செங்கல்

தமிழகத்தைப் பொறுத்தவரை செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை இப்போதும் அமைப்புசாராதொழிலாகவே உள்ளது. இதனால் இதற்கான விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. செங்கல் உற்பத்தி சூளைகள் அனைத்தும் ஆற்றுப்படுகைகளிலேயே இருப்பதால் மழைக்காலங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதனால் இதன் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செங்கல் சூளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செங்கல் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமணி

செங்கல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்நேரத்தில், என்னதான் கான்கீரிட் பிளாக்குகளின் வருகையிருந்த்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது செங்கல்லால் கட்டப்படுவதைத்தான்!

Photo Sharing and Video Hosting at Photobucket


செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் வளம் சில இடங்களில் மட்டுமே இருக்கும் அதன் மூலம் தயாரிக்கப்படும் செங்கல்லிலிருந்தே நமது கட்டிடத்திற்கு தேவையான பளு தாங்கும் தன்மை அல்லது உறுதிதன்மை பாதுகாப்பானதாக இருக்கும். அப்படியான மூலப்பொருளான மண் பெரும்பாலும், ஆற்றங்கரைகளிலோ, அல்லது வாய்க்கால் கரைகளிலோதான் களவாடப்படுகின்றன. பின்னர், அரசு செலவில் பொதுப்பணித்துறை மூலம் கரை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது!

ஆற்று பாதுகாப்புக்கு அரசுப்பணியாளர்கள் இருந்தாலும் கூட அவர்கள் செயலற்றுத்தான் உள்ளார்கள். லோக்கல் பாலிடிக்ஸ் சமாளிக்கறதுங்கறது சும்மா லேசான விஷயம் இல்லை..!

இது போன்ற சூழ்நிலையில், மண் விற்பனையை அரசே ஏற்றுக்கொண்டு, நல்ல லாபத்துடன் (யாருக்குன்னு கேட்காதீங்க்??!!) செயல்பட்டு கொண்டிருக்கும்போது, இநத தொழிலையும் அரசு ஏற்று அல்லது அரசு மேற்பார்வையில், மாவட்டங்கள்தோறும் உள்ள சுய உதவிக்குழுக்களின் துணையோடு, இவ்விற்பனையை நடத்திட முன்வரலாம்! இதன் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வேலை கிடைக்கும்! எல்லோருக்கும்(!?) லாபம் கிடைக்கும்..! ஆற்றுக்கரைகள் காணாமல் போவதும் காப்பாற்றப்படும்!

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

சரியான பார்வை !!!!!!!!

said...

FLY ASH உபயோகித்து உருவக்கப்படும் செங்கல்கள் இப்பொது பெரிய நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இவை இனி அமைப்பு ரீதியில் வரலாம் (சிமென்ட் போல)