ஆடி மாசம் - தினமணியிலிருந்து...!




ஆடி மாதம் இது சிலருக்கு வாய்ப்புகளை வழங்கும் மாதமாகவும், மணமான இளம் தம்பதிகள் விரும்பாத மாதமாகவும் திகழ்கிறது. "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப விவசாயப் பணிகளை விவசாயிகள் தொடங்கும் மாதமும் இதுதான்.

பெரும்பாலானவர்கள் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் எதையும் ஆடி மாதத்தில் மேற்கொள்ள மாட்டார்கள். இதனாலேயே ஜவுளி விற்பனை பிற மாதங்களை விட மந்தமாக இருக்கும். இதெல்லாம் அந்தக் காலம். விளம்பர யுகத்தில், வீடு தேடிவரும் டி.வி. விளம்பரங்கள் மூலம் ஜவுளிக் கடைக்கு மக்களை கடலென இழுக்கும் காலமிது. சமீப காலமாக ஆடி மாத விற்பனையைப் பெருக்க ஜவுளி வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் பலப் பல உத்திகளைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை தங்கள் தயாரிப்புகளின் மீது திருப்புகின்றனர

இப்போதே தீபாவளிக்குத் தேவையானதை வாங்கிவைத்து பணத்தைச் சேமிக்கலாம் என்று நினைப்பவரும் உண்டு.

பணிக்குச் செல்லும் பெண்கள், அந்த வருடத்தின் விசேஷ நாள்களுக்கும் சேர்த்து, ஆடி மாதத் தள்ளுபடியை பயன்படுத்தி அரை டஜன் வரை வாங்குகின்றனர் எல்லாம் சரி, ஜவுளி நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடி உண்மையிலேயே தள்ளுபடிதானா. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலன் உண்டா? என்றால் அதை எந்த வகையிலும் "செக்' செய்து பார்க்க முடியாது.

ஏனென்றால், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு உள்ள ஒரே சீரான மதிப்பு துணிகளுக்குக் கிடையாது.ஆடிக் கழிவுக்கு முன் இதுதான் இப்பொருளின் விலை என்று யாருக்குமே தெரியாது (கடைக்காரரைத் தவிர).

தீபாவளிக்காக வாங்கும் துணிகளில் தேங்கும் துணிகளுக்கு இத்தகைய தள்ளுபடி அளித்து விற்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் கூறுகின்றன. ஆண்டு முழுவதும் தள்ளுபடி அளிக்கும் அரசு நிறுவனங்களான கோ-ஆப் டெக்ஸ், ஆந்திர அரசின் ஆப்கோ போன்ற துணி விற்பனையகங்களில் இந்த அளவு கூட்டம் குவியாததற்குக் காரணம் என்ன? என்பதும் புரியாத புதிர்! ஆண்டு முழுவதும் விற்பனையைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு துறையினரும் ஓர் உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில் வந்தது தான் இந்த "ஆடிக் கழிவு' என்று வர்த்தகத்துறையினர் கூறுகின்றனர்.

ஆண்டு முழுவதும் ஆகும் விற்பனையை ஒரே நாளில் சம்பாதிக்க தங்க நகை விற்பனையாளர்கள் கண்டறிந்த யுக்திதான் "அட்சய திருதியை'.அதைப் போல ஜவுளித்துறையினர் ஆடி மாத தேக்க நிலையைப் போக்க கண்டுபிடித்த உத்தியே "ஆடிக் கழிவு' என்று சொல்வோரும் உண்டு.

உண்மையிலேயே இந்தத் தள்ளுபடி விற்பனையால் வாடிக்கையாளர்களுக்குப் பலன் உண்டா? என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்..

சரி படத்தில இருக்கற புடவை பத்தி ஒரு குறிப்பு! இது லேட்டஸ்டு டிசைன் சாரியாம்! முத்து மணிகள் கோர்த்து இருக்கும் இந்த சேலை நல்லி ஸ்பெஷல்! - அம்மிணி பத்தி உண்மையாவே ஒண்ணும் தெரியாதுப்பா!??? :-(

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

//அம்மிணி பத்தி உண்மையாவே ஒண்ணும் தெரியாதுப்பா!??? :-( //

:(

எதிர்பார்த்த வடயத்தை போடமல் மனதை உடைத்துவிட்டீர்களே...

said...

//அம்மிணி பத்தி உண்மையாவே ஒண்ணும் தெரியாதுப்பா!??? :-( //
NambittOm..!! ;-)

said...

தள்ளுபடியானவற்றை (வேண்டாதவற்றை) தள்ளிவிடுவது தான் ஆடித்தள்ளுபடி !
:)