கவியரசரின் பிறந்த நாளில்..!

Photo  Sharing and Video Hosting at Photobucket


உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதே சரியாக இருக்கக் கூடும் என்று சொல்லி விடுங்கள்.

உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.

வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள் ளுங்கள்.

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.

- கவியரசு கண்ணதாசன்
கவியரசரின் பிறந்த நாளில் -
ஜூன் 24 1927

அன்புள்ள அப்பாவுக்கு..!

எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை!

- யாத்ரீகன்



தொடர்புடைய பதிவு - அன்புள்ள அப்பாவுக்கு..!

ராவணன்


கொளுத்தியெடுக்கும் வெய்யில் காலத்தில் ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்விகள் பல பத்து முறைகள் எழுந்தடங்கினாலும் பார்த்துடலாம்ன்னு நட்பு கை கொடுக்க ராவணனின் திரைக்களம் -தியேட்டருக்குத்தாங்க - புகுந்தோம்!

ப்ளாக்யெல்லாம் வைச்சுருக்கோம்ல அப்படின்னு ஒரு நினைப்பு வந்துச்சு அதான்...!

*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*


Ø செய்திகளில் பேசப்பட்டது போலவே ராமாயணம் கதையின் கருவே ராவணன் – குரங்கு சேஷ்டை செய்யும் கார்த்திக் விபீஷணனாக மாறும் தம்பி கண்டிப்பாக நம்பவைத்துவிடுகிறது - ஹீரோவின் கேரக்டரினை விட வில்லன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏன் டைட்டில் வைச்சுருக்காங்கன்னு யோசிக்கவைச்சு பதிலும் சொல்லியிருக்காங்க! என்ன அதுக்குள்ள இண்டர்மிஷனா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு விறுவிறுப்பு

Ø சந்தோஷ் சிவனின் ஒளி ஓவியங்கள் - ஒரு டப்பா எஸ்.எல்.ஆர் கேமராவினை வைத்துக்கொண்டு அலைமோதிக்கொண்டிருக்கும் எனக்கெல்லாம் வியப்பினை தரவைக்கும்விதமான காட்சியமைப்புக்கள் ! ஒரு காட்சியில் ஐஸின் ஐஸ் ஹப்ப்படியோ சொக்கவைக்கிறது! கேரளத்தில் அவுட்டோர் லொக்கேஷன் செண்டிமெண்ட் மணி ரத்னத்திற்கு உண்டு என்பதை நிரூபிக்கும் அதிராம்பள்ளி!

Ø உசுரே போகுதே பாடல் ஒளி/ஒலிக்கதொடங்கும் காட்சிகளில் சற்றே மனதுக்கு நெருடலாய் ஆரம்பித்தாலும், மொத்தமாய் படம் முடியும் பொழுதினில் சாரி டூ திருவள்ளுவர் & அபிஷேக் பச்சன் ”பிறன் மனை பாராமை பேராண்மை ரூல்ஸெல்லாம் ஏத்துக்க முடியாம, ஐஸ்வர்யா ராய் பச்சனை மனதிலேற்றி அமர்த்திவிட்டது!



Ø பெருத்த பிரபு வீராவுக்கு அண்ணன் + அட்வைசராக கால்ஷீட் பிரச்சனையோ அல்லது காலதாமதமோ கண்டினியூட்டி சில இடங்களில் பிரபுவுக்கு தடுமாற்றம்

Ø மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் பார்க்க நினைத்துக்கொண்டிருக்கின்ற கேரக்டர் ரஞ்சிதா - ச்சே எக்ஸ்பெக்டேஷனெல்லாம் கிர்ர்ர்ர்ர்

Ø கந்தசாமி எஃபெக்ட் சவுண்ட் கொடுக்கும் மேனரிஷம் எப்படி மணி ரத்னம் அனுமதித்தார் - நிஜமாகவே விரும்பியிருப்பாரோ - ஆச்சர்யம்தான்!

Ø கட்டுமஸ்தான விக்ரம் கந்தசாமியில் விழுந்தவரை கண்டிப்பாக கரை சேர்க்கும்! ஹிந்தியில் ஐஸ்வர்யாவின் கணவராக நடிப்பதையும் பார்த்துவிடும் ஆவல் உண்டாகியிருக்கிறது!

Ø மிக எளிய உரையாடலினை வெளிப்படுத்தும் வசனங்களே! மனைவியினை சந்தேகப்படும் கணவனின் செயல் சாதுர்யமாக கையாளப்படுவதும்,கோபம் விட்டுபோகாமல் இருக்கவும், தீயவர்களிடத்தில் இரக்கம்/அன்பினை வெளிப்படுத்தாமல் இருக்கவும், இறைவனிடம் வேண்டும் கதாநாயகி வசனங்கள் - சுஹாசினி - மணி ரத்னம் கொடுத்து வைத்தவர் ரொம்ப அதிகம் பேசமாட்டாங்க போல அவுரு தங்கமணியும்..!

Ø கோடு போட்ட,கள்வரே கள்வரே,கடா கடா காட்சியமைப்புக்களிலும் தூள்! ரொம்ப சிலாகித்து பேசப்பட்ட உசுரே உசுரே கொஞ்சம் நிமிடங்களில், மயங்கி கிடக்கும் ஐஸ்வர்யாவினை மனதில் இருத்திவிட்டு செல்கிறது!

Ø ஹிஸ்டரியின் ஒன் லைன் தீம் வைத்துக்கொண்டு கரெக்டர்களையும் ஒத்துவருவதுபோலவே உருவாக்கிவிட்டு, அரசியல் இன்ன பிற ஹிஸ்டோரிக்கல் பிரச்சனைகள் எதுவுமின்றி வில்லனை ஹீரோவாக்கும் விசயத்தில் மணி ரத்னம் ஜெயித்திருக்கிறார்


*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*&*

கடைசியா தோணுச்சு:- ஒரே நேரத்தில ராவணன் ஹிந்தி தமிழ்ல ரீலிசானா மல்லு சேட்டன்மார் ஹிந்திக்குத்தான் போறாங்க செம்மொழி மாநாட்டுல சொல்லி இதுக்கு எதுனா தடை போடணும்

டிஸ்கி டெரரிசம் :- இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று அப்படின்னு பாடுன தேவன் மேல டெரர் கோபம் வர்ற அளவுக்கு உங்களை ஒரு பெண் சஞ்சலப்படுத்தினால் நீங்களும் ராவணனே!