ராமன் எபெக்ட்...?!

பதினெண்டு வருடத்துக்கு முன்பிலிருந்து ஆரம்பித்த வழிபாடு இன்று தற்காலிகமாக ,அரசின் குறுக்கீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

அரசின் தரப்பிலிருந்தோ சரியானதொரு விளக்கமும் தரப்படாத சூழல் இந்த ஜனநாயக நாட்டில்!

இச்செய்தி நடந்த இடத்திற்கும் நம்க்கும் ரொம்ப தூரம் என்றாலும் ஏதோ ஒரு வகையில் நம்மை தொடர்பு படுத்தும் விஷயம் தான்
பத்து தலை ராவணணை பற்றி பெரும்பாலும் தெரிந்திருப்பீர்கள்! ராமாயணத்தில பார்த்திருந்தாலும் சரி; இல்லை, சிவதாண்டவத்தில படிச்சிருந்தாலும் சரி! – எப்படியோ தெரிஞ்சிருந்தா சரி!

ஜோத்பூரில் தேவ்கோட் சமூகத்தை சார்ந்தவர்கள் ராவணணை தம் முன்னோர்களாக கருதி வழிபாடு செய்து வருகின்றனர்! இது ஒரு 18 வருஷமா நடந்து வருதாம்!

மெகரங்கார்க் (குளறுதுப்பா!!) கோட்டைக்கு அப்பரத்த சைடு இருக்கற இந்த கோவில்ல, எல்லா சாமிகளும் உண்டாம்!

சரி ரொம்ப வருஷாமாச்சே! கோவில கொஞ்சம் புதுப்பிச்சு கட்டுவோம்னு எல்லாம் சரி பண்ணி, அழகான ஜோத்பூர் கல்லில் செதுக்கிய, சிவனுக்கு பூஜை செய்வது போல் நிற்கும் ராவணன்சிலையை பிரதிஷ்டை பண்ண போறப்பத்தான் அதெல்லாம் முடியவே முடியாதுன்னு, காவி குரூப்ஸ் எதிர்க்க ஆரம்பிச்சு,

Photo Sharing and Video Hosting at Photobucket

ராஜஸ்தான் பிஜேபி கவர்ன்மெண்ட்தானே! - விளக்கம் எதுவும் சொல்லாம நிப்பாடிப்புட்டாங்க, கவர்ன்மெண்ட் ஆபிசருங்க!

தற்காலிகமாத்தான்னு சொன்னாலும் அடுத்து காங்கிரஸ் கவர்ன்மெண்ட் வந்தாத்தான் சாத்தியம் போல....!

அவங்கவங்க விரும்பற சாமியை கும்பிடறதுதானே சுதந்திரம்!

என்ன சனநாயக நாடோ..?

நாம எதாவது கரசேவை பண்ண முடியுமா இந்த மேட்டர்ல..?

0 பேர் கமெண்டிட்டாங்க: