மருத்துவ மாணவர்கள் போராட்டம்?


பெரிய திரையின் பின்னால் சுற்றி,

சின்ன திரையில் எண்ணங்களை சிதறவிட்டு,

செமஸ்டர் அரக்கனின் பிடியில் சிக்கி,

பருவ கோளாறுகளில் பங்கேற்று,

இளம்வயதில் இளமை கொண்டாட்டங்களே,

வாழ்க்கையாக்கி கொண்டு,

பல

வேடிக்கை மாணவர்களை போல - நாம்

வீழ்வோ மென்று நினைத் தீரோ...!?


போராட்டம் வெற்றி பெற

வாழ்த்துக்களுடன்....!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அன்பிற்குஇனியவன்.....
மருத்துவ மாணவர்களின் போராட்டத்திற்கு தாங்கள்வாழ்த்துக்கூறியதற்குமிகவும் மிகவும் நன்றி.தங்களின் எதிர்காலமே கேள்விகுறியாகமல் போராடிவருகிறார்கள்.ஆனால் பத்ரிக்கைகளும்,ஊடகங்களும் கிராமப்புற சேவையை எதிர்த்துபோராட்டம்
நடத்துவதாக சித்தரிக்கின்றன.ஆனால் இந்த போராட்டம் கிராமாப்புறசேவையை எதிர்த்து அல்ல‍,5 1/2 ஆண்டிலிருந்து 6 1/2 ஆண்டாக உயர்த்துவதை எதிர்த்துதான் நடக்கிறது.கல்லூரி படிப்புக‌ளிலேயே
அதிக‌வ‌ருட‌ங்க‌ள் எடுதுக்கொள்வ‌து ம‌ருத்துவ‌ப‌டிப்புதான்.இதில் முத‌ல் வ‌ருட‌த்தில் ஏதேனும் ஒரு பாட‌த்தில்தேர்ச்சி கிடைக்காம‌ல்போனால் இன்னும் ஒருவ‌ருட‌ம் த‌ள்ளிப்போகும்.இப்ப‌டி தேர்ச்சி கிடைக்காம‌ல்
போவ‌தில் 90%விழுக்காடு கிராமாமப்புற மாணவ‌ர்க‌ள்தான்.இவ‌ர்க‌ள் +2வ‌ரையிலும் எல்லா பாட‌ங்க‌ளையும் த‌மிழில் ப‌டித்து வ‌ருகிறார்க‌ள்.
மருத்துவ‌ பாட‌ங்க‌ள் எல்லாம் ஆங்கில‌த்தில் ப‌டிக்க‌வேண்டியுள்ளது.
என‌வேஇந்த‌மொழி மாற்றத்தால்மிக‌வும் பாதிக்க‌ப்ப‌டுப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள்தான்.இப்ப‌டி த‌ள்ளிப்போனால் இவ‌ர்க‌ள் CARRIED OVER BADGE என்று பிரிக்க‌ப்ப‌ட்டு 2ம் ஆண்டு மாணவர்க‌ளுட‌ன் சேர்ந்து தேர்வு எழுத‌முடியாது.அடுத்து வ‌ரும் முத‌லாம் ஆண்டு மாணவ‌ர்க‌ளுட‌ன்தான் தேர்வு க‌ளைஎழுத‌முடியும்.இப்ப‌டியாக‌ இதில் ஒரு ஆண்டு கூடிவிடும்.இதில் இவ‌ர்க‌ள் இன்னும் ஒரு வ‌ருட‌ம் கூட்டினால் 7 1/2 ஆண்டுக‌ள‌கும்.அத‌ன்பிறகு PG ப்டிக்க‌ இன்னும் ஒரு 3 ஆண்டுக‌ள். ஆக‌ இவ‌ர்க‌ள் ஒரு முழு ம‌ருத்துவ‌ராக குறைந்த‌து 10 ஆண்டுக‌ள் தேவைப்ப‌டும்.ம‌ருத்துவ‌ப்டிப்பிற்கு ஆகும்செல‌வு அதிக‌ம்.10 ஆண்டுக‌ள்
த‌ன் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைப்ப‌து என்ப‌து ப‌ணம் ப‌டைத்த‌வ‌ர்க‌ளைத்தவிர
வேரு யாரும் ப‌டிக்க‌வைக்க‌ முடியாது.இதில் பாதிக்க‌ப்ப‌டுவ‌து கிராமப்புற
மாணவ‌ர்க‌ளும் ,பெண்க‌ளும்தான்.
மாணவர்க‌ள் 51/2 ஆண்டு முடித்த‌வுட‌னே ,கிராம‌ங் க‌ளில் ப‌ணி
புரிய‌ த‌யாராக இருக்கிறார்க‌ள்.நிர‌ந்த‌ர‌மாக‌ த‌ங்க‌ளை ப‌ணிய‌ம‌ர்த்த‌ வேண்டுகிறார்க‌ள்.நிர‌ந்த‌ர‌மாக‌ ப‌ணிய‌ம‌ர்த்தினால் அதிக‌ ஊதிய‌ம் ,பிறச்லுகைக‌ள்
தர‌வேண்டும்.என‌வேப‌யிர்ச்சி மாணவ‌ர்க‌ளை வைத்தே கிராம‌க்க‌ளுக்கு வைத்திய‌ம் செய்ய‌ வேண்டும் என்கிறார்.கிராமத்தின‌ர்க‌ள் எல்லாம் 3ந் தர‌ குடி ம‌க்க‌ளா?கிராமதின‌ர்க‌ளுக்கு அனுப‌வ‌ம் மிகுந்த மருத்துவர்கள் தேவையில்லையா?
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ,மருத்துவம் படிப்பதற்கு பெண்களும்,
கிராமப்புற மற்றும் ந்டுத்தர குடும்பதைச்சேர்ந்தவர்களும் வரமாட்டார்கள்.
பெரிய அளவில் மருதுவமனைகள் நடத்திவரும் மருத்துவர்களின் பிள்ளைகள்மட்டுமே படிப்பார்கள்.சமூகநீதிவேண்டும் என்று வாய்கிழியகத்துபவர்கள் இதனால் சமூகநீதியை குழிதோண்டிப்புதைக்கிறார்கள்.
அன்புமனி அவ‌ர்க‌ள் இன்னும் ஒருப‌டி மேலே போய் த‌மிழ் நாட்டு மாணவ‌ர்க‌ளை ,ஒரிஸ்ஸா,பீஹார்,ராஜஸ்தான்போன்ற மாநில‌ங்க‌ளுக்கு அனுப்புவ‌தாக‌க்கூறுகிறார்.அந்த‌ மாநில‌ ம‌க்க‌ளின் மொழி தெரியாமல் எப்ப‌டி
ப‌ணியாற்ற முடியும்?மேலும் த‌ற்போது ம‌ருத்துவ‌ர்க‌ளைவிட‌ ,த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌ம் ப‌டிக்கும் மாணவ‌ர்க‌ள் குறைந்த‌ கால‌த்தில் அதிக‌ம் சம்பாதிக்கிறார்க‌ள்.என‌வே,இந்நிலை நீடித்தால் பெரும்பாலான மாணவ‌ர்க‌ள்
ம‌ருத்துவ‌ துறையைத்தேர்ந்தெடுக்க‌மாட்டார்க‌ள்.

said...

//CARRIED OVER BADGE//

Carried over Batch
----

http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post_4082.html
Already told few points regarding the Compulsary Service here
http://wethepeopleindia.blogspot.com/2007/10/blog-post.html
Few other related points at
http://thiagu1973.blogspot.com/2007/09/blog-post_3557.html

//:: ஒரு ஆண்டு கிராமப் பணிக்கு எதிர்ப்பு :://
முற்றிலும் தவறான தகவல். எதிர்ப்பு "கிராமப்"பணிக்கு அல்ல. "கட்டாய" பணிக்கு. (இத்திட்டத்தில் 4 மாதம் மட்டும் தான் கட்டாய "கிராமப்"பணி. மீதி 8 மாதங்களும் "நகர"பணி தான். )அதன் மூலம் நிரந்திர மருத்துவர் பணியிடம் அழிக்கப்படுவதை எதிர்த்து.

//மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.//
கண்டிப்பாக ஒத்துக்கொள்கிறேன். அப்படிப்பட்ட உயிர் காக்கும் பணியில் தற்பொழுது படித்து முடித்து TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடித்த ஒரு அனுபவமிக்க மருத்துவர் மூன்று ஆண்டுகள் கிராமப்புறத்தில் பணிபுரிய வேண்டுமா, அல்லது கத்துக்குட்டி மருத்துவர்கள் வெறும் 4 மாதம் மட்டும் பணிபுரிய வேண்டுமா ???

//யாருமே கிராமத்துக்கு போய் மருத்துவம் பார்க்க விரும்பலனா யார் அவங்க உயிர காப்பாத்தரது? அவங்க அப்படி என்னங்கய்யா பாவம் பண்ணாங்க?//
முற்றிலும் தவறான கருத்து. கிராமப்புறத்தில் வேலை செய்ய மருத்துவர்கள் தயாராக உள்ளார்கள்.
There were 5500 application for 300 posts in Primary health Centres (in Tamil Nadu).....

The guys who are in waiting list are coming every day to DPH Office and asking for appointment orders..... Do you think that doctors are not willing...

So the fact that there are no doctors ready is totally false (as far as Tamil Nadu is concerned)....

If That is a regular post with a pay of Rs 18000 per month, I am ready to show you doctors to fill in all the vacancies.

There are at present more than 500 doctors in Waiting List. If an appointment order is given, they will join (pay Rs 18,000 per month)

But what is the justification in NOT GIVING APPOINTMENT to the person ready to work, but abolishing that post and making it filled by different persons every 4 months for a mere Rs 8000
----------
கீழ்க் கண்டவை குறித்து உங்கள் கருத்து என்ன

1. கிராமப்புறங்களில் ஒரு மருத்துவர் Induction Training, Foundation Training, Management Training, RCH Training, Neonatal Training எல்லாம் முடிதது மூன்று ஆண்டுகள் பணி புரிய வேண்டுமா, அல்லது அதற்கு பதில் ஒரு பயிற்சி மருத்துவர் 4 மாதம் மட்டும் பணி புரிய வேண்டுமா

2. TNPSC Waiting Listல் சுமார் 1000 மருத்துவர்கள் அரசு வேலைக்கு காத்திருக்கும் போது அவர்களுக்கு பயிற்சி அளித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தாமல் அந்த பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் மாற்றுவதை ஆதரிக்கிறீர்களா ??

3. ஒரு கிராமத்திற்கு 3 ஆண்டுகள் ஒரு மருத்துவர் பணிபுரிய வேண்டுமா, அல்லது ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒவ்வொரு (வேறுவேறு) மருத்துவர் பணிபுரிய வேண்டுமா ??

----------------
மருத்துவர்களின் பற்றாக்குறை என்பது தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரு விஷயமே கிடையாது.

அரசு பணியில் சேர்ந்து கிராமப் புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்ய "முதல் தலைமுறை" மருத்துவர்கள் ஆர்வமாகவே உள்ளார்கள்.

(First Generation Doctor -> one whose parents are not doctors)
-------------

said...

மருத்துவம் என்பது மக்களின் உயிர்காக்கும் சேவை யார் ஒருவர் சேவை மனப்பான்மையுடன் பனியாற்ற தயாராக உள்ளாரோ அவரே மருத்துவராக பனியாற்ற தகுதியானவர் பணமே பிரதானமாக கருதுபவர்களும் பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் வருபவர்களும் தயவு செய்து வெறு படிப்பை படிக்கலாம் பணம் சம்பாதிக்க எவளவோ படிப்புகள் உள்ளன பணத்தாசை பிடித்த ஒரு டாக்ட்டரால் எப்படி நேர்மையாக பனியாற்றமுடியும் பணத்திற்க்காக அவர் எதையும் செய்யத்தயார் ஆவார் அதனால் நோயாலியின் உஇருக்கு ஆபத்துதான் நேரும் அரசியல் கட்ச்சிகளை பற்றி கவலை வேண்டாம் அவர்கள் செம்மறி ஆட்டுக்கூட்டம் எதையும் யோசிப்பது இல்லை ஒருவர் எதிர்த்தால் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக எதிர்ப்பார்கள் அப்துகலாமே கூறியுள்ளார் மருதுவ மானவர்கள் கிராமபுரங்களில் கட்டாயம் 50 பேருக்காவது சிகிச்சை அளிக்கவேண்டும் என்று கூறி யுள்ளார் நீங்கள் அப்துல் கலாம் கூறுவது தவறு என்றால் உங்களை நான் எப்படி நினைப்பது என்று தெறியாது


இதில் பயிர்ச்சி மானவர் எக்ஸ்பீரியன்ஸ் மானவர் என்றெல்லாம் பிரிக்கமுடியாது ஒருவன் படிக்கும் போதே தெளிவுற்றிருக்கவேண்டும் அவன் தான் மருத்துவனாக இருக்கமுடியும் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தால் தான் நல்லா மருத்துவம் பார்க்கமுடியும்முனா அதுக்கு MBBS படிக்காமலே எக்ஸ்பீரியன்ஸோடு மருத்துவராக பனியாற்றலாமே அப்படி யென்றால் ஒரு மெடிகல்ஸ்ல வேலபாக்குறவன்கூட மருத்துவராகலாமே புதிதாக அனுகுபவனால் தான் ஒருவேலை அலட்ச்சியம் இன்றி சீராக செய்யமுடியும் பழகிப்போனவர் மெத்தனப்போக்குடன் தான் வேலைசெய்வார் இதனையும் கருத்தில் கொள்ளுங்கள் சமூகசேவை மனப்பான்மை உள்ளவர்தான் சிறந்த மருத்துவராக நோயாளி மீது அக்கறை உள்ளவராக இருக்கமுடியும்