ஒகேனக்கல் என்ன நடந்துச்சு? - என்ன நடக்குது..?

செப்டம்பர் 29 1998 - மத்திய நீர்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் இரு தரப்பு நீர்ப்பாசனதுறை அதிகாரிகளுக்கிடையே மாநிலங்களுக்கிடையே ஒப்பந்தம்

செப்டம்பர் 21 1999 மத்திய அரசு சரியாக ஒரு வருடம் கழித்து 1.4 டிஎம்சி காவிரி நீரை எடுத்துக்கொள்ளலாம் என்று தடையில்லா சான்றிதழ் அளிக்கிறது .

பிப்ரவரி 5 2007 காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்பில் 419 டிஎம்சி தமிழ்நாட்டிற்கும் 270 டிஎம்சி கர்நாடகத்திற்கும் உண்டு என்று தீர்ப்பளிக்கிறது.

பிப்ரவரி 6 2008ல் ஜப்பான் வங்கியின் உதவியுடன் குடிநீர் திட்ட வரையறை செய்யப்படுகிறது.

பிப்ரவரி 10 2008ல் கலைஞரால் திட்ட துவக்க விழா அடிக்கல் நாட்டப்படுகிறது.

மார்ச் 4 2008ல் நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக சர்ச்சை எழுப்பப்படுகிறது.

மார்ச் 16 2008ல் முன்னாள் கர்நாடக முதல்வரின் திடீர் ஒகேனக்கல் விசிட் பரபரப்பை ஏற்படுத்துகின்றது.

மார்ச் 27 2008ல் தமிழக சட்டசபையில் திட்டம் தொடர்பாக மத்திய அரசின் முழு உதவி வேண்டி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மார்ச் 29 2008ல் நாட்டின் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்க கூடாது என்ற மன அமைதியோடு பொறுத்திருக்கிறேன் ஆனால் எம் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு உடனடியாக மத்திய அரசு தலையிட்டு கர்நாடகாவையும் அதன் அரசியல் தலைவர்களையும் திட்டம் தொடர்பான எதிர்ப்பை கைவிடச்சொல்லி வலியுறுத்தவேண்டும்- கலைஞர் கோரிக்கை.

மார்ச் 31 2008 முன்னாள் முதல்வர் குமாரசாமி தேவேகவுடா கலைஞரை மன்னிப்பு கேட்கச்சொல்லி வலியுறுத்தல்.

ஏப்ரல்1 2008 முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 1 2008 முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லியும் இன்றைய தின உற்சாகத்தோடு கலைஞரின் மன்னிப்பை எதிர்ப்பார்த்து கூக்குரலிடுகிறார்!

ஏப்ரல் 2 2008 கொடும்பாவி எரிப்பு, தமிழ்சினிமா தியேட்டர்கள் எரிப்பு என ரணகளமாக்கப்படுகிறது தமிழ் அதே நேரத்தில் தமிழ்நாட்டிலும் கன்னட சேனல்கள் நிறுத்தப்பட்டு ஒரு ஒட்டலும் தாக்கப்படுகிறது.

ஏப்ரல் 3 2008 கர்நாடக் ஆளுநர் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் முன்னாள் முதல்வர் கிருஷ்ணா ஆலோசனை பெறப்படுக்கிறது

ஏப்ரல் 4 2008 தமிழகத்தில் தமிழ்திரையுலக கலைஞர்களின் கர்நாடக எதிர்ப்பு போராட்டமும் அதற்கு எதிராக கர்நாடாகாவிலும் இதே போன்ற திரையுலக பிரபலங்களின் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்று முடிகிறது

ஏப்ரல் 5 2008 இவை அல்லாது வரும் ஏப்ரல் 10 வேலை நிறுத்தப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் நடத்தப்போவதாக கட்சிகள் அறிவிப்பு.
தமிழகத்தில் உண்ணாவிரதத்தின்போது,ரஜினி கர்நாடக அரசியல்வியாதிகளை விமரிசித்துபேசியதற்கு மன்னிப்பு கோரவேண்டும் இல்லையெனில் மாநிலத்துக்குள் நுழைய விடமாட்டோம் என்று நாரயண கவுடேவும் வாட்டாள் நாகராஜும் அறிவித்துள்ளனர்!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அரசியல்வியாதிகளை என்ன பண்ணலாம் சொல்லுங்க?

said...

ஹையா நாந்தான் பர்ஸ்ட்டா?

said...

//ஏப்ரல்1 2008 முட்டாள்கள் தினம்//

வெளியுலகத்துக்கு வேணா இது ஓகே. நம்ம நாட்டுல எல்லா நாளுமே முட்டாள்கள் தினம்தான்.