கீதம் பாடுவோம் - கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில்...





அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே,
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே!
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே!
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே!
போகும்போது வேறுபாதை போவதில்லையே!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை!
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை!
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை!
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

இவரின் பிறந்த நாளில் ஒரு பாடல் தொகுப்பைக் கொடுக்க இருந்தேன் ஆனால் மறந்துவிட்டேன், நீங்கள் அந்தக் கடமையைச் செய்துவிட்டீர்கள் ;-)

said...

"கண்தாசன் காரைக்குடி...."

said...

மறக்க முடியாத கவிஞர் அனுபவித்து எழுதிய ரசிகன்...