வருகிறேன்! என்று சொன்ன அந்த நாளினை - நேரத்தினை - நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்!
போகிறேன் என்று சொன்ன அந்த இரவு வேலையில் அதுவும் மஸ்கட் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் Departureல் கண்ணீருடன் விடைகொடுக்கும் நட்புக்களை அக்கம்பக்கம் வித்தியாசமாக பார்ப்பது நிச்சயம் புதிதான ஒன்றுதான்! ஊரைவிட்டு வந்து பல மாதங்கள் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டோ படாமல் பணி புரிந்து ஊர் செல்லும் நாளில் முழு மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து Departurக்குள் புகும் பயணிகளுக்கு மத்தியில் நா தழுதழுக்க கண்ணீருடன் தற்காலிகமாய் விடைப்பெற்ற அந்த நாளினை நானும் என் நண்பர்களும் மறக்க இயலாத ஒரு நாள்! இத்தனைக்கும் நண்பர்கள் செண்டிமெண்ட்களில் சிக்கி தவிப்பவர்கள் அன்று! எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களும் கூட!
இருந்த நான்கு நாட்களில் பயணித்த தூரங்கள் அதிகம் பார்த்த இடங்களை விட நண்பர்களோடு மகிழ்ச்சி கொண்டு உறவாடிய நேரங்கள் அதிகம்! நண்பர்க்ள் கூடினால் ஒன்று கூடும் கேலிகளும் கிண்டல்களும் சீண்டல்களும் என இனிதே கழிந்த நாட்களை என நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன் இன்னும் சில காலங்களுக்கு நினைத்து நினைத்து மகிழ,சோகங்களுக்கும் தோல்விகளுக்கும் நிம்மதியின்மை அடையும் நேரங்களுக்கும், முற்றுபெறாமல் தொடரும் பயங்களுக்கும்,மனதை வருத்தும் எண்ணங்கள் என அனைத்திற்கும் அருமருந்தாய் அமையும் !
பிரிவு கொடியதுதான் - நட்புகளிடத்திலிருந்து - மனதுக்கு பிடித்த மனிதர்களிடத்திலிருந்து விலகி இருப்பது!
போகிறேன் என்று சொன்ன அந்த இரவு வேலையில் அதுவும் மஸ்கட் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் Departureல் கண்ணீருடன் விடைகொடுக்கும் நட்புக்களை அக்கம்பக்கம் வித்தியாசமாக பார்ப்பது நிச்சயம் புதிதான ஒன்றுதான்! ஊரைவிட்டு வந்து பல மாதங்கள் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டோ படாமல் பணி புரிந்து ஊர் செல்லும் நாளில் முழு மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து Departurக்குள் புகும் பயணிகளுக்கு மத்தியில் நா தழுதழுக்க கண்ணீருடன் தற்காலிகமாய் விடைப்பெற்ற அந்த நாளினை நானும் என் நண்பர்களும் மறக்க இயலாத ஒரு நாள்! இத்தனைக்கும் நண்பர்கள் செண்டிமெண்ட்களில் சிக்கி தவிப்பவர்கள் அன்று! எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களும் கூட!


இருந்த நான்கு நாட்களில் பயணித்த தூரங்கள் அதிகம் பார்த்த இடங்களை விட நண்பர்களோடு மகிழ்ச்சி கொண்டு உறவாடிய நேரங்கள் அதிகம்! நண்பர்க்ள் கூடினால் ஒன்று கூடும் கேலிகளும் கிண்டல்களும் சீண்டல்களும் என இனிதே கழிந்த நாட்களை என நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன் இன்னும் சில காலங்களுக்கு நினைத்து நினைத்து மகிழ,சோகங்களுக்கும் தோல்விகளுக்கும் நிம்மதியின்மை அடையும் நேரங்களுக்கும், முற்றுபெறாமல் தொடரும் பயங்களுக்கும்,மனதை வருத்தும் எண்ணங்கள் என அனைத்திற்கும் அருமருந்தாய் அமையும் !
பிரிவு கொடியதுதான் - நட்புகளிடத்திலிருந்து - மனதுக்கு பிடித்த மனிதர்களிடத்திலிருந்து விலகி இருப்பது!

