சஷ்டி ஸ்பெஷல் - சித்தனாதன் விபூதி

அருத்தவமானது நீறு அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு;
பொருத்தமாவது நீறு புண்ணியம் அளிப்பது நீறு;

என்று திருஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகத்தில் புகழப்பெற்ற திருநீறு - துண்ணுறு (மரூஉ)- விபூதி யாக அழைக்கப்படும் அந்த வெள்ளை நிற பொருளுக்கு பெரும் மகிமை அல்லது மணம் பரப்ப ஆரம்பித்தது இந்த பழநி சித்தனாதன் நிறுவன தயாரிப்பில்தான் அதிகம் என்று கூட கூறலாம்!
பெரும்பாலும் கோவில்களில் அவரவர்க்ள் தம்மால் இயன்ற முறையில் விபூதிகளை தயாரித்து பிரசாதமாக விநியோகித்து வந்த சுழலில்,பிராண்டட் பிரபலமானது பழனி சித்தனாதன் தயாரிப்பு விபூதிதான்!


பழனிக்கு சென்று மொட்டை போட மறந்தாலும் மறப்பார்களே ஒழிய, அடிவாரத்து கடையில் விபூதி கிலோ கணக்கில் வாங்க எந்த பக்தருமே தவறுவது கிடையாது! அந்தளவுக்கு தெய்வீக மணத்துடன் விபூதியின் அடையாளமாகியது பழனி சித்தனாதன் வாசனை விபூதி! அது போலவே பழனி போய் வந்தேன் என்று யாரிடமாவது கூறினால அவர்களின் முதல் கேள்வி சித்தனாதன் விபூதி வாங்கிவந்தாயா? என்பதுதான்!

நல்ல பேரும் புகழும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெற்று விபூதி விற்பனையில் முன்ணணியில் இருந்துவருகிறது சித்தனாதன் விபூதி.

முருகன் புகழ்பாடும் சஷ்டி திருநாளில்,

விபூதி அணிவோம்! முருகன் தாள் பணிவோம்..!!!

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல விளம்பரம். பழனி சென்றவர்கள் விபூதி வாங்காமல் வந்ததே இல்லை. உண்மை