பாட்ஷா - டிரெயிலர்..!


டிரெயிலர் வெளியாகிய போது பெரிய எதிர்பார்ப்புக்கள் இல்லையென்றாலும் கூட, ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு ஆக்ஷன் படம் என்று அவதானிக்க முடிந்திருந்தது!

ஆனால் மிகப்பெரியதொரு மெகா ஹிட் மேட்டராக மாறும் என்று அன்று எதிர்பார்க்கவில்லை!

எப்போது படத்தை பார்த்தாலும், முதல் தடவை பார்ப்பதை போன்றே,

பீட் குறையாத பாட்ஷா!

மற்றுமொரு பிரபலமான பஞ்ச்,

"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"

எல்லோராலும் பேசப்பட்ட,பேசப்படுகின்ற பஞ்ச் ஆக மாறிய வரிகள்!

இத்தனைக்கும் பலரது வீடுகளிலும் அன்றும் இன்றும் எப்போதுமே பேசப்படுக்கின்ற வரிகள்தான் இவை, பெரியவர்கள் சிறியவர்களிடம்,"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா நூறு வாட்டியா சொல்லணும்" என்று அறிவுரையாகவோ அல்லது அதட்டலாகவே பயன் படுத்தும் வார்த்தைதான்!

எனக்கு தெரிந்து, பழைய தஞ்சை மாவட்டத்தில்(காவிரி டெல்டா) பல இடங்களிலும், இன்னும் கூட பசங்களை கண்டிக்க இந்த வரிகளை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்! ( நல்லவேளை யாரும் காப்பிரைட் கேட்டு அன்று கோர்ட்டில் கேஸ் போடவில்லை :)))

0 பேர் கமெண்டிட்டாங்க: