மதுரை காமெடி பாய்ஸ் - த.மு.எ.ச கலை இலக்கிய இரவில்....

1994களில் வருடந்தோறும் ஒரு இனிய இரவில் நடந்துக்கொண்டிருந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கலை இலக்கிய இரவு எனக்கு புதிது.

இத்தனைக்கும் வீட்டுக்கு போகும் சாலையின் குறுக்கேதான் பந்தலிட்டு அழகிய ஓவிய பின்ணணியில் மேடை அமைந்திருப்பார்கள் ஆனால் ஏனோ சில வருடங்கள் கழித்துதான் இந்த விழாவினை காணும் ஆர்வம் வந்துது சில சினிமா பிரபலங்களும் கூட வந்ததுண்டு! ஆனால் எனக்கு ஆர்வத்தை வரவழைக்கும் விஷயமாக சொல்லப்பட்டது மதுரை காமெடி பாய்ஸ் குழுவினரின் நிகழ்ச்சியும்,கரிசல் குயிலின் பாடல்களும் திண்டுக்கல் சக்தி குழுவினரின் தப்பாட்டமும்தான்!

பலரும் சிலாகித்து பேசிய விஷயங்கள்தான் இவை மற்றபடி முற்போக்கு எழுத்தாளர்களின் விமர்சன பேச்சுகள்,பல அனல் பறக்கும் பேச்சுகள் எனவும் போய்க்கொண்டிருக்கும் இனிய இரவு

இரவு 8 மணி தொடங்கி அதிகாலை 5.00 மணி வரைக்கும்மான நிகழ்ச்சிகளில் உள்ளூர் சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல்களும் கூட உண்டு!

சரியாக பலருக்கும் தூக்கத்தை வரவழைக்கும் நேரத்தில்தான் - அதுவரைக்கும் அனல் பறக்கும் பேச்சுகள்தான்! - மதுரை காமெடி பாய்ஸ் குழுவினர் மேடைக்கு அழைக்கப்படுவார்கள் சுமாராக 5 அல்லது 7 பேர் கொண்ட குழுதான் அது அனைவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிபவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மாணவர்கள்.


இவர்களுக்கு அடிப்படையில் ஆக்கமும் ஊக்கமும் அளித்தது முனைவர் கு.ஞானசம்பந்தமாம் அவ்ரும் கூட இந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டதுண்டு!

இன்றைக்கு நாம் காணுகின்ற கலக்கப்போவது அல்லது அசத்தபோவது யார் போன்ற நிகழ்ச்சிகளினை அப்போதே அரங்கேற்றி அதிரசெய்தவர்கள்தான் இந்த குழுவினர்!

வகை வகையான நகைச்சுவை காட்சிகளி அனைத்து நடிகர்களையும் அந்த விழா மேடைக்கு அழைத்து வந்தவர்கள்! மக்களை சிலமணி நேரங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்கள்! எவ்வளாவோ பேர் வாழ்த்தியதை நேரிலும் கண்டிருக்கிறேன்!

திரையுலகும் டிவியுலகும் இன்னும் வானொலியும் ஆக்ரமித்துவிட்ட இக்காலத்தில் அவர்கள் தம் பணியை மக்களை மகிழ்விக்கும் சேவையினை தொடர்கிறார்களா என்று சரியாக தெரியவில்லை? ( மதுரை மக்களுக்குத்தான் தெரிந்திருக்கும் தற்போதைய சுழல் என நான் நினைக்கிறேன்!)

அன்றைக்கு நன்றி சொல்லி வாழ்த்த முடியாவிட்டாலும், என் மனதில் பதிந்திருக்கும் நன்றியினை இங்கு இப்போது தெரிவித்துகொள்ள ஆசைப்படுகிறேன்! ரொம்ப பழைய நன்றியென்றாலும் கூட மனத்துக்கினிய விஷயம் எனக்கு..!

அங்கு பார்த்த ஒரு காட்சியினை ஒத்த ஒரு பாடல் நிகழ்வு என்னை மிகவும் கவர்ந்தது இது




0 பேர் கமெண்டிட்டாங்க: