பயம் :-( & :-)


நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் வலை பலர் அளவுக்கு அதிகமாகவே பிணைத்துக்கொண்டிருப்பார்கள்.

பயம் எல்லோருக்குமே இயற்கைதான்! ஆனால் கண்டபடி பயப்படுவதும் அளவுக்கு அதிகமாக பயப்படுவதுன் தினப்படி பயப்படுவதும் உடல்நிலை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் உள்ள விஷயங்களாம்!

பயத்திற்கான காரணம் என்ன?

அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

என்ன மாதிரியான தீர்வுகள் உண்டு?

என்ன மாதிரியான முடிவுகளை நாம் எடுக்க இயலும்

இப்படியாக எந்த ஒரு பயத்தை ஏற்படுத்தும் விஷயத்தையும் அலசி ஆராய்ந்து
காயப்போட்டால் பயத்தினால் ஒரு காயமும் உண்டாகாது மனத்தில்!

நம் வாழ்க்கை என்பது ஒரு பராமரிப்பு பயணம் அல்ல வாழ்வில் புதுப்பரிணாமங்கள் வளர்ச்சிகள் தவறுகளை செய்தல், தவறுகளை திருத்திக்கொள்ளுதல் என வாழ்க்கை பயணம் அமையவேண்டும்!

பயம் கண்டு ஓடாதீர்கள்!

பயம் உங்களை கண்டு பயந்து ஓடும்படி செல்லுங்கள் வெல்லுங்கள்!

இன்னும் சில அறிஞர்கள் உங்களுக்கு பயம் வரனும்ப்பா!? அப்பத்தான் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்க முடியும் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க ஆமாங்க அதுவும் கூட சரிதானே!

ஒவ்வொரு முறை பயம் வரும்போதும் அது எப்படி நமக்குள் வந்தது? நாம் என்ன தவறு செய்தோம்? என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழவைக்க வேண்டும்!

சரி பயத்தை எப்படி ஈசியா போக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது!

ஆன்மீகம் காதல் நட்பு இப்படி பல வழிகள் இருக்கு ஆனால் அதை சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு!

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

எனக்கு கமெண்ட் போடவே பயமாக்கீதுபா..... :(

said...

நீங்க என்னோட வலைப்பதிவ பத்தி சொல்லலைதானே
http://www.bayamairukku.blogspot.com

said...

இப்பதிவிற்கு உள் வெளி நோக்கங்கள் ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.