பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா !


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புச்சகோதரி ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்களோடு அவர்களின் பதிவிலிருந்து சில வரிகளை பகிர்ந்துக்கொள்கிறேன்!

எல்லார்க்கும் இனியவராய்... - இருக்க வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...!

# தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது?

# எப்போது விசுவரூபம் எடுக்கும் இந்த எண்ணம் எனக் கேட்டால்.. அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் 'சுயம்' பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்...

# பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே!

# வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், 'நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம் நடந்திருக்கலாம், இப்படி இப்படி இனி இருக்கலாம் நடக்கலாம்' என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் 'உரை கல்'.

# தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. 'என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி' என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், நமது தகுதி எது என்பதே பல சம்யங்களில் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை!

# அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்...?

# சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.

*****************************

முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே

மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சும் அழகே
மனிதா உன் தேகம் அழகே


வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே
இது உண்மையே!

ஒவ்வொரு வரிகளிலும் நம்மை நாமே பாராட்டிக்கொள்ளும்படி அமைக்கப்பட்ட பாடல் இயக்குநர் அகத்தியனில் எழுத்தில் கோகுலத்தில் சீதையில் பாடலாக வெளிப்பட்டது! எத்தனை அற்புதமான எண்ண ஓட்டங்கள் ! கேட்டு ரசித்துபாருங்களேன் நம் தேன்கிண்ணத்தில் இன்றைய ஸ்பெஷல் !
நன்றி:- தேன்கிண்ணம் & முத்தக்கா!

வரிகளில் வலிகள் - 2



எல்லா வீடுகளிலும் வெளிப்படுத்தவே முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார்கள். நம் நிழல் நம் கூடவே வந்தாலும்,அது எதையும் பேசுவது இல்லை. அது போல இவர்களின் அன்பும்....!

- எஸ்.ராமகிருஷ்ணன்

Fair & லவ்லி


கருப்பா இருக்கேன்னு என்னிக்கும்மே கவலைப்படாதடா நீ மனசு வைச்சா இன்னிக்கே சிவப்பாகிடமுடியும் ஸோ டோண்ட் ஒர்ரி (கவலைப்படாதேவும் டோன் ஒர்ரியும் வந்தாலே அவன் எல்.கே.ஜியில ஆரம்பிச்சிருக்கான் படிப்பைன்னு அர்த்தம் வைச்சுக்கிடணும் - நாங்க ஸ்கூல்ல அப்புடித்தான் வைச்சுப்போம்!)

கான்வர்சேஷனை வைச்சே தீர்மானிச்சுடலாம் செவப்பாகுறதுக்கு எம்புட்டு கஷ்டப்பட்டேன்னு - அட்வைஸெல்லாம் கேட்டு (அதுவும் இங்கீலிசுல எல்லாம் பேசுவாங்க எப்புடி இருக்கும் தெரியுமா? - சொன்னா மன்ச்சு வலிக்கும்!)

அப்பவெல்லாம் நொம்ப்ப பேமஸான விளம்பரமா இருந்த ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்படி அட்வைஸு கொடுத்திருக்குன்னு தெரியாமப்போச்சு - அது பொம்பளை புள்ளைங்க முகத்துல போட்டுக்கிடற கீரிம்ன்னு விளம்பரம் வர்றப்பவெல்லாம் ரெண்டு கையையும் எடுத்து முகத்துல பொத்திக்கிட்ட எனக்கு எப்படி தெரியும்!

சரி ஆசை யாரை விடும் ஏழு நாளுதானே வாங்கி டிரைப்பண்ணி பார்க்கலாமேன்னு ஒரு அசட்டு தைரியத்தில வாங்கி வந்தாச்சு பேர் & லவ்லியை! மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு!

பவுடர் போடாம வெளியில போனதா சரித்திரமே இல்லாத என்னோட ஆட்டோபயோகிராபி பக்கங்களில் இந்த பேர்&லவ்லி வந்து பிரச்சனையை கிளப்பிடுமோன்னு லைட்டா ஒரு பயம் வந்துச்சு! பவுடர் போட்டுக்கிட்டு கீரிமை தடவிக்கிடலாமா இல்லாட்டி கீரிமை தடவிக்கிட்டு பவுடர் போட்டுக்கிடலாமான்னு கன்ப்யூசன் அப்புறம் பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீரிம் போட்டு ரெண்டு லேயர் பவுடர் போட்டா போதும்ன்னு மனசு திருப்தியாச்சு! ஆச்சு 7 நாளு ப்ராகிரஸ் ஒண்ணுமே இல்ல ஆனா ஒர்க் கண்டினியூ ஆகிக்கிட்டிருந்துச்சு! சரி வேற யார்க்கிட்டயாச்சும் அட்வைஸுங்கன்னு கேப்போம்ன்னு இன்னும் ரெண்டு மூணு பேரை புடிச்சா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அட்வைசு சொல்றானுங்க!

கிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் ( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்!)

கிரீம் போட்டுட்டு போனா உடனே வியர்க்க ஆரம்பிச்சு பவுடர் எல்லாம் வழிஞ்சு போயிடும் ஸோ நீ கையில எப்பவுமே கொஞ்சம் பவுடர் வைச்சுக்கிட்டு அடிச்சுக்கோடான்னு இன்னொரு ப்ரெண்ட் அட்வைசு!

பேர் & லவ்லியோட சேர்த்து எந்த பவுடர்டா போட்டுக்கிட்ட...?

ம்ம்ம் பாண்ட்ஸ் பவுடரு!

அடேய் படுபாவி அந்த காம்பினேஷன்ல நீ என்னிக்குமே செவப்பாகமுடியாது! பேர்&லவ்லிக்கு சரியான காம்பினேஷனு கோகுல் சாண்டல்தான்! எப்படி அப்ளை பண்ணினாலும் - தனித்தனியா பர்ஸ்ட் & செகண்ட் லேயாராவோ இல்லாட்டி ரெண்டையும் கொழைச்சுக்கிட்டோ - கூடிய சீக்கிரமே செவப்பாகிடுவேன்னு சொன்னான் 3வதா ஒரு ப்ரெண்ட்டு! 3 தான் எனக்கு ராசி & ஒர்க் அவுட் ஆகும்! ஸோ அவன் சொன்னத நம்பித்தான் இப்ப கோகுல் சாண்டல் வாங்க கடைக்கு கிளம்பிக்கிட்டிருக்கேனாக்கும்!

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

பா & யப்பா!

13 வருடம்தான் வாழ்க்கை கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தா இன்னுமொரு பத்து வருஷம் நிறைய அதிர்ஷடமிருந்தா 20 வருஷம் வாழ்ந்துட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்! இதுதான் progeria வோட பேசிக் பிரப்ளம்!

பொருத்தமா உக்கார வேண்டிய ஜீன்களில் கொஞ்சம் கோச்சுக்கிட்டு இங்கயும் அங்கயும் மாறிப்போய் உக்கார்ந்துடுச்சுன்னா அந்த குழந்தையோட வாழ்க்கையே மாறிப்போயிடும்!

ரொம்ப ரொம்ப rare கேஸ்தான் இந்த நோய் - அதிர்ஷ்டம்ன்னு கூட வைச்சுக்கிடலாம்! இந்த விசயத்தை ஒரு சப்ஜெக்டா வைச்சு ஒரு படம் அதுவும் இந்தி சூப்பர் ஸ்டார் வைச்சு எடுக்கறதுங்கறது சிம்பிள் மேட்டர் கிடையாது!

யு.எஸ்ல இருக்கிற ப்ரோகேரியா ரிசர்ச் பவுண்டேஷன் இந்த படத்தை பார்த்துட்டு இந்த படத்தை விளம்பரபடமா இந்த நோய் பற்றிய விழிப்புணர்ச்சி பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முடிவு செஞ்சுருக்காங்களாம்!

சாதிச்சிருக்காரு R. பாலகிருஷ்ணன் aka பால்கி !

எம்.பியிடம் அவார்டு வாங்கிட்டு வந்து படுத்துக்கிடந்து கையில அவார்டோட எழுந்து அம்மாவிடம் விவரிக்கும் இடங்கள்

ராஷ்டிரபதி பவனுக்கு போவதற்கு அப்பாவிடம் தேதி பேரம் பேசுவது

ராஷ்டிரபதி பவனுக்கு போயிட்டு திரும்பி வரச்சொல்லிட்டு அதற்கு சொல்லும் காரணம்!

ரொம்ப்ப்ப்ப்ப் க்யூட்டான அந்த சின்ன பொண்ணுக்கிட்டயிருந்து எஸ்ஸாகும் விநாடிகள் கடைசியில் காரணம் நமக்கு புரிபடும் தருணங்கள்

அபிஷேக் வித்யா பாலன் காதல் செய்யும் தருணங்கள்!

பாட்டியுடனான கொஞ்சல்கள்

என ரசிக்கும் கவிதை நிமிடங்கள் நிறையவே இருக்கின்றது பா - விடத்தில்!

இளையராஜாவின் பின்னணி இசையில் சில இடங்களில் சிலிர்ப்பு உணரப்படுகிறது !



முழுப்படத்தின் உயிரோட்டமான நடிப்பு வித்யா பாலனும் அமிதாப்பும் - அமிதாப் இந்தி பட உலகின் சூப்பர்ஸ்டார் ஒரு சிறு பையனாக வித்தியாசமான மேக்கப்புடன் வலம் வருகையில் அவருடன் இணைந்து அதுவும் அம்மா கேரக்டரில் நடிக்கவேண்டுமெனில் நிறையவே சிரமங்கள் இருக்கலாம் ஆனால் எந்தவிதமான சமரசங்களுமற்ற ஒரு அம்மாவாக கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்!


”யப்பா”

இந்த பா பார்ப்பதற்கு முன்பே ஒரு சின்ன வரி வடிவம் - யாரு “பா”வை தமிழ்ல ரீமேக் செய்யப்போறான்னு” டிவிட்டர்ல ஒரு கொஸ்டீன் மாதிரி வந்துச்சு! சரி நாம படம் தயாரிக்காட்டியும் (அடேங்கப்பா ஆசையை பாரு) அட்லீஸ்ட் செலக்‌ஷன்லயாச்சும் உக்காருவோமேன்னு செஞ்ச படங்கள்தான்!


யப்பா - மேலும் ஒரு எடிட் செய்யப்பட்ட படம் மிக குறுகிய காலகட்டத்தில் - நேரத்தில் என்றே கூறவேண்டும்! - இணையத்தில் வெகு வேகமாக பரவியிருந்தது - இத்தனைக்கும் தனிப்பட்ட மெயிலாக அனுப்பப்பட்ட படம்! - இணையத்தில் பரவிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது! இது தொடர்பில், ”யப்பா” படங்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்!

12.12.2009


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

********

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

********

பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை...!
லட்சியமாவது, புடலங்காயாவது,சுகமாக,சந்தோஷமா,நிம்மதியாக வாழ்ந்து ..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்!

- ரஜினிகாந்த்

வாழ்க வளமுடன்!

டிஸ்கி:-

ஆன்மீக சிந்தனைகள் - அறிஞர்களின் பொன்மொழிகள் - வாழ்வியல் சிந்தனைகளை பின்பற்றி செல்லுங்கள் என்று கூற விரும்பவில்லை, சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் பிற்காலங்களில் உங்களின் சிந்தனைகளினூடாகவே அவை வெளிப்பட்டுவிடும்!


வாழ்க வளமுடன்' என்று பிறரை வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். வாழ்த்தும் பழக்கத்தினால் கோபம் முதலிய தீய குணங்கள் உருவாவதைத் தடுக்கலாம்

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்த்த வேண்டும். அந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அமைதியை நிலவிடச் செய்யும்

அன்பு, அருள், இன்முகம் இவற்றைச் சிந்தியுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். நம் வீட்டு குழந்தைகளும் நல்லவர்களாகவும், அழகுடையவர்களாகவும் வளர்வார்கள்.
வேதாத்திரி மகரிஷி



வேண்டுகோள்:-

வாழ்க வளமுடன் - போன்றே இன்னும் பல உச்சரிக்கப்படும்/உச்சரிக்கப்படாத உச்சரிக்கப்பட்டால் மனதுக்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் நற்சொற்களை பற்றியும் தெரிவியுங்களேன்!

பிரிவொன்றை சந்தித்தேன்!

வருகிறேன்! என்று சொன்ன அந்த நாளினை - நேரத்தினை - நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்!

போகிறேன் என்று சொன்ன அந்த இரவு வேளையில் அதுவும் மஸ்கட் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் Departureல் கண்ணீருடன் விடைகொடுக்கும் நட்புகளை அக்கம்பக்கம் வித்தியாசமாக பார்ப்பது நிச்சயம் புதிதான ஒன்றுதான்! ஊரைவிட்டு வந்து பல மாதங்கள் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டோ படாமல் பணி புரிந்து ஊர் செல்லும் நாளில் முழு மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து Departurக்குள் புகும் பயணிகளுக்கு மத்தியில் நா தழுதழுக்க கண்ணீருடன் தற்காலிகமாய் விடை பெற்ற அந்த நாளினை நானும் என் நண்பர்களும் மறக்க இயலாத ஒரு நாள்! இத்தனைக்கும் நண்பர்கள் செண்டிமெண்ட்களில் சிக்கி தவிப்பவர்கள் அன்று! எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களும் கூட!





இருந்த நான்கு நாட்களில் பயணித்த தூரங்கள் அதிகம் பார்த்த இடங்களை விட நண்பர்களோடு மகிழ்ச்சி கொண்டு உறவாடிய நேரங்கள் அதிகம்! நண்பர்க்ள் கூடினால் ஒன்று கூடும் கேலிகளும் கிண்டல்களும் சீண்டல்களும் என இனிதே கழிந்த நாட்களை என் நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன் இன்னும் சில காலங்களுக்கு நினைத்து நினைத்து மகிழ,சோகங்களுக்கும் தோல்விகளுக்கும் நிம்மதியின்மை அடையும் நேரங்களுக்கும், முற்றுபெறாமல் தொடரும் பயங்களுக்கும்,மனதை வருத்தும் எண்ணங்கள் என அனைத்திற்கும் அருமருந்தாய் அமையும் !

பிரிவு கொடியதுதான் - நட்புகளிடத்திலிருந்து - மனதுக்கு பிடித்த மனிதர்களிடத்திலிருந்து விலகி இருப்பது!

இங்கீலிசு ஸ்கூலேய்!


கைகள் கைகளுக்குள் கைகள் வைச்ச கொலாஜ்;

குட்டீஸ்களின் போட்டோக்கள் அதை சுற்றிலும் அழகாய் கைவண்ணத்தில் பூக்கள்;

வித விதமான மேக்கப்களில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் டீச்சர்ஸ்;

மொத்தத்தில் ஸ்கூல், ஆபிஸ்ன்னு தொடங்கி எங்கெங்கு காணினும் கலர்களடா ரேஞ்சுலதான் பெயிண்டிங்க்ஸ் போட்டு சுவரை அலங்காரம் செஞ்சிருக்காங்க எல்லா பெயிண்டிங்க்ஸும் பசங்களோட டெரர் அட்டாக்தான்! - சரி அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு வாங்க!

இன்னிக்குன்னு பார்த்து நான்-யூனிபார்ம் டேவாம் (அப்புடி டேவெல்லாம் கொண்டாடுறாங்க - ஹம்ம்ம்ம்) டீ சர்ட்டு முக்கால் டவுசரு/ஜீன்ஸ் பேண்ட் போட்ட வாத்தியாருங்க யூனிஃபார்மெல்லாம் இல்லாம குட்டீஸ் எல்லாம் வித விதமான டிரெஸ் போட்டுக்கிட்டு குறுக்கும் நெடுக்குமாய் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்கற அந்த இடத்துல நாங்க போன வேலையெல்லாம் மறந்துட்டு ன்னு வாய் பொளக்க பார்த்துக்கிட்டு இருந்தோம்ன்னு தான் சொல்லணும்!

எல்லா டீச்சர்ஸும் ஒரு ரேஞ்சுக்கு ஓடிக்கிட்டும் வெளையாடிக்கிட்டும் பாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க! இண்டோர் ஸ்டேடியத்துல ரெண்டு குட்டீஸ் குப்புறப்படுத்துக்கிட்டு கன்னத்துல கை வைச்சுக்கிட்டும்,மத்த குட்டீஸ்ங்க ஒரு ஏழு - ஏழரை - எட்டு இருக்கும் டீச்சரை சுத்தி உக்கார்ந்துக்கிட்டு இண்ட்ரஸ்டா கதை கேட்டுக்கிட்டிருக்காங்க - ப்ளே செஷன் முடிஞ்சு ரெஸ்ட் டைம் கதை சொல்லியாம் அந்த வாத்தியாரு!(ஹம்ம்ம்)

சயின்ஸ் லேப்ல கன்னத்துல கை வைச்சுக்கிட்டு ஒரு செவப்பு அம்மிணி உக்காந்திருந்தாங்க கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் 7வது பசங்களாம் ஹாய் டீச்சர்ன்னு எண்ட்ரீ கொடுத்துக்கிட்டே வந்து என்னமோ ப்ரெண்ட்கிட்ட கிண்டல் அடிக்கிற மாதிரி அம்மிணி ஏன் சோகமா இருக்கீங்க ரேஞ்சுக்கு கொஸ்டீனு போட்டுக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் பெற ஒரே கலகல சத்தம்தான்! (ஹம்ம்ம்ம்)

ஒருவழியா வந்த வேலைகள் முடிஞ்சு வெளியில வந்து நின்னா, ஒரு டீச்சரு கழுத்தில நிறைய வளையத்தை மாட்டிக்கிட்டு ஒடிவராரு பின்னாடி பார்த்தா லைன் கட்டி குட்டீஸ்ங்க ஒடியாறாங்க! எல்லாம் தம்மாத்துண்டு - 3- 4அடிதான் இருக்கும் - ரயிலு ஓட்டிக்கிட்டு போறாராமாம்! (ஹம்ம்ம்ம்) - அதுல ரெண்டு மூணு குட்டீஸ்ங்க நம்ம புதிய வானம் எம்.ஜி.ஆரு ஸ்டைல்ல தாவி தாவி போனது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு!

இப்படியே நிறையா ஹம்ம்மிக்கிட்டே ஒரு 4 மணி நேரம் சுத்தி சுத்தி வந்ததுல ஒரு விசயம் மட்டும் - மனசுல நிறைஞ்சிருந்தது -குட்டீஸ்ங்க முகத்துல எந்தவிதமான டல் மூட் அல்லது அழுகையோ இல்லை என்பதுதான்! எஜுகேஷன் சிஸ்டம் என்னமோ பிரிட்டிஷ் சிஸ்டமாம்!

படிக்கிற காலத்துல டெய்லி எந்திரிச்சு முதல் நாள் செய்யாம விட்ட ஹோம் ஒர்க் செஞ்சுப்புட்டு ரொம்ப கடுப்போட ஸ்கூலுக்கு போகும்போது போற வழியில பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கையில பேக் எடுத்துக்கிட்டு ஆபிஸ் போற ஆபிசர் அண்ணன்களை பார்த்து நாமும் டப்புன்னு டாப் கியரை போட்டு ஒரே நாள்ல இப்படி ஆகிடமாட்டோமான்னு ஃபீலிங்க் வுட்ட கால நினைவுகளெல்லாம் மறந்து போய் மீண்டும் குழந்தைகளாகி ஸ்கூலுக்கு போகலாமான்னு ஏக்கம்தான் வந்துச்சு நின்னுச்சு!

பிராக்கெட் குறிப்பு - படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போகாம & படிக்காம இப்படி பிராக்கெட் போட்டு விட்ட பெருமூச்செல்லாம் போகட்டும் அந்த இறைவனுக்கே!

பரீட்சை பேப்பரேய்ய்!

வாத்தியாரு புல்லட்டை விட்டு இறங்கும்போதே கவனிச்சேன்டா! பரீட்சை பேப்பரு வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு! எப்படியும் ப்ரேயர் முடிஞ்சதும் கொடுக்க ஆரம்பிப்பாரு இன்னிக்கு க்ளாஸ் ரணகளமாத்தான் இருக்கும்டோய்ய்ய்ய்!

அலர்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு ஒருத்தன் மெசேஜ் கொடுத்துட்டு ஸ்கூலுக்கு காலையில வாராம எஸ்கேப்பாகிடுவான்.வூட்டுக்கு போயிடலாமான்னு ஒரு நினைப்பு வந்துடும்! ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டு திரும்ப வூட்டுக்கு போவணும்ன்னா 1 யாராச்சும் தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட் லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு! அப்படி ஒரு கட்டுக்கோப்பா படிச்ச காலம் அது!



சரி வர்றது வரட்டும்ன்னு, நல்லா ஜம்முன்னு போயி கடைசி பெஞ்சுல மனசுல பயத்தையும் பீதியையும் மிக்ஸ் பண்ணி வைச்சுக்கிட்டு முகத்தை நல்லா கான்ஃபிடெண்ட் மூட்க்கு மாத்திக்கிட்டு குந்தியிருந்தா - பய சொன்னா மாதிரி வாத்தியாரு பேப்பர் கட்டோட எண்ட்ரீ போடுவாரு - அந்த டைமிங்கல கடைசி நேரத்துல க்ளாஸுக்கு வராம போக என்னவெல்லாம் காரணங்களாக அமையும் அப்படிங்கறது மைண்ட்ல பெரிய டிரெயிலர் ரேஞ்சுக்கு ஓடி முடிஞ்சிருந்தாலும் கூட - அப்படி எதுவுமே நடக்காம படம் ரீலிசு ஆகறமாதிரி வாத்தியாரு வந்துப்புடுவாரு! வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது அந்த கேப்ல கூட ஹெச் எம் அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருன்னா,ஹெச் எம் பேசி பேசியே நேரத்தை இழுத்துட்டாருன்னா அடுத்த பிரீயட்டுக்கு வாத்தியார் வந்துட்டாருன்னா பேப்பர் இன்னிக்கு கொடுக்கலைன்னா - இப்படி பல (வி)”னாக்களுக்கு கனா கண்டுக்கிட்டிருந்தாலும் - விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்போசிட்டாவே நடந்துக்கிட்டே வரும்! [எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]

சரி இனி நடப்பது நடந்தே தீரும் அப்படின்னு மனசை தைரியப்படுத்திக்கிட்ட அடுத்த நிமிசமே ஒரு டெரரான நினைப்பு வந்து குந்தும் பாருங்க! அட நாமதான் எல்லா கொஸ்டீனுக்கும் ஆன்சர் செஞ்சிருக்க்கோமே அப்புறம் என்னடா தம்பி பயம் அனேகமா நாமதான் கிளாஸ்லயே ஃபர்ஸ்டா இருப்போம் நல்லவேளை நம்ம இங்கீலிசு மீடியத்துல போயி படிக்கல - பொம்பள புள்ளைங்க கிடையாது - ஸோ நாமதான் ஃபர்ஸ்ட்டு மார்க் அப்படின்னு திரும்பவும் ஒரு குட்டி கனவு!

பலிச்சிருச்சான்னு இண்ட்ரஸ்டாயிட்டீங்க போல (ஆபிஸ் வேலையெல்லாம் வுட்டுப்புட்டு ஆன்லைன்ல சாட் விண்டோவுல டிஸ்டர்ப் பண்றவங்களை பத்தியும் கவலைப்படாம இம்புட்டு வரிகள் படிச்சுட்டு வந்த உங்க எதிர்பார்ப்பை நான் எப்பிடிங்க வீணாக்குவேன்!?)

சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்!

குட் வெரிகுட் இனிமேலாச்சும் அட்லீஸ்ட் படிக்கிற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க சார் அப்படின்னு அன்பா அனுப்பி வைத்த அந்த வாத்தியாரு இன்னும் கண்ணுல நிக்கிறாங்க - தெய்வம் ! :)


டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!

ஹாலிவுட் அழைக்கிறது!

சிறு முயற்சி !



சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.

வானவில் வண்ணங்களால் படி கட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.

- முத்துலெட்சுமி


சிறு முயற்சி தான் முயன்று பாருங்களேன்!


இன்று இனிய பிறந்த நாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

எனக்கு ரொம்பவும் பு(ப)டிச்ச இன்னுமொரு கவிதையின் வரிகளிலிருந்து...

மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.


- முத்துலெட்சுமி



ஜி ஃபார் GIS


காலேஜ்ல படிச்சுக்கிட்டே இருக்கற காலகட்டத்தில ஜாப் சர்ச் பண்ணின ஆளுங்களா இருந்தா கண்டிப்பா இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ் இருந்திருக்கும் - ஆப்ஷன் நிறையா இருக்கேன்னு நினைச்சு சந்தோஷம் ஒரு பக்கம் - டெஸ்க்ரிப்ஷன்ங்கற பேர்ல வேலைக்கு சம்பந்தமே இல்லாம நமக்கு காலேஜ்ல கத்துக்க வாய்ப்பில்லாத நிறைய நிறைய விசயங்களை ரெக்கொயர்மெண்டா <போ>கேட்டிருப்பாங்க அதை நினைச்சு துக்கம் கண்ணை அடைச்சு உலகமே இருண்ட மாதிரி ஆகிடும் !

லைட்டா படிச்சு முடிச்சுட்டு ஒடியாந்துட்டா படிப்புக்கேத்த மாதிரி கை பை நிறையிற அளவுக்கு ஒரு வேலை கெடைச்சுப்புடும் சீக்கிரமே ஊர்ல பெரபலமாகிடலாம்ன்னு போட்ட தப்பு கணக்குகள் அப்புறம் அருணாச்சலம் ரஜினி கணக்கா ஃபிகர் வீட்டு முன்னாடி பத்து காரை நிப்பாட்டலாம்னு போட்ட கணக்கெல்லாம் அப்படியே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சரிஞ்சுக்கிட்டு வரும்! அந்த டைம்ல வரும் பாருங்க ஒரு நினைப்பு - அட அவுங்க கேட்டிருக்கிறதை படிச்சு கத்துக்கிட்டா போச்சுன்னு - செம டெரர்!

அப்படி நான் பார்த்த சில சப்ஜெக்ட்ஸ்ல்லாம் இன்னும் கூட எனக்கு ஒரு கானல் நீராகத்தான் ஓடிக்கிட்டிருக்கு!

அப்படி ஒரு ஆறு அளவுக்கு ஓடிக்கிட்டிருக்கிற கானல் நீர்தான் ஜிஸ்ஸு! அட GISங்க [Geographic Information Systems ] அதுல தொபுக்கடீர்ன்னு குதிச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டு, ஜிஸ் இன்ஜினியராகணும்னு,சூப்பரா ஒரு ஜாப்ல போய் குந்திடணும்ன்னு, சுக்கு நீர் எல்லாம் மொடக்கு மொடக்குன்னு குடிஞ்சு உடம்பையும் மனசையும் கிளியர்பண்ணிக்கிட்டு எங்க போய் குதிக்கலாம்ன்னு - படிக்கலாம்ன்னு - இடம் தேடறப்பத்தான் நம்ம ஊர் உண்மை எல்லாம் கரிக்க ஆரம்பிச்சுது! பெஸ்டா பண்ணனும்ன்னா 1 ஹைதராபாத் போங்க இல்லாட்டி பம்பாய்க்கு ஓடிப்போய்டுங்கன்னு எதோ ஊரை விட்டு ஓடறதுக்கான ப்ளானெல்லாம் போட்டுக்கொடுத்தாரு ப்ரெண்ட் ஒருத்தரு!

அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு கிணற்றுதவளை மூளையோட படித்துறை பாண்டி கணக்கா, யெம்மா தைரியமா இரும்மா உம்புள்ள இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கம்யூட்டரு இன்ஜினு ஓட்டி காட்டுறேன்மா ரேஞ்சுக்கு சொல்லிப்புட்டு லோக்கலயே ரெண்டு மூணு பொட்டியில தட்டுற விசயத்தை கத்துக்கிட்டு ஒருவழியா வந்து சேர்ந்தாச்சு! ஆனாலும் மனசுக்குள்ள, ஒரு தடவை ஆசைப்பட்டுட்டா பிறகு காலத்துக்கும் - கிடைக்காட்டியும் கூட - ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும்! அது மாதிரிதான் ஜிஸ்!ஏன்னா இன்னிக்கு உலக ஜிஸ் [GIS] நாள் !

இன்ஜினியரிங்க் படிப்புலயே செம கடியான சப்ஜெக்ட்டு சொல்லணும்ன்னா ஜியோலஜி தான் பெரும்பான்மை ஆதரவோட தனிச்சு நிக்கிறது அதுக்கு பிறகு எட்டிப்பார்ப்பது கணக்கு!

GIS பத்தி இண்ட்ரோ லெவல்ல சொல்லணும்னா சாட்டிலைட்கள் மூலம் பெறப்படுகின்ற டிஜிட்டல் இமேஜ்களை கொண்டு புவியில் ஆராய்ச்சிகளினை மேற்கொள்ளவும்,இயற்கை சீரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும்,இயற்கை வளங்களினை பற்றிய தகவல்களை பெறவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

GIS [Geographic Information Systems ] அடிப்படையா ஜியோலஜி நிறைய தெரிஞ்சிருக்கணும்! புவியியலை அடிப்படையாக கொண்ட எந்த துறைக்குமே இப்ப மவுசு ரொம்ப சாஸ்தி அந்த ரீதியில GIS [Geographic Information Systems ] செம ஸ்பீடா முன்னேறிக்க்கிட்டிருக்கு! புதிது புதிதாய் சாப்ட்வேர்களின் அறிமுகம் மட்டுமின்றி நிலத்தினை -உலகினை - பற்றிய பல புதிய அறிவியல் தகவல்களும்,ஆராய்ச்சிக்களும் நடைப்பெற உதவிபுரிகின்றன.

GIS பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்கிடணும்ன்னு ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த பக்கம் போய் பாருங்களேன்...!


GIS விக்கிபீடியா -
Guide to GIS

துறவு!

வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்து போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!

இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதால்!

ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவே முடிவடையக்கூடும்!

உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!

சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!

கொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம்


ஒருத்தனுக்கு ஒரு லவ்வர்தான் இருக்கணும்!
நிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில
எழுந்து நிக்க வேண்டிய நேரத்தில
விழுந்துடுவ என்று நான் போட்ட மொக்கையை நம்பி
நீ
காலேஜ்லேயே விட்டு வந்த
நம்ம தெரு ஃபிகருடனான காதல்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்...!

[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]

டிஸ்கி:- இங்கு படிச்சதால் கிடைச்சது

நான் ஆதவன்!

சூர்யோதயம் - எத்தனையோ வருசம் கழிச்சு சந்தோஷமா இருக்கேன் சரியா சொன்னா 3 வருசம் 8 மாசம் நாலு நாள் அது நான் துபாய்ல மானேஜரா இருந்த காலம் a Good Service but a bad ending, செய்யாத டிசைனுக்கு தண்டனை! அதை கேட்டு வாங்கினது நானேதான்! நேத்து வரைக்கும் நான் ஒரு ஸ்ட்ரக்சுரல் டிசைன் இன்ஜினியர் ஆனா இப்ப நானும் ஒரு சாதாரண டிராப்ட்ஸ்மேன் - டிராப்ட்ஸ்மேன்!

பயக்குட்டி பம்மிக்கிட்டு வந்தான் - என் டிசைன் இன்ஜினியரிங்க் லைஃப்பையே தலைகுப்புற புரட்டி போட்டுட்டு போயிட்டான்....!

அந்த நாள்.....

காட்சி ஒண்ணு:-



நான் ஆதவன்:- ஹலோ 10 இடத்துல நீங்க கட்டின கட்டிடம் இடிய போகுது. நான் யாருன்னு எல்லாம் கொஸ்டீன்ஸ் கேட்காம நான் சொல்றதை மட்டும் செய்யுங்க

டேமேஜர்:- டேய் சூர்யா ஒழுங்கா கீழ இறங்கி வா....!

நான் ஆதவன்:- அவ்வ்வ் நான் சூர்யான்னு உங்களுக்கு எப்படி டக்குன்னு தெரிஞ்சுது?

டேமேஜர்:- டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு....


காட்சி நெண்டு:-


நான் ஆதவன்:- ஹலோஓ?

டேமேஜர்:- இன்னும் நீ கீழே இறங்கி வரலியா?

நான் ஆதவன்:- முடியாது! பத்து இடத்துல கட்டிடம் இடிஞ்சு விழ போகுது. எம்புட்டு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா கீழே வா கீழே வான்னு கூப்புட்டுகிட்டிருக்கீங்க?

டேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...!

நான் ஆதவன்:- ஏதோ ஒண்ணு! நான் சீரியாஸாக பேசிக்கிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசக்கூடாது அப்புறம் நான் காமெடியனாகிடுவேன் ஆமாம்!

டேமேஜர்:- டேய் உன்னை யாருடா இப்போ சீரியஸா நினைச்சிக்கிட்டிருக்கா? நீ எப்பவுமே எங்களுக்கு காமெடி பீஸ்தானேடா...?

நான் ஆதவன்:- அவ்வ்வவ்வ்வ்வ்வ்!


காட்சி மூணு:-




நான் ஆதவன்:- ஹலோ இப்ப சீரியஸாவே நான் ஆதவன் பேசுறேன்!

டேமேஜர்:- டேய்...! நீ இன்னுமாடா கீழ இறங்கி வர்ல..? சரி இரு நான் மேலே ஏறி வரேன்..!

நான் ஆதவன்:- நோ! நோ நீங்க மேல ஏறி வரமுயற்சிக்காதீங்க டேமேஜர்! அப்படியும் மீறி நீங்க மேல வந்தா ரொம்ப காமெடியாகிடும்!

டேமேஜர்:- டேய்...! எனக்கு இப்ப கொலைவெறி வருது! இப்போ உனக்கு என்ன மேன் வேணும்?

நான் ஆதவன்:- குட்! குட்! இது தான் பட் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க ஆபிசர்!

டேமேஜர்:- என்னாத்த மாத்தி சொல்லணும் மேன்?

நான் ஆதவன்:- நான் மேன் இல்ல காமன் மேன்!

[பேக்கிரவுண்ட்ல மியூஜிக் ஸ்டார்ட்டு]

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
டிசைன் அறியா இன்ஜினியர்களும் உண்டோ?
பவுண்டேஷன் இல்லாத பில்டிங்களும் உண்டோ?
ஃபவுண்டேஷன் இடிவதை யார்தான் அறிவார்?
ஃபில்டிங்க் கவிழ்ந்தால் காசு யார் தான் தருவார்?


ஆக்கம் :- கோபிநாத் அமீரகம்

ஊக்கம் :- ஆயில்யன் தோஹா


டிஸ்கி:-
இனிய பிறந்த நாளில் சகோதர நான் ஆதவனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்...!

ஓரங்க நாடகம்/ஸ்டேஜ் ஷோ

பள்ளிக்கூட ஆண்டுவிழாக்கள் கல்லூரி வருட இறுதி கொண்டாட்டங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் அதிகம் ஆர்வம் செலுத்தும் மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே மிக அரிதாக இந்த ஓரங்க நாடகம் கான்செப்ட் எடுத்துக்கொண்டு கலக்குறத்துக்கு முயற்சி செய்வாங்க! பள்ளிக்கூட லெவலில் பாரதி காந்தி ..சி போன்ற வேடங்களை கொண்டு நாடகம் நடத்த கொஞ்சமாக முயற்சிக்கும் ஆசிரியர்களும் உண்டு! ஆனால் பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கே முன்னுரிமை! (அப்பத்தான் பசங்களும் நல்லா இண்ட்ரஸ்டா ஆடுவாங்க சார்!)

சரி அந்த விசயமெல்லாம் வேண்டாம் நாடகம் பத்தி பேசுவோம் நானெல்லாம் ஸ்கூல்ல படிச்ச காலத்துல ஆண்டுவிழாவிற்கு ஒரு மாதம் முன்பே அருமையான சப்ஜெக்ட் எடுத்து வைச்சு யார் யாரு என்ன என்ன கேரக்டருன்னெல்லாம் பிரிச்சு கொடுத்துட்டு முடிஞ்சா ரிகர்சல் பாக்கலாம்ன்னு முடிவு பண்ணினதோட சரி ரொம்ப சீக்கிரத்துலயே செலக்ஷன் கமிட்டிகூடி நீங்க என்னா செய்யப்போறீங்கன்னு கேக்கப்போற நாளும் வந்து அன்னிக்குன்னு பார்த்து டைரக்டரா இருக்கறேன்னு சொன்ன பய வராததால என்/எங்களோட ஓரங்க நாடக கனவு கம்பெனி இழுத்து மூடப்பட்டது! ( ஒரு நல்ல கலைஞனை இந்த சமூகம் இழந்துருச்சு! - அட நான் இல்லைங்க நாங்க போட்ட ப்ளான் படி நடிக்க இருந்த ஹீரோ! நிறைய மேனரிசமெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டிருப்பான்!)

பிறகு பாலிடெக்னிக்ல சுத்திக்கிட்டிருக்கும்போது மீண்டும் ஒரு ஆசை வந்துச்சு ஆனா செலக்ஷன் பண்ணப்போற வாத்தி எங்க குரூப்பு மேல செம கடுப்புல இருந்ததால நாங்களே வேண்டாம் பொழச்சுப்போங்கன்னு விட்டுட்டோம். ஆனா அந்த டைம்ல எங்க ப்ரெண்ட்ஸ் குரூப்பு செஞ்ச நாடகம் செம க்ளாப்ஸ் வாங்கினுச்சு! - கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் - வசனங்கள் ஏதுமின்றி ஒன்லி ஆக்ஷன்! ஸ்டூடன்ஸ் லெக்சரர் பிரின்ஸ்பால் இப்படி எல்லாருக்கும் அடக்க முடியாத சிரிப்பு நடிச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அவுனுங்க ஃபிகருங்ககிட்டேர்ந்துல்லாம் வந்துச்சுன்னா பார்த்துக்கோங்களேன்!!

ஓரங்க நாடகங்கள் இப்போதைய காலகட்டத்தில் ரொம்ப குறைஞ்சுடுச்சுன்னு பொதுவாக பார்க்கும்போதே தெரியுது. துணுக்கு தோரணங்களாக வர்ணிக்கப்பட்ட நகைச்சுவை நாடக அரங்கேற்றங்கள் ஆடியோ கேசட் ரீலிசுகள் சுத்தமா நின்னுப்போச்சு அல்லது அது பற்றிய செய்திகள் காணக்கிடைப்பதில்லை! இதெல்லாம் விரும்பாத அளவுக்கு மக்கள் சந்தோஷமாக இருக்காங்களோன்னு நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு!

டிவிக்களில்
முழு நேரமும் தொடர்களும்,திரும்ப திரும்ப ஒளிபரப்பாகும் ஒரே நகைச்சுவை காட்சிகளும் மக்களை கட்டிப்போட்டுவைத்திருக்கிற உண்மையினை நாடகம் நடத்துறவங்க நல்லா புரிஞ்சுக்கிட்டு கம்முன்னு இருக்காங்க போல...!

பதிவுலகத்தில கூட அவ்வப்போது நாடக டைப்புல பதிவுகள் வந்துக்கிட்டிருக்கும் இப்பவெல்லாம் சுத்தமா நின்னுப்போச்சு! டெரர் காமிக்கிற பதிவுகள் தான் எழுதறவங்களும் படிக்கறவங்களும் அதிகம் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க போல..!

தேவைப்படும் போது தேவைப்படற விசயம் கிடைக்காம போச்சுன்னா அக்கம்பக்கத்துலேர்ந்து வாங்கிகிடலாமாம் - காபி தூள் சக்கரைக்கு பக்கத்து வூட்டுல போய் கடன் கேட்டு வாங்கியாச்சும் ஃபில்டர் காபி குடிக்கிற மாதிரி - இப்ப ஸ்டேஜ் ஷோவுக்கு சாம்பிள் எதாச்சும் காமிக்கலாம்னு தேடி அலைஞ்சா ஒண்ணுமே சரியா சிக்கல சரின்னு எண்ட தேசம் பக்கம் போயி புடிச்சுட்டு வந்துட்டேன்!

பைஜு {Byju} காமெடி - பயபுள்ள டாப் லெவல்ல இருக்கிற மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாம் தண்ணிப்போட்ட மாதிரி நடிக்கிறதுல கில்லாடியாம்! அதுமாதிரியான கேரக்டர்தான் நல்லா பேரு வாங்கி கொடுத்து இப்ப உலகம் பூரா சுத்தி சுத்தி ஷோ போட்டுக்கிட்டிருக்காராமாம்!


கடகம்

டிஸ்கி:- பதிவெழுத வந்த கதையை பத்தி சொல்லுங்கன்னு சிநேகிதி கூப்பிட்டாங்க அப்புறமா தம்பியண்ணே கோபி கூப்பிட்டாங்க ஆனாலும் நேரம் காலம் ரொம்ப மோசமா போயிட்ட காரணத்தினால[இப்பவெல்லாம் ஆபிஸ்ல வேலை எல்லாம் செய்ய சொல்லி ரொம்ப கொடுமை பண்றாங்க!] ரொம்ப லேட்டாத்தான் எதோ எழுதிட்டேன்!

************************************************************************



நிறைய பேருக்கு ரொம்ப நாளாவே ஆசை இவனெல்லாம் எப்படி எழுத வந்தான்னு தெரிஞ்சுக்கிடணும்னு சரி நாமளே சொல்லாட்டி ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் வரவழைக்கிற இன்னும் பல தொடர்களை போட்டு தாக்கிடப்போறாங்களோன்னு முந்திக்கிட்டாச்சு!

2003 சகோதரர் மூலம் அறிமுகமான தமிழ் இணைய உலகம் நெட் செண்டர்களில் மாதத்துக்கு ஒரு முறை செல்லும்போது பார்க்கும் விசயமாகத்தான் இருந்துச்சு பிறகு சும்மா வெளையாட்டுக்கு ஒரு ப்ளாக் ரிஜிஸ்டர் பண்ணி வைச்சதோட சரி! அதுக்கு பிறகு வெளிநாட்டு பயணம் அப்புறம் வெட்டியா இருந்த காலகட்டத்திலதான் மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்!

டிராக் பேக் செஞ்சு எப்படி நுழைஞ்சோம்ன்னு சொல்றதுக்கு பதில் நுழைஞ்ச பிறகு மனசில இருந்த விசயங்களை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு போறேனுங்க!
எப்படியோ ஒரு வழியா பேரெல்லாம் செலக்ட்டி ப்ளாக்கு ஒபன் செஞ்சு அதுக்கு தோரணமெல்லாம் கட்டி தொங்கவிட்டப்பிறகுதான் ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை!

டெய்லி பேப்பர் படிக்கிறதை வைச்சு எதாச்சும் எழுதலாம்ன்னு ஒரு ஐடியா வர்ற அது கொஞ்ச நாள் ஓடிக்கிட்டிருந்துச்சு பிறகு என்ன எழுதலாம் எழுதலாம்ன்னு நினைப்பே ரொம்ப டெரர் காமிச்சுக்கிட்டிருந்துச்சு சரி கொஞ்ச நாள் படிப்போம்ன்னு கம்முன்னு படிக்க ஆரம்பிச்சா,அட இதெல்லாம் இவுங்க எழுதும்போது நாம எழுதறதுல தப்பே இல்லன்னு நினைப்பு வந்து குந்திக்கிச்சு - அதுக்குத்தான் எழுதறதுக்கு மேட்டர் இல்லைன்னா மத்தவங்களை படிக்க ஆரம்பிங்க உங்களுக்குள்ளயே ஒரு நம்பிக்கை ஸ்ட்ராங்காயிடும்ன்னு எல்லாரும் அட்வைஸ் சொல்றாங்க - பள்ளிகூடத்து நினைப்பு ஊர் நினைப்பு அப்படின்னு ஏகப்பட்ட கொசுவர்த்தி சுத்துறது ரொம்ப ஜாலியா இருக்கும்!

சாதாரணமாவே யாரையாச்சும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்றதை ஒரு மாசம் ஃபாலோ பண்ணுனீங்கன்னா ஏகப்பட்ட காமெடி பதிவுகளை எழுதிடலாம் அந்தளவுக்கு நல்ல கான்பிடெண்ட் கொடுப்பாங்க நம்ம ஆளுங்க! ஒவ்வொரு நாளும் சொல்ற ஒவ்வொரு வாசகமும் இன்னொரு நாள் அலேக்கா பல்டி அடிச்சு ஆடுவாங்க! அதை பாக்குற நமக்கு பீறிட்டு வர்ற கோபத்தை அப்படியே கொண்டாந்து ப்ளாக்ல கொட்டலாம்.அப்படித்தான் நானும் செய்ய நினைச்சேன் ஆனா செய்யல!

கலவர பூமியில வேடிக்கை மட்டும் பார்ப்போம்ன்னு ஒன்லி வாட்சிங்க்! - மாசத்துக்கு ஒரு நாளாச்சும் போஸ்ட் கண்டிப்பா வெறித்தனமா வரும் அதை படிச்சு நம்ம ஆசையை தணிச்சுக்கிடலாம்! [அவுட் ஆப் சிலபஸ் போயிட்டேன் சாரி]

ப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன்! எதாச்சும் எழுதி என்னாடா இப்படி கேவலமா இருக்கேன்னு சொன்னா அட இது என்னோட டைரின்னு சொல்லி எஸ்ஸாகிடலாம்ன்னு ஒரு திட்டத்தோடதான்...!

ஆரம்ப கட்டத்தில பொழுது போகாத சூழலில் வேறு வழியே இல்லாத நிலையில் ப்ளாக் படிக்க துவங்கியதும் விடுமுறை நாட்களில் முழு இரவும் பதிவுகளை படித்து ஊர் ஞாபகங்களை மனசுக்குள் ரெப்ரஷ் செய்துகொண்டதும் தான் வழக்கமாய் அமைந்திருந்தது!

நாமும் எதேனும் கிறுக்க தொடங்கலாம் என்று ஆரம்பித்து எந்தவொரு எல்லைகோடும் வரைந்துகொள்ளாமல் நினைப்பதை எல்லாம் எழுதிட - தொடர்ந்துகொண்டிருக்கிறேன்! துறை சார்ந்த பதிவுகளினை எழுத வேண்டும் என்ற நெடு நாள் ஆசை இன்னமும் மனசுக்குள்ள போட்டு பூட்டி வைச்சிருக்கேன் என்னிக்க்கு வாய்ப்புக்கிடைக்கிறதோ தெரியாது அப்பொழுது இருக்கு அட்டாக்கு!

இந்த சில காலங்களில் பதிவுலகில் நான் பெற்ற நட்புக்கள் - ஹாய் சொல்வதிலிருந்து, ஏதேனும் இக்கட்டான சூழலில் தரும் அட்வைஸ்கள் வரை- என் மீதான அக்கறையினை நினைத்து மனம் மகிழ்ந்துபோகின்றேன்.நட்புகளின் எண்ணிக்கை கூடவும்,இருக்கும் நட்புக்கள் இனி வரும் காலங்களிலும் கூட வரவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

துன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்!

ஞாபகங்கள் தாலாட்டும்!

ஏலேலங்கடி - 16

கடவுள் இல்லைன்னு யார் சொன்னா? இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்!

மனு நீதி நாள்..?

ஒவ்வொரு திங்கள்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், மாதம்தோறும் ஒரு நாளில் ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் தனித்தனியே கிராமங்களுக்குச் சென்று மனுநீதி நாள் முகாம்களையும் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றனர்.


எத்தனை முகாம்கள், எத்தனை வேறு பெயர்களில் நடத்தினாலும் கூட்டம் கூடுவதற்கு, மனுக்கள் குவிவதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும். முதலாவது காரணம்- மக்களின் குறைகளை நம்மால் கேட்கத்தான் முடிகிறதே தவிர, தீர்க்க முடியவில்லை என்பது.

இரண்டாவது காரணம்- மக்களும் தங்களின் அடக்க முடியாத ஆசைகளுடன் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று முட்டி மோதுகின்றனர்.

பொதுமக்கள் தரப்பில் கேட்டால் முதல் காரணத்தை வழிமொழிவார்கள். அதிகாரிகள் தரப்பில் கேட்டால் இரண்டாவது காரணத்தை வழிமொழிவார்கள்.

இந்தக் காரணங்களில் வழியில் ஆய்வு செய்தால், எது சரி என்பதற்கான விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு சில அதிர்ச்சிகரமான உண்மைகள் நமக்குப் புலப்படும். முன்பைவிடவும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதையும்விட முக்கியமானது, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை என்பதுதான்.

பணிச்சுமை அதிகரிக்க அதிகரிக்க, மறைமுகமாக ஒரு வழியில் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்கும்ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி' வளர்ந்து விடுகிறது.

இதனாலேயே, ஒரு முறை போடப்படும் எந்தச் சாலையும், கட்டப்படும் சாக்கடையும், கட்டடங்களும் பல ஆண்டுகளுக்கும் பலன் தருபவையாக நீடித்து நிலைப்பதில்லை. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் வருவது தவிர்க்க முடியாததுதான்.


இதனாலேயே உடனடித் தீர்வு என்பதெல்லாம், ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே. இதுதான் வெளியே செய்தியாகப் பிரபலமாக்கப்படுகிறது.


நுட்பமான பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் செய்யாமல், குறை தீர்க்கும் கூட்டங்களை இன்னும் வெவ்வேறு வடிவங்களில் நடத்துவது, வண்ணமயமாக நடத்துவது எதுவும் நிரந்தரத் தீர்வைத் தந்துவிடாது.

ஏனென்றால், இவ்வாறாக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் 40 சத மனுக்கள் நிராகரிக்கப்படுபவை. எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள். எப்படித் தீர்வு கிட்டும்?

நன்றி - தினமணி

மேலும் வாசிக்க...

தீபாவளி

தீபாவளி பற்றிய என் கேள்விகளுக்கு பதிலளியுங்களேன் என்று நானானி அம்மா கூப்பிட்டிருந்தாங்க உடனே டக்குன்னு ஒடியாந்தாச்சு!

1) உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

சிறு குறிப்பு வரைக அப்படின்னு கொஸ்டீன் பேப்பர்ல பார்த்தாலே ஆஹா சிக்கிடுச்சுடா நம்ம கொஸ்டீனு ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அப்படின்னு பக்கம் பக்கமா பரீட்சை எழுதின காலம் சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு வந்து உக்கார்ந்துச்சு! (அதுவும் வரலாறு பரீட்சைன்னா அட்டகாசம் தான்!) என்னைப்பத்தி சிறுகுறிப்பா சொல்லணும்னா மயிலாடுதுறையில் வளர்ந்துகொண்டே படித்துக்கொண்டே ஊர் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருவழியா தோஹா வந்து சேர்ந்து சரியா 2 1/2 வருடம் முடிஞ்சுப்போச்சு! இணையம்,நட்புக்கள் & உறவுகள் தொடர்பில் போய்க்கிட்டிருக்கு வாழ்க்கை

2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம் ?

வீட்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்த தருணங்கள் தான் ஞாபகத்துக்கு வருது ! இப்ப குடும்பத்துல உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபொழுதில் ஒன்றாய் இணைந்து கொண்டாட விருப்பமாய் இருக்கிறது பணிச்சூழல் தடுக்கிறது!

3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?

தோஹா - கத்தாரில் இருக்கிறேன்!

4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள் ?

என்ன பெருசா இந்த நாட்ல/ஊர்ல போய் தீபாவளி கொண்டாடிடமுடியும்! சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது.! உறவுகளை பிரிந்து வந்திருந்தாலும் கூட இருக்கும் இடத்திலும் விழாக்காலத்தின் இனிய தருணங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையினை ஊட்டுகிறார்கள் இங்கு தீபாவளி கொண்டாடும் நட்புகள்!



5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
எப்பொழுதும் வாங்கி தைப்பதுதான் பழக்கம்! அதுவும் சிறுவயதில் ஒரு மாதத்திற்கு முன்பே டைலர் வீட்டிற்கு வந்து அளவெடுத்து சென்று விட்டு திரும்ப தைத்த துணிகளை கொண்டு வந்து தரும்போது - அதன் வாசம் பிடித்தப்படியே - வாங்கி வைத்துக்கொண்டு தீபாவளி கனவுகளில் மூழ்கிய நாட்கள் இப்பொழுது கொசுவர்த்தியாகிறது !

இந்த முறை ஊரிலிருந்து வரும்போதே தைத்துக்கொண்டுவந்து போட்டும் கொண்டாகிவிட்டது !

6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?

1ம்மில்ல!

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

இந்த முறை வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு உடன் வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொண்டதோடு முடிவுற்றது - அரட்டைகளிலும் மின்னஞ்சல்களிலும் - வேலை பளு காரணமாக சிறப்பாய் 1ம் செய்ய இயலவில்லை (அட! நம்புங்கப்பா பிசியோ பிசி!)

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?

ஊரிலிருந்து காலத்தில் 10 மணி வரையிலும் வெடிகள் வெடித்துவிட்டு,டிவியில் வந்து உக்கார்ந்துவிடுவேன்.- வெளியில் சுற்றுவது கிடையாது - தெருவில் வெடியை வைச்சுட்டு வீட்டுக்குள்ளே சென்று ஒளிந்துக்கொள்ளும் தைரியசாலிகள் மீது நம்பிக்கை வைத்து வெளியில் சுற்றுவது கிடையாது !

அதிக நிகழ்ச்சிகளை போட்டிப்போட்டுக்கொண்டு வழங்கும் டிவிக்களால் கண்டிப்பாக விசேஷ நாளின் மகிழ்ச்சி சற்று குறைந்துதான் போகிறது!

9) இந்தஇனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள் ? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?

உதவி செய்வேன்!

10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் லைத்தங்கள் ?

கயல்விழி முத்துலெஷ்மி - கண்டிப்பாக தீபாவளி சம்பந்தமாக சிறுமுயற்சி எதேனும் செய்திருப்பார்கள் அது தொடர்பில் பதிவு வரும் அதான் நான் முந்திக்கிட்டேன்

சந்தனமுல்லை - பப்புவோட இளம்பிராயத்தில் நொம்பத்தான் தலையை விட்டு டிஸ்டர்ப்பு செஞ்சாலும், என்னாமா நோட் பண்றாங்க...!( ஒரு டிரெயிலர் கூட கொடுக்கலாம் அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு - பப்பு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டு முடித்ததும் ஆச்சி சூப்பரா இருக்கு நீங்க செய்யாம இருந்ததாலதானே? - அவ்வ்வ்வ்வ்வ் )

ராமலக்ஷ்மி இவுங்ககிட்ட தீபாவளி பத்தி கேக்கலைன்னா எப்பூடி [கட்டாயம் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள் பத்தி, போட்டோக்களோட எதிர்பார்க்கிறேன் அக்கா.]

நிஜமா நல்லவன் - தீபாவளி கொண்டாடியது பத்தி சொல்றதை விட சின்ன வயசு கொசுவர்த்தி சுத்திவிடறதுக்குன்னே கூப்பிடறேன்!