சே குவாரா

Photo Sharing and Video Hosting at Photobucket

உலகம் முழுவதும் புரட்சிக்கு டிக்ஷினரியாக அடையாளம் காணப்படும் சேகுவராவின் 40ஆம் நினைவு தினம் இன்று

கியூபா புரட்சிக்கு வித்திட்ட பிடல் காஸ்ட்ரோவுக்கு உறுதுணையாக இருந்தவர் சேகுவாரா. புரட்சியின் முக்கிய கட்டமாக தனது கொரில்லா போர் முறையை பயன்படுத்தியதன் மூலம் இன்று புரட்சியாளர்களின் முன்னோடியாக கருதப்படுபவர்

அர்ஜென்டைனாவில் பிறந்து, புரட்சி வீரராக உருவெடுத்த சேகுவாரா, மெக்சிகோவில் பிடல்காஸ்ட்ரோவை சந்தித்தார். இருவருக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது. பின்னர் கியூபா புரட்சியில் இருவரும் கைகோர்த்தனர்!

கியூபாவில் சில காலம் அமைச்சராக பணியாற்றிய சேகுவரா,தன் மனம் விரும்பும் பாதையை நோக்கிய பயணத்தை தொடரும் முடிவில். காஸ்டிரோவுக்கு குட்பை கடிதம் எழுதிவிட்டு, அடுத்த கட்ட புரட்சி போராட்டத்தை நடத்த பொலிவியாவிற்கு சென்று, அங்கு லத்தீன் அமெரிக்காவை எதிர்த்த புரட்சியில் அமெரிக்கா ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்!

என்னை சொந்த மகனாக பாவித்து ஏற்றுக்கொண்ட கியூபா நாட்டினையும் உங்களையும் விட்டுப்பிரிகிறேன்! ஏகாதிப்பத்தியத்தை ஒழிக்க எனக்காக காத்திருக்கும் கடமைகளை நோக்கி செல்கிறேன், உங்களை பிரிகின்றேன், எனது குடும்பத்தை கியூபாவின் பாதுகாப்பில் விட்டுச்செல்கிறேன், என் வழியில் மரணம் வந்தால் அந்த நொடிப்பொழுதும் என் எண்ணங்கள் உங்களையும் என் நண்பன் பிடல் காஸ்டிரோவையும் நினைத்துக்கொண்டிருக்கும்..!

சே குவரா

1 பேர் கமெண்டிட்டாங்க:

said...

மிகவும் என்னை கவர்ந்த மனிதர் ஆனால் அவரின் நினைவு தினம் நினைவில் இல்லை, நீங்கள் நினைவு படுத்தியதுக்கு நன்றி.

நல்ல பகிர்தல்!!!