தட்டில் வந்து
உட்கார்ந்துகொண்ட சோறு
பாத்திரத்தில் புதிதாய்
சேர்ந்துகொண்ட சாம்பார்
கிண்ணத்தில் நிரம்பி நிற்கும்
பொறியல்
சைடு கட்டி வைக்கப்பட்ட
ஊறுகாய் என எனக்கு
தின்ன கிடைக்கும்
இவைத்தவிர,
ஆம்பூரிலிருந்து பெரிம்மா கொண்டுவரும்
கறி நிறைந்திருக்கும் பிரியாணி
முழுவதும் எனக்கே சொந்தமானவை
என்பதிலும் மகிழ்கிறேன்....!
- ஆச்சி
முகிலுக்கும் பப்புவுக்கும் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
டிஸ்கி:- ஸ்ரீமதி தங்கச்சியம்மா எழுதிய அழகான கவிதை இங்க இருக்கு!
எனக்கே எனக்கா....?!
# ஆயில்யன் 69 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
12 கேள்விகள் (வெட்டீஸ் வெர்ஷன்)
ஆச்சி தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஆயில்யன்கிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடலாம்ன்னு! நன்றி ஆச்சி!! இனி கேள்விகளுக்கு போகலாம் (ஆச்சி நீங்க போகலாம்!)
டொண்டொடொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்
கானா பிரபா:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?
ஆயில்யன்:- நாலு பிகரும் ஒரே டைம்ல பாக்கும்போது
கானா பிரபா:- நீங்க ஆபிஸ் போய்ட்டேன்னா அங்க என்ன பண்ணுவீங்க?
ஆயில்யன்:-சாட்டிங்க் ப்ளாக்கிங்க் அப்புறம் பேஸ் புக் ஆர்கெட் இன்னபிற எல்லாம் வேலை தவிர்த்து மத்த காரியங்கள்
கானா பிரபா:- நீங்க வீட்டுக்கு போய்ட்டா என்ன பண்ணுவீங்க?
ஆயில்யன்:-சோறு தின்னுட்டு மல்லாக்கடிச்சு படுத்துகிடப்பேன்
கானா பிரபா:- உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?
ஆயில்யன்:-சோறு தயிரு அப்புறம் இட்டுலி....... தோசை பூரி நூடுல்ஸெல்லாம் பிடிக்காது உவ்வ (வாந்தி ஸ்டைலில் முகத்தை நேராக்குகிறார் - நார்மலா கோணலா இருக்கும்!)
கானா பிரபா:-ஆபிஸ்க்கு என்ன எடுத்துட்டு போகப் பிடிக்கும்?
ஆயில்யன்:-ஐ-பாட்,எம்பி3 பிளேயர் அப்புறம் அப்புறம் திங்கிறதுக்கு மேரி & குட்டே பிஸ்கெட் (டீ கொடுக்கும்போது அதுல நனைச்சு நனைச்சு திங்கலாம்ல - மேரி பிஸ்கட்டுன்னா ரெண்டு ரெண்டா..)
கானா பிரபா:-ஆபிஸ்ல உங்களை என்ன சொல்லி வேலை செய்ய சொல்லுவாங்க?
ஆயில்யன்:-ப்ளீஸ் சார் இன்னிக்கு மட்டுமாச்சும் இதை செஞ்சு கொடுங்க சார்ன்னு - யோவ் நான் பிசின்னு சொல்லிக்கிட்டிருக்கேன்ல நோ சான்ஸ் ஈவன் எனக்கு இருக்கிற இந்த 24 அவர்ஸ் அப்படிங்கறதே ரொம்ப்ப கொஞ்சம் எத்தனை பிராஜெக்ட்ஸ் எத்தனை கிளையண்ட்ஸ் ஒரே குஷ்டமப்பா!
கானா பிரபா:-. நாம ஆன்லைன்ல இருந்தா என்ன பண்ணுவோம்
ஆயில்யன்:-சாட்ல உக்காந்துக்கிட்டு ஸ்டேட்டசு சண்டை போடுவோம்
கானா பிரபா:- நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?
ஆயில்யன்:- ஹைய்ய்ய இல்ல இல்ல! நீங்க சிவப்பு! ரெண்டாவது நீங்க பெரியவரு நான் இன்னும் ச்சின்ன பையன்
கானா பிரபா:-. எனக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு எப்படி தெரியும்?
ஆயில்யன்:- ரொம்ப சிம்பிள் மல்லு படம் புரொபைல்ல மாத்துனா போதுமே டக்குன்னு வந்து ஹாய் சொல்லிட்டு சிரிப்பீங்களே…!
கானா பிரபா:-. நான் உங்களை என்ன சொல்லி கூப்பிடுவேன்..?
ஆயில்யன்:- பாஸ் வெட்டியாத்தானே இருக்கீங்க..?
கானா பிரபா:- ரேடியோவுல என்ன பார்க்க பிடிக்கும்?
ஆயில்யன்:- ஹய்யோ ஹய்யோ ரேடியோவுல என்ன கேக்க பிடிக்கும்ன்னு இருக்கணும் கேள்வி !(கேள்வி கேக்க கூட தெர்ல)
கானா பிரபா:- எந்த புக் பிடிக்கும்?
ஆயில்யன்:- ஏ,பி,சி,டி புக்கு மட்டும்தான் அதுலதான் 26 எழுத்து மட்டும் இருக்கும்
பகுதி பகுதியாத்தான் ஆயில்யன்கிட்டே கேட்டேன். ரெண்டு மூணு கேள்விகளுக்கு மேலே சார் சாட்டிங்குக்கு ஓடிபோய்டறாங்க... நம்ம தமிழன் கறுப்பி சென்ஷிகிட்டயும், தமிழ்பிரியன்கிட்டயும் இதே மாதிரி ஒரு இண்டர்வியூ எடுக்கணும்ம்னு கேட்டுக்கிறேன்!(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது இன்னும் வக்கணையா கூட இருக்கலாம்!!)
# ஆயில்யன் 54 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
தரையோரக்கனவுகளில் நான்…!
வாழ்க்கை பல வகைகளில் பல நேரங்களில அழகான பல விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் ஆனால் நமக்கு நம்மை அடையாளம் காட்டுவது சில முறை தான் அந்த வகையில என்னை எனக்கே அழகா இருக்கிற மாதிரி காமிச்ச ஒரு பெரிய விஷயம் என்னோட இந்த தரையோர கனவுகள் தான். நான் படுத்திருங்கும்போதும் சரி, என் ஆபிஸ்ல தூங்க ஆரம்பிக்கும்போதும் சரி எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அந்த கொட்டாவி இன்னும் அடங்கினப்பாடில்லை.
என் தூக்கம் ஆரம்பிக்கும் நாளின் காலை வரை (மதியம் சாப்பிடற டைம் தவிர்த்து.) தூக்கத்திற்கும் எனக்குமான தொடர்பு தூக்கத்தோடு மட்டுமே நின்றிருந்தது. (இன்றளவும் நான் தூங்கவே இல்லை என்றெல்லாம் சொல்லி உங்களைக் நம்பவைக்கமாட்டேன்..
"தரையோரக் கனவுகள்" நான் தேடி அலையவில்லை.. (அப்பறம் நான் பார்த்த வித்தியாசமான கனவுக்களுக்கு விளக்கம் தான் தேடி அலைஞ்சேன் என்கிறது ரகசியம்..!
தூங்க போறப்ப ஆரம்பிச்ச கொட்டாவியே எனக்கு அடங்கல! அதுக்குள்ள சூப்பர் கனவு வந்திருச்ச். நாலைந்து முறை அது கனவு தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன்.! அப்படிப்பட்ட தரையோரக்கனவுகளை இன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு !
இப்படியாக என் கொட்டாவியும் கனவும் தொடர்ந்தாலும் நான் உருப்படியா சொல்லப்போற கனவு, யாரோ நாம சொல்லப்போறதையும் கேட்பாங்கன்னு தெரிஞ்ச பிறகு தான். அதை உக்காந்து கேக்கப்போறவங்க அப்பப்ப வெட்டியாவே இருக்கும் நிஜமா நல்லவன் தம்பி, தமிழ் பிரியன் தம்பி, கானா அண்ணா & சென்ஷியண்ணா!
இதுதான் தரையோரக்கனவுகளோட ஸ்டார்டிங்க் பாயிண்ட் (இனி தான் கொடுமையே…. அதாவது நான் தரையில படுத்திக்கிட்டு என்னென்ன கனவு கண்டே அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு சொல்லபோறேன் வித் கொஞ்சம் டெர்ரரா..)
கனவுக்கன்னி உண்மையாகவே கனவுக்கன்னிக்கும் எனக்கும் பரிச்சயம் இருந்ததில்ல. ஆனா, ஏதோ கனவு காண தொடங்கிட்டோமே கனவுக்கன்னிய வரவழைச்சே ஆகனும்ன்னு இந்த கனவு கண்டேன். ஆனா எனக்கே கொஞ்சம் பிடிச்சிருந்தது..!
இதே பாணியிலே கனவு கண்டுக்கிட்டே போனாலும். அதிலிருந்து கொஞ்சம் கேரளா,ஆந்திரான்னு ஸ்டேட்ஸ் மாறிய கனவுகள் ரொம்ப பிடிச்சிருந்தது, அப்பவும், இப்பவும்.
கனவுக்கன்னிகளை மட்டுமே பார்த்து கொஞ்சமா கொடுமைப்பட்டிக்கிட்டிருந்த நானும் கொஞ்சம் ரூட் மாறி போன வெளிநாட்டு கனவுகள் காண ஆரம்பிச்சேன். இப்பவும் அடிக்கடி நினைச்சு பார்த்தா கண்டிப்பா இதவிட இன்னும் நிறைய வெளிநாடுகளுக்கு போகணும்ன்னு நினைச்சதுண்டு அந்த வரிசையில் நான் அண்டார்டிக்காவுக்கு போனதை பத்தி சொல்ல்ல எனக்கு ரொம்ப புடிக்கும் நிறைய சொல்லணும் (எம்புட்டு சுத்தியிருக்கேன் கொஞ்ச நஞ்சமா சுத்தினது??
ரொம்ப ஜாலியா ஊர் சுத்தி கனவு கண்டுக்கிட்டிருந்த இருந்த என்னைய எந்திரிச்சு உக்காருடான்னு சொன்னார் சென்ஷி அண்ணா. விளைவு இதோ,என்னோட தரையோரக்கனவுகளை நீங்க படிச்சுக்கிட்டிருக்கீங்க. தேங்க்ஸ் டு சென்ஷி அண்ணா.. !
அதற்கு பிறகு தான் நான் கொஞ்சம் சீரியஸா கனவு டிரைப்பண்ணனும்ன்னு நினைச்சேன்.போற ரூட்லயே (கனவுலதான்ங்க) நிறைய பேரை மீட் பண்ணி பேசணும்ன்னு எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச விசயம் அது!
நாம் காணும் எந்த ஒரு பகல் கனவுமே அது ரொம்ப சின்ன குட்டியூண்டு கனவா இருந்தாலுமே அதுல ஒரு ஃபிகர் வரும்போது வர்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அந்த வகைல நேத்து மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வரதா நேரத்துல சேர்ல உக்காந்துக்கிட்டே கண்ட இந்த கனவை தான் சொல்லணும். :
இது வரை சொன்னதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த கனவுகள், இன்னும் நெறைய நிறைய இருக்கு. அப்பறம் என் கனவுகள் முழுசையும் இங்க கொண்டுவர வேண்டியிருக்கும்.. அதை அப்புறம் காப்பியடிச்சு யாராச்சும் படம் எடுத்துப்புடுவாங்க! அதனால, என்னோட சுயமாய் காணும் கனவுகள் பற்றிய மேட்டர்களை இத்தோ இஸ்டாப்பு பண்ணிட்டு, இன்னுமொரு நல்ல தரையோர கனவு காண போய்ட்டு வாரேன் :-)
நன்றி..!நன்றி..!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (கொட்டாவிவுட்டுக்கினு போறேன்!)
டிஸ்கி:- நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் தேடிக்கிட்டு திரியாதீங்க மூலம் இங்கதான் இருக்கு !
# ஆயில்யன் 22 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
எனக்கு இல்லை பருக்கை..?
பருப்புக்கள்
இல்லாத
சாம்பார்
வெற்று
சாம்பாரினை
வெறித்து
சோற்றினை
மோர் மட்டும் ஊற்றி .
துன்னலாமா?
கல்யாண சாப்பாடு
கிடைக்குமென
மகிழ
கல்யாண மண்டபம்
தேடி போகலாமா?
நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்!
வானிலை அறிக்கை இங்க வாசிச்சிருக்காங்க நேரம் எனக்கு நல்லா இருந்தா பலத்த அடி சாரி இடி வர வாய்ப்பில்லை!
(முதன் முதலாய் விண்டோஸ் லைவ் ரைட்டரில் எழுதிய பதிவு – நல்லாத்தான்க்கீது!)
# ஆயில்யன் 48 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை, லைவ்
கடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை!
ச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு!
முதல்ல கடலை வறுக்கிறது எப்படின்னு தெளிவா புரிஞ்சுகிடணும் முன்ன பின்னே அனுபவமே இல்லாம இந்த மாதிரி சமாச்சரத்தையெல்லாம் ஹேண்டில் பண்ணுறதுங்கறது, கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம்! எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...?
சரி இதை எங்க போய் கேக்குறது? கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு! சரி
நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தரு இருக்காரு அவர்கிட்ட கேப்போம் அவுரும் தமிழ்நாட்டு ஆளுதான் அதனால அவுருக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சொல்லுவாரு தப்பா எடுத்துக்கமாட்டாருன்னு முடிவும் எடுத்தாச்சு!
தம்பி கடலை வறுக்குறது எப்படின்னு தெரியுமா? உங்களுக்கு தெரிஞ்சுருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்! அப்படித்தான் ஆரம்பிச்சேன் பயபுள்ளை அதுக்குள்ள மேலயும், கீழயும் பார்த்துப்புட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிது!
தம்பி தெரிஞ்சா சொல்லுங்க இல்லாட்டி தெரியாதுன்னு சொல்லுங்க நான் அப்படி என்ன பெருசா கேட்டுப்புட்டேன்? கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல! நேத்து கடைத்தெருப்பக்கம் போயிருந்தப்ப பார்த்தேன், பார்த்ததுமே, எனக்கும் கடலை வறுக்க ஆசை வந்திருச்சு! அவனவன் அவுங்க ரேஞ்சுல செய்யும்போது என்னாலயும், முடியும்ன்னு சமூகத்துக்கு நான் காட்டணும்ப்பா சொல்லிக்கொடு! அப்படின்னு ஒரு வழியாக, கெஞ்சி, மிரட்டி,சமாளிச்சு முக்கிய இன்போக்களை வாங்கிப்புட்டேன்! அதையும் விட, ரொம்ப பெரிய ஹெல்பு ஒண்ணும் அந்த பையன் செஞ்சிருந்தாரு ஆமாம் ஒரு முக்கியமான மேட்டரை சொல்லி, கொடுத்துட்டு போனாரு!
அவர் சொல்ல எல்லா மேட்டரையும் கரீக்டா செஞ்சு சக்சஸும் பண்ணியாச்சு! அன்று ஆரம்பித்த கடலை வறுத்தல் சங்கதி இன்று வரைக்கும் குதூகலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி வார இறுதி நாட்களில் மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு செமையா கடுப்படிக்கிற வேலை என்னான்னா ஃபினிஷிங்க் டைம்ல கொஞ்சம் சொதப்புது!
வறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு :-(
படமெல்லாம் நான் இந்த பிராசஸ் லேப்ல பண்றச்ச நானே எடுத்தது!
# ஆயில்யன் 63 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
நீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....!
பாய்களின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்,
பதுங்கியிருந்தத் சத்தம்;
கைகளுக்கிடையில் தொங்கி,
தள்ளாடிக்கொண்டிருந்தது வாளி;
கால் கடுக்க நின்று வாசலில் நிறுத்திக்கொண்டிருந்தார்கள்.
நாசித்துளைக்கும் வாசம்;
அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,
எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!
அதை நினைத்து பதை பதைத்து நின்றிருந்தேன்!
அவன் கரம் வழி கரண்டி ஏறி,
என் தட்டுக்குள் விழுந்து,
நான் முங்கி தின்ற,
அந்த சிக்கன் பிரியாணி;
இன்னும் கொஞ்சம்
நெறைய போட்டிருக்கலாமென....!
****************************************
மேலும் சில எதிர்வினைகளாற்றிய புரொபஷனல் கூரியர் & வெண்பா வாத்தி எங்கள் அண்ணன் ஜீவ்ஸ் :-)
குடி மகனே....
இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
என் வாய்வழி உள்நுழைந்து
என்னை மதிமயக்கிக் குலைத்த
அந்த முதல் பிராந்தி மயக்கம்
நீண்டிருக்கலாமென...
***************************
செம அடி சார்
வெளிச்சத்தின் ஆதிக்கச் சரசரப்பு அடங்க
காத்திருந்தது காலம்
காலினடியில் மெதுவாக வேகத்தை
குறைத்துக் கொண்டது பூமி
காலவரையற்று வீசிக்கொண்டு இருக்கிறது
நாசித்துளைக்கும் கூவ நாற்றம்
முடிச்சவிழ்த்த நேரத்தில்
கொட்டிப்போனது எல்லா சில்லரையும்
அவன் பாக்கெட் வழி
என் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த
அந்த முதல் திருட்டு
அவன் கவனிப்பு வேறு பெண் மேல்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்
***************************
கொஞ்சம் சீக்கிரமாய்!!
கருந்துகளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
கட்டவிழ்ந்துக் கிடக்கிறது காலம்
காலுக்கடியிலென்றின்றி எங்கெங்கும்
வியாபித்திருக்கிறது அண்டம்
காலவரையரை என்றின்றி எப்போதும்
வீசிக்கொண்டிருக்கிறது இதன் வீச்சம்
நிசப்தங்கள் சப்தங்களாய் மாறி
உயிரவிழ நினைத்த அந்நேரம்
எனினும் நினைத்தேன்
என்னை அப்படி உற்றுப் பார்த்து
உனக்கு ஸ்வைன் ஃப்ளூ இல்லை
என்று சொன்ன டாக்டர்
கொஞ்சம் சீக்கிரமே
சொல்லியிருக்கலாமென.......
பதிவுக்கு பிரியாணி போட்ட பதிவு!
# ஆயில்யன் 37 பேர் கமெண்டிட்டாங்க
Labels: 1ம்இல்லை, டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
ஓட்டு போடுங்க சாமி...!
வருங்காலம் இவர்கள் கையில்தான் இருக்கிறது என்ற ஒரே நம்பிக்கையோடு....!
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு இனித்திட வேண்டி....!
நாடு நலம் பெற;
நல் காட்சி மலர்ந்திட;
புதிய ஹிஸ்டரி எழுதிட...
பழைய ஹிஸ்டரியை அழித்திட..
காவியத்தை மாற்றும் காட்சிகள்
பிடிக்காத மாநிலத்தின் பிடித்த ஃபிகர்களுள்,
புதிய ஃபிகரினை தேர்ந்தெடுப்போம்
தமிழ் திரை மக்கள் கொண்டாட...
மல்லுமக்கள் திண்டாட...
உலகம் ரசிக்கின்ற கூட்டம்!
இது இவர்களின் வெற்றிக்கான கட்டம்
ஓட்டு போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
(எல்லாருமே செலக்ட் பண்ணுற மாதிரியே தெரியிறாங்கன்னு நீங்க சொன்னீங்கன்னா...? நீங்க கனவு தேசத்துக்கு புச்சுன்னு கன்பார்ம் பண்ணிக்கலாம்!)
# ஆயில்யன் 24 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
கடலை நினைவுகள்!
முன்னாடியே டிஸ்கி:-
டெரரர் பிளான் ரெடியான இடம் இங்க இருக்கு!
*************
கடலையிலிருந்து
சொத்தையை பிரித்து
மத்ததை சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
கடலையை
சரிப்பாதியாக
கடலையை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
வறுக்கின்ற மண்ணாய்
கடலைக்குள் சேர்ந்து
வெளியேற மறுக்கிறது
அந்த வறுபட்ட மண்
கடலையும்
திங்க நல்லதுதான்
தான் கருகி
வந்தால்
கருகிய
சுவையாய்
நாக்கில் ருசிக்கிறது
என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி
கடலோரம்
அழகாய்
உன் கடலையையும்
என் கடலையையும் சேர்த்து
சுவைத்தப்படியே
வாயினில் மெல்ல மெல்லக்கரைய
நம் ஒவ்வொரு கடலையும்
நெருப்பில் கருகிய
கடலைகளாய்,
ஒரு வினாடி
தீச்சுவாலைக்கு பின்
முழுவதும் கருகிவிட்டது
மொத்தக்கடலையும்!
அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!
கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
மூச்சு திணறாமல்
மெதுவாக தண்ணீர் குடித்தப்படியே
ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....
# ஆயில்யன் 42 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
*எச்சரிக்கை* இப்படியும் நடக்கலாம்..!
எல்லையை மீறி செல்லவேண்டாம்
உடலும்..!
உணவும்..!
(வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் நான் சொல்றதை சொல்லிப்புட்டேன் பிறகு உங்க இஷ்டம்! அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம்!)
நன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி!
# ஆயில்யன் 25 பேர் கமெண்டிட்டாங்க
Labels: உடல், டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
ஆத்தா நான் லூசாயிட்டேன்...!
உன் குரலை மட்டுமே கேட்க
வேண்டாமென என் இரு செவிகளிலும்
ரெண்டு ரோல் பஞ்சினை வைத்தேன் என்றதற்கு
என்ன சொல்கிறேன் என்று தெரியாமல்
தான் பேசிக்கொண்டிருந்ததை கேக்கவில்லையே
என்று என்னை டெரராய் அடித்தாயே!
நாம் சந்தித்த இடங்களில்
நீ இல்லாத நாட்களில்
நான் நன்றாக இருந்தேன்
நிம்மதியாக இருந்தேன் என்றதற்கு
என்னுடன் பேசாமல் நிம்மதியாக இருந்தாயா?
என்று என்னை டெரராய் அடித்தாயே!
பிறந்ததில் இருந்து
நீ இத்தனை அழகா
என்று நான் ச்சும்மா கேட்டதற்கு
கண்ணாடியில் எனை காணாததால்
வந்த அழகு இது என
தைரியமாய் சொன்னாயே!
பைத்தியமடி நீ எனக்கு!
பைத்தியமானேன் நான் எனக்குள்!
டிஸ்கி:- இங்க படிச்ச பாதிப்புத்தான் என்னிய மன்னிச்சுடுங்க நாணல் அக்கா :)
# ஆயில்யன் 29 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
இது ஒரு பொன் காலைப்பொழுது!
ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...
இது ஒரு பொன் காலைபொழுது
பிளாக்கர் பக்கம் ஒடுகின்றேன்
புதிதாய் பதிவு தினம் போடுகின்றேன்
இது ஒரு பொன் காலைபொழுது
ஆயிரம் ஹிட்ஸ்கள் கோலமிடும்
பதிவுக்கு கொஞ்சமாய் கமெண்ட்ஸும் வரும்?
பாதியில் பதிவுகள் ஸ்ட்ரக்கி விடும் :-(
மொக்கைக்கும் கும்மிகள் தாளமிடும் :-)
மூத்த பதிவர் கமெண்டிவிட,
இது ஒரு பொன் காலைபொழுது...!
தமிழ்மணம் எனக்கொரு போதி மரம்!
நாளும் எனக்கது பதிவு தரும்!
ஒரு நாள் கூகுளில் என் பேரும் வரும்,
திருநாள் நிகழும் தேதி வரும்!
மொக்கைகளால் பதிவுகளை நான் செய்தேன்
இது ஒரு பொன் காலைப்பொழுது!
# ஆயில்யன் 71 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
பதிவு என்ற சொல்லே இனி வேண்டாம்!?
நான் பார்த்த பதிவுகளுக்கு ஒரு நன்றி!
அதை சேர்த்த தமிழ்மணத்துக்கும் நன்றி!
அயராத பதிவர்கள் சொல்லும் கும்மி கும்மி!
அருமையான பதிவர்கள் சொல்லும் கும்மி கும்மி!
பதிவு என்ற சொல்லே இனி வேண்டாம்!?
பிளாக் என்பதே இனி போதும்....!
இனிமேலும் பிளாக்கு பண்ண தேவையில்லை
இதுபோல பிளாக்கு எங்கும் இல்லையில்லை!
தமிழே வா............
# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!
டிஸ்கி:- ஆரம்ப கல்வியில் வாத்தியார்களிடம்,அடிபட்டு, உதைப்பட்டு, ரணப்பட்டு போகும் ஒரு மாணவன் தன் எண்ணங்களை ஒரு பேப்பரில் குவித்து தன் கண்ணீர்லால் நனைத்து எழுதிய காவியம்! (என்னது ஏதோ பாட்டு மாதிரி இருக்கா???? நோஓஓஓஓஓ!)
என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்
அவர் என் பேரைத் தினம் கூறும் வாத்தி அல்லவா
அவர் பரீட்சை எனக்கு வைத்த ஆப்பல்லவா?
என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்
என்றும் ஜீரோவான என் எக்ஸாம் பேசாதய்யா!
பெயிலான சப்ஜெக்ட் மீண்டும் மலராதய்யா!??
கனவான வாழ்க்கை மீண்டும் தொடராதய்யா?
கனவான வாழ்க்கை மீண்டும் தொடராதய்யா?
எம்டியான என் வாழ்வு திரும்பாதய்யா!!!
என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!
எந்தன் புதுத்தெருவின் ப்ரெண்டாக வந்தானம்மா
தோளோடு தோளாக வளர்ந்தோம்மா
காலெஜ் என்னும் பஸ் ஏறி அவன் பறந்தானம்மா
பி.இயோ பி.இயாக அவன் கலந்தான்ம்மா
என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்
இன்று எனக்காக கூட படிக்க துணையில்லையா
என் ஒளி வீசும் கல்வி கேட்க வாத்தியில்லையே!
இந்த வாழ்வு இறைவன் தந்த வரமல்லவா?
கல்வியோடு கல்வியாக வளர்வேன் அய்யா!
என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்
இது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்
என்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்!
**********************
கீழ் டிஸ்கி:- யாருய்யா இது? இம்புட்டு அருமையா மொக்கை போட்டிருக்கேன்ன்னு பார்க்க ஆசைப்படறவங்களுக்காக என்னோட போட்டோவும் இத்துடன் இணைத்துள்ளேன்ன்ன்ன்ன்!
# ஆயில்யன் 85 பேர் கமெண்டிட்டாங்க
Labels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை