Showing posts with label பாடம். Show all posts
Showing posts with label பாடம். Show all posts

ஜி ஃபார் GIS


காலேஜ்ல படிச்சுக்கிட்டே இருக்கற காலகட்டத்தில ஜாப் சர்ச் பண்ணின ஆளுங்களா இருந்தா கண்டிப்பா இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ் இருந்திருக்கும் - ஆப்ஷன் நிறையா இருக்கேன்னு நினைச்சு சந்தோஷம் ஒரு பக்கம் - டெஸ்க்ரிப்ஷன்ங்கற பேர்ல வேலைக்கு சம்பந்தமே இல்லாம நமக்கு காலேஜ்ல கத்துக்க வாய்ப்பில்லாத நிறைய நிறைய விசயங்களை ரெக்கொயர்மெண்டா <போ>கேட்டிருப்பாங்க அதை நினைச்சு துக்கம் கண்ணை அடைச்சு உலகமே இருண்ட மாதிரி ஆகிடும் !

லைட்டா படிச்சு முடிச்சுட்டு ஒடியாந்துட்டா படிப்புக்கேத்த மாதிரி கை பை நிறையிற அளவுக்கு ஒரு வேலை கெடைச்சுப்புடும் சீக்கிரமே ஊர்ல பெரபலமாகிடலாம்ன்னு போட்ட தப்பு கணக்குகள் அப்புறம் அருணாச்சலம் ரஜினி கணக்கா ஃபிகர் வீட்டு முன்னாடி பத்து காரை நிப்பாட்டலாம்னு போட்ட கணக்கெல்லாம் அப்படியே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சரிஞ்சுக்கிட்டு வரும்! அந்த டைம்ல வரும் பாருங்க ஒரு நினைப்பு - அட அவுங்க கேட்டிருக்கிறதை படிச்சு கத்துக்கிட்டா போச்சுன்னு - செம டெரர்!

அப்படி நான் பார்த்த சில சப்ஜெக்ட்ஸ்ல்லாம் இன்னும் கூட எனக்கு ஒரு கானல் நீராகத்தான் ஓடிக்கிட்டிருக்கு!

அப்படி ஒரு ஆறு அளவுக்கு ஓடிக்கிட்டிருக்கிற கானல் நீர்தான் ஜிஸ்ஸு! அட GISங்க [Geographic Information Systems ] அதுல தொபுக்கடீர்ன்னு குதிச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டு, ஜிஸ் இன்ஜினியராகணும்னு,சூப்பரா ஒரு ஜாப்ல போய் குந்திடணும்ன்னு, சுக்கு நீர் எல்லாம் மொடக்கு மொடக்குன்னு குடிஞ்சு உடம்பையும் மனசையும் கிளியர்பண்ணிக்கிட்டு எங்க போய் குதிக்கலாம்ன்னு - படிக்கலாம்ன்னு - இடம் தேடறப்பத்தான் நம்ம ஊர் உண்மை எல்லாம் கரிக்க ஆரம்பிச்சுது! பெஸ்டா பண்ணனும்ன்னா 1 ஹைதராபாத் போங்க இல்லாட்டி பம்பாய்க்கு ஓடிப்போய்டுங்கன்னு எதோ ஊரை விட்டு ஓடறதுக்கான ப்ளானெல்லாம் போட்டுக்கொடுத்தாரு ப்ரெண்ட் ஒருத்தரு!

அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு கிணற்றுதவளை மூளையோட படித்துறை பாண்டி கணக்கா, யெம்மா தைரியமா இரும்மா உம்புள்ள இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கம்யூட்டரு இன்ஜினு ஓட்டி காட்டுறேன்மா ரேஞ்சுக்கு சொல்லிப்புட்டு லோக்கலயே ரெண்டு மூணு பொட்டியில தட்டுற விசயத்தை கத்துக்கிட்டு ஒருவழியா வந்து சேர்ந்தாச்சு! ஆனாலும் மனசுக்குள்ள, ஒரு தடவை ஆசைப்பட்டுட்டா பிறகு காலத்துக்கும் - கிடைக்காட்டியும் கூட - ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும்! அது மாதிரிதான் ஜிஸ்!ஏன்னா இன்னிக்கு உலக ஜிஸ் [GIS] நாள் !

இன்ஜினியரிங்க் படிப்புலயே செம கடியான சப்ஜெக்ட்டு சொல்லணும்ன்னா ஜியோலஜி தான் பெரும்பான்மை ஆதரவோட தனிச்சு நிக்கிறது அதுக்கு பிறகு எட்டிப்பார்ப்பது கணக்கு!

GIS பத்தி இண்ட்ரோ லெவல்ல சொல்லணும்னா சாட்டிலைட்கள் மூலம் பெறப்படுகின்ற டிஜிட்டல் இமேஜ்களை கொண்டு புவியில் ஆராய்ச்சிகளினை மேற்கொள்ளவும்,இயற்கை சீரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும்,இயற்கை வளங்களினை பற்றிய தகவல்களை பெறவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

GIS [Geographic Information Systems ] அடிப்படையா ஜியோலஜி நிறைய தெரிஞ்சிருக்கணும்! புவியியலை அடிப்படையாக கொண்ட எந்த துறைக்குமே இப்ப மவுசு ரொம்ப சாஸ்தி அந்த ரீதியில GIS [Geographic Information Systems ] செம ஸ்பீடா முன்னேறிக்க்கிட்டிருக்கு! புதிது புதிதாய் சாப்ட்வேர்களின் அறிமுகம் மட்டுமின்றி நிலத்தினை -உலகினை - பற்றிய பல புதிய அறிவியல் தகவல்களும்,ஆராய்ச்சிக்களும் நடைப்பெற உதவிபுரிகின்றன.

GIS பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்கிடணும்ன்னு ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த பக்கம் போய் பாருங்களேன்...!


GIS விக்கிபீடியா -
Guide to GIS

நார்த்தங்காய் ஊறுகாய்!


”பேரைக்கேட்டாலே நாக்குல எச்சி ஊறுதுல்ல” அப்படின்னு டைட்டில் போட்டு டெரர் காமிக்கலாம்தான்..! ஆனா நிறைய பேருக்கு இந்த நார்த்தங்காய் ஊறுகாய் பத்தின செய்திகள் தெரியாத அளவுக்கு இந்த ஊறுகாய் நினைவிலிருந்து, உணவிலிருந்தும் காணாமலே போய்டுச்சுல்ல :-(

வீடுகளில் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் பிரியாவும் ஆச்சியும் அடுக்களையிலோ அல்லது பிரிட்ஜுக்குள்ளோ சாப்பாட்டுக்கு தொட்டுக்க ரெடியா இருக்காங்க அப்புறம் இந்த மாதிரி விசயங்களை எல்லாம் யார் போய் தலையிட்டு மாட்டிக்கிடறது நோ ரிஸ்க்! (அட ரஸ்க்கு கூட இப்ப ரிஸ்க் எடுத்து போய் வாங்கினாத்தான் டேஸ்டா கிடைக்குது இல்லேன்னா என்னமோ இனிப்புமில்லா உப்புமில்லாத ஒரு வஸ்துவா இருக்கு!)

நேத்து மிளகாய் கிள்ளி சாம்பார்ரை பார்த்ததுமே எனக்கு டக்குன்னு ஞாபகத்துக்கு வந்தது இந்த நார்த்தங்காய் ஊறுகாய்தான்!

எங்கயாச்சும் ஊருக்கு போய்ட்டு வந்தாலோ அல்லது இரவு நேரங்களில் சாதம் சமைக்க வேண்டியிருந்தாலோ இந்த மெனுதான் எங்க வீட்லயும் பாசிப்பருப்பு அப்புறம் வெங்காயம்,தக்காளி,மிளகாய் மற்றும் இன்ன பிற ஐட்டங்களை போட்டு கொதிக்கவிடும்போதே வாசனை பசியை கிளப்பிவிட்டுடும் பிறகு அதுல வெங்காய வடகத்தை தாளிச்சு கொண்டும்போது கையில தட்டோட “அம்மா பசிக்குது அம்மா பசிக்குது” அப்படின்னு டைமிங்கல ரைமிங்கா பாடிக்கிட்டே வந்து அடுப்பாங்கரையில உக்காந்துட்டா வேற வழியே இல்ல சுடச்சுட அப்படியே சாதத்தையும் சாம்பாரையும் ஊற்றி ஆகவேண்டிய கட்டாயம் பாட்டிக்கு!

வடகம் சுட ஆயத்தபடும் வேளையில் அவ்ளோ நேரமெல்லாம் தாங்காது என்ற அலறலில் வரும் ஐட்டம்தான் நார்த்தங்காய் ஊறுகாய் உப்பு போட்டு நல்லா காஞ்சு இருக்கும் அதை தின்னவே பிரம்மபிரயத்தனபடவேண்டியிருக்கும் ஆனாலும் சுடுசோறு சாம்பார் + ஊறுகாய் வைச்சுக்கிட்டு தின்னா..!

இந்த நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப சிக்கனமானதொரு தயாரிப்புன்னு சொல்லலாம் பெரும்பாலான வீடுகளில் அப்போ எலுமிச்சை மரம் நார்த்தமரம் எல்லாம் இருக்கும் அதுல இருந்து பறிச்சுக்கிட்டு வந்து அழகா அறுத்து (அது ஒரு விதமான டிசைனா அறுத்து வைப்பாங்க) உப்பு மற்றும் இன்னும் எதோ - பார்முலா மறந்துப்போச்சு யாராச்சும் சொல்லுங்கப்பா - போட்டு ஊறவைப்பாங்க!

கொஞ்ச நாள் பிறகு அதை எடுத்து வெயிலில் காயப்போட்டால் ஊறுகாய் ரெடி! அதை காயப்போடுவதற்காகவே ஒரு மாதிரி ரோல் ஆக வெட்டிவைப்பாங்க! வெய்யிலில் தொங்கும்போதே அதை எடுத்து திங்க தோணும், ஆனா சைட் டிஷ் - சாதம் - இல்லாம அது நல்லா இருக்காது!

ம் ம் வாய்ப்பு இருக்கறவங்க தின்னு பாருங்க, இல்லாதவங்க வழக்கம்போல ச்சும்மா படத்தை பார்த்துட்டு போகாம, வீட்ல செஞ்சு தின்னு பாருங்க! சிம்பிள்தான்!

ஆட்டோ கேட்


கம்யூட்டர் அப்படின்னா என்னான்னு தெரியாத காலகட்டத்தில ஆட்டோகேட் படிங்கன்னு அட்வைஸ் மட்டும் கேட்டு தலையாட்டிக்கிட்டிருந்த மாதத்தின் ஏதோ ஒரு சுபயோக நன்னாளில் மயிலாடுதுறை பாரத் கம்யூட்டர்ஸின் படியேறி (ஆமாங்க மூணாவது மாடி) சேர்ந்த படிப்பு ஆட்டோகேட் கூட படிக்கிற மக்கள்ஸ் - ஒன்லி ஆண்கள் :( - கோபாலு பாக்ஸ்புரோ பேசிக்கு விண்டோஸு அப்படின்னு ஏதேதோ டாஸ் புராம்ப்ட்ல செஞ்சுக்கிட்டிருக்கா நாங்களும் (ரெண்டு பேர்தான்) ஆரம்பிச்சோம் டாஸ் ஆப்ரேடிங்க் சிஸ்டம்ல ஆட்டோகேட் ரீலிஸ் 11 login கொடுத்து எதோ ஒரு பாஸ் வேர்டு கொடுக்கணும் அப்புறம் கட்டாயம் logout செஞ்சுட்டு வரணும் இதுதான் பர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்ஷன்!

இருந்த 7 சிஸ்டத்தில ஒரே ஒரு சிஸ்டம் மட்டும்தான் விண்டோஸ் 95இயங்குறது மத்ததெல்லாம் டாஸ்! ஆட்டோகேட்ல படம் போடறதா இருந்தாஒன்லி இடது வலது மேலும் கீழும் அப்படின்னு கீ போர்டு தான் பயன்படுத்தணும்! (மவுஸ்ன்னா என்னான்னே தெரியாத வகையில படிச்சு முடிச்சு பழகஆரம்பிக்கும்போதுதான் அதனோட மகத்துவம் புரிஞ்சுது !)

3 மாச கோர்ஸ்ன்னுதான் ஜாயின் பண்ணுனோம் என்னவோ தெரியல பாடம்சொல்லி தர்றவருக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையோ அல்லதுஇவுனுங்களை அப்படியே வுட்டுடப்புடாதுன்னு வாத்தியார் முடிவு செஞ்சாரேதெரியல ஒரு வருசத்துக்கு அரை மாசம் குறைச்ச அந்த அளவுக்கு ரொம்பவேபடிச்சோம்!

பாடமாக சொல்லி கொடுத்த விசயங்கள் ஆட்டோகேட் ரீலிஸ் 12 ஆகஇருந்தாலும் பயிற்சி பெற்றது ரீலிஸ் 11 (புக்கு கிடைச்ச அளவுக்கு சாப்ட்வேர்கிடைக்கறது அப்போ அவ்ளோ ஈசியில்ல இப்ப சர்வசாதாரண விசயமாகிடுச்சு - ஆச்சர்யப்படக்கூடிய வகைகளில் ஒரிஜினல் ரீலிஸ் ஆனாதும் கூடவே காப்பிஅடிச்சு அனுப்பிடறாங்க! (நானெல்லாம் கம்பெனி வாங்கி வைச்சிருக்கிறதாம்லயூஸ் பண்றோம்!) புத்தகங்களும் கூட இணையத்தில் நிறையவே கிடைக்கின்றஎன்ன ஒன்று பொறுமை அதிகம் தேவை படித்து பயில்வதற்கு....!

இதே டைம்ல ஒரிஜினல் வைச்சுக்கிட்டு சொல்லிக்கொடுக்கிற கம்பெனிக்காரங்க (CADD CENTER) காலேஜ் பாலிடெக்னிக்குன்னு கடை பரப்ப ஆரம்பிச்சாங்க! எங்கபாலிடெக்னிக்கலயும் வந்து ஒரு நாள் டெமோவெல்லாம் பண்ணினாங்க, ஏதோகிளாஸ் கட் ஆனா சரின்னு நினைச்சு போய் உக்காந்து படம்பார்த்துக்கிட்டிருந்தேன், கம்யூட்டர்ல எல்லாமே புதுசாவே தெரியுது ஏன்னா அதுரீலிஸ் 12 புது வர்ஷன் என்ன என்னமோ சொல்லுறாங்க...?!

எனக்கு எங்க கம்ப்யூட்டர் செண்டர் கேட் வாத்தியார் மட்டும் மினுங்கி மினுங்கிதெ()ரியிறாரு,எண்ட் கார்டு போடற டைம்ல யாரெல்லாம் ஆட்டோகேட்படிக்கிறீங்க கை தூக்குங்கன்னு கேள்வி வர நண்பர்களெல்லாம் ரொம்பபெருமையா என்னைய மட்டும் கை காமிக்க,எனக்கோ ஒரே ஆனந்த கண்ணீருநாம ஒண்ணு படிக்கிறதும் இங்க ஒண்ணு பாக்குறோம்ன்னு ) அப்படியேசமாளிச்சு பாலன்ஸ் பண்ணிட்டு கமுக்கமா உக்காந்திட்டேன்! அந்த டைம்ல ஒருஉந்துதல் இருந்துச்சு எப்படியாச்சும் அந்த விசயத்தை தெரிஞ்சிடணும்ன்னு... !

அன்னிக்கு ஆரம்பிச்ச தேடல்தான் ஒரு 2 அல்லது 3 வர்ஷன் சிடி புடிச்சு அதைஇன்ஸ்டால் செஞ்சு படிச்சு ஒரு வழியா தேறி வந்தாச்சு! இப்ப ரீலிசாகியிருக்கிறஆட்டோகேட் 2010 நினைச்சுபார்த்தாலே எல்லாமே அதிசயம் ஆச்சர்யமாவேஇருக்கு!

ஓவ்வொரு ரீலிஸ்களிலும், ஆட்டோகேட் மேம்படுத்தி ஏகப்பட்ட புதியநுட்பங்களை இணைத்து கொண்டு வரும்போது எப்பூடியெல்லாம்யோசிக்கிறாங்கப்பான்னு பிரமிக்க வைக்கிது! அதிலும் 2010 வர்ஷன் அட்டகாசம்!

கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தொழில் ரீதியாக என்னுடனேபயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோகேட் மென்பொருளுக்கும் (ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) அது பற்றிய முயற்சிகளில் தீவிரமாகஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துக்கும் இது ஒரு நன்றி கடன்!

உருளைக்கிழங்கு குருமா - செஞ்சதும் & தின்னதும்

சப்பாத்தியை உருளைக்கிழங்கு குருமா காம்பினேஷன்ல தின்னு பார்த்துடணும்ன்ன் நொம்ப்ப்ப்ப்ப நாளா ஒரு ஆசை!

இங்க இருக்கிற மலையாளிங்க கடையில காலையில உருளைகிழங்கு குருமா இருந்தா சப்பாத்தி இருக்காது சாயந்திரம் சப்பாத்தி இருந்தா உருளைகிழங்கு குருமா இருக்காது ஸோ லேப்ல செஞ்சு திங்கிறதுதான் ஒரே வழி - செய்யுற காலகட்டம் வர்ற வரைக்கும் நினைச்சுக்கிட்டே நாக்கை நனைச்சுக்கிட்டிருந்தேன்!

சரி இன்னிக்கு ரொம்ப வெட்டியாத்தானே ( அட டெய்லியும் நீ அப்படித்தாண்டா இருக்கன்னு ஒளிஞ்சுக்கிட்டு சொல்ற நல்லவனுங்களையெல்லாம் கண்டுக்காதீங்க) இருக்கோம் லேப்ல டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம்ன்னு முடிவு எடுத்து ஹோம் ஓர்க் செஞ்சுக்கிட்டேன்! (அதாங்க நெட்லேர்ந்து வழிமுறைகள் முறைகள் ஸ்டெப்ஸ் எப்படி அப்படின்னு)

என்கிட்ட இருக்கிற பொருட்களை வைச்சு சமைக்க எந்த ஒரு இணையத்திலயும் குறிப்பு இல்ல! இணையத்தில இருக்கிற குறிப்புபடி என்னால இந்த நாள் மட்டுமில்ல எந்த நாளுமே சமைக்கமுடியாதுன்னு முடிவு பண்ணி ரோட்ல இருந்த கோட்டை மட்டும் கவனமா பார்த்துக்கிட்டேன்!

திடீருன்னு ஒரு சந்தேகம் நமக்குத்தான் உருளைக்கிழங்கு காரக்கறி செய்ய தெரியுமே அப்ப இதுக்கும் உருளை கிழங்கு குருமாவுக்கு அப்படி என்ன பெரிய வித்தியாசம்ன்னு ஒரே மண்டை குடைச்சல் சரி யார்க்கிட்டயாச்சும் சின்ன முயற்சி எடுத்தாவது கேட்டு கிளியர் பண்ணிக்கிடலாம்ன்னு, சகோதரி ஒருத்தங்ககிட்ட கேட்டு ஒரளவுக்கு சமாதானமாகிகிட்டேன்!

ஆயத்தபணிகளை செஞ்சுக்கிட்டிருக்கும்போது திரும்பவும் ஒரு டவுட்டு அதான் ஐடியா நோ ப்ராப்ளம் அப்படின்னு மனசை தேத்திக்கிட்டு ஆரம்பிச்சாச்சு!

நான் எடுத்துக்கிட்ட மூலப்பொருட்கள்:-
உருளைகிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சைமிளகாய்
இஞ்சி
உப்பு
வறுக்கற வாணலி
வேகவைக்கிற பாத்திரம்
அப்புறம் ஒரு கரண்டி
ஒரு டம்ளர்
ஒரு ஸ்பூன்
ஒரு வேஸ்ட் துணி
(போதுமா இல்ல இன்னும் டீடெயிலா....?)


உருளைகிழங்கு வேகவைக்கிற பாத்திரத்தில தண்ணி ஊற்றி மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு உப்பு போட்டு வேக வைச்சுட்டேன் (திடீர்ன்னு எங்கேர்ந்து மஞ்சள் பொடி வந்துச்சுன்னுல்லாம் கேக்காதீங்க அது அப்படித்தான்!)

வெங்காயத்தை நீள வாக்குல ஸ்லைஸ் அட அதாங்க வில்லைகளாக வெட்டி வைச்சுக்கிட்டேன் பிறகு இஞ்சியும் தக்காளியும் முறையே கடினமான இலகுவான வேலையாக செய்துமுடித்துவிட்டேன்!

பச்சை மிளகாய் மட்டும் பாக்கி .மி ரெண்டு ரிஸ்கு இருக்கு!

1.சின்னசின்னதா ரவுண்ட் சைசில வெட்டி போட்டா நாக்குல பட்டு நல்லா உறைக்கும் கஷ்டமாகிடும் அப்புறம் அழுதுடுவேன்.

2 வது ரிஸ்க்கு நீளவாக்கில வெட்டி போட்டா திங்க ஸ்டார்ட் செய்யறதுக்கு முந்தியே தூக்கி எல்லாத்தையும் பொறுக்கி கடாசிடலாம் ஆனா, நீளவாக்குல வெட்டுறதுல விரலுக்கு பயங்கர ரிஸ்க்கு !

.மிளகாய் பத்திரமா நிக்கவைச்சு நீட்டு வாக்குல இரண்டாக்குறதுல பொறுமை ரொம்ப அவசியம் இல்லாங்காட்டி விரலு வீங்கிடும் (கட்டு போட்டு)

வாணலி - சட்டி - இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி கடுகு போடுங்க (எண்ணெய் ஊத்தினா கடுகு போட்டு தாளிக்கணும்ங்கறாது ஒரு மனக்கணக்கு!) அதுல வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுவோ வறுன்னு வறுத்து எடுத்துக்கிட்டு பின்னாலயே போயி பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டுடுங்க! கொஞ்சம் நிமிசம் கழிச்சு வேக வைச்ச உருளைகிழங்க எடுத்து அதுல போட்டு ஒரு பிரட்டு பிரட்டிடுங்க ! எல்லாம் நல்லா மிக்ஸ் ஆனாதும் ஒரு வாசனை வரும் கூடவே ஒரு டவுட்டும் கிளம்பும் இது காரக்கறியா அல்லது குருமாவான்ன்னு அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க! டிரையா இருந்தா கார கறி கொஞ்சம் தண்ணியா - கூழ்மமா - லிக்விடா இருந்தா குருமா!

.கே டன்!

இனி
இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான், சப்பாத்தி, இட்லி அல்லது தோசை இப்படி எதாச்சும் ஒரு சைடு டிஷ் வைச்சுக்கிட்டு!

6 சிக்மா!



சிக்ஸ் சிக்மா என்பது என்னவென்று சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அது மோட்டரோலா நிறுவனம் கண்டுபிடித்த ஒரு மானேஜ்மென்ட் தந்திரம். கடலை எண்ணெய்க்கு ஐ.எஸ்.ஐ முத்திரை குத்துவது போல ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்.

எந்த ஆறு சிக்மா நிறுவனமும் தயாரிக்கும் பொருட்கள் 99.999 சதவிகிதம் கியாரண்டியாக நல்ல தரத்துடன் இருக்கும். சிக்மா என்ற சொல், புள்ளியியலில் வருகிறது. சராசரியிலிருந்து நாம் எவ்வளவு தூரம் விலகி வசிக்கிறோம் என்பதை அளக்கும் குறியீடு அது.

உதாரணமாக, நீங்கள் நட்டு போல்ட் தயாரிக்க ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு ஆறு சிக்மா சான்றிதழ் கேட்கிறீர்கள். அவர்கள் முதலில் அளப்பது, உற்பத்தியாகும் பொருட்களில் எவ்வளவு சதவிகிதம் குறைபாடு இருக்கிறது என்பதைத்தான். ஒரு மாதத்தில் பத்து லட்சம் போல்ட்டு தயாரித்தால், அதில் சுமார் மூன்றரை போல்ட்டுகளுக்கு மேல் தப்பு இருந்தால் சர்டிபிகேட் கிடைக்காது! (மூன்றரை போல்ட் என்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டால், ஒரு கோடியில் முப்பது நான்கு பிழைகளுக்கு மேல் அனுமதிக்க மாட்டார்கள் என்று வைத்துக் கொள்ளலாம்).

ஆறு சிக்மா வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. ஜி.இ., ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே சான்றிதழ் கிடைப்பதற்குள் தூக்குப் போட்டவன் மாதிரி நாக்குப் பிதுங்கிவிட்டது. அவர்களிடம் இல்லாத கம்ப்யூட்டரா, எம்.பி.ஏக்களா? இருந்தும் பிழைகளை நீக்கிக் கொள்வதற்கு முக்கியத் தேவை, கடமைக்கு வேலை செய்யாமல் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு வேலை செய்யும் ஊழியர்கள். அப்படிப்பட்ட ஊழியர்கள் மட்டும் கிடைத்தால், எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஆறு சிக்மாவைச் சந்திக்கலாம். இதற்கு அருமையான உதாரணம், மும்பை நகரின் சாப்பாடுக் கூடைக்காரர்கள்.

புகழ் பெற்ற ஐ.ஐ.எம்.நிர்வாகவியல் பள்ளி. உச்சாணிக் கிளை எம்.பி.ஏக்களை உற்பத்தி செய்யும் நாற்றங்கால். அங்கே ஒரு நாள் மானேஜ்மென்ட் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பவர், கோட்டு சூட்டு போட்ட ஹார்வர்ட் பேராசிரியர் அல்ல; வேட்டியைத் தார் பாய்ச்சிக் கட்டி காந்தி குல்லாய் அணிந்த சர்வ சாதா கூலித் தொழிலாளி. தலை மேல் சாப்பாட்டுக் கூடைகளைச் சுமந்து சென்று வினியோகிக்கும் "டப்பாவாலா'. அவராவது, எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் போய் மானேஜ்மென்ட் சொல்லித் தருவதாவது? ஏனெனில் அன்று நடந்த பாடம், "தவறுகளே நடக்காமல் வேலை செய்வது எப்படி' என்பதாகும்.

மும்பைக்கு ஒரு முறை சென்று வந்த யாரும் இந்த டப்பாவாலாக்கள் என்பவர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. மும்பை நகரம், ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் இருபதாயிரம் பேர் என்ற ரேட்டில் மக்கள் டப்பாவில் அடைக்கப்பட்ட பேரீச்சம் பழம்போல் நெரிசலாக வசிக்கும் நகரம். இத்தனை பேரும் சேவல் கோழியுடன் சேர்ந்து எழுந்து ரயில் பிடித்து எங்கோ இருக்கும் அலுவலகம் போக வேண்டும். அத்தனை பேருக்கும் மதியம் சாப்பாடு வேண்டும். காண்டீனிலோ, கண்டகண்ட எண்ணெய். இங்கேதான் உதவிக்கு வருகிறது டப்பாவாலா சர்வீஸ். இவர்கள், புற நகர் பகுதியில் இருக்கும் உங்கள் வீட்டிலிருந்து காலை ஒன்பது மணி அளவில் டிபன் காரியரை எடுத்துக் கொண்டு போனால் சரியாக லஞ்ச் நேரத்துக்கு அலுவலகத்தில் சேர்ப்பித்து விடுவார்கள். மாலையில் காலி காரியர்கள் எதிர்த் திசையில் பயணம் செய்து கண்ணன் மேய்த்த ஆநிரைகள் போல் வீட்டுக்கு வந்து சேரும். ட்ரெயின், பஸ், சைக்கிள், மனிதக் கால் என்று சகலவிதமான போக்குவரத்து சாதனங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு சாப்பாட்டு மூட்டையும் சராசரியாக அறுபது கிலோ மீட்டர் பயணம் செய்கிறது; நாலு கை மாறுகிறது. இருந்தும் காரியர் மாறிவிடாமல், அவரவர் வீட்டுச் சாப்பாடு அவரவருக்குப் போய்ச் சேருவதுதான் ஆச்சரியம்.



டப்பாவாலாக்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுதப் படிக்கவும் தெரியாது. டிபன் பாக்ஸ்களில் கோடு, புள்ளி, ஸ்வஸ்திக் என்று தங்களுக்கே உரிய எளிய குறியீடுகளைப் பயன்படுத்தி அதனதன் இலக்கைத் தெரிவிக்கிறார்கள். ஒரு ஏரியாவிலிருந்து சேகரித்த டப்பாக்கள் தபால் பிரிப்பு அலுவலகம் போன்ற ஒரு மரத்தடிக்கு வந்து நாலு திசைகளிலும் பிரித்து அனுப்பப்படுகிறது.

ஐயாயிரம் ஊழியர்கள் தினம்தினம் இரண்டு லட்சம் சாப்பாடுகளை டெலிவரி செய்கிறார்கள். மழையோ புயலோ வெயிலோ, க்வார்ட்ஸ் கடிகாரம் மாதிரி எல்லாம் சீராக, நேரம் தவறாமல் இயங்குகிறது. டெலிவரியில் தப்பு நடப்பது மிகமிகமிக அபூர்வம்!

இந்தத் தொழிலை மட்டும் நம்ம லட்ச ரூபாய் எம்.பி.ஏக்களிடம் விட்டிருந்தால், ஒவ்வொரு டிபன் காரியருக்கும் ஆர்.எஃப் பட்டி, கூடைக்குப் பார் கோட், சுமப்பவர் ஒவ்வொருவருக்கும் ஜி.பி.எஸ் என்று டெக்னாலஜியில் புகுந்து விளையாடி, வரிசை வரிசையாக டெல் கம்ப்யூட்டர்கள் வைத்துக்கொண்டு கண்காணித்து, கடைசியில் அல்போன்ஸ் வீட்டு மீன் குழம்பை அனந்தாச்சாரிக்குக் கொண்டு போய்க் கொடுத்துவிடுவார்கள்.

மாபெரும் மானேஜ்மென்ட் பள்ளிகளும் டப்பாவாலாக்களைப் பக்கத்தில் சென்று கவனித்து ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியிருக்கிறார்கள். ஃபோர்ப்ஸ் என்னும் புகழ் பெற்ற பிசினஸ் இதழ் அவர்கள் ஆறு சிக்மா உலகத் தரத்தை எட்டிவிட்டார்கள் என்று வியக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் அவர்களைப் பற்றிக் கட்டுரை எழுதுகிறது, பி.பி.சியில் டாக்குமென்டரி படம் காட்டுகிறார்கள். இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வந்தபோது டப்பாவாலாக்களைச் சந்தித்து அவர்களுடன் பெருமிதமாக போட்டோ எடுத்துக் கொள்கிறார். கலிபோர்னியாவின் சிலிக்கன் பள்ளத்தாக்கில் இதைப் பின்பற்றி "அன்னதாதா' என்று சாப்பாட்டு கேரியர் சர்வீஸ் ஆரம்பிக்கிறார்கள்.

செய்வதைத் திருந்தச் செய்வது என்பது பல்லாயிரம் ஆண்டு பழமையான கருத்து. எகிப்திய பிரமிடின் நாலு பக்கங்களையும் இப்போது அளந்து பார்த்தால் தொண்ணூறு டிகிரிக்கு ஆச்சரியகரமாகக் கிட்டத்தில் அமைத்திருக்கிறார்கள். ஒரு டிகிரியில் ஆயிரத்தில் ஒரு பகுதிதான் வித்தியாசம் கண்டுபிடிக்க முடிந்தது! குவாலிட்டி கண்ட்ரோல் என்ற நவீன வார்த்தை உலகப் போரின்போது உருவானது. தொழிற்சாலை அசெம்பிளி லைன்களில் கார் முதல் குண்டூசி வரை பெரிய அளவில் அடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

ஊழியர்களை "வேகம், வேகம்' என்று துரத்தியதில் தரம் வீழ்ந்துவிட்டது; கஸ்டமர்கள் கதறினார்கள். எனவே, 1924-வாக்கில் புள்ளியியல் அடிப்படையில் தரக் கட்டுப்பாடு சோதனை செய்யும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. வால்டர் ஷேவார்ட் என்பவர் அன்றைக்கு எழுதிய புகழ்பெற்ற ஒரு பக்க டாக்குமென்ட்தான், பின்னால் வந்த அத்தனை ஜிலுஜிலு பவர் பாயின்ட்களுக்கும் முன்னோடி. சீக்கிரமே தரக் கட்டுப்பாடு என்பது தாரக மந்திரமாகி (தாரக என்றால் என்ன?), டி.க்யூ.எம், சி.எம்.எம், ஐ.எஸ்.ஓ, ஜப்பானில் கைஸன் என்று கிளைகிளையாகப் புறப்பட்டது. முழு நேர குவாலிட்டி டிப்பார்ட்மென்ட்கள் உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் நாற்காலியைத் தேய்க்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு ஆறு சிக்மா, ஏழு சிக்மா என்றெல்லாம் அவர்கள் சீசனுக்கு சீசன் ஒரு புதிய மானேஜ்மென்ட் ஃபாஷன் ஏற்படுத்தி அப்பாவி முதலாளிமார் தலையில் மிளகாய் அரைத்தாலும், தரத்தை உறுதி செய்வதற்கு பிரமிட் காலத்திலிருந்தே ஒரே ஒரு எளிய விதிதான் இருந்து வந்திருக்கிறது.

டப்பாவாலாக்கள் போன்ற தொழில் பக்தி மிகுந்த ஊழியர்கள்! சார்லஸ் இளவரசர் வந்த அன்றைக்குக்கூட, ""எங்கள் வேலை பாதிக்கக் கூடாது; டியூட்டி நேரம் முடிந்த பிறகு வாங்க'' என்று சொல்லி அனுப்பினார்கள். கடந்த நூற்று இருபது வருடங்களாக நடப்பது டப்பாவாலா சர்வீஸ். இருந்தும் ஒரு முறை கூட ஸ்ட்ரைக், ஊர்வலம் என்று நடந்ததே இல்லை. வேலைக்கு வருபவர்களின் பின்னணியைத் தீர விசாரித்துவிட்டுத்தான் கிட்டேயே சேர்க்கிறார்கள். ரிட்டையர்மெண்ட் வயது என்று எதுவும் கிடையாது. அவரவர்கள் உடம்பில் தெம்பு உள்ள வரை வேலை செய்யலாம். அநாவசியமாக லீவு எடுத்தாலோ, காந்திக் குல்லாய் யூனிஃபார்ம் இல்லாமல் காணப்பட்டாலோ கடும் அபராதம் உண்டு! இந்தப் படிப்பில்லாத மக்களிடமிருந்து நமக்கு நிறையப் படிப்பினை இருக்கிறது.

நன்றி - தினமணி கதிர்

நாங்கெல்லாம்....?!


1.இப்படித்தான் பிரியப்பட்டு கேக்குறாரு!


2 இப்படித்தான் இருக்கும் போல!


3.இப்படியே டிசைன் பண்ணிப்புடலாம்ல!


4.இது மாதிரியே செஞ்சுப்புடுங்க!


5.இம்புட்டு அழகா இருக்கும்!


6.இப்படித்தான் செஞ்சு முடிக்கப்போறோம்!


7.இப்ப ஸ்டார் பண்ணிட்டோம்! சீக்கிரத்துல முடிச்சுடுவோம்!


8.இம்புட்டு காசு செலவு ஆகிடுச்சுப்பா! :-(


9.இனி ஃபினிஷிங் மட்டும்தான் பாக்கி! மேட்டர் ஓவரூ!



10 அடங்கொய்யாலுங்களே நான் கேட்டது இதைத்தாண்டா!!!

நான் என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்?

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனதில் ஒரு பதிவை உண்டாக்குகிறது! (பதிவு என்றால் போஸ்ட்டும் எடுத்துக்கலாம்,பாதிப்புன்னும் எடுத்துக்கலாம் - பாதிப்புத்தான் பதிவு வடிவில பலரை பாதிக்கும்ன்னு சொன்னா அதுவும் ரைட்டு!)

இந்த பாதிப்புக்களின் கூட்டுப்பலனே குணம் என்று சொல்லப்படுக்கின்ற தனிமனிதனின் சக்தி!

ஒவ்வொரு மனிதனும் தன் குணத்தினை தானே உருவாக்கிக்கொள்கிறான்!

நற்குணங்கள் தீய குணங்கள் என்பதும் கூட ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலிருந்து பெறப்படுகின்றது!

(வாரத்தின் முதல் நாள் அப்படிங்கறதால ஒரு சின்ன சிந்தனைக்குறிப்பு!)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இன்னிக்கு ரமலான் புனித மாதத்தின் முதல் நாள்!




இன்னிக்கு எனக்கும் கூட ரொம்ப முக்கியமான நாள் - ஆமாம் நானும் திரும்பவும் புக்கை தூக்கிக்கிட்டு படிக்க கிளம்பிட்டேன்! பட் கொஞ்சம் கஷ்டமான படிப்புன்னு கொஞ்சம் பேரு சொல்றாங்க! அட இதெல்லாம் ஒரு மேட்டரா சும்மா ச்சூசூன்னு ஓட்டிட்டு வந்துடுவப்பான்னு சில பேர் சொல்றாங்க! ஆனா வழக்கம்போலவே படிக்கணும்ன்னு நினைக்கும்போதுதான் பயம்மா இருக்கு! அதுவும் பரீட்சை வேற உண்டாமாம்! ( பரீட்சை இல்லாத படிப்பு எதாவது இருக்கா?)


இணைய நண்பர்கள் இந்த PMP (PROJECT MANAGEMENT PROFESSIONAL ) சம்பந்தமாக உங்களுக்கு தெரிஞ்ச தகவல்களை ரகசியமாக என்னோட மெயில்லுக்கு அனுப்புனா நான் கொஞ்சம் படிச்சு தேறிடுவேன்! kadagam80 அட் ஜிமெயில்.காம்

ஹெல்பு பண்ணனும்!

என் நண்பர்கள் மத்தியில சில விசயங்களை சொன்னா அதை கொஞ்சமாச்சும் முறையா கடைப்பிடிக்கணும் இல்லாட்டி நண்பர்கள் நாக்கை புடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்பாங்க! இப்போதைக்கு இணைய நண்பர்கள் மட்டும்தான் நொம்ப நெருங்கி நிக்கிறாங்க! (பாருங்க பெரியபாண்டி என்னாப்பா எழுதிக்கிட்டிருக்கன்னு கேக்கறாரு?) ஸோ!அவுங்களுக்கிட்ட மேட்டரை ஷேர் பண்ணிக்கிட்டாச்சு! ( அப்பப்ப நீங்களும் கூட கேள்வி கேட்கலாம்? )

கற்றுகொடுங்கள் இந்தியாவுக்கு!

பள்ளியில் படித்த காலத்தில் டீயுசன் படித்த நேரத்தில் கண்டிப்பாய் எல்லார் மனதிலும் பல வாத்தியார்கள் வில்லன்களாகவும்,இன்னும் பலர் ஹீரோக்களாகவும், வெகு சிலர் தாமும் ஜீரோ ஆகி, நம்மையும் ஜீரோவாக்கி பாடம் கற்பித்திருப்பதை நீங்கள் கண்டதுண்டு, கேட்டதுண்டு, அப்படியான அனுபவங்களில் சிக்கியதும் உண்டு!சரியா?!

சரி அந்த மாதிரியான சமயங்களில் நமக்கும் கூட சில பல எண்ணங்கள் தோன்றியிருக்குமல்லவா?

இதே வாத்தியாரு இப்படி கிளாஸ் எடுத்திருந்தா நாமளுக்கு நல்லா புரியும்?

இதே வாத்தியாரு இப்படி அப்ரோச் பண்ணியிருந்தா இன்னும் எவ்ளோ ஆசையாக இருந்திருக்கும்?

இந்த வாத்தியாரு எப்படி அழகா பாடம் புரியிற மாதிரி எடுக்கறாரு?

இந்த வாத்தியாரு எப்படி அன்பா திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்கறாரு?

இப்படியான பல பல எண்ணங்கள் ( எனக்கு 2 எண்ணங்கள்தானப்பா திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வருது!) நம்ம மனசுக்குள்ளயும் ஏற்பட்டிருக்கும்!

அது மாதிரியான எண்ணங்கள் சிலருக்கு தீவிர விருப்பமாக மாறி, அழகாய் ஆசிரிய பணி செய்பவர்களாக மாறி விடுவார்கள்! ஆனாலும் கூட அந்த மாதிரியான ஆசைகள் அதிகம் இருந்தும் கூட சூழ்நிலை காரணமாய் தடம் மாறி அது போன்ற சந்தர்ப்பங்களுக்குள் செல்லாமலே பயணித்துக்கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு!

அது போன்றவர்களுக்காகவே,நேரம் இருக்கும் நிச்சயம் செய்ய முடியும் நம்மால், என்ற எண்ணமும் ஆர்வமும் கூட அதிகம் இருக்கும்! ஆனால் வாய்ப்புகள் என்பதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்க கூடியவையாக இருக்கும்! பகுதி நேர பணி வாய்ப்புக்கள் என்பது ரொம்ப அருகிய வாய்ப்பாகவே இருக்கும்!


இதே எண்ணங்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற, டைம்ஸ் ஆப் இந்தியாவின் “கற்றுக்கொடுங்கள் இந்தியாவுக்கு” என்ற திட்டம் கண்டிப்பாய் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு.....!

யோகா இனி பள்ளிகள்தோறும் - தினமணியிலிருந்து


வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய யோகாசனப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது மட்டுமல்ல; வரவேற்கக்கூடியதுமாகும்.

"நோய் நாடி நோய் முதல் நாடி' என்பது போல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகாசனப் பயிற்சி, நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் மாணவர்களுக்கு அளிக்கப்படவேண்டியது அவசியம்.

"மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு' என்பது யோக சாஸ்திரத்தின் சாராம்சம். ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே ஆக்கபூர்வமான சிந்தனை பிறக்கும். அப்படிப்பட்ட சிந்தனை மட்டுமே செயலாகப் பரிமளிக்கும். வருங்காலச் சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு நோயற்ற உடலே குறைவற்ற செல்வம்.

அதற்கு யோகப் பயிற்சி ஓர் அற்புத வழி.இந்தியா வரும் வெளிநாட்டவர்களில் பலர், நம் நாட்டின் பாரம்பரிய பரத நாட்டியத்தையும், யோகக் கலையையும் கற்கவே பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வெளிநாட்டில் அலுவலகப் பணியாளர்களுக்கு ஒரு குழுவாக யோகாசனப் பயிற்சியளிக்கப்படுகிறது. இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம். பணியாளர்களுக்கு யோகா கற்பிப்பதால், உற்பத்தித் திறன் அதிகரிப்பதுடன், டென்ஷன் குறைந்து மன அமைதி கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

8 வயதிலிருந்து குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிக்கத் தொடங்கலாம். இதனால் குழந்தைகளிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு வளர்கிறது. படிப்பில் மனதை ஒருமுகப்படுத்த முடிகிறது. நினைவாற்றல் அதிகரிக்கிறது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சி அளிப்பது எளிது. இளம் உடலை வளைத்து ஆசனங்களை எளிதில் செய்யமுடியும்.

பெண்களுக்கு குறிப்பாக வளர் இளம் பெண்களுக்கு யோகாசனம் உற்ற தோழி. மாத விலக்கு சமயத்தில் தோன்றும் கோபம், எரிச்சல் போன்ற மன உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் யோகாசனத்துக்கு இணை வேறில்லை. மாதவிலங்கு ஒழுங்கின்மை, மெனோபாஸ் நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தம் போன்றவற்றுக்கும் யோகா அற்புதமான தீர்வு. பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்திருக்கும் தசைகளை இறுகச் செய்வதிலும் இதன் பங்கு மகத்தானது.

வயதானவர்கள்கூட யோகாசனத்தின் மூலம் சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்த முடியும் என்பதை லண்டனில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. யோகாசனம் செய்து வரும் முதியவர்கள் சிலரிடம் நடத்தப் பட்ட ஆய்வில், தசைகளைத் தளரச் செய்வதிலும், தள்ளாடாமல் நடக்கச் செய்வதிலும் யோகா முக்கியப் பங்கு வகிப்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

ஆஸ்துமா, இதய நோய், உடற்பருமன், நீரிழிவு போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், குறைப்பதிலும் யோகாசனமும், மூச்சுப் பயிற்சியும் பெருமளவு உதவுகிறது.அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே அற்புதம் புரியும்.

யோக சூத்திரத்தின் தந்தையான பதஞ்சலி முனிவர் அறிமுகப்படுத்திய யோகாசனங்களின் வகைகள் ஏராளம். காலப்போக்கில் அவற்றில் பல மறைந்து சுமார் 1000 வகையான ஆசனங்கள் மட்டுமே இப்போது வழக்கத்தில் உள்ளன.

சாதாரணமாக 10 முதல் 20 ஆசனங்கள் வரை தெரிந்தாலே ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும் வாழ முடியும். குழந்தைகளிடையே யோகாவைச் சொல்லிக் கொடுப்பதால், ஒரு தலைமுறைக்கே அவற்றை சொல்லிக் கொடுக்கும் நன்மை ஏற்படுகிறது.

யோகாசனத்தைப் பற்றிப் பேசுகையில் தியானத்தையும் குறிப்பிடுவது அவசியமாகிறது. யோகமும், தியானமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். கொந்தளிக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர தியானம், பொருட் செலவற்ற மருந்து. பரபரப்பு, மன அழுத்தம் நிறைந்த இன்றைய சூழ்நி லையில் தியானமும், யோகமும், மனித மனதுக்கு நிச்சயம் அமைதி தரும். உறவுகள் மேம்படவும் உதவிடும்.

கோபம்


சடக்கென்று வந்து செல்லும் ஒரு விஷயம் சென்ற பின் தெரியும் அதன் வடுவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளின் விபரங்களும்! நமக்கு பிடிக்காத ஒன்றினை மற்றவர் செய்யும் போதுதான் பெரும்பாலும் கோபம் வெளிப்படுகிறது.

பெரும்பாலான மனிதர்கள் கோபம் அடைந்து அதை வெளிக்காட்டிய பின்னர் சில மணி நேரங்கள் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ கூட தமது கோபம் நினைத்து வருந்துதல் அல்லது தவறு என கண்டறிகிறார்களாம் இன்னும் சிலர் தம்மை நினைத்து கேலியாக சிரித்துக்கொள்கிறார்களாம்! இதைத்தான் கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்று நம் பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ....!?

பிடிக்காத வேலையில் மற்றவர்கள் ஈடுபடுதல், பிடிக்காத வேலையில் ஈடுபட்டல் இவைகளால் தான் ஆத்திரம் அல்லது கோபம் குபுக்கென்று வந்து வார்த்தைகளாய் விழுகிறது சில சமயங்களில் அடிதடிகளாய் கூட அரங்கேறுகிறது.

கோபத்தின் வெளிப்படுத்துவதில், பெரும்பாலனோரின் ஆதரவோடு முதலிடத்தில் இருப்பது ச்வுண்டுவுடுதல் - காட்டு கத்தல் கத்தினால் மனுசன் சரியான கோபத்தில் இருக்கிறான் என்று அர்த்தப்பட்டுக்கொள்ளவேண்டுமாம்!

அருகிலிருக்கும் பொருட்களை உடைத்தல்,
கண்ணாடிகளை தூள் தூளக்குதல்,

இதெல்லாம் நார்மலா நடக்குறது நம்ம ஊரு ஸ்டைல் கோபங்கள் எல்லாம்,

பாத்திரங்களை வீசுதல் - பூரிகட்டைகளை பற்றி தெரியாதவர்களா இருக்கிறார்கள் நம் வலைபதிவுலகில்:-)
நாற்காலிகளை உடைத்தல்,
சுவரில் முட்டிக்கொள்ளுதல் - இதிலும் சிலர் ரொம்ப ஜாக்கிரதையாக தலையாணை வைத்துக்கொண்டு முட்டுபவர்களும் உண்டு!
இப்படித்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதையும் தவிர்த்து அதிக பட்ச கோபங்கள் ஆபத்தான் முறையிலும் கூட வெளிப்படுத்தப்படுகிறது!

எனக்கு ரொம்ப கோபம் வரும் ஆனால் வெளியில காட்டிக்கவே மாட்டேன் என்று பெருமைக்கொள்ளும் மக்களுக்கு மரியாதையாக கோபத்தை நிறுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்குத்தான் நிறைய நோய்கள் வர வாய்ப்பிருக்கிறதாம்!

சரி கோபத்தை எப்படி நிப்பாட்டறதுன்ன்னு கேட்டா?

கோபத்தை நிப்பாட்டுவது உடனே சாததியமில்லாத விசய்ம், அதை கட்டுபடுத்தும் முயற்சிகளை முதலில் மேற்கொள்ளுங்கள் !

கோபத்தின் ஆதிக்கம் அதிகரித்தால், பிடிக்காத செயல்களும் தொடர்ந்தால், அந்த இடத்தினை விட்டு உடனே அகன்றிடவேண்டும்! என்று சிலர் அறிஞர்கள் அட்வைஸ் செய்கிறார்கள்!

ரொம்ப பெஸ்ட்டுன்னு சொல்லணும்னா 1,2,3....... தானாம்! இதுதான் நல்ல வொர்க் -அவுட் ஆகி கோபத்தை அவுட் செய்கிறதாம்!

அப்படியும் கோபம் இருந்தால் நன்றாக மூச்சினை உள்ளிழுத்து வெளி விடுங்கள் சில நிமிடங்களுக்கு.....!

இன்னும் கொஞ்சம் கோபம் இருந்தால் எதாவது பாட்டு கேளுங்கள் அல்லது பக்தி மார்க்கத்திற்கு சென்றுவிடுங்கள்!

இல்லப்பா இன்னும் கூட எனக்கு கோபம் இருக்குப்பா என்ன பண்றதுன்னு கேட்டா ஒரே முடிவுதான்...!

போய் செவுத்துல முட்டிக்கோங்கப்பா!

எல்லாமே க்ளியர் ஆகிடும்! (பெறவு என்னங்க இதுக்கும்மேலயுமா ஒரு மனுசனுக்கு கோபம் இருக்கும்!)

நிதி நிர்வாகவியல் - பாடம் ஒன்று!


விலைவாசி உயரும்போது மக்களின் வாங்கும் சக்தி அதிகமானால் அதன் சுமை தெரியாது. ஒரு காலத்தில் பவுன் விலை ரூ. ஆயிரமாக இருந்தது.

இன்று ரூ. 10,000 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.

சாதாரண மக்களை வாங்கும் சக்தி கொண்டவர்களாக மாற்றிவிட்டால் யாரும் வேதனைப்பட மாட்டார்கள். தேர்தலில் பயன்படுத்த மட்டும்தான் விலை உயர்வு என்ற பிரச்னை பயன்படும். எனவே வாங்கும் சக்தியை அதிகரிக்கும் பொருளாதாரக் கொள்கையை நாடு பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் விலைவாசி உயர்வினால் பெரும் பாதகம் ஏற்படாது


- முதல்வர் கருணாநிதி



பொதுவிநியோகத் திட்டத்தில் அத்தியாவசிப் பொருள்கள் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும். இதை, மாநில அரசு செய்யவேண்டும். அப்போது தான் விலைவாசி குறையும்.


- கம்யூனிஸ்ட்கள்