எப்போதோ சாதாரண விஷயமாகிவிட்ட செக் லீப் வாங்குவதற்கு கூட கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை சொல்லி மாளாது?
அக்கவுண்ட் ஒபன் பண்ணவோ, அய்யோ வேண்டவே வேண்டாம்டா சாமின்னு ஓடி விடத்தான் தோன்றும் அந்தளவுக்கு கெடுபிடியான விதிகளை வைத்து அதற்கேற்றார் போலவே ஒரு அதிகாரியையும் நியமித்திருப்பார்கள்!(எப்படித்தான் புடிக்கிறாய்ங்கன்னே தெரியல!)
அப்படி ஒரு கடுமையான ரூல்ஸ்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் கறாரான பேங்க் STATE BANK IF INDIA அப்படிப்பட்ட பேங்குல ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கின கடனை, அத விட ரொம்ப கஷ்டப்பட்டு அடைக்க நினைக்கிற, விவசாய பொதுமக்கள்கிட்ட அரசியல் வாதிகள் இரண்டு பிட்ட போட்டுட்டு போனா,
பிட் 1 இனி விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து அதிக கடன் வசதிகள் செய்து தரப்படும்.
பிட் 2 இது வரை நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்ய அரசு ஆரம்ப கட்ட முடிவு எடுத்துள்ளது.
அதை மக்களும் கப்புன்னு புடிச்சிக்கிட்டு,பர்ஸ்ட் முடிவு பண்ணுனது இனி கடன் திரும்ப அடைக்க வேண்டாம்னுத்தான்!?
இரண்டாவது முடிவு இனி ஈசியா கடன் வாங்கலாம்னு மக்கள் முடிவெடுக்கறதுக்கும் முன்னாடி கேப்ல பூந்துட்டாரு, ஸ்டேட் பேங்கு எம்.டி
கிட்டதட்ட 7000 ஆயிரம் கோடி கடன் வராமலே இருக்கு! இனி யாருனாச்சும் கடன் கேட்டு வந்தா கொடுக்காதீங்கன்னு!
மெசேஜ் பாங்குகளுக்கு போறதுக்கு முன்னாடியே முக்கியமான கட்சிக்காரங்களுக்கு போய் சேர்ந்துருச்சி அதுவும் இப்பத்தான் பெங்களூருவில தேர்தல் கூத்துகள் நடந்துக்கிட்டிருக்கு!
இந்த டைம்ல பாங்க் லோன் நிறுத்துன நியூஸ் கேட்டா அப்படியே மண்ணின் மைந்தனும் (அட கவுடாதாங்க!), இன்ன பிற பி.ஜேபி ஆளுங்களும்,காவிரி மாதிரி பொங்கி எழுந்து பொழப்பை கெடுத்துடுவாங்கன்னு டக்குனு ஃபீல் பண்ணுன வயலார் ரவி (இவர்தான் கர்நாடாக கண்காணிப்பாளர் ஓ....! இதுதான் கண்காணிப்பா??!!) உடனே மேடம் கிட்ட சொல்லி , அப்புறம் சிதம்பரத்துக்கிட்ட பேசி, அப்புறம் சிதம்பரம் ஸ்டேட் பாங்க் எம்.டியை கூப்பிட்டு, கடைசியா நிப்பாட்டுங்க கடனைன்னு சொன்ன பேப்பரை திருப்பிட்டாங்க! (அரசியல்வாதிகள்னா சிங்கம்ல!)
ஆனாலும் மக்களே இதே ஆப்பு திரும்ப ரீப்பிட்டு ஆகும் போது, பேங்க் பக்கம் போகாம நீங்க கொஞ்சம் நாளைக்கு அப்ப்பீட்டு ஆகிக்கோங்க!
மதியம் வியாழன், மே 22, 2008
இது நம்ம பாங்க் - STATE BANK OF INDIA
# ஆயில்யன்
Labels: அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
0 பேர் கமெண்டிட்டாங்க:
Post a Comment