மயிலாடுதுறை பெரிய கோவில்


என்னதான் வேலையாயிருந்தாலும் சரி, வெள்ளிகிழமையாச்சுன்னா சாயங்காலம் 7.00 மணிக்கப்புறம் பெரியகோவில்தான்! இரவு அர்த்த சாமம் முடியறப்பத்தான் முன்னாடிதான் வீட்டுக்கு ரிடர்ன் ஆகறதே!

ஊரைச்சுற்றி பல கோவில்கள் உண்டு என்றாலும்,எனக்கு பிடித்த கோவில் எங்க ஊரு பெரிய கோவில்தான்!

மனசுக்கு சங்கடமா எதாவது நடந்துடுச்சா, நேரா கிளம்பி போய் சிவன் சன்னதியில் உட்கார்ந்தா உலகமே மறந்து உள்ளம் மகிழும்!

மத்த ஊர்கள்ல, சுவாமி பேரோட கோவில சொல்லி கூப்பிடுவாங்க! ஆனா எங்க ஊருல சாமிபேர சொல்லி கூப்பிட்டா பலருக்கு தெரியாது! பெரிய கோவில்ன்னு சொன்னிங்க, சன்னதி முன்னாடி கொண்டு போய் விடுவாங்க!

இரண்டு பெரிய திருக்குளங்கள் கோவில் உள்ள இருக்கற குளத்துக்கு பிரம்ம தீர்த்தம்ன்னு பேரு!

படிக்கற காலத்துல கொஞ்சம் டல்லாயிடுச்சின்னா தம்பி! போய் குளிச்சிட்டு வந்து படின்னு சில இடங்கள்ள சொல்லுவாங்க அப்பத்தான் கொஞ்சம் ஃபிரஷ் ஆகும்னு அதுபோலத்தான் பிரம்மா ரொம்ப டயர்டாகி இருக்கறப்ப்ப, பார்முலா மாற ஆரம்பிச்சதும் எல்லாரும் உஷாரகி, யப்பா பிரம்மா போயி, மாயவரத்துல, டேக் பாத்! தென் யூ வில் கம் டூ ஸ்டார்ட்ன்னு சொல்ல அப்புறம்தான் எல்லாம் ஒ.கேயாச்சாம்!

கோவில் உள்ள நுழைஞ்சு இடதுப்புறத்தில் பிரும்மாண்டபமான வினாயகர் பேரு முக்குறுணி வினாயகர்! சங்கடஹர சதுர்த்தி அன்னைக்குத்தான் இவருக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்! மத்த நேரத்தில நாமதான் போய் நலம் விசாரிச்சிக்கிட்டு நல்லபடியா வையுப்பான்னு கோரிக்கை விட்டுட்டு வரணும்!

அப்படியே இடதுபக்கம் மதில் சுவர பார்த்தீங்கன்னா பெரிய எழுத்துக்கள்ல பெரிய கோவில பத்தி வரலாறு இருக்கும்! அதுக்கு பக்கத்துலதான் மடப்பள்ளி! (என்னது எழுத்து சரியா தெரியலையா???? சரி சரி வாங்க நானே சொல்றேன்.!)

சுவாமி பேரு மயூரநாதர்;
அம்பாள் பேரு அபயாம்பிகை தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் அது மட்டுமல்லாமல், அபயாம்பிகை சதகம் என்னும் 100
பாடல்கள் அம்பாளை துதித்து பாடப்பட்ட ஸ்தலம்!

மயூரநாதஸ்வாமி கோவில் சன்னதிக்கு உள்ள நுழைஞ்சதும் நம்மை வரவேற்கும் அந்த பெரிய உண்டியல்! அதுக்கும் நேர் மேல உச்சியில பார்த்தீங்கன்னா வட்டமாக அனைத்து ராசிகளின் உருவம் செதுக்கி அமைந்திருப்பார்கள்! எந்த ராசிக்கு நேர் கீழ நின்னு சுவாமியை பார்த்தால் விசேஷம்ங்கறது பெருசுங்க சொல்ற மேட்டர் அதனால அதையும் ஃபாலோ பண்ணிப்போம்!

அப்படியே இடதுபுறமா நேர பார்த்தீங்கன்னா மயில் உருவம் ஒரு சின்ன அறையில இருக்கும் அதுதான் மயிலம்மன் இப்ப நடந்துக்கிட்டிருக்கற ஐப்பசி உற்சவத்தில ஒரு நாள் மயிலம்மனுக்குன்னு ஸ்பெஷல் பூஜை உண்டு! அன்னைக்கு மயிலம்மன் தூக்கிட்டு எங்க இளவட்டங்கள் ஆடுற ஆட்டத்த போய் பார்த்தீங்கன்னா சூப்பரா இருக்கும்! மயிலம்மன் ஆட்டம்ன்னு இடமும் வலமும் முன்னும் பின்னுமாக பல்லாக்கில் வைத்து ஆடி வருவார்கள்!

தொடரும்....!

அவ்ளோ சீக்கிரத்தில சுவாமி தரிசனம் முடிஞ்சுடுமா? கடைமுகம் வரைக்கும் கொண்டுப்போய்த்தான் முடிக்கணும்னு!

ஆண்டவன் சொல்றான் இந்த ஆயில்யன் முடிப்பான்!?

(பார்ட்டு பார்டா போடறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு!?!)

4 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சுண்டல் கொடுக்கும் பொழுது சொல்லும் ஓய், நானும் வந்துவிடுகிறேன். என்னைக்குமே நமக்கு குறிக்கோள்தான் முக்கியம்:)

Anonymous said...

//சிவன் சன்னதியில் உட்கார்ந்தா உலகமே மறந்து உள்ளம் மகிழும்!//

ரொம்ப கொடுத்து வச்சிருக்கிறீங்க!.....

இத படிக்கிறப்பவே ரொம்ப சந்தோசமா இருக்குங்க். :)

said...

Somehow i missed this. Next time i will surely visit

said...

Very interesting. I missed this temple many times. Surely i will visit next time