Showing posts with label மீள் பதிவு. Show all posts
Showing posts with label மீள் பதிவு. Show all posts

12.12.11


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!

காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
- ரஜினிகாந்த்

எட்டில் வாழ்க்கை!



1.முழு முதலாய் மூச்சு

மூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே! அவசரகதியில் இயங்கவேண்டாமே!

2.இயற்கையோடு இயைந்த வாழ்வு

இயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்!

3.உறவுகளோடும் நட்புக்களோடும்.

கடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள்! நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்!

4.சின்ன சின்ன விசயங்கள்

சின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்!

5.இசையாக வாழ்வு

மெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்!

6.படைப்புக்களில் பயணம்

ஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்

7.மன்னித்து மகிழ்ந்திருங்கள்

நீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்!

8.பொதுவாழ்வில் ஈடுபாடு

சிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்!


டிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...!

துறவு!

வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்து போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!

இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதால்!

ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவே முடிவடையக்கூடும்!

உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!

சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!

13 செப்டம்பர் 2008 - டெல்லி குண்டு வெடிப்பு..!


//பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்!

ஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள்! இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா!
//
பெங்களூரூ குண்டு வெடிப்பு தொடர்பான பதிவிலிருந்து...!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நடந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தெளிவாய் ஒரு சேதியினை சொல்லியிருக்கிறது!

இந்தியாவில் மனிதர்களை பீதியில் ஆழ்த்துங்கள்!

ரொம்ப சிம்பிளான சினிமாக்களில் கூட எடுத்து கையாண்ட விசயம்தான் இந்த கான்செப்ட்!

ஆனாலும் கூட அரசு தன் பாதுகாப்பு எந்திரங்களினை எந்த அளவுக்கு முடுக்கி விட்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது! (இன்னும் லூசாக்கதான் இருக்காங்க போல - இத்தனைக்கும் கடும் பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைந்த டெல்லியில் சர்வசாதாரணமாக வந்து குப்பை தொட்டியில் குண்டினை போட்டு செல்கின்றனர்!

ஆனால் இந்த முறை ஒரே ஒரு முன்னேற்றம் - லைவ்வாக இருந்த குண்டினை பாம் ஸ்குவாடு அகற்றி அழகாய் கான்கீரிட் மிகஸ்ர் மிஷினை போன்றதொரு உருவமுடைய சிமுலேட்டரில் போட்டு சின்னதாய் வெங்காய வெடியாக வெடிக்க வைத்து அதை டிவிக்களில் லைவ் செய்துள்ளனர்!

குண்டுவெடிப்புக்கள் லைவ் ஆகாமல் இருக்க லையர்கள் ஆட்சிபீடத்தில் இருந்தபடியே ஏதேனும் செய்யவேண்டும் அட்லீஸ்ட் செய்வது மாதிரியாகவாவது நடித்து மக்களிடமுள்ள பீதிகளினை குறைக்கவேண்டும்!

மொக்கையாய் சில கேள்விகள்?

1.கேப்டன் விஜயகாந்த படங்கள்ல அதிகம் வர்ற இந்த உளவுத்துறை போன்ற துறைகள் ஏதேனும் இயங்கிக்கிட்டிருக்கா மத்திய அல்லது மாநில அரசுகளிடம்?

2.நான் பார்த்தேன் அவன் குப்பைதொட்டியில போட்டான்ங்கற ஸ்டேட்ட்மெண்ட்களெல்லாம் மேட்டர் ஓவரானதுக்கப்புறம் அழகா சொல்றாங்களே ஏன் அந்த ஆளு குப்பை தொட்டியில குண்டு வைக்கும் போது ஒண்ணுமே தெரியாத மாதிரி விட்டுட்டுப்போறாங்க?

3.உலக அளவில ஐடி டெக்னாலஜி கம்ப்யூட்டர் டெக்னாலஜி அல்லாத்துலயும் நம்ம ஆளுங்க கொடி கட்டி அது மேல குந்தியிருக்கும்போது ஒரு சாதாரண இமெயில் குறைந்த பட்ச நேரத்தில டிரேஸ் பண்ண முடியமாட்டிக்கிதே ஏன்?

4.மாநில செய்திதாள்கள், அடுத்த இலக்கு நம்ம ஊருதான் என்று சுய தம்பட்டம் அடிப்பது காரணம் என்ன? அலர்ட் பண்றாங்களா? இல்ல டெரரிஸ்ட்களிடம் இது உங்க டார்கெட்ல இருக்கா இல்லீயான்னு கொஸ்டீன் போடறாங்களா?

மீள் பதிவு! - மனதில் சுகம் மலரும் மாலையிது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

(இதழில்)

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(இதழில்)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது




(சில நேரங்களில் இங்கன இந்த பாட்டு தெரிய்லைன்னா அங்கன போய் பார்த்துட்டும் வரலாம்!)


டிஸ்கி :-
நாம எழுதுன பதிவுகள்லேர்ந்துதான் மீள் பதிவு போடமுடியுமா? ஏன் மத்தவங்க பதிவுலேர்ந்து சுட்டு போட்டா அது மீள் பதிவு வகையில் வராதா?? என எனக்குள்ளே பீறிட்டு வந்த எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் இந்த மீள் பதிவு! பாட்டு கேட்டு பாருங்க எத்தனை பேர் எத்தனை தடவை மீள் பதிவா போட்டாலும், போய் பார்த்து கேட்க துடிக்க வைக்கற ரகம்தான்!

விடுமுறை நாள்! இரவு நேரம் இது போன்ற ரா(ர)கங்களில் பாடல்கள் கேட்பது ஒரு வித சுகானுபவம்தானே!