சுத்தம் காசு போடும் - ஆய் மேட்டர்!


பொது இடங்களில் அசுத்தம் செய்தால் தண்டனை - அறிவிப்புகள் ஆங்காங்கே காணும் அதே நேரத்தில் அங்கோ அல்லது அதற்கு அருகில் யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு வகையில் அசுத்தம் செய்து கொண்டிருப்பதையும் காணும் நிகழ்வுகள் தான் அதிகம் நம் அன்னை தமிழ் நாட்டில்!

ஆனாலும் கூட ஒரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்துக்கொண்டிருக்கிறது நம் தமிழ்நாட்டிலேயே...!

தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்றும் மற்றும் அரசு வேளாண் பல்கலையும் இணைந்து, தினமும் சுத்தமான முறையில் அசுத்தம் செய்பவர்களுக்கு தலா பத்து பைசா தந்து ஊக்குவிக்கும் ஒரு முறையினை செய்லபடுத்தியுள்ளதாம் - திருச்சி அருகில் இருக்கும் முசிறியில்....!

பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர் அறை ஒன்று வீதிகளின் அமைக்கப்பட்டு தற்போதைக்கு அதாவது இந்த நிமிடம் வரைக்கும் ஒன்லி ஒண்ணும் மட்டும்தானாம்! வேளாண் பல்கலையின் இயற்கை உரம் சம்பந்தமான ஆய்விற்கும் இந்த முறை சிறப்பானதொரு முடிவினை கொடுக்கும் என்று நம்புகின்றனர்!

இன்னும் சில நாட்களிலேயே ஒன்றும் இரண்டும் ஒன்று கூடும் வகையில் எளிய வடிவமைப்பில் தற்காலிக முறையில் அருமையானதொரு கழிவறையினை அமைக்கும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் தனியார் தன்னார்வ அமைப்பும் வேளாண் பல்கலையும்!

எது எப்படியோ இன்னும் சில தினங்களில் முசிறியில், சாலையில் நடக்கும் சகலரும் மூகமுடி அணிந்தோ அல்லது கர்சீப்பினால் மூடிக்கொள்ளாமலே நிம்மதியாக கை வீசி நடந்துப்போய் வரலாம்!

குறிப்பு:- செய்தி நான் படித்து தெரிந்துக்கொண்டது ஒரு வெளிநாட்டு இணையதளத்தில்! அதுவும் வித்தியாசமான தலைப்பில்!? இங்க சொன்னா நல்லா இருக்காது! இருந்தாலும் என்ன தலைப்பின்னு ஆர்வமா கேட்குறவங்களுக்காக நான் ரகசியமான மொழியில சொல்றேன்! ஒ.கேவா?!
fee to pee !

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அய் வித்தியாசமா இருக்கே... நம்ம ஆளுக எல்லாம் அங்க தான ‘போ'வாங்க.... :))))

said...

:)))