Dr.ராமதாஸ் - உரிமைக்குரலா..??


ராமதாஸின் பார்வை இப்போது புறம் போக்கு நிலங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது ! (அட கருணை பார்வையோடத்தாங்க...!!!)

ஆறுகள் குளங்களை ஆக்ரமித்து கட்டப்பட்டிருக்கும் குடிசைகள் வீடுகளுக்கு நிரந்த பட்டா வழங்குவதன் மூலம் இனியும் யாரு ஆக்ரமிப்ப்பு செய்ய மாட்டார்கள் என்ற தீர்க்க சிந்தனையின்பால் வெளிவந்துள்ள கருத்துக்கள்!

ராமதாஸ் சொல்வது போல அங்கு தம் ரத்தம் சிந்தி உழைத்த காசை கொண்டு ஆற்றின் கரைகளில் பெற்ற சிறு துண்டு நிலங்களை கல் மண் கொண்டு குடிசை வேய்ந்து காலம் தள்ளிக்கொண்டிருப்பது 100 சதவீகிதம் உண்மையே!

சாதரண கூலி வேலை செய்யும் அவர்கள் இவ்வளவு தைரியமாகவா எதிர்கால சூழ்நிலைகளை பற்றி சிந்திக்காமலா புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டுவார்கள்?

அரசியல்வியாதிகளே இதற்கு முழுமுதல் காரணம் !

கூலி தொழிலாளிகளிடமும் கூட பெற்ற அந்த காசினை கொண்டு தம் வளமான வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் கீழ்மட்டத்தில் உள்ள தம் அடிப்பொடிகளிடம் தான் இந்த கலெக்ஷன் கலாச்சரத்தை வழிநடத்தி செல்ல யோசனை அளிக்கின்றனர்!

அவ்வப்போது விழித்துக்கொள்ளும் அரசு துறையினர் ஆக்ரமிப்பு அகற்றல் என்ற ஆயுதம் ஏந்தி புறப்படுகையிலேயே நமக்கு தெரிந்து விடும் அது அவர்களின் கையில் இருக்கும் மொக்கையான கத்திதான் என்று! அப்படியே சில ஷார்ப்பான அதிகாரிகளும் மேல்மட்டத்து ஆட்கள்,மூலம் மொக்கையாக்கப்படுகின்றனர்!

இந்த அரசு இதை செய்ல்படுத்தாவிட்டாலும்,இனி வரும் 2011ல் பா.ம.கவின் ஆட்சியில் (?!) இது செயல்படுத்தப்படக்கூடும்! அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இன்றிலிருந்தே தொடக்கப்பட்டு விடக்கூடும் (அதாங்க கலெக்ஷன்ஸ்...!?)

வாழ்க ஜனநாயகம்

ஆறுகளின் கரைகள் கரைந்து,

எழும்பட்டும் எங்களின் இல்லங்களாய்....!!!

0 பேர் கமெண்டிட்டாங்க: