ஊருல கல்யாணமாம் மார்ல சந்தனமாம் - சின்னவயசுல எதாச்சும் விசேஷத்துக்கு போய் கொட்டிக்கிறதுக்கு ரெடியாகும்போது பாட்டி பண்ற கிண்டல் வார்த்தைகள்
பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும் - அப்படி ஒரு அலம்பல் செஞ்சு கொண்டு கிளம்பியதால் பாட்டிக்கு ஏற்பட்ட எரிச்சலாக கூட இருக்கும் !
என்னமோ நீ போகலைன்னா எல்லாமே நின்னுபோயிடற மாதிரியில்ல இருக்கு நீ பண்ற அழிச்சாட்டியம் என தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றாலும் பில்ட்-அப் கொடுத்து
கிளம்புவதுதான் வழக்கம்! (அந்த கதையெல்லாம் பிறகு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணிக்கிறேன்!)
எவனுமே கூப்பிடாத விசேஷத்துக்கு யாரை பாக்கடா நீ போறேன்னு ப்ரெண்ட்ஸ் கூட கிண்டல செய்யும் சூழல்களும்,நிகழ்வுகளும் ஏற்பட்டதுண்டு பட் கொட்டிக்கணும்ன்னு
முடிவு பண்ணிட்டா ச்சும்மா தெருவுல மரியாதைக்கு விஷ் பண்ணிட்டு போனவங்க வீட்டு விசேஷமா இருந்தாலும் போய் குந்திக்கவேண்டியதுதானே!
அப்படித்தான் இந்த ஓணம் (ஹைய்யா லைனுக்கு வந்தாச்சே!!!) விசேஷமும், இங்கு வந்த புதிதில் ஓணம் சாப்பாடு துன்றதுக்கு போய் வந்தது நல்லா பசுமரத்தாணி போல
பச்சக்குன்னு ஓட்டியிருக்கு ! :) இலைச்சாப்பாடு என்ற ஆச்சர்யம் கிள்ம்பி காணாமல் போனாலும் அந்த பாரம்பரிய உடைகளோடு பவனி வரும் மலையாளிகள் - வாய்ப்பே
இல்லை,வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும், கலாச்சாரம் தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதே ஒரு பெருமைதானே! - ஒரு நாளும் கிழமையும் விரதம் இருக்கணும்னாலே
ஒரே டயர்டா இருக்கு வேணாம்ன்னு சொல்ல தோணுது எனக்கெல்லாம்! - அப்படிப்பட்ட ஒரு விசேஷம் நிறைந்தது இந்த ஓணம் பண்டிகை !
ஊரு,மொழி,கலாச்சாரம் எல்லாம் வேறு வேறா இருந்தாலும் நாலு பேரு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நாமளும் சந்தோசப்பட்டுக்கிட்டு போறதுதானுங்களே வாழ்க்கை !
கண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!
பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும் - அப்படி ஒரு அலம்பல் செஞ்சு கொண்டு கிளம்பியதால் பாட்டிக்கு ஏற்பட்ட எரிச்சலாக கூட இருக்கும் !
என்னமோ நீ போகலைன்னா எல்லாமே நின்னுபோயிடற மாதிரியில்ல இருக்கு நீ பண்ற அழிச்சாட்டியம் என தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றாலும் பில்ட்-அப் கொடுத்து
கிளம்புவதுதான் வழக்கம்! (அந்த கதையெல்லாம் பிறகு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணிக்கிறேன்!)
எவனுமே கூப்பிடாத விசேஷத்துக்கு யாரை பாக்கடா நீ போறேன்னு ப்ரெண்ட்ஸ் கூட கிண்டல செய்யும் சூழல்களும்,நிகழ்வுகளும் ஏற்பட்டதுண்டு பட் கொட்டிக்கணும்ன்னு
முடிவு பண்ணிட்டா ச்சும்மா தெருவுல மரியாதைக்கு விஷ் பண்ணிட்டு போனவங்க வீட்டு விசேஷமா இருந்தாலும் போய் குந்திக்கவேண்டியதுதானே!
அப்படித்தான் இந்த ஓணம் (ஹைய்யா லைனுக்கு வந்தாச்சே!!!) விசேஷமும், இங்கு வந்த புதிதில் ஓணம் சாப்பாடு துன்றதுக்கு போய் வந்தது நல்லா பசுமரத்தாணி போல
பச்சக்குன்னு ஓட்டியிருக்கு ! :) இலைச்சாப்பாடு என்ற ஆச்சர்யம் கிள்ம்பி காணாமல் போனாலும் அந்த பாரம்பரிய உடைகளோடு பவனி வரும் மலையாளிகள் - வாய்ப்பே
இல்லை,வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும், கலாச்சாரம் தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதே ஒரு பெருமைதானே! - ஒரு நாளும் கிழமையும் விரதம் இருக்கணும்னாலே
ஒரே டயர்டா இருக்கு வேணாம்ன்னு சொல்ல தோணுது எனக்கெல்லாம்! - அப்படிப்பட்ட ஒரு விசேஷம் நிறைந்தது இந்த ஓணம் பண்டிகை !
ஊரு,மொழி,கலாச்சாரம் எல்லாம் வேறு வேறா இருந்தாலும் நாலு பேரு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நாமளும் சந்தோசப்பட்டுக்கிட்டு போறதுதானுங்களே வாழ்க்கை !
கண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!



