Showing posts with label பாட்டு. Show all posts
Showing posts with label பாட்டு. Show all posts

ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!

வானொலியில் பாடல்கள் கேட்பது என்பது ஒருவித அலாதியான இன்பம்! என்னவிதமான பாடல்கள் யாருடைய இசை ஆர்வத்திற்கேற்ப ஒலிக்கும் என்பது யாராலும் தீர்மானிக்க முடியாத வகையில் - எதிர்பாரா இன்பம் தரும் ஒரிடம் வானொலி!

தினமும் வானொலியில் பாடல் கேக்கும் பழக்கம் அதுவும் ஃஎப்.எம் ரேடியோவில் மட்டுமே அதிக அனுபவம் 5 வகையான நிலையங்களாக பிரித்து புதுப்பாடல் இளையராஜா மற்றும் .ஆர்.ஆர் மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்கள் நாம் தேர்ந்தெடுத்து கொள்ளுதல் மிக சவுகரியம்!

எதேச்சையாக கேட்ட பாடல் ஆயிரத்தில் ஒருவன் (2009) படத்தில் இடம்பெற்றிருக்கும் "பெம்மானே" என்று தொடங்கும் பாடல்

திருமுறைகளில் உள்ள பாடல் வரிகளினை பாடுவது போன்றதொரு எண்ணம் ஆரம்பித்து வைக்க, முழுமையாக கேட்டு முடிக்கும்போது மனம் சாதாரண நிலையில் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!



பெம்மானே பேருலகின் பெருமானே..
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்!
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ..!
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்!
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே..! (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை..!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்..!
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடை கோனே!

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்!
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்,
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே..!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ..!
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே..!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ..!

பெம்மானே பேருலகின் பெருமானே..!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!

பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்

பெம்மானே பேருலகின் பெருமானே..

பதிவர் கதியால் அவர்களோட பதிவில் இந்த பாடல் பற்றி விவரமா சொல்லியிருக்காங்க!

மாசறு பொன்னே வருக...!

எனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய! இப்போதைக்கு அதுல ஒண்ணு!

மனத்திற்கினிய பாடல்! கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்! இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி!

பாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்!


மாசறு பொன்னே வருக



மாசறு பொன்னே வருக!
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக!
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும்
குளிர்நிலவென நீலவிழியும்
பிறைநுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு)

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

பாவம் விலகும் வினையகலும்
உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்



இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...! (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா???)

கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்!

18.06.2008

டிஸ்கி:- இன்னும் கா.பி அண்ணாச்சி பதில் பதிவு இடவில்லை என்பதனை சமூகத்திற்கு பதிவித்துக்கொள்கிறேன்!

18.06.2009

கண்ணால் ஒரு சேதி...!

டிஸ்கி:- கொசுவர்த்தி சுத்திக்கிறேன்ப்பா!

ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுக்கிட்டு போறதுன்னாலே செம டெரரான ஒரு விசயம்! அதுவும் நம்ம இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம்! அதுவும் எனக்கு நடந்த அநியாயம், ஸ்கூல் வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்துக்கும் எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !

மத்த ஸ்கூல் யூனிபார்ம்லாம் பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியும் அதுவும் குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும் அந்த ஸ்கூல்ல கோ-எஜுகேஷன் வேற..! (ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல...? ஒரு வேளை எங்க நான் நிறைய இங்கீலிசு படிச்சு பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பயம் போல மை டாடிக்கு..?!)

சரி முதல்ல டவுசர்லேர்ந்து பேண்ட்க்கு டிரான்ஸ்பராகறதுக்கு என்ன வழின்னு டெரரர் பிளான் போட ஆரம்பிச்சேன்! போற வரப்ப கேர்ஸ் ஹைஸ்கூலு பசங்க(!?) எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமா? எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமான்னு ஏகப்பட்ட யோசனை ! ஒரு காரணமுமே சரியா சிக்கல!

யப்போவ்..! எனக்கு புதுசா ஒரு காக்கி பேண்ட்டும் கறுப்பு சட்டைதுணியும் எடுத்துக்கொடு போட்டுக்க வேணும் ?

அப்பா:- இப்ப எதுக்கு உனக்கு?

ம் பொறந்த நாளு வருதுல்ல !

அப்பா:- டேய் அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்குடா ?

அப்ப பொங்கல் வருதுல்ல அதுக்கு !

அப்பா:-சரி முடிவு பண்ணிட்டீல்ல எடுத்து தரேன் !

ஒரு வழியாய் சக்சஸ் பண்ணிய சந்தோஷத்தில் பிரதர் சைக்கிள் எடுத்துக்கிட்டு எஸ்ஸாகிவிட, - அட ஆமாங்க அண்ணனுக்கும் அப்பாவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைதான்! டாடிக்கு பிரதர் மேல ரொம்ப நம்பிக்கை பய நல்லா படிக்கறவன்னு! அப்படித்தான் அவரும் நடந்துக்கிட்டாரு - என்னைய மாதிரியா...?

யப்போவ் எனக்கும் ஒரு செட் சட்டை பேண்டு..? (அப்பா:- ம்ஹுக்கும் நீ படிச்சு கிழிக்கிற கிழிக்கு உனக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல் - இப்படித்தான் பதில் வந்திருக்கும்ன்னு நினைச்சீங்கன்னா குட்..! நீங்க நல்லாவே என்னிய புரிஞ்சு வைச்சிருக்கீங்கோ!)

சாயங்கால டூயுசன் முடிந்து வந்து பிரதர் சொன்ன பிளானை கேட்டு அதிர்ச்சி - பயபுள்ளை என்னியவிட பக்காவா பிளான் பண்ணி சக்சஸ் பண்ணியிருக்குன்னு ஒரு ஆச்சர்யம்கூட! அதே நேரத்துல நாமளும் வுடப்புடாது டிரைப்பண்ணனும்ன்னு ஒரு ஆர்வக்கோளாறு வேற...!

ஆனா நான் வைச்ச கோரிக்கை ஏற்கப்படல காரணம் - கருப்புக்கு கருப்பு மேட்சிங்க், சேராதுன்னு வெளக்கம் வேற!

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்ப உங்களுக்கு ரெண்டு கொஸ்டீன் ரைஸ் ஆகணும் ஆச்சா...?

1.சரி என்ன அப்படி ஒரு பிளானு பிரதர் போட்டாரு...?



இந்த படம் அந்த வருசம் நவம்பர் 91ல ரீலிஸ் ஆச்சு! அதுல தலைவரு வரும் சீன்ல ஒரு காஸ்ட்யூம் கருப்பு சட்டை, காக்கி பேண்ட் - முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு! அப்புறம் என்ன கிட்டதட்ட ஒரு நாலு மாசம் இந்த காஸ்ட்யூம்லதான் வலம் வந்தாரு !

2.உனக்கு...?

ப்ச் எனக்கு கருப்பு சட்டை கிடைக்கல பேண்ட்தான் கிடைச்சுது!

அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் கருப்புக்கு கருப்பு மேட்சிங் ஆகவே ஆகாதுண்ணு!

******************************************

இன்னும் சில சேதிகள் அப்ப நடந்து இன்னும் நினைப்புல இருக்குறது!

சட்டைக்கு பின் பக்கம் ஃபிளிட் வைச்சுக்கிற ஸ்டைலும் இண்ட்ரோ ஆச்சு! (தலைவரு திரும்பி நின்னு பேசும்போது கருப்பு சட்டை பின்பக்கம் கூட லேசா தெரியும் பாருங்க!)

சிங்கிள் ஃபிளிட் வேணுமா டபுள் வேணுமான்னு டைலர்கள் கேக்க ஆரம்பிச்சாங்க!



அப்போதுதான் பனியன்களில் ( தமிழ்ல டி-ஷர்ட்!) நடிகர்களின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யும் பழக்கமும் அப்போதுதான் அறிமுகமானது! அப்படி ஒரு பனியன் எடுக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே! ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு! அதை இன்னொரு கொசுவர்த்தியில கண்டினியூ பண்ணுறேன்! இப்ப நீங்க எஸ்ஸாகிக்கலாம்!

நீ காத்து நின்னில்லோ...!

ரொம்ப நாளாச்சே..! என்னப்பா எங்களையெல்லாம் மறந்துட்டீயான்னு?

ஒரே மெயில்களின் தொந்தரவு!

சரி ஒரு பாட்டை போட்டு நம்ம பாசத்தை காட்டிக்கலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு!

பாட்டும் போட்டாச்சு!

சுஜாதா பாடிய பாடல் நம்ம வித்யாசாகர் இசையமைப்பில் 2002ல் வெளியான படத்தின் ஹீரோயின் கலக்கல் காவ்யா மாதவன்! (ஹீரோ பத்தி சொல்லணுமா?)

பாடல் வரிகளும் இருக்கு பாட ஆசைப்படறவங்க டிரைப்பண்ணலாம்!

Aaanachandam ponnambalchamayam nin naanachimizhil kandeela
Kaanakkadavil ponnoonjal padiyil..nin oonachinthum ketteela
Ooo…kalappurakkolayil nee kaaathu ninnela..
Marakkuda konil melle meyyolicheela
Paattonnum paadella paalthulli peytheella.. (2)
Nee pande ennodonnum mindeella………..(2)
Mindeela …nee pande ennodonum mindeela… (Karimizhi)


Eeerenmaarum en maaril minnum eee maaramarukil thotteela
Neelakkannil nee nithyam vekkum eee ennathiriyaay minneela
Mudichurul choodinullil nee olicheela
Mazhathazha paaya neerthi nee vilicheela
Maamunnan vanneela maarodu chertheela (2)
Nee pande ennodonnum mindeela.. (Karimizhi)

பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்!

மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் அருமையான ஒளி ஒவியத்தில் , சந்தோஷமான பட்டு பாவடை, பட்டு சட்டை சிறுமிகள்!

இளம்வயதில் விழுந்து எழும் பொக்கைப்பல்லின், சிரிப்பில் சிறுமி இயற்கையினை நினைத்து உருகும் அழகில்

என இப்படி நிறைய, ரசிக்கும் திறனுக்கு தீனி போடும் காட்சியமைப்புக்கள் கொண்ட வெகு சில பாடல்களில் இதுவும் உண்டு!

கொஞ்சம் அனைத்து நினைவுகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு கேட்டுப்பாருங்களேன்!

வாழ்வின் அர்த்தம் புரியும்!





நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்...

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்!

பரதம் - அழகு மலர் ஆட...!

1988ல் ஆண்டுவிழாவில் கேட்ட, பார்த்த இந்த பாட்டு அப்படியே இன்னும் கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! இருக்காதா பின்னே ஆண்டுவிழாவில் பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடிய ஐவரில் என் சகோதரியும் ஒருவராச்சே!

அப்போதெல்லாம் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் ஆர்வமிருந்தாலும் கூட, அதற்கென்று தனியாக பயிற்சி எடுக்கவேண்டும் என்பதிலோ அல்லது தினமும் ஆசிரியரிடம் சென்று வகுப்புக்களில் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதிலோ அத்தனை ஆர்வம் இருந்தது கிடையாது! ஆனாலும் சிலரது வீடுகளில் மட்டுமே அப்போது தெரிந்துக்கொண்டிருந்த டிவிக்களில் வரும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளினை பார்க்கும்போதெல்லாம் ஏனோ பெண் குழந்தைகளுக்கு ஒரு ஆசை ஏற்படுவது தவிர்க்க இயலாத விசயமாக இருந்தது! அதையும் விட இன்னொரு விசேஷமும் இந்த பரதநாட்டியத்திற்கு உண்டு !



வேற என்னங்க! நானும் பரத நாட்டியம் ஆடப்போறென்னு வீட்ல சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி பட்டு புடவையோ அல்லது பட்டு பாவாடை செட்டோ இன்னும் பிற ஆபரணங்கள் எல்லாம் ரெடி பண்ணனும்ல!

பரத நாட்டிய ஆட்டங்கள் அந்த காலகட்டத்தில் எல்லா பள்ளிகளிலும் வாழ்த்துப்பா சங்கதி போன்று கட்டாயமானதாக்கப்பட்டிருந்த ஒரு விஷயம்! அதிகமான மேக்கப்புக்கள், ஆடத்தெரியாவிட்டாலும் கூட ஆரம்பம் அட்டகாசமாக இருக்கவேண்டும் என்ற சில கண்டிஷன்கள்! சிலருக்கோ சரி ஆடணும்னு முடிவு பண்ணிட்டோம் அப்புறம் பரத நாட்டியம் மட்டும் எதுக்கு எல்லாத்தையும் கலந்துவிட்டுடலாம் என்ற சில சோதனை களங்களும் கூட அரங்கேறிய நாட்கள் பற்றி முந்தா நாள் நினைச்சு பார்த்தேனுங்க!

நம்ம முத்தக்கா பொண்ணு நல்ல அருமையா பரத நாட்டிய போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்றது,பற்றிய சேதி கேட்டப்பொழுது, இதெல்லாம் நினைப்பு வந்துச்சு :-)

ஆடல் கலையே தேவன் தந்தது!

ஆண்டுவிழாக்களிலும் ஆர்கெஸ்ட்ராக்களிலும் இன்னும் பிற நிகழ்ச்சிகளிலும் தவறாமல் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள்! ஆடுபவர்களின் திறமையினை வெளிக்கொணர்ந்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஆட்டத்தினை ரசித்துக்கொண்டும் அல்லது மனதினில் ஆடிக்கொண்டிருக்கும் அல்லது ஆட்டத்தை பற்றிய அவதானிப்புக்களை நினைத்துக்கொண்டிருக்கும் வித்தியாசமான ரசிகர்களினை நீங்கள் கண்டதுண்டா? ஏன் சில சமயங்களில் அது போன்ற மனத்தினை கொண்ட ரசிகர்கள் நீங்களாகவும் கூட இருக்ககூடும்!

அது ஒரு மகிழ்ச்சிகரமானதொரு அனுபவம்தான்!

ஆடும் ஆட்டத்திற்கேற்ப நாமும் நம்மை தயார் செய்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்போம் - மனதுக்குள்ளாகவே...!

வெகு சிலர்தான் கொஞ்சம் கூட அக்கம் பக்கத்தினரின் சிந்தனைகள் பற்றிய கவலையின்றி மிக ஆனந்தமாக ஆடிக்கொண்டிருப்பார்கள்! - அவர்கள் என் பார்வையில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையினை அனுபவித்து....!

இன்னும் சிலருக்கோ தங்களுக்கு ஆடவும் தெரியாது அதே சமயத்தில் ஆட்டம் பற்றிய குறைகளோ அளவற்று இருக்கும்! அவர்களை பற்றி நாம் என்ன கூறமுடியும் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை..!

ஒ.கே நீங்கள் இந்த பாடலை பாருங்கள்! முடிந்தால் ஆடுங்கள்! இருக்கும் விடுமுறையில் இனிமையாய் ஆக்கிக்கொள்ளுங்கள்! (குத்து பாட்டான்னு நினைச்சு ரொம்ப பீல் ஆகுபவர்களுக்கு நெக்ஸ்ட் டைம் நல்ல பாடல் வரும் என்ற நம்பிக்கையோட எதிர்காத்து இருங்கள்!)



இந்த பாட்டு, இங்க தெரியலைன்னா இங்கன போயும் பாருங்களேன்..!

டம் டம் டிகா! டிகா..!

ஏதோ ஒரு காலகட்டத்தில் கேட்டதில் பிடித்திருந்தது போல! (பசு மரத்தாணி போல பதியணும்னு இது மாதிரியான விஷயங்களைத்தான் சொல்லுவாங்க போல...!)

இப்போது தேடியதில் டக்கென்று கிடைத்தது!-

ரொம்ப பழைய படம் போல..!

ஆனா பாருங்க மழையில எவ்ளோ ஜாலியா டான்ஸ் + பாட்டு பாடறாருன்னு! பார்த்ததுமே மழை ஞாபகம் வந்துச்சு ( இதுல நேத்திக்கு ஸ்ரேயா படம் வேற போட்டிருந்தோம்ல! )



வழக்கம்போலவே பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியாமலே கேட்டு கேட்டு ரசிச்சாச்சு!

சும்மா டிரான்ஸ்லேஷன் டிரைப்பண்ணுனது!

இப்ப மழை பெய்த்துக்கொண்டிருக்கிறதாம்!
மனுசன் தண்ணி அடிக்காமலே கீழ விழுந்துக்கிட்டிருக்கானாம்!
ஆண்டவா ரொம்ப அழகா அருமையா இருக்கிறாராம்!
இப்படித்தான் எனக்கு ரெண்டுவரி புரிஞ்சுந்துப்பா!
(டேய்...! ஏண்டா ஹிந்தி இப்படி கொல பண்ணுறன்னு நீங்க கேட்டா? நான் என்ன பண்ணமுடியும் என்னால முடிஞ்சது இவ்ளோதான்!)

உங்களுக்கு மொழி தெரிஞ்சிருந்தா என்ன அர்த்தம்னு டிரான்ஸ்லேட் பண்ணி, புல் பாட்டையும் தமிழ்ல பாடிக்காட்டுங்களேன் சரி பதிவில் காட்டுங்களேன்! (சும்மா தெரிஞ்சு வைச்சுக்கதான்!)


Dum dum diga diga
Mausam bheega bheega
Bin piye maein to gira...Maein to gira
Haye allah, surat aap ki subhan allah

Teri ada wah-wah kya baat hai
Ankhiya jhuki jhuki, baatein ruki ruki,
Dekho lutera aaj lut gaya
Haye allah..

Sanam hum mana garib hain
Dhanda khota sahi banda chhota sahi
Dil yeh khazana hai pyar ka
Haye allah..

Teri kasam tu meri jaan hai
Mukhada bhola bhola, chupke daka dala
Jaane tu kaisa mehmaan hai
Haye allah...

இதுதான்ய்யா தேன் கிண்ணம்!

கடுமையான வேலையாகிப்போயிடுச்சு இன்னிக்கு ஆபிஸ்ல :-(

சரி நாமளும் ஆபிஸ்ல அப்பப்ப வேலை பாக்குறோம்முனு தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரிவிச்சு அதை ஆவணப்படுத்தியே ஆகணும்னு ஒரு யோசனையில் இந்த ஆவணப்படுத்தலினூடாகவே தமிங்கிலீஸ் அரங்கேறியது!

ஒரு வழியாக ரொம்ப திருப்தியுடன் நான் செய்த அலுவலக பணியும், ஹெட்டின் GOOD டோடு நலமாக முடிந்தது!

சரிடாப்பா ஒரு சாங் பாடிக்கலாம்னு நினைக்கறப்பவே தானாகவே முணுமுணுத்த பாடல்தான் இது! அட நம்ம நண்பர்களுக்கும் சொல்லுவோம் இந்த விஷயத்தை அப்படின்னு இந்த போஸ்ட்டு வேற (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!)

நம்ம தமிழ் பதிவுலகில் தேன் கிண்ணத்து தேனீக்களும் சும்மா அசத்திக்கிட்டுத்தாங்க இருக்காங்க அப்படின்னு சொல்றதுக்கும் கூட...! ஆமாங்க சும்மா ஒரு லைன் போட்டு கூகுளாண்டவரை வேண்டுனா அப்படியே பறந்து வந்து நிக்கிறாங்கங்க!

நன்றிகள் + வாழ்த்துக்கள் தேன் கிண்ணம்!

முணுமுணுத்த பாட்டையும் நீங்க கேட்டுக்கிட்டு போங்க ப்ளீஸ்!







இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே

(இன்றைக்கு)

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும்
வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
(இன்றைக்கு)

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

(இன்றைக்கு)

நன்றி தேன்கிண்ணம் - கப்பி!

இங்க பாட்டு பார்க்க முடியாதவங்க இங்க போயும் பார்க்கலாம் ஆனா எப்படியும் பார்க்கணும் கண்டிப்பா ஒ.கே!

மாசறு பொன்னே வருக!

வலைச்சர வாரத்தில் சொல்ல நினைத்து சொல்ல மறந்த விஷயங்கள் நிறைய இருக்குங்குங்க!

எனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய! இப்போதைக்கு அதுல ஒண்ணு!

மனத்திற்கினிய பாடல்! கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்! இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி!

பாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்!


மாசறு பொன்னே வருக



மாசறு பொன்னே வருக!
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக!
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும்
குளிர்நிலவென நீலவிழியும்
பிறைநுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு)

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

பாவம் விலகும் வினையகலும்
உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்



இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...! (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா???)

கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்!

ரீமிக்ஸ் ஆரவாரம்!



ரீமிக்ஸ் குஷியுடன் ஆரம்பிக்கட்டும் இந்த வாரம்

ஐயோ! ஐயோ! ஐயய்யோ.. !?

இந்த சொற்களை பெரும்பாலும் அதிகம் யாரும் பயன்படுத்த வீட்டில் எப்போதுமே தடை இருக்கும்! இந்த சொற்களை பயன்படுத்துதல் என்பது அமங்கலமான விஷயமாகவும் கருதப்படும் இது எல்லா வீடுகளிலுமே சாதாரணமாக கடைப்பிடிக்கப்படும் கடுமையான ரூல்ஸ்!

கெட்ட பழக்கம் என்ற லிஸ்டில் இருக்கும் இந்த சொல்லை, அதிலும், ஐயோவினை சரியாக 23 முறையும், ஐயய்யோவினை சரியாக 26 முறையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாடலில் ஏனோ துக்கத்தையும் துயரத்தையும் விட அதிக மகிழ்ச்சியும் அதிக உற்சாகமும் ஆட்டம் போடவைக்கும் அளவுக்கு வருவது ஏனோ என்று தெரியவில்லை?!

நீங்களும் கண்டு கேட்டுத்தான் பாருங்களேன்:-)



பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

ஆண்:-: இமை எங்கெங்கும் உன் பிம்பம் கண் மூடவில்லை ஐயய்யோ இதழ் எங்கெங்கும் உன் இன்பம் வாய் பேசவில்லை ஐயோ

பெண்:-: இடை எங்கெங்கும் விரல் கிள்ள இதமாகும் ஐயய்யோ தடை இல்லாமல் மனம் துள்ள பதமாகும் ஐயய்யோ

ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஆண்:-: காலையில் தொடும் போது ஐயோ மாலையில் தொடும் போது ஐயோ ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐயய்யோ

பெண்:-: குங்கும வாசனைகள் ஹைய்யோ சந்தன வாசனைகள் ஐய்யோ என்னிடம் உன் வாசனை ஹைய்யோ ஐயய்யோ

ஆண்:-: கொடு கொடு கொடு எனவே கேக்குது கன்னம் ஐயய்யோ

பெண்:-: கிடு கிடு கிடுவெனெவே பூக்குது மச்சம் ஐயய்யோ

ஆண்:-: காது மடல் அருகினிலே ஐயோ பூனை முடி கவிதை ஐயய்யோ

பெண்:-: காதலுடன் பேசயிலே ஐயோ பேச மறந்தாலோ ஹய்யையோ

ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வந்து போனதாளா

பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நே இன்பமான தேளா

ஆண்:-: ஐயோ

பெண்:-: ஐயோ

ஆண்:-: ஐயோ

பெண்:-: ஐயோ

ஆண்:-: உன் கண்கள் ஐயய்யோ

பெண்:-: ஹையோ

ஆண்:-: உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஆண்:-: நீ தமிழ் பேசயிலே ஐயோ, நான் அதை கேட்கயிலே ஐயோ காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ ஹோ

பெண்:-: நீ எனை தேடயிலே ஐயோ நான் உனை தேடயிலே ஹையோ காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ

ஆண்:-: கல கல கலவெனெவே பேசிடும் கண்கள் ஐயய்யோ

பெண்:-: குலு குலு குலுவெனவே கோதிடும் கைகள் ஐயய்யோ

ஆண்:-: கால்கொலுசு ஓசையிலே ஐயோ நீ சிணுங்கும் பாஷை ஐயய்யோ

பெண்:-: ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ அருசுவை கூடுது ஐயய்யோ

ஆண்:-: மழை விட்டாலும் குளிர் என்ன நீ வன்து போனதாலா

பெண்:-: உயிர் சுட்டாலும் சுகம் என்ன நீ இன்பமான தேளா

ஆண்:-: ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

பெண்:-: ஐயோ ஐயோ ஐயோடா ஐயய்யோ நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

ஆண்:-: சுடும் விழிகளிலே அழகினிலே தொடுகின்றாய் ஐய்யோ

பெண்:-: நடு இரவினிலே கனவினிலே எனை தின்றாய் ஐயய்யோ

ஆண்:-: லல லல...

பெண்:-: தன நன...








நான் சொன்னது கரெக்ட்தானே ?

ஓ மனமே...! ஓ மனமே...! - SUNDAY SONG

on



மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?

பூக்கள் தானே யாசித்தோம்
கூலாங் கற்களை எறிந்தது யார்?

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி..

கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கனுக்கள் தோரும் முத்தம்

கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்..

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை..

துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை..

இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வில் அங்கம்..

தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி..
வெற்றிக்கு அதுவே ஏணியடி..

இங்கயும் போய் கேட்கலாம் இந்த பாட்டை!

தேன் கிண்ணத்தில் வரவே வராத பாடல் :-)





நன்றாக ரீமிக்ஸ் செய்தவருக்கு நன்றிகளுடன்....!

மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?



மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்

சம்பந்தமில்லாதவையாக

கர்நாடகத்தில் நல்ல அரசு அமையட்டும்!

நம் மக்களுக்கு நல்ல குடிநீர் கிட்டட்டும்

அது வரையில் அமைதியாய்

காத்திருப்போம்!

இந்த இசையில் லயித்தபடி....!

பெற்றான் தமிழன் என்று வரலாறு சொல்வதைவிட,

பொறுத்தான் தமிழன் என்று வரலாறு சொல்வதில் அல்லவா மகிழ்ச்சி....!