வாழ்த்துகின்றோம் சின்ன அய்யாவை!

Photo Sharing and Video Hosting at Photobucket


புகை பழக்கத்தை விரட்டும் பணியில் உலகுக்கு முன்னுதாரணமாக திகழம் நம் அரசின் அமைச்சரு, உலக சுகாதார நிறுவனத்த்தோட சிறப்பு பிரைஸ வாங்கிட்டு வந்து,

நிப்பாட்டுங்க சிகரெட்ட இப்பவேணு சொல்ல வாயை தொறக்கறதுக்குள்ள இங்க, நாம தேர்தல்ல செலக்ட் பண்ண ஆளுங்க, அது முடியவே முடியாது முரண்டு புடிக்க ஆரம்பிச்சிட்டாங்க!

சரி மக்களிடமே பதில் கேட்போமுனு மினிஸ்டரு விட்ட - பத்த வைக்கறத்துக்கு முன்னாடி வூட்டாண்ட கேளுங்க -அப்படிங்கற வாய்ஸ கேட்டு, என்ன மினிஸ்டரு காமெடி கீமெடி பண்றாரானு கேட்கறாங்க?

அட என்னத்தாம்பா செய்றது!

உங்க நல்லதுக்குத்தானே சொல்றோம்!

(ஆக்சுவலா நான் சந்தோஷப்பட்ட மேட்டரு வேற - உலக சுகாதார நிறுவன தலைவர விருதாவே கொடுக்கறாங்களேன்னு! - பட் விருது வாங்கி வர்றதுக்குள்ள சிகரெட் சம்பந்தமா எவ்வளவு ப்ராப்ளம் பாருங்க எங்க(நம்ம) மினிஸ்டருக்கு!)

கலாம் @ ஹோட்டல் அன்னலட்சுமி


Photo Sharing and Video Hosting at Photobucket

இரவு பத்து மணி அண்ணா சாலையில் ஹிக்கின்பாதம்ஸ் கிட்ட உள்ள அன்னலட்சுமிக்கு ஹோட்டலுக்கு செல்லவேண்டும்னு கலாம் சொன்னதுமே, ஆஹா ஆரம்பிச்சிட்டாருயான்னுதான் செக்யூரிட்டி அதிகாரிகள் நினைச்சிருப்பாங்க!

பாருங்க வந்து ஒரு நாள் கூட ஆகலை அதுக்குள்ள கிளம்பிட்டரு!
(ஃபாரின்ல கொஞ்சம் வருஷம் இருந்து நல்ல சாப்பாட்டுக்கே வழியில்லாம நாமதான் இப்படி கடைகண்ணியை தேடி ஒடுவேமுனா இவருமா?)

அங்க போயி இஸ்ரோ பிரண்டுக்காக வெயிட் பண்ணி, சாப்பிட வந்த,
குட்டிஸ்க்கிட்ட கேள்வி கேட்டு ஆட்டோகிராப் போட்டு, சாதம் சாம்பார் வத்த குழம்பு எல்லாம் ஐட்டத்தையும் ஜமாய்ச்சிட்டு வீட்டுக்கு போறப்ப நைட்டு மணி 12

வெளி நாட்ல இருக்கறவங்கத்தான் ,ஊருக்கு போறப்ப,அந்த ஹோட்டல்ல போய் சாப்பிடணும் இந்த கோயிலுக்கு கண்டிப்பா போய் வரணுமுனு ஒரு திட்டம் போட்டு வைப்பாங்க அத மாதிரியே இவரும் நல்லா பிளான் பண்ணிருப்பாரோ!

சரி அப்படி என்னாதான் அந்த ஹோட்டல இருக்கு பார்ப்போம்

அருமையான இன்டீரியர் டெகரேஷனுடன் மர வேலைப்பாடுகளமைந்த இந்த ஹோட்டல் எப்பவுமே பிஸிதாங்க!

சைவ சாப்பாட்டுக்குன்னே ஒரு தனி ஹோட்டல் அதுவும் அத சர்வ் பண்றவங்க எல்லாரும் வாலண்டியர்ஸ்! ஆச்சர்யமாருக்குல்ல..!

இதை ஆரம்பித்தது சுவாமி சஹாநந்த சரஸ்வதி. இவரு சிவானந்தா சாமிகளோட சீடராம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த ஹோட்டலின் மூலம் பெறப்படும் பணம் சிவாஞ்சலி என்னும் அறக்கட்டளை மூலம் சமூக சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஸ்பெஷல் சாப்பாடுன்னு சொன்னா ரெண்டு மாடல்ல நம்ம சாப்பிடலாம்!
ஒண்ணு சம்பூர்ணா இன்னொன்னு சுவர்ணலெக்ஷ்மி

நான் தங்கதட்டுல சாப்பிட்டவன் அப்படின்னு பில்ட்-அப் கொடுக்கணுமுனா நீங்க செலக்ட் பண்ண் வேண்டியது சுவர்ணலெக்ஷ்மி இதுலதான் எல்லா ஐட்டமும் தங்கத்தாலான பாத்திரங்கள பரிமாறுவாங்களாம்

எல்லாம் ஒஹோதான்! ஆனா சாப்பாட்டுக்குன்னு நீங்க செலவளித்த தொகை கொஞ்சம் பெருசாத்தான் தெரியும்! ஆனா என்ன அந்த காசு ஏதோ ஒரு விதத்தில சேவைக்குத்தானே போகுது அதனால ஒகேதான்!

எச்சரிக்கை.! From டி.ராஜேந்தர்

தாயக மறுமலர்ச்சி கழகம்.

லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்.

எங்கள் மண்ணின் மைந்தன்!

எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர்!

எங்கள் ஊரை கலைக்கண்களுக்கு படைத்த மாமனிதன்!

சில காலம் தி.மு.க!

சில காலம் அ.தி.மு.க!

சில காலம் எந்த முகத்துடன் இருந்தாருன்னு அவருக்கே தெரியாதுங்கறதால
அவரு முகத்த இந்தளவுக்கு மாத்துன உங்களுக்கு...!

(நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.!)

எங்கள் தன்மான சி(ங்கம் or றுத்தை)

அவரு ஸ்டைலயே கொடுக்கும் கொடுக்கும் அடி!




இதுக்கும்மேல ஏதாவது பிரச்சனை கிரியோட் ஆச்சுன்னா?

வீராசாமியை முழுபடத்தையும் காட்டி பதிலடி கொடுக்க ரசிகர்களாகிய
நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம் ஜாக்கிரதை!

என் ஈழ நண்பர்களுக்காக!

வந்த நாள் முதலே எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது இங்கு வாழும் ஈழ சகோதரர்கள்தான் எனக்கு சுத்தமாக புரிபடவேயில்லை என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்!

நான் காலடி எடுத்து வைத்த நாள் முதல்கொண்டு அவர்கள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை நல்லா கதைங்க மாஸ்டர்..?

அவங்களுக்கு எங்கிட்ட இருந்து ஏதாவது புதிது புதிதாய் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கோ நான் பேசுவதைவிட அவர்களை பேச சொல்லி கேட்பதில் ஆர்வம்!

சிலர் பேசுவது நகைச்சுவையாகவே இருக்கும், சிலர் பேசுவதில் தீப்பிழம்பு தெறிக்கும்!

சில வாரங்களிலேயே அனைவரது இருப்பிடத்திற்கும் செல்லும் பழக்கம் ஏகப்பட்ட பேரை நண்பர்களாக அறிமுகப்படுத்தியிருந்து.-அடேய் இவர்தான் எங்கட கொம்பனி மாண்டீஸ்- மாஸ்டர் இவன் தான் கத்தார் ஷேக் மினிஸ்டர் வீட்ல வேலை பார்க்குறான் பாருங்க எப்படி பளபளன்னு இருக்கான்னு!போன்ற அறிமுகங்களில் நான் அசந்துபோனேன்!

இது நாள் வரையில் ஒருவர் கூட என்னை பார்த்து நீங்க தமிழ் நாடான்னு கேட்டதேயில்லை! ஸ்ரீலங்கி..?! என்னை பார்த்து இந்த கேள்வி கேடக தூண்டிய என்னுடைய திராவிட கலருக்கு தாங்க்ஸ் சொல்லலாம்.


இதையெல்லாம் விட என்னை ஆச்சர்யப்படுத்தியது நம் தமிழ் திரைப்படங்களிலும்.பாடல்களிலும் இவர்கள் கொண்டுள்ள ஈடுபாடு!

தமிழக அரசியல்வாதிகள் பற்றி நெறையா தெரிஞ்சுவைச்சுருக்காங்க ஆனா பெரும்பாலும் அது நம்மாளுங்களோட பில்ட்-அப் சேதிகள்தான்னும் பலருக்கு தெளிவான எண்ணங்களுமிருக்கு. - நினைத்தே பார்க்காத வைகோ -ஜெ கூட்டணி., இதுபோலவே ராம்தாஸ்சும் திருமாவும் பல்டி பார்ட்டிகள்தான் போன்ற நினைப்பிருந்தாலும் மிகுந்த பாசத்துடன் பார்ப்பது நெடுமாறனைத்தான்!

நன்றாக கணினி பழகும்,படிக்கும் சிலரிடம் நான் கேட்டது. ஏன் இன்ஜினியரிங் போன்ற படிப்புகளில் ஈடுபடவில்லை என்ற கேள்விக்கு வசதி,வாய்ப்புகளற்ற வாழ்க்கை மட்டுமல்ல,வாழ்விடம் கூட வாய்க்காத வகையிலான வரம் பெற்றவர்கள் நாங்கள் என்ற வார்த்தைகளில் நான் விட்ட கண்ணீர் -அம்மாவை பிரிகையில் விமான நிலையத்தில் நான் விட்ட கண்ணீரை விட பல மடங்கு!


ஒரு வாரம் சுதந்திரமா உங்க ஊருக்கு வந்து,தங்கி தேவாரம் பாடிய கோயில்களுக்கு போய் நிம்மதியா சாமி கும்பிடணும் மாஸ்டர் - என்னிடம் ஒரு ஈழ நண்பன் கேட்டது என்னால் முடியுமா? என்று தெரியவில்லை! ஆனால் எனக்கு அது ஒரு இலக்காகிவிட்டது அன்று முதல்..!

அறிமுகமாக நிலையிலும் ஆசையாக சாதமும் பருப்பும்,கொடுத்த,

ஊருக்கு செல்கையில் விமான நிலையத்தில் வந்திருந்து ஆசையாக அனுப்பிய!

எங்கோ ஒரு மூலையில் வெயிலில் வாடினாலும் அடிக்கடி வரும் ஹலோவிற்காகவும்!

என் ஈழ நண்பர்களுக்காக...!

சென்றது எங்கே...?

சந்தோஷங்களை பகிர்ந்துகொண்ட உறவுகள்!

நிதி கேட்டு வரும் அரசியல்வாதிகள்!

நன்கொடை நாடி வரும் ஆன்மீகவாதிகள்!

மற்றவர்களுக்கு புரியாமல் பேசும் அறிவுஜீவிகள்!

சென்றது எங்கே...?

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு கவிதை - காப்பி & பேஸ்ட்!

Photo Sharing and Video Hosting at Photobucket

நடிகர் திருமா via சினிமா

ஆடுவோம்.!

பாடுவோம்.!

கொண்டாடுவோம்..!



Photo Sharing and Video Hosting at Photobucket




Photo Sharing and Video Hosting at Photobucket




Photo Sharing and Video Hosting at Photobucket




Photo Sharing and Video Hosting at Photobucket




Photo Sharing and Video Hosting at Photobucket



ஆனந்தம் காணுவோம்!

உன் ஆக்டிங்லே..!

(நீங்க அப்பிடிக்கா வர்றபோறீங்களா..!?)

டாக்டர்.மு.ஆனந்தகிருஷ்ணன்.

கட்டிடப்பொறியியல் வல்லுநர்

கணினித்தமிழ் வல்லுநர்.

Photo Sharing and Video Hosting at Photobucket


1960களில் தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணியாற்றிய, இவர் தன்னை துறைக்கேற்ப சமரசப்படுத்திக்கொண்டிருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டளவில் தலைமை பொறியாளர் வரைக்கும் பணி வகித்து இந்நேரம் தம் ஒய்வு காலத்தை கழித்துக்கொண்டிருந்திருக்ககூடும்!

பொதுப்பணித்துறையின் பணிகளை விட கல்விபணி இவரை கவர்ந்திழுக்க கான்பூர் ஐ.ஐ.டியில் கல்வியாளராக பணி வகித்த இவருக்கு நினைத்தையெல்லாம் செயல்படுத்துமளவுக்கு சுதந்திரம்., மிக்க மகிழ்ச்சியுடன், அன்று இவர் மேற்கொண்ட பணிகள் - இன்று தரமான தொழில்நுட்ப உயர் கல்வி அளிக்கும் ஒரு நிறுவனமாக அமைவதற்கு போட்ட விதைகள்!

புதிய, புதிய, தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை நம் நாட்டிற்கேற்ற முறையில் பயன்படுத்துதல் தொடர்பான பணிக்காக, இந்திய அரசு சில குறிப்பிட்ட நாடுகளின் இந்திய தூதரகங்களில் அறிவியல் ஆலோசகர் என்ற, பதவியினை ஏற்படுத்தி அதில் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமித்தது. இப்பணிக்காக அமெரிக்காவிற்கு சென்றார் ஆனந்தகிருஷ்ணன்.

அமெரிக்காவில் கணினி தொடர்பான பணிகளால் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் பின்னாளில் தமிழை கணிணிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த விஷயங்களில், தமிழகம் பெரும் வளர்ச்சியடைய, இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு காரணம் என்றும் கூறலாம்.!

பின்னர் சில வருடங்கள் ஐ.நாவின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு,தமிழ்நாட்டில் அண்ணா பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய காலகட்டத்தில்தான் தொழில்நுட்ப கல்வித்துறையில் மிக பெரும் மாற்றங்கள் கண்டது. தொழில்நுட்ப கல்லூரிகளில் நுழைவு தேர்வு முறையில் சேரும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்து வந்த கலைஞர் அரசில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கான முதல்வரின் ஆலோசகராக பணியாற்றிய சமயத்தில்தான்,கணிணித்துறையில் தமிழை கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமடைந்தன.

1997ல் சிங்கப்பூரில் ஆரம்பித்து, இன்று வரை புதிய தொழில்நுட்பங்களை, நான்காம் தமிழாம் கணினித்தமிழிற்கு அறிமுகப்படுத்தும் பணியில் மு. ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றிவரும்
மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் தொழில் நுட்ப கல்வி சார்ந்த கட்டுரைகளை வருடம்தோறும் வெளிவரும் “தினமணி” மாணவர் மலரில் படித்து பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் பெருமைதான்..!

கல்வி சான்றிதழ் மட்டுமே நம்மை ஒரு நல்ல வேலைக்கு தகுதியான நபராக மாற்றது கூடுதல் தகுதிகளாக கணினிக்கற்றல், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை..!

கல்லூரிகளில் கற்றறிந்தது மட்டுமே போதுமென்ற நிலையை தவிர்த்து,புதிது புதிதாக பயில தயாராக இருக்க வேண்டியதன் அவசியம்.தம் பயின்ற துறை தவிர்த்து,சார்ந்திருக்ககூடிய துறைகளிலும் சற்று ஈடுபாட்டை அதிகரித்தல் போன்ற விஷயங்களை திரு மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்களிடமிருந்து என்னை போன்று பலரும் கற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.!

வாங்க, காவா சாப்பிடலாம்..!


வேலைக்கு வந்த புதிதில் ஆபிஸ் பாயிடம் டீ கேட்கவே மிகவும் யோசனையாக இருக்கும், வேற என்ன? லாங்க்வேஜ் பிரச்சனைத்தான் அவன் ஈரானி நான் ஒண்ணு சொன்னா அவன் ஒண்ணு செய்வான்,சில வாரங்களிலேயே இந்த பிரச்சனைக்கு முடிவு வந்ததது.


இலங்கை தமிழ் ஆளு ஒருத்தர் வந்தாரு! நான் கேட்கறதுக்கு முன்னமே கரெக்டா காபி வந்துடும், அதுவுமில்லாம ஏகப்பட்ட வெரைட்டிகள் இருப்பதையும் அவர் மூலம் தான் நான் தெரிந்துகொண்டேன். என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, செம்பருத்தி டீ!

முக்கியமான இன்னொரு ஐட்டம் காவா!



Photo Sharing and Video Hosting at Photobucket




பெரிய அளவில் அரபிகள் விரும்பி அருந்தும் காபிடீ! ஆமாங்க இத காபில சேர்க்கறதா இல்லை டீயில சேர்க்கறதான்னு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம், அந்தளவுக்கு விவாதங்கள் உண்டு!


நம்மூரு காப்பி மாதிரி சொம்பு அள்வுக்கு குடிக்க முடியாது கொஞ்சூண்டு சுமார் நூறு மில்லி ஊத்திக்கிட்டாபோதும் சும்மா சுப்பரா இருக்கும்..!

உங்களுக்கும் குடிக்கணுமுனு ஆசையிருந்த டிரை பண்ணி பாருங்க..!

ஏலக்காய் விதைகளை எடுத்து தண்ணியோட சேர்த்து கொஞ்சம் நேரம் கொதிக்க வைச்சு,காபிக்கொட்டையை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து, அதோட சிறிதளவு ஏலக்காய் மற்றும் பாதாம், குங்குமப்பூ, இஞ்சி சேர்த்து(கண்டிப்பா இனிப்பு கெடையாது)


இளம் சூட்டில் ஒரு "சிப்"பிப்பாருங்கள் இதைத்தான் அரபிய நாட்டு ஷேக்குகள் குடித்து நல்லா ஷோக்கா இருக்காங்க!


நீங்களும் டிரை பண்ணி பாருங்க, ஆனா முதல் தடவை ரெடிப்பண்ணும்போதே நீங்க நெனைக்கிற டேஸ்ட் வந்துடாது, நல்ல விஷயம் அதனால் கொஞ்சம் நெறையா தடவை டிரை பண்ணுனா, காவா வரத்தானே வேணும்!

வலிக்கின்ற மனமே..!

வேலை தேடியோ அல்லது வேலை கிடைத்த பின்னரோ ஊரை விட்டு வெளியேறி செல்லும் போது ஏற்படும் மனபாரம்,சிறிது காலங்களிலேயே சூழ்நிலைக்கேற்ப மாறிவிடும். அப்படியே, சில கட்டங்களில் மனம் வாடும் போது, ஊரிலிருந்த காலங்களை நினைத்து, கண்ணீர் விட்டு ஆற்றிக்கொள்ள முடியும்.!

ஆனால்,சில நேரங்களில் அதுவும் தனிமையில் ஒரு ஜூரம் வந்தால் கூட மனம் கிடந்து துடிக்கும் துடிப்பிருக்கிறதே..! அப்பப்பா..! அதற்கு பதில் உயிரை கூட விட தோன்றும்.
சிறு வயதில்,நமக்காக குடும்பமே கும்பலாக அருகில் அமர்ந்திருந்த கால கட்டங்கள் மனதில் நிழலாட,உதவிக்கு ஆளின்றி கிடக்கும் சூழலில் இது போன்ற சூழ்நிலைகளை நாம் ஏற்படுத்திக்கொள்ள காரணமென்ன என்று ஏற்படும் எண்ணங்கள்.

நோய் அதனால் ஏற்படும் மனப்போராட்டங்கள், இது பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த வார "கேள்விக்குறியில்"
Photo Sharing and Video Hosting at Photobucket
வேறு எப்போதையும்விட நோயுறும்போதுதான் மனதில் அதிகக் கேள்விகள் பிறக்கின்றன. வீடு கற்றுத்தர மறந்ததை, மருத்துவமனைப் படுக்கை கற்றுத்தந்துவிடுகிறது. புத்தனுக்குப் போதி மரத்தடியில் ஞானம் வந்ததைப் போல, பலருக்கும் வாழ்வின் அருமையும், யார் நமக்கு நெருக்க மானவர்கள்,
யார் நம்மைப் பயன்படுத்திக்கொண்டவர்கள் என்றும் நோயுறும்போதுதான் தெரியத் தொடங்குகிறது.
உடல் குறித்த நமது கவனம் மிக அலட்சியமானது. அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சைக்கிளுக்குத் தரும் முக்கியத்துவத்தைக்கூட நமது உடலுக்கு நாம் தருவதில்லை. இயல்பாக இருக்கும்போது உடலின் அற்புதம் நமக்குப் புரிவதே இல்லை.

வலியின் முன்னால் வயதோ, பணமோ, பேரோ, புகழோ எதுவும் இருப்பதில்லை. வலி, மனிதனை உண்மைக்கு மிக நெருக்கமாக்குகிறது. தன்னைப் பற்றிக்கொண்டு இருந்த அத்தனைப் பெருமிதங்களையும் ஒரே நிமிஷத்தில் கரைத்து அழித்துவிடுகிறது. நோய் ஒரு வகையில் நம் உடலை மட்டுமல்ல; ஆன்மாவையும் தூய்மைப் படுத்துகிறது.

உடல் நோயுறும்போது மனதில் தோன்றும் முதல் கேள்வி, ‘எனக்குன்னு யாரு இருக்கா?’ என்பதுதான். மற்ற எந்த நேரங்களையும்விட சக மனிதனின் நெருக்கமும் அன்பும் அரவ ணைப்பும் மிகத் தேவையாக உள்ள தருணம் அதுதான்!

10 வயதில் காய்ச்சல் காண்பதற்கும் 30 வயதில் காய்ச்சலில் படுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 10 வயதில் காய்ச்சல் கண்டால், மற்ற எல்லோருக்கும் வருவது போல தனக்கும் காய்ச்சல் வந்திருக்கிறது என்று எண்ணத் தோன்று-கிறது. ஆனால், 30 வயதிலோ, ‘எனக்கு எப்படிக் காய்ச்சல் வந்தது? எத்தனை நாளில் சரியாகும்? ஒருவேளை சரியாகாமல் போனால் என்ன செய்வது?’ என்று சந்தேகங்களும் கேள்விகளும் நீரூற்றைப் போல பொங்கி வழியத் தொடங்குகின்றன.

அதைவிட, திடீரென உலகின் இயக்கத்திலிருந்து தான் துண்டிக்கப்பட்டுவிட்டதைப் போலவும், இப்படியே சில நாட்கள் கடந்து போனால் தன்னை உலகம் அடியோடு மறந்து விடும் என்பது போலவும் நோயாளி நினைக்கத் தொடங்குகிறான்.

உலகிலேயே மிகப் புரிந்துகொள்ள முடியாதது நோயாளிகளின் கோபம். உண்மையில், அவனது கோபம் மனிதர்களிடம் இல்லை. தன் உடலுக்குள் நடக்கும் புரியாத மாற்றங்களின் மீதான கோபத்தை அவன் தனக்கு நெருக்கமான மனிதர்களின் மீது காட்டுகிறான்.

மனைவியும் குழந்தைகளும் சகோதரர்களும் தான் படுக்கையில் கிடக்கும்போது இயல்பாகக் குளித்து, சாப்பிட்டு, காபி குடித்து தன் நாட்களைக் கழிக்கிறார்களே என்ற ஆத்திரம் பொங்கி வருகிறது. தனக்காக மற்றவர்கள் வருத்திக்கொள்ள வேண்டும் என்று நோயாளி ஆசைப்படுகிறான்.

நோயுறும்போது ஆணுக்குக் கிடைக்கும் அன்பும் அக்கறையும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. பெண் நோயுறும் குடும்பங்களில் அது தேவையற்ற ஒரு பிரச்னை என்றே கருதப்படுகிறது. மனைவியோ, சகோதரியோ நோயுற்ற நேரங்களில் உடன் இருந்து அக்கறை-யோடு கவனித்துக்-கொள்ளும் ஆண்கள் மிக சொற்பமானவர்களே!

நோய், நம் வயதை வேறு எந்த சந்தர்ப்பத்தையும்விடத் துல்லியமாக அடையாளம் காட்டிவிடுகிறது. அழு-வதற்கு வயது தடையாக இருப்பதை நோயாளி பல நேரங்களில் உணர்கிறான். ஆனால், வயதை மீறி உடல் தன் இயல்பில் உணர்ச்சிகளை வெளிப்-படுத்தத் துவங்கிவிடுகிறது. நோயாளியின் அழுகை, வலியால் மட்டும் ஏற்படக்கூடியதல்ல!

வாழ்க்கை, தன்னைப் புரியவைப்பதற்குச் சில நிகழ்வுகளையும் தருணங்களையும் ஏற்படுத்துகிறது போலும்! உடலில் தோன்றிய நோய் கால மாற்றத்தில் நீங்கிவிடக்கூடும். ஆனால், நோய்மை ஏற்படுத்திய புரிதல் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கக்கூடியதல்லவா?
Photo Sharing and Video Hosting at Photobucket

"ரெட்"கோட்டை

இஸ்லாமிய கோட்பாட்டினை கடைபிடிக்கும் நாட்டின் ஒரு மதச்சின்னமாக திகழ்ந்த லால் மஜீத் அல்லது செங்கோட்டையை காயப்படுத்துமளவுக்கு
அதிரடி நடவடிக்கையை முஷாரப் அரசு எடுக்கும் என்று நினைத்துக்கூடபார்த்திருக்கமாட்டர்கள் பலியான திவிரவாதிகள்.

1965ல் அரசின் உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த மசூதிக்கு ஜியா-உல்-ஹக் அவர்களுக்கு நெருக்கமாக இருந்த முஸ்லீம் மதகுரு மவுலானா
முகம்மது அப்துல்லா அவர்களை முதல் இமாமாக அரசு அறிவித்தது.இவரின் இரு பிள்ளைகள்தான் தற்போது நடந்த இந்த தாக்குதலுக்கு
காரணகர்த்தாக்கள்.

இந்த லால் மஜீத் மதச்சிந்தனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் அமைப்பாக திகழ்ந்த இங்கு, பொருளாதார சூழலில் பின் தங்கியிருந்த, பல
இடங்களிலிருந்து வந்த,சுமார் 5000 மேற்ப்பட்ட, ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இரு மதராஸாக்களிலும் இஸ்லாத்
பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஆனாலும் லால் மஜீத் அரசாங்க எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, தாலிபான் ஆதரவு கோஷங்களில் முக்கிய கவனம் செலுத்தியதுப்பற்றி அப்பட்டமாக அனைவருக்கும் தெரிந்தே இருந்தது.
முகம்மது அப்துல்லாவின் தாலிபான் ஆதரவு தீப்பொறிக்கும் பேச்சில் பல தீவிரவாத கும்பல்கள் கட்டுண்டுகிடந்தன.
1998ம் வருடம் இதே லால் மஜீத முன்பு வைத்து எதிர்தரப்பினரால் கொல்லப்பட்டார் அப்துல்லா
தன் தந்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்கய்தா தலைவன் ஒசாமா பின் லேடனை சந்தித்துள்ளார் என்று பெருமை பொங்க கூறி கொண்டிருந்தவர்தான் நேற்று நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட முகம்மது அப்துல்லாவின் இளைய மகன் அப்துல் ரஷித் காஷி.

தந்தையின் இறப்பிற்கு பின் லால் மஜீத் பிள்ளைகளின் கட்டுபாட்டில் வழக்கமான முறையில் தீவிர, தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பணியில்
ஈடுப்பட்டுவந்தனர்.
தாலிபான் தீவிரவாதிகளுடன் போரிட்டு பலியாகும் பாகிஸ்தான் படைவீரருக்கு மத சம்பிரதாயங்களை செய்யக்கூடாது. என்று ஒரு அறிவிப்பினை,2005ம் ஆண்டு இவர்கள் வெளியிட, நிர்வாகத்திலிருந்து அரசால் வெளியேற்றப்பட்டாலும் இவர்கள் தம் சேவையினை தொடர்ந்தனர்.

கடந்த சில மாதங்களாக இவர்கள் செய்த சில அதிரடி வேலைகள்,
இஸ்லாம் தீவிரவாதம் பற்றிய எப்.எம் வானெலி நிலையம்
இஸ்லாம் அடிப்படையிலான கடுமையான தண்டனைகள் கொண்ட கோர்ட் அமைக்க அடிப்படை கட்டுமானங்கள்.(விபச்சாரம் செய்ததாக கூறி வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் உள்பட சிலரை கடத்திசென்று பின்னர் விடுவித்தது.)

இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் மசூதியில் மாணவர்கள் கைத்தடிகளுடன் நடமாடுவதையும்,எப்பொதுமே ஜிகாதி பாடல்கள்
ஒலித்துகொண்டிருப்பதையும் அறிந்த ஐ.எஸ்.ஐ (மிக அருகாமையில்தான் இதன் அலுவலகமும்) ஏதோ பெரும் திட்டமாகத்தான் இருக்ககூடும் என்
அரசுக்கு அறிவிக்க,
அரசு அந்த இடத்தில் பாதுகாப்பு படைகளை கூடுதலாக்கியது.அப்போதும் கூட நான்கு போலீசார் கடத்தப்பட்டு மசூதியில் சிறைவைக்கப்பட, பிற்பாடு மசூதி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி போலீசாரை மீட்டனர். அனைவரையும் வெளியேற்ற அரசு முற்பட,எதிர்பார்த்ததை போன்றே,மசூதியை விட்டு வெளியேற மறுத்ததுடன்,உள்ளிருந்தவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தரப்பட,
முஷாரப்பிற்கோ சற்று அமைதியாக இருந்து பார்ப்போம் என்று, மசூதியில் உள்ளவர்கள் சரணடையுமாறு ஒரு செய்தி விடுக்க, என் உயிரே போனாலும் சரணடையமாட்டேன் என்று காஷி கர்ஜிக்க, விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket


மேலை நாடுகளின் அடுத்தடுத்த அழுத்தங்களால், முஷாரப் ராணுவத்தை அழைக்க,பதினைந்து மணி நேர சண்டை, ஐம்பது பேர் பலி அவர்களுடன்
சேர்த்து, தலைமை வகித்த அப்துல் ரஷித் காஷிக்கும் முடிவு கட்டியது ராணுவம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

பிரச்சனை முடிந்தாலும்,
மசூதிக்குள் ராணுவம் சென்றது தவறு.
அமெரிக்காவின் காலை வருடும் செயல்!
முதன்மை நீதிபதி விவகாரத்தை திசை திருப்ப முஷாரப் அரசு ஐ.எஸ்.ஐயை கொண்டு நடத்திய நாடகம் எனபல சர்ச்சைகள் ஆரம்பித்துவிட்டன.
அது மட்டுமில்லாமல், சண்டை முடிந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அல்-கய்தாவிடமிருந்து மிரட்டலும் வந்தாகிவிட்டது.
முஷாரப் என்ன செய்யப்போகிறார் என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பு.
இதில் லேட்டஸ்ட்டாக முஷாரப் செய்தது சரிதான்! என்று ஆதரவு அறிக்கை விடுத்துள்ளார் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ.

Photo Sharing and Video Hosting at Photobucket


நீ..! எதுவாக நினைக்கிறாயோ? அதுவாகவே ஆகிறாய்..! - நடந்த சம்பவங்கள் குறித்து பாகிஸ்தானிற்கான அமெரிக்க முன்னாள் தூதுவர்
வெளியிட்ட கமெண்ட்!

மினிஸ்டரு இப்படிச்சொல்லிட்டாரே..!

Photo Sharing and Video Hosting at Photobucket
இப்படியெல்லாம் யோசிச்சு ரசிகர்கள சந்தோஷப்படுத்த ஆளுங்க இருக்குன்னா, அவங்களோட எதிர்பார்ப்ப நிறைவேத்தறது ரசிகர்களாகியா எங்க கடமையாச்சே எங்களப்போயி மினிஸ்டரு முட்டாள்களுனுட்டாரேப்பா..!

காவிரி - காப்பி & பேஸ்ட்

இடம்: தலைமை செயலகம் சென்னை.

நாள்: உத்தேசமாக ஜுன் -2007 கடைசி வாரம்.

என்னப்பா..? நான்தான் அப்பவே சொன்னேன்ல ஜூன் இரண்டாவது வாரத்தில ரெடியா வைச்சுக்கோங்க திடீர்னு கேட்பாங்க அப்ப கிடந்து பதறிக்கிட்டு இருக்ககூடாதுன்னு இப்ப பாரு ஒரே டென்ஷனாக்கிட்டிங்க? தலைமைசெயலக அதிகாரி சத்தம் அக்கம் பக்கமெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க,
அவருக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அலுவலர் " இல்ல சார் மணி அப்பவே ரெடி பண்ணிட்டாரு, ஆனா அவரு மதியம் வரைக்கும் லீவு சார் ஆஸ்பெட்டலுக்கு குடும்பத்தை அழைச்சுக்கிட்டு போயிருக்காரு"!

சரி இப்ப என்ன பண்றது? பதிலுக்கு வினவ,

ஒரு பத்து நிமிஷத்தில ரெடி பண்ணிடறேன் சார்?

ராஜா கம்ப்யூட்டர ஒபன் பண்ணுப்பா?
எங்க அந்தாளு சேவ் பண்ணியிருக்கான்னு பாருப்பா?
சில நிமிடங்கள் கழித்து,
சார் அவரு என்ன பேருல பைல் பண்ணியிருக்காருன்னு தெரியிலை சார்
இப்ப என்ன பண்றது?

சரி ஒண்ணும் பிரச்சனையில்லை நீ போய் அந்த பீரேல இருக்கற சி.டி பாக்ஸ எடுத்து வா?

அதுல, ஜுன் மாதம் பேக்-அப் போட்டுருக்கே அந்த சி.டிய ஒபன் பண்ணுப்பா?
அந்த பைல்தான் ஒபன் பண்ணுங்க!
அப்பாடா! ஒ.கே முதல்ல டேட்ட மாத்துங்க?
சார் என்ன தேதி போடறது சார்? - கேள்வி முடிப்பதற்குள்,

ம்ம்ம்...! அது பிரச்சனைத்தான் மத்தத நாம முதல் ரெடி பண்ணுவோம். பொ.ப.துல டீடெயில்ஸ் தந்தாங்களே அது எங்க?

சரி இந்த வேல்யூவ டைப் பண்ணுங்க,

அதே மேட்டர்த்தான் காப்பி& பேஸ்ட் பண்ணுங்க,

அது அமைச்சரா இல்லை முதல்வரா உங்களுக்கு தெரியுமா?
அமைச்சர்தான் சார்!
- கட்டளைகள் பறந்து கொண்டிருக்க,

முடிஞ்சுதா,?
அப்பாடா!ஆமாம் பேரெல்லாம் கரெக்ட்டாத்தானே போட்டுருக்கீங்க?

எல்லாம் கரெக்ட்டுத்தான் சார் இந்தாங்க படிச்சு பாருங்க..!
Photo Sharing and Video Hosting at Photobucket
பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

கர்நாடகத்தில் பருவமழை தீவிரமாக உள்ளது. கபினி அணை நிரம்பி உபரி நீர் கிருஷ்ணராஜசாகர் அணைக்குத் திறந்து விடப்படுகிறது.
கிருஷ்ணராஜசாகர் அணையிலும் மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்துவிடும் அளவுக்குத் தேவையான நீர் இருப்பு உள்ளது.
ஆனால் இந்த அணையிலிருந்து தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்தி வைக்க கர்நாடக -######- உத்தரவிட்டுள்ளதாக, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
இச் செய்தியைப் படித்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
இது உண்மையானதாக இருக்கக் கூடாது. அப்படி உண்மையாக இருக்குமேயானால் ஒரு மாநிலத்தின் -######- அரசியல் சட்டத்தின் மீது
கொண்டிருக்கும் மதிப்பையும் கூட்டாட்சி தத்துவத்தில் அவருக்குள்ள நம்பிக்கையும் வெளிப்படுத்துவதாக இருக்காது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு குழிதோண்டும் செயலாகவே ஆகிவிடும்.
இப்போதே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாத நிலைமை உள்ளது. எனவே இதில் மத்திய அரசும் பிரதமரும் உடனடியாகத் தலையிட்டு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்,'' என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
ஒ.கே!

சார் இந்தாங்க நீங்க கேட்ட லெட்டர்..!
இப்படித்தாம்ப்பா அந்த அம்மா ஆட்சியிலே ஒரு தடவை என்னாச்சுன்னா...! - (கடிதத்தை கொடுத்து விட்டு சக ஊழியருடன் அலுவலக "பணியில்" முழ்க ஆரம்பித்தனர்)

அன்புள்ள ரஜினிகாந்த்..!

1984ல் வெளியான, "அன்புள்ள ரஜினிகாந்த்"முதன் முதலில் நடிகரின பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.
ஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை!
Photo Sharing and Video Hosting at Photobucket
பெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் "அன்னை ஒர் ஆலயம்" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுனுகூட சொல்லலாம்)

இக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்!
ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல
தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!
பாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.
அதிலும் குறிப்பாக,

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...!

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!