மீள் பதிவு! - மனதில் சுகம் மலரும் மாலையிது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

(இதழில்)

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(இதழில்)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது




(சில நேரங்களில் இங்கன இந்த பாட்டு தெரிய்லைன்னா அங்கன போய் பார்த்துட்டும் வரலாம்!)


டிஸ்கி :-
நாம எழுதுன பதிவுகள்லேர்ந்துதான் மீள் பதிவு போடமுடியுமா? ஏன் மத்தவங்க பதிவுலேர்ந்து சுட்டு போட்டா அது மீள் பதிவு வகையில் வராதா?? என எனக்குள்ளே பீறிட்டு வந்த எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் இந்த மீள் பதிவு! பாட்டு கேட்டு பாருங்க எத்தனை பேர் எத்தனை தடவை மீள் பதிவா போட்டாலும், போய் பார்த்து கேட்க துடிக்க வைக்கற ரகம்தான்!

விடுமுறை நாள்! இரவு நேரம் இது போன்ற ரா(ர)கங்களில் பாடல்கள் கேட்பது ஒரு வித சுகானுபவம்தானே!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

வியாழக் கிழமை லீவா? என்ஞாய்... பாட்டு சூப்பர்... :)

said...

கலக்கல் பாட்டு, லேபலில் நானா ;)

said...

இன்னைக்கு லீவா அண்ணா??
:-(

ம்ம்ம்ம் நல்ல பாடல்:-)

said...

is it ok to leave a comment in english??anyway nanum tamizhthan ana tamizh font instal pannala so....englishla tamizh comment....mudal thadavaiya unga blogku vanthueruken...enaku rombha pidichieruku....unga karuthukal ...mukiyamaga intha padal...ithu en manathai kavartha padalgalul ondru...adikadi sandipom...

said...

நன்றி அண்ணாச்சி! உங்க புண்ணியத்துல இந்த மாலை மொட்டை பாடல்களோட சுகமா போகுது :))

Anonymous said...

நல்ல பாடல்..