
எல்லையை மீறி செல்லவேண்டாம்
உடலும்..!
உணவும்..!
(வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் நான் சொல்றதை சொல்லிப்புட்டேன் பிறகு உங்க இஷ்டம்! அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம்!)
நன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி!
*எச்சரிக்கை* இப்படியும் நடக்கலாம்..!
# ஆயில்யன் 25 பேர் கமெண்டிட்டாங்க
Labels: உடல், டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை
உலகமே பார்க்கும் அர்விந்த கண் மருத்துவமனை - மதுரை
மதுரை கோவிலுக்கும் மல்லிக்கைப்பூவுக்கும் இட்டிலிக்கும் மட்டுமல்ல இந்த மருத்துவமனைக்கும் கூட நல்ல பேரும் புகழும் உண்டு இது எங்கள் மாவட்டங்களில் மட்டும்தான் என்று நான் நினைத்திருந்தது ஆனால் உலகம் முழுவதும் இந்த மருத்துவ சேவையின் அருமை பெருமைகள் பலரால பலரிடத்திலும் பரப்பபட்டு இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளும் படியான ஒரு சேதிதான் இது!
2008 ஆம் ஆண்டிற்கான கேட்ஸ் விருது - உலக அளவில் மருத்துவ துறையில் இதுதான் அதிக மதிப்புமிக்க பரிசுப்பொருளாம் - $1 மில்லியன் டாலர் பெற்றுள்ளது.
1976ல் ஜி.வெங்கடசுவாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையின் சேவையில் 2.4மில்லியன் மக்களினை பார்வை அளித்து பயனான வாழ்வினையும் பெற்று தந்துள்ளதாம்!
எங்கள் ஊர்லிருந்தும் பலரும் சென்று பார்வை பெற்று திரும்பிய அனுபவங்களை நேரில் கண்டவன் என்ற முறையில் இந்த மருத்துவமனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
தொடரட்டும் தொண்டுள்ளம் கொண்ட மக்களின் சேவைப்பணிகள்!
அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை பற்றி பதிவர் யாத்தீரிகனின் பதிவிலிருந்து
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
மீன் மாத்திரை
1985களின் மத்தியில் பள்ளிகூட சத்துணவு சாதத்தை ஒரு முக்கு முக்கிட்டு ரொம்ப டைட்டாக உக்கார்ந்து கொண்டே தூங்கிக்கொண்டிருந்த ஒரு இனிய மாலைப்பொழுதில், டேய் பசங்களே எல்லாரும் வாங்கடா லைனா? ஒண்ணாம் டீச்சர் கூப்பிடும் சத்தம் கேட்டு எந்திரிச்சு சாரி சுதாரிச்சு அக்கம்பக்கம் திரும்பி பார்த்தா அம்புட்டு பயமக்களும் என்னைய அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டானுவோ! அதுக்கும் காரணம் இருக்கு!
எப்போதுமே ஒண்ணாம் டீச்சர் எங்களுக்கு உதவும் கரம் மாதிரிதான்!கடுப்பேத்திக்கொண்டிருக்கும் வகுப்பிலிருந்து வெளியேற வேண்டுமெனில் கடவுளே டீச்சர் கூப்பிடணும் கிரவுண்டுக்கு அப்படின்னுத்தான் வேண்டிக்குவோம்!
அப்படி ஒரு ஹெல்பிங்க் ஹாண்ட் டீச்சர்! எப்போதுமே, கிரவுண்டுக்கு வாங்கடா போட்டி வைக்கப்போறேம் அல்லது எதாவது விசேஷமான செய்தி அப்படியில்லாங்காட்டி முனிசிபால்டியிலிருந்து வந்திருக்கும் மீன் மாத்திரை டிஸ்டிரிப்பியூசன்!
மீன் மாத்திரை பேரைக்கேட்டாலே யாருக்குமே எஸ்கேப்பாகணும்னு எண்ணம் வராது! ஏன்னா அப்படிப்பட்டதொரு மாத்திரை மத்த மாத்திரைங்களைமாதிரி கசக்குறதோ அல்லாங்காட்டி கல்லுமாதிரி இருக்கறதோ கிடையாது!
இது குருவி ஸ்டைல்ல மொழ, மொழன்னு யம்மா யம்மா வாகத்தான் இருக்கும்! எதோ உடம்புக்கு நல்லதுன்னு கொடுப்பாங்களாம்! அது சரி நமக்கு ஃப்ரியா கிடைச்சாத்தான் நோ கொஸ்டீன் ரைசிங் ஆச்சே!
பயலுக கையில கொடுத்த திங்காம தூக்கி போட்டுடுவானுவேன்னு நினைச்சு எல்லாரையும் லைன் கட்டி கையையும் கட்டி வாயை மட்டும் ”ஆ” தொறக்க சொல்லி மீன் மாத்திரைய போடுவாங்க! நாங்களும் அந்த நிமிசம் கரெக்ட்டா வாயால காட்ச் பிடிச்சு மறுநிமிசம் இடம் மாறி கைக்கு மாத்திடுவோம்!
அதுக்குப்பப்புறம் என்ன நடக்கும் சண்டைதான்!
ஒருத்தனுக்கொருத்தன் மாறி மாறி மாத்திரையை பாக்குறேன் சொல்லி பொறமை புடிச்சவனாட்டம் உடைச்சுப்புட்டு ஓட கல்லெறி கலகங்கள் துவங்கும்!
சரி நீங்க கல் எடுக்கறதுக்கு முன்னாடியே இந்த கதையை அப்ரூட்டா கட் பண்ணிக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்!
நம்ம சா(ப்)ட்வேர் வேலையில் இருக்கறவங்களுக்கு,அல்லது இதே போன்றதொரு பணியிடங்களில் பணி ஆற்றுபவர்களுக்கு அதிக நோய் தொந்தரவுகள் வர்றதுக்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலே ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்களாம்!
வைட்டமின் டி இது அதிகம் வெய்யில்ல அடங்கியிருக்காம் இந்த டி நம்ம உடம்புல இருக்குற கால்சிட்டிரால்ங்கற ஹார்மோன் அனுதினமும் சாப்பிடற ஐட்டமாம்!
இந்த சாப்பாடு குறையறப்ப கால்சிட்டிராலோட வேலையும் குறையுது இதனால மத்த ஆளுங்க கெட்ட வேலை செய்யறதுக்காக நம்ம உடம்புல பூந்து விளையாட ஆரம்பிக்க நாம உடம்பு படாத பாடு படுது! கால்சிட்டிரால் ஒரு பாதுகாப்பு படை மாதிரி எந்த எதிரிகளையும் சீக்கிரத்தில அண்டவிடாது!அதுக்கு நாம சரியா சோறுபோடலைன்னா நம்ம கதி அதோகதியாகுது!
வெளியில அலைஞ்சு திரிஞ்சு வேலை பாக்குறவங்களவிட இப்ப ஏசி ரூம்ல இருந்துக்கிட்ட்டு வேலைபாக்குறவங்க எண்ணிக்கைத்தான் அதிகமாயிக்கிட்டிருக்குதாம் அதே நேரத்தில இந்த டி பிரச்சனையினால வியாதிகளும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் அட்வான்ஸ் வாழ்த்து சொல்லிக்கிட்டே வந்து சேருதாம்!
ஸோ மக்களே அப்பப்ப வெளியில வெய்யில்லயும் கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சுக்கோங்க! இல்லாங்காட்டி அதை ஈக்குவல் பண்றதுக்கு நிறைய மீன் மாத்திரைகளை சாப்பிட ஆரம்பியுங்க! ஒ.கேவா!
எல்லாம் உடம்புக்கு நல்லது :-)
# ஆயில்யன் 16 பேர் கமெண்டிட்டாங்க
டாஸ்மார்க் தண்ணி வுட்டு வளர்ந்தோம்! - தினமணி
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், இளைஞர்களின் கைகளில் மதுக் கோப்பைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் டாஸ்மாக் நிமிர்ந்து நிற்கிறது, இளைஞர்க ளின் எதிர்காலம் தள்ளாடுகிறது.
எதிர்கால வளம்மிக்க இந்தியாவில், உழைக்கும் சக்தியாக இருக்க வேண்டிய இன்றைய இளைஞர்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி நல்ல குணங்களை இழந்து, கெட்ட குணங்களை அதிகப்ப டுத்திக் கொண்டு, தன் எதிர்காலத்தை இருண்டகாலமாக மாற்றி, வாழ்க்கையைக் கசப்பாக மாற்றி வருகின்றனர்.
இன்று எந்த வரைமுறையுமின்றி, கிராமங்கள்தோறும் அரசு மூலம் மிக எளிதாக மது கிடைப்பதால், இளைஞர்களிடையே மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் மனஅழுத்தம் உடையவர்கள், காதல் தோல்வி அடைந்தவர்கள் தான் மது குடிப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளோம். அதுவும் இப்பழக்கம் உள்ளவர்களை கிராமங்களில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் மட்டுமே குடிகாரர்களாக தெரிவர்.ஆனால் இன்றைய நிலைமையே வேறு.
மது குடிக்காதவர்கள் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்றைய இளைஞர்கள் மது குடிப்பதையே ஒரு நாகரிகமாகக் கருதுகிறார்கள். காதணிவிழா முதல், கல்யாணவிழா, கருமாதி வரை நடைபெறும் விருந்துகளில், மதுவே முக்கியப் பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் விருந்து என்றால் அதில் இனிப்பு, காரம், காபி இருக்கும். இன்று சாதாரணமாக சிறுசிறு விஷயங்களுக்கு கூட விருந்தில் மதுவைப் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு திருமண நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அந்த வீட்டில் மாப்பிள்ளை செலவு பட்ஜெட்டில், மது விருந்து அளிப்பதற்கென்றே கணிசமான அளவு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் மட்டுமே திருமண வீட்டில் இளைஞர்கள் கூட்டத்தைப் பார்க்க முடியும்.
முன்பெல்லாம் குடிப்பவனுக்கு பெண் கொடுக்கவே கூடாது என பெற்றோர்கள் நினைப்பார்கள். இப்போது குறைந்த பட்சம் பகலிலாவது குடிக்காமல் இருக்கிறானா என்று பார்ப்போம் என்கின்ற நிலைமை. எதிர்காலத்தில் மது அருந்தாத இளைஞர்களே இல்லை என்ற நிலை வரக்கூடிய சூழல் உருவாகி வருகிறது.
டாஸ்மாக் கடை 10 மணிக்குதான் திறக்க வேண்டும் என்றாலும், மதுக்கூட உரிமையாளர்கள் விரைவிலேயே திறந்துவிடுவதால், அதிக தொகை கொடுத்துகூட வாங்கிக் குடிப்பதற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை காலையிலேயே மதுக்கடையில் காத்துக் கிடக்கின்றனர்.
மது குடிப்பதால் சிந்தனைத் திறன், செயல் திறன் பாதிக்கப்படுகிறது. சோம்பலை ஏற்படுத்துகிறது. மனநிலம், உடல்நலத்தை பாதிப்பதோடு பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்துகிறது. இதனால் எதிர்காலத்தில் நல்ல இளைஞர்கள் உருவாகாமல் நல்ல குடிகாரர்களாக உருவாகுகிறார்கள். இதனால் அவர்களை ஜாதி, மத மோதல் மற்றும் வன்முறை, குடும்பங்களில் மனைவியுடன் தகராறு, போதையில் வாகன விபத்துகள், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.
பொழுதுபோக்கிற்காக மது குடிக்க ஆரம்பிக்கும் இளைஞர்களில் பலர், கடைசியில் அதற்கே அடிமையாகி விடுகின்றனர்.போதை தலைக்கேறும்போது வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள். அப்போது எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தவறாகவே முடிகிறது.
இதற்கு தீர்வுதான் என்ன...? ஒரே வழி அரசின் கையில்தான் உள்ளது. தமிழகம் முழுவ தும் முழுமையான மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். இதனால் மட்டுமே வருங்கால இளைஞர் சமுதாயத்தை நல்ல சமுதாயமாக உருவாக்க முடியும்.சாராயம், லாட்டரிசீட்டு, கந்துவட்டி உள்ளிட்டவற்றுக்கு அரசு எடுத்த தடை நடவடிக்கையால் பலன் கிடைத்தது.
மதுவிலக்கால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்கிறார்கள். அரசு நினைத்தால் எவ்வளவு நிதியை வேண்டுமானாலும் எத்தனையோ வழிகளில் திரட்டி வருவாய் இழப்பை ஈடுகட்டலாம். ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை இழப்பை யாராலும் ஈடு கட்ட இயலாது.
# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க
குட்டி பாப்பாக்களுக்கும் - கிரீன் கான்செப்ட்!

இயற்கையினோட இயைந்த வாழ்வினை இளம் வயதிலேயே துவக்கிவிட பல பல யோசனைகளோடு களமிறங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும் சுற்றுசூழல் தன்னார்வலர்களும் எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களிலும், முடிந்த மட்டும் மறு சுழற்சிக்கு உட்ப்படுத்தப்படுகின்ற பொருட்களையோ அல்லது இயற்கைக்கு இனி கேடு விளைவிக்காத வகையிலான பொருட்களையோ பயன்படுத்தும் வகையில் இவர்களின் முயற்சி இருந்து வருகிறது! அதுபோன்ற விஷயங்களில் ஒன்றுதான் இளம் குழந்தைகளுக்கான டயாப்பர் தயாரிப்பும்!
டயாப்பர்கள் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான உள்ளாடைகள் பெரும்பாலும் தற்போது வெகு புழக்கமான விஷயமாக மாறிவிட்டது நம்மூர்களில்! முன்பெல்லாம் அதிகம் சாதாரண காட்டன் துணிகளினையோ அல்லது வேட்டி புடவைகளையோ உபயோகித்து ஒரு முக்கோண வடிவில் டயாப்பர்களாக பயன்படுத்தி வந்த நம்மூர் ஆட்கள் கூட இப்போது வெகு வேகமாக ரெடிமேட் டயாப்பருக்கு மாறிவிட்டனர்! ரொம்ப சிரமமே இல்லாத பணியாகவும் மாற்றம் பெற்றுவிட்டது!
பெரும்பலானோர் பயன்படுத்தும்,எளிதில் மக்கிப்போகாத பொருட்களால ஆன டயாப்பர்களை அவற்றின் உபயோகத்திற்கு பின்னர் கழிவுகளாக வெளியேற்றுவது கொஞ்சம் சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது! இந்த குறையினை நிறைவேற்றும் வகையில் புதிதாய் ஒரு கீரின் டயாப்பரினை அறிமுகப்படுத்தியுள்ளனர்! இதை பயன்படுத்திய பின் மிக எளிதிலேயே அப்புறப்படுத்திவிடமுடியுமாம் அது மட்டுமில்லாமல் குறைந்த காலத்திற்குள்ளேயே மண்ணுக்குள் மக்கி சிதைந்துவிடுவதால்,மற்ற பிளாஸ்டிக் லேட்டக்ஸ்களினை போல மண்ணுக்கு மாசு விளைவிப்பதில்லையாம்!(இந்த பொருட்கள் மண்ணுக்குள் மக்கிப்போவதற்கு நெடும் ஆண்டுகள் ஆகுமாம்! ஆனா கீரின் டயாப்பர்கள் ஒரு வருடத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடக்கூடியவையாம்!)
வாழ்க்கையின் தொடக்கம் முதலே வாழ்வது கீரினாக இருக்கட்டும் கிளீனாக இருக்கட்டுமே நம் இளைய தலைமுறை!
அட இதே கான்சாப்ட்டத்தான் நம்ம அம்மா பாட்டிகள் காலத்திலேர்ந்தே இருக்கு! ஆனாப்பாருங்க இப்ப ஊரு உலகமெல்லாம் சுத்தி வரும்போதுமட்டும்தான் நமக்கு ஒரு ஆசை வரும் சரி நாமளும் யூஸ் பண்ணுவோம்னு!
எது எப்படியோ நல்லதா இருந்தா சரி!
வீடியோ காட்சியாக இங்கு
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
ஒவர் வெயிட்டா திரியாதீங்க...!

பொதுத்துறை தனியார் துறை அரசுத்துறை என எல்லா துறைகளிலுமே இருந்து பணி மேற்கொள்ளும் ஊழியர்களில் சுமார 50 சதவிகிதம் பேர் ஒவர் வெயிட்டாகத்தான் திரிகிறார்களாம்! ஒவர் வெயிட்டுன்னா தலைக்கனம் புடிச்சு திரியறதுல்லீங்க உடம்பு கனம்புடிச்சு திரியறாங்களாம்!
இது மட்டுமில்லாம சுமார 25% பேர் டென்ஷன் பார்ட்டீங்களாவும் இன்னும் ஒரு பத்து பர்சண்ட் பேர் சக்கரை வியாதிக்காரங்களாவும் இருக்காங்களாம்!ஆக மொத்தத்தில முன்ணணியில இருக்கறவங்க நம்ம டவுன்(சிட்டின்னு கூட வைச்சுக்கலாம்) பக்கமா வேலைப்பாக்குற ஆளுங்கத்தானாம்!
காலத்தோட சேர்ந்து வாழும் வாழ்க்கையையும் மக்கள் மாத்திக்கிட்டே போறதாலதான் இவ்ளோ பிரச்சனைகளுக்கும் காரணம்னு ஒரு ஆய்வுல சொல்லியிருக்காங்க!
தண்ணி அடிக்கிறது,தம்போடறது,தீனி தின்றது இப்படியாக கன்னா பின்னா செலவுகளால கன்னா பின்னான்னு உடம்பு பெருகி, அதனால கொஞ்ச காலத்திலேயே வாழும் வாழ்க்கை குறுகிப்போவதற்கான வாய்ப்புக்கள் நிறைய இருக்காம்!
எவ்ளோ திங்கிறேன் ஆனா சதை ஒட்டமாட்டிக்குத்துப்பான்னு சொல்ற அபி அப்பா டைப் ஆளுங்களாகட்டும், கொஞ்சம் தான் திங்கிறேன் ஆனா கன்னா பின்னானு வெயிட்டு ஏறுதுன்னு சொல்ற என்னைய மாதிரி ஆளுங்களாட்டும் எல்லாருக்கிட்டயும் விளையாட்டு காட்றது இந்த mc4r தாங்க இந்த ஜீன்தான் வெயிட்டு சில பேருக்கு கூடறதுக்கும் சில பேருக்கு கூடாததுக்கும் காரணமான விஷயம்!
கூடாம இருக்கறதால அவ்ளோவா பிரச்சனையில்ல ஆனா ஓவரா கூடியிருக்கறதுதான் ரொம்ப பிராப்ளமான விஷயமாம்!
உடல் எடை கூடுறதால, பணக்கார வியாதின்னு நாம சொல்ற, அதாவது லைப்ஸ்டைல் வியாதியாக மாறிவிட்ட சர்க்கரை வியாதி,டக்குன்னு கோபம் வரவழைக்கும் ஹைப்பர் டென்ஷன்,இதய சம்பந்தமான வியாதிகள் நம்மளோட சொத்து மாதிரி வந்து சேர்ந்து கடைசியா சொத்தையாக்கிட்டு போய்டுமாம்!
ஸோ...! மக்களே நீங்களும் ஜாக்கிரதையா டயட்ல இருந்து வெயிட்ட கண்ட்ரோலா வைச்சுக்கோங்க!
ஒவர் வெயிட்டா திரியாதீங்க! (அட என்னைய சொல்லிக்கிட்டேன்ப்பா!)
# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க
Labels: உடல்

