Showing posts with label பூக்கள். Show all posts
Showing posts with label பூக்கள். Show all posts

மன்னிப்பு!

மன்னிப்பு - தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை!

பட வசனத்திற்கு வேண்டுமானல் கொஞ்சம் டெரராக இருக்கலாம்! ஆனால் நிஜவாழ்க்கைக்கு நிச்சயம் இதை போன்றதொரு அருமையான மனத்திண்மை அல்லது மனிததன்மை இருந்தால் நீங்களும் உயர்ந்த மனிதர்கள்தான்!

சிலர் ரொம்ப பெருமையாக கூறிக்கொள்வார்கள் நான் என் சொந்தக்காரனோட பேசி பல வருசங்களாகுதுன்னு! - அடப்பாவி பேசாம இருந்து என்ன சாதிச்சிட்டேன்னு கேக்க தோணுதா...?!- சிலருக்கு ஏனோ அது போன்ற விசயங்களில் மிகுந்த ஆர்வம். நாம் நினைக்கின்ற அல்லது நாம் அடைய முயல்கின்ற எதோ ஒன்றினை மற்றவர்கள் தடுத்துக்கொண்டாலோ, அல்லது வேற வகையில் அதை பெற முடியாதபடி செய்தாலோ நமது கோபங்கள் அவர்களை சென்று அடைகின்றன மிதமிஞ்சிய கோபத்தின் வெளிப்பாடே இப்படியான நிராகரித்தல் நிகழ்வுகள்.

சில இடங்களில் நீங்களே நேரில் கண்டிருக்க கூடும் அண்ணன் தம்பிகள் அருகருகே வீடுகள் இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமல்,தம் குடும்பத்தினரையும் கூட பழக விடாமல் ஒரு வீணாய்ப்போன வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள்!

தன்மானம்,
சுயமரியாதை,
இமேஜ் பாழாப்போயிடுச்சு,
நடுத்தெருவுல நிக்கிறேன்,
கேவலப்படுத்திட்டாங்க என்பது போன்ற வார்த்தை பிரயோகங்கள் நிராகரித்தலின் வெளிப்பாடாய்,பார்க்கின்ற ஒவ்வொருவரிடமும் புலம்பி தீர்க்கவேண்டிய வரிகளாய் வந்து விழும்! இந்த வார்த்தைகளை பயன்படுத்திறவங்களை வைச்சுக்கிட்டே நாம ஓரளவுக்கு அம்மனிதர்களை பற்றி நிறை தெரிந்துக்கொள்ளலாம் - அனுதாபம் தேடி அலைபவர்கள் என்று!

மன்னிப்பு - இந்த பிராசஸ்க்கு நீங்க பயன்படுத்த வேண்டிய விசயம்ன்னு எதுவும் பிரத்யோகமா இல்லைங்க வழக்கமான அஸ்திரம்தான் ஜஸ்ட் ஒரு புன்சிரிப்பு அல்லது நெகிழ்வான அல்லது நார்மலான மனநிலையோடு சம்பந்தப்பட்ட மனிதரை அணுகினாலே போதும்!( டேய் உன்னைய மன்னிச்சுட்டேண்டா போடா போடா..! அப்படின்னு அப்ரோச்சுன்னீங்கன்னா அடிதடி கொலை வெட்டுல்ல கொண்டாந்துவுட்டுடப்போகுது சாமியோவ்வ்!)



அது எப்பிடி என்னைய அவுருக்குத்தான் புடிக்கல நான் எதுக்கு போய் பேசணும்ன்னு சண்டித்தனம் செய்யாம அன்போடு கொஞ்சம் அழகாய் அப்ரோச்சுங்க! :)

(இங்கால வந்து காதல் போன்ற இன்ன பிற விசயங்களில் இந்த ஃபார்முலா பயன்படுத்தமுடியுமான்னு எந்த கொஸ்டீன்ஸும் எழுப்பக்கூடாது!)

நாம பேசி எம்புட்டு நாளாச்சுடான்னு ஒரு ஃபீலிங்கா ஆரம்பிச்சாலே கோபம் கொண்ட பலரும் பாதி விசயங்களை மறந்துடுவாங்க! அட இதுக்கு பிறகு எழுதற மேட்டரை நான் மறந்துட்டேன் இதுவ்ரைக்கும் எழுதன விசயத்தை நீங்க மறக்காதீங்கப்பா!

சொன்ன மேட்டர் செம மொக்கையா இருந்துச்சுன்னா ப்ளீஸ் என்னைய மன்னிச்சு வுட்டுடுங்கோ...!

மனப்பூக்கள் மலரட்டும் - 4

முடியும்;
முடியாது.

தெரியும்;
தெரியாது.

புரியும்;
புரியாது.

இப்படியான இரு வேறு நிலைகளில் நம்மால் மிக எளிதாய் செய்ய கூடிய காரியம் ஒன்று என்றால் கவலை கொள்ளுதல் :)

முடியும் என்றால் கவலைப்படவே தேவையில்லை முடியாது என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான் இந்த மிதிவண்டி இடைவெளியில் கவலை வந்து நம் மனத்தினை ஆக்ரமிக்க எப்படி இடம் கொடுக்கிறோம்?

எந்தவொரு சிக்கலான அல்லது நம்மால் இயலாத காரியம் என்று, ஒன்றை எண்ணும்போதே இது போன்ற சிந்தனைகள் எழுகின்றன.

சில காரியங்களினை எப்படி செய்வது என்ற அடிப்படையே தெரியாது ஆனால் அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிகம் கவலை மட்டும் கொண்டு உடல் நலத்தினை கெடுத்துக்கொள்வோம்! இதை போன்று சில காரியங்கள் செய்வதில் நெகடிவ் எண்ணங்களின் அதிக ஆழத்திற்கு செல்வோம் முடிவில் கவலை கொண்டு காரியமாற்றாமல் அமர்ந்திருந்தலே அவசியமாகிவிடும்!

கவலை கொள்வதால் மட்டும் நான் செய்யவேண்டிய செயல்களுக்கு மீண்டும் ஒரு சாய்ஸ் கிடைக்கும் என்று எண்ணுவதை முற்றிலும் தவிருங்கள்!



கவலை அவசியம் படத்தான் வேண்டுமா? கவலைப்படாமல் வாழ இயலுமா என்று ஒன்றுகொன்று முரணாய் பல கேள்விகள் கேட்டு தங்களுக்குள்ளாகவே கவலையில்லாத மனிதன் யார் இருக்கிறார் என்று பதில் கூறி கவலைகளோடே பயணித்துக்கொண்டிருப்பார்கள்!

பயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;
கவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;

கவலையும் பயமும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன - அதனிடத்தில் உங்களை அதிகம் இழக்கும்போது...!

உங்களுக்கு மிக மிக விருப்பமான வேலையினை எடுத்து செய்யுங்கள் இது போன்ற நேரங்களில் அல்லது உங்களுக்கு பிடித்தமானவருடன் பேசிக்கொண்டே இருங்கள் - தற்காலிகமாய் தப்பிக்க வழி கிடைக்கும்!

நிரந்தரமாகவெனில் - நல்ல செயல்களிலும், நல்ல எண்ணங்களையும் யோசிக்க, செயல்படுத்த ஆரம்பித்துவிட்டால் கவலையாவது பயமாவது..!

எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி



இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எந்திரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்கயாச்சும் போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- ரஜினிகாந்த்

மனப்பூக்கள் மலரட்டும் - 3

தினந்தோறும் கடந்து போகின்ற செயல்கள் ஏராளம் ஒவ்வொருவருக்குள்ளும்! ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும்...!

இத்தினப்படி வாழ்க்கையில் எத்தனை விதமான செயல்கள் நம் கட்டுப்பாட்டில் நடக்கின்றன.எத்தனையோ செயல்கள் நம்மை மீறியும் - நம் கட்டுப்பாட்டில் அல்லாமலும் - நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

நாம் செய்யும் செயல்கள் நமக்கு இன்பங்களோ துன்பங்களோ அல்லது பிறருக்கு இன்பங்களோ துன்பங்களோ கண்டிப்பாக விளைவித்துக்கொண்டேதான் இருக்கின்றன.



தொடங்கும் ஒவ்வொரு நாளும் தொடங்கும் செயல்களை முடிக்கின்ற காலத்தில், அதை முடிக்க நினைக்கின்ற மனங்கள் மிகக்குறைவே! சந்தர்ப்பங்களை நீட்டிக்கொண்டோ, அல்லது வாய்ப்புக்களினை பிறருக்கு அளித்தோ அத்தருணத்தினை தப்பிக்கவே பயன்படுத்த விரும்புகிறோம்!

தப்பித்தல் அந்தந்த காலகட்டத்திற்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்க கூடியாதாகவே இருக்கும் ஆனால் அதுதான் துயரினை அதிகரித்துக்கொள்ள நாமாகவே கொடுக்கும் வாய்ப்பு என்பது கொஞ்சம் காலம் கழித்துத்தான் புரிய வரும்!

செய்யும் செயல்கள் அனைத்திற்குமே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியினை குறித்துக்கொண்டு,அதை செய்து முடிப்பதிலேயே ஆர்வத்தினை அதிகரித்துக்கொள்ளுங்கள்!

மனப்பூக்கள் மலரட்டும் - 2



வாழ்வை வைத்துக்கொண்டு இத்தனை நாள் என்ன செய்தேன் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பெரிய வாய்ப்பை உணராமல் ஏதோ நாட்களை ஓடிக்கொண்டிருப்பது புரிந்தது. உலகம் எனக்கு ஏதும் கடமைப்பட்டில்லை என்ற உணர்வு தோன்றியது. எல்லா காரியங்களையும் நான்,என்ற நோக்கில்தான் செய்தேன் என்பது புரிந்தது.

நல்லது என்பதற்காக காரியங்களை செய்தேனா அல்லது அவை எனக்கு நல்லது என்பதற்காக காரியங்களை செய்தேனோ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.

வாழ்வில் ஒரு அர்த்தத்தை தேடி நான் பாடுபட வேண்டும், உழைக்க வேண்டுமென்ற ஒரு நெறி பிறந்தது. இவ்வுலக வாழ்வின் மேன்மைகள் எனக்கு முன்னைவிட நன்கு புலனாயின. அறிவு தெளிவு பெற்றது. முன்பெல்லாம் என் குழந்தைகள்,என் குடும்பம் என்று கவலைப்படுவேன். இப்பொழுது எதிர்காலத்தை பற்றிக்கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ்கிறேன். நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கின்றேன்.

பிறரிடம் என் அன்பு அதிகமாகிறது.பிறர் தேவைகளை என்னால் ஒரு கணத்தில் ஊகிக்க முடிந்தது. நான் புனிதம் அடைந்துவிட்டதாகவோ அல்லது தெய்வீகம் பெற்று விட்டதாகவோ கூறவில்லை!

என் வாழ்வில்...

புதிய லட்சியம் பிறந்தது;

புதிய நெறி பிறந்தது;

புதிய உறுதி பிறந்தது;

நன்றி:- ஆத்மதரிசனம்
எம்.எஸ்.உதயமூர்த்தி.

மனப்பூக்கள் மலரட்டும் - 1



இதயம் பரிபூரணத்தூய்மையுடன் திகழட்டும்!

முற்றிலும் நியாயத்தின் வழியில் நில்லுங்கள்!

(உலகால் ஒத்துக்கொள்ளப்பட்ட உங்களின் மனதில் சரி என நினைக்கின்ற, மற்றவர்களால் பாராட்டப்படாவிட்டாலும் கூட ஏற்றுக்கொள்கின்ற வழி முறைகளையே பின்பற்றுங்கள்! )

இறக்கும் வரைக்கும் இருக்கும் வாழ்க்கையில் தைரியமே பிரதானமாக இருக்கட்டும்!

பாவமாக தோன்றும் ஒரு விசயத்தை பற்றி நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்! அதிகமாக நினைக்கப்படும்போது தான், நம்மையறியாமலே நம் செயல்களில் அந்த பாவங்களின் பாதிப்புக்கள் இருக்கும்!



உண்மையாக ஒருவர் தூயவராக இருந்தால் தூய மனம் படைத்தவராக நினைத்துக்கொண்டிருந்தால் அவரிடம் உங்களால் தூய்மையின்மையினை காண இயலாது! உள்ளே நினைப்பதுதான் வெளியே தெரிகிறது,தெரிவிக்கிறது.

- சுவாமி விவேகானந்தர்!



டிஸ்கி :-நொம்ப டெரராய் பதிவுகள் எழுத தொடங்கியிருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அன்பு கூர்ந்து, அடியேனை அட்டாக் செய்து சொல்லவும்!