இவர்கள் பெற்ற பெண்ணுக்கோ படிக்கும் ஆர்வமும் இருக்கிறது அதற்கேற்ப வாய்ப்புக்களும் வந்து சேர்ந்திருக்கிறது!
பெண்ணுக்கும் படித்தே தீருவேன் என்ற வைராக்கியமும் கூட..
பெண்ணின் மதிப்பெண்ணிற்கேற்ப தொழில்நுட்பகல்லூரியில் இடம் கிடைக்கிறது - அதுவும் அருகாமை நகரிலேயெ
ஆனாலும் பெற்ற தகப்பனாரோ பெண் படித்த பள்ளியில் எனது அனுமதியில்லாமல் என் பெண்ணின் சான்றிதழ்களினை தரக்கூடாது என்ற செய்தியையும் கூறி விட, திகைத்து நிற்கிறாள் பெண் அவள் நிலை கண்டு தன் நிலை நொந்துக்கொள்ளும் தாய்!
பெண்ணின் தாய் எடுத்த முடிவில் இறுதியில் சரணடைந்த இடம் மதுரை உயர்நீதிமன்ற கிளை!
உயர்நீதிமன்றத்தின் உதவியோடு பள்ளியிலிருந்து சான்றிதழ்கள் பெறப்பட்டு அப்பெண் கூடிய விரைவில் கல்லூரியில் சேர்ந்துவிடுவாள்!
ஆனால் பெற்றோர்கள் பிரிந்த நிலைதான் வீட்டினை விட்டு வெளியேறி தம் சொல் கேளாமல் சென்றவர்களை இனி வீட்டில் சேர்க்கமாட்டேன் என்று சொல்லி கொண்டு திரியும் பெற்றவர்!
இந்த நூற்றாண்டிலும் கூட தம் கொள்கைகள் தம் மதக்கோட்பாடுகள்தான் பெரிது என்று திரியும் இது போன்ற சில பெற்றோர்களுக்கு அவர்கள் வணங்கும் இறைவன் தான் நல்ல எண்ணங்களையும் நல்ல வாழ்க்கையினையும் வழங்கவேண்டும்!
இது நாள் வரையிலும் தம் கணவனின் நிழலிலேயே வாழ்ந்து தன் பெண்ணின் விருப்பம் நிறைவேறியே ஆகவேண்டும் என்ற எண்ணத்திற்கேற்ப வெற்றி நடைப்போற்று சென்ற அந்த தாய் தான் எடுத்தமுடிவு சரியானதுதான் என்பதனை அவரது தியாகத்தில் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் அப்பெண்ணின் பிற்காலங்கள் உணர்த்த வேண்டும்!
அந்த உள்ளங்களுக்கு...
என் உள்ளத்தினை ஒருங்கிணைத்து இறைவனை வேண்டுகிறேன்!
வாழ்க நலமுடன் வளமுடன்....!
டிஸ்கி:- பெயர்கள் மதங்கள் மற்றும் ஊர்கள் தவிர்த்த ஒரு உண்மை சம்பவம்!










