திய & மாநில அரசு ஊழியர்களுக்கும்,பணிகளை சிறப்பாக செய்து முடித்த தனியார் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மயிலாடுதுறை மக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !


எது இன்பம்...?

நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.

புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!

நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?

சிறிது காலம் அழுகின்றோம்;
சிறிது காலம் சிரிக்கின்றோம்;
கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!

உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?

இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.

- சுவாமி விவேகானந்தர்.

இப்”போதைக்கு” இதுவும் ஒரு இன்பம்!




எண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும் - வண்டுமுருகன்

MADE IN இந்தியா :-)

1996களில் ஆடியோ கடைகளிலும் சரி வீடியோ வாடகைக்கு விடும் கடைகளிலும் இந்த பாடல் கேசட் இல்லாமலோ அல்லது ஒளி/ஒலிக்காமல் இருந்திருக்காது!

அந்தளவுக்கு ரொம்ப பயங்கரமான ஹிட் கொடுத்த பாட்டு!

அலிஷா அலிஷான்னு பித்து பிடிச்சு, கதறிக்கிட்டு கிடந்தது ஒரு கூட்டம்!

ஆடியோ கடைகளில் அசெம்பிள் செட்டின் மகிமையால் பாட்டு சும்மா ஜில்ஜில் சவுண்டோட அசத்திய காலங்கள் !

இந்தியாவைப்பத்தி பெருமையான பாட்டுன்னு நிறைய பேர் சொல்லுவாங்க,எதாவது ஒரு கடை பங்ஷன்னாலோ அல்லது ஆயுத பூஜைக்கோ சும்மா சவுண்டு கிழிக்கும் பாட்டு கேட்டு பாருங்களேன்....!


தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி)


இருக்கற கோஷ்டிகளை எண்றதுக்குன்னு ஒரு கோஷ்டி போட்டா அவங்களும் சத்தியமூர்த்தி பவன்ல் உக்காந்துக்கிட்டு தனி தர்பார் நடத்துவாங்க! அப்படியாகிப்போச்சு, நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் நிலைமை (சும்மா டீ கொண்டு வந்து கொடுக்கற டீக்கடை ஆளுங்களுக்கே அந்த கோஷ்டி பாதிப்பு உண்டாம்ல..! )

இப்படி பட்ட இக்கட்டான நிலைமையிலதான் அன்னை சோனியா கூறவுள்ள உத்தரவை ஏற்று மக்கள் பணி ஆற்ற வருகிறார் நக்மா!

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு முன்பும், டெல்லியில் முக்கியமான எம்.பிக்களுக்கு விருந்து அளிக்கும் வழக்கம் கொண்ட நம்ம நெல்லை எம்.பி தனுஷ்கோடி ஆதித்தனின் இந்த வருட பார்ட்டியில்,பிரதமர் மற்றும் அன்னை சோனியா பங்கேற்க, அந்த பார்ட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தாரம் நக்மா!

அன்னை சோனியாவின் ஆலேசனையின்படி, மிக விரைவில் அறிக்கை ரீலிஸோட அசத்தல் அறிமுகம் அரசியலில்...!

நேஷனல் லெவலா இல்லை தமிழ்நாட்டு லெவல்லையான்னு இன்னும் சரியா தெரியலைங்க!

எது எப்படியே…! நல்ல கில்(ஜில்)பான்ஸியா இருக்கும்ல :)))

மாதுரி ரிட்டர்ன்ஸ் - வீக் எண்ட் கலக்கல்ஸ்




பிறந்தநாள் வாழ்த்துக்கள் – தொல்ஸ் aka அபி அப்பா!

எப்படி வாழ்த்தறதுன்னு! தெரியாமா உக்காந்திருக்கும்போது ஒரு பாட்டு அதுலேர்ந்து சுட்ட சில வரிகளோட...

அபி அப்பாவை வாழ்த்தி,

அண்ணணோட ஹார்ட்ட ஊர்க்கார பயபுள்ள எப்படி டச் பண்றான் பாருங்கப்பு...!!!


உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மியடிக்குது;

அடடாஆஆ எனக்காக அருமை குறைஞ்சிஹ

தரும மகராசா.....!!!!

மந்தையில நின்னாலும் நீங்க வீரபாண்டி தேரு.... ......!!

(பாட்டு நல்ல சிச்சுவேஷன் சாங்தான் போல....!!! இதே பீலிங்கோட முழு பாட்டும் கேட்டுப்பாருங்க! சூப்பரா இருக்கும்!)

கடவுளின் தேசத்தில் - கடற்கரை கோட்டையில்..!

Photo Sharing and Video Hosting at Photobucket

முழு பாடலையும் அர்விந்த சாமி உருகி,ஹரிஹரன் பாடிய அந்த பாடல் எடுக்கப்பட்ட இடம்!

பம்பாய் படத்தில் ஒரு பாடலில் இந்த கோட்டை வந்த பிறகே சுற்றுலாதளமாக பிரபலாமாக தொடங்கியது!

அது ஒரு மழைக்கால நேரமாக இருக்கக்கூடும்! எங்கும் பார்த்தீர்களென்றால் ஒரே பச்சைப்பசேல்தான்! நாங்கள் சென்றிருந்த நேரம் பச்சை புல்வெளிகளை காண் இயலாமல் ஏமாந்தாலும்,அவ்ளோ பெரிய கோட்டை மற்றும் கோட்டை சுவர்கள்,சுரங்கபாதை என கண்டு மனம் மகிழ்ந்தோம்..!

பாட்டுக்கேற்ற லொக்கேஷந்தான் நீங்கள் கூட வாய்ப்பு கிடைத்து போனீங்கன்னா உங்களுக்கும் கூட வரலாம் ஸேம் ஃபீலிங்க்ஸ்!


அந்த கோட்டையை சுற்றி எடுத்திருப்பார்கள் அந்த பாடலில், சுரங்கத்தில் நுழைந்து, நீண்ட தூரம் ஒடி வந்து சிறு மதில் துவாரம் வழியே கீழே நிற்கும், அர்விந்த் சாமியை விழுங்கும் கேமிரா!

இருவரும் கடைசியாக சந்திக்கும் இடம் தான் ஸ்பெஷல் லெக்கோஷன்! கடல் அலைகள் நம்மை உரசிச்செல்லும் அந்த சிறிய அழகிய கோட்டை மதில்கள்!

மதில் சுவர்களை ஆவேசமாக வந்து முத்தமிட்டு செல்லும் அலைகளின் பின்ணணியில், யாராவது ஜோடி கண்டிப்பாக போட்டோ எடுத்துக்கொண்டிருப்பார்கள்! – டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்ன?!

டைரக்டர் மணிரத்னமும் சரி, கேமராமேன் ராஜீவ்மேனனும் சரி, ரொம்ப ஃபீல் பண்ணி எடுத்த இடம்தான் அது இப்பவும் நீங்க அங்க போனீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு பீலிங்ஸாத்தான் இருக்கும்!

வரலாற்று சுவடுகளின் படி விஜயநகர அரசால் அமைக்கப்ப்ட்ட சந்திரகிரி,பெக்கல் கோட்டைகள் எதிரிகளிடமிருந்து மலபாரினை காக்கும் பொருட்டு, செயல்பட்டு வந்துள்ளது! கடைசியாக திப்புசுல்தானின் ஆளுகையில் இருந்துள்ளது!




பவுர்ணமி நாட்களில், நிலா வெளிச்சத்தில் அலையை ரசிக்க, அழகை ரசிக்க கூட்டம் கூடிக்கொண்டுதான் இருக்கிறது! கடவுளின் தேசத்தில்! (கடவுளே என்னையும் அழைத்துக்கொள்ளேன் உன் தேசத்திற்கு...!!!)

பெக்கல் போர்ட்க்கு நீ சொன்ன மாதிரியே நான் போனேன்! ஆனா எனக்கு ஒண்ணும் அந்தளவுக்கு ஃபீலிங்ஸ் தெரியலையேன்னு சொல்ற ஆளா நீங்க?

அப்ப உங்களுக்கு தேவாரத்திருத்தலங்கள் பத்தி பதிவு போடப்போறேன் அதை வந்து படிங்க ஒ.கேவா!

ரஜினி பஞ்ச்'கள் - ஒரு மேனேஜ்மெண்ட் லுக்

Photo Sharing and Video Hosting at Photobucket

கண்ணா..! நான் யோசிக்காம, சொல்றதில்ல சொல்லிட்டு யோசிக்கறதில்ல!

திட்டமிடுதல் என்பது ஒவ்வொரு செயல் அல்லது நிகழ்வுக்கும் முக்கியமான ஒன்று,ஒரு முறை சரியாக திட்டமிட்டுவிட்டால் பின்பு அதை பற்றி மறு முறை சிந்திக்க தேவையின்றி, இலக்கை அடைவதில் திட்டமிட்டபடி கவனத்தை செலுத்தவேண்டும்!

இது எப்படி இருக்கு?

ஒரு செயலை செய்ய, அதற்கு முன்பு அதை சக அலுவலக நண்பர்களிடம், பணியாளார்களிடம், கூறி அதைப்பற்றி கருத்து கேட்பதன் மூலம் அதை சரியாக, செய்யமுடியும்!

நான் தட்டி கேட்பேன் ஆனா கொட்டி கொடுப்பேன்!

தலைமையிடத்திலிருந்து எவ்வளவோ கடுமையாக நடந்துக்கொண்டாலும்,இரு செயலை சிறப்பாக செய்து முடித்தால் கண்டிப்பாக அதற்கான பலனை நீங்கள் பெறுவீர்கள்!

சொல்றேன்..! செய்யிறேன்...!!

நிர்வாகத்தில் இந்த சொற்கள் மிகுந்த பலம் வாய்ந்தவை!
ஒரு செயலை சொல்வதிலும் அதை செயற்படுத்துவதிலும் நாம் செலுத்தும் அக்கறை நம்மை மேன்மையாக்கும்!

ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி!

ஒரு கருத்தினை உள்வாங்கிக்கொள்ளும் திறன் மற்றும் செயல்படுத்தும் திறனை நாம் மேம்படுத்திக்கொள்வதன் மூலம் தேவையற்ற கால விரயத்தை தவிர்க்கமுடியும், ஒரு முறை சொல்லும் வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்படுகிறதோ, அதற்கான புரிந்துகொள்ளும் திறனை பெறுவது நம்மை முதலிடத்திற்கு கொண்டு செல்லும்!

நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்!

ஒரு த்யாரிப்பு அல்லது செயல் குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்தபட முடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் செயலாக்கப்படும் காலத்தில் அந்த காலக்கட்டதிற்கேற்ப மாற்றங்களுடன் இருத்தல் அவசியம்

என் வழி தனி வழி!

ஒவ்வொரு பணியிலும், அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி பாணியில் சென்றால் வெற்றி + புகழ் அடையலாம்!

(ரஜினி ரசிகர்கள் இணையத்தில பார்த்தது, சரி நம்ம பீல்டு சம்பந்தமா, ஆங்கிலத்தில இருக்கே1 அப்படியே தமிழ்ப்படுத்தி நம்ம பிரெண்ட்ஸ்க்கு அனுப்பி கலக்குவோம்னு, பண்ணது! இவ்ளோ பிரெண்ட்ஸ்க்கும் மெயில்"ரதத்தில்"விடறதுக்கு இங்க போட்டா ஒ.கேதானே...!!!!)

குசும்பன் – Drive the City

துபாயில் கார் ஒட்டியே ஆகவேண்டும் என்ற வெறியுடன், இப்படி போய்கொண்டிருக்கும் குசும்பனின் வாழ்க்கை பயணம்,



இன்னும் சில மாதங்களில் லைசென்ஸ் கிடைத்ததும், (கிடைச்சுருமுனு நம்பறாரு!)
துபாய்க்கு அனத்த காலம் புடிச்சு எப்படி ஆகப்போகுது பாருங்க...!!




இதெல்லாம்

ச்ச்சும்மா...!

டிரையல்தான். கண்ணு...!!
மெயின் பிக்சருக்கு கொஞ்சம் வெயீட்டீஸ்...!