Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

படிக்கட்டும் அவள்!



பெற்றோர்கள் தம் பிள்ளைகளினை படிக்க சொல்லியே நாம் அறிந்த செய்திகளுக்கு எதிர்மாறாக ஒரு பெண்ணின் அப்பாவுக்கு தன் பெண்ணை மேற்கொண்டு படிக்கவைப்பதில் இம்மியளவும் எண்ணம் இல்லை! - காரணம் பெண் வயதுக்கு வந்த பிறகு வீட்டைவிட்டு அனுப்ப எண்ணமில்லாததுதான்! பழமையில் ஊறிப்போன பாதி பாவி! அப்பெண்ணின் அம்மாவுக்கோ படிப்பறிவு சுத்தமாக கிடையாது! கணவனின் நிழலிலேயே இருந்தவர் அவர்!

இவர்கள் பெற்ற பெண்ணுக்கோ படிக்கும் ஆர்வமும் இருக்கிறது அதற்கேற்ப வாய்ப்புக்களும் வந்து சேர்ந்திருக்கிறது!

பெண்ணுக்கும் படித்தே தீருவேன் என்ற வைராக்கியமும் கூட..

பெண்ணின் மதிப்பெண்ணிற்கேற்ப தொழில்நுட்பகல்லூரியில் இடம் கிடைக்கிறது - அதுவும் அருகாமை நகரிலேயெ

ஆனாலும் பெற்ற தகப்பனாரோ பெண் படித்த பள்ளியில் எனது அனுமதியில்லாமல் என் பெண்ணின் சான்றிதழ்களினை தரக்கூடாது என்ற செய்தியையும் கூறி விட, திகைத்து நிற்கிறாள் பெண் அவள் நிலை கண்டு தன் நிலை நொந்துக்கொள்ளும் தாய்!

பெண்ணின் தாய் எடுத்த முடிவில் இறுதியில் சரணடைந்த இடம் மதுரை உயர்நீதிமன்ற கிளை!

உயர்நீதிமன்றத்தின் உதவியோடு பள்ளியிலிருந்து சான்றிதழ்கள் பெறப்பட்டு அப்பெண் கூடிய விரைவில் கல்லூரியில் சேர்ந்துவிடுவாள்!

ஆனால் பெற்றோர்கள் பிரிந்த நிலைதான் வீட்டினை விட்டு வெளியேறி தம் சொல் கேளாமல் சென்றவர்களை இனி வீட்டில் சேர்க்கமாட்டேன் என்று சொல்லி கொண்டு திரியும் பெற்றவர்!

இந்த நூற்றாண்டிலும் கூட தம் கொள்கைகள் தம் மதக்கோட்பாடுகள்தான் பெரிது என்று திரியும் இது போன்ற சில பெற்றோர்களுக்கு அவர்கள் வணங்கும் இறைவன் தான் நல்ல எண்ணங்களையும் நல்ல வாழ்க்கையினையும் வழங்கவேண்டும்!

இது நாள் வரையிலும் தம் கணவனின் நிழலிலேயே வாழ்ந்து தன் பெண்ணின் விருப்பம் நிறைவேறியே ஆகவேண்டும் என்ற எண்ணத்திற்கேற்ப வெற்றி நடைப்போற்று சென்ற அந்த தாய் தான் எடுத்தமுடிவு சரியானதுதான் என்பதனை அவரது தியாகத்தில் தம் வாழ்க்கையினை ஆரம்பிக்கும் அப்பெண்ணின் பிற்காலங்கள் உணர்த்த வேண்டும்!

அந்த உள்ளங்களுக்கு...

என் உள்ளத்தினை ஒருங்கிணைத்து இறைவனை வேண்டுகிறேன்!

வாழ்க நலமுடன் வளமுடன்....!

டிஸ்கி:- பெயர்கள் மதங்கள் மற்றும் ஊர்கள் தவிர்த்த ஒரு உண்மை சம்பவம்!

நாம் அடிமைகளாகிப்போன அவலம்!

அன்புக்கும் அறிவுக்கும் இன்னும் சில இடங்களில் ஆணவத்திற்கும் அடிமையாகிப்போன வரலாறு மட்டும் கொண்ட மனிதன் இனி மக்கிபோய் பின் விக்கித்து போகும் விலைக்கு போயிருக்கும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கும் அடிமைகளாகிப்போய்விட்ட அவலத்தினை சித்தரிக்கும் காட்சிகள்!


19.08.08 செய்திகளில்....!

நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் சென்னைக்குத் திரும்பியுள்ளது. நேற்று காலை முதல் பல விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்லை என்று கூறி கயிற்றைக் கட்டி மூடி விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாலை வாக்கில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்ைல என்ற வாசகம் காணப்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் திரும்பி விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பாதிக்கும் மேலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போதிய சப்ளை இல்லை என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காரணம் கூறப்படுகிறது. சப்ளை வந்தால்தான் விநியோகம் சுமூகமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களில் பெருமளவில் கூட்டம்காணப்படுகிறது. திடீரென பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதால் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்பட்டது.

Mentholலில் விளை சுகமே....!

எனக்கு வர்றப்ப பாரின் சிகரெட்டு வாங்கிட்டு வா மாப்ளே!

டேய்...! பாரின் ரிடர்ர்ன்னு பாரின் சிகரெட்டு ஒண்ணும் வாங்கிட்டு வர்லையாடா?மச்சி!

உங்க ஊர்லெல்லாம் சிகரெட்டு மென் தால் தானாம்ல அது பத்தி ஒண்ணும் சொல்லமாட்டிக்கிறியேடா? ஒண்ணும் வாங்கி வந்துருக்கலாம்ல!

இப்பபடி பலரிடரிமிருந்தும் கோரிக்கைகள், கேள்விகள் தொடர்ந்த, பதில்கள் ஆதங்கங்கள் சந்தேகங்கள் எழவைக்கும் அந்த பாரின் சிகரெட்ல அப்படி என்னதாங்க விஷயம் இருக்கு.???



அப்படின்னு பார்த்தா பெருசா ஒண்ணும் விஷயம் இல்லைங்க! கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விஷம் மட்டும் இருக்கறதுமட்டும்தான்!

அதிக புகையில்லாத அதே சமயத்தில் அதிக ஆபத்தினை விளைவிக்க கூடிய நிக்கோடின் அளவினை அதிகமாக கொண்ட இந்த மென்தால் வகை சிகரெட்டுக்கு இப்ப ரொம்ப நல்ல கிராக்கியாம்!

பொதுவாக பற்பசைகளிலும்,இருமல் சிரப்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மென்தால் ஒரு கூலிங்க் எபெக்டினை மட்டுமே தரும் வேறு எதுவும் பிரத்யோகமான மருத்துவ குணங்கள் கொண்டவையாக இருப்பதில்லை! இந்த சங்கதியினை சிகரெட்டினில் நுழைத்து, இப்போது அதிக அளவில் பலரது விருப்பமான பொருளாக சிகரெட்டினை மாற்றியதும் இந்த மென்தால்தான்!

இந்த சிகரெட்டுகளை ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் அந்த பழக்கத்தினை விட்டுச்செல்வது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறும் அளவுக்கு உங்களை அடிமைப்படுத்தும் அதிசயம்தான் அந்த மென்தாலின் மூலம்!




முன்பெல்லாம் மேம்போக்காக சிகரெட் குடித்தவர்கள் இந்த மென்தால் சிகரெட்டில் நீண்ட இன்ஹேலில் இன்பம் எய்துகிறார்களாம்! பாவம் அவர்களுக்கு தெரியாது அதிகம் நிக்கோடினையும் கார்பன் மோனாக்சைடினையும் கூடவே எடுத்துக்கொள்கிறார்கள் என்று !

2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !


நீங்கள் புகை பிடிக்காதவரா?

ஆம் எனில்,

நீங்களும் புகை பிடிப்பவர்தான்!

அட...! தம் அடிக்கறவங்க இழுத்து வெளியே விடற புகையை நீங்கள் இழுக்குறீங்க,
சுவாசிக்கிறீங்கள்ல அத தான் சொன்னேங்க!

நீங்களும் புகைபிடிப்பவர்கள் பிடித்து விடும் மிச்ச மீதி புகைகளை பிடிப்பவர்கள்தான்!

உண்மையாகவே நம்புங்கள் நாமும் இந்த புகை பழக்கத்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்!

இதுக்கு மேலை நாடுகளில் செகண்ட் ஹாண்ட் ஸ்மோக் - ரெண்டாவது வாட்டி இழுக்குறதுன்னு கூட சொல்லலாம் - என்றழைக்கிறார்கள் அதாகப்பட்டது ஒரு புகைபழக்கம் உள்ள நபர் தான் அனுபவித்து விடும் இன்பம் மெதுவாக காற்றில் கலக்கும் அதே சமயத்தில் இன்னொருவர் சுவாசித்து தனக்கு துன்பத்தை தேடிக்கொள்கிறார் அந்த நபர்தான் இந்த மாதிரியான செகண்ட் ஹாண்ட் ஸ்மோக்கர்கள்!

இதனால் பெரும்பாலும் நுரையீரல் தொடர்பான நோய்கள்,காது மூக்கு தொண்டை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்னு கண்டுபுடிச்சிருக்காங்களாம்!

என்ன ரொம்ப யோசனையா இருக்கா....???

நாம என்ன பண்ணமுடியும்?

முடியும்!

நிப்பாட்டணும் எல்லாரையும் நிப்பாட்டணும்

சிகரெட் புடிக்காதீங்கன்னு சொல்லி,

SMOKING INJURIOUS TO OTHERS HEALTH

சிந்தனையை சிதைக்கும் சிறுவர் டிவிக்கள் - தினமணியிலிருந்து



3 வயது குழந்தை முதல், பள்ளி மாணவ, மாணவிகள் வரை குழந்தைகளுக்கான சேனல்களின் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கின்றனர்.விரும்பி பார்க்கின்றனர் என்பதைவிட அதில் மூழ்கிவிடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.இத்தகைய சேனல்களை மட்டுமே குழந் தைகள் விரும்பிப் பார்ப்பதால், அவர்களுக்கு வேறு எதன் மீதும் கவனம் செலுத்த இயலாத அளவுக்கு மூளையின் செயல்திறன் குறைகிறது.

படிக்கும் காலங்களில் படிப்பதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், கல்வியின் மீதான ஆர்வம் குறைந்து தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.மேலும் டிவி பார்ப்பதால் கண்பார்வை பாதிக்கப்பட்டு சிறு வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய சூழலும் உருவாகி விடுகிறது.

இத்தகைய குழந்தைகள் சேனல்களை பார்க்கும்போது, பெற்றோர்கள் அதை பார்க்காதே என அறிவுரை கூறினாலோ, அல்லது சேனல்களை மாற்றி னாலோ அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் ஒரே வீட்டில் 2, 3 குழந்தைகள் இருந்தால் குழந்தைகள் சேனல்களிலே எந்த சேனல்களை வைப்பது என்ற சண்டை வேறு.

இத்தகைய சேனல்களை தொடர்ந்து பார்ப்பதால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே செல்வதில்லை. இதனால், அவர்களுக்கு நட்பு வட்டாரம் குறைகிறது. உறவினர்கள் வீட்டுக்குச் சென்று வரலாம் என பெற்றோர் அழைத்தால்கூட அவர்கள் வர மறுப்புத் தெரிவிக்கின்றனர். அப்படியே வந்தாலும் கூட அங்கு யாரிடமும் நன்கு பழகுவதில்லை.அங்கேயும் டிவி பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

உணவுவேளைகளில் சரியான நேரத்துக்கு சாப்பிடச் சொன்னால்கூட ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் அரைகுறை சாப்பாடுதான். இதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்க ளுக்கு ஒரு விதத் தளர்வும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன.

சீரியலில் மூழ்கிக் கிடக்கும் பெண்களைப் போல இப்போது குழந்தைகள் சேனல்களால் வீடுகளில் பிரச்னைதான்.

இது தொடர்ந்தால் குழந்தைகளை இந்த மாதிரியான சேனல்கள் கற்பனை உலகத்திலே சுற்ற வைத்து விடும். பெற்றோர்களிடம் பாச உணர்வுடன் இருக்கவோ, சரியாக படிக்கவோ, விளையாட்டுத்திறனை அதிகரிக்கவோ அது தடையாக இருக்கும் . அவர்களின் மூளை செயல்திறனை மழுங்கடிக்கும்.
இத்தகைய சேனல்கள் குழந்தைகளுக்கு ஒரு போதைப் பொருள்போல ஆகிவிடும்.இதனால் வருங்கால சமுதாயமே பாதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி எப்படி ஆபாச சேனல்களுக்கு அரசு தடை விதிக்கிறதோ, அதேபோல இத்தகைய குழந்தைகள் சேனல்களுக்கும் உடனடியாகத் தடைவிதிக்க வேண்டும்.அவ்வாறு செயல்பட்டால் அன்றி, வருங்கால இந்தியா, வல்லரசு இந்தியா என்பதெல்லாம் பெயரளவில் சொல்லிக் கொள்ளலாமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமில்லை.

இன்றைய குழந்தைகள்தானே நாளைய இளைஞர்கள். அவர்கள் ஒரு நல்ல குழந்தையாக இருந்தால் மட்டுமே நல்ல இளைஞராக உருவாக முடியும். அப் போதுதான் ஒரு நல்ல இந்தியனாக வந்து இந்தியாவை வல்லரசாக உருவாக்க முடியும்.எனவே, அரசு இதைக் கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இனி குழந்தைகளுக்கு நேரம் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், அந்தச் சேனல்களில் மூழ்கிவிடாமல் இருக்கவும், உடனடியாக கவனித்து குழந்தைகள் சேனல்களை தடை செய்ய வேண்டும். அது விடுமுறை காலம் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் இத்தகைய சேனல்கள் தேவை இல்லை என்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி - தினமணி

மருத்துவமனைகளின் விளம்பர விளையாடல்கள்..!?

தமிழக தலைநகரில் விளம்பர பலகைகள் மற்றும் பண்பலை வானொலிகளில் விளம்பரங்கள் போன்றவற்றால் சாதரணமாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவிகிதம் கூடியிருப்பதாக செய்திகள் தெரிவித்தன(!?) கடந்த வருட இறுதிகளில்...

மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலின் பேரில் இது போன்ற விளம்பரங்களை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.. தள்ளுபடிகள் மற்றும் மற்ற மருத்துவமனைகளை ஒப்பிடும் வகையிலான விளம்ப்ரங்கள் கூடாது என்றும் சில கண்டிஷன்களை கூறியிருந்தது.

ஒரு தலைநகர மருத்துவமனையில் ,மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை ஒரு வருட காலத்திற்கு முன்பு ஆரம்பித்தார்களாம்! ஆரம்பித்த காலம் தொட்டு காத்து வாங்கிக்கொண்டிருந்தது கட்-அவுட் விளம்பரம் வைத்ததுமே நல்ல கூட்டமாம்!? நல்ல வருமானமும் உண்டாம்!

இதே வழிமுறைகளை கடைப்பிடித்து விளம்பரபடுத்தினால் மக்களின் வலி குறையும், வழி தெரியும் என்று தனியார் மருத்துவமனைகள் கூறிக்கொண்டிருந்தாலும் இதற்கு பலதரப்பிலிரருந்தும் கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அனைத்து தனியார் மருத்துவனைகளுக்கும் (சென்னையில்தான் விளம்பரங்கள் அதிகமாம்!) எச்சரிக்கை கடிதத்தினை அனுப்பியுள்ளதாம்!

மருத்துவ துறையின் சேவை மனப்பாங்கு இதன் மூலம் மாறக்கூடிய அபாயங்கள் இருப்பதாலும்,மக்களிடத்தில் விழிப்புணர்விற்கு பதிலாக பயத்தினை தூண்டும் வாய்ப்புக்கள் இருப்பதாலும் தனியார் மருத்துவமனைகள் தம் விளம்பரங்களை அடுத்த 3 மாதங்களுக்குள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் இல்லையேல், மருத்துவமனைகளுக்கும் அதில் பணியாற்றும் மருத்துவர்களின் மருத்துவகவுன்சில் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்!

எது எப்படியோ நல்லா இருந்தா சரிதான் - நம்ம மக்கள்!

For example ஒரு வெளம்பரம்

தீனி பண்டாரங்களாய்...?!?




எங்கயாவது பசங்க வெளியூருக்கோ அல்லது பல நாட்கள் வெளியிலோ சென்று வந்தால் கண்டிப்பாக அன்றைய முதல் உணவுப்பொழுதில், இந்த வார்த்தைகளை கேட்ககூடும் உப்பு சப்பில்லாத சாப்பாட சாப்பிட்டிருப்பான்! ராசா உனக்கு இந்தாடான்னு ஆசை ஆசையா வகை வகையா பரிமாறும் பாட்டிகளிலிருந்து அம்மாக்கள் வரை அனைவரிடமிருந்தும் இந்த சொல் வெளிப்பட்டிருக்கும்:)

இன்றைய நாளில் இதெல்லாம் சர்வ சாதரணமாக மறந்துப்போய், பணமிருப்பவர்கள் மனமின்றி வாங்கி தின்னும் பழக்கத்தோடு பொருட்களின் வகைகள் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன. அதனால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் விட மிக முக்கியமான கவலைக்குரிய விஷயம் வேலைக்கு செல்லும் பெற்றோர்களின் வாரிசுகள்தான் இளையதலைமுறைகளுக்கு,என்னமாய் கற்று தந்திருக்கிறார்கள் அழகாக சாக்லேட்டுகள் சாப்பிடவும்,இன்னபிற பெயர் வாயில் நுழையா பொருள் வாயினுள் நுழைத்து,இளம் வயதிலேயே நோயினை வரவழைத்துக்கொண்டு படாத பாடு படுவதை பலரும் நேரில் காணலாம்!

நொறுக்கு தீனிகள் என்றழைக்கப்படும் இவ்வகையான உணவுப்பொருட்கள் அந்த நேரத்தில் மட்டுமே நல்ல சுவையாக தோன்றினாலும் அதனால் உடலுக்கு ஒரு பலனும் இல்லை! இது போன்ற உணவுகளும் நல்ல அழகிய வண்ணங்களில் பலரையும் கவரும் வகையில் விற்பனைக்கு பயன்படுத்தப்ப்டுகின்றன அது மட்டுமல்லாமல் அதை வாங்கி தின்றால்தான் தங்களது கெளரவம் வெளியுலகுக்கு தெரியும் என்கிற ரீதியில் கூட மக்கள் மனதை மாற்றி வைத்துள்ளனர் விற்பனையாளர்கள்!

வரும் நோய்களை பற்றியும் சற்று தெரிந்துக்கொள்வோம் அதிக அளவு நொறுக்கு தீனிகள் அதே அளவு கொழுப்பினையும் கொண்டுவரும் கூடவே...!அதிக கொழுப்பு கல்லீரலினை காயப்படுத்தலாம், டயாபடிக் சார்ந்த நோய்கள்,நரம்பு தளர்ச்சி,சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகள் கொண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்துமே அடங்கியுள்ளது இது போன்ற நொறுக்கு தீனிகளுள்!

நொறுக்கு தீனிகளை நறுக்குவோம்!

நோய்களை தேடி நாம் செல்வதை தவிர்ப்போம்!

கறுப்பு மண்ணில் (மனதால்) கருகியவர் :(

ஆகஸ்ட் 1999 மண் எண்ணெய்யில் தம் வாழ்வினை மண்ணுக்கு கொடுத்த அந்த பெண் கடைசியாக சொன்ன வார்த்தைகள் மரண வாக்குமூலமாக பதியப்பட்டிருந்தாலும்,கூட இந்தளவுக்கு தண்டனை கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் !

”நான் கருப்புங்கறதால எங்க வீட்டுக்காரருக்கு பிடிக்கலை மனசு ஒத்துவரலை தினமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பதற்கு பதில் நான் தற்கொலைக்கு முடிவெடுத்துவிட்டேன்” என்று அந்த பெண் வாக்கு மூலத்தோடு தன் மூச்சை நிப்பாட்டிக்கொண்டாள்!

சரியாக கிட்டதட்ட ஒன்பது வருடங்களுக்கு நேரிடையாகவும்,மறைமுகமாகவும் தற்கொலைக்கு தன் மனைவியை தூண்டி விட்ட காரணத்திற்காய் கணவருக்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை அளித்த மதுரை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

பெரும்பாலும் இது போன்ற தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்தாலும் கூட அவ்வளவாக வெளியே வராது அல்லது வேறு எதாவது காரணங்களில் கரைந்து போய்விடும்!

எப்படியோ! தற்கொலை என்ற அவசர முடிவை அந்த பெண் எடுத்துக்கொண்டாலும் கூட எதிர்கால சமூகத்தில் இது போன்றதொரு சம்பவம் நிகழாமல், நிகழ்ந்தால் தண்டனை கட்டாயம் உண்டு என்ற செய்தியை தந்து சென்றிருக்கிறார்!

குடிக்கத்தானே தண்ணி கேட்குறோம்....?

பெரும்பாலான மக்களுக்கு பிரச்சனையின் காரணம் என்ன என்று தெரியாத நிலையில் தமிழ் திரைப்பட உலகமே உண்ணாவிரதத்தில் குதித்ததும் அதில், முன்ணணி நடிகர் நடிகைகள் கலந்துகொண்டதும், ஆவேசப்பட்டதும் என்னமோ பெரிய மேட்டர்தான் என்று முடிவு செய்தார்கள்!

சரி திரையுலகுக்கு ஒரளவுக்கு தெரிய தொடங்கிய இந்த பிரச்சினையின் சாரம் ஏன் பாமர மக்களுக்கு அவ்வளவாக ரீச் ஆகவில்லை ???

தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதி மாவட்டங்களான கிருஷ்ணகிரி தர்மபுரியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டது. மக்கள்

தொகை பெருக்கமும் கட்டுப்படுத்தமுடியாத அளவில் எல்லா மாவட்டங்களிலுமே சென்றுகொண்டிருக்கையில் இந்த இரண்டு மாவட்டங்களின் தண்ணீர்

பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி பல ஆய்வுகளை மேற்கொண்டது தமிழக் அரசு!

மேலும் அந்த மாவட்டப்பகுதிகள் குறைவான மழை ஒருபக்கம் என்றால் பூமிக்கடியில் இருக்கும் நீரிலோ அதிக அளவு ஃபுளோரைடின் தாக்கமும் உபயோகிக்க முடியாத அளவு.இரு மாவட்டங்களிலிருந்தும் குறைந்த தூரத்திலேயே உள்ள காவிரியின் நீரைக்கொண்டு மக்களின் குடிநீர் கவலையை தீர்க்க முடியும் என்றொரு நம்பிக்கை அரசுக்கு!

ஒரே சமயத்தில் மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய இயலும் அதுவுமில்லாமல் அம்மண்ணில் நிலத்தடிநீரில் மறைந்துள்ள புளோரைடின் அளவை குறைக்க இயலும் என்பது அரசின் திட்டம்!

3 நகராட்சிகள்,17 டவுன் பஞ்சாயத்துக்கள், 6755 கிராமங்கள் பயனடையும் வகையிலான இத்திட்டத்திற்கு உதவ ஜப்பான் நாட்டு வங்கியின் உதவியை நாடியது கால நேரம் 2008 இல் ஆரம்பித்து 2013க்குள் முடிவடையும் வகையில் இதறகான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவேண்டி முகமைதாரர்களையும் நியமிக்க திட்டமிட்டது.

இப்போது இந்த திட்டம் பூதாகரமான பிரச்சனையாக்கப்பட்டு, தற்போதைக்கு, அடுத்த புதிய கர்நாடக அரசை எதிர்நோக்கி காத்திருக்கிறது!

கொஞ்சமாக பொறுத்து, பிரச்சனை சரியானால் ஒ.கே

இல்லாவிடில் நம் எதிர்கால சந்ததி

இப்படித்தான் இருக்கும்....

கண்ணீருடன் நம் மக்கள் தண்ணீருக்காய்.......
:-(

மருத்துவ மாணவர்கள் போராட்டம் - டாக்டர்.கிருஷ்ணசாமி.


மருத்துவப் படிப்பு காலத்தை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து நீடித்து ஓராண்டு கட்டாய கிராம சேவையுடன் ஆறரை ஆண்டுக ளாக்கும் ""மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின்'' முயற்சியை எதிர்த்து பல்லாயிரக்கணக் கான மருத்துவ மாணவர்கள் மூன்று வாரகா லமாகப் போராடி வந்தனர்.

அப்போராட்டம் தமிழகத்தில் பல கட்டங் களை நோக்கி நகர்ந்தது. சாகும்வரை பட்டினிப்போர் என்ற வருத்தப்படக்கூடிய நிலைக் கும் மாணவர்கள் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். மருத்துவ மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆறுதலையும் ஆதரவையும் அளித்தனர்.இறுதியாக மருத்துவ மாணவர்களின் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டுள்ளது.

மூன்று வாரமாக தொடர்ந்த இப்போராட்டம் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியின் வழிகாட்டுதலுமின்றி மிக மிக அமைதியாக வும் நேர்த்தியாகவும் நடந்து முடிந்தது.

"அமைதி வழி' ஒன்றே என்பதாலோ என்னவோ? அவர்களின் போராட்டத்தால் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படவில்லை.

ஐந்தரை ஆண்டுகாலக் கல்வியுடன் ஓராண்டுகால சேவையை இணைப்பது எந்தவிதத் தில் நியாயம்? கல்விக்கும், பணிக்கும், சேவைக்கும் வித்தி யாசம் உண்டா இல்லையா? கல்வி என்றால் கற்பது மட்டுமே.

கல்வியோடு பணியையும் சேவையையும் எங்ஙனம் ஒன்றாக இணைக்க முடியும்? தற்பொழுது நான்கரை ஆண்டுகள் முழுக்க படிப்பு மட்டுமே. அதன் முடிவில் தேர்வு. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் சுழற்சி முறையில் அனைத்துத்துறை மருத்துவப் பிரிவுகளிலும் பயிற்சி. அதில் மூன்று மாதம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார்கள். அதன்பின் பட்டம் பெறவும், மருத்துவராகப் பணியாற்றவும் தகுதி பெற்றுவிடுகிறார்கள்.


தற்பொழுது கூடுதலாக ஓராண்டு கிராமப் புற மருத்துவமனையில் பணியாற்றினால் மட்டுமே "பட்டம்' பெறத் தகுதியுடையவர்களாக்குவது எந்த விதத்தில் மாணவர்களுக்கு அல்லது பொது மக்களுக்குப் பலனளிக்கப்போகிறது என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்.

அப்பாவி கிராம மக்க ளுக்கு கத்துக்குட்டி மாணவர்க ளின் சேவையைத்தான் மத்திய அரசு அளிக்க இயலுமா? ஐந்தரை ஆண்டுகள் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்து விட்டு வெறுமனே ரூ. 8,000-க்கு ஓராண்டு பணிபுரிய இயலுமா?

11 லட்சம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கையிருப்பு வைத்திருக்கும் பலம் பொருந்திய இந்தியாவில் உள்ள கோடிக்க ணக்கான கிராமவாசிகளுக்கு பட்டம் பெற்ற மருத்துவர்களின் சேவையைப் பயன்படுத்த முடியாதா? அப்பாவி மருத்துவ மாணவர்க ளின் உழைப்பை ஓராண்டிற்குச் சுரண்டுவது தான் இந்திய அரசின் லட்சியமா?

கிராமப்புற மருத்துவமனையில் ஓராண்டுகாலம் தங்கி எவ்விதமான சிகிச்சை அளிக்க இய லும்? எனவே ஓராண்டு காலம் நீடிப்பது என் பது படிப்பா? பணியா? சேவையா? என்று விளக்க வேண்டும்.

படிப்பு என்றால் கிராமப்புற மருத்துவமனைகளில் இவர்களுக்கு யார், என்ன பாடம் சொல்லித்தரப் போகிறார்கள் என்பது விளக் கப்பட வேண்டும். பயிற்சி என்றால் ஏற்கெ னவே "ஒரு வருடப் பயிற்சியே போதுமானதே'. மேற்கொண்டு பயிற்சி என்றால் நவீன சிகிச்சை யில்தானே பயிற்சி பெற வேண்டும்? சேவை என்றால் இளம் பிஞ்சுக ளிடம் எப்படி கட்டாய சேவை யைப் பெறுவது? மேலும் மனமுவந்து செய்வதுதானே சேவை!
.
பணி என்றால் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள், மத்திய அரசுப்பணிக்குத் தயாராக உள்ள நிலையில் ஏன் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அவர்களை நிரந்தர அரசு வேலைக ளில் அமர்த்தக்கூடாது.

அதில் என்ன தயக்கம்? ஆண்டு முழுவதுமே பனிமழை பொழியும் மலைப்பகுதிகளில் உள்ள ராணுவத்தில் கூட மருத்துவர்கள் பணியாற்ற முற்படும்பொழுது கிராமப்புறங்களில் நிரந்தரப் பணி கொடுத்தால் அதைச் செய்ய எந்த மருத்துவர் களும் தயக்கம் காட்டமாட்டார்கள்.

கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களி லும் மத்திய அரசே மருத்துவர்களை நியமிக்க எவ்வித முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை. அதுபோன்ற எந்த முயற்சியையும் மத்திய சுகாதாரத்துறை எடுக்கவில்லை.


மாணவர்களையே ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியில் அமர்த்துவது பல்லாயிரக்கணக்கான மாண வர்களின் உழைப்பை ஆண்டுதோறும் சம்ப ளம் கொடுக்காமலே சுரண்டுவதற்குச் சமம்.
இது உண்மையில் "மனித உரிமை மீறலும்' அரை கொத்தடிமைத்தனமுமாகும். "கல்வி கொடுக்க வேண்டிய காலத்தில் நல்ல கல்வி, வேலை கொடுக்க வேண்டிய நேரத்தில் நிரந்தரமான வேலை' என இரண்டையும் அரசு உத் தரவாதம் செய்யாமல், கல்வியோடு பணியையும் சேவையையும் போட்டுக் குழப்பக்கூடாது''.

இன்றைய கிராமங்களில் மக்களுக்கு அளிக் கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சையும் மருத்துவ வசதிகளும் வெகுவாக மாறிவிட் டன.

ஒரு நோயாளியின் உயிரைக் காப்பதில் பட்டம் பெற்ற பொது மருத்துவர், உயிர் காக்கும் மருந்துகள், உரிய நவீன பரிசோதனைக்கூ டம், வாகனங்கள், ஆபரேஷன் தியேட்டர் கள் என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள் ளன. அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கிராம மருத்துவமனைகளை மேம்படுத்த எண்ணாமல், கூடுதலாக "ஒரு மாணவரை' நியமிப்பதால் "கிராம மக்களின்' சுகாதாரம் எப்படி மேம்படும் என்பதை சம்பந்தப்பட்டவர் கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

"கிராமப்புறங்களில் சேவை செய்ய முன்வர வேண்டும்' - என மேடைக்கு மேடை கோஷங்கள் முழங்கப்படுகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த பொருளோடு இருக்க வேண்டும். இன்றைய தேவையை உணர்ந்து கிராமப் புற மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட வேண்டும். தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.அதைவிடுத்து "மருத்துவ மாணவர்களைக் கிராமப்புற மருத்துவமனைகளில் நியமிப்ப தால், வெறுமனே திருப்தி ஏற்படலாம். அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாது. எனவே மத்திய, மாநில அரசுகள் மருத்துவ மாணவர்களோடு போராடாமல், எதார்த்தங் களை உணர்ந்து கொண்டுவரவுள்ள சட்டத்தை கைவிட வேண்டும்.


கிராமப்புற சேவையை ஊக்கப்படுத்த படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவர்களையும் நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டுமே தவிர மாணவர்களை அல்ல!.


நன்றி - தினமணி

ப்ளீஸ் லைட்ட அணைங்க....!


ஒரு மணி நேரம் ஒரே ஒரு மணி நேரம் நீங்க லைட்ட ஆஃப் பண்ணுங்க ஃப்ளீஸ்!

இப்படி ஒரு கான்செப்ட்டோட கிளம்பியிருக்காங்க ஒரு நாலு பொடியன்கள்!

அதுவும் எல்லாருமே ஒரே நேரத்தில, டிசம்பர் 15 அன்னைக்கு ஒரு மணி நேரத்துக்கு லைட்ட அணைச்சிட்டு இருந்தா....!

ஏதோ நம்மளால செய்யமுடிஞ்ச விஷயமா சூடாகிக்கிட்டிருக்க உலகத்தோட சூட்ட கொஞ்சம் குறைக்கலாம்னு, இந்த பசங்க ஃபீல் பண்றாங்களாம்!

இநத நாளு பொடிப்பசங்களையும் இப்படி ஃபீல் பண்ண வைச்ச விஷயம் ஆஸ்திரேலியாவுல நடந்துச்சாம்! எர்த் ஹவர்ங்கற பேர்ல ஒரு மணி நேரம் கரண்ட் கட் பண்ணினாங்கலாம், அதுவும் அதை ஒரு பெரிய பங்ஷனாக நடத்தினாங்களாம்!

சுமாரா2.2 மில்லியன் மக்கள் சேர்ந்து, அவங்களோட ஒரு மணி நேரத்து மின் பயன்பாட்டின் வெளிப்பாடான, சுமார் 24.86 டன் கார்பன் டை ஆக்சைடு வெளிய வராம இருக்க உதவி பண்ணுனாங்களாம்!

சும்மா அந்த ஒரு மணி நேரம் கரண்ட் நிப்பாட்டுனாக்கூட நீங்க சந்தோஷமா அக்கம்பக்கத்துல பேசிக்கிட்டிருங்க குழந்தைகளோட உட்கார்ந்து விளையாடுங்கன்னுல்லாம் சொல்லி எல்லாரையும் ஃபீல் பண்ண சொல்றாங்க இந்த பொடிப்பசங்க!

ஆனா இது எல்லாம் நடக்கப்போறது நம்மூரில இல்ல மும்பையில....!

நாமளும் இதே மாதிரி செய்யுலாம்ல,- அல்ரெடி நம்ம வீட்டு பெருசுங்க செஞ்சுக்கிட்டிருக்கும் - வீட்டுல லைட்டப்போட்டுட்டு வீட்டுக்கு வெளிய வந்து நின்னுக்கிட்டு, முதல்நாளில் நடந்த மெகா நாடகங்களை அசைப்போட்டுக்கொண்டிருப்பார்கள்!

அநத ஆளுங்களுக்குகிட்ட நாம இந்த பிரச்சாரத்த கொண்டுப்போகலாம்ல.....!!!

(அட...! ஆமாம், ஒரு நாளைக்கு மெகா தொடர் பாக்காம இருந்தாலே எவ்ளோ நல்ல விஷயங்கள் தேறும்போல தெரியுதே....????!!!)