Showing posts with label மீண்டும் மலரும். Show all posts
Showing posts with label மீண்டும் மலரும். Show all posts

எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி


இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்காவது போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஞாயிற்று கிழமைகளில் எரிச்சல் உண்டாக்கிய விஷயம்!

வாரத்துல ஒரு நாள் தமிழ்படம், காலையில் ஒரு காமெடி நாடக்ம் (சோ நாடகம்ன்னு நினைக்கிறேன்) ராமாயணம் மகாபாரதம்னு போயிக்கிட்டிருக்கிற, பல ஞாயிறு கிழமைகளில் அவ்வப்போது வந்து இம்சை கட்டும் இந்த பாடல்

ஆரம்பத்துல மொழி புரியாவிட்டாலும், தேசியம் பத்தி ஏதோ சொல்லவர்றாங்கன்னு நம்ம பாலமுரளிகிருஷ்ணாவும், கமலும் வரும்போதுதான் தெரியும்!

ஆனாலும் பாருங்க அடிக்கடி போட்டு அப்ப, கொஞ்சம் எரிச்சல் உண்டாக்கிய விஷயம்தான் எனக்குன்னு சொன்னா அது உண்மைதான்! இப்ப பாக்க தோணுது!




உங்களுக்கு புடிச்சிருந்துச்சா?
(இவ்ளோ நேரமும் உக்காந்து கேட்டுத்தான் ஆகணும் வேற வழி கிடையாது! புடிக்கலைன்னு வெளியில போயிட்டு வந்த அப்புறம் டிவிக்கு முன்னாடி இடம் கிடைக்காதுங்கறது வேற ஒரு பயம்!)

ஹிந்தி கத்துக்கலாம் வாங்கப்பா....!

ஒரு பத்து வருஷத்துக்கு, முந்தி ஆரம்பிச்ச ஆசைதான் இது இந்தி கத்துக்கிடணும்னு,ஆனா பாருங்க அதுக்கான வாய்ப்புக்களோ, அல்லது ஊக்கமோ ஒண்ணும் இல்லாமலே இருந்தது!

திடீருன்னு ஒரு நாளு ஸ்கூல் PT வாத்தியார் வந்து, டேய்..! பசங்கள நம்ம ஸ்கூல் கிரவுண்டல (அபி அப்பா & குரங்கு ராதாவின் பேமஸ் ராஜன் தோட்டம்தான்!) ரொம்ப பெரிய ஸ்போர்ட்ஸ் டே நடக்கப்போகுது, அதுல எல்லா ஸ்கூல் பசங்களும் கலந்துக்கிறாங்க,விழா ஆரம்பிக்கறப்ப டான்ஸ் ஆடுறதுக்கும் பசங்கள ரெடி பண்ணிக்கிட்டிருக்கோம், அதனால நீங்களும் எதாவது ஆடுறதுக்கு தயாரா இருந்தா வாங்கடான்னு சொல்ல,எல்லாரும் ஒரு ஆசைதான்!

உடனே டக்குன்னு மனசுக்குள்ள டான்ஸ் ஆடுனாது அந்த டைம்ல ரொம்ப கலக்கலா போய்க்கிட்டிருந்த இந்த ஹிந்திபாட்டுத்தான்!

இந்த பாட்டு (தேசாப் 1988) மூலமா எனக்கு 7 வரைக்கு இந்தி தெரியுமே...!


ஸ்போர்ட்ஸ் டேவும் வந்துச்சு, நல்லபடியா கலை நிகழ்ச்சிகளோட ஆரம்பிச்சு அந்த பாட்டும் போட்டு அதுக்கும ஆடி, நாங்க அடிச்சி தூள் கிளப்புனோம்ல! :-(
(பாட்டுக்கு ஆடினது தருமபுரம் ஸ்கூல்! அடிச்சு தூள் கிளப்புனது நாங்க!
ஐடியா கொடுத்தவனையும், பிராக்டிஸ்க்கே வராதவனையும் ஓட ஓட விரட்டி அடிச்சது நானும் என்னோடே இன்னொரு ரெண்டு பிரெண்ட்ஸூம்...! :- )

சத்துணவு ஆயா!

காலை உணவின்றி வந்து சேரும் ஆயாவுக்கு வேலை பள்ளியில் மதிய உணவு சமைத்தல்;

வீட்டைப்பற்றி எதுவும் கவலைப்படாமல், வருபவருக்கு வேலை பள்ளி முழுதும் கூட்டி சுத்தம் செய்தல்;

தன் பிள்ளைகளின் உணவு தயாரிப்பது கூட எல்லா பிள்ளைகளுக்கும் சமைத்து அவர்கள் சாப்பிட்டதும், தன் வேலையை முடித்தபின் தான் வீட்டுக்கு சென்று சமைத்தல்!

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று முழங்கி, அவர்தந்த உணவை எத்தனை நாள் முழுங்கியிருக்கிறேன்!

சம்பளமோ சாதரண தினக்கூலிக்காரர் வாங்கும் அளவுக்கூட கிடையாது..!

ஆனாலும் இவர்கள் எந்த நோக்கத்துக்காக இதை சேவையாக செய்கின்றனர்!

யாராவது நினைத்துப்பார்ப்பார்கள் என்றா? இல்லை ஆத்ம திருப்திக்காகவா?

புரியவில்லை! ஆனாலும் நினைத்துப்பார்க்கிறேன், சத்துணவு ஆயா வடிவில் இன்னுமொரு அன்னையை,

ஆத்ம திருப்தியுடன்..!!!

வந்த நாள் முதலாய்...!

24.09.2006

காலை 7.30 க்கு பிளைட், நாம இரண்டு மணி நேரம் முன்னாடியே போயிடணுமான்டா? வெளிநாடு செல்ல வேண்டும் என்கின்ற வெறியோடு பலரிடம், சேகரித்த தகவல்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான் என் நண்பன் – அவனுக்கு மட்டும் வாய்ப்புகள் தட்டிச்சென்றது ஏன், என்று தெரியவில்லை?

சோப்பு, பவுடர் எல்லாம் அதிகமாவே எடுத்துக்கோ, அங்க பயங்கர விலை! விலைய பார்த்தா இதையெல்லாம் யூஸ் பண்ண்வே தோணாது என்ற நண்பனிடம்,அதனாலதானே அவங்க இந்த நாட்டு காச விட நாலு மடங்கு அதிகமா தராங்க! என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தான் மற்றெருவன்!

இந்த அலம்பல்களுக்கிடையே அரை மனத்துடன் அரபு நாட்டை நோக்கிய என் பயணத்தை ஆரம்பித்தேன் இத்தனைக்கும் எனக்கு அரபு நாட்டில் தான், சென்று பணிபுரிய வேண்டும் என்று கொள்கை வெறியொன்றும் கிடையாது!

என் நேரம், என் ஸ்பான்சரோட கெட்ட நேரம் அவ்வளவுதான்!
டெலிபோன் இண்டர்வீயுலேயே நான் ஒ.கே ஆக அடுத்த நாளே மெயிலில் மிதந்து வந்த ஆபர் லெட்டர பார்த்த முதல் கொஞ்சம் சந்தோஷம், என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டது என் நண்பர்கள்தான்!

பஹரைன் வந்து வேறு பிளைட் மாறி வர வேண்டும் ஒண்ணும் பிரச்சனை இருக்காதுடா? நீ ஏர்போர்ட்ட விட்டு வெளிய போகமுடியாது! அதுவுமில்லாம, நீ எங்கயாவது சுத்திக்கிட்டு இருந்த கூட, அவங்களே வந்து அழைச்சிட்டு போயிடுவாங்கன்னு சொன்ன தைரியம் தான்!

ஆனால் என் நேரம் கல்ப் ஏர்’ன் வழக்கமான சேவையின் படி அந்த பிளைட் ரத்தாகி அடுத்து 6 மணி நேரம் கழித்துதான் பிளைட்!

இது கல்ப் ஏரின் தந்திரமான நடவடிக்கைகளாம். கொஞ்சம் கொஞ்சமாக ஆளுங்களை சேர்த்து – அவர்களின் அட்டவணைப்படியான விமானத்தை,ரத்து செய்து மொத்தமாக ஒரு பிளைட்டில் போட்டு அள்ளிச்செல்கின்றனர்

முடிவில் வந்து இறங்கியாச்சு! கத்தாருக்கு! வரவேற்க கூட்டம் குழுமியிருக்கும் போது, வரவேற்க யாருமே இல்லாமல் யாரையும் பார்க்கவும்,தோணாமல் குனிந்து கொண்டே செல்லும் போது எல்லோருக்கு ஏற்படும் அனுபவமே அன்று எனக்கும் நிகழ்ந்தது!


எனக்கு தெரியும் கண்டிப்பாக யாரும் வந்திருக்கமாட்டர்கள் பிளைட் ரத்தானது தெரிந்திருக்காது என்பதால் !

வாசலில் வந்து அமரும்போது, ரிடர்ன் டிக்கெட்டோடு நாம் ஊருக்கே போக வாய்ப்பு இருந்தா போடா..! நீங்களும் உங்க வேலையும்ன்னு போய்க்கிட்டே இருக்கலாம்ன்னு, தோணுச்சு..!

கிட்டதட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு மந்தூப் என்று சொல்லப்படும் பி.ஆர்.ஒ வந்து சேர்ந்தார்! கையில் என் பெயரிட்ட பேப்பர் வைத்துகொண்டு
சென்று கொண்டிருந்தவரை நான் கண்டு பிடித்து அழைத்து வந்தேன்! பின் அவர் கொண்டு வந்து கம்பெனி குவார்ட்டர்ஸ்லில் விட்டுச்செல்ல,எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை திற்ந்து படுக்கைகளுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்த பெங்காலியும் விடைப்பெற்றுக்கொள்ள..,

அதுவரையிலும், எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்து அப்போதுதான் தெரிந்தது 24 மணி நேரத்திற்குள் சொந்தங்களிடமிருந்து, தனித்து விடப்பட்டது!
அப்படியே உட்கார்ந்து எதோ நினைத்துகொண்டிருந்தேன், வீட்டு ஞாபகம் மாறி மாறி வந்து கொண்டிருந்தது! இங்க நான் எப்படி இருக்கப்போறேன்
பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லையே! அந்த பெங்காலிக்கிட்ட பேசுறதுக்கும் இந்தி தெரியாதே!



அப்போதுதான் பக்கத்து ரூமிலிருந்து,கதவு திறக்கும் சப்தம்!

நல்ல தூக்கத்திலிருந்து, முழித்தவாறு வந்த அந்த நண்பர் கேட்டார் - தமிழில்,

எப்ப வந்தீங்க சாப்பிட்டீங்களா?

கூட இருந்த மற்றொருவர் பழச்சாறு பாட்டிலை கொண்டு வந்து கொடுத்து,

எடுத்துங்கோங்க மாஸ்டர்...!!!

கலர் கோழி

பஞ்சு போன்ற மேனி அதன் பாதங்களை நம் உள்ளங்கைகளில் எடுக்கும்போது உண்டாகும் சிலிர்ப்பு, உற்சாகம் அல்லது குதூகலம்!

‘எல்லாம் சில காலம்’, என்னும் தத்துவம் அந்த பிஞ்சுகளுக்கு தெரியாது! ஆனால் பிஞ்சு பருவத்திலேயே நமக்கு அந்த தத்துவத்தை உணர்த்த போடும் வேஷம் தான் கலர் கோழிகள்!

Photo Sharing and Video Hosting at Photobucket


கோயில் திருவிழாக்களில், பள்ளிக்கூட வாசல்களில், தட்டி அல்லது பட்டி அடைத்து கிடக்கும் அந்த பிஞ்சுகளின் கூட்டத்தை, காண்பவர்கள் அனைவரையுமே, கவர்ந்திழுக்க வைக்கும் காட்சிதான்!

சில நேரங்களில் கூடைமேல், கூடைமேல், கூடை வைத்து கூவி வருபவனின் ‘கலர்கோழி’ ‘கலர்கோழி’ எனற குரல், அவனுக்கு அன்றாட வருமானம் ஆனால், அக்கோழிகளுக்கு அவலக்குரல்தானே!

சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த கலர் கோழிகள் எனக்கு மட்டுமா? கோழி விற்பவனைக்கண்டால், தெருவே அதிரும்..!

எப்படியாவது ஒரு மாதமாவது கோழிக்குஞ்சுகளை வளர்த்து பெரியதாக்கி அதன் மூலம் கிடைக்கும் முட்டையையே மூலதனமாக்கி நாம் பெரும் காசு சேர்க்கவேண்டுமென்பது என் இளம் கால கனா!

ஆனால் ஒரு வாரம் வைத்து வளர்ப்பதற்கே நான் படும் பாடு நான் மட்டுமல்ல, அந்த கோழியும்தான்! பள்ளி செல்லும் வரை என கண் காணிப்பில் இருக்கும் அந்த கோழிக்குஞ்சுகள் பின் கூண்டில் அடைக்கப்பட்டு உத்திரத்தில் தொங்கவிடப்படும்! (அப்பத்தான் அது பத்திரமா இருக்கும் – இது பக்கத்து வீட்டு பையன் எனக்கு சொன்ன அட்வைஸ்!)

மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில் பாட்டி வீட்டு வாசலிலேயே சொல்லிவிடுவாள்!

சின்னபயலே..! நான் செட்டியாரு கடைக்கு போய்ட்வரதுக்குள்ளயே அந்த பாழாப்போன பூனை உள்ளாற பூந்து அதம் பண்ணிட்டு போயிடுச்சிடா!

கொஞ்சம் நேரம் சேதமடைந்து கிடக்கும் அந்த கூண்டு கலர்கோழிகளின் ரோமத்தின் எச்சங்கள், என அதையே பார்த்துகொண்டிருந்துவிட்டு, டேய் பூனை..! உன்னை கொல்றதுக்கு ஒரு ஆளு வருவான்டா! என மனதுக்குள் சவால்விட்டப்படி உறங்கிப்போவேன்..!