Showing posts with label பதிவர்'கள். Show all posts
Showing posts with label பதிவர்'கள். Show all posts

நான் ஆதவன்!

சூர்யோதயம் - எத்தனையோ வருசம் கழிச்சு சந்தோஷமா இருக்கேன் சரியா சொன்னா 3 வருசம் 8 மாசம் நாலு நாள் அது நான் துபாய்ல மானேஜரா இருந்த காலம் a Good Service but a bad ending, செய்யாத டிசைனுக்கு தண்டனை! அதை கேட்டு வாங்கினது நானேதான்! நேத்து வரைக்கும் நான் ஒரு ஸ்ட்ரக்சுரல் டிசைன் இன்ஜினியர் ஆனா இப்ப நானும் ஒரு சாதாரண டிராப்ட்ஸ்மேன் - டிராப்ட்ஸ்மேன்!

பயக்குட்டி பம்மிக்கிட்டு வந்தான் - என் டிசைன் இன்ஜினியரிங்க் லைஃப்பையே தலைகுப்புற புரட்டி போட்டுட்டு போயிட்டான்....!

அந்த நாள்.....

காட்சி ஒண்ணு:-



நான் ஆதவன்:- ஹலோ 10 இடத்துல நீங்க கட்டின கட்டிடம் இடிய போகுது. நான் யாருன்னு எல்லாம் கொஸ்டீன்ஸ் கேட்காம நான் சொல்றதை மட்டும் செய்யுங்க

டேமேஜர்:- டேய் சூர்யா ஒழுங்கா கீழ இறங்கி வா....!

நான் ஆதவன்:- அவ்வ்வ் நான் சூர்யான்னு உங்களுக்கு எப்படி டக்குன்னு தெரிஞ்சுது?

டேமேஜர்:- டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு....


காட்சி நெண்டு:-


நான் ஆதவன்:- ஹலோஓ?

டேமேஜர்:- இன்னும் நீ கீழே இறங்கி வரலியா?

நான் ஆதவன்:- முடியாது! பத்து இடத்துல கட்டிடம் இடிஞ்சு விழ போகுது. எம்புட்டு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா கீழே வா கீழே வான்னு கூப்புட்டுகிட்டிருக்கீங்க?

டேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...!

நான் ஆதவன்:- ஏதோ ஒண்ணு! நான் சீரியாஸாக பேசிக்கிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசக்கூடாது அப்புறம் நான் காமெடியனாகிடுவேன் ஆமாம்!

டேமேஜர்:- டேய் உன்னை யாருடா இப்போ சீரியஸா நினைச்சிக்கிட்டிருக்கா? நீ எப்பவுமே எங்களுக்கு காமெடி பீஸ்தானேடா...?

நான் ஆதவன்:- அவ்வ்வவ்வ்வ்வ்வ்!


காட்சி மூணு:-




நான் ஆதவன்:- ஹலோ இப்ப சீரியஸாவே நான் ஆதவன் பேசுறேன்!

டேமேஜர்:- டேய்...! நீ இன்னுமாடா கீழ இறங்கி வர்ல..? சரி இரு நான் மேலே ஏறி வரேன்..!

நான் ஆதவன்:- நோ! நோ நீங்க மேல ஏறி வரமுயற்சிக்காதீங்க டேமேஜர்! அப்படியும் மீறி நீங்க மேல வந்தா ரொம்ப காமெடியாகிடும்!

டேமேஜர்:- டேய்...! எனக்கு இப்ப கொலைவெறி வருது! இப்போ உனக்கு என்ன மேன் வேணும்?

நான் ஆதவன்:- குட்! குட்! இது தான் பட் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க ஆபிசர்!

டேமேஜர்:- என்னாத்த மாத்தி சொல்லணும் மேன்?

நான் ஆதவன்:- நான் மேன் இல்ல காமன் மேன்!

[பேக்கிரவுண்ட்ல மியூஜிக் ஸ்டார்ட்டு]

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
டிசைன் அறியா இன்ஜினியர்களும் உண்டோ?
பவுண்டேஷன் இல்லாத பில்டிங்களும் உண்டோ?
ஃபவுண்டேஷன் இடிவதை யார்தான் அறிவார்?
ஃபில்டிங்க் கவிழ்ந்தால் காசு யார் தான் தருவார்?


ஆக்கம் :- கோபிநாத் அமீரகம்

ஊக்கம் :- ஆயில்யன் தோஹா


டிஸ்கி:-
இனிய பிறந்த நாளில் சகோதர நான் ஆதவனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்...!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி!

அன்பு சகோதரர் ”கறுப்பியின் தமிழன் - காண்டீபராஜ்” இனிய பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களுடன்....!




கவிதைகளால் காதலித்து, காதலித்து, காதலை காத்து வரும் தூணாக...! புனைவுகளில் பல்லி போல் ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு பூனைகள் மீது தீரா அன்பு (காதல் ஒன்லி கறுப்பியிடம் மட்டுமே...!)

எண்ணங்களை எழுத்துக்களாக்கி, ப்ளாக்கி வைக்காமல் மனம்போன போக்கிலேயே காற்றிலேயே கவி எழுதி காணாமல் போகுமாறு செய்துக்கொண்டிருக்கும் சகோதரர் தீவிரமாக இணையத்தில் எழுதிட வேண்டும் என்ற கோரிக்கையினூடாக,பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

என் நினைவின் வெளியின் கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும்...!

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!
***********************************
காலம் மாற்றங்களை
கவ்விக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!
***********************************
எத்தனை அழகு உன்னிடம்
நீ கோபப்படுகையில்
போடி...
அழகாகத்தான் கோபப்படுகிறாய் நீ!
***********************************
நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்கலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...
***********************************
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!
***********************************
அவள்
ஓடிக்களைத்ததில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!
***********************************
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.
***********************************
காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இன்னமும் ஈரமாய்...
நானும் நீயும் வாழ்ந்த ஊரில்
நம் வருகைக்காய்......
***********************************
டிஸ்கி:-
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து... நானும் உருவி எடுத்து இங்கே போட்டிருக்கிறேன் சகோதரர் மன்னிக்கவும் :-)


கானா பிரபா!



நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

அன்புடன்,
ஆயில்யன்

அமிர்தவர்ஷினி அம்மா!



பிறரின் சுயநல சூதாட்டத்தில்
வெட்டுப்பட்டுக்கொண்டிருக்கிறது
வாழ்க்கை.

தவறிப்போய் விழும் தாயங்களும்
மீட்டெடுத்துக் கொள்கிறது
தனக்கான காய்களை

அதிசயமாய் விழும் ஆறும் பன்னிரெண்டும்
நகர்த்திப்போகிறது நமக்கான இருப்பிடத்தை

வெட்டுப்படுவதும்,விட்டுக்கொடுப்பதுமான
வாழ்க்கையில் தொலைந்தே போனது
சுயம்

ஆட்டம் முடிந்ததும் அழிக்கப்படும்
ஆட்டக்களத்தைப் போல...

- அமிர்தவர்ஷினி அம்மா

சுயம் தொலைத்தலும் அடைதலும் எப்பொழுதுமே சில பல இன்ப துன்பங்களை தந்து கொண்டு இருக்கிறது!

எழுத்தில் - எழுத்தால்- பெற்ற நட்புக்களிடமிருந்து எதிர்பாராமல் வரும் பாரட்டுக்களில் மகிழ்ந்து போகப்போகிறது சுயம் இன்று...!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அமிர்தவர்ஷினி அம்மா!

ரிஷான் ஷெரிப்...!?


பிழைப்பு தேடி வரும் அயல் நாட்டில் நோய்வாய்ப்பட்டு உதவிக்கு யாரும் இல்லாத சூழலில்,அத்தருணத்தில் சொந்தங்களை நினைத்து மேலும் உடல் வருத்திக்கொள்ளும் கொடிய சூழலில், நன்கு அறிந்தவர்கள் இந்த கட்டத்தில் இருந்தால் அனைவருக்குமே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும் அந்த வகையில் ஷைலஜா அக்காவின் உதவி கேட்டு வந்த செய்தியிலும் ஈரோடு கார்த்திக்கின் தகவலிலும்,ரிஷான் ஷெரிப் உடல் சுகம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த தகவல்கள் சற்று அதிரச்செய்தது!

பதிவுகளை தவிர்த்து மற்றபடி வேறு எந்தவிதமான அறிமுகம் இல்லாவிடிலும் முயற்சித்து பார்த்துவிடலாம் என்று தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்த தொலைபேசி மூலம் எந்த தகவல்களும் பெற முடியாமல் தோல்வியிலேயே முடிந்தது.

ஒருக்கட்டத்தில் எத்தனையோ பேருக்கு பரிச்சயமாயிருந்த இவரைப்பற்றி - ஒரே ஒரு தொலைபேசி எண்ணை தவிர -வேறு ஒரு தகவலும் தெரியாமல் இருந்தது அதை அறிந்துக்கொள்ளும் ஆர்வமின்றி மற்ற விடயங்களை கவனம் செலுத்திய நட்புக்கள் மீது கொஞ்சம் கோபமும் கூட வந்தது. பிறகு எவ்வளவோ முறை கேட்டும் கூட அவர் தம் தகவல்களினை தர மறுத்துவிட்டார் என்ற பதிவுலக நண்பரின் பதிலில் அந்த கோபமும் மறைந்துபோனது!

ஒரு வழியாக அபி அப்பா பதிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தொலைப்பேசியில் சற்றுமுன் தொடர்பு கொண்டதில் -
நலமாக இருக்கிறார்,
உடலெங்கும் பரவியது,
வதந்தி போன்ற தொடர்புகளற்ற பதிலே கிடைக்கப்பெற்றாலும் முடிவாய் தற்பொழுது நலமாக இருக்கிறாரா...? என்ற கேள்விக்கு நலமாக இருக்கிறார் ஒண்ணும் பிரச்சனையில்லை என்ற பெற்றுக்கொண்ட தகவலோடு முடித்துக்கொண்டேன்!

எந்த விதமான செய்திகளுமே தெரியாமல் இருக்கும் இச்சமயத்தில் இந்த செய்தி மட்டுமே!

இதையே நற்செய்தியாக ஏற்றுக்கொண்டு, ரிஷான் முழு பூரண உடல் நலத்துடன் மீண்டும் வலம் வர அன்போடு அழைத்து, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

சந்தனமுல்லை!

புன்னகை புயலே;

பப்புவின் பாச மழையே;

எங்கள் மனதில் நிறைந்தாய்!

மழலைலைகளின் ஃபாலோயர் நீ...!

அம்மாக்களின் வலைப்பூ நீ...!

புன்னகையின் ஜிடாக்கர் நீ...!

அதிரடியான ஆர்கெட்டரும் நீ...!

முகிலுக்கு டெரரரும் நீ...!

உன்னால் சித்திரக்கூடத்தில் பதிவு பூக்கள் பூத்தது

தமிழ்மணம் மழலைகளின் கூட்டத்தால் நிரம்பியது!

ஆர்கெட் பப்பு படங்களால் மலர்ந்தது!

ஜி டாக் உன் சிரிப்புக்களால் நிறைந்தது!

இன்று உன் பிறந்த நாளில் இல்லம் கேக்குகளால் நிறைந்தது

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை @ ஆச்சி @ பாஸ் @ முல்ஸ் @ சந்தனம் :-)





டிஸ்கி சாங் :-

எல்லாம் கேக்கும் ஒருவள் ஒருவளுக்கே
நீ ஃபுல் கட்டு கட்டிக்கொண்டிரு
எந்த கேக்கிலும் ஸ்வீட்கள் நிறைந்திருக்குமே
உம்மை சந்தோஷத்தில் சிரிக்கவைக்குமே....!)

தந்தையர் தினம்!

இன்று தந்தையர் தினம்!

நாம் சமூகத்தின் வழி பயணத்தில் நம் எண்ணங்களினையெத்த சக பயணிகளை கண்டிப்பாக காணக்கூடும். அவர்தம் எண்ணங்களின் வெளிப்பாடு,அட..! நாம வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அழகா சொல்லியிருக்காரேன்னு நினைக்கவைக்கும்! அப்படி ஒரு பதிவிலிருந்து..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



அன்புள்ள அப்பாவுக்கு,

இப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல

நேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்),ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.

உங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.

உங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

அம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.

வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை

எப்பிடிடீ இருக்க ராசா?


அம்மா!!! என் அம்மாவை பற்றிய கர்வம் எனக்கு கொஞ்சம் அதிகம் தான்.

நான் அழகின் மதிப்பீட்டாய் அம்மாவைதான் வைத்திருக்கிறேன்.

அம்மா கூடவே இருந்த போது அதன் அருமை தெரியாமலே போய் விட்டது.

ஆனால் முதன் முதலாய் அம்மாவை விட்டு அபுதாபி வந்த போது வந்த முதல் நாள் போன் செய்த போது அம்மா "எப்புடுடீ இருக்க??" என கேட்ட போது உடைந்து அழுதேன்.+

ப்ச் எங்கடா,

நான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் சின்ன பிள்ளையிலே இருந்து, தவிர உனக்கு எப்பவும் ஒரு கோவம் என்கிட்டே இருக்கும்.

உன்னைவிட நான் தம்பி மேல பாசமா இருப்பதா நீயே ஒரு கற்பனை பண்ணிகிட்டே...எனக்கு எல்லாரும் ஒன்னுதான்....நான் செத்தா ஒழிஞ்சாடா ராட்சசின்னு நெனச்சிப்பியோ என்னவோ...

தவிர தனியா சம்பாதிச்சு பெரிய மனுஷனா ஆக போற...இந்த அம்மால்லாம் கண்ண்ணுக்கு தெரியுமோ என்னவோ" அம்மா பேசியதை நினைத்து அபுதாபிக்கு வந்து அம்மாவிடம் பேசி உடைந்த பின் தனியாக உட்காந்து இதையெல்லாம் யோசித்து மீண்டும் உடைந்தேன்.

>>>>>>>>>>>

இந்த வரிகளினை அபி அப்பாவின் “அம்மா என்னும் அழகி!!! ” வாசிக்கும் போதே எனக்கு என் அம்மாவும்,என் அம்மாவின் அம்மா நினைவுகளை தவிர வேறு ஒன்றுமே தோன்றவில்லை!

சற்று நேரம் செயலற்று இருந்தேன் என்றே சொல்லவேண்டும்!


அபி அப்பா...!

உங்கள் உணர்வுகளில் அவ்வப்போது எங்களுடன் கொஞ்சம் உரையாடிச்செல்லுங்கள்!

கா.பி வித் ஆயில்யன்!

அண்ணன் கானா பிரபாவிடமிருந்து தொடுக்கப்பட்ட நான்கு கேள்விகள் அதற்கு என்னாலான நான்கு பதில்களோடு - (விவரமா சொல்லறதுக்கு நாம ஸ்ட்ரெய்ட்டா விஷயத்திற்கு போய்டலாமே...!??)

கேள்வி 1. பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர், வந்த பின்னர் உங்களின் இணையச் சூழல்/வாழ்க்கை எப்படியிருக்கின்றது?

பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு

இணைய சூழல்:-

வெள்ளிகிழமை மட்டும் இரு மணி நேர இணையமாக இருந்தது

இப்போது

வெள்ளிகிழமை இருக்கும் மணி நேரங்களெல்லாம் இணையமாகவே இருக்கிறது!

வாழ்க்கை :-

முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!

கேள்வி 2. தமிழகத்துப் பிரதேச நடையில் வரும் பதிவுகள் மிகக் குறைவு என்று நான் கணிக்கின்றேன், இந்த நிலையில் ஈழத்து மொழி வழக்கில் வரும் பதிவுகளை நீங்கள் வாசித்துப் புரியக்கூடியதாக இருக்கின்றதா அல்லது தாவு தீருகின்றதா?

கண்டிப்பாக உங்களின் கணிப்பு சரிதான்! நானே கூட சில சமயங்களில் எங்கள் பேச்சு வழக்கு பதிவு போடவேண்டும் என்று தோன்றி உடனேயே அதற்கான ஆர்வமின்மை சூழ்ந்துக்கொண்டு அதை பற்றிய எண்ணங்களை தவிர்க்க செய்துவிடுகிறது!

ஈழத்து மொழி ஆரம்பத்தில் எனக்கு தாவூ தந்த மொழிதான் - இணையத்தில் அல்ல இங்கு வந்ததும் பழக ஆரம்பித்த ஈழத்து நண்பர்களின் பேச்சு வழக்குகளால், அதுவும் ஒருவர் யாழ் மொழி மற்றொருவர் மட்டகளப்பு மொழி பேசி இவர்கள் இருவரிடமும் நான் பேசியது ஆங்கிலம் mixed தமிழ்!(ஆக்சுவலி எனக்கு நீங்க பேசுற லாங்குவேஜ் கரெக்டா விளங்கலை!) பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இருவரிடமே ஒருவர் பேசுவதை மற்றொருவர் சொல்ல கேட்டு கேட்டு கொஞ்சம் பழகிக்கொண்டுவிட்டேன்!

அதுவும் சில சொற்கள் நாங்கள் அதிகம் பயன்படுத்திய ஆனால் வேறு அர்த்தங்களினை தரும் சொற்கள் என்னை முதலில் தயக்கமுற செய்தாலும் கூட பின்னாளில் ஏற்றுக்கொள்ளமுடிந்தது! (வெளிக்கிடறேன்! ச்சீய்! & கதைக்கிறீங்கோ! வெட்டிக்கதை வேணாம்!)

பதிவுகளில் வாசிக்கும்போது கொஞ்சம் கடினமாக இருக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் வாசித்து செல்லவேண்டிய தேவையே அன்றி மற்றபடி அதிகம் சிரமப்படுத்தவில்லை! - இன்னும் பெருமளவு பிரதேச மொழிகளில் பதிவுகளினை வரவேற்கிறேன்! - இன்றைய பதிவு நாளைய வரலாற்றின் பக்கங்களும் கூடத்தானே..!

கேள்வி 3. நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர், பதிவுகளிலும் கட்டுக்கோப்பான சிந்தனைகளை அவ்வப்போது பதிவுகளாகக் கொடுப்பவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்போக்காக எதையாவது செய்ய் வேண்டும் என்றால் எதைச் செய்வீர்கள்?

முற்போக்காக என்று சொல்வதில் எனக்கு அந்தளவுக்கு பெரிய விஷயங்கள் ஒன்றும் மனதில் தோன்றவில்லை! (இருக்கு ஆனால் எல்லாம் ”மல்லு”கட்டிக்கிட்டு வெளியே வர மாட்டிக்கிது!)

வேணும்னா இதை முற்போக்குன்னு வைச்சுக்கலாம் - தமிழ்நாட்டில இருக்கற அத்தனை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் தமிழ் முதன்மை மொழியாக செயல்படுத்தப்படவேண்டும் - (ஆனா இதெல்லாமா முற்போக்கா செய்யணும்னு யாரும் ஃபீல் பண்ணாதீங்க!) அப்புறம் இன்னொரு விஷயமாக பொது வழிப்பாட்டு அறை ஒன்று நிர்மாணித்து, பணிக்கு வரும் ஒவ்வொருவரும் சாமி கும்பிட்டபின் தான் சாட்டிங் ஆரம்பிக்கவேண்டும் என்றும் ஒரு ஆர்டர் போட்டுடுவேன்! ( ஆமாங்க காலங்கார்த்தால வந்து ”நாளை அழியப்போகும் உலகில் நாம் எதற்கு நம்பிக்கை ? யாரிடம் வைக்கவேண்டும்? என்றெல்லாம் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுக்கிறாங்களே!)

வாய்ப்புக்கள் சாதகமாக அமைந்தால் சாதாரண வாழ்க்கையை விட, நல்லதொரு பணியாக தன்னார்வ சேவைகளில் பெயர் வெளிப்படுத்தாமல், வேண்டிய பணிகளினை செய்யவேண்டும் என்ற ஆசையும் கூட இருக்கிறது!

கேள்வி 4. உங்க சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர், அல்லது ஐ.நா சபைச் செயலாளர் இதில் ஏதாவது ஒரு பதவியை எடுக்கலாம் என்றால் எதை எடுப்பீர்கள்? அந்தப் பதவியை வச்சு என்ன செய்வீர்கள்?

பஞ்சாயத்து தலைவர் போஸ்டிங்குக்குத்தான் எனது முதல் விருப்பம்!

காரணம் ரொம்ப சிம்பிள்:- மொழிப்பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு எல்லோரையும் சங்கடப்படுத்திக்கொண்டு ஐ.நாவில் நாயாக திரிவதை விட இங்கு லோக்கலில் நாய் மாதிரி மக்களுக்கு எதாவது செஞ்சுக்கிட்டு நாயகன் மாதிரி சீக்கிரத்திலேயே இமேஜ் பில்ட்- அப் செய்துக்கொள்ளமுடியும் அப்படின்னு நான் தீர்க்கமாக நம்புவதால்....! அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்! (மக்கா அதுக்குன்னு டேஷ் ஆகிடணும்ன்னு நினைக்காதீங்க! எனக்கு சொல்றதுக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்கு அதான் கோடு போட்டு விட்டிருக்கேனாக்கும் நீங்களே அந்த கோட்டினையும் என்னோட ஆசையையும் பூர்த்தி செஞ்சுடுங்க!

ஒ.கே!

அடுத்து ஆப்பு வைக்கற மாதிரியான கேள்வி!5.
கே.ஆர்.எஸ் வேண்டுகோளுக்கிணங்க ஒரு போனஸ் ஆப்பு வைக்கிறேன்
நடிகை ஸ்ரேயாவுடன் நாயகனாக நடிக்க ஒரு வாய்ப்பு அல்லது பாடகி ஸ்ரேயாவுடன் டூயட் பாட ஒரு வாய்ப்பு வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் (இரண்டில் ஒன்றைத் தான் செய்ய முடியும்னு கட்டளை வேற ;-))


ஒளியில் மிளிரும் அனைத்தும் அழகானவைதான்
ஒலியில் ஒலிரும் அனைத்தும் அற்புதமானவைதான்!

ஒளியின்றி ஒலிக்கலாம் !
ஒலியின்றி ஒளிக்கலாம் !

முன்னதை விட பின்னது பார்க்க வெறுமையாய் இருக்கலாம்!
பின்னதை விட முன்னது கேட்க பெருமையாய் இருக்கலாம்!

முன்னதையும் பின்னதையும் பற்றி , (கண்ணால்) கண்டதையும் கேள்வியாக கேட்டால் நான் எண்ணத்தை எப்படி சொல்லமுடியும்!? பின் ஜொள்ளமுடியும்!?

ஆனாலும் கூட எனக்கு கிட்டதட்ட பல ஆண்டுகளாய் பிடித்தது ஒலியும் ஒளியும் தான்! (1984ல்லேர்ந்து வெள்ளிகிழமை தவறாம பாத்துருக்கேன்ல!)



(மீ த எஸ்கேப்பூ! - ஷ்ஷ்ஷ் அப்பாடா! இன்னும் எவ்ளோவோ இருக்கு அதுக்குள்ள கேள்விங்கற பேருல ஆப்புவைத்த அண்ணனுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்கண்ணா!)

அமீரகத்து அண்ணன் சென்ஷியிடம் நான் கேக்கப்போறேன் பாருங்க கேள்வி.......!

1.தமிழ் வலைப்பதிவுகளில் கெமிஸ்டிரி வேணும்னு சொல்றாங்களே! அது பத்தி கெமிஸ்டிரி படிச்ச நீங்க எதாவது ஐடியா சொல்லமுடியுமா?

2.பின் நவீனத்துவ வாதியாக மாறிக்கொண்டிருக்கும் உங்களின் நடவடிக்கைகள் எப்படி கட்டமைக்கப்பட்டு உருவானது என்று கடுமசொற்பிரயோகமின்றி பிரக்ஞையோடு சொல்லுங்களேன்?

3. லிஸ்ட் போட்டு வாசிக்கும் உங்களின் காதல்களில் ஏதேனும் உங்களை குழப்பியதுண்டா? அதாவது நினைவுகளில் வாழ்க்கையில் யார் முன்பு வந்தது யார் பின்பு வந்தது என்ற வரிசைகளில் மாறுதல்கள் இருந்தால் எப்படி நீங்கள் செக் செய்து கொள்வீர்கள்?

4.மீரா ஜாஸ்மீனுடன் நீங்கள் எண்ண அலைகளினூடாக சென்று பேசினால் என்ன பேசிக்கொள்(ல்)வீர்கள்?

அர்த்தமுள்ள இந்து மதத்திலிருந்து - குசும்பனுக்கு..!


தண்ணீரில் வாழுகின்ற மீன் அதைவிட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் வாழாது வாழ முடியாது

அது போல யார் என்ன சொன்னாலும் செய்தாலும் கும்மியையோ அல்லது மொக்கையோடும், சில சமயங்களில் தீர்க்க சீரியஸ் சிந்தனைகளோடும் வாழுங்கள்..!

நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ அதன் பேர்தான் கவளம்.

ந்ம்முடைய இருகைகளாலும் முடிந்தால் காலாலும் கூட எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு நல்ல சத்தம் வரும் வகையில் கீ போர்டில் அடிப்பதுதான் கும்மி அந்த எண்ணங்களோ உங்களது வாழ்க்கையை விரிவுபடுத்தும்!

இதுவே நமது கடமை என்று ஒரு சேவையை செய்!

இதுவே நமது கடமை என்று கலாய்த்தலும் கும்மிகளையும் தொடருங்கள்!

ஊருக்கு செய்யாவிட்டாலும் உன் குடும்பத்துக்கு செய் அதன் பெயரும் சுயதர்மம் தான்!

ஊரையே கலாய்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களின் பா.குடும்பத்துக்குள் கலாய்த்துக்கொள்ளுங்கள் அதன் பெயரும் சுய கலாய்த்தல்தான்!

வில்லங்கங்கள் இல்லாத சேவையில் ஒரு நிம்மதி இருக்கிறது

வில்லங்கமான கலாய்த்தல்களிலும் கும்மிகளிலும் ஒரு நிம்மதி உனக்கு இருக்கத்தான் செய்யும்!

மிகமுக்கியமான சேவை தாய்க்கு மகன் செய்யும் சேவையாகும்

மிக மிக முக்கியமான நபர்களின் கலாய்த்தல்கள் சேவையே தமிழ்மணத்துக்கு நீ செய்யும் பெரிய சேவையாகும் !

பொதுச்சேவை என்ற பெயரில் அரசியலில் ஈடுபடுவதனால் நாட்டுக்கு அதனால் பயன் இருந்தாலொழிய, எந்த தலைவனையும் நம்பி இறங்காதே.!

பொழுதுப்போக்கு என்ற பெயரில் ஓவர் டைம் போட்டு கலாய்த்தலில் ஈடுபடுவதால்,அரபிக்கும் ஆபிசுக்கும் பயன் இல்லையே என்றாலும் கூட, எந்த சூழ்நிலையிலும் ஓவர் டைம்மை விட்டுக்கொடுக்காதே!

வாழ்த்துக்களுடன்....!!!


நன்றி - அர்த்தமுள்ள இந்துமதம் (போல்டாக சொன்னது!)

"தம்பி" அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)




கொஞ்சம் லேட்டாகிடுச்சு...!

அண்ணா!

வாழ்த்துக்கள்......!

பொறந்த நாள்களில்

நல்ல விசயங்களை செய்யணும்;
நல்ல விசயங்களை சிந்திக்கணும்;
அப்படின்னுல்லாம் பெரியவங்க சொல்லுவாங்க!

பேசாம நல்ல விஷயமா மன்றத்த ஆரம்பிச்சுப்புடலாம்!

ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம் மாதிரியே...!

எதோ வெட்டியா இருக்குற நாங்களும் மன்ற பணிகளில் சுறுசுறுப்பாகிவிடுவோம்!

எதோ எங்களுக்கும் ஒரு நாலு மல்லு தேசத்துக்காரங்க ப்ரெண்ட்ஷிப் கிடைக்கும் :)))

நல்லவிதமா யோசிச்சி தம்பி முடிவெடுக்கணும்!

ச்சே..! என்ன தம்பி என்னாச்சு ஏன் இவ்ளோ யோசனை..?

இப்ப ஒ.கேதானே...!!!!

:: .குட்டீஸ் கார்னர். :: குட்டீஸ்களுக்காக....!

முளைச்சு மூணு இலை விடுல, (எல்லாரும் சொல்றாங்க அதான் நானும் சொன்னேன்!) அதுக்குள்ள இந்த சின்ன புள்ளைங்களோட சின்ன மூளையில இவ்ளோ மேட்டருகள் இருக்கான்னு அப்படியே ஒரு பெருமித்தோடுத்தான் பாத்துக்கிட்டிருக்கோமே ஒழிய அந்த குட்டீஸ்களுக்கு தேவையான அறிவுரைகளை கொடுப்போம்னு யாருக்கும் டக்குன்னு தோணமாட்டிக்குது (எனக்கும் லேட்டுதான்...!)

ஸோ...! அந்த குறையை போக்கத்தான் இது..!



இது மாதிரி நீங்களும் இந்த குட்டீஸ் கும்பலுக்கு நெறய்ய்ய்ய்ய்ய் அட்வைஸ் கொடுங்க என்ன....! ஒ.கே வாஆஆ..!?

மிரட்டும் ரஜினியாய் - டிசம்பர் புகைப்பட போட்டிக்கு

நான் பாட்டுக்கு சும்மா பொழுதுபோகம சரி நாமளும் டிஜிட்டல் கேமிரா வைச்சிருக்கோம் எப்பவுமே நம்மளையே எடுத்துக்கிட்டிருக்கோமே...!? ஒரு சேஞ்சுக்கு நாம ஏன் புகைப்பட போட்டிக்கு டிரைப்பண்ணக்கூடாதுன்னு தான் ஒரு ரெண்டு போட்டியில கலந்துக்கிட்டேன்.

ஆனா பாருங்க என் நேரம் நல்லாருந்துச்சு போல நம்ம குசும்பு பிரதர் அப்ப கலந்துக்குல?!

சரி இப்ப எதாவது டிரைப்பண்ணலாம்னு ரெடியாகுறத்துக்குல்ல, இதோ தலைவரு மிரட்டுற மாதிரி,




இன்னைக்கு வந்து மிரட்டிட்டாரு....!!!

சரி அவரே ஜெயிக்கட்டும்...!