Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

வாழ்த்து அட்டை!


பொங்கல்,தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற இன்னபிற விசேஷங்கள் வருகிறதென்று தெரிந்தால் ஒரு மாதத்திற்கு முன்பே ரொம்ப ஜாலி + இண்ட்ரஸ்ட் ரெண்டும் கலந்து கட்டி அடிக்கும் !குட்டி பையனை இருக்கும்போது கடையில கார்டு வாங்கி வாழ்த்துக்கள் எழுதி அனுப்புற பழக்க இருந்துச்சு பிறகு இப்ப சுட்டி பையன் ஆனாப்பிறகு எதையாச்சும் கிரியேடிவ்வா செஞ்சு வாழ்த்து சொல்லணும்ன்னு மனசு கிடந்து துடியாய் துடிக்கும்! அதுவும் போட்டோஷாப் இன்னும் பல கிறுக்கு வேலைகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்ட பிறகு நிறைய நிறைய டெஸ்ட் செஞ்சு பார்க்க தோணிடும்!

கூகுள்ல அலைஞ்சு திரிஞ்சு சூப்பரா ஒரு போட்டோவை சுட்டு அதுல என்னோட (இல்லாட்டி மல்லு ஃபிகர்) போட்டோவை போட்டு பேக்கிரவுண்ட் எல்லாம் சூப்பரா செட் பண்ணி கீழ அழகாய் வாழ்த்துக்கள்ன்னு டைப் செஞ்சுட்டு அதை அப்படியே ஒரு பத்து பதினைஞ்சு ப்ரெண்ட்ஸ்க்கு அனுப்பிச்சு வைச்சுட்டா ஹப்பாடான்னு ஒரு திருப்தி வரும்! அதுக்கு ரிப்ளை வருதோ அல்லது அந்த வாழ்த்து or போட்டோ யாரையாச்சும் ஈர்க்குதா அப்படின்னு எல்லாம் கவலைப்பட்டதே கிடையாது!- (ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பிச்சதுக்கு ஒரு நண்பர் அதெல்லாம் நம்ம கலாச்சரம் இல்லைன்னு போட்டு கும்மிட்டாங்க!)

இயல்பாவே வாழ்த்து அட்டைகள் மேல ஒரு பிரியம் இருக்கறவங்களாலதான் தொடர்ந்து இது மாதிரி வாழ்த்து அட்டைகள் செஞ்சு அல்லது வாங்கி அனுப்பிச்சிக்கிட்டே இருக்கமுடியும்! இதை செய்யறதால என்ன பெருசா சாதிச்சுட்டோம் பதில் ஒருத்தங்க கூட போடமாட்டேங்கறாங்களேன்னு சில சமயம் தனக்கு தானே கேள்விகள் ரைஸ் ஆனாலும்,வெகு சீக்கிரத்துலயே அதை மறக்க வைக்கிற மாதிரி அடுத்து வர்ற விசேஷ நாளுக்கு என்ன செய்யலாம்ன்னுதான் யோசிக்க தோணும்! - லைஃப்ல இதெல்லாம் சாதா’ரண’மப்பான்னு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க :)

போட்டோஷாப்ல ரெடி பண்றது ஒரு ஸ்டைல்ன்னா இன்னும் சில பேர் ஓவியங்கள் வரையறது,படங்களில் சின்ன சின்ன மணிகளை கொண்டு ரொம்ப பொறுமையாக ஒட்டி அனுப்புவாங்க! -சூப்பரா இருக்கும் - முன்பெல்லாம் இப்படி வரும் ஓவியங்களை நிறைய பேர் ஆர்வத்தோட ஃப்ரேம் செஞ்சு,யாரு கொடுத்தான்னு பேர் எல்லாம் எழுதி வீட்ல மாட்டி வைச்சுப்பாங்க! இப்ப அதெல்லாம் ரொம்ப கம்மியாகிடுச்சு !

சரி இப்ப எதுக்கு இந்த பீலிங்க்ஸ் அப்படின்னு நீங்க கேக்கமாட்டீங்க இருந்தாலும் சொல்லவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கே! (பின்னே எண்ட்கார்டு போடணும்ல!) இன்னிக்கு உலகம் பூரா வாழ்த்து அட்டைகள் கிரியேடிவா தாங்களாகவே தயாரிப்பவர்களை உற்சாகப்படுத்தணும்ன்னு உலக நாடுகள் சபை சார்பாக WORLD CARD MAKING DAY கொண்டாடுறாங்க அதான்!

வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் ஆர்வம் நிறைய இருக்கறவங்க ந்த பக்கம்போனீங்கன்னா - ஏகப்பட்ட வித விதமான டிசைன் கார்டுகள் செய்யுறதுக்கு மாடல்கள் கொடுத்து - சோறு போட்டு குழம்பும் ஊத்துறாங்க! டிரை பண்ணி பாருங்க!

IDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் :(

சாட்டிலைட் இமேஜ்களில் செத்துக்கொண்டிருக்கும் மக்களினை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் சபை

எந்த நோக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ....??

ஒட்டுமொத்தமாய் அழிந்து போகட்டும் ஒரு இனம் என்ற ஆர்வத்தினூடாகவா....!

கிட்டதட்ட இரு மாதங்களுக்கு முந்தைய நிலைமையில் இப்படி என்றால் இப்பொழுது அதிவேகத்துடன் தன் வெறித்தனத்தினை காட்டிவரும் அரசின் செயல்பாடுகளில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது வெளி உலகுக்கு தெரியகூடாத வகையினில் பத்திரிக்கையாளர்களினை தடுத்துவரும் நிலையில் இப்படியான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது.

சாட்டிலைட் இமேஜ்கள் பெறப்பட்ட தளம் - இங்கே






செப்டம்பர் 16 - ஓசோன்! ?

பலூன் போன்ற உலகம்

அதில் பாதுகாப்பாய் நாம்

உழன்றுகொண்டும் உருண்டுகொண்டும்!

இன்னும் நிறைய உபத்திரவம் கொடுத்துக்கொண்டும்,

இயற்கை பலூனில் ஏகப்பட்ட இடங்களை

பஞ்சராக்கிக்கொண்டும்...!

சுழன்று கொண்டிருக்கிறோம்!






செப்டம்பர் - 16 - உலக ஓசோன் தினம்!

நம்ம கவர்ன்மெண்ட் இன்னா சொல்லுதுன்னா, ரகசிய மொழியில சொல்லியிருக்காங்க நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

நாம் அடிமைகளாகிப்போன அவலம்!

அன்புக்கும் அறிவுக்கும் இன்னும் சில இடங்களில் ஆணவத்திற்கும் அடிமையாகிப்போன வரலாறு மட்டும் கொண்ட மனிதன் இனி மக்கிபோய் பின் விக்கித்து போகும் விலைக்கு போயிருக்கும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கும் அடிமைகளாகிப்போய்விட்ட அவலத்தினை சித்தரிக்கும் காட்சிகள்!


19.08.08 செய்திகளில்....!

நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் சென்னைக்குத் திரும்பியுள்ளது. நேற்று காலை முதல் பல விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்லை என்று கூறி கயிற்றைக் கட்டி மூடி விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாலை வாக்கில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்ைல என்ற வாசகம் காணப்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் திரும்பி விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பாதிக்கும் மேலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போதிய சப்ளை இல்லை என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காரணம் கூறப்படுகிறது. சப்ளை வந்தால்தான் விநியோகம் சுமூகமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களில் பெருமளவில் கூட்டம்காணப்படுகிறது. திடீரென பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதால் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்பட்டது.

ஆதிவாசிகள்

நம் நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதபடியான ஒரு மனித சமூகம் காடுகளில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?

அதுவும் இந்த காலகட்டத்தில் எப்படியாகிலும் ஒன்று நம்மை போன்ற மனிதர்கள் கண்டிப்பாய் காடுகளில் தேடிதிரிந்து கண்டுபிடித்து கொண்டுவரமுயற்சிப்பார்கள்!

அல்லது ஆதிவாசிகளே தட்டுதடுமாறி நகரத்திற்கோ அல்லது நார்மல் மனிதர்களையோ கண்டிருக்கமுடியும் ஆனால் இதில் எதுவுமே நடைப்பெறவில்லை இதுவரையிலும்...!

சிவப்பு நிற வர்ணங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர் அனேகமாக ஆண்களாக இருக்கக்கூடும்!


கருப்பு நிறம் வர்ணம் அல்லது தங்கள் உடல் நிறத்தினை வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர் அனேகமாக பெண்களாக இருக்ககூடும்!

எப்பொழுதுமே கொடிய மழையின் பிடியில் சிக்கி தவிக்கும் பிரேசில் - பெரு எல்லைப்புற காடுகளில் காணப்படும் இந்த ஆதிவாசிகள்!

இது போன்ற சூழலினை நீங்க எதிர்பாராமல் காணும்போது உங்களுக்கு தோன்றும் அதே கேள்விகள்தான் அனைவருக்குமே தோன்றுகிறதாம்!

1.ஏன் இவர்கள் வர்ணங்களின் மூலம் வித்தியாசப்படுத்திக்கொள்கிறார்கள்?
2.என்ன சாப்பிடுவார்கள்?
3.எப்படி இவர்களால் இதுபோன்றதொரு குடிசை அமைப்பினை உருவாக்க முடிந்தது?
4.இவர்களின் மொழி என்ன?
5.சமூக அமைப்பு எப்படி இருக்கிறது?

இது போன்ற பலப்பல கேள்விகள்!

இந்த புகைப்படங்கள் விமானத்திலிருந்து எடுக்கப்பட்டதாம்! விமானத்தினை அதிசயமாக பார்க்கும் சிலர் அதே சமயத்தில் ஏதோ ஆபத்து என்று, வில்லினை கொண்டு குறிபார்க்கும் ஆண்கள் என பிரமிப்பினை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள்தான் இவை!

ஆதிவாசிகள் வாழ்க்கை இப்படியே சென்றாலும் ஒன்றும் யாருக்கும் பிரச்சனையே இல்லையென்றாலும் கூட இவர்களின் பாதுகாப்புக்கு நம்மால் எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான் இப்போதைய கவலை!

ஏற்கனவே பெரும்பாலும் அழகிய இயற்கை சார் இடங்களில் வாழ்ந்து வந்த ஆதிவாசிகளை மிரட்டி பணியவைத்து நிலங்களை சூறையாடிக்கொண்ட பிரபுக்கள் பரம்பரையினரை போன்று வேறு எவரும் வந்து இவர்களின் வாழ்க்கையினை சீரழித்துவிடக்கூடாது என்ற கருத்தினையே பல ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்!

இது போன்ற ஆதிவாசி மக்களின் வாழ்க்கையினை நாம் மதித்து அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் வாழ்க்கை பயணத்தை தொடரச்செய்யவேண்டும்! அவர்களுக்காய் எப்பொழுது எந்த மாதிரியான தொடர்புகளாக நம் நாகரீக வாழ்க்கை முறைக்கு மாற வருகிறார்களோ, அப்பொழுது வரட்டும் அது வரையிலும் ஆராய்ச்சி என்ற பெயரில் கூட,அவர்கள் வாழ்வில் அதிகம் குறுக்கிடவேண்டாம் என்பதே மனிதாபிமானமுள்ள ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது!

நாம் நம் நார்மல் வாழ்க்கையினை நாகரீகமாக வாழ்ந்து இயற்கையினை நாசப்படுத்திசெல்வோம்!

ஆதிவாசிகள் - அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!

எனது நினைவுகளில்.....
இதே போன்றதொரு சம்பவமாக டிசம்பர் 26 2004ல் நிகழ்ந்த சுனாமி பேரழிவில் கடும் பாதிப்புக்குள்ளான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்றிருந்த, அரசின் ராணுவ விமானம் ஒரு காட்டு பகுதியினை கடந்து வருகையில் இதே போன்றதொரு ஆதிவாசி உருவம் கையில் அம்புடம் துரத்தி வந்த காட்சியினை போட்டோவாக "ஹிந்து" நாளிதழின் கடைசிபக்கத்தில் வெளியிட்டிருந்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது! யாருக்காவது அது சம்பந்தமான சேதிகள் தெரிந்திருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

photo courtesy : survival - international
Daily mail

சீனா பூகம்பமும், ஷெரான் ஸ்டோனின் ”கர்மா”வும் மற்றும் இன்ன பிற சங்கதிகளும்!

சுமார் 68000 ஆயிரம் பேரினை பலி வாங்கிய பூமி அன்னையின் செயலால் ஸ்தம்பித்துப்போய் நிற்கும் சீனாவிற்கு - இந்த காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளையும் வேறு நடத்தியாகவேண்டும் - கொஞ்சம் சிரமாமான காலகட்டம்தான்!

இந்த நேரத்தில்தான் கேன்ஸ் படவிழாவிற்கு வந்திருந்தா ஷெரான் ஸ்டோனிடம் ஒரு கேள்வியினை கேட்டிருந்தார்கள் பத்திரிக்கையாளர்கள்.

ப:- சீனா பூகம்பம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று? ( இதுவும் வழக்கமான பத்திரிக்கைக்காரர்களின் கொலவெறி கேள்விதான். ஸ்டேன் புத்தமதத்திற்கு மாறியவர். சமீபத்தில் திபெத் தலைவர் தலாய் லாமாவிடம் அழகாய் வணங்கி ஆசி பெறுவதை அகில உலகமே ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றுதான்!)
இந்த கேள்விக்கு,மிக்க ஆர்வத்துடன் பதிலளித்த ஸ்டோன் ” எனக்கு முதலில் சீனா திபெத்திடம் நடந்துக்கொள்ளும் முறை வெறுப்படைய செய்கிர்றது. கருணையே இல்லாத செயலாக எனக்கு தெரிகிறது! எல்லா செயல்களும் எல்லா சோகங்களும் சீனாவிற்கு நிகழ்வதற்கு காரணம் கர்மா திபெத்தியர்களுக்கு அவர்கள் செய்த பாவச்செயலுக்கு பலன்தான் என்ற ரீதியில் கூறிச்செல்ல,- நீங்களும் இங்க போய் பார்க்கலாம்!

இப்ப அந்த மேட்டர்தான் சீன பத்திரிக்கைகளின் சூடான இடுகை பகுதிக்கு போயிருக்கு!

கிழிடா போஸ்டரை, படப்பொட்டியை தூக்கிட்டு போங்கடா அதையும் மீறி படத்தை போட்டிங்கன்னா தியேட்டரை எரிப்போம், அப்படின்னுல்லாம் மக்கள் மிரட்டாம, டைரக்டா கவர்ன்மெண்ட்டே சொல்லிடுச்சு இதையெல்லாம் செய்யாதீங்கடாப்பான்னு!?

இப்படிப்பட்டதொரு கடுமையான எதிர்ப்பினை கிளப்பிய இந்த செயலில் அதிகம் பாதிக்கப்பட்டது தியார் என்னும் அலங்கார பொருட்கள் சந்தைப்படுத்தும் நிறுவனம்தானாம்! ஏகப்பட்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஸ்டோனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததால் அனைத்து பொருட்கள் + விளம்பரத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்பு வந்து இப்போதைக்கு கம்பெனி ஸ்டோனை கழட்டி விட்டுவிட்டது!

சரி! அப்படி என்ன, கர்மாவில அப்படின்னு கேட்கறவங்களுக்கு கர்மா - இந்துக்களும் சீக்கியர்களும் புத்தமதத்தினை சார்ந்தவர்களிடையே அதிக புழக்கத்தில் இருக்கும் சொல்லாகும்!

கர்மா என்பதன் பொருள் வினை அல்லது செயல் என்று கூறலாம் (சரியான்னு சொல்லுங்கப்பா!)

ஏற்கனவே செய்த செயலுக்கான பலனாகவும் இந்த கர்மா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது!

ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது பொது!

கர்மா என்பது அவரவர் வினைப்பயன்,அதாவது அவரவர் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு ஏற்றாற்போல பலன் வந்து சேரும்! நம் தமிழில் இதற்கு ஊழ் வினை என்றும் கூட பெயருண்டு!

சரி இத விட்டுதள்ளுங்க அப்புறம் பார்த்துக்கலாம் ஷெரான் ஸ்டோனுக்கு என்னாச்சுன்னு சொல்லணும்ல....

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைச்சா கெட்டதுதான் நடக்கும்ங்கற விஷயத்தை தான் அந்தம்மா சொல்லியிருக்காங்கன்னு பலர் ஸ்டோனின் கருத்துக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க, கடைசியா ஸ்டோன் சொன்னது:

நான் எதுனா தப்பா சீனா மக்களை பத்தி சொல்லியிருந்தா அதப்பத்தி கண்டுக்காதீங்க! நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!

(அப்படின்னுத்தானே சொல்லியாகணும் இல்லாங்காட்டி தியார் எவ்ளோ காசு போட்டு விளம்பரம் எடுத்து எல்லாத்தையும் பொட்டியில போட்டு பூட்டி வைக்கறதுக்கா!?)

குட்டி பாப்பாக்களுக்கும் - கிரீன் கான்செப்ட்!


இயற்கையினோட இயைந்த வாழ்வினை இளம் வயதிலேயே துவக்கிவிட பல பல யோசனைகளோடு களமிறங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும் சுற்றுசூழல் தன்னார்வலர்களும் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களிலும், முடிந்த மட்டும் மறு சுழற்சிக்கு உட்ப்படுத்தப்படுகின்ற பொருட்களையோ அல்லது இயற்கைக்கு இனி கேடு விளைவிக்காத வகையிலான பொருட்களையோ பயன்படுத்தும் வகையில் இவர்களின் முயற்சி இருந்து வருகிறது! அதுபோன்ற விஷயங்களில் ஒன்றுதான் இளம் குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிப்பும்!

டயாப்பர்கள் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான உள்ளாடைகள் பெரும்பாலும் தற்போது வெகு புழக்கமான விஷயமாக மாறிவிட்டது நம்மூர்களில்! முன்பெல்லாம் அதிகம் சாதாரண காட்டன் துணிகளினையோ அல்லது வேட்டி புடவைகளையோ உபயோகித்து ஒரு முக்கோண வடிவில் டயாப்பர்களாக பயன்படுத்தி வந்த நம்மூர் ஆட்கள் கூட இப்போது வெகு வேகமாக ரெடிமேட் டயாப்பருக்கு மாறிவிட்டனர்! ரொம்ப சிரமமே இல்லாத பணியாகவும் மாற்றம் பெற்றுவிட்டது!

பெரும்பலானோர் பயன்படுத்தும்,எளிதில் மக்கிப்போகாத பொருட்களால ஆன டயாப்பர்களை அவற்றின் உபயோகத்திற்கு பின்னர் கழிவுகளாக வெளியேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது! இந்த குறையினை நிறைவேற்றும் வகையில் புதிதாய் ஒரு கீரின் டயாப்பரினை அறிமுகப்படுத்தியுள்ளனர்! இதை பயன்படுத்திய பின் மிக எளிதிலேயே அப்புறப்படுத்திவிடமுடியுமாம் அது மட்டுமில்லாமல் குறைந்த காலத்திற்குள்ளேயே மண்ணுக்குள் மக்கி சிதைந்துவிடுவதால்,மற்ற பிளாஸ்டிக் லேட்டக்ஸ்களினை போல மண்ணுக்கு மாசு விளைவிப்பதில்லையாம்!(இந்த பொருட்கள் மண்ணுக்குள் மக்கிப்போவதற்கு நெடும் ஆண்டுகள் ஆகுமாம்! ஆனா கீரின் டயாப்பர்கள் ஒரு வருடத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடக்கூடியவையாம்!)

வாழ்க்கையின் தொடக்கம் முதலே வாழ்வது கீரினாக இருக்கட்டும் கிளீனாக இருக்கட்டுமே நம் இளைய தலைமுறை!

அட இதே கான்சாப்ட்டத்தான் நம்ம அம்மா பாட்டிகள் காலத்திலேர்ந்தே இருக்கு! ஆனாப்பாருங்க இப்ப ஊரு உலகமெல்லாம் சுத்தி வரும்போதுமட்டும்தான் நமக்கு ஒரு ஆசை வரும் சரி நாமளும் யூஸ் பண்ணுவோம்னு!

எது எப்படியோ நல்லதா இருந்தா சரி!

வீடியோ காட்சியாக இங்கு

பீடி- இது எப்படி இருக்கு?


அப்படிப்பட்ட விஷயம்:-

இந்தியாவில் தற்போதைய நிலவரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவுகளில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் சுமார் 53 சதவிகிதம் பேர் பீடி பழக்கம் உள்ள மக்கள் அதாகப்பட்டது நடுத்தரத்திலிருந்து வறுமைகோட்டுக்கு அந்த பக்கமும் இந்த பக்கமும் இருக்கும் இவர்கள்தான் எப்பாடுபட்டாவது புகைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகம் புழக்கத்தில் விடும் புகை பீடியால் மட்டுமே! கிட்டதட்ட ௮00 மில்லியன் பீடிகள் உற்பத்தி செய்யப்படுகிறதாம் வருடம்தோறும்!

சிறுவயதிலேயே சிக்கென பிடித்தேன் பீடியை என்று பிடித்துக்கொள்ளும் இந்த பழக்கம், ஆர்வத்தின் அடிப்படையில் உண்டாகிறதாம்,பிறகு விடும் புகை, பெறும் புகை என பலதரப்பட்ட புகைகளினால் அதிகம் நோய்களுக்கு ஆட்பட்டு அவதியடைந்து சரியான மருத்துவசதிகள் பெற முடியாமல் அல்லது பெற வசதி இல்லாமல் கடைசியில் இயற்கையை மீறி தம் உயிர் மூச்சினை விடும் காலத்திற்கு முன்பே தாங்களே புகையோடு புகையாக விட்டுச்செல்கின்றனர்!

மத்திய அரசு சுத்தமாக தடுக்காவிட்டாலும் கூட மண்டை ஓட்டு படங்களினை பீடிக்களில் வரைந்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாம்! (வரையறது ரொம்ப கஷ்டமான விஷயம்தான்!)


இப்படியான நிலைமை:--

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பீடி உற்பத்தி செலவு அதிகம். பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் இங்கு அதிகம்.

மத்திய அரசின் புதிய உத்தரவு பீடி உற்பத்தி செலவை மேலும் அதிகரிக்கும். இது தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.புகை பிடிக்கும் பழக்கத்தை ஒரு போதும் ஆதரிக்கக் கூடாது.

அதே வேளையில் மத்திய அரசின் புதிய உத்தரவு லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பீடிகளில் மண்டை ஓடு சின்னம் வைக்கும் திட்டத்தை கைவிடும்படியும் லட்சக்கணக்கான பீடி தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் எதிர் காலத்தையும் காப்பாற்று மாறும் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் - கருணாநிதி..

அப்புறம் ரிசல்ட் எப்படி?

காக்கா - க்ரோ வித் ஜப்பான்!


பாட்டி வடை சுட்டு காக்கா லவட்டிக்கிட்டு போன கதையை நீங்க போய் இங்க சொன்னீங்கன்னா, வரும் பதில் அடப்போய்யா இங்க எல்லாம் ஆளுங்கள தூக்காதது ஒண்ணுதான் கொறைச்சல் இதுல நீ இந்த கதையை சொல்லி என்னமோ பல வருடங்களா புழக்கத்தில் இருக்கும் நீதிக்கதையுன்னு சும்மா கதை வுட்டுக்கிட்டு திரியிறீங்களேன்னு கேப்பாங்க டெக்னாலஜி டெவலப்பண்ணிக்கிட்டிருக்கற ஜப்பான்காரங்க!அவ்ளோ இம்சை கொடுத்து டோக்கியோவை துவம்சம் பண்ணுதுங்களாம் இந்த காக்காக்கள்!

மனிதர்களுக்கு இணையாக போட்டிப்போட்டுக்கொண்டு தம் இனத்தை பெருக்கிக்கொள்ளும் காகங்களுக்கு தேவையான உணவினையும் மனிதர்களிடமிருந்து தட்டி பறித்து செல்கின்றன! இங்குதான் மனிதர்களுக்கும் காகங்களுக்கு கடும் சண்டை நிகழ்கிறதாம்! பலரின் தலையினை புண்ணாக்கி புண்ணியம் கட்டிக்கொள்கின்றனவாம்! (அந்த ஷார்ப்பான கடினமான காகங்களின் வாய்ப்குதியினை கொஞ்சம் பயத்துடனே விவரிக்கிறார்கள் ஜப்பானியர்!)

பள்ளி செல்லும் சிறுவர்கள் பள்ளியினுள் கையில் குடையுடன் நடமாடி தங்களையும் தங்களது மதிய உணவையும் பாதுகாக்கும் நிலைமைதான் இப்போது! தெருவில் நிம்மதியாக ஒரு சாக்லேட்டினை தின்று செல்ல முடியாமல் தவிக்கும் சிறுவர் சிறுமியரிலிருந்து பலரும் பலவிதமான வேதனைகளை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கின்றனவாம் காக்கை கூட்டங்கள்!

இவற்றின் அளவிடமுடியாத வளர்ச்சியினை கண்டு ஜப்பான் கொஞ்சம் திணறித்தான் போயிருக்கிறது. (உத்தேசமாக 1.50 லட்சம் காக்கைகள் பறக்கின்றனவாம்!) கடும் கண்டனங்களை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் அரசு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு பொதுஇடங்களில் காக்காகளை ஒழிக்கும் வகையில் வாயுவினை கொண்டு பொறிகள் வைத்து அழித்தும் வருகிறது.

ஆனால் வன்முறையின் மீது நாட்டமில்லா ஜப்பான் காகங்களை இப்படி கொல்வதையும் மக்கள் விரும்பவில்லை!

சரி குஞ்சுகளை பொரிக்கும் இடங்களிலேயே, பயபுள்ளைகளின் மேட்டரினை முடிக்கலாம் என்று திட்டமிட்டு செயல்பட்டால் இவர்களை விட காகங்கள் கூடுதலாக யோசித்து சும்மா லொலலொலா கூடுகளை கட்டி எஸ்ஸாகிவிட்டு வேற இடங்களில் குடும்ப சகிதமாய் குதூகலமாய் வாழ வழி தெரிந்து வைத்திருக்கின்றனவாம்!

இந்த மாதிரியான முடிவுவினை கூட அரசு எடுக்க காரணம் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரி கோல்ப் விளையாடிக்கொண்டிருக்கையில் ஒரு காகம் அவரின் தலையில் கொத்தி விளையாடி வினை தேடிக்கொண்டதுதானாம்!

வெளியே சொல்லிக்கொள்ள இயலாத அளவு கதறுகிறார்களாம் ஜப்பானிய விலங்கியல் அறிஞர்கள் கூட...!

காலையில் எழுவதற்கு முன்பே எழுப்பும் காகங்களின் இரைச்சல் சத்தங்களுக்காகவே காதில் எதையாவது திணித்துக்கொண்டு வேலைக்கு செல்ல எத்தனிக்கும் பலர் வேண்டிக்கொள்வது நிம்மதியாய் தலைக்கு எந்த தொந்தரவும் வந்துவிடாமல் இந்த நாளை இனிய நாளாக்கவேண்டும் சனீஸ்வர பகவான் என்றுதானாம்!

LITTER இந்தியாவாக மாறும் LITTLE இந்தியா - சிங்கப்பூரில்!



ஆயிரக்கணக்கில் காலியான தண்ணீர் பாட்டில்கள்
அதே கணக்கில் காலியான குளிர்பான பாட்டில்கள்
எண்ண இயலாத அளவு சிறு சிறு காகித கிண்ணங்கள்
எங்கு பறக்கின்றன என்று தெரியாத அளவு சிறு சிறு காகிதங்கள்

இவையனைத்தையும் ஒன்று சேர்த்து,கூட்டி பெருக்கவைத்து சுத்தப்படுத்து வேலை செய்யும் சகோதரர்களை நாம் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால், கஷ்டமாகத்தான் இருக்கிறது!( அட அது அவங்க வேலைத்தானப்பா அப்படின்னுத்தான் பலரும் சொல்வார்கள்! சரி அவர்களின் சொல்படியே விட்டுவிடுவோம்!)

சரி இந்த விஷயங்கள் எங்கே நடக்குது? என்று கேட்பவர்களுக்கு, ரோட்ல சோத்தை போட்டு திங்கலாம்டா! அப்படி ஒரு சுத்தம்! அப்படின்னு ஏற்கனவே அறிமுகமாயிருக்கும் நாடான சிங்க்ப்பூரில்தான்...!

சரி இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது யார் என்று கேட்டீர்களெனில் அதுவும் நாம்தான்! நம்மைப்போன்று வேலை தேடி வந்திருக்கும் மற்ற இந்திய மாநிலத்தவர்களும்தான்!

ஒவ்வொரு வாரமும் வார இறுதி விடுமுறை நாளில் நண்பர்களை சந்தித்து கூடி (குடி?!) களித்திருந்து செல்லும் இடமான லிட்டில் இந்தியா பகுதியில்தான் இந்த குப்பைகளின் அலங்கோலங்களை காணமுடியுமாம்! இத்தனைக்கும் அந்த பகுதியில் சிறப்பு ஏற்பாடுகளாய் குப்பை தொட்டிகளினையும் அதிகப்படுத்தி வைத்துள்ளார்களாம்!

இத்தனைக்கும் சிங்கப்பூரில் பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு தண்டனையும் உண்டாம்! அப்படி இருக்கும்போதே இப்படி!!

வார இறுதி நாளில் அங்கு சுத்தம்செய்யும் பணியாளர்களுக்கு கண்டிப்பாய் அவர்களின் மனசுக்குள் எழும் கேள்வி...

ஏம்ப்பா நாங்களும் வெளிநாட்லேர்ந்துதான் வந்து வேலை பாக்குறோம் எங்களுக்கும் இன்னிக்கு ரெஸ்ட் கிடையாதா....???? - இதுவாகத்தான் இருக்கும்!

ராஜாளி

ரொம்ப பாரம்பரியமான பறவையாக பக்தி மார்க்கத்திலும் ரொம்ப பயனுள்ள பறவையாக விவசாய நிலத்திலும் பணி புரிந்த புரிந்துக்கொண்டிருக்கு எதிர்காலத்தில் பார்க்கவே முடியாமல் போகப்போகும் பறவையினம்தான் ராஜாளி!

அற்புதமானதொரு கடவுளின் படைப்பில் ஒரு துப்புரவாளனாக,சுற்றுசுழலுக்கு பாதுகாவலனாக,இதன் பணி அமைகின்றது.

கேட்பாரற்று கிடக்கும் மிருகங்களின் சிதைவுகள் எச்சங்களை டிஸ்போஸ் செய்யும் பணி இதற்கு மிக முக்கியமான ஒரு பணியாகும். இதன்மூலம் அந்த கழிவுகளால் பரவும் நோய்களின் எண்ணிக்கைகள் குறைகின்றன!

பெரும்பாலும் ஏதோனும் அழிந்த தேசங்கள் அல்லது இயற்கை சீரழிவுகளை காட்டப்படும்போது கணடிப்பாக அல்லது சிம்பாலிக்காக ராஜாளிகள் தனித்து அமர்ந்திருக்கும் படங்கள் கண்டிப்பாக இருக்கும்!

ஆம் இவைகளின் பணிகளால்தான் அந்த பிரதேசங்கள் முழுமையான சுத்தம் அடைகின்றன! தேடிதேடி சென்று சுத்தம் செய்யும் இவைகள் சாதாரணமாக மேம்போக்காய் சுத்தம் செய்யும் நம் மனிதர்களை போலன்று!

ஆனால்....!

இப்போது இவைகள் தம் அழிவிப்பாதை நோக்கி வெகு வேகமாக சிறகு அடித்து பறந்துக்கொண்டிருக்கின்றன அவற்றை துரத்திக்கொண்டிருப்பதலில் அழித்துக்கொண்டிருப்பதில் மனித இனத்துக்குத்தான் முதலிடம்

பெருகிவரும் நாகரீக வாழ்க்கையின் தேவைகள், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் செயற்கை ரசாயன உரங்களின் ஆதிக்கம் சமீபத்தில் கூட இறந்த ராஜாளிகளின் உடல்களில் மருத்துவசோதனை செய்கையில் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்ப்டும் ரசாயன உரங்களிலுள்ள டிடிடீ,அல்டீரின்,டயல்டீரின் போன்றவைத்தான் இவைகளின் அழிவுக்கு காரணம் என்று CSE (centre of Science & Environment) தெரிவித்துள்ளது! இதில் டிடிடீ ஏற்கனவே தடை செய்யப்பட்ட ஐட்டமாக இருந்தாலும் கூட விலை குறைவாக வெளியே விற்கப்பட்டுத்தான் வருகிறது!

இந்த ரசாயனங்கள் நேரிடையாக உடனடியாக ராஜாளிகளை பாதிக்காவிட்டாலும் கூட பின்விளைவுகளாய் பறவைகளின் வளர்ச்சி விகிதத்தை தடை செய்கிறது! ராஜாளிகளின் முட்டையிடும் திறனை குறைப்பதோடு,உடல் நிலையிலும் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன!

இதுமட்டுமல்லாமல் விமான போக்குவரத்துக்கள் அதிகரிப்பால், உருவத்தில் பெரிய ராஜாளிகளால் விமானங்களுக்கு பாதிப்பு நேரலாம் என்ற நோக்கில் சுட்டு வீழ்த்தப்படும் ராஜாளிகள் (இதற்கெனவே தனியாக ஒரு குழு இயங்குகிறதாம் விமான நிலையங்களில்)

இனி வரும் காலங்களில் இந்திய அரசு விழித்துக்கொண்டு ராஜாளிகளை பாதுகாக்கும் திட்டத்தை பரிசீலிக்கக்கூடும்!(ஒரு நம்பிக்கைதான்!)



ஏதோ நம்மால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொண்டு, ரசாயன உரங்களின் பயன்பாடுகள் விவசாயத்திற்கு தேவையில்லை என்பதினை தெளிவாக்கி மக்கள் மத்தியில் ராஜாளிகளாய் வாழ்வோம்!

ராஜாளிகளை வாழ வைப்போம்!

கை நிறைய சம்பளம் வாங்குபவர்கள் - பகுதி 1

பல் டாக்டர்கள்:-

என்னதான் நாம கஷ்டப்பட்டு மத்தவன் பல்ல்லை ஒடைச்சாலும்,கரெக்டா இருக்கற மிச்ச மீதி பல்லுங்கள வைச்சு அழகான சீரமைச்சு தர்ற அட்வான்ஸ்டு டாக்டர்கள்தான் இப்போதைக்கு டிமாண்டல் இருக்கற ஆளுங்களாம்!

விண்வெளி விஞ்ஞானிகள்:-

வானத்தை பார்த்தேன்,அதில் பூமியை பார்த்தேன் பாடி திரியிற ஆளாக இருந்தவங்க இப்ப வானத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு பணக்கோட்டையில் உயர்ந்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறார்களாம் ஆஸ்ட்ரானமனி முடிச்சு ஒரு டாக்டர் பட்டம் வாங்கிய கையோடு வெளியே வந்தா கையில டாலர்களை திணிச்சு அப்படியே கொண்டுட்டு போயிட்றாங்களாம்!

தொழில் துறை சார்ந்த மனநல மருத்துவர்கள்:-

இப்போதைய சுழலுக்கு ஒரு ஆபிஸ்ல வேலை பார்க்கிறவங்க சும்மா ஒரு வாரம் வேலை பார்த்தாலே அம்புட்டு மக்களும் மனநலமருத்துவரை தேடித்தான் போகறாங்களாம்! பெரிய பெரிய கம்பெனிகள் ரொம்ப யோசனை பண்ணி எதுக்கு நாம் அவங்கள தேடிப்போகணும் ஒரு போஸ்டிங்க் போட்டுடாலம்னு தனியா அட்வைஸ்ரன்னு ஒரு போஸ்ட் கிரியேட் பண்ணிட்டு ஆளுங்கள தேடி அலையிறாங்களாம்!

கணக்கு வாத்தியார்:-

இந்த போஸ்ட்க்கு உலகம் முழுக்கவும் செம டிமாண்ட்டாம்! உண்மைதானே! - இப்ப நினைச்சா கூட பகீருங்குது! ஈவன் ஐ ஆம் ஆல்சோ திங்கிங்க் ஹெள ஐ பாஸ்ட்டு அவுட் ப்ரம் திஸ் சப்ஜெக்ட்! - (ரகசிய பாஷை! மொழி புரியாதவங்க மெயிலுங்க!)

அணு உலை இயக்குநர்கள்:-

உண்மையிலேயே ரொம்ப ரிஸ்க்கான வேலையாம் பின்விளைவுகள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்! அட கொட்டி கொட்டி குடுக்க தயாரா இருந்தா வாங்கி குவிக்க நம்ம ரெடிதானே!

அரசியல் ஆய்வாளர்கள்:-

நல்ல காசாம்! ஆய்வு செஞ்சு ஆய்வு செஞ்சு சம்பாதிக்கலாமாம்! உலக நாடுகளின் வரலாறு அப்புறம் உள்ளூர் வரலாறு இப்படி எல்லாத்தையும் கரைச்சு குடிச்சவங்களாம்!
நான் அடிக்கடி பிபிசி தமிழோசையில மட்டும்தான் கேள்விப்பட்டதுண்டு இந்த வாசகத்தை! ஆமாம் நம்ம தமிழ்நாட்டுல யாராவது இது மாதிரி இருங்காங்களாப்பா?

இதுல ஏதோ ஒரு பீல்டுல நாம இருக்கோம்ம்னு பெருமை பட்டுக்கிற மாதிரி இல்லையேன்னு ஒரே ஏக்கம் ஏக்கமா வருதுங்க அதான் பக்குனு ஒரு பார்ட்டா நின்னுப்போச்சி!

அடுத்த பார்ட்ல மிச்ச மீதி இருக்கறவங்களையும் அள்ளிட்டு வர்றேன்!

எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்வும்!

சைக்கிள் பெரும்பாலானோர் வாழ்வில் வெகு சகஜமாகவே வந்திருக்கும் சில சமயங்களில் சென்றிருக்கும் வாகனம்தான்!

எரிபொருள் பயன்படுத்தா இரண்டு சக்கர வாகனங்களால் மட்டுமே இந்த உலகினை மாறிவரும் தட்பவெப்பசூழலிலிருந்து பாதுகாத்து வரும் இளையதலைமுறைகள் நலமுடன் வளமுடனும் வாழ வழிவகை செய்யக்கூடிய விஷயங்களாம்!



உடல்நலத்திற்கும் ஏதுவானதாகவும் சுற்றுசுழலிற்கு ஏற்றதாகவும் மற்ற வாகனங்களை ஒப்பீடுகையில் விலை குறைவாகவும் இருப்பதால் இதற்கு முக்கியத்துவம் வருங்காலங்களில் அதிகரிக்ககூடும்!

இன்னுமொரு இரண்டு சக்கர வாகனம் கிராமங்களில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துகொண்டிருக்கும் இரட்டை மாட்டு வண்டிகள்தான்!

மாறிவரும் காலத்துக்கேறப, எந்தவித யோசனையுமின்றி சுகமாக பயணிக்க வேண்டி, மாட்டு வண்டிகளை மறந்து டிராக்டர்களில் பயணித்து கொண்டிருக்கின்றனர் இன்றைய விவசாயிகளும் அவர்களால் விதைக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட நெல்மணிகளும் கூட.....!

எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகன பயணத்தை மீண்டும் மலர வைக்க தருணம் எதிர்பார்க்கவேண்டாம்...!

தொடர்வோம் பயணத்தை வரும் தலைமுறைக்கு வளமான வாழ்வினை வழங்கவேண்டி......!

குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டிலு வேணாம்...! விட்டுடுங்க ப்ளீஸ்....!!


கனடா - கடும் நெருக்குதல்களுக்கு பிறகு, சரி இனி வரும் இளைய தலைமுறைக்கு அதிக ஆபத்துகளை ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்தாலும் கூடுமான வரை இனியும் பல்கி பெருக்க வைக்கவேண்டாம் என்ற பெரிய மனதோடு பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆன புட்டிகளை அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பால் புட்டிகளை தடை செய்து கனடா அரசு இன்று அறிவித்துள்ளது.

உலகிலேயே முதல் நாடாக முன்னின்று இந்த செயலினை செய்துள்ளதுகனடா!

சரி என்ன பிரச்சனை அந்த பிளாஸ்டிக் பாட்டில்லன்னு கேட்குறீங்களா?

பாட்டில்ல அதிக அளவு சூட்டோட தண்ணீரையோ அல்லது பாலையோ ஊற்றினால் அந்த வெப்பத்தினால் அந்த பிளாஸ்டிக்கில் உள்ள BPA சூடு தாங்கமுடியாம கோவிச்சுக்கிட்டு வெளிய வந்துடுமாம் (வெளியேன்னா புட்டி உள்ள!) அது உடல் நலத்துக்கு கெடுதலாம்!

BPA எனச்சொல்லப்படும் பைஸ்பினால் என்னும் ஒரு வேதிப்பொருள் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலிகார்பனோடின் முக்கியமான சேர்க்கை ஐட்டமாகும்!இதனால் தயாரிக்கப்படும் புட்டிகள் சீக்கிரத்தில் உடையாமல் கடினமாகவும் இருக்குமாம்

கனடாவில் பெரும்பாலான உணவுப்பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பானங்கள் இதில் அடைத்துதான் விற்பனை செய்யப்படுகின்றனவாம்!

கிட்ட தட்ட ஒரு வருடகாலமாக தன்னார்வ அமைப்புக்களின் தொடர் நெருக்குதல்களில், சிக்குண்ட கனடா அரசுக்கு இந்த புட்டிகளை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் வெகு காலமாக பயன்பாட்டில் இருக்கும் இந்த புட்டிகள் தீங்கு விளைவிக்க கூடியவை அல்ல,என்று சமாதானப்படுத்தியிருந்தாலும் கூட கடந்த இரு மாதங்களில் பொதுமக்களின் கருத்து கணிப்புகளின் மூலம் கடைசியாக முடிவெடுத்துவிட்டது! தற்போதைக்கு குழந்தைக்களுக்காக தயாரிக்கப்படும் புட்டிகளை தடை செய்ய உத்தரவிட்டுள்ளது!

இத்தனைக்கும் உபயோகப்படுத்தும் அளவுக்குத்தான் இந்த வேதிப்பொருள் கலந்துள்ளது. இதனால் பெரும் ஆபத்து இல்லையென்று பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறினாலும் கூட எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்கள் வளர வாய்ப்பளிக்ககூடாது என்ற முடிவோடு அரசாங்கம் கடுமையாக நடந்துக்கொண்டிருக்கிறது!

நம்ம ஊரு மக்கள் இதுல ரொம்ப புத்திசாலிங்க பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஆற வைத்து, தான் புட்டியில் ஊற்றிக்கொடுக்கிறார்கள் அதனால் வேதி வினை, வேற வினைக்களுக்கு வேலையே கிடையாது!


முடிஞ்சா, குழந்தைகளுக்கு இனி பாலை கிளாஸ் புட்டியில ஊத்தி கொடுங்களேன்....!

கொசுறு சேதி:
இது சம்பந்தமான தகவல் ஏற்கனவே நமது தமிழ்மணத்தின் மருத்துவ வலைபதிவர்களுள் ஒருவரான டாக்டர் புரூனேவின் ஆங்கில வலைதளத்திலும் உள்ளது !

APRIL - 02 KIDS BOOKS DAY - உலக சிறுவர் நூல் நாள்

அட...! இதுக்கு ஒரு நாளான்னு ஆச்சர்யபடவைக்கும்
லிஸ்டில இந்த சிறுவர் நூல் நாளையும் இனி சேர்த்துக்கவேண்டியதுதான்!

உலக சிறுவர் நூல் நாள் 1967 லேர்ந்து சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு நாள் நாளாக இருக்குதாம்! (எப்படித்தான் யோசிப்பாங்களோஓ...!)
சிறுவர் சிறுமியருக்கு, சிறு வயது முதலே புத்தகங்கள் மீதான ஆர்வத்தை உண்டாக்கவும்,சிறுவர் சிறுமியருக்கான தனித்துவம் வாய்ந்த வகையிலான புத்தகங்களின் எண்ணிக்கையை பெருக்குவதுமே இந்நாளின் மிக முக்கியமான நோக்கமாம்!
இந்நாளினை உலகெங்கும் பல்வேறு தனித்தனிபிரிவுகளாக செய்லபட்டுவரும் தன்னார்வ அமைப்புக்களின் ஒருங்கிணைந்த அமைப்புத்தான்
IBBY என்றழைக்கப்படும் உலக சிறுவர் நூல் வாரியம்

ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டின் கலாச்சாரத்தை ஒட்டிய சிறார்களின் நூல் கற்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலமைந்த அழகிய வண்ண படங்கள் இந்த சிறுவர் புத்தக வாரியத்தால் வெளியிடப்படுக்கின்றது

சமீப வருடங்களில் வந்த தீம்களின் அணிவகுப்பினையும் மற்றும் நாடுகளின் விபரங்களை இங்கு காணலாம். இது கடந்த 2005 ஆம் ஆண்டிற்கான சிறுவர் புத்தக நாளின் இந்திய நாட்டின் தீம் போஸ்டர்!


இந்த வருடத்தின் தீம் போஸ்டர் தாய்லாந்து நாட்டின் கலாச்சாரத்தின் அடிப்படையில் அழகான ஒரு ஒவியமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் சிறார்களுக்கு சிறுவயதில் முதலில் சொல்ல துவங்கும் கதைகள் புத்த சமயத்தின் அடிப்படையிலமைந்தவையாம்!

படத்தினை காண்கையில் ஒரு அழகான கவிதை கதை படித்துக்கொண்டிருக்கும் காட்சி ஓவியமாக புலப்படுகிறதா?

நாளினை கடப்போம்!

நாளும் நூல்களை கற்போம்!

சிறார்களுக்கு கற்பிப்போம்!

அட...! இப்படியெல்லாம் கூட இருக்கிறதா?

(கிளிக்கி பாருங்க!)

விளம்பரம் பார்த்ததுமே தோன்றிய கேள்விதான் அட இப்படியெல்லாம் கூட இருக்கிறதா? என்று!

போகட்டும் புண்ணியவான்கள்...!.

வளைகுடா வருகை தரப்போகும்
பொதுமக்களே...! பார்த்து வாங்க!
காசு மட்டும் பார்த்து அல்ல
இன்ன பிற விஷயங்களையும்
பார்த்து வாங்க....!!!

வாழ்வின் துயரை நீக்க நினைத்து
வளைகுடாவில் துயரில் ஆழ்ந்து போகாமல்
நிதானித்து செயல்பட்டு
செல்வசெழிப்பு எய்துங்கள் !

தண்ணீர் - மார்ச் 22

மார்ச் 22 2008 உலக தண்ணீர் தினம்

தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று ஒரு ஆய்வு லண்டன் யூனிவர்ச்சிட்டியில், ஜான் ஆண்டனிங்கற பேராசிரியர் செஞ்சு இந்த வருடத்திற்கான, ஸ்டாக்ஹோம் வர்ச்சுவல் வாட்டர் 2008 - 150000 டாலர் விருது வருடந்தோறும் தண்ணீர் சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்யும் தனிநபர்கள்,தன்னார்வ அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது - விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்!

தண்ணீரை நாம் குளிக்க,குடிக்க பயன்படுத்தும்போது மட்டும் சிக்கனமாக இல்லாமல் நமது அன்றாட தேவைகளின் பயன்பாட்டிலும் சிக்கனமாக இருக்கமுடியும், இருக்கவேண்டும் என்பதுதான் இவரது முக்கியமான தீம்!

சரி வர்ச்சுவல் வாட்டர் அப்படின்னா என்னான்னு நீங்க ரொம்ப யோசிக்கவேணாம்!

நாம் காலையிலே எந்திரிச்சு,பல் தேய்ச்சு சிக்கனமா குளிச்சு ரெடியாகுறோம்னு வைச்சுக்கோங்க -தண்ணீர் சிக்கனம் பண்ணி குளிக்காதவங்க ரொம்ப பெஸ்ட்!- அதுக்குப்பிறகு சாப்பிடுவோம்.

அந்த சாப்பாட்டை ரெடி பண்றதுக்கு நாம எடுத்துக்கிற தண்ணியில கொஞ்சம் சிக்கனம் பண்ணனும், சாப்பிட்டு முடிச்சதும் கை கழுவுறதுல கொஞ்சம் சிக்கனம் இப்படியே ஆரம்பிச்சு இரவு முடியறவரைக்கும், கொஞ்சம் சிக்கனம்,
இன்னும் கொஞ்சம் சிக்கனமா இருந்தா எவ்ளோ தண்ணீர் சேமிக்கலாம்?
இதைத்தான் நம்ம ஆண்டனி சப்ஜெக்ட்டா எடுத்து அலசி ஆராய்ந்து அறிவிச்சிருக்காரு!

டயட்ல சாப்பிடுறவங்களோட ஒரு நாளைய தண்ணீர் தேவை,சைவம் சாப்பிடும் நபர்களின் ஒரு நாளைய தண்ணீர் தேவை அப்புறம் அசைவம்
சாப்பிடும் மனிதர்களின் ஒரு நாளைய தண்ணீர் தேவை இவைகளில் எதற்கு அதிகம் தண்ணீர் தேவை அதிகமிருக்கும் என்று அனைவருக்குமே ரொம்ப
ஈசியா தெரிஞ்சுருக்கும்! (இதெல்லாம்தான் அவரது ஆராய்ச்சிக்குள்ள இருக்குங்க!)

இது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தும் தண்ணீரின் அளவை சேமித்து மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவதன் மூலம் வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு நன்மையளிக்கும்!இல்லாவிடில் தண்ணீர் தேவைக்கு நாம் இப்போதிருந்தே முக்கியத்துவம் கொடுத்து அதிக செலவுகளை செய்ய நேரிடலாம்!


சரி நம்மலால முடிஞ்சது தண்ணீரை உபயோகப்படுத்துவதை இனி கொஞ்சம் குறைச்சுக்கவேண்டியதுதான்!

வேணாம் ராசா வந்துடு...!

மலைக்குன்றுகள் நிறைந்த, எந்த நேரமும் கடுமையானதாக்குதல்கள் நடைபெறும் ஆப்கானின் ஹெல்மண்ட் ( இந்திய விமானம் கடத்தல் நாடகம் அரங்கேறிய கந்தகாரின் அருகாமை பகுதிதான்) மாகாணாத்தில் இங்கிலாந்தின் ராணுவத்தில் பணி. சார்லஸ் டயானா ஜோடியின் அருமை புதல்வன் ஹாரிக்கு..!

அரச பரம்பரையில் இரண்டாவது ஆளாக போர்க்களம் கண்டவர்,சென்றவர்தான் ஹாரி!
இச்செய்தி கேட்டு இங்கிலாந்து செய்தி நிறுவனங்கள் ஹாரியை பின் தொடர்வதற்கு முன்பே பாதுகாப்பு துறையிலிருந்து செய்தி நிறுவனங்களுக்கு ரகசிய தகவலாக இத்தகவலை ரகசியமாக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது!

டிசம்பர் மாதத்திலிருந்தே தன் பணியை ஆப்கானிஸ்தானில் துவக்கிய ஹாரிக்கு மூன்றாம் நிலையில் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தை புகைப்படங்களோடு, புதன் கிழமை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியது ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கை !

கொஞ்சம் புகைப்படங்கள்தான் வெளியான நிலையில் பல தரப்பிலிருந்தும் விதவிதமான புகைப்படங்கள் இன்று பத்திரிக்கைகள்,இணையங்களை ஆக்ரமித்துக்கொள்ள,எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல கதையாகி விட்டது ஹாரியின் நிலைமை!

இந்நிலையில் அரச குடும்பத்தின் சார்பில் ஹாரியை திரும்ப வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது! இன்னும் சில நாட்களில் திரும்ப சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்.ஆப்கானிஸ்தானில் போர்க்களத்தில் பணி புரிந்த இளவரசருக்கு தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு அவர் தற்போது இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டுள்ளது!



PHOTOS - HERALD TRIBUNE


மே மாத காலத்திலேயே இவருக்கு இராக்கில் இருக்கும் ப்ளூஸ் & ராயல் படைப்பிரிவில் பணியில் செல்ல தயாராக இருந்தபோது கடைசி நேரத்தில் அங்கிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில்,பாதுகாப்பு காரணங்களால் தவிர்க்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பரில் ஆப்கானிஸ்தான் சென்றவராம்!

மேலும் சில படங்களுக்கு இங்கே செல்லவும்!