மனப்பூக்கள் மலரட்டும் - 3

தினந்தோறும் கடந்து போகின்ற செயல்கள் ஏராளம் ஒவ்வொருவருக்குள்ளும்! ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும்...!

இத்தினப்படி வாழ்க்கையில் எத்தனை விதமான செயல்கள் நம் கட்டுப்பாட்டில் நடக்கின்றன.எத்தனையோ செயல்கள் நம்மை மீறியும் - நம் கட்டுப்பாட்டில் அல்லாமலும் - நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

நாம் செய்யும் செயல்கள் நமக்கு இன்பங்களோ துன்பங்களோ அல்லது பிறருக்கு இன்பங்களோ துன்பங்களோ கண்டிப்பாக விளைவித்துக்கொண்டேதான் இருக்கின்றன.



தொடங்கும் ஒவ்வொரு நாளும் தொடங்கும் செயல்களை முடிக்கின்ற காலத்தில், அதை முடிக்க நினைக்கின்ற மனங்கள் மிகக்குறைவே! சந்தர்ப்பங்களை நீட்டிக்கொண்டோ, அல்லது வாய்ப்புக்களினை பிறருக்கு அளித்தோ அத்தருணத்தினை தப்பிக்கவே பயன்படுத்த விரும்புகிறோம்!

தப்பித்தல் அந்தந்த காலகட்டத்திற்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்க கூடியாதாகவே இருக்கும் ஆனால் அதுதான் துயரினை அதிகரித்துக்கொள்ள நாமாகவே கொடுக்கும் வாய்ப்பு என்பது கொஞ்சம் காலம் கழித்துத்தான் புரிய வரும்!

செய்யும் செயல்கள் அனைத்திற்குமே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியினை குறித்துக்கொண்டு,அதை செய்து முடிப்பதிலேயே ஆர்வத்தினை அதிகரித்துக்கொள்ளுங்கள்!

21 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அழகான படம்.


\\நாம் செய்யும் செயல்களால் நமக்கு இன்பங்களோ துன்பங்களோ அல்லது பிறருக்கு இன்பங்களோ துன்பங்களோ கண்டிப்பாக விளைவித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
\\

சிறப்பா சொன்னீங்க.

said...

நல்லது .. முயற்சிக்கிறேன்.. :)

said...

இதமா இருக்கு ! காலையில் புத்துணர்ச்சியுடன் கிளம்ப

said...

தப்பித்தல் அந்தந்த காலகட்டத்திற்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிக்க கூடியாதாகவே இருக்கும் ஆனால் அதுதான் துயரினை அதிகரித்துக்கொள்ள நாமாகவே கொடுக்கும் வாய்ப்பு என்பது கொஞ்சம் காலம் கழித்துத்தான் புரிய வரும்

sariya sonnega anna

said...

படத்திலுள்ள பூவைக் கண்டதும் மனப்பூவும் தானாகவே மலர்ந்து விட்டது. பதிவை வாசித்ததும் இன்னும் விரிந்து சிரிக்கிறது. நன்றி ஆயில்யன்.

said...

குட் பதிவு ;)

said...

சூப்பரா சொல்லி இருக்கீங்க.

பூ ரொம்ப சூப்பரா இருக்கு!

said...

அழகா படம் எடுத்து இருக்கீங்க...:-)

எண்ணங்களும் அழகு!

said...

//
நாம் செய்யும் செயல்களால் நமக்கு இன்பங்களோ துன்பங்களோ அல்லது பிறருக்கு இன்பங்களோ துன்பங்களோ கண்டிப்பாக விளைவித்துக்கொண்டேதான் இருக்கின்றன.//

ஆமா..பாஸ்...நேத்து பிரியாணி சாப்பிடும்போது இதேதான் தோணுச்சு பாஸ்! :-)

said...

ஆயில்ஸ் நீங்க எடுத்த படமா? ரொம்ப நல்லா இருக்கு!

said...

/*செய்யும் செயல்கள் அனைத்திற்குமே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியினை குறித்துக்கொண்டு,அதை செய்து முடிப்பதிலேயே ஆர்வத்தினை அதிகரித்துக்கொள்ளுங்கள்! */
ஓகே பாஸ்

said...

//செய்யும் செயல்கள் அனைத்திற்குமே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியினை குறித்துக்கொண்டு,அதை செய்து முடிப்பதிலேயே ஆர்வத்தினை அதிகரித்துக்கொள்ளுங்கள்!//

தத்துவம் பாஸ்... ஆயில்யா, அப்புறம் சரண்யா மோகன், இப்போ அனுயா-ன்னு ஆர்குட் கம்யூனிட்டி ஒரு ஸ்டார்ட் செஞ்சதுலேயே உங்க திறமை பளிச்-சிடுகிறது பாஸ்!! :-)

said...

செய்யும் செயல்கள் அனைத்திற்குமே ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியினை குறித்துக்கொண்டு,அதை செய்து முடிப்பதிலேயே ஆர்வத்தினை அதிகரித்துக்கொள்ளுங்கள்!//

எப்படி பாஸ்
நீங்க ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் விடற கேப் மாதிரியா
பாஸ்.

பூ படம் சூப்பர் பாஸ்

said...

பாஸ்! கொஞ்ச நாளா உங்க போக்கே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு, உங்கப்பா உங்களை விவேகானந்தர் அளவுக்கு வளர்க்கணும்னு ஆசைப்பட்டது என்னமோ வாஸ்தவம் தான்.

said...

நல்ல கருத்து. நன்றி இடுகைக்கு.

said...

ரொம்ப நல்லா இருக்குங்க... கருத்தும் படமும்...

பல நண்பர்களுக்கு அனுப்பினேன் !!

said...

ஆயில்யன்,எங்கள் ஊர் வீட்டு வேலி ஞாபகம் வருது.அழகான
சிதம்பரத்தம் பூ.

ஆயில்யன் உண்மையில் சிந்திக்கக்கூடிய அறிவுறுத்தல்.நன்றி.

said...

//கானா பிரபா said...
பாஸ்! கொஞ்ச நாளா உங்க போக்கே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு, உங்கப்பா உங்களை விவேகானந்தர் அளவுக்கு வளர்க்கணும்னு ஆசைப்பட்டது என்னமோ வாஸ்தவம் தான்.//

haahahahaha...sorry I cld not control... lol!!!!

said...

romba romba nalla padam....nalla padhivu

said...

சிரித்தபடி மலர்ந்தோம்,சில நொடிகளில் வாடி விழுவோம் என்ற மனக்கிலேசம் சிறிதும் இன்றி பூக்கும் ஒவ்வொரு மலருமே சொல்கிறது வரும் மாற்றங்களை முழுமனதோடு ஏற்று மகிழுங்கள் என்று .சரிதானே ஆயியன்.

said...

/கானா பிரபா said...

பாஸ்! கொஞ்ச நாளா உங்க போக்கே ஒரு மார்க்கமாத்தான் இருக்கு, உங்கப்பா உங்களை விவேகானந்தர் அளவுக்கு வளர்க்கணும்னு ஆசைப்பட்டது என்னமோ வாஸ்தவம் தான்.
//

LOL!