மருத்துவ மாணவர்கள் போராட்டம் - டாக்டர்.கிருஷ்ணசாமி.


மருத்துவப் படிப்பு காலத்தை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து நீடித்து ஓராண்டு கட்டாய கிராம சேவையுடன் ஆறரை ஆண்டுக ளாக்கும் ""மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின்'' முயற்சியை எதிர்த்து பல்லாயிரக்கணக் கான மருத்துவ மாணவர்கள் மூன்று வாரகா லமாகப் போராடி வந்தனர்.

அப்போராட்டம் தமிழகத்தில் பல கட்டங் களை நோக்கி நகர்ந்தது. சாகும்வரை பட்டினிப்போர் என்ற வருத்தப்படக்கூடிய நிலைக் கும் மாணவர்கள் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். மருத்துவ மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆறுதலையும் ஆதரவையும் அளித்தனர்.இறுதியாக மருத்துவ மாணவர்களின் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டுள்ளது.

மூன்று வாரமாக தொடர்ந்த இப்போராட்டம் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியின் வழிகாட்டுதலுமின்றி மிக மிக அமைதியாக வும் நேர்த்தியாகவும் நடந்து முடிந்தது.

"அமைதி வழி' ஒன்றே என்பதாலோ என்னவோ? அவர்களின் போராட்டத்தால் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படவில்லை.

ஐந்தரை ஆண்டுகாலக் கல்வியுடன் ஓராண்டுகால சேவையை இணைப்பது எந்தவிதத் தில் நியாயம்? கல்விக்கும், பணிக்கும், சேவைக்கும் வித்தி யாசம் உண்டா இல்லையா? கல்வி என்றால் கற்பது மட்டுமே.

கல்வியோடு பணியையும் சேவையையும் எங்ஙனம் ஒன்றாக இணைக்க முடியும்? தற்பொழுது நான்கரை ஆண்டுகள் முழுக்க படிப்பு மட்டுமே. அதன் முடிவில் தேர்வு. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் சுழற்சி முறையில் அனைத்துத்துறை மருத்துவப் பிரிவுகளிலும் பயிற்சி. அதில் மூன்று மாதம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார்கள். அதன்பின் பட்டம் பெறவும், மருத்துவராகப் பணியாற்றவும் தகுதி பெற்றுவிடுகிறார்கள்.


தற்பொழுது கூடுதலாக ஓராண்டு கிராமப் புற மருத்துவமனையில் பணியாற்றினால் மட்டுமே "பட்டம்' பெறத் தகுதியுடையவர்களாக்குவது எந்த விதத்தில் மாணவர்களுக்கு அல்லது பொது மக்களுக்குப் பலனளிக்கப்போகிறது என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்.

அப்பாவி கிராம மக்க ளுக்கு கத்துக்குட்டி மாணவர்க ளின் சேவையைத்தான் மத்திய அரசு அளிக்க இயலுமா? ஐந்தரை ஆண்டுகள் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்து விட்டு வெறுமனே ரூ. 8,000-க்கு ஓராண்டு பணிபுரிய இயலுமா?

11 லட்சம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கையிருப்பு வைத்திருக்கும் பலம் பொருந்திய இந்தியாவில் உள்ள கோடிக்க ணக்கான கிராமவாசிகளுக்கு பட்டம் பெற்ற மருத்துவர்களின் சேவையைப் பயன்படுத்த முடியாதா? அப்பாவி மருத்துவ மாணவர்க ளின் உழைப்பை ஓராண்டிற்குச் சுரண்டுவது தான் இந்திய அரசின் லட்சியமா?

கிராமப்புற மருத்துவமனையில் ஓராண்டுகாலம் தங்கி எவ்விதமான சிகிச்சை அளிக்க இய லும்? எனவே ஓராண்டு காலம் நீடிப்பது என் பது படிப்பா? பணியா? சேவையா? என்று விளக்க வேண்டும்.

படிப்பு என்றால் கிராமப்புற மருத்துவமனைகளில் இவர்களுக்கு யார், என்ன பாடம் சொல்லித்தரப் போகிறார்கள் என்பது விளக் கப்பட வேண்டும். பயிற்சி என்றால் ஏற்கெ னவே "ஒரு வருடப் பயிற்சியே போதுமானதே'. மேற்கொண்டு பயிற்சி என்றால் நவீன சிகிச்சை யில்தானே பயிற்சி பெற வேண்டும்? சேவை என்றால் இளம் பிஞ்சுக ளிடம் எப்படி கட்டாய சேவை யைப் பெறுவது? மேலும் மனமுவந்து செய்வதுதானே சேவை!
.
பணி என்றால் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள், மத்திய அரசுப்பணிக்குத் தயாராக உள்ள நிலையில் ஏன் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அவர்களை நிரந்தர அரசு வேலைக ளில் அமர்த்தக்கூடாது.

அதில் என்ன தயக்கம்? ஆண்டு முழுவதுமே பனிமழை பொழியும் மலைப்பகுதிகளில் உள்ள ராணுவத்தில் கூட மருத்துவர்கள் பணியாற்ற முற்படும்பொழுது கிராமப்புறங்களில் நிரந்தரப் பணி கொடுத்தால் அதைச் செய்ய எந்த மருத்துவர் களும் தயக்கம் காட்டமாட்டார்கள்.

கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களி லும் மத்திய அரசே மருத்துவர்களை நியமிக்க எவ்வித முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை. அதுபோன்ற எந்த முயற்சியையும் மத்திய சுகாதாரத்துறை எடுக்கவில்லை.


மாணவர்களையே ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியில் அமர்த்துவது பல்லாயிரக்கணக்கான மாண வர்களின் உழைப்பை ஆண்டுதோறும் சம்ப ளம் கொடுக்காமலே சுரண்டுவதற்குச் சமம்.
இது உண்மையில் "மனித உரிமை மீறலும்' அரை கொத்தடிமைத்தனமுமாகும். "கல்வி கொடுக்க வேண்டிய காலத்தில் நல்ல கல்வி, வேலை கொடுக்க வேண்டிய நேரத்தில் நிரந்தரமான வேலை' என இரண்டையும் அரசு உத் தரவாதம் செய்யாமல், கல்வியோடு பணியையும் சேவையையும் போட்டுக் குழப்பக்கூடாது''.

இன்றைய கிராமங்களில் மக்களுக்கு அளிக் கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சையும் மருத்துவ வசதிகளும் வெகுவாக மாறிவிட் டன.

ஒரு நோயாளியின் உயிரைக் காப்பதில் பட்டம் பெற்ற பொது மருத்துவர், உயிர் காக்கும் மருந்துகள், உரிய நவீன பரிசோதனைக்கூ டம், வாகனங்கள், ஆபரேஷன் தியேட்டர் கள் என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள் ளன. அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கிராம மருத்துவமனைகளை மேம்படுத்த எண்ணாமல், கூடுதலாக "ஒரு மாணவரை' நியமிப்பதால் "கிராம மக்களின்' சுகாதாரம் எப்படி மேம்படும் என்பதை சம்பந்தப்பட்டவர் கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

"கிராமப்புறங்களில் சேவை செய்ய முன்வர வேண்டும்' - என மேடைக்கு மேடை கோஷங்கள் முழங்கப்படுகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த பொருளோடு இருக்க வேண்டும். இன்றைய தேவையை உணர்ந்து கிராமப் புற மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட வேண்டும். தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.அதைவிடுத்து "மருத்துவ மாணவர்களைக் கிராமப்புற மருத்துவமனைகளில் நியமிப்ப தால், வெறுமனே திருப்தி ஏற்படலாம். அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாது. எனவே மத்திய, மாநில அரசுகள் மருத்துவ மாணவர்களோடு போராடாமல், எதார்த்தங் களை உணர்ந்து கொண்டுவரவுள்ள சட்டத்தை கைவிட வேண்டும்.


கிராமப்புற சேவையை ஊக்கப்படுத்த படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவர்களையும் நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டுமே தவிர மாணவர்களை அல்ல!.


நன்றி - தினமணி

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

படித்து முடித்த மானவர்கள் கத்துகுட்டிகள் என்றால் படிக்கும்போது எதைப்படித்தார்கள்
நீங்கள் கூறுவது சேவை மனப்பான்மையை ஒழித்து பனம் பன்னும் வேலையையே செய்கிறது கெனக்குத்தெறிந்து கிராமப்புறங்கலில் நிறந்தரமாக பனியமர்த்தப்பட்ட டாக்ட்டர்கள் நோயாளிகளை பெரிய தனியார் மருத்துவமனைகலுக்கு ரெபர் செய்கிறார்கள் அதன் மூலம் கமிஷனும் பெறுகிறார்கள் இளம் மானவர்கள் அதையாவது செய்யாது இருப்பார்கள்

said...

You told your view.. Its ok..!

I just have a question.

Even the freshers also not ready to come to the villages,
How can the experienced so called DOCTORS will come? They will also started to protest..
So That time you people will say
THIS is cruel ! to use the experienced doctors to the tiny villages to give paracetamol and others.. Government is exploiting the experienced well settled doctors.
SO VILLAGE WILL NEVER GOING TO GET DOCTORS.