இந்திய சுடர்!


இந்தியாவில், எரியும் சுடர்கள் எப்பொழுது ஒரு வித பயம் தரும், இம்சைகளினை அதிகரிக்கவைக்கும் மனநிலையிலேயே ஏற்றப்படுகிறது! ஆனால்,இந்த இந்திய சுடர், நேற்றைய குண்டுவெடிப்புகளில் பற்றி எரியும் நெருப்பு போல் பயம் தருபவை அல்ல! இந்த சுடர் பயன் தருபவை!

ஆம்! இந்த சுடர் அஹிம்சையில் பாதையில் மெளனமாய் பலருக்கும் கல்வி தரும் விளக்கின் வெளிச்சமாய் எரிந்துக்கொண்டிருக்கிறது!

இருள் சூழ்ந்த உலகில் ஒளி ஏற்றி வைத்தவன் யாரோ அவனை நாம் இறைவன் என்றே நினைத்துக்கொள்வோம்! ஒளி இல்லாத உலகினை இன்று நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது! ஒளி இல்லாத உலகம் ஒன்றும் இல்லாத வெறுமையாய் இருக்கும் - வெண்மையாய் கூட இருக்காது! ஒளி - இங்கு கல்வியின் மூலம் பிரகாசிக்கிறது!

கல்வி கொடுப்போம் அதற்கு கரம் கொடுப்போம்! இதுதான் ஒரு சிலரின் சித்தாந்தமாக மனதில் தோன்றி மாறியது! அது இன்று பல நூறு ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒளியாக மாறியிருக்கிறது! மேலும் இவர்களின் சுடர் வெளிச்சத்தால்...!

தன்னலம் கருதா சேவையினை மனதில் நிறுத்தி பணியாற்றும் ஆசிரியர்களால் கிராமப்புறங்களில் கல்வி வாய்ப்பினை அனைவருக்கும் அளிக்கும் திட்டங்களில் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்!

எளிய ஏழை மாணவர்களும் பொருளாதாரத்தினை பெரியதாக நினைத்து கற்கும் கல்வியினை,ஏற்றமிகு வாழ்க்கையினை இடையில் நிறுத்தி செல்லும் வழக்கத்தினை மாற்றும் முக்கிய பணியிலும்..!

குறைந்த காலகட்டத்தில் பயிற்சியுடன் கூடிய தொழில் நுட்ப படிப்புக்களில் கிராமப்புற மாணவர்களை ஈடுப்படுத்தி, தாங்களாகவே தங்களின் திறமைக்கேற்ப வாழ்க்கை பயணத்தினை உறுதிசெய்யும் வேலைவாய்ப்புகளில் ஈடுபாடு காட்டிவருகின்றனர்!

இந்த ஒளியின் ஒரு துளியாய் இருக்கும் யாத்ரீகன் பதிவின் தொடர்பில், என் கண்ணில் பட்ட செய்திகளினை பற்றிய பகிர்தலினை பதிவினில் தந்து செல்கிறேன்!

செல்லும் இடமெல்லாம் எம்மால் முடிந்தளவு சிறு உதவிகளினையாவது செய்ய இயலும் என்ற நம்பிக்கையில்.....!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ரொம்ப நல்ல விஷயம்.

Thanks for the post.

Kathir.

said...

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னவாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-- சுப்பிரமண்ய பாரதி

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/