பீகார் எம்.எல்.ஏக்களின் லப்-டப்பாகப்போகும் லாப்டாப்புக்கள்!


பீகாரின் அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் மடிக்கணினி வழங்க உத்தரவிட்ட்டு அதற்கான தொகையும் ஒதுக்கப்பட்டுவிட்டது!
ஒரு நல்ல மாற்றமாகத்தான் இது இருக்கும் என்று தெரிக்கிறது!
மடிக்கணினி தவிர்த்து இன்ன பிற சாதனங்களான பிரிண்டர்கள் மற்றும் இணைய இணைப்பிற்கான தொடர்புகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கம்போல பதவி முடிந்தவுடன் தத்தமது கணினிகளை திரும்ப கொடுத்துவிடவேண்டும் என்று கண்டிஷனும் உண்டு!(ஒரே காமெடியாத்தான் இருக்குங்கீறீங்களா!)

போன அரசாங்கத்திலேயே எம்.எல்.ஏக்களுக்கு எப்படி கணினி பயன்படுத்துவது என்று கிளாஸ் எடுக்கப்பாட்டாலும் கூட கடைசியில், லாலுவின் ”அதெல்லாம் உங்களுக்கு வேணாம்டா ராசாக்களே” என்று சொல்லிவிட்டதால் உறுப்பினர்களும் சரின்னு விட்டுட்டாங்களாம்!

ஆனா இப்ப நிதிஷ்குமார் வந்து இல்லையில்ல நீங்க கண்டிப்பா கணினி பயன்படுத்தவேண்டும்னு சொல்லிப்புட்டாராம்!
எப்படி மொபைல் போன்களை தட்டுதடுமாறி கத்துக்கொண்டு காதில வைச்சுக்கிட்டு போஸ் கொடுத்தீங்களோ அது மாதிரியே இப்ப இந்த லேப்டாப்புகளையும் கத்துக்கோங்க போஸ் கொடுங்கன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம்!

இனி பீகார் மக்கள்ஸ் எல்லாம் எம்.எல்.ஏக்களை சாட மாட்டார்கள்!

ஒன்லி சாட்டிங்தான் :))

0 பேர் கமெண்டிட்டாங்க: